Jump to content

இங்கே நிம்மதி!


Recommended Posts

இங்கே நிம்மதி!

p35.jpg

- மாதா அமிர்தானந்தமயிதேவி

அடர்ந்த காட்டுக்குள் ஒரு மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார் அந்தத் துறவி. மாலை நேரம். அடிவானத்தில் சூரியன் மறையப் போவதால், இருட்ட ஆரம்பித்திருந்தது. அப்போது கிராமத்து ஆசாமி ஒருவர் பரபரப்பாக, காட்டுக்குள் அந்த மரத்தை ஒட்டிய பாதையில், "மகனே... செல்வமே... எங்கேடா இருக்கே?" என்று உரக்கக் குரல் எழுப்பியபடி ஓடி வந்தார்.

காய்ந்த சருகுகள் மீது அவர் வேகமாக ஓடியதால் எழுந்த சத்தமும், அவரது கர்ணகடூரமான குரலும் துறவியின் தியானத்தைக் கலைத்தது. கோபத்துடன் எழுந்தார். அந்த ஆசாமி அதைக் கவனிக்கவில்லை. காட்டின் உள் பக்கமாகப் பார்வையை வீசியபடி துறவியைத் தாண்டிப் போய்விட்டார். துறவியின் கோபம் எரிமலை மாதிரி பொங்கி வழிந்தது. எப்படியும் இந்த வழியாகத்தானே வந்தாக வேண்டும்... பார்த்துக் கொள்ளலாம்! எனக் காத் திருந்தார் துறவி.

சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவனைத் தன் தோளில் சுமந்தபடி அந்த ஆசாமி வந்தார். அவரை வழிமறித்த துறவி, ஆ... ஊவென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து என் தியானத்தைக் கலைத்து விட்டீர்களே! என்று கோபத்தோடு கேட்டார்.

அவர் பயந்து நடுங்கி விட்டார். பணிவுடன் துறவியைக் கும்பிட்டு, மன்னியுங்கள் சுவாமி! தாங்கள் அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை என்றார்.

ஆனாலும், துறவி சமாதானமாகவில்லை. என்ன? உனக்குக் கண் தெரியாதா? என்று மீண் டும் கோபத்தில் பொங்கியபடி கேட்டார்.

அந்த மனிதர் நிதானமாக, இல்லை சுவாமி! என் மகன் மாலையில் தன் நண்பர்களோடு விளையாட காட்டுப் பக்கம் வந்தான். அவனுடன் வந்த எல்லோரும் திரும்பி விட்டார்கள். அவன் மட்டும் வரவில்லை. ஏதாவது குளத்தில் விழுந்திருப்பானோ... கொடிய விலங்குகளிடம் மாட் டிக் கொண்டிருப்பானோ என்ற பயத்தில் அவனைத் தேடி ஓடினேன். என் நினைப்பெல்லாம் அவன் மீதே இருந்ததால், நான் உங்களைக் கவனிக்கவில்லை! என்று சொல்லி மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டார்.

ஆனாலும் துறவி விடுவதாக இல்லை. என்ன காரணமாக இருந்தாலும் சரி... இறைவனை நினைத்து மனமுருக தியானத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு நீங்கள் தொல்லை கொடுத்தது தவறு! என்றார்.

அந்த கிராமத்து ஆசாமி இப்போது துறவியைப் பார்த்தார். பின், ஆரம்பித்தார்: தியானத்தில் மூழ்கியிருந்த உங்களுக்கு நான் ஓடியது, கத்தியது எல்லாமே தெரிந்தது. அதனால் உங்கள் தியானம் கலைந்தது என்கிறீர்கள். ஆனால், மகனைத் தேடி ஓடிய நான் கண்முன்னே இருந்த உங்களைக் கவனிக்கவில்லை. எனக்கு என் மகன் மீது பற்று இருந்தது. அதனால் வேறு எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை. சாதாரணச் சத்தங்களே உங்கள் மாபெரும் தியானத்தைக் கலைத்து விட்டது என்றால், என் குழந்தையிடம் எனக்குள்ள பற்றுகூட உங்களுக்கு இறைவன் மீது இல்லையே... இது என்ன தியானம்! பொறுமையும் ஈடுபாடும் இல்லாத இந்த தியானத்தால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? _ அப்பாவியான அந்தக் கிராமத்து ஆசாமி கேட்ட விதம் துறவியை அசைத்துப் பார்த்தது.

துறவிக்குத் தனது தவறு உறைத்தது. தனக்கு ஞானத்தை அளித்த அந்தக் கிராமத்து ஆசாமியை வணங்கி அங்கிருந்து கிளம்பினார்.

எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழுமை யான ஈடுபாடு காட்ட வேண்டும். அப்படி மூழ்கு பவர்கள்தான் ஜெயிக்கிறார்கள். இறை பக்தியிலும் அப்படித்தான்! மனதை ஒருமுகப்படுத்தி பக்தியில் மூழ்க வேண்டும்.

சிலர் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ் வொரு தெய்வத்தைத் தேடி ஓடுகிறார்கள். அவர்களுக்குப் புரியவில்லை... தெய்வம் எதுவாக இருப்பினும் தெய்விக சக்தி ஒன்றுதான்! தேங்காய் என்பார்கள் தமிழில். கோக்கனட் என்பார்கள் ஆங்கிலத்தில். நாரியல் என்பார்கள் இந்தியில். எப்படிச் சொன்னாலும் அதன் பொருள் மாறுவ தில்லை. ஒவ்வொருவரும் அவர்களது பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, இறைவனை விதவிதமான வடி வங்களில் புரிந்து கொள்கின்றனர். பல பெயர்களைக் கொடுக்கின்றனர்.

ஆனால், எங்கும் நிறைந்த பரம்பொருள் எல்லாப் பெயர்களுக்கும் அப்பாற்பட்டவர். தன் பெயரைச் சொல்லி அழைத்தால் மட்டுமே திரும்பிப் பார்க்கும் நபரல்ல அவர்! கூப்பிட்டால் வருவதற்கு, அவர் உங்களை விட்டு வெகு தொலைவில் இல்லை. அவர் உங்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் குடியிருக் கிறார். உங்கள் இதயத்தின் மொழிகளை அவர் அறிந்திருக்கிறார். அவரது பெயர்களைச் சொல்லி அழைப்பது ஆனந்தமான அனுபவம். எந்த நாமமும் அவரது நாமமே!

கொஞ்சம் ஆழத்துக்குப் பள்ளம் தோண் டிப் பார்த்து, தண்ணீர் கிடைக்காத விரக்தியில் பல இடங்களில் மாறி மாறித் தோண்டிக் கொண்டே இருப்பவர்களுக்கு எப்போதும் அது கிடைக்காது. ஒரே இடத்தில் ஆழமாகத் தோண்டுபவர்கள் தங்கள் இலக்கில் ஜெயிக்கிறார்கள்.

தண்ணீர் ஊற்றாவிட்டால், செடிகளின் கிளைகள்தான் வாடி வதங்கும். ஆனால், அதற்காக நாம் தண்ணீரைக் கொண்டு போய் அந்த கிளைகளில் ஊற்றினால் வாட்டம் தணிந்து விடுவதில்லை. வேருக்குத் தண்ணீர் ஊற்றினால் அது எல்லா பாகங்களுக்கும் சென்று கிளைகளின் வாட்டத்தைக் குறைத்துச் செழிக்க வைக்கிறது.

இறைவன் அதையே உங்களிடமும் எதிர்பார்க்கிறார். உங்கள் உற வினர்கள், நண்பர்கள், முன்பின் அறிமுகமில்லாத அந்நியர்கள், விரோதம் பாராட்டும் எதிரிகள், பசுக்கள், நாய்கள்... என சகல ஜீவராசிகளிடமும் நீங்கள் அன்பு செலுத்துங்கள். அப்படிச் செலுத்தும் அன்பு இறைவனைச் சென்றடைகிறது. ஏனென்றால், இறைவன் உங்கள் இதயத்தில் இருப்பது போலவே, எல்லா ஜீவராசிகளின் இதயங்களிலும் வாழ்கிறார்.

இறைவன் ஏன் இப்படி இதயங்களில் வாசம் புரிய ஆரம்பித்தார் என்பதற்குச் சுவாரஸ்யமான உவமைக் கதை ஒன்று உள்ளது. தான் வசிப்பதற்கான ஓர் இருப்பிடத்தை நிர்மாணிக்க இறைவன் திருவுளம் கொண்டார். அதற்காக பிரபஞ்சத்தைப் படைத்தார். மலைகள், பள்ளத்தாக்குகள், கடல்கள், நதிகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள்... இப்படி எல்லாம் நிறைந்த அழகான பூமியைப் படைத்தார். அதில் அவர் இன்பமாக வாழ்ந்தார். எல்லாம் நன்றாகத்தான் இருந் தன.

ஆனால், ஒரு நாள் இறைவன் ஒரு தவறு செய்து விட்டார். அவர் மனிதனைப் படைத்தார். அன்றிலிருந்து தொல்லை ஆரம்பமானது. எந்த நேரமும் மனிதர்கள் இறைவனிடம் ஏதாவது புகார் செய்தபடி இருந்தனர். இறைவன் உண்ணும்போதும், உறங்கும்போதும் அவரது அரண்மனைக் கதவை மனிதர்கள் தட்டியபடி இருந்தனர்.

ஓயாத புகார்களால் இறைவனின் மன நிம்மதி போய் விட்டது. ஒரு பிரச்னையைத் தீர்த்தால் அடுத்த நிமிடமே இன்னொரு பிரச்னை புதிதாக முளைத்தது. ஒரு மனிதனுக்குத் தீர்வாக அமைந்தது, மற்றொரு மனிதனுக்குப் பிரச்னையாக மாறியது. ஒரு மனிதன், தனது பயிர்கள் செழிக்க மழை வேண்டும் என்று கேட்டான். இன்னொருவன், இறைவா! என் வீடு ஒழுகுகிறது. கால்நடைகள் அவதிப்படுகின்றன. மழையை நிறுத்து! என மன்றாடினான். இறைவன் என்ன செய்தாலும் மக்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை. எல்லாமே பிரச்னைகளாக மாறின.

கடவுளால் தாங்க முடியவில்லை. தனது ஆலோ சகர்களைக் கூப்பிட்டார்: என்னால் இவர்களது தொந்தரவைத் தாங்க முடியவில்லை. மனிதர்கள் தொட முடியாத ஓர் இடத்தைச் சொல்லுங்கள். நான் போய் அங்கு ஒளிந்து கொள்கிறேன். அப்போதுதான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும்! என்றார்.

பனி மூடிய இமயமலையின் உயரமான சிகரங்களுக்குச் சென்று விடுங்கள்... என ஆலோசனை கூறினார் ஒருவர்.

என்றாவது ஒரு நாள் அந்த சிகரங்களின் உயரத்தை அளக்க மனிதன் அங்கு வருவான்! என்று அதை நிராகரித்தார் இறைவன்.

கடலின் அடி ஆழத்தில் சென்று தங்கி விடுங்கள்! என்றார் இன்னொருவர்.

அதையும் இறைவன் மறுத்தார். மனிதர்கள் வருங் காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டு பிடிப்பார்கள். அதன் உதவி யோடு அவர்கள் அங்கும் வந்து விடுவார்கள்! என்றார் இறைவன்.

அப்படியானால் நிலாவுக்குச் சென்று விடுங்கள். அது பூமியில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அங்கு மனிதர்கள் தேடிப் பிடித்து வந்து தொல்லை கொடுக்க வாய்ப்பே இல்லை! என்று வேறொருவர் யோசனை சொன்னார்.

அதையும் நிராகரித்து விட்டார் இறைவன். நண்பர்களே! உங்களால் வருங்காலத்தைப் பார்க்க முடியாது. என்னால் முடியும். எனக்குத் தெரியும். வருங்கால மனிதர்கள் அறிவியல் அறிவில் மேம்பட்டு இருப்பார்கள். அவர்கள் ராக்கெட் என்ற ஒரு பொருளைக் கண்டுபிடிப்பார்கள். அதன் பிறகு நிலவுக்கும் எளிதாக வந்து விடுவார்கள்! என்றார் இறைவன்.

இதைக் கேட்டு எல்லோரும் மௌனமாக, மூத்த ஆலோசகர் எழுந்தார். இறைவா! தனக்கு வெளியே இருக்கும் எல்லாவற்றையும் ஆராயும் குணமுள்ள மனிதன், தனக்குள் எதையும் தேட மாட்டான். அவன் இதயத்துக்குள் சென்று ஒளிந்து கொள்ளுங்கள். மனிதன் தன் இதயத்துக்குள் இறைவன் குடியிருப்பதை உணர மாட்டான். எனவே, உங்களுக்குத் தொந்தரவு இருக்காது! என்றார்.

அதை இறைவன் முகம் மலர ஏற்றார்.

உங்கள் ஒவ்வொருவரின் இதயத்தின் அடி ஆழத்திலும் இறைவன் குடியிருக்கும் கோயில் இருக்கிறது. தூய்மையான பேரன்பு, கருணை, கள்ளங்கபடமற்ற குணம் ஆகிய வடிவங் களில் அவர் இருக்கிறார்.

ஆனால், அந்தக் கோயிலை தற்பெருமை, சுயநலம், அகங்கார எண்ணம் போன்ற பல பூட்டுகள் மூடி வைத்திருக்கின்றன. மனதுக் குள் இருந்து கொண்டு என்ன யோசித்தாலும் வராத ஏதோ ஒரு பழைய நினைவு போல பலர் இறைவனையும் பூட்டி வைத்திருக்கிறார்கள். அந்தப் பூட்டுகளை அகற்றுங்கள். இறை வனின் பல வடிவங்களை உங்கள் குணங்களில் காட்டுங்கள்.

-விகடன்

படங்கள்: சு.குமரேசன்

Link to comment
Share on other sites

இதைக் கேட்டு எல்லோரும் மௌனமாகஇ மூத்த ஆலோசகர் எழுந்தார். இறைவா! தனக்கு வெளியே இருக்கும் எல்லாவற்றையும் ஆராயும் குணமுள்ள மனிதன்இ தனக்குள் எதையும் தேட மாட்டான். அவன் இதயத்துக்குள் சென்று ஒளிந்து கொள்ளுங்கள். மனிதன் தன் இதயத்துக்குள் இறைவன் குடியிருப்பதை உணர மாட்டான். எனவேஇ உங்களுக்குத் தொந்தரவு இருக்காது! என்றார்.

மிக்க உண்மை ... அருமையான கட்டுரையை இனைத்தமைக்கு நன்றி

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.