Jump to content

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுதில்லி, ஜூன்.22:

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கருவுற்ற செய்தியால் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் மிகுந்த குதூகலத்தில் உள்ளனர்.

ஐஸ்வர்யா கருவுற்ற செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் அமிதாப் வெளியிட்ட அரை மணி நேரத்துக்குள் சுமார் 3000 ரசிகர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

உங்களது வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் வரவேற்கிறேன். அரை மணி நேரத்தில் 2843 டிவிட்டுகள் வந்துள்ளன. அனைவருக்கும் நன்றி உங்களின் அன்பு மற்றும் பாசம் மனதை வருடுகிறது என அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமிதாபின் மகன் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தங்களது குரு படம் வெளியான பின்னர் 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

செவ்வாய்க்கிழமை இரவு அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், நியூஸ், நியூஸ், நியூஸ்!!! நான் தாத்தாவாகப் போகிறேன். எதிர்பார்ப்பில் ஐஸ்வர்யா ராய்... மிகுந்த மகிழ்ச்சியாகவும், த்ரில்லாகவும் உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. வாழ்த்து தெரிவித்த முதல் சில நபர்களில் பிரியங்கா சோப்ராவும் இடம்பெற்றுள்ளார். அற்புதமான செய்தி! சந்ததியை அடுத்தகட்டத்துக்கு முன்னேற்றுவோம் என பிரியங்கா சோப்ரா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.மாதவன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஓஹ்... மிகவும் மகிழ்ச்சியான செய்தி சார்.. வம்சாவழி தொடர்கிறது... ஒட்டுமொத்த குடும்பமும் நேசிக்கும்.

தியா மிஸ்ராவின் வாழ்த்துச் செய்தி: வாழ்த்துக்கள்!!! அற்புதமான அற்புதமான செய்தி...

குடும்பத்தில் புதிதாக பிறக்க உள்ள வாரிசுக்காக வாழ்த்து தெரிவிக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை விவரிக்க வார்த்தைகளே இல்லை... எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் உள்ளது என டிவிட்டரில் அமிதாப் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமணி..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யா ராய், திருமணம் முடித்து மூன்று வருடத்துக்கு மேலாகி இருக்கும்.

கருவுற ஏன்... இவ்வளவு தாமதம் ஏற்பட்டதோ.....

அமிதாப்பச்சன் தாத்தாவாகும் சந்தோசத்தில், நாங்களும் பங்கு எடுக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யா ராய், திருமணம் முடித்து மூன்று வருடத்துக்கு மேலாகி இருக்கும்.

கருவுற ஏன்... இவ்வளவு தாமதம் ஏற்பட்டதோ.....

அமிதாப்பச்சன் தாத்தாவாகும் சந்தோசத்தில், நாங்களும் பங்கு எடுக்கிறோம்.

சிறியண்ணா.. அது காய்ஞ்ச மாடு கம்பில விழுகிற கணக்கா இருப்பினமே ஆக்கள்.. எப்படா தங்களுக்கு ஒரு கலியாணம் நடக்கும் என்று அவை தான் எண்ணி ஒரு வருசத்தில அல்லது அதற்கு முதலே பெத்துக்கிறது. திருமண வாழ்க்கை என்பது வெறும் குழந்தை பெத்துக்கிற ஒன்றா..???! அது ஒரு குடும்பம் என்ற நிறுவனத்தை கட்டி அமைக்கிற காரியம். அது ஒன்றும் அவ்வளவு இலகுவான விடயம் அன்று. குழந்தை பெத்துப் போட்டு அதை வைச்சு அரசாங்கப் பணத்தில அண்டி வாழுறவைக்கு உதுகள் தெரியாமல் இருக்கலாம். உண்மையில் ஒரு குழந்தை பெற்று வளர்க்கிறது என்பது வேலை செய்யும் பெற்றோருக்கு ஒரு சவாலே. இவங்க நடிகர்கள் அந்த வகையில் அவங்களுக்கும் ஒரு சவாலே..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணா.. அது காய்ஞ்ச மாடு கம்பில விழுகிற கணக்கா இருப்பினமே ஆக்கள்.. எப்படா தங்களுக்கு ஒரு கலியாணம் நடக்கும் என்று அவை தான் எண்ணி ஒரு வருசத்தில அல்லது அதற்கு முதலே பெத்துக்கிறது. திருமண வாழ்க்கை என்பது வெறும் குழந்தை பெத்துக்கிற ஒன்றா..???! அது ஒரு குடும்பம் என்ற நிறுவனத்தை கட்டி அமைக்கிற காரியம். அது ஒன்றும் அவ்வளவு இலகுவான விடயம் அன்று. குழந்தை பெத்துப் போட்டு அதை வைச்சு அரசாங்கப் பணத்தில அண்டி வாழுறவைக்கு உதுகள் தெரியாமல் இருக்கலாம். உண்மையில் ஒரு குழந்தை பெற்று வளர்க்கிறது என்பது வேலை செய்யும் பெற்றோருக்கு ஒரு சவாலே. இவங்க நடிகர்கள் அந்த வகையில் அவங்களுக்கும் ஒரு சவாலே..! :)

நெடுக்ஸ், உலகநடிகன் அமிதாப்பிடமும், உலக அழகி ஐஸ்வர்யாராயிடமும் இல்லாத பொருளாதார, ஆளாதார வசதியற்று பிள்ளைப் பேற்றை தள்ளி வைத்தமாதிரி இருக்குது, உங்க கதை. திருமணம் என்பதில் வம்ச விருத்தியும் அடக்கம். திருமணப் பொருத்தம் பார்க்கும் போது.... யோனிப் பொருத்தத்தை சாத்திரிமார் உன்னிப்பாக அவதானிப்பார்கள். காசு, பணம் எல்லாம் அதுக்குப் பிறகு தான்..... தெரியுமோ.

அமிதாப்பே... தாத்தாவான குஷியை கொண்டாடுகிறார் என்றால்...

அதுக்கு அர்த்தம் பணம் அல்ல.... குடும்பத்திலை ஒரு வம்சம் வந்திட்டுது என்ற மகிழ்ச்சியில்.

இதை.... ஒற்றைப் பனைமரத்துக்கு எப்படி புரிய வைக்க முடியுறது என்று, தான் எனக்குத் தெரியவில்லை. :)

Link to comment
Share on other sites

நெடுக்ஸ், உலகநடிகன் அமிதாப்பிடமும், உலக அழகி ஐஸ்வர்யாராயிடமும் இல்லாத பொருளாதார, ஆளாதார வசதியற்று பிள்ளைப் பேற்றை தள்ளி வைத்தமாதிரி இருக்குது, உங்க கதை. திருமணம் என்பதில் வம்ச விருத்தியும் அடக்கம். திருமணப் பொருத்தம் பார்க்கும் போது.... யோனிப் பொருத்தத்தை சாத்திரிமார் உன்னிப்பாக அவதானிப்பார்கள். காசு, பணம் எல்லாம் அதுக்குப் பிறகு தான்..... தெரியுமோ.

அமிதாப்பே... தாத்தாவான குஷியை கொண்டாடுகிறார் என்றால்...

அதுக்கு அர்த்தம் பணம் அல்ல.... குடும்பத்திலை ஒரு வம்சம் வந்திட்டுது என்ற மகிழ்ச்சியில்.

இதை.... ஒற்றைப் பனைமரத்துக்கு எப்படி புரிய வைக்க முடியுறது என்று, தான் எனக்குத் தெரியவில்லை. :)

சிறி உதப்பார்கிறது ஜிங்கிச்சாவுக்கு

பால் மரம் பார்க்கிறதுதான் வம்சவிருத்திக்கு எண்டு நினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி உதப்பார்கிறது ஜிங்கிச்சாவுக்கு

பால் மரம் பார்க்கிறதுதான் வம்சவிருத்திக்கு எண்டு நினைக்கிறன்

காரணிகன், இரண்டும் ஒண்டு தானே..... :D:lol:

Link to comment
Share on other sites

காரணிகன், இரண்டும் ஒண்டு தானே..... :D:lol:

இல்லை சிறி யோனிப் பொருத்தம் இருந்தாலும் விருட்சப் பொருத்தம் இல்லாவிடில் மக்கள்பேறு இருக்காது என்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சிறி யோனிப் பொருத்தம் இருந்தாலும் விருட்சப் பொருத்தம் இல்லாவிடில் மக்கள்பேறு இருக்காது என்பார்கள்

ஓ.... உண்மையாகவா காரணிகன்.

விஞ்ஞான முறைகளில் சாத்தியப்படும் என்று, நினைக்கின்றேன்.

நெடுக்ஸிக்கு இதைப் பற்றி, விரிவாய் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... உண்மையாகவா காரணிகன்.

விஞ்ஞான முறைகளில் சாத்தியப்படும் என்று, நினைக்கின்றேன்.

நெடுக்ஸிக்கு இதைப் பற்றி, விரிவாய் தெரியும்.

எல்லாற்றையையும் சரியா அளந்து பார்த்து எழுதி வைச்சு பொருத்தம் பார்க்கிற திறமை எங்கட ஆக்களிண்ட சாட்டுகளிலும்.. சாத்திரி மாரிடம் தான் உண்டு. எத்தனை காலமா.. ஏமாத்திறாங்க.. உந்தச் சனமும் திருந்திற பாடில்ல..!

விஞ்ஞான முறைப்படி... யோனி என்பது அதற்குள் உள்நுழையும் அல்லது அதனூடு வெளியேறும் அமைப்புக்கு ஏற்ப தனது அளவை மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடியது. அந்த வகையில் தான் அதன் இழைய அமைப்பு உள்ளது. சிறிசா இருந்தா என்ன.. பெரிசா இருந்தா என்ன.. பாலுறவில் திருப்தி என்பது மனதளவில்.. தொடுகை அளவிலேயே அதிகம் தங்கி உள்ளது. இதைத்தான் விஞ்ஞானம் ஆராய்ந்து சொல்கிறது. இதை மிஞ்சி.. எனி அனுபவஸ்தர்கள் தான் சொல்லிக்கனும். குறிப்பில் சாத்திரிகள் எழுதித் தருவதில் அது இல்லை. :D:)

Link to comment
Share on other sites

விஞ்ஞான முறைப்படி... யோனி என்பது அதற்குள் உள்நுழையும் அல்லது அதனூடு வெளியேறும் அமைப்புக்கு ஏற்ப தனது அளவை மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடியது. அந்த வகையில் தான் அதன் இழைய அமைப்பு உள்ளது. சிறிசா இருந்தா என்ன.. பெரிசா இருந்தா என்ன..

'உலகிலேயே மிகச் சிறந்த இயந்திரம் என்றும் அதனை இயக்கும் முகாமைத்துவம்தான் பிரச்சனையானது' என ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த Hermann Otto Kloepneckler எனும் பிரபல மகப்பேறு மருத்துவர் கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யா ராய், திருமணம் முடித்து மூன்று வருடத்துக்கு மேலாகி இருக்கும்.

கருவுற ஏன்... இவ்வளவு தாமதம் ஏற்பட்டதோ.....

அமிதாப்பச்சன் தாத்தாவாகும் சந்தோசத்தில், நாங்களும் பங்கு எடுக்கிறோம்.

இப்ப எல்லாம் திருமணம் முடித்த உடனேயே எல்லோரும் குழந்தை பெற விரும்புவதில்லை...தம்பதியினராய் குறைந்த பட்சம் ஒரு வருடமாவது தனியே வாழ்க்கையை அனுபவித்து விட்டே அதன் பின் குழந்தை பெற விரும்புகிறார்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சாத்திரிமார், யாழ் களத்தில் இருக்கின்றார்கள் என்று இண்டைக்குத் தான் தெரியும்!

மூன்று வருஷமாகப் பிள்ளையில்லாத பெற்றோருக்கு கடவுளாப் பார்த்து ஒரு குழந்தையைக் கொடுத்திருக்கின்றார்.

அதுக்காக அவர்களை வாழ்த்துவதை விட்டு விட்டு!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.