Jump to content

சிறிலங்கா அரசுடன் தீபம் தொலைக்காட்ச்சி செய்துள்ள வியாபாரம்- தேசம் நெற் ஜெயபாலன்.


Recommended Posts

//இதே நிலையில் தான் தீபம் தொலைக்காட்சியும் இருந்தது. தீபம் தொலைக்காட்சி இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் சில பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது. இலங்கையில் தீபம் தொலைக்காட்சியை ஒளிபரப்புச் செய்ய அனுமதி வேண்டி இப்பேச்சுவார்தை நடாத்தப்பட்டது. தீபம் தொலைக்காட்சி ஒரு புலிகளின் ஊடகமாகவே செயற்படுவதால் இலங்கையில் ஒளிபரப்புச் செய்யும் அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தீபம் தொலைக்காட்சிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டு உள்ளது. தீபம் தொலைக்காட்சி புலிகளுக்கு மாற்றான கருத்துக்களையும் ஒளிபரப்புச் செய்ய ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சபா நாவலன், வி சிவலிங்கம், ரி கொன்ஸ்ரன்ரைன், எஸ் வாசுதேவன், சி ராஜேஸ்குமார், மாசில் பாலன், சஞ்ஜீவ்ராஜ், என் கெங்காதரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்ற முற்றிலும் புலிகளுடைய கருத்துடன் உடன்படாது அல்லது புலிகளுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்துடையவர்கள் கடந்த காலங்களில் இந்த வெகுஜன ஊடகத்தளத்துக்கு அழைக்கப்படுவதில்லை. ஆனால் இப்போது அழைக்கப்படுகிறார்கள். இது தீபம் தொலைக்காட்சி மாற்றுக் கருத்துக்கு மதிப்புக் கொடுப்பதாலோ அல்லது ஊடக சுதந்திரத்தை மதிப்பதாலோ அல்ல.

தீபம் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தி உள்ள புதிய தொலைபேசி விஸ் மோபைல் இலங்கையில் ஸ்ரீலங்கா ரெலிகொம் உடன் இணைந்து செயற்படுகிறது. அதற்கு இலங்கை அரசு விதித்த நிபந்தனை புலிகளுடைய கருத்துக்களை ஒளிபரப்பும் அதேசமயம் அதற்கு மாறுபட்ட கருத்துக்களுக்கும் தீபம் தொலைக்காட்சி இடமளிக்க வேண்டும் என்பது. ஆகவே சபா நாவலன் முதல் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வரை தீபம் என்ற வெகுஜனத் தொலைக்காட்சியில் தோன்றுவதற்கும் கருத்து வெளியிடுவதற்கும் கூட ஒரு விலை செலுத்தப்பட்டு உள்ளது. அதனை தீபம் தொலைக்காட்சியின் இயக்குநர் துரை பத்மநாதன் செலுத்தியுள்ளார். இது வன்னி மக்கள் செலுத்திய விலையுடன் ஒப்பிடுகையில் மிக மிகக் குறைந்தது.

//- தேசம் நெற் ஜெயபாலன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பாருங்கோ ...........

http://youtu.be/-e1nFz8fREg

http://youtu.be/yL8O1JDPWVM

http://youtu.be/sNgB0shJPxk

http://youtu.be/7Da3gdFj7Q4

Link to comment
Share on other sites

... தெரிந்த ஒருவர், தனக்கு தெரிந்த இரு உறவினர் வீட்டில் இருந்த இந்த தீபம் தொல்லைக்காட்சிக்கு முடிபு கட்டி விட்டாராம் ... இப்படி தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மூலம் இப்படியாக செய்யத்தொடங்கினால் ...

Link to comment
Share on other sites

... தெரிந்த ஒருவர், தனக்கு தெரிந்த இரு உறவினர் வீட்டில் இருந்த இந்த தீபம் தொல்லைக்காட்சிக்கு முடிபு கட்டி விட்டாராம் ... இப்படி தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மூலம் இப்படியாக செய்யத்தொடங்கினால் ...

இங்கு இரண்டு கருத்துக்களை நான் கூறுகின்றேன்.

ஒன்று: தேசம் நெற் எப்படி எல்லாம் குளப்பங்களை விளைவிக்கும் ஒரு இணையம்; அது இன்று இப்படி எழுதும் நீங்களும் அதனை இணைப்பீர்கள் நாளை தேசம் நெற் தீபத்திற்கு சாதகமாக ஒன்றை எழுதும் அதனையும் நீங்கள் இணைப்பீர்களா ? ஏனென்றால் தேசம் நெற் மற்று தீபம் தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்ன ரொம்ப நெருக்கம்.

இரண்டாவது: தீபம் தொலைக்காட்சிக்கு 22 000 வருடாந்த சந்தாதாரர் இது முள்ளிவாய்க்காலிற்கு முதல்கொண்டே இருந்து வருகின்றது. அவர்களின் சந்தா பட்டியல் என்றைக்குமே பெரும் வீழ்ச்சியடைந்ததாக இல்லை.

தவிர தீபம் தொலைக்காட்சி மிகப்பெரும் வணிக வலையமைப்பினைக்கொண்ட நிறுவனம் அவர்கள் சந்தா தாரர் இன்றியே தொலைக்காட்சியை நடத்த முடியும்.

இப்படி எதிர்ப்பிரச்சாரம் செய்யாமல் புலம்பெயர் தமிழர்கள் அடங்கிய ஒரு உயர்மட்டக்குழுவினர் தீபம் முதலாளி பத்மனாதன் அவர்களுடன் பேசுவதுதான் நல்லது.

ஏனென்றால் எம்மவர்கள் மத்தியில் இருப்பது இரண்டு தொலைக்காட்சிகள் அதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.

எடுத்ததுக்கெல்லாம் மடிச்சுக்கட்டவேண்டாம் கதையுங்கோ, கதையுங்கோ, கதையுங்கோ... இது வேறுயாரும் அல்ல அவர்தான் சொன்னது.

சிலருக்கு அவர்களின் ரேஞ்சில் இருப்பவர்களை வைத்து சொன்னால் செய்வார்கள் அல்லது தவிர்த்துக்கொள்வார்கள். அதனைத்தான் இலங்கை அரசு பெளவியமாக செய்கின்றது.

Link to comment
Share on other sites

இதை எழுதினவனே பச்சை எட்டப்பன்.

தெசம் நெற் பார்த்தவர்கள் அறிவார்கள். இவன் எப்படி சிங்களவ்னுக்கு துரோகியாய் மாறினான்?

சாதி பற்றி கட்டுரை எழுதி உங்க றோட்டுகளில் பேப்பர் வைக்கிறவர். இவருக்கு ஒரு கோயில் ஒன்று விளம்பரம் கொடுக்கும்.

தீபம் இருந்தால் என்ன அணைந்தால் என்ன?

என் வீட்டில் அனைக்க பட்டு விட்டது.

அனஸ் அடுத்த கேள்வி நேரத்தில் இலங்கை முஸ்லீம்கள் மொட்டாக்கு போடுவது சரியா? தவறா என்று புதிய கேள்வி நேரத்துடன் வருவார்.

தீபம் அணைக்காதவர்கள் எதிர் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதினவனே பச்சை எட்டப்பன்.

தெசம் நெற் பார்த்தவர்கள் அறிவார்கள். இவன் எப்படி சிங்களவ்னுக்கு துரோகியாய் மாறினான்?

சாதி பற்றி கட்டுரை எழுதி உங்க றோட்டுகளில் பேப்பர் வைக்கிறவர். இவருக்கு ஒரு கோயில் ஒன்று விளம்பரம் கொடுக்கும்.

தீபம் இருந்தால் என்ன அணைந்தால் என்ன?

என் வீட்டில் அனைக்க பட்டு விட்டது.

அனஸ் அடுத்த கேள்வி நேரத்தில் இலங்கை முஸ்லீம்கள் மொட்டாக்கு போடுவது சரியா? தவறா என்று புதிய கேள்வி நேரத்துடன் வருவார்.

தீபம் அணைக்காதவர்கள் எதிர் பாருங்கள்.

நேசன் இந்த இரண்டு துரோகிகளையும் இனம் கண்டுள்ளீர்கள்

இதில் ஜெயபாலன் கடந்த மாசம் சிறிலங்காவிலிருந்து ஒலி ஒளிபரப்பாகும் டன் யால் தொலைக்காட்சியில் உரையாடுகையில் தேசவிடுதலைக்காக போராடிய விடுதலை அமைப்பையும் அதன் தலைவரையும் மிகவும் மோசமாக தாக்கி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நான் தீபம் பார்ப்பதில்லை எனது நண்பர்களையும் சந்தாவை நிப்பாட்டும் படி கேட்டுள்ளேன் அவர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்

Link to comment
Share on other sites

இங்கு இரண்டு கருத்துக்களை நான் கூறுகின்றேன்.

ஒன்று: தேசம் நெற் எப்படி எல்லாம் குளப்பங்களை விளைவிக்கும் ஒரு இணையம்; அது இன்று இப்படி எழுதும் நீங்களும் அதனை இணைப்பீர்கள் நாளை தேசம் நெற் தீபத்திற்கு சாதகமாக ஒன்றை எழுதும் அதனையும் நீங்கள் இணைப்பீர்களா ? ஏனென்றால் தேசம் நெற் மற்று தீபம் தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்ன ரொம்ப நெருக்கம்.

இரண்டாவது: தீபம் தொலைக்காட்சிக்கு 22 000 வருடாந்த சந்தாதாரர் இது முள்ளிவாய்க்காலிற்கு முதல்கொண்டே இருந்து வருகின்றது. அவர்களின் சந்தா பட்டியல் என்றைக்குமே பெரும் வீழ்ச்சியடைந்ததாக இல்லை.

தவிர தீபம் தொலைக்காட்சி மிகப்பெரும் வணிக வலையமைப்பினைக்கொண்ட நிறுவனம் அவர்கள் சந்தா தாரர் இன்றியே தொலைக்காட்சியை நடத்த முடியும்.

இப்படி எதிர்ப்பிரச்சாரம் செய்யாமல் புலம்பெயர் தமிழர்கள் அடங்கிய ஒரு உயர்மட்டக்குழுவினர் தீபம் முதலாளி பத்மனாதன் அவர்களுடன் பேசுவதுதான் நல்லது.

ஏனென்றால் எம்மவர்கள் மத்தியில் இருப்பது இரண்டு தொலைக்காட்சிகள் அதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.

எடுத்ததுக்கெல்லாம் மடிச்சுக்கட்டவேண்டாம் கதையுங்கோ, கதையுங்கோ, கதையுங்கோ... இது வேறுயாரும் அல்ல அவர்தான் சொன்னது.

சிலருக்கு அவர்களின் ரேஞ்சில் இருப்பவர்களை வைத்து சொன்னால் செய்வார்கள் அல்லது தவிர்த்துக்கொள்வார்கள். அதனைத்தான் இலங்கை அரசு பெளவியமாக செய்கின்றது.

உமைக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தீபம் தொலைக்காட்சி சென்று கொண்டிருக்கிறதா?

http://www.varudal.com/index.php?option=com_content&view=article&id=1982%3A2011-06-26-15-21-26&catid=13%3A2009-12-24-18-21-58&Itemid=1

Link to comment
Share on other sites

.. பச்சை அடிப்பவர்களுக்கு இப்போ ஜெயபாலன்/கொன்ஸன்ரைன்/வாசுதேவன் போன்ற பெருந்தலைகள் நெருங்கிய நண்பர்களாம், என ஊர் உலகத்தில் கதைக்கிறார்கள்????????!!!!!!!!!! .. சிங்கள அமைச்சர்களின் தொடர்புகளை, இவர்களுக்கு அவர்கள் தான் எடுத்துக் கொடுத்தவர்களாம்??????!!!!!!!!! ... பூனையாம் கண்ணை மூடிக் கொண்டு ....!!!!!!!!!!!!!! <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இரண்டு கருத்துக்களை நான் கூறுகின்றேன்.

ஒன்று: தேசம் நெற் எப்படி எல்லாம் குளப்பங்களை விளைவிக்கும் ஒரு இணையம்; அது இன்று இப்படி எழுதும் நீங்களும் அதனை இணைப்பீர்கள் நாளை தேசம் நெற் தீபத்திற்கு சாதகமாக ஒன்றை எழுதும் அதனையும் நீங்கள் இணைப்பீர்களா ? ஏனென்றால் தேசம் நெற் மற்று தீபம் தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்ன ரொம்ப நெருக்கம்.

இரண்டாவது: தீபம் தொலைக்காட்சிக்கு 22 000 வருடாந்த சந்தாதாரர் இது முள்ளிவாய்க்காலிற்கு முதல்கொண்டே இருந்து வருகின்றது. அவர்களின் சந்தா பட்டியல் என்றைக்குமே பெரும் வீழ்ச்சியடைந்ததாக இல்லை.

தவிர தீபம் தொலைக்காட்சி மிகப்பெரும் வணிக வலையமைப்பினைக்கொண்ட நிறுவனம் அவர்கள் சந்தா தாரர் இன்றியே தொலைக்காட்சியை நடத்த முடியும்.

இப்படி எதிர்ப்பிரச்சாரம் செய்யாமல் புலம்பெயர் தமிழர்கள் அடங்கிய ஒரு உயர்மட்டக்குழுவினர் தீபம் முதலாளி பத்மனாதன் அவர்களுடன் பேசுவதுதான் நல்லது.

ஏனென்றால் எம்மவர்கள் மத்தியில் இருப்பது இரண்டு தொலைக்காட்சிகள் அதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.

எடுத்ததுக்கெல்லாம் மடிச்சுக்கட்டவேண்டாம் கதையுங்கோ, கதையுங்கோ, கதையுங்கோ... இது வேறுயாரும் அல்ல அவர்தான் சொன்னது.

சிலருக்கு அவர்களின் ரேஞ்சில் இருப்பவர்களை வைத்து சொன்னால் செய்வார்கள் அல்லது தவிர்த்துக்கொள்வார்கள். அதனைத்தான் இலங்கை அரசு பெளவியமாக செய்கின்றது.

உமை நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் வேறுவர்த்தகங்கள் செய்தாலும் சந்தாதாரையும் நம்பித்தான் உள்ளார்கள் ஏனெனில் G TV போல் ஏன் இலவசமாக ஒளிபரப்பவில்லை எமக்கு இருப்பது இரண்டு தொலைக்காட்சிகள் அவர்களை நாம் வளக்கவேண்டும் உங்கள் கருத்து தீபம் போன்ற தொலைக்காட்சி எப்போதும் தேசியவிரோத போக்கை கொண்டுள்ளதே உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தீபத்துடன் ஏதாவது தொடர்பு உள்ளதோ தெரியவில்லை ஆனால் தீபம் தமிழர்களை பொறுத்தவரை தேவையில்லாததொன்று

Link to comment
Share on other sites

தேசம் நெற் செயபாலன் கொன்ச்டையின் கோஸ்ட்டிக்கு தீபத்துடன் வியாபாரப் போட்டி, யார் சிறிலங்கா அரசிடம் இருந்து அதிக இலாபம் பெறுவது என.எமக்கு அவர்கள் தரும் உட் தகவல்கள் தான் முக்கியம்.மக்களிடம் இவர்களை அம்பலப் படுத்தினால் மக்கள் விழிப்படைவார்கள் சந்தா கட்டுவதை நிறுத்துவார்கள்.சந்தாதாரர் இல்லாமல் விளம்பரதாரர் விளம்பரம் கொடுக்க மாட்டார்கள்.தீபம் முதலாளியுடன் புலிகள் பலமாக இருந்த காலத்திலையே அப்பொயின்ட்மன் எடுத்துத் தான் கதைக்க முடியும்.இப்போது அதுவும் முடியாது.அவர்களுக்கு முக்கியமானது முதலீடும் சிறிலங்காவில் கால் பத்தித்து வியாபாரத்தை விரிவாக்குவதும்.மக்களிடம் உண்மைகள் சென்றால் தான் அவர்கள் திருத்துவார்கள்.கருணானிதி பாடம் படித்ததைப் போல் இவர்கள் நட்டம் பட்டால் தான் சிந்திப்பார்கள்.

Link to comment
Share on other sites

.. பச்சை அடிப்பவர்களுக்கு இப்போ ஜெயபாலன்/கொன்ஸன்ரைன்/வாசுதேவன் போன்ற பெருந்தலைகள் நெருங்கிய நண்பர்களாம், என ஊர் உலகத்தில் கதைக்கிறார்கள்????????!!!!!!!!!! .. சிங்கள அமைச்சர்களின் தொடர்புகளை, இவர்களுக்கு அவர்கள் தான் எடுத்துக் கொடுத்தவர்களாம்??????!!!!!!!!! ... பூனையாம் கண்ணை மூடிக் கொண்டு ....!!!!!!!!!!!!!! <_<

அவையள் அப்பிடி இப்பிடி இருப்பினம் ஆனா நீங்கள் அதெல்லாம் கண்டுக்கக்கூடாது..புலிகளின்ற போராட்டம் எல்லாம் அவங்களின்ர சேவைக்கு முன்னால் கால் தூசு...அவை தேசியத்தையே எதிர்ப்பினம்...ஏனெண்டால் மக்கள் சேவை செய்யுறாங்கள்..கே.பி அண்ணையும் மக்கள் சேவை தானை செய்யுறார்..நீங்கள் என்ன மசிர் புடுங்குறீங்கள்...நீங்கள் சும்மா இங்க இருந்து கொண்டு உதுவளை நோண்டி நோண்டி செலுக்கதை கதைக்கிறியள்...

Link to comment
Share on other sites

அவையள் அப்பிடி இப்பிடி இருப்பினம் ஆனா நீங்கள் அதெல்லாம் கண்டுக்கக்கூடாது..புலிகளின்ற போராட்டம் எல்லாம் அவங்களின்ர சேவைக்கு முன்னால் கால் தூசு...அவை தேசியத்தையே எதிர்ப்பினம்...ஏனெண்டால் மக்கள் சேவை செய்யுறாங்கள்..கே.பி அண்ணையும் மக்கள் சேவை தானை செய்யுறார்..நீங்கள் என்ன மசிர் புடுங்குறீங்கள்...நீங்கள் சும்மா இங்க இருந்து கொண்டு உதுவளை நோண்டி நோண்டி செலுக்கதை கதைக்கிறியள்...

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது எவரையும் நம்ப முடியவில்லை.

முன்னர் புலிகளிருந்த காலத்தில் நடேசன் அண்ணாவினுடைய மின்னஞ்சல்கள் அனைத்துமே நந்தன் என்பவனால் உடனுக்குடன் சிங்கள புலநாய்வுத்துறைக்கு ரகசியமாக அனுப்பப்பட்டு வந்ததாம். நந்தன் என்பவன் புலிகள் இயக்கத்தில் ஊடகப் பணிமனையில் இருந்தவன். இவனுக்கூடாகப் பெற்றுக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் வெளிநாட்டு அமைப்பாள்ர்களுக்குமிடையிலான பெருமளவிலான தொடர்பாடுகள்கூட நந்தன் என்பவனால் சிங்களத்துக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அன்று நந்தனை விலைக்கு வாங்கி புலிகளின் வெளியுலகத் தொடர்புகளை அறுத்தெறிந்த சிங்களம் இன்று நாடுகடந்த அரசை உடைக்கும் நோக்குடன் அதே கடிதங்களை நந்தன் மற்றும் நாடுகடந்த அரசை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் குழுவிடம் கொடுத்து வருகிறதாம். இப்போது ஒரு குழு நடத்தும் இணையத்தில் வரும் "புலிகளின் அந்தரங்கக் கடிதங்கள்" என்பதன் பிண்ணனியில் இருப்பது சிங்கள அரசுதான் என்றால் அது மிகையாகாது.

வெளிநாட்டில் புலிகளின் வலையமைப்பை உடைத்து அந்த நாடுகளில் எம்மைத் தடைசெய்ய சிங்களம் நந்தனினூடாகப் பெற்றுக்கொண்ட அதே கடிதங்கள் இன்றைக்கு எம்மைப் பிளவுபடுத்தி அழிக்க எமக்குள்ளேயே உலாவ விட்டிருக்கிறது.நெடியவன் மற்றும் அவரது அடிவருடிகள் நடத்தும் இந்த பத்தாம்பசலித்தனத்தில் அழியப்போவது நாடுகடந்த அரசோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால் நிச்சயம் எமது இலட்சியத்தை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு நிகழ்வுதான் என்பது உண்மை. :(

இன்றைக்கு உலகத் தமிழர் பேரவையும், பிரித்தானியத் தமிழர் பேரவையும் ஈழம் என்பதையோ அல்லது தனிநாடு என்பதையோ அடக்கி வாசிப்பதன் நோக்கமென்ன என்பதை யாராவது சிந்தித்தீர்களா?? "எங்களுக்கு இப்போது மனிதவுரிமைபற்றி மட்டுமே பேச முடியும், தனிநாடு பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்கிற தோரணை அவர்களைப் பற்றியதன் இரகசியமென்ன??

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தீபம் காரர் தானாம் அந்த டாயலொக் மொபைல் வீச் கொம்பனி யின் முகவர்களாம். சிங்களவன் இலகுவா பணம் சம்பாதிக்கிறான், அதை விற்று கொடுக்கிறதும் உந்த பேப்பர் கடை ,வைன் கடை வைத்திருக்கிற தமிழ் வர்த்தகர்கள் தானாம்.

அவை நிற்பாட்டினா கானாம போய் விடுவினம்.எங்க விளங்கினதானே.

எனக்கு தெரிந்த் நண்பர்களின் கடைகளில் VIZZ மொபைல் TOPUP இல்லை நிற்பாடி ஆச்சு. ONLY LYCA,LEBRA ,GT மற்றைய எல்லா மொபைல் பவுச்சரும் உண்டு

இப்படி எல்லாரும் யோசியுங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.