Jump to content

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது


Recommended Posts

அதனால்தான் சில நிமிட அஞ்சலிக்குப்பின் நாங்கள் தொடர்ந்து உதவி செய்தோம். உதவுகின்றோம். உதவுவோம்.

இதுதான் பிரச்சினை.. ஏதாவது ஒரு கொலை நடந்த் உடனேயே ஒட்டுக்குழுவாக மாறி சிங்களவனுடன் சேர்ந்து வேலை செஞ்சிருந்தீங்கள் எண்டால் இப்ப தமிழீழத்தில் வீற்றிருக்கலாம்..! :(

Link to comment
Share on other sites

  • Replies 210
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுதான் முழுமையாக வாசித்தேன் . நன்றி . தொடருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது, ஏகப்பட்ட நம்பிக்கையீனங்கள், சிறுபிள்ளை வேளாண்மைச் சிறுகதைகள் முதலியவற்றின் மத்தியில் முதலில் பொதுமையின் குறைந்தபட்ச அபிலாசைகள் என்றேனும் எதையேனும் வரையறுப்பது அவசியம். அதன்பின்னர் வரையறுத்த அபிலாசைகள் அடையப்படக்கூடியன என்ற நம்பிக்கை நம்பிக்கையீனங்களையும் பரிகாசங்களையும் தாண்டி நடைமுறை ரீதியாக ஏற்படுத்தப்படவேண்டும். அதுவும் எமது வளங்களை வைத்து அவ்விலக்குகள் எட்டப்படலாம் என்ற நம்பிக்கை பிறக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை புலிகளால் மட்டுமே இது சாத்தியமானது. நடைமுறையில் உணரக் கூடிய “தேசியம்” என்ற ஒன்றையும் அத்தேசியதத்திற்கான பொதுவான அபிலாசையினை வரையறுத்துக் கொள்வதிலும் எமது வளங்களை வைத்து நாம் வரையறுத்த அபிலாசைகளை அடையலாம் என்பதை மக்கள் நம்புவதற்கும் பகீரதப் பிரயத்தனம் தேவைப்படடது. இந்த முயற்சிகளின் முன் தான் இதர இயக்கங்களைத் தடைசெய்ய வேண்டிய அவசியம் புலிகளிற்கு ஏற்பட்டது என்பது எனது அபிப்பிராயம்.

மேற்படி துன்பியல்கள் தொடர்பில், புலிகள் அழித்தார்கள் என்று மட்டும் சொல்லுவது போதாதது. அழிக்க வந்த புலிகளை எதிர்க்கும் பலமின்றி அழிந்தவர்கள் இருந்தார்;கள் என்பதும் கவனிக்கப்படவேண்டியது.

பலமானவை தெரிவு செய்யப்படுவது உலக இயல்பு. (ஒருவேளை முள்ளிவாய்க்கால் முடிவில் தமது பலத்தைக் காட்டியதாய் முன்னர் தடைசெய்யப்பட்டவர்கள் கூறமுடியும். அது புலிகள் சார்ந்து ஒருவேளை அவர்களிற்குச் சரியாய் படலாம். ஆனால் பொதுமை தேசியம் என்ற விடயங்களில் தடைசெய்யப்பட்டோர் எப்போதும் தோற்றவர்களே).

இந்தவகையில் துன்பியல்கள் கோரங்கள் இன்னல்கள் தாண்டி தமிழ்த்தேசிய முளை ஒருவாறு மரமாகி மில்லர் என்ற பூ பூத்து பின் இந்திய இராணுவம் வந்து போய் அனுராதபுர வான்படை முகாம் வரை தேசியம் கிளை பரப்பியது. இந்தப் பாதையில் எமது வராலாறு இவ்வாறு தான் எழுதப்பட வேண்டும் என்று யாரும் சொல்லாமல் மக்கள் தாங்களாகவே உணர்ந்து கொண்ட நிலை பரிணமித்தது. வரலாற்றின் முக்கியத்துவமும் எங்களிற்குள் நாங்கள் அடிக்கடி கதைக்கும் விடயமாக ஆகியது. ஈழத்தின் உயர்வு எங்களின் உயர்வாக எங்களிற்குத் தானாகப் பட்டது. சமாதான காலத்தில் வன்னியில் நடந்த நேரங்களில் எங்களை அறியாது எங்கள் நெஞ்சுகள் நிமிர்ந்து நின்றன. நாங்களும் அமெரிக்கர்கள் போல் தான் எங்கள் நாயகர்களைப் போற்றியபடி எங்கள் உயர்வுகளை வரவேற்றுக் கொண்டிருந்தோம். இதற்கான அடிப்படை, எங்களை நாங்கள் நாங்காளாகவே பொதுமையாக நோக்கிக் கொண்டோம்-. எங்கள் பொதுமையின் உயர்வு எங்கள் உயர்வு என்று எங்களிற்கு எவரும் வகுப்பெடுக்கத் தேவையின்றி நாங்களாக உள்ளுர உண்மையாக உணர்ந்தோம். நாங்கள் பார்த்தது எங்களிற்குப் பிடித்தது அதைத் தக்கவைக்க எங்களிற்கு வரலாறு தேவைப்பட்டது-- எனது பார்வையில் இந்தப் பொதுமையினை உருவாக்கியமை புலிகளின் அதி உச்ச சாதனை

தமிழீழம் வேணும் என்று வாயால் சொல்லிக் கொண்டு ஆனால் அதற்காகத் தம்மை ஒறுக்கவோ எந்தப் பங்களிப்பை நல்கவோ மறுத்தவர்களிற்கும் புலிகளிற்கும் அல்லது இதர தமிழீழ ஆதரவாளர்களிற்கும் இடையே அவ்வப்போ முறுகல்கள் நடந்தன தான் என்ற போதும் ஒரு பொதுமை எங்களிற்கு இருந்தது. நாங்கள் தமிழீழம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவரை அதற்காக உழைக்கப் புலிகள் இருந்தார்கள். அது மட்டுமன்றி நாங்கள் வேணும் என்று சொல்லும் விடயத்திற்காக எங்களையும் உழைக்கவைக்கவும் ஒறுப்புக்களை மேற்கொள்ளவும் புலிகள் எங்களை நிர்பந்திந்துக் கொண்டிருந்தார்கள் என்று கூடச் சொல்லலாம். வெறுமனே கோசம் போட்டுவிட்டு சும்மா இருக்க புலிகள் எங்களை விடவில்லை. ஆனால் எங்களிற்கென்றொரு பொதுமை இருந்தது. எங்களின் பொதுமைக்கு ஒரு நடைமுறை இருந்தது

.

பின் முள்ளிவாய்கால் நடந்து முடிந்தது. எங்கள் தேசிய மரம் மீண்டும் முறிந்து போனது. இந்த முறிவிற்கான பொறுப்பைப் புலிகளில் மட்டும் போட்டுவிட்டு நாங்கள் இருந்து விடமுடியாது.

வரலாற்றை எழுதி வைத்து அதைப் படித்துத் தான் பொதுமை வளரவேண்டும் என்பது அவசியமல்ல. பொதுமை உணரப்படுகையில் பொது வரலாறு தானாக எழுதப் படும்.

நன்றி இன்னுமொருவன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=88488

Link to comment
Share on other sites

இல்லை அப்பு ஒரு கொலை நடந்தவுடன் அது பிழை என்று நின்றிருந்தால் கொலைகள் சிலவேளை தொடர்ந்திராது.ஒரு அஞ்சலியோடு கொலையை தொடர்ந்தது உங்கள் ஆசீர்வதித்ததால் தான்,

உலகம் பயங்கரவாதி பட்டம் சூட்டி இலங்கயரசுடன் சேர்ந்து நின்று இன்று முள்ளிவாய்க்கால் 40 ஆயிரம் பொது மக்கள் அழிவும் இன்று நீங்கள் முதலைகண்ணீர் வடிக்கும் எமது தங்கைகள் விபச்சாரத்திற்கு கொண்டுசெல்வது என்பதும் நடைபெறுகின்றது.இன்று நீங்கள் போய் போர்குற்றத்தை விசாரியுங்கள் என்று கேட்டும் அவ்வளவு நாடுகளும் உந்த கொலைகளை நிப்பாட்டச்சொல்லி கேட்டவை.நீங்கள் கொடியுடன் நின்று இவ்வளவு கத்தியும் உலகம் கேட்கவில்லை ஏனேனில் அவர்கள் சொல்லும் போது நீங்கள் கேட்கவில்லை. கெடு குடி சொற்கேளாது

நேசக்கரம் என்றும்,உதவும்கரமென்றும் அடிபடவும் தேவையில்லை.நீங்கள் குளிருக்க கொடியுடன் நின்றிருக்க வேண்டிய கஸ்டமும் வந்திராது.போத்திக்கொண்டு படுத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலதரப்பட்ட தகவல்களையும், தரவுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. தொடருங்கள், நன்றி விசுகு மற்றும் அனைவருக்கும்!

Link to comment
Share on other sites

சோல்ற்றுக்கு பொறுப்பானவர் என்று நான் முதல் இந்தியாவில் சந்தித்தவர் நிரஞ்சன்.இப்போ அமெரிக்கா என நினைக்கின்றேன்.

இவர் ஒ/எல் குதிரை ஓட எனது நண்பரிடம் அடென்டி காட் கொண்டுவந்த ஞாபகம்.மாணவர் அமைப்பு பொறுப்பாளரே குதிரையா புலியில்?

சோல்ற்றிக்கு பொறுப்பானவர் முரளி ..நிரஞ்சன் மாணவர்களிற்கு கூட்டங்கள் வைத்தார். இதே முரளியைத்தான் ரெலோ காக்காவுடன் சேர்த்து கடத்தி வைத்திருந்தனர். முரளி இந்திய இராணுவத்துடனான மோதலில் இறந்தார்.

Link to comment
Share on other sites

சோல்ற்றிக்கு பொறுப்பானவர் முரளி ..நிரஞ்சன் மாணவர்களிற்கு கூட்டங்கள் வைத்தார். இதே முரளியைத்தான் ரெலோ காக்காவுடன் சேர்த்து கடத்தி வைத்திருந்தனர். முரளி இந்திய இராணுவத்துடனான மோதலில் இறந்தார்.

முரளியின் ஒரு சகோதரர் கெமிஸ்ற் ஆக இருந்தார்.எனது மூத்த அண்ணையன் நண்பர். முரளி கோப்பாயில் நடைபெற்ற மோதலில் மாவீரரானார் என்று நினைக்கின்றேன்.தகவல் சரியா சாத்திரி?தெளிவுபடுத்தவும்.

Link to comment
Share on other sites

முரளியின் ஒரு சகோதரர் கெமிஸ்ற் ஆக இருந்தார்.எனது மூத்த அண்ணையன் நண்பர். முரளி கோப்பாயில் நடைபெற்ற மோதலில் மாவீரரானார் என்று நினைக்கின்றேன்.தகவல் சரியா சாத்திரி?தெளிவுபடுத்தவும்.

முரளி கோப்பாய் பகுதியில்தான் இறந்தார் அதே நேரம் இங்கு சிலர் நடந்த சம்பவங்களை எழுதும்படி கேட்டதால் சிலவற்றை எழுத யோசித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

இங்கே மாற்று இயக்க தலைவர்களோ அல்லது உறுப்பினர்களோ கொலை செய்யப்பட்டது என்பது சரியாகவே நான் கருதுகின்றேன் அவர்களின் திறமைகள் இழப்புகள் ஈடு செய்ய முடியாதவைதான் ஆனால்...........எமது விடுதலைக்கு இடையூறான தடைகள் அகற்ற பட்டே தீரவேண்டும் இல்லையேல் எமது விடுதலைக்கான போராட்டம் குறுகியதாகவே இருந்திருக்கும் பாதைதவறி எதிரியின் எலும்பு துண்டுக்கு இரையாகியவர்களின் கதி ஒரு படிப்பினையாகவே மற்றவர்களுக்கும் இருக்கவேண்டும்! இது என் ஆழமான கருத்து நான் மற்றவர்களுக்கு இதை திணிக்க முற்படவில்லை. அந்த கால கட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டே இது நடந்ததாகவும் பின்னாளில் குறைக்கப்பட்டதாகவும் நான் அறிந்தேன் மாற்றங்களை கண்டே எமது போராட்டம் இவ்வளவு துாரம் வளர்ச்சியடைந்நது இல்லையேல் எப்போதோ அழிந்திருப்போம் அல்லது அழிக்கப்பட்டிருப்போம் இந்த மாற்றம் பற்றி சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் ஏற்பட்ட சமாதான காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தினை ஒரு சிறியதாக்கம் என் மனதில் பதிந்ததை அடுத்த கருத்து பதிவில் பதிகிறேன்................. எது எப்படியோ காலமாற்றங்களுக்கு ஏற்ப எமது விடுதலை பலவந்தமாக பலியிடப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை! தலைவரின் தீர்கதரிசன கூற்றுக்கு ஏற்ப “வரலாறு - வழிகாட்டி“ என நான்(ம்) ஒன்றினைந்து விடுதலையை நோக்கி வேகமாக நகர்வோம்----------------------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கோவிக்கவும் மன்னிக்கவும் எதுவுமில்லை.

கருத்துக்களுக்கும் தரவுகளுக்கும்(fஅட்க்ஸ்) வித்தியாசம் உண்டு.

பெக்கம் தான் உலகில் சிறந்த உதைப்பந்தாட்டவீரர் என்பது ஒருவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்,

அதற்காக அவர் ஒரு மட்சில் 10 கோல்கள் அடித்தாரென்று எழுதினால் ஏற்கமுடியாது.

[color="#008000"]

பெக்கம் பகிரங்கமாக விளையாடியவை எல்லோரும் அறிந்ததுதான். சிலவேளை நான் மறதியில் 9 கோல்கள் பெக்கம் போட்டார் என்று சொன்னால் இல்லை 10 என்று நீங்கள் திருத்தலாம்.

ஆனால் பெக்கம் அவரது முதலாவது மனைவியுடன் இரண்டாவது இரவில் தனிமையில் கட்டிலில் பேசியது எனக்கு தெரியும் என்று நீங்கள் சொன்னால்...........???

எனக்கு தெரிந்தாலும் நான் எழுதமாட்டேன்.

ஏனெனில் பெக்கம் ஒரு விளையாட்டுவீரர் மட்டுமே எனக்கு.

நிழலி கேட்டார் சில கேள்விகள், இந்தியன் ஆமியோடு வந்த பரதேசிகள் ஆள்பிடித்தது பற்றி. அது பரதேசிகளின் தலைவருக்குத் தெரியாமலே நடந்திருக்கலாம் என்றீர்கள். இது பொய்யில்லை-ஒரு மனத்தோற்றத்தை நீங்களே ஏற்படுத்திக் கொண்டு நடக்கிற எல்லாத்தயும் உங்கள் பக்க வாதத்திற்கு வலுச் சேர்க்கச் சொல்லும் மழுப்பல்கள்-இவை தான் உங்கள் பதிவுகளில் பெரும்பாலும் வருகின்றன. இதிலிருந்து "குணம்" பெற்று வர வேண்டியது நீங்கள் மட்டும் தான் இங்கே! இயக்கத்தில் இருந்தால் மட்டும் தான் போராட்டம் பற்றி எழுதலாம் என்று யார் விதி வைத்தது? நீங்களா? அல்லது "முன்னாள் இயக்கக் காரர்களின் கூட்டமைப்பா"? இயக்கத்திலிருந்தோம் என்ற ஒரேயொரு தகுதியை வைத்துக் கொண்டு பலர் மக்களைக் குழப்பும் போது ஒரு ஆயுதம் தூக்காத தமிழன் தான் கண்டதை எழுதுவதில் உங்களுக்கென்ன பிரச்சினை?

சோல்ற்றுக்கு பொறுப்பானவர் என்று நான் முதல் இந்தியாவில் சந்தித்தவர் நிரஞ்சன். இப்போ அமெரிக்கா என நினைக்கின்றேன்.

இவர் ஒ/எல் குதிரை ஓட எனது நண்பரிடம் அடென்டி காட் கொண்டுவந்த ஞாபகம். மாணவர் அமைப்பு பொறுப்பாளரே குதிரையா புலியில்?

சோல்ற்றிக்கு பொறுப்பானவர் முரளி ..நிரஞ்சன் மாணவர்களிற்கு கூட்டங்கள் வைத்தார். இதே முரளியைத்தான் ரெலோ காக்காவுடன் சேர்த்து கடத்தி வைத்திருந்தனர். முரளி இந்திய இராணுவத்துடனான மோதலில் இறந்தார்.

இதோ

உங்கள் தரவும் புலிகள் அமைப்பின் மாணவர் தலைவரே குதிரை ஓடியவர் என்று குற்றச்சாட்டும் தப்பு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதே........?

யாழில் இருந்து ஒதுங்குவதாக கச்சேரி வைத்ததாக ஞாபகம்...............?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1982 அல்லது 1983 ஆரம்பப்பகுதி என்று நினைக்கின்றேன்

அதிகாலை 3 இலிருந்து 4 மணியிருக்கும்

ஆமர்வீதியிலுள்ள எனது அண்ணரின் கடையின் கதவு தட்டப்படுகிறது. எனது சின்ன அத்தான்தான் கதவைத்திறக்கின்றார். நான் தம்பாபிள்ளை மகேஸ்வரன் வந்துள்ளேன். ........ (எனது அண்ணனை) பார்க்கணும் என்கிறது. கதவு திறக்கப்பட்டதும் முகத்தை மறைத்து பெண் வேடமிட்ட ஒருவர் உள்ளே வந்து கதவை மீண்டும் பூட்டிவிட்டு தலையை வெளியே காட்டுகிறது. அத்தானுக்கு அதிர்ச்சி. உறவினன். ஒரு பொருளியலாளன். ஒரு இயக்கத்தின் தலைவன். பொலிசுக்கும் இராணுவத்துக்கும் தன் அறிவால்தண்ணி காட்டும் ஒருவன் தனக்கு முன்னால். நடுங்கிப்போன அவர் தகவலை அண்ணருக்கு தெரியப்படுத்துகிறார். அண்ணர் வந்து அவரைக்கூட்டிச்செல்கின்றார். அடுத்த நாள் விடிய அத்தனை பேப்பர்களிலும் செய்தி படத்துடன். இரும்புக்கம்பிகளை அரிந்து அதற்கு சுவிங்கம் ஒட்டிவைத்து தருணம் வந்ததும் தப்பி ஓடிவிட்டதாக.

சில நாட்களின் பின் அவர் கடைக்கு அடிக்கடி வருவார். ஒரு முஸ்லிமாக ஒருமாறியிருந்தார். அண்ணருடன் வந்து சர்வசாதாரணமாக கதைத்துக்கொண்டிருப்பார். பொலிசாரும் வந்து பக்கத்தில் நின்று அண்ணருடன் கதைத்து செல்வார்கள். அவர் வந்ததைக்கண்டால் அவர் திரும்பி போகுமட்டும் எனக்கு மட்டும் நெஞ்சு அடித்தபடியேதான் இருக்கும். மீண்டும் அவர் பிடிபட்டார். எனது அண்ணரை எப்பொழுதுமே காட்டிக்கொடுக்கவில்லை. மீண்டும் மட்டக்கிளப்பு சிறையுடைப்பில்??? அவர் தப்பினார். சில வங்கிக்கொள்ளைகள் செய்தார். தன்னிடமிருந்து போராளிகளை புலிகளின் சேரும்படி சொல்லிவிட்டு தன்னுடன் சில கோடி பணத்துடன் இந்தியா வந்தார். அதன்பின் அவர் பற்றி எழுதுவது நல்லதல்ல....................?????

தொடரும்

Link to comment
Share on other sites

தம்பாபிள்ளை மகேஸ்வரனின் இயக்கம் பற்றிய எனது பதிவொன்று கீழே

http://sathirir.blogspot.com/2008/12/blog-post_20.html

பலகாலங்களாக வலைப்பதிவுகளில் ஈழம் பற்றியும் விடுதலைப்புலிகளைப்பற்றி பேச்சு எழும்தோதெல்லாம் விடுதலைப்புலிகளைப்பற்றி குற்றச் சாட்டுக்களை வைப்பவர்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் குண்டு வைத்தது புலிகள்தான் என்று தொடர்ச்சியாக எழுதி வருகின்றார்கள். ஆனால் அந்தக் குண்டினை வைத்தது TEA என்கிற தமிழீழ விடுதலை இராணுவம் என்கிற அமைப்புத்தான். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர். தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் என்பவர். இவர் சிறீலங்காவில் காவல்த்துறையால்கைது செய்யப்படு பனாங்கொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுது தப்பியோடியதால் இவரிற்கு பனாங்கொடை மகேஸ்வரன் என்றும் அழைப்பார்கள்.இவரே 1984 ம் ஆண்டுமீனம்பாக்கத்திலிருந்து புறப்பட்ட ஏயார் லங்கா விமானத்திற்கு குண்டு வைப்பதற்காக திட்டம் தீட்டி ஒருவரிடம் நேரம் கணித்த குண்டு பாசலை கொடுத்தனுப்பியிருந்தார்.அந்த நபர் கொழும்பு போவதற்கு பயணபோடிங்பாஸ் எடுத்து விட்டு குண்டுப்பொதியையும் பதிவு செய்து விமானத்தில் ஏற்றிவிட்டு அவர் அங்கிருந்துவெளியேறிவிடவேண்டும்.விமானம் வானில் கிழம்பியதும் குண்டு வெடிக்கக் கூடிதாய் நேரக்கணிப்பு செய்யப்பட்டிருந்தது இதுதான் திட்டம். ஆனால் குண்டுப் பொதியுடன் உள்ளே போனவருக்கு அங்கு காவல் அதிகாரிகளை பார்த்ததும் பயத்தில் குண்டுப்பொதியை அப்படியே விட்டு விட்டு வெளியேறிவிட்டார். குண்டுப்பாசல் ஏயார் லங்கா விமானத்தில் ஏற்றப்படவில்லையென்று தெரிந்ததும் தமிழீழ விடுதலை இராணுவ அமைப்பினால் விமானநிலையத்திற்கு தொலைபேசியடித்து குண்டு எச்சரிக்கையை விடுத்திருந்தனர். ஆனாலும் குண்டு வெடித்து பலர் இறந்து போயிருந்தனர். தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் தற்சமயம் வேலூர் சிறையில் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பாபிள்ளை மகேஸ்வரனின் இயக்கம் பற்றிய எனது பதிவொன்று கீழே

நன்றி சாத்திரி

இவற்றையெல்லாம் முன்பு நான் படிக்கவில்லை. தற் போது படிக்கக்கூடியதாக இருக்கிறது. அந்தவகையில் கூட எனது இந்ததிரி உதவுவது சந்தோசம்.

இந்தியாவுக்குப்போன மகேஸ்வரனின் பின்னைய வாழ்க்கையை கேட்டு எழுதமுடியும். ஆனால் ஒதுங்கிய ஒருவர் பற்றி எழுதுவது சரியல்ல என்பதால் அவர்பற்றிய விளக்கத்தை இத்துடன் நிறுத்துகின்றேன்.

உங்களுக்கு பரந்தன் ரசாயனக்கூட்டுத்தாபனத்தில் தொடர்புகள் இருந்ததா....???

Link to comment
Share on other sites

நன்றி சாத்திரி

இவற்றையெல்லாம் முன்பு நான் படிக்கவில்லை. தற் போது படிக்கக்கூடியதாக இருக்கிறது. அந்தவகையில் கூட எனது இந்ததிரி உதவுவது சந்தோசம்.

இந்தியாவுக்குப்போன மகேஸ்வரனின் பின்னைய வாழ்க்கையை கேட்டு எழுதமுடியும். ஆனால் ஒதுங்கிய ஒருவர் பற்றி எழுதுவது சரியல்ல என்பதால் அவர்பற்றிய விளக்கத்தை இத்துடன் நிறுத்துகின்றேன்.

உங்களுக்கு பரந்தன் ரசாயனக்கூட்டுத்தாபனத்தில் தொடர்புகள் இருந்ததா....???

பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனத்தில் வேலை செய்த பலரைத்தெரியும். சபாலிங்கமும் அவரது மனைவியும்கூட (பாரிசில் கொல்லப்பட்டவர் )நல்ல பழக்கம் சபாலிங்கமும் அங்குதான் வேலை செய்தார்.

Link to comment
Share on other sites

பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனத்தில் வேலை செய்த பலரைத்தெரியும். சபாலிங்கமும் அவரது மனைவியும்கூட (பாரிசில் கொல்லப்பட்டவர் )நல்ல பழக்கம் சபாலிங்கமும் அங்குதான் வேலை செய்தார்.

சபாலிங்கத்துடன் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.அவரது படுகொலை அவர் ரோ உளவாளி என்று வியாக்கியானப்படுத்தப்பட்டது.அவர் தம்பியின் மிகவும் நெருங்கிய நணபர்.அவரது மனைவி வேலணையை சேர்ந்தவா. மேலும் சர்வதேசநிதிப்பொறுப்பாளர் லாச்சப்பலில் வைத்துப் படுகொலை செய்பட்டமைக்கும், பிரான்ஸ் பொறுப்பாளர் லோறன்ஸ் திலகர் தம்பியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததிற்குமான விளக்கங்களை தரமுடியுமா சாத்திரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஜஸ்னின் கதைகேட்க விருப்பமென்றால் அம்ம்புலிமாமா வாங்கிப்படியும்.

எமது போராட்டத்தை யாரென்றாலும் கதையாக எழுதக்கூடாது.சாத்திரி இவ்வளவு எழுதுகின்றார்.யாரும் குறுக்கீடு செய்தார்களா?

நான் நினைக்கிறேன் ஜஸ்ரின் அர்கள் ஆட்கள் என்று மனிதர்களை குறிப்பிட்டுள்ளார் என்று...................

யாரும் தடுக்கிறார்களா? என்ற கேள்விக்குள் யாரும் என்பது மனிதரையும் தாண்டி பலரையும் உள்ளடக்கியதாக உள்ளதே?

Link to comment
Share on other sites

சபாலிங்கத்துடன் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.அவரது படுகொலை அவர் ரோ உளவாளி என்று வியாக்கியானப்படுத்தப்பட்டது.அவர் தம்பியின் மிகவும் நெருங்கிய நணபர்.அவரது மனைவி வேலணையை சேர்ந்தவா. மேலும் சர்வதேசநிதிப்பொறுப்பாளர் லாச்சப்பலில் வைத்துப் படுகொலை செய்பட்டமைக்கும், பிரான்ஸ் பொறுப்பாளர் லோறன்ஸ் திலகர் தம்பியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததிற்குமான விளக்கங்களை தரமுடியுமா சாத்திரி

மீண்டுமொரு முறை துரோகிப் பட்டமும். இரவிரவாக தொலைபேசியில் கொலை மிரட்டல்களும். மனைவியையும் மகளையும் தங்களுடன் படுக்கைக்கு எவரும் அழைக்கமாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தினை நீங்கள் தந்தால் நாதன் கஜன் சம்பந்தப்பட்ட விடயங்களை எழுதுவேன்.

post-1260-0-48817100-1310331087_thumb.jp

Link to comment
Share on other sites

மீண்டுமொரு முறை துரோகிப் பட்டமும். இரவிரவாக தொலைபேசியில் கொலை மிரட்டல்களும். மனைவியையும் மகளையும் தங்களுடன் படுக்கைக்கு எவரும் அழைக்கமாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தினை நீங்கள் தந்தால் நாதன் கஜன் சம்பந்தப்பட்ட விடயங்களை எழுதுவேன்.

சாத்திரி கனக்க வேண்டாம். அந்த கொலைகளுக்கு பயன்படுத்தபட்ட துப்பாக்கிகள் யாருக்கு உரியவை என்று மட்டுமாவது உலகுக்கு தெரியப்படுத்துங்கள்..இன்னும் கண்ணை திறந்து கனவு காண்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

.உண்மைகள் எப்பவுமே உறங்குவதில்லை .

Link to comment
Share on other sites

சாத்திரி கனக்க வேண்டாம். அந்த கொலைகளுக்கு பயன்படுத்தபட்ட துப்பாக்கிகள் யாருக்கு உரியவை என்று மட்டுமாவது உலகுக்கு தெரியப்படுத்துங்கள்..இன்னும் கண்ணை திறந்து கனவு காண்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

.உண்மைகள் எப்பவுமே உறங்குவதில்லை .

சாத்திரி பகலவன் பச்சைக்கொடி காட்டியாச்சு கதையை துவங்குங்கோ..... :mellow:

Link to comment
Share on other sites

சாத்திரி புலிகளை பற்றி நன்குதான் அறிந்திருக்கின்றார்.அதில் இருந்த படியாலோ என்னவோ?

Link to comment
Share on other sites

சிங்கள காடையர்கள் தாக்கின பொழுது யாழ்ப்பாணம் நோக்கியே எல்லாரும் சென்றார்களாம் ஆனால் இயக்கங்கள் தங்களுக்கிடையே சண்டை பிடிக்க தொடங்கின பிறகு தான் வெளிநாடுகளை நோக்கி படித்தவர்களும் மற்றவர்களும் புலம் பெயர ஆரம்பித்தார்கள் என்று எனக்கு தெரிஞ்ச ஒருவர் கூறினார் இது உண்மையா?

குட்டி மணி தங்கத்துரையை காட்டி கொடுத்தவர்கள் யார்..?

தங்களுடன் கருத்துகளால் முரண் பட்டவர்களை படகில்(பச்சை படகு பெயர் சரியாக தெரியல) ஏற்றி நடுக்கடலில் கொண்டே கதையை முடிச்ச இயக்கம்கள் /இயக்கம் எது?

Link to comment
Share on other sites

மீண்டுமொரு முறை துரோகிப் பட்டமும். இரவிரவாக தொலைபேசியில் கொலை மிரட்டல்களும். மனைவியையும் மகளையும் தங்களுடன் படுக்கைக்கு எவரும் அழைக்கமாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தினை நீங்கள் தந்தால் நாதன் கஜன் சம்பந்தப்பட்ட விடயங்களை எழுதுவேன்.

உங்களை மிகவும் சங்கடப்படுத்தி விட்டேன் என நினைக்கின்றேன்.என்னை மன்னத்துக் கொள்ளுங்கள் சாத்திரி.என்னால் உங்களுக்குப் பாதுகாப்பும் உத்தரவாதமும் தரமுடியவில்லை.என்னைப் பொறுத்தவரையில் பல ஏன் களுக்கு விடை பூச்சியமாகவே உள்ளது. :(:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் பல ஏன் களுக்கு விடை பூச்சியமாகவே உள்ளது. :(:(:(

எல்லாம் தெரிந்தால் இமயமலைக்கு (அல்லது உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் அல்ப்ஸ் மலைக்கு) போகவேண்டியதுதான். பல கேள்விகளுக்கு விடை தெரிந்தால், இந்த உலகம் போலி, இந்த வாழ்க்கை போலி, எந்தன் வாழ்க்கை மாயை என்று ஆகிவிடும்.

Link to comment
Share on other sites

எல்லாம் தெரிந்தால் இமயமலைக்கு (அல்லது உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் அல்ப்ஸ் மலைக்கு) போகவேண்டியதுதான். பல கேள்விகளுக்கு விடை தெரிந்தால், இந்த உலகம் போலி, இந்த வாழ்க்கை போலி, எந்தன் வாழ்க்கை மாயை என்று ஆகிவிடும்.

என்னை குழப்புகின்றீர்கள் கிருபன் :(:(:( .நான் சாத்திரிக்குப்போட்ட பின்னூட்டத்தில் இடக்குப் பண்ணுகின்றீர்கள். எங்கள் கண்முன்னே நடந்தகொலைகளுக்கு விளக்கம் கேட்கும் பொழுது சாத்திரி சூழ்நிலைக்கைதியாகின்றார். நீங்கள் என்னை "ஏன்" களுக்கு இமயமலை போகச்சொல்கன்றீர்கள். இவைகள் உங்களைப் பாதித்ததோ எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு நிறையவே உண்டு.

Link to comment
Share on other sites

எல்லாம் தெரிந்தால் இமயமலைக்கு (அல்லது உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் அல்ப்ஸ் மலைக்கு) போகவேண்டியதுதான். பல கேள்விகளுக்கு விடை தெரிந்தால், இந்த உலகம் போலி, இந்த வாழ்க்கை போலி, எந்தன் வாழ்க்கை மாயை என்று ஆகிவிடும்.

கொஞ்சம் தெரிந்ததால்தான் அல்ப்ஸ் மலை அடிவாரத்தில் வந்து குடியேறிவிட்டேன். :lol:

உங்களை மிகவும் சங்கடப்படுத்தி விட்டேன் என நினைக்கின்றேன்.என்னை மன்னத்துக் கொள்ளுங்கள் சாத்திரி.என்னால் உங்களுக்குப் பாதுகாப்பும் உத்தரவாதமும் தரமுடியவில்லை.என்னைப் பொறுத்தவரையில் பல ஏன் களுக்கு விடை பூச்சியமாகவே உள்ளது. :(:(:(

எனக்கு சங்கடம் ஒன்றும் இல்லை கடந்த கால அனுபவங்கள். மற்றும்படி நான் அனைத்தையும் எழுதினால் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவர்களிற்குத்தான் சங்கடம். :lol:

சாத்திரி புலிகளை பற்றி நன்குதான் அறிந்திருக்கின்றார்.அதில் இருந்த படியாலோ என்னவோ?

புலிகளைப்பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் இப்படியான வேலைகளை செய்தது செய்வது உண்மையான புலிகள் அல்ல புலி என்று சொல்லி திரிகின்ற அனைத்துலக செயலகத்தில் வாலுகள்.அவைகளும் நறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது :lol:

சாத்திரி கனக்க வேண்டாம். அந்த கொலைகளுக்கு பயன்படுத்தபட்ட துப்பாக்கிகள் யாருக்கு உரியவை என்று மட்டுமாவது உலகுக்கு தெரியப்படுத்துங்கள்..இன்னும் கண்ணை திறந்து கனவு காண்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

.உண்மைகள் எப்பவுமே உறங்குவதில்லை .

சரி பெயரை மட்டும் சொல்கிறேன். அன்ரனி அரியாலை மிகுதியை தேடிக்கண்டு பிடியுங்கள். ^_^

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.