Jump to content

மணமுடித்துப் பார்


Recommended Posts

மணமுடித்துப் பார்

மணமுடித்துப் பார்

தொண்ணூறு நாட்களின்

பொருள் விளங்கும்,

உன் கண்களைச் சுற்றிக்

கரு வளையம் உருவாகும்,

அதை நீ ஞானம் என்பாய்,

தபால்காரனைக் கண்டால்,

திட்டச் சொல்லும்,

சேதி கொண்டு வந்தவனையே

வையத் தோன்றும்,

மணமுடித்துப் பார் !

நிமிடங்கள்

வருடங்களாகவே கழியும்,

வருடங்கள்

வரவே வராது,

உன் விம்பம்

கண்ணாடியில் விழாது,

உன்னைப் பார்த்தாலே

வேறு முகம் தான்

விரண்டிடக் காண்பாய்

மணமுடித்துப் பார் !

கண்ணாடியில் மட்டுமல்ல

உன்னிடமும்

ரசம் போகும்,

இன்னுமொருவருக்கு

முடிச்சுப் போட்டு

எம்மையே பிணைத்துக்

கொள்(ல்)வது

திருமணத்தில்தான்,

கழுத்தில்

கல்லைக் கட்டி

காட்டி ரசிப்பதுவும்

திருமணத்தில்தான்,

மணமுடித்துப் பார் ,

நீ கட்டுவது

ஒரு கல்தான்,

இன்னும் பல கற்கள்

இலவச இணைப்பாகும், மணமுடித்துப் பார்,

கவிதைகளில் கழிந்த உன்காலம்,

கடனில் கழியலாம்,

மணமுடித்துப் பார்,

கவிதை எழுதுவதற்கென்ன,

வாசிப்பதற்கே

வசதியிருக்காது,

மணமுடித்துப் பார்,

எவளைப் பற்றி

எழுதினாய் என்று,

விளக்க முடிந்தால்,

மணமுடித்துப் பார்,

ஈ காக்கைகூட

உனக்கு எப்போது,

குழந்தை கிடைக்குமெனக்

குசலம் விசாரிக்கும்,

அது குசலம் அல்ல

உனக்கான குழிதான்

மணமுடித்துப் பார்,

தப்பியோடத்

தருணம் பார்ப்பாய்,

அடிக்கடி சிரித்து

அசிங்கப் படுவாய்

மணமுடித்துப் பார்,

அம்மாவின் உணவில்

ஆயிரம் சொல்வாய்,

உப்பில்லாப் பண்டத்தை

ருசித்து உண்பாய்,

பாகற்காய் சட்னியை

பலதடவை

பகிர்ந்து கொள்வாய்,

மணமுடித்துப் பார்,

வாழ்க்கையில்

துவைத்து அறியாய்,

உன் சலவையின் பெருமையை

சாற்றிடக் கேட்பாய்,

மணமுடித்துப் பார்,

அங்காடித் தெருவில்

அலைந்ததே இல்லை,

வெயிலில் அலைந்து

வியர்த்ததும் இல்லை,

வெயிலும் வியர்வையும்

வீரனுக்கழகென

விளக்கமும் சொல்வாய்,

மணமுடித்துப் பார்,

சிறிதளவு சுகமும்,

முழுவதுமாய் சுமையும்,

என்னவென்றறியாத

மாயச் சுழிக்குள்

சிக்கிக் கொள்ளும்

சமுதாயச் சிக்கல்,

மணமுடித்துப் பார்

கவிஞன் சொன்னான்,

"காதலித்துப் பார்,

சொர்க்கம் நரகம்

இரண்டிலொன்று

இன்றே நிச்சயம் "

மணமுடித்துப் பார்

நரகம் மட்டும்

என்றும் நிச்சயம்.

Thanks - Facebook

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில நகைச்சுவைக்கு என்ன இருக்குது. உண்மை தானே அதிகம் இருக்குது. திருமணம் முடிச்ச பலர் இப்படித் தான் புலம்பிக்கிட்டு திரியுறாங்க. பேசாம இதை கவிதைப் பகுதியில் போட்டிருக்கலாம். :D:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.