Jump to content

மீண்டும் தொடங்கும் வன்முறைக் கலாச்சாரம் – காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ்


Recommended Posts

எப்பிடித்தான் நீங்கள் நெருப்பு நீலம் காட்டினாலும் இதையும் விட கனக்க வீரமான எழுத்துகளெல்லாம் இருக்கு. அப்ப விசிலடிச்சம் இப்பதான் யதார்த்தத்தை புரிந்து கொண்டோம். :lol:

இன்னொரு விடயம் நீலமேகம் நான் ஊருக்குப்போற ஐடியா இல்லை. இங்கையிருந்துதான் உங்களைமாதிரி வீரம் கதைப்பேன்.

ஓணாண்கள் பலவகைப்படும் அதில் பச்சோந்தி என்று ஒரு வகை ஓணாண் உள்ளது அது வெய்யில்,மழை,குளிர்,கோடை,மாரி என்று பருவகாலங்களுக்கும் புல்,பூண்டு,செடி,கொடி என்று தாவரங்களுக்கும் ஏற்ப தன் கலரை மாத்துமாம்....சயன்ஸு வாத்தி சொன்னது.. உண்மையா...??? நேரில் நான் பார்க்கவில்லை...

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply

ஓணாண்கள் பலவகைப்படும் அதில் பச்சோந்தி என்று ஒரு வகை ஓணாண் உள்ளது அது வெய்யில்,மழை,குளிர்,கோடை,மாரி என்று பருவகாலங்களுக்கும் புல்,பூண்டு,செடி,கொடி என்று தாவரங்களுக்கும் ஏற்ப தன் கலரை மாத்துமாம்....சயன்ஸு வாத்தி சொன்னது.. உண்மையா...??? நேரில் நான் பார்க்கவில்லை...

சயன்ஸ்வாத்தியை வைத்தே அதை பரீட்சித்துப்பாத்தீங்களெண்டா பெறுபேறு கிடைக்கும்.

புவியியல் படிப்பித்த வாத்தியும் ஒண்டு சொன்னவர் அதைப்பரீட்சித்துப் பார்த்ததற்கான பெறுபேறாக நெருப்புநீலமேகமெண்டு வந்தது. :lol:

இலக்கியம் படிப்பித்த வாத்தி சொன்னதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது.....அதைக்கேட்டு நீங்கள் அனுமராய் எரிச்சுப்போடுவீங்கள் :lol: வேண்டாம் தேசியத்தின் இமயம் நெருப்பு நீலமேகம் :lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

சயன்ஸ்வாத்தியை வைத்தே அதை பரீட்சித்துப்பாத்தீங்களெண்டா பெறுபேறு கிடைக்கும்.

புவியியல் படிப்பித்த வாத்தியும் ஒண்டு சொன்னவர் அதைப்பரீட்சித்துப் பார்த்ததற்கான பெறுபேறாக நெருப்புநீலமேகமெண்டு வந்தது. :lol:

இலக்கியம் படிப்பித்த வாத்தி சொன்னதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது.....அதைக்கேட்டு நீங்கள் அனுமராய் எரிச்சுப்போடுவீங்கள் :lol: வேண்டாம் தேசியத்தின் இமயம் நெருப்பு நீலமேகம் :lol: :lol: :lol: :lol:

சாந்தி அக்காவின் புண்ணியத்தால் நான் இன்று முதல் தேசியத்தின் இமயம் நெருப்பு நீலமேகம் என்று அழைக்கக்கடவதாக...(தேசியம் என்றால் என்னவென்று என்னிடம் கேட்கவேண்டாம்,சத்தியமாய் எனக்கு அது என்னவென்று தெரியாது..புவியியல் மற்றும் இலக்கிய மேதை சாந்தி அக்காவிடமே கேடுக்கொள்ளவும்.. :lol: நான் வெறும் தேசிய மேதை மட்டுமே.. :D :D :D)

Link to comment
Share on other sites

சாந்தி அக்காவின் புண்ணியத்தால் நான் இன்று முதல் தேசியத்தின் இமயம் நெருப்பு நீலமேகம் என்று அழைக்கக்கடவதாக...(தேசியம் என்றால் என்னவென்று என்னிடம் கேட்கவேண்டாம்,சத்தியமாய் எனக்கு அது என்னவென்று தெரியாது..புவியியல் மற்றும் இலக்கிய மேதை சாந்தி அக்காவிடமே கேடுக்கொள்ளவும்.. :lol: நான் வெறும் தேசிய மேதை மட்டுமே.. :D :D :D)

சயன்ஸ் படிச்ச கலாநிதி நீங்கள் நான் தமிழ் மட்டும் படிச்ச கல்லாநிதி. :lol: இப்பிடியெல்லாம் புகழப்படாது நீலமேகம் பிறகு மழைகொட்டி சுனாமி வந்து உங்கடை தேசியப்பற்றில பூசியிருக்கிற நீலம் கரைஞ்சு ஏன் சோதனை.... :lol: :lol:

பட்டம் தந்தாச்சு அப்ப நாங்க இனி நன்றிவணக்கம் சொல்லுவம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கையை வழமைபோலப் படிக்கவேண்டாம். <_<

காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ் – இன்று (26.06.11) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில்… : புதிய திசைகள்

சாட்சியின்றிச் சிதைக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் விளை பலன்களாக வன்முறைக் கலாச்சாரமும், மனோ வக்கிரமும் மட்டுமன்றி, பிழைப்பு வாதிகளும், அரசியல் வியாபாரிகளும் கூடத்தான் மனிதத்தை மிரட்டுகின்றனர். அறுபது நீண்ட வருடங்களின் ஒடுக்கு முறையும் முப்பது வருடம் தவறான வழிகளூடாக முடிவுற்ற போராட்டமும் சமூகத்தின் ஒரு பெரும் பகுதியை வக்கிரத்தனமான அறிவுசார் சிந்தனையற்றதாக மாற்றியிருக்கின்றது.

வெறும் உணர்ச்சி அரசியல் ஒரு புறத்திலும், அதனை மூலதனமாக்கும் தேசிய வியாபாரிகள் மறுபுறத்திலும் இவற்றையெல்லாம் தனது ஒடுக்குமுறைக்குச் சார்பாக மாற்றியமைக்கும் இலங்கை அரச பாசிசமும் ஒன்றை மற்றொன்று வளர்த்துக்கொண்டிருக்கின்றன.

இது வரைக்கும் புலிகள் முன்வைத்த அரசியல், விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதமானது என்ற சிந்தனை நச்சு வேராகப் படர்ந்து சமூகத்தின் ஒரு பகுதியை இருளுக்குள் புதைத்து வைத்திருக்கிறது.

ஆணவத்தோடு நடத்தப்பட்ட போராட்டம் மனித அவலமாக முள்ளிவாய்க்கால் மூலையில் முடிவடைந்த பின்பும் கூட தவறுகளுக்கான காரணத்தைத் தேட வேண்டாம் என்று வன்முறைக் கலாச்சாரத்தின் அழிவு சக்திகள் தெரு முனையில் வைத்து ஒரு தேசியவாதியைத் தாக்கியிருக்கிறார்கள். புலிக் கொடி குறித்த விவாதம் ஒன்றி தீபம் தொலைக் காட்சியில் கருத்துக் கூறியதற்காக சஞ்சீவராஜ் என்ற தேசிய வாதி தாக்கப்பட்டதன் பின்னர் அதனை நடத்தியவர்கள் வெற்றி பெற்றதாகப் பெருமிதம் அடைந்தார்களோ இல்லையோ இலங்கை அரச பாசிசமும் அதன் கூறுகளும் உற்சாகமடைந்துவிட்டன.

இலங்கை அரசோடு அதாவது அப்பவி மக்களின் பிணங்களின் மேல் தனது அதிகாரத்தை நிறுவிக்கொண்ட கொலைகாரர்களோடு, மக்களின் அழுகுரல்களை அரசியலாக்கிக் கொள்ளும் சமூக விரோதிகளோடு இணைந்து கொள்ள வேண்டும் என்று குறைந்தபட்சக் குற்ற உணர்வுமின்றித் தம்மை இனம்காட்டிக்கொள்ளும் பலர் சஞ்சீவராஜின் மீதான இத் தாக்குதலைப் பயன்படுத்தி தமது அரசியல் வியாபாரத்தை நடத்த முயல்கின்றனர்.

தேசம் நெட் என்ற இணைய வலைத் தளத்தில் கொன்ஸ்டன்டைன் என்ற இலங்கை அரச ஆதரவாளர் இப்படி எழுதுகிறார்: “விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்து சிறீலங்கா அரசுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைகளுக்குப் பரிகாரம் தேட வேண்டும் என்ற கருத்துப்பட ரி கொன்ஸ்ரன்ரைன், எஸ் வாசுதேவன், வி சிவலிங்கம், என் கங்காதரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சஞ்சீவ்ராஜ் (குட்டி) ஆகியோர்…”

இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் பாதிப்பிற்கு உள்ளான சஞ்ஜீவராஜ் தனக்கு இந்தக் கருத்தோடு கிஞ்சித்தும் உடன்பாடு கிடையாது என்றும், இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுவது எமது விடுதலைக்கான முன்நிபனதனை என்றும். இலங்கை அரசாங்கத்தோடு இணக்கப்பாட்டிற்குச் செல்வது என்பது மக்கள் விரோத அரசியல் என்றும் எமக்குத் தெரிவித்தார்.

இங்கே சஞ்சீவ்ராஜின் மீது தாக்குதல் நடத்திய புலி அமைப்புக்களில் செயற்படும், அவற்றின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட ராம் சஞ்சீவராஜ் என்பவரை தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து பிளவுபடுத்த அந்தப் பிரிவினையை இலங்கை அரச ஆதரவாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆக, இரு பகுதியினரும் தேசிய விடுதலைக்கு எதிராகவும் மகிந்த ராஜபச்க அரசிற்கு ஆதரவாகவும் செயற்படுகின்றனர்.

இதன் உச்சபட்ச நிலையாக இன்று 26.06.2011 அன்று இலங்கை அரச ஆதரவுப் போக்குடையோர் சஞ்சீவராஜை ஆதரித்து வன்னியன் பூட் என்ற பலசரக்குக் கடையின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதாகவும் தீர்மானித்துள்ளனர்.

இது குறித்துப் சஞ்சீவராஜிடம் கேட்ட போது, அந்தப் போராட்டத்தில் தனக்கு எந்தக் குறைந்தபட்ச உடன்பாடும் இல்லையெனவும் இலங்கை அரசிற்கு ஆதரவு நிலை என்பது தனது அடிப்படை அரசியல் கருத்துக்களுக்கு முரணானது எனவும் தெரிவிக்கின்றார். ஆக, நாளைய போராட்டத்தின் உள்நோக்கு சஞ்சீவராஜிற்கு நீதி கிடைப்பதோ அன்றி வன்முறைக் கலாச்சாரத்தை எதிர்பதோ என்பதற்கு அப்பால் இலங்கை அரசின் புலம் பெயர் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே கருதமுடியும்.

புலிகள் இதுவரை முன்வைத்த ஜனநாயக மறுப்புச் சிந்தனை முறைமையும் அரச பாசிசமும் மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கவும், ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் பயன்படுத்தப் படுகின்றன என்பது மட்டுமன்றி, அவை சமூகத்தின் முன்னோக்கிய நகர்வை தடை செய்கின்றன. இவை குறித்து தேசிய இன ஒடுக்குமுறையால் தொலைந்து போய் உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழ நிர்பந்திக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களும் ஈழத்தின் பேரின வாத அவலங்கள் மத்தியில் வாழ்வோரும் விழிப்பாயிருக்க வேண்டுகிறோம்.

புலிகள் முன்வைத்த இன வாதமும், இலங்கை அரசின் பேரினவாதமும் ஒன்றை ஒன்று ஊக்கப்படுத்தி வளர்த்தெடுத்து அழிவுகளை அறுவடை செய்து கொள்கின்றன என்ற இலகுவான உண்மையை புலம்பெயர் அமைப்புக்கள் புரிந்துகொள்வதும், வன்முறைக் கலாச்சரத்தை நிறுத்தும் அனைத்து நடவடிக்கைகளில் ஆரம்பித்து புதிய அரசியல் வழிமுறைகள் குறித்து ஆராய்வதும் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியிலுள்ள உடனடிக் கடமையாகும்.

ஊடகங்களுக்கான அறிக்கை – புதிய திசைகள் – 26.06.11

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமிப காலங்களில் தீபம் தொலைக்காட்சிகளில் தோன்றி மறையும் நாவலன் தலைமை தாங்கும் புதிய திசைகள் மே

முன்பு என்ன செய்தார்கள் இப்போது எங்கிருந்து வந்தார் இவரின் திட்டம்தான் என்ன இவர்களால் இன்று காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ் – இன்று (26.06.11) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில்… : புதிய திசைகள்

இதில் இருந்து உங்களுக்கு புரியும் இவர்கள் யாருக்காக வேலை செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து உங்களுக்கு புரியும் இவர்கள் யாருக்காக வேலை செய்கின்றார்கள்.

இனியொரு, புதிய திசைகள் அமைப்பு தேசிய விடுதலைக்காக வேலை செய்வதாகச் சொல்லுகின்றார்கள்.

தாக்குதல் நடாத்தியவர் யாருக்காக வேலை செய்கின்றார் என்று தெரிந்ததுதானே.

தாக்குதலுக்கு எதிராக ஊர்வலம் போவோர் (போனோர்) இலங்கையரசுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனியொரு, புதிய திசைகள் அமைப்பு தேசிய விடுதலைக்காக வேலை

செய்வதாகச் சொல்லுகின்றார்கள்.

தாக்குதல் நடாத்தியவர் யாருக்காக வேலை செய்கின்றார் என்று தெரிந்ததுதானே.

தாக்குதலுக்கு எதிராக ஊர்வலம் போவோர் (போனோர்) இலங்கையரசுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்கள்.

ஒட்டு குழுக்களின் வேலை இது இல்லையே, இதில் கருத்துப் பிறள்வு ஏற்பட்டு இருக்கிறது. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்வலம் என்று தீபம் ரிவியில் வேலை செய்கின்ற மூன்று நாழு பேர் சிங்கள உளவாளி ஒரு வனின் தலைமையில் வந்து நின்றார்கள் சில நிமிடங்களில் தமிழ் இளைஞர்கள் தேசியக்கொடியுடன் வர இவர்கழை கானவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தத் தாக்குதல் பற்றி பலரிடம் விசாரித்துப் பார்த்தேன் ஒருத்தருமே தாங்கள் கேள்விப் பட வில்லை என்றார்கள்.மக்கள் அக்கறை காட்டாத ஒரு விடயத்திற்கு இவ்வளவு நீளமான திரியா? ஊர்வலம் எண்டுறீங்க கலைஞரின் உண்ணாவிரதம் போல இருக்கப் போகுது.ஆமா ஊர்வலம் எங்க நடந்தது.கொழும்பிலயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தத் தாக்குதல் பற்றி பலரிடம் விசாரித்துப் பார்த்தேன் ஒருத்தருமே தாங்கள் கேள்விப் பட வில்லை என்றார்கள்.மக்கள் அக்கறை காட்டாத ஒரு விடயத்திற்கு இவ்வளவு நீளமான திரியா? ஊர்வலம் எண்டுறீங்க கலைஞரின் உண்ணாவிரதம் போல இருக்கப் போகுது.ஆமா ஊர்வலம் எங்க நடந்தது.கொழும்பிலயா?

புலவர் உங்களுக்கு ஒரு பச்சை .

Link to comment
Share on other sites

உறவுகளே இக் கருத்துகளத்தின் திரியை வாசித்து ஏலாத ஒரு நிலையில் எழுதுகின்றேன்........தங்களின் வார்த்தை பிரயோகங்களை கருத்துகளத்தில் பதியும்போது கவனத்தில் எடுங்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளின் குரோதங்களை இங்கே கொட்டாதீர்கள் இது கழிவறையல்ல!!! இது தேசியம்சார்ந்ததளம் தேசியம் சார்ந்ததளத்தினையோ அல்லது அது சார்ந்த நடவடிக்கைகளை யாரும் கொச்சைப்படுத்த முடியாது.. அதனை அனுமதிக்கவும் முடியாது நீங்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தேசியத்திற்க்கு அர்பணிப்புடன் ஈடுபட்டவர்களே இதனை யாருமே மறுதலிக்க முடியாது!!! ஆகவே ஆரோக்கியமான கருத்தாடலில் மட்டும் ஈடுபடுங்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே இக் கருத்துகளத்தின் திரியை வாசித்து ஏலாத ஒரு நிலையில் எழுதுகின்றேன்........தங்களின் வார்த்தை பிரயோகங்களை கருத்துகளத்தில் பதியும்போது கவனத்தில் எடுங்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளின் குரோதங்களை இங்கே கொட்டாதீர்கள் இது கழிவறையல்ல!!! இது தேசியம்சார்ந்ததளம் தேசியம் சார்ந்ததளத்தினையோ அல்லது அது சார்ந்த நடவடிக்கைகளை யாரும் கொச்சைப்படுத்த முடியாது.. அதனை அனுமதிக்கவும் முடியாது நீங்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தேசியத்திற்க்கு அர்பணிப்புடன் ஈடுபட்டவர்களே இதனை யாருமே மறுதலிக்க முடியாது!!! ஆகவே ஆரோக்கியமான கருத்தாடலில் மட்டும் ஈடுபடுங்கள்!!!

எங்களுக்கு எழுதின புத்திமதிகள் என்றால் எண்ணில் அடங்கா..........................

இப்போ தமக்கு தாமே சேறடிக்கினம்.

அந்த பட்டம் தாறியா? இந்த பட்டம் தாறியா? என்றுதான் எங்களை ஒரு தூசாக தூக்கிவிட்டு தேசியத்தை குத்தகை எடுததனீங்களோ என்ற கேள்வியையும் எம்மைதான் கேட்டார்கள். யார் யார் வாடகைக்கு எடுக்க முயற்சித்தார்கள் என்பது இப்பதானே தெரியுது.

Link to comment
Share on other sites

கொடிகாத்த குமரன் போல் கொடிக்காக அடிபோட்ட ராம் தேசியக் காவலனாக எம்மினத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றார். தேசியவாதத்தை கட்டியெழுப்புவது என்பது சாதராண விடயமில்லை இவ்வாறுதான் அது ஆரம்பிக்கும். பச்சை மட்டை அடிமுதல் கரண்டுக் கம்பத்தில் கட்டி மண்டையில் போடுதல் பங்கருக்குள் அடைத்தல் என்று பல்வேறு விதமான வெருட்டலுடன் தான் தேசியவாதத்தை பிரகடனப்படுத்த முடியும். ஒப்பீட்டளவில் தமிழர்கள் சிங்களவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை விட தமிழர்கள் தமக்குள் பல்வேறு தரப்பாக இயக்கங்களாக குழக்களாக எடுத்த நடவடிக்கையே அதிகம். தேசீயவாதியானவன் எப்போதும் சிங்களவன் தமிழன் இரண்டுபேருக்கும் அடிபோடத்தெரிந்தவனாக இருக்கவேண்டிய அவசியம் தொன்றுதொட்டு இருந்துவருகி்ன்றது. மக்கள் தேசீயவாதிகளிடம் இருந்தும் சிங்களபேரினவாதிகளிடம் இருந்தும் தந்திரமாக தப்பித்து வாழுதலிலேயே இனத்தின் இருப்பு தொடரமுடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.