Jump to content

மீண்டும் தொடங்கும் வன்முறைக் கலாச்சாரம் – காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ்


Recommended Posts

"கருத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக" புலி ஆதரவுக் காடையர்களால் இன்று (22.06.2011) பிற்பகல் ராஜ் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். முப்பது வருட வன்முறைக் கலாச்சாரத்த்தின் அவமானகரமான குறியீடுகளாகத் திகழும் இந்தக் காடையர்கள் பிரித்தானியச் சட்டவரம்புகளைக் கூட மதிப்பதில்லை.

ஏழாம் திகதி ஜுன் மாதம் தீபம் தொலைக்காட்சியில் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடியைப எமது போராட்டங்களில் உபயோகப்படுத்துவதன் அரசியல் பின்விளைவுகள் குறித்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்த ராஜ் என்பவரே ராம் என்ற புலி ஆதரவளரும் செயற்பாட்டாளருமான ஒருவரால் தாக்கப்படுள்ளார். நியூ மோல்டன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட ராம் முன்னதாக பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றுடன் தன்னை அடையாளப்படுத்தி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய நியூ மோல்டன் பகுதியில் காரை நிறுத்திவிட்டு 'வன்னியன் பூட்' என்ற பலசரக்குக் கடையில் கொள்வனவு செய்யச் சென்ற ராஜை அங்கு தெருவில் நின்ற ஒருவர் அழைத்திருக்கிறார்.

முதலில் கடைக்கு முன்னால் ராஜ் ஐத் தாக்கிய ராமின், காடைத்தனத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கடைக்குள் சென்றுள்ளார். அவ்வேளையில் தனது கைத்தொலைபேசியில் வேறு சிலரையும் அங்கு தாக்குதலுக்கு அழைத்த ராம், ராஜைத் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து கொலை செய்யப் போவதாகப் பயமுறுத்தல் விடுத்துள்ளார். இதற்கிடையில் பிரித்தானியக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

போலீசாரைக் கண்ட ராமும் உம் பின்னதாக அவருடன் இணைந்து கொண்ட ஏனைய காடையர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இலங்கையில் ராஜபக்ச குடும்ப அரசின் காடைத்தனத்திற்கும் பேரினவாத அரச வன்முறைக்கும் எதிரான செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத இலங்கை அரச கோளைகள் வன்முறையை மட்டுமே தமது ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். அரச பயங்கரவாதிகளின் அதே வழிமுறையில், கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத காடையர்கள் தமது கையாலாகத் தனத்தை வன்முறையாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான வீரம் செறிந்த விடுதலை போராட்டத்தை அதிகாரங்கள் சில மாதங்களில் இரத்தமும் சதையுமாக சிதைத்து, அப்பாவி மக்களின் இரத்ததை நந்திக்கடலோடு கரைத்த கோரத்தின் அவலக் குரல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. நியாயமான போராட்டம் இரவோடிரவகச் சாம்பலாக்கப்படதற்கு ஜனநாயக மறுப்பும், கொலைகளும், வன்முறைகளும் அவற்றை நிறைவேற்றும் காடையர்களும் பிரதான காரணங்களுள் சிலவாகும்.

முப்பது வருடப் போராட்டம் வன்முறையும், வக்கிரமும், முட்டாள்தனமும், பழிவாங்கும் உணர்வும், சுயநலமும் கொண்ட மனநோயாளிகளையும் எம்மத்தியில் உருவாக்கியுள்ளது. ராம் என்பவர் அந்த வன்முறைக் கலாச்சாரத்தின் முகப்பு. ஒடுக்கும் இலங்கை அரச பாசிசத்தை வளர்க்கும் சமூகவிரோதச் செயல்களின் ஆரம்பமே ராம் போன்றவர்களின் காடைத்தனம்.

மக்கள் பற்றும், சமூக பிரக்ஞையும் கொண்ட அனைத்து ஊடகங்களும் இந்த வன்முறைக் கலாசாரத்தை அனைத்து வழிகளிலும் எதிர்க்க வேண்டும். ஜனநாயக விழுமியங்களையும், கருத்துரிமையையும், பாதுகாக்கத் தவறுகின்ற ஒவ்வொரு தடவையும் இன்னொரு முள்ளி வாய்க்காலை புலம் பெயர் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யத் தயாராகிறோம். தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஈழ மக்களின் உணர்வுகளையும் இன்னொரு தடவை சிதைக்க ஆரம்பித்துவிட்டோமா என்ற அச்சம் எழுகிறது.

http://kuralweb.com/201100623thugs.aspx

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply

மக்கள் பற்றும், சமூக பிரக்ஞையும் கொண்ட அனைத்து ஊடகங்களும் இந்த வன்முறைக் கலாசாரத்தை அனைத்து வழிகளிலும் எதிர்க்க வேண்டும். ஜனநாயக விழுமியங்களையும், கருத்துரிமையையும், பாதுகாக்கத் தவறுகின்ற ஒவ்வொரு தடவையும் இன்னொரு முள்ளி வாய்க்காலை புலம் பெயர் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யத் தயாராகிறோம். தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஈழ மக்களின் உணர்வுகளையும் இன்னொரு தடவை சிதைக்க ஆரம்பித்துவிட்டோமா என்ற அச்சம் எழுகிறது.

இறுதி யுத்தத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கோ அல்லது இலங்கை அரசிடம் சிக்கியுள்ள முன்னாள் போராளிகளுக்கோ இந்தக் காடையர்கள் எந்த உதவியும் செய்வதில்லை. ராம் போன்றவர்களுக்கெதிராக எடுக்கப் படவிருக்கும் சட்ட நடவடிக்கை மீண்டும் தலையெடுக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை முறியடிக்க ஏதுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரி செய்திகளைப்போட்டு தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்ப்படுத்தாதீர்கள்,

இவர் குறிப்பிட்டதைப்பாத்தால் இவரும் ஒரு ஒட்டுக்குழு போல் அல்லவா கருத்துகளை வெழிப்படுத்துகின்றார்.

Link to comment
Share on other sites

நியாயமான போராட்டம் இரவோடிரவகச் சாம்பலாக்கப்படதற்கு ஜனநாயக மறுப்பும், கொலைகளும், வன்முறைகளும் அவற்றை நிறைவேற்றும் காடையர்களும் பிரதான காரணங்களுள் சிலவாகும்

உண்மை தான்

எமது தாயாக விடுதலைக்கு வக்காலத்து வாங்க இந்த காடையர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. இவர்கள் யாரும் நேர்மையானவர்கள் அல்ல. தமிழர்களையே சீடிங் செய்து பிழைபவர்கள் . எத்தனை தமிழ் பெண்களின் வாழ்க்கை இவர்களால் நாசமாக்க பட்டுள்ளது. எமது தாயாக விடுதலைக்க தவறான பாதையில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Link to comment
Share on other sites

தயவு செய்து இந்தமாதிரி செய்திகளைப்போட்டு தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்ப்படுத்தாதீர்கள்.

Link to comment
Share on other sites

இவ்வாறான புரிதலே இவர்களை ஓரம் கட்டிவிடும்.

Link to comment
Share on other sites

எமக்குள்ளே இருக்கும் வன்முறைக் கலாச்சாரம் ஒழிய வேண்டும்

Link to comment
Share on other sites

இந்தமாதிரி செய்திகளைப்போட்டு தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்ப்படுத்தாதீர்கள்,

இவர் குறிப்பிட்டதைப்பாத்தால் இவரும் ஒரு ஒட்டுக்குழு போல் அல்லவா கருத்துகளை வெழிப்படுத்துகின்றார்.

தனது கருத்தைச் சொன்னதற்காக ஒரு தமிழர் இன்னொரு காடைத் தமிழ் குழுவினால் பலருக்கும் முன்னிலையில் வைத்து தாக்கப் பட்டிருக்கிறார். அவரைப் பலவந்தமாக தமது வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். இதைச் சொன்னால் தமிழர் மத்தியில் பிளவு வந்திடுமாம்.

இதைத் தான் மகிந்த குடும்பமும் சொல்லுது. நடந்த அநியாயங்களைச் சொன்னால் 'இலங்கை மக்கள்' மத்தியில் பிளவு வந்திடுமாம்.

Link to comment
Share on other sites

தனது கருத்தைச் சொன்னதற்காக ஒரு தமிழர் இன்னொரு காடைத் தமிழ் குழுவினால் பலருக்கும் முன்னிலையில் வைத்து தாக்கப் பட்டிருக்கிறார். அவரைப் பலவந்தமாக தமது வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். இதைச் சொன்னால் தமிழர் மத்தியில் பிளவு வந்திடுமாம்.

இதைத் தான் மகிந்த குடும்பமும் சொல்லுது. நடந்த அநியாயங்களைச் சொன்னால் 'இலங்கை மக்கள்' மத்தியில் பிளவு வந்திடுமாம்.

காடைத்தனம்தான் பிளவை ஏற்படுத்தும் . ஏற்படுத்தி இருக்கிறது

கருத்து சொன்ன நபரின் ஆதரவு இனி இல்லாமல் போகலாம் அல்லவா ?

இவர்களை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா விற்கு எதிராக காடைத்தனத்தை காண்பிக்க சொல்ல வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இந்தமாதிரி செய்திகளைப்போட்டு தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்ப்படுத்தாதீர்கள்.

இப்ப ரொம்ப ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் தாக்குதல் நடத்தினாலும் அது புலி ஆதரவாளர் என்பது சிலரின் குருட்டுத் தனமான மாற்றுக் கருத்தியல் என்ற மாயை வளர்க்கும் காட்டிக் கொடுப்பு அரசியல். தமிழீழ தேசியக் கொடியை தாழ்த்திப் பேசுறவனை அடிக்கிறது என்ன ஜெயிலில தூக்கி போட்டால் கூட அது பாவமில்லை. புலி ஆதரவாளர்கள் தான் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை.. இன உணர்வுள்ள எவனும் இதனைச் செய்யலாம்.

சிறீலங்கா சிங்களக் கொடியைப் பற்றி பேசமாட்டாங்கோ.. அதை தூக்கி போர்த்திக்கிட்டு கூத்தடிப்பாங்கோ.. அப்புறம் மாற்றுக் கருத்து என்று அதற்குள்ளால பூனைக்குட்டி வரப்போகுது என்றும் படங் காட்டுவாங்கோ. உண்மையில் தமிழர்களிடம் மாற்றுக் கருத்து என்ற ஒன்றே இல்லை. புலி காழ்புணர்ச்சி வாதம் மட்டுமே உண்டு. அது எமது இனத்தின் அழிவின் ஒரு காரணி. அதன் வால்கள்.. துணைகள்.. ஏன் எமது இனத்தை இன்னும் பிரதிநிதித்துவம் செய்வதாக கற்பனை செய்கிறார்களோ தெரியவில்லை. உருப்படியான எதிர்க் கட்சி அரசியலை ஜனநாயக வழியில் அங்கீகரிக்கும் தமிழீழ மக்கள்.. காழ்புணர்ச்சிகளை கொட்ட பயன்படும் மாற்றுக் கருத்துக்களை சகிக்க மாட்டார்கள் என்பதே இந்த தாக்குதல் சொல்லும் செய்தி. அந்த மக்களை காடைகள் என்பதிலும் அவர்களின் உணர்வுகளை தீபம் உட்பட அங்கு வந்து உட்காரும் முள்ளிவாய்க்காலின் பின்னால் முகம் காட்டும் மாற்றுக் கருத்து மாயாவிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.எனியாவது தம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.

இது குறித்து பிரித்தானிய காவல் துறைக்கு விளக்குவதோடு மக்களின் இன உணர்வை இழிவுபடுத்தி அவர்களை ஆத்திரமூட்டச் செய்யும் மாற்றுக் கருத்து மாயாவிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அவர்களை ஒளித்திரையில் கூட்டி வந்து காட்டி மக்களை ஆத்திர மூட்டி வன்முறைக்கு தூண்டுவதை தடுக்கவும் வேண்டும்.

இந்த மாற்றுக் கருத்து மாயாவிகள் எவரும் மக்களால் நேர்மையான ஜனநாயக வழியில் தேர்வு செய்யப்பட்டவர்களோ..மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களோ கிடையாது. மன்யு கால்பந்தாட்ட கழகத்தை குறை சொல்லி அதன் ரசிகர்களிடம் வன்முறையை தூண்டி விடுவது போலவே.. இன உணர்வு சம்பந்தப்பட்ட தேசியக் கொடி விவகாரமும் ஆகும் என்பதை பிரித்தானிய பொலிஸாருக்கும் நீதித்துறைக்கும் சொல்ல வேண்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருத்தை ஒருவர் சொன்னால் அதைக்கேட்க எந்த தமிழன் மகனுக்கும் உரிமையுண்டு. அந்த கருத்தை சொன்னவர் ஏன் ஒழிந்து ஓடவேண்டும். அப்படியாயின் அவரது கருத்து தப்பு என்றோ அல்லது அவர் சொன்ன கருத்துக்கள் அவரது இல்லை என்றுதான் அர்த்தம். அப்படியாயின் மக்களின் எதிர்ப்பைச்சந்தித்தே ஆகவேண்டும். இது இனி தொடரும் போல்தான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குள்ளே இருக்கும் வன்முறைக் கலாச்சாரம் ஒழிய வேண்டும்

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடிக்கு அங்கீகாரம் பெற பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. தேசியக் கொடி என்பது அந்தந்த நாட்டு மக்களின் தேசத் தாயின் அடையாளம். அதனை எந்த நாட்டு மக்களும் இழிவு படுத்த அனுமதிக்க மாட்டார்கள். சிறீலங்கா தேசியக் கொடியை எரித்தற்காக சிறை சென்று உயிர்விட்ட தமிழர்களும் உண்டு.

அன்றைய தீபம் தொலைக்காட்சி (அது இப்போ இலவசமாக விடப்பட்டுள்ளது பார்க்க.) நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். பேச வரும் விடயத்தை விட்டு ஒரு மாற்றுக் கருத்து மாயாவி.. தேசியக் கொடியை பிடிச்சதால தான்.. முள்ளிவாய்க்கால் அழிவே வந்தது. அது எமக்கு அவசியமா என்று வேறு கேட்குது. எனக்கே அந்த மாயாவியை செருப்பால அடிக்கனும் போல இருந்திச்சு. ஒரு அடிப்படை அரசியல் சர்வதேச ஆராய்தல் இன்றி வெறும் புலி காழ்ப்புணர்ச்சியோடு சிலர் பேசுவது எல்லாம் கருத்தாகாது. அப்படியான ஜென்மங்கள் ஒன்றில் மக்களை தொந்தரவு செய்யாமல் தானும் தன்ர குடும்பமும் என்று வாழனும். இல்ல மக்களின் கோபத்தை தூண்டி.. வேடிக்கை பார்க்க நினைத்தால் விளைவு இதாகத்தான் இருக்கும். குற்றம் செய்யுறவனை விட செய்யத் துண்டுறவைக்கு தான் தண்டனை அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருத்தை ஒருவர் சொன்னால் அதைக்கேட்க எந்த தமிழன் மகனுக்கும் உரிமையுண்டு. அந்த கருத்தை சொன்னவர் ஏன் ஒழிந்து ஓடவேண்டும். அப்படியாயின் அவரது கருத்து தப்பு என்றோ அல்லது அவர் சொன்ன கருத்துக்கள் அவரது இல்லை என்றுதான் அர்த்தம். அப்படியாயின் மக்களின் எதிர்ப்பைச்சந்தித்தே ஆகவேண்டும். இது இனி தொடரும் போல்தான் உள்ளது.

இது முற்றிலும் உண்மை. இதைக்கூட புரியாதவர்கள் என்னதான் செய்வது ?

Link to comment
Share on other sites

இது சிங்கள பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதியாகவும் இருக்கலாம்.

அவனை பேசும்படி காசு கொடுத்து உசுப்பிவிட்டு, அவனுக்கு அடியும் கொடுத்திருக்கிறார்கள். சிங்கள அரச தூதுவரைக் கைது செய்து உரிய முறையில் விசாரித்தால் உண்மை வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது கருத்தைச் சொன்னதற்காக ஒரு தமிழர் இன்னொரு காடைத் தமிழ் குழுவினால் பலருக்கும் முன்னிலையில் வைத்து தாக்கப் பட்டிருக்கிறார். அவரைப் பலவந்தமாக தமது வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். இதைச் சொன்னால் தமிழர் மத்தியில் பிளவு வந்திடுமாம்.

இதைத் தான் மகிந்த குடும்பமும் சொல்லுது. நடந்த அநியாயங்களைச் சொன்னால் 'இலங்கை மக்கள்' மத்தியில் பிளவு வந்திடுமாம்.

சிங்களவன் ஒருநாளும் தங்கள் தரப்பு மேற்கொள்ளும் தவறுகளை சுட்டிக்காட்டுவதில்லையே ...!

Link to comment
Share on other sites

மாற்றுக் கருத்து என்ற போர்வையில் சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் களத்தில் இறங்கியுள்ளார்கள்.

பயங்கரவாதிகள் அழிய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தின் தேசியக் கொடியை விமர்சித்து பேச இந்த ராஜ் யார்?

மற்ற இனத்தில், தேசியக் கொடியை விமர்சித்தால் உயிரோடு விட்டு வைப்பார்களா?

இவருக்கு விழுந்த இருப்புக் கம்பி அடியுடன்.... இனி மேல் தொலைக்காட்சியில் போய் குந்திருந்து, அலட்டுவதை நிறுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக் கருத்து என்ற போர்வையில் சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் களத்தில் இறங்கியுள்ளார்கள்.

பயங்கரவாதிகள் அழிய வேண்டும்.

இவர்கள் சிங்களவனிடம் பணம் பெற்று இப்படியான வேலைகளை செய்கின்றனர்.

ஒரு இனத்தின் தேசியக் கொடியை விமர்சித்து பேச இந்த ராஜ் யார்?

மற்ற இனத்தில், தேசியக் கொடியை விமர்சித்தால் உயிரோடு விட்டு வைப்பார்களா?

இவருக்கு விழுந்த இருப்புக் கம்பி அடியுடன்.... இனி மேல் தொலைக்காட்சியில் போய் குந்திருந்து, அலட்டுவதை நிறுத்த வேண்டும்.

நாங்கள் இந்த தேசியத்துக்காக நிறைய உறவுகளை இழந்துள்ளோம்.

Link to comment
Share on other sites

ஆரம்பத்திலேயே களையெடுக்கவேண்டும்.இரண்டு பேருக்கு இப்படி போட்டால் யாரும் வாய் திறக்கமாட்டினம். எங்கட பெடியங்கள் பேய்காய்கள்.

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடிக்கு அங்கீகாரம் பெற பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. தேசியக் கொடி என்பது அந்தந்த நாட்டு மக்களின் தேசத் தாயின் அடையாளம். அதனை எந்த நாட்டு மக்களும் இழிவு படுத்த அனுமதிக்க மாட்டார்கள். சிறீலங்கா தேசியக் கொடியை எரித்தற்காக சிறை சென்று உயிர்விட்ட தமிழர்களும் உண்டு.

அன்றைய தீபம் தொலைக்காட்சி (அது இப்போ இலவசமாக விடப்பட்டுள்ளது பார்க்க.) நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். பேச வரும் விடயத்தை விட்டு ஒரு மாற்றுக் கருத்து மாயாவி.. தேசியக் கொடியை பிடிச்சதால தான்.. முள்ளிவாய்க்கால் அழிவே வந்தது. அது எமக்கு அவசியமா என்று வேறு கேட்குது. எனக்கே அந்த மாயாவியை செருப்பால அடிக்கனும் போல இருந்திச்சு. ஒரு அடிப்படை அரசியல் சர்வதேச ஆராய்தல் இன்றி வெறும் புலி காழ்ப்புணர்ச்சியோடு சிலர் பேசுவது எல்லாம் கருத்தாகாது. அப்படியான ஜென்மங்கள் ஒன்றில் மக்களை தொந்தரவு செய்யாமல் தானும் தன்ர குடும்பமும் என்று வாழனும். இல்ல மக்களின் கோபத்தை தூண்டி.. வேடிக்கை பார்க்க நினைத்தால் விளைவு இதாகத்தான் இருக்கும். குற்றம் செய்யுறவனை விட செய்யத் துண்டுறவைக்கு தான் தண்டனை அதிகம்.

நீங்கள் விளக்கமாக சொல்லி புரிய வைத்தீர்கள் ...

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் அழிய வேண்டும்.

தங்கள் விருப்பம் முழுமையாக நிறைவேற இன்னமும் கொஞ்சப்பேர் போகவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்திலேயே களையெடுக்கவேண்டும்.இரண்டு பேருக்கு இப்படி போட்டால் யாரும் வாய் திறக்கமாட்டினம். எங்கட பெடியங்கள் பேய்காய்கள்.

சர்வதேச அரசியல் பேசி யாழ்களத்தில் வேண்டுமானால் குப்பை கொட்டலாம்.............

நிஜஉலகத்தில் ஒரு புல்லை தனிலும் புடுங்குவதென்றால் உடல் வலிமையே முன்நிற்கிறது.

புலி புலி என்று கிலிபிடித்து திரிந்தவர்கள் இப்போது எதையாவது புடுங்கி பார்க்கலாமே? இப்போது புலியும் இல்லை எலியும் இல்லை.

இது ஏலாததுகள் எடுக்கும் வாந்தி என்று எங்களுக்கு எப்போதோ தெரிந்தது நம்பிய சிலருக்கு இப்போது தெரிகிறது அவ்வளவே.

ஆனால் சளைக்காது தொடாந்தும் வாந்தியெடுக்கவும் ஒரு தில் வேண்டுமு; என்பதை மறுக்க முடியாது.

காந்தியம் பற்றி பேசினால்...............

மெய்மறந்து கேட்டுகொண்டிருக்கும்போது ஈழமே பிறப்பதுபோல்தான் இருக்கும். எதிரி சிங்களவன் என்பது நினைவுக்கு வந்தால்? காந்தியம் பேசுபவனை பேசுவதை தவிர வேறு வழியில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்திலேயே களையெடுக்கவேண்டும்.இரண்டு பேருக்கு இப்படி போட்டால் யாரும் வாய் திறக்கமாட்டினம்.

எங்கட பெடியங்கள் பேய்காய்கள்.

நாய்க்கு எங்கு அடிபட்டாலும் காலைத்தூக்குவது போல்

ஸ்ரீலங்காவில், இந்தியாவில் ஏது நடந்தாலும் புலிகள் என்பதற்கு அப்பால் யாழ்களத்திலும் இது போன்ற தூக்குதல்கள்.

தெரியாமல்தான் கேட்கின்றேன்

ஈழத்திலிருந்துதான் ஆயுதத்துக்கு பயந்து ஓடிவந்தீர்கள். இங்காவது அந்த நாலுபேரை தட்டிக்கேட்கலாமே........?

இதைச்செய்தால் உண்மையும் வெளிவரும். உங்கள் வீரமும் மக்களுக்கு தெரியும்?????

அடுத்த கட்டத்துக்கு நல்ல தலைமையையும் தரலாம்

செய்வீர்களா?

இல்லை மீண்டும் மீண்டும் .................???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு எங்கு அடிபட்டாலும் காலைத்தூக்குவது போல்

ஸ்ரீலங்காவில், இந்தியாவில் ஏது நடந்தாலும் புலிகள் என்பதற்கு அப்பால் யாழ்களத்திலும் இது போன்ற தூக்குதல்கள்.

தெரியாமல்தான் கேட்கின்றேன்

ஈழத்திலிருந்துதான் ஆயுதத்துக்கு பயந்து ஓடிவந்தீர்கள். இங்காவது அந்த நாலுபேரை தட்டிக்கேட்கலாமே........?

இதைச்செய்தால் உண்மையும் வெளிவரும். உங்கள் வீரமும் மக்களுக்கு தெரியும்?????

அடுத்த கட்டத்துக்கு நல்ல தலைமையையும் தரலாம்

செய்வீர்களா?

இல்லை மீண்டும் மீண்டும் .................???

என்று ஒரு நமட்டுச் சிரிப்போடு பதிந்திருப்பீர்களே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.