Jump to content

அனாதையாய் போன ஆதிரையும் ஆதவனும்


Recommended Posts

அனாதையாய் போன ஆதிரையும் ஆதவனும்

காணாமல் போனார்கள் என எண்ணிய பலர் உயிருடன் உள்ளது போல அவர்களும் இருப்பார்கள் என்றே நம்பினேன். மீண்டும் காணவிரும்புகிறவர்களுள் அவளும் ஒருத்தி. பெண்களின் வெளியீடுகளில் அவளது எழுத்துக்கள் மிகுந்த ஆழுமை செலுத்தியிருக்கின்றன. அவளது சமூகம் சார்ந்த எழுத்துக்களும் கருத்துக்களும் ஊர்பார்க்கப்போன புலம்பெயர்ந்தோர் பலருக்கு அறிமுகமானவை. இலக்கியப்பரப்பில் உச்சரிக்கப்பட்ட சிறந்த பெயர்களுள் அவளது பெயரும் ஒன்று.

தடுப்பிலிருந்து வெளியில் வருகின்ற தெரிந்த யாவரிடமும் அவளைப்பற்றிய எனது விசாரணை தொடர்ந்து கொண்டுதானிருந்தது.

அண்மையில் ஒருதோழியின் தொடர்பு கிடைத்த நேரம் அவளிடம் விசாரித்தேன். நான் தேடியவள் சரணடைய வந்தவழியில் இறந்துவிட்டாதாகச் சொன்னாள். அவளது 2குழந்தைகளும் அம்மாவை இழந்து விட்டதாகச் சொல்லித் துயருற்றாள். மிஞ்சிய அவளது குழந்தைகளை உறவுக்காரப் பெண்ணொருத்தி பராமரிப்பதாகத் தகவல் சொன்ன தோழியிடமிருந்து அவர்களுடைய தொலைபேசியிலக்கத்தைப் பெற்றுக் கொண்டேன்.

அனாதையாக்கப்பட்ட அவளது குழந்தைகளைப் பராமரிக்கும் உறவைத் தொடர்பு கொண்டேன். நான் தேடிய தோழியின் கடைசிக் கணங்களை அவள் கண்ணீரோடு சொல்லத் தொடங்கினாள்……

அக்காவும் நாங்களும் ஒண்டாத்தான் வந்தனாங்கள்….வெளிக்கிடேக்க செல்பட்டு காயத்தோடைதான் அண்ணை கூட்டிக்கொண்டு வந்தவர்…..நெரிசல் நிறைந்த சனக்கூட்டம் காயங்களும் அழுகைகளும் மயானத்தின் உறைவிடமாகிய அந்த நிலம் குருதியால் தோய்ந்து கொண்டிருந்தது.

குருதிப்போக்கு அதிகமாகி காப்பாற்றப்படாத உயிர்கள் தங்கள் கடைசிக்கணங்களை உறவுகளின் கைகளிலும் யாருமற்றுத் தனித்தும் முடித்துக் கொண்டு நிரந்தரமாய் கண்களை மூடிக்கொண்டிருந்தனர். இறப்பின் கொடுமை எத்தகைய வலிமிகுந்தது என்பதனை ஒவ்வொரு உயிரும் அனுபவித்துக் கொண்டிருந்த கொடிய நிமிடங்கள் அவை.

அவள் தனது கணவனின் கைகளில் உயிர்போகும் கடைசிக் கணங்களுக்காகப் போராடிக் கொண்டிருந்தாள். அவளது மூத்தவன் 8வயதுப்பிள்ளை ஆதவன். அம்மாவின் கடைசிக் கணங்களைப் பார்த்துக் கதறிக் கொண்டிருந்தான்….

அவளது இரண்டாவது பெண் குழந்தை 3வயது ஆதிரை…..அம்மாவின் பிரிவு அவளது வேதனை எதனையும் புரிந்து கொள்ள முடியாது விழித்துக் கொண்டிருந்தது. வலியால் துடித்தக் கொண்டிருந்தவள் தனது குழந்தைகள் இரண்டின் முன்னாலேயே இறந்து போனாள்…..

அதுவரை அவனுக்கான எல்லாமுமாய் இருந்தவள் அவனது கையிலேயே கண்களை மூடிவிட்டாள். அப்போதைக்கு இருந்த ஒரே வழி அவளது மரணித்த உடலை அனாதையாய் உருக்குலைய விடாமல் எங்காவது புதைக்க வேண்டுமென்பது தான்.

பிள்ளையளை நீங்க கொண்டு போங்கோ…..நான் இவளை எங்கினையும் புதைச்சிட்டு வாறன்…..

அப்பாவை விட்டு அகலமாட்டேனென்ற ஆதவனை…..அப்பா பின்னாலை வருவன் குஞ்சு நீங்க அன்ரியாக்களோடை போங்கோ…சமாதானப்படுத்தி ஆதவனையும் ஆதிரையையும் அவர்களோடு அனுப்பினான்.

அவள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் அவளது மரணநிகழ்வு ஊர் சூழ நிகழாமல் எங்காவது புதைத்தால் போதுமென்ற ஆதரவற்ற பிணமாய் அவளைப் புதைக்க வேண்டிய துயரத்தைச் சொல்லியழுது அவளைப் புதைக்க இடம் தேடினான்…..

நிலமை அவசரகட்டத்தை அடைந்ததை உணர்ந்தவன் தனது மனைவியைப் புதைக்கிறேன் என ஒதுங்க…. ஆதவன் , ஆதிரையைத் தனது இரு குழந்தைகளோடும் கூட்டிக்கொண்டு போனாள் அந்த உறவுக்காரப் பெண். புதுமாத்தளனின் அவளது கணவனும் பிணமாகிவிட்டான். அவளுக்காக ஆறுதல் கொடுத்துத் துணையாய் வந்தவளும் இறந்து போய்விட்டாள். எல்லாம் கனவுபோல நடந்து கொண்டிருந்தது.

000 000 000

முகாம் வாழ்க்கை முடியும் வரையும் ஆதவன் ஆதிரையைத் தேடி அவர்களது அப்பா வரவில்லை. மனைவியின் உடலைப் புதைத்துவிட்ட வருவதாகப் போனவனும் உயிரை விட்டானா…? அல்லது…..????

மீள்குடியேற்றத்தில் ஊருக்கு வந்து உறவுகளிடம் விசாரித்துப் பார்த்தும் எதுவித முடிவும் இல்லை. தனது குழந்தைகளோடு ஆதவனும் ஆதிரையும் வளர்ந்து்விட்டுப் போகட்டுமெனத் தனது குழந்தைகளோடு அவர்களை வளர்க்கிறாள் அந்த உறவு.

ஆதவனுக்கு இப்போது 10வயது. ஆதிரைக்கு இப்போது 5வயது. அம்மாவை அப்பாவைத் தேடுகிறார்கள். ஆதவன் தாயின் மரணத்தை நேரில் பார்த்தவன். அந்தவடு அவனது மனசுக்குள்ளிருந்து வெளிவருகிற நேரங்களில் இப்போதைய அம்மாவைக் கட்டி அழுவான்…..ஆனால் அப்பா எங்கோ தடுப்பில் இருப்பதாக நம்புகிறான்….ஆதிரைக்கு அம்மாவும் அப்பாவும் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லி வைத்துள்ளார்கள்.

அவள் சொன்ன துயரத்தைக் கேட்டு அழுவதா இல்லை மிஞ்சிய குழந்தைகளுக்காக அழுவதா….? தினமும் கேட்கும் துயரங்களோடு இதுவும் ஒன்றெனத் துயரங்களால் சோர்ந்து போவதா…?

ஆதவன் இங்கை வாங்கோ….அன்ரி கதைக்கிறா….அந்த உறவு எனது அனுமதியின்றி ஆதவனிடம் தொலைபேசியைக் கொடுத்தாள்.

அன்ரீ…..சுகமாயிருக்கிறியளோ…..? அன்ரீ சாப்பிட்டீங்களோ….? நூறு அன்ரி போட்டு ஆதவன் கதைகேட்டான்…ஓம் செல்லம்…..என்ற வார்த்தைகளை அவனது ஒவ்வொரு அன்ரிக்கும் சொல்லிக் கொண்டேன். அன்ரி நெடுகலும் என்னோடை கதைப்பீங்களா…..? நீங்கள் அம்மான்ரை Friendஆ…..?அப்ப என்னை நீங்கள் பாத்தனீங்களா…..? அவன் இடைவெளியின்றிக் கதைத்துக் கொண்டே போனான்.

ஆதவனை 2003இல் சிறு குழந்தையாய் பார்த்த ஞாபகம். தாயின் மடிக்குள்ளிருந்து சிரித்துக் கொண்டிருந்த குழந்தை. இன்று 10வயதுப் பிள்ளையாகிவிட்டான். குழந்தையாய் பார்த்த முகமே இப்போது மறந்து போய்விட்டது….ஆனால் அவன் நிறையவே என்னுடன் கதைத்தான்.

அன்ரீ தங்கைச்சியோடை கதைக்கிறீங்களா…? தங்கைச்சியிடம் தொலைபேசி கைமாறியது. தங்கச்சி அன்ரி கதைக்கிறா….ஆதிரை தொலைபேசியில் வந்தாள்.

அம்மா…..! அம்மா….! சுகமாயிருக்கிறீங்களே…? நான் ஆதிரை…. அது அம்மா இல்லை அன்ரி…..என ஆதவன் பின்னால் சொல்வது கேட்டது. ஆனால் அவள் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளது செல்லக்குரலால் அடிக்கொரு முறை அம்மா அம்மாவெனச் சொல்லிக் கொண்டிருந்தாள்……தனக்கான தேவைகள் என சட்டை , புத்தகம் , கொப்பி , பென்சில் , சப்பாத்து என ஒரு நீளமான பட்டிலயைச் சொன்னாள்.

பிள்ளைக்கு எல்லாம் வாங்கியனுப்பிறன் என்னம்மாச்சி…..ஓ…..

அம்மா சாப்பிட்டீங்களா….?

ஆதிரை ஓயாமல் கதைத்துக் கொண்டிருந்தாள். சரி ஆதிரை அம்மாக்கு காசு கனக்கப்போகும் திரும்பியும் அம்மா கதைப்பா தாங்கோ என தொலைபேசியை அந்த உறவுக்காரப்பெண் வாங்கினாள்.

அக்கா உங்களுக்கும் காசு போகும் கனநேரம் கதைச்சிட்டியள்…..ஏதாவது இந்தப்பிள்ளையளுக்குச் செய்யேலுமெண்டாச் செய்யுங்கோக்கா….இப்பத்தைய சாப்பாடு செலவுகளை ஓரளவுக்க என்னாலை குடுக்கேலும்….என்ரை இவர் முந்தி வேலை செய்தவர் அதிலையிருந்து எனக்கு மாதம் 10ஆயிரம் வருது….அது காணாதுதான் ஆனால் சமாளிக்கிறேன் நானும் ஏதும் நடந்த இல்லாமப் போயிட்டா இதுகள் தனிச்சிடுங்கள்…..இவை ரெண்டுபேரின்ரை எதிர்காலத்துக்கும் ஏதாவதொரு சேமிப்புக்கான வழி செய்து தந்தீங்களெண்டா பிற்காலம் பிள்ளையள் படிக்க உதவும்……இப்ப என்ரை பிள்ளையளுக்குக் குடுக்கிறதில இவைக்கும் குடுக்கிறன்….இவைக்கு கல்வியைக் குடுக்கிறதுக்கான உதவியொண்டு செய்தீங்களெண்டா காணும்…..அவள் அதிகம் எதிர்பார்புகள் இல்லாமல் அந்தக் குழந்தைகளுக்கான உதவியைத் தான் வேண்டிக் கொண்டாள்.

000 000 000

ஆதிரையுடன் பேசியதன் பின்னிருந்து இந்த வினாடி வரை அவளது ஞாபகமாகவே இருக்கிறது. அம்மா வெளிநாட்டில் வாழ்வதாக நம்பும் ஆதிரையின் நம்பிக்கையை உண்மையாக்க அவளது அம்மாவை எங்கிருந்து சிருஸ்டிக்க முடியும்….?

16.06.2011

Link to comment
Share on other sites

இந்தக் குழந்தைகளுக்கு உதவுமாறு கருணையுள்ளம் கொண்டவர்களிடம் வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

இந்த குழந்தைகளுக்கு உதவ யாரை தொடர்பு கொள்ள வேண்டும் விபரம் தாருங்கள்

Link to comment
Share on other sites

இந்த குழந்தைகளுக்கு உதவ யாரை தொடர்பு கொள்ள வேண்டும் விபரம் தாருங்கள்

ஆதிபன் உங்கள் மின்னஞ்சலை தனிடமடலில் போடுங்கோ விபரங்கள் தருகிறேன்.

Link to comment
Share on other sites

இந்த குழந்தைகளுக்கு உதவ யாரை தொடர்பு கொள்ள வேண்டும் விபரம் தாருங்கள்

ஆதிபன்,

உங்கள் மின்னஞ்சல் கிடைப்பதற்கு 3மணித்தியாலங்கள் முன்னராக கட்டார் நாட்டிலிருந்து ஒரு உறவு மேற்படி பிள்ளைகளுக்கும் அந்தப்பிள்ளைகளைப் பராமரிக்கிற உறவின் பிள்ளைகளுக்கும் 1லட்சரூபா வைப்பிலிட முன்வந்து அதற்கான உதவியையும் அனுப்பியுள்ளார். மற்றும் ஒருவர் இருபிள்ளைகளுக்கும் 200€ அனுப்பியிருக்கிறார்.

இப்பிள்ளைகள் போன்ற நிலமையில் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். அப்படியான வேறு குழந்தைகளுக்கு உதவவீர்களாயின் விபரம் தருகிறேன். உங்கள் பதிலை தனிமடலிடுங்கள்.

Link to comment
Share on other sites

உங்கள் எழுத்து மூலம் அவர்களுக்கு உதவி கிடைத்தது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

ஒரு காலத்தில்  போராளிகள் ஒருகாலத்தின் மாவீரர்கள் அவர்களது குழந்தைகள் இன்று தாயகத்தில் ஏதோவொரு திக்கில் வறுமையோடும் வாழ வசதிகளற்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அத்தகையதொரு நிலமையில் இந்தக் கதையில் வரும் குழந்தைகளையும் தேடிக்கண்டுபிடித்தேன். கடந்த வருட இறுதியில் இப்பிள்ளைகளை தன் குழந்தைகளாக பராமரிக்கும் தாய் தொடர்பு கொண்டு பிள்ளைகளுக்கான புதுவருடத் தொடக்கத்துக்கான பாடசாலை உபகரணங்கள் வாங்க உதவி கேட்டிருந்தா. கேட்ட தொகையை அனுப்பி பிள்ளைகளும் பாடசாலைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.

பொங்கள் வருடம் தீபாவழி நாட்களில் மறக்காமல் அவர்களது குழந்தையெழுத்துக்களால் வாழ்த்து அட்டை வரும்.
 இன்று தபாலில் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்தோடு காலாண்டு பரீட்சை பெறுபேறுகளையும் அனுப்பியிருந்தார்கள். எல்லாப்பாடங்களிலும் 90,94 புள்ளிகள் எடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து படிப்போம் என்றும் எழுதியிருக்கிறார்கள். அம்மாவாக இந்தக் குழந்தைகளின் மகிழ்வை இங்கே பகிர்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

ஒரு காலத்தில்  போராளிகள் ஒருகாலத்தின் மாவீரர்கள் அவர்களது குழந்தைகள் இன்று தாயகத்தில் ஏதோவொரு திக்கில் வறுமையோடும் வாழ வசதிகளற்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அத்தகையதொரு நிலமையில் இந்தக் கதையில் வரும் குழந்தைகளையும் தேடிக்கண்டுபிடித்தேன். கடந்த வருட இறுதியில் இப்பிள்ளைகளை தன் குழந்தைகளாக பராமரிக்கும் தாய் தொடர்பு கொண்டு பிள்ளைகளுக்கான புதுவருடத் தொடக்கத்துக்கான பாடசாலை உபகரணங்கள் வாங்க உதவி கேட்டிருந்தா. கேட்ட தொகையை அனுப்பி பிள்ளைகளும் பாடசாலைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.

பொங்கள் வருடம் தீபாவழி நாட்களில் மறக்காமல் அவர்களது குழந்தையெழுத்துக்களால் வாழ்த்து அட்டை வரும்.

 இன்று தபாலில் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்தோடு காலாண்டு பரீட்சை பெறுபேறுகளையும் அனுப்பியிருந்தார்கள். எல்லாப்பாடங்களிலும் 90,94 புள்ளிகள் எடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து படிப்போம் என்றும் எழுதியிருக்கிறார்கள். அம்மாவாக இந்தக் குழந்தைகளின் மகிழ்வை இங்கே பகிர்கிறேன்.

 

மனசு நிறைகின்றது.

 

வெறுமனே காசு அனுப்புவதை விட அவர்களுக்கு தொலைபேசி, இடைக்கிடை கதைக்கும் போதும், அவர்களின் படிப்பை பற்றி விசாரிக்கும் போதும் தன்னம்பிக்கையும், அன்பும் பெருகுவதை அவதானித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

மனசு நிறைகின்றது.

 

வெறுமனே காசு அனுப்புவதை விட அவர்களுக்கு தொலைபேசி, இடைக்கிடை கதைக்கும் போதும், அவர்களின் படிப்பை பற்றி விசாரிக்கும் போதும் தன்னம்பிக்கையும், அன்பும் பெருகுவதை அவதானித்துள்ளேன்.

 

உண்மைதான் நிழலி. அவர்களுடன் பேசுவதே பெரிய ஆறுதல் பிள்ளைகளுக்கு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்த்தியான எழுத்துநடை சாந்தி. மனம் தான் கனத்துப் போகிறது. இப்படி எத்தைபேர் உள்ளனரோ???

 

Link to comment
Share on other sites

 மனம் தான் கனத்துப் போகிறது. இப்படி எத்தைபேர் உள்ளனரோ???

 

இத்தகைய நிலமையில் நூற்றுக்கணக்கில் பிள்ளைகள் இருக்கிறார்கள். 20ம் திகதியும் நிலா, அசோக் என்று 2 பிள்ளைகள் இரு பிள்ளைகளும் சகோதரிகளின் பிள்ளைகள் தாய் தந்தை மாவீரர்கள் சித்தியின் அணைப்பில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பொருளாதார ஆதாரம் எதுவுமில்லை.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.