Jump to content

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இன்றிரவு அமரத்துவமடைந்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[Wednesday, 2011-07-06 21:51:16]

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார் என்பதனை மனத்துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.சுகவீனமுற்றிருந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார். ஓய்வு பெற்ற பேராசிரியரான அவர், தமிழ் மொழி தொடர்பில் பல்வேறு சேவைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார்.

Link to comment
Share on other sites

ஈழத் தமிழ் சமூகத்திலிருந்து தலைசிறந்த அறிஞரும்; சமூக அரசியல் விமர்சகரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான கார்த்தேகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது அகவையில் இன்று கொழும்பில் காலமானார்

மே மாதம் 10 ம் திகதி 1932 ம் ஆண்டு கரவெட்டியில் பிறந்த சிவத்தம்பி அவர்கள் ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் கொழும்பு ஷாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட அவர் ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.

பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய 'விதானையார் வீட்டில்' தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கிய இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில்; ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

தமிழக அரசின் திரு.வி.க. விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில், 'கரவையூற்று' எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண சமூகத்தை புரிந்துகொள்வது பற்றி,

இலங்கைத் தமிழர் - யார், எவர்? - யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு -

தமிழில் இலக்கிய வரலாறு -இலக்கணமும் சமூக உறவுகளும் -

மதமும் கவிதையும் -

தமிழ் கற்பித்தலில் உன்னதம் - சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் -

திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -

தமிழ்ப் பண்பாட்டில் சினிமா

பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி என்பன அவர் எழுதிய நூல்களில் முக்கியமானவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனங்களுக்கு அப்பால்

ஒரு தமிழ் அறிவாளியின் இழப்பு

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

தமிழ் கதைப்பதே, தமிழில் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதே கேவலம் என்ற இன்றைய வாழ்வுச் சூழ்நிலையில் பேராசிரியர் அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. கதைகள், நவீனங்கள் என்ற பொதுத் தளத்தில் பணியாற்றாது தமிழ் மொழியியல் தமிழ் சமூகவியல் என்ற பரந்த பரப்பில் நின்று தமிழுக்கு பேராசிரியர் ஆற்றிய பணி ஈடுயிணையற்றது.

பேராசிரியர் அவர்கள் மேடைகளில் உரையாற்றுவதை பல முறை கேட்டு இருக்கின்றேன். மொழியியல் சமூகவியல் பற்றிய அறிவு அறவே இல்லாத ஒருவருக்கு கூட மிக தெளிவாக விளங்கும் வண்ணம் அவற்றை உரைப்பதிலும் மிகவும் தேர்ந்தவர்

பேராசிரியரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தின் துயரில் மானசீகமாக பங்கு கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

எவ்வளவு கற்றாலென்ன,மேதையாயிருந்தாலென்ன, தமது சுயதம்பட்டங்களை காப்பதற்க்காக என்றைக்கு செம்மொழி மகாநாட்டுக்கு ,எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறந்து ,அதனை மறைக்க எண்ணிய கருணாநிதிக்கு செம்பு தோக்கினாரோ, அன்றிலிருந்து காலம் இவரின் இழப்பை ஒரு சராசரி மனிதனின் இறப்பாகவே பதிவு செய்யும்!

Link to comment
Share on other sites

தமிழ் இலக்கிய உலகத்திற்கு இவரின் இழப்பு பேரிழப்பாகும்!

Link to comment
Share on other sites

சாய்ந்தது

தமிழ்

இழப்பு

தமிழிற்கு

வார்த்தையில்லை

எனக்கு

சாந்தி

ஓம்

சாந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் இழப்பு தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பினால் துயரில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

1. Being a Tamil and Sri Lankan

http://tinyurl.com/5vtukeg

2. Lutesong and Lament: Giving Voice to a Generation

http://tinyurl.com/6z7t46b

3. Sri Lankan Tamil Society and Politics

http://tinyurl.com/6cdq5jx

4. Studies in Ancient Tamil Society

http://tinyurl.com/67vxpa2

5. The Tamil Film as a Medium of Political Communication

http://tinyurl.com/6ho6crl

6. அரங்கு ஓர் அறிமுகம்

http://tinyurl.com/678gdeh

7. இலக்கணமும் சமூக உறவுகளும்

http://tinyurl.com/5rrfxw7

8. இலங்கைத் தமிழர் - யார், எவர்

http://tinyurl.com/66gjsbr

9. கற்கை நெறியாக அரங்கு

http://tinyurl.com/69s5ydj

10. சங்க காலமும் இலக்கியமும் ஆய்வின் மாறும் பரிமாணங்கள்

http://tinyurl.com/5s4qvns

11. சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

http://tinyurl.com/6x4uwgp

12. சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்

http://tinyurl.com/5uwuk7l

13. தமிழில் இலக்கிய வரலாறு

http://tinyurl.com/64khu7t

14. தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

http://tinyurl.com/6dqnckd

15. தமிழ் கற்பித்தலில் உன்னதம்

http://tinyurl.com/62dg2ax

16. தமிழ் கற்பித்தல்

http://tinyurl.com/63tb5de

17. தமிழ்ச் சமூகமும் - பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்

http://tinyurl.com/689qlml

18. தமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்

http://tinyurl.com/6anjwj4

19. தமிழ்ப் பண்பாட்டில் சினிமா

http://tinyurl.com/66zensz

20. திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு

http://tinyurl.com/6hz628o

21. நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்கள்

http://tinyurl.com/6duwgyf

22. பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

http://tinyurl.com/5umnugj

23. மதமும் கவிதையும்

http://tinyurl.com/6l6cfnu

24. யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல்

http://tinyurl.com/6cllj5t

25. யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு

http://tinyurl.com/6jdxtex

26. யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை

http://tinyurl.com/6kxj9cf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேராசிரியருக்கு கண்ணீர் அஞ்சலிகள்...அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது”

“பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலை சிறந்த தமிழ்ப் புத்திஜீவியும், தமிழ் அறிவாளரும் ஆன பேராசிரியர் சிவத்தம்பியின் இழப்பு, நிரப்ப முடியாத வெற்றிடமாகும்!

இவரைத் தனிப் பட்ட முறையில் தெரியும்!

இவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஆனாலும் இவரது கடைசிக் கால நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் இழப்பு தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பினால் துயரில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.ஆனாலும் இவரது கடைசிக் கால நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் சிவத்தம்பி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததுடன், தற்போதைய காலத்தில் தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் எனவும் பெருமைப்பட்டேன். முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து ஒராண்டுக்குள் கருணாநிதி கூட்டிய செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டாரோ.... அன்றே, இவர் தன்னை தாழ்த்தி கொண்டார். குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழிக்கும்.. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போது தமிழர்களின் போராட்டத்திற்கும் ஆற்றிய பங்களிப்புக்காக இவரை நினைவுகூற முடிகின்ற போதும்.. கொழும்புக்கு இடம்பெயர்ந்த பின் இவரிடம் காணப்பட்ட குழப்பகரமான நிலைப்பாடுகள் மக்கள் மத்தியில் இவர் தொடர்பான நல்லெண்ணத்தை கணிசமாக குறைத்துவிட்டுள்ளது.

இருந்தாலும்.. ஒரு தமிழ் சான்றோன் என்ற வகையில் அன்னாரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

300sivathambi.jpg

தமிழ்கூறும் நல்லுலகின் இலக்கிய விமர்சகரும் திறனாய்வாளரும் சமூக சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை இரவு காலமானார்.

யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி, சிலகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தெஹிவளை வெண்டவற் பிளேஸில் உள்ள அன்னாரது இல்லத்தில் நேற்றிரவு 8.00 மணியளவில் காலமாகியுள்ளார்.

இவரது உடல் அன்னாரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பண்டிதரும் சைவப்புலவருமான த.பி. கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதியினருக்குப் புதல்வராகப் பிறந்த சிவத்தம்பி, ரூபாவதி நடராஜாவை திருமணம் செய்தார். மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான இவர், இலக்கியவாதியாகவும் சமூக ஆர்வலராகவும் தமிழ் பேசும் சமூகங்கள் வாழ்கின்ற இடங்களில் எல்லாம் நன்கு அறியப்பட்டவராகவும் விளங்கியவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் கரவெ ட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்ற இவர் தனது இடை நிலைக் கல்வியை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கற்றதுடன் அக்கல்லூரியிலேயே ஆரமபத்தில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும் பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

ஐக்கிய இராச்சியத்திலுள்ள பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பை மேற்கொண்டு முனைவர் (கட.ஈ) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர், மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.

தொடர்ந்து, தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டுவரை பணிபுரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். கலைப் பங்களிப்பு பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு, பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். இலங்கையர் கோன் எழுதிய “விதானையார் வீட்டில்’ தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

ஆக்கங்கள்

பல்வேறு துறைகளிலும், ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்கு புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின்கலை என பல்துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்ஷிய சிந்தனைப்போக்குடைய இவர் யாழ்ப்பாண சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

இவர் பற்றிய படைப்புக்கள்

தமிழ் அரசின் திரு வி.க. விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட ஈழத் தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில் கரவையூற்று எனும் தலைப்பில் யாழ்ப்பாணம், கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இவருடைய நூல்கள்

இலங்கைத் தமிழர் யார், எவர்? , யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு , தமிழில் இலக்கிய வரலாறு, இலக்கணமும் சமூக உறவுகளும் , மதமும் கவிதையும் , தமிழ் கற்பித்தலில் உன்னதம், சுவாமி விபுலானந்தரின் சிந்தனை நெறிகள், திராவிட இயக்கக் கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு, தமிழ்ப் பண்பாட்டில் சினிமா (மக்கள் வெளியீடு), பண்டைத் தமிழ்ச்சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி உள்ளிட்ட பல்வேறான நுõல்களையும் ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவரது மரணச் செய்தியைக் கேள்வியுற்ற தமிழ்நாட்டு இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள், புலம்பெயர் நாடுகளில் வாழும் முக்கியஸ்தர்கள் மற்றும் நம் நாட்டுக் கலைஞர்கள் எல்லோரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர் அன்னாரது இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

வீரகேசரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் சிவத்தம்பி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததுடன், தற்போதைய காலத்தில் தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் எனவும் பெருமைப்பட்டேன். முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து ஒராண்டுக்குள் கருணாநிதி கூட்டிய செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டாரோ.... அன்றே, இவர் தன்னை தாழ்த்தி கொண்டார். குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சிறியின் கருத்தே எனதும்.என்றாலும் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேன்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியரி சிவத்தம்பி அவர்களின் மறைவையொட்டி துன்பத்தில் மூழ்கியிருக்கும் அன்னாரின் குடும்பத்தினரின் சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டு அவருடைய ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்

Link to comment
Share on other sites

எங்கள் ஈழத்தின் மோசிகீரனே! மன்னன் கவரி வீசுவான்; சென்றுவருக

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-08 16:50:38| யாழ்ப்பாணம்]

ஈழத்தின் தலைசிறந்த தமிழ்ப் பேரறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி தமிழ் நெஞ்சங்களை ஆழ்ந்த வேதனையில் மூழ்கடித்துள்ளது. ஈழத்தமிழர்களின் தமிழ் மொழிக்கான பணி என்ன?அந்தப் பணியைச் செய்தவர்கள் யாவர்? அவர்களின் அறிவுசார் காத்திரம் எத்தன்மையது என யாரேனும் வினவினால், அந்த வினவல் அத்தனைக்கும் நாம் சுட்டிக்காட்டக் கூடியவராக விளங்கியவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்றால் அதில் மிகைப்படுத்தல் எதுவும் இல்லை.

ஈழத்துத் தமிழ்ச் சிறப்பின் அடையாளமாக விளங்கிய அவரின் தமிழுக்கான அர்ப்பணிப்புக்கள் என்பதற்கப்பால், தமிழினத்தின் அவலங்கள், உரிமைப் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர் ஆழமான கருத்தியலைக் கொண்டிருந்தமை, பேராசிரியர் சிவத்தம்பி என்ற பெயருக்கு உலகளாவிய பெருமையையும், புகழையும் கொடுத்ததெனலாம்.

தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக-நுண்கலைத் துறையின் வளர்ச்சிக்காக- நாடகப் பாரம்பரியத்தின் எழுச்சிக்காக-ஈழத்தமிழினத்தின் வரலாற்றுக்காக-எங்கள் கிராமங்களின் பண்பாட்டுக் கோலங்களை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தன்வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.

அவரின் உயிர்பிரியும் வரை தமிழுக்காக வாழ்ந்த அவர், ஈழத்தமிழினத்தின் சால்புமிக்க சான்றோனாக, ஒப்புரவாளராக, ஒழுக்கத்தின் உத்தமராகத் திகழ்ந்தார்.

தமிழ் மொழிக்கான அவரின் அர்ப்பணிப்புகள் ஏராளம் எனப் பட்டியல் இடப்படுகின்ற அதேநேரம், எம் இனம் தொடர்பில் அவர் கொண்டிருந்த நியாயத்துவங்கள், யதார்த்தங்கள், உணர்வுபூர்வமான சிந்தனைகள் வெளிவராமல் போனமைக்கு இலங்கை நாட்டில் இருக்கக் கூடிய அபாயமான சூழமைவே காரணம் எனலாம்.

இலங்கை நாட்டில் சிங்களவர் தரப்பிலும் தமிழர் தரப்பிலும் கருத்துச் சுதந்திரத்துக்கு இடம்கிடைத்திருக்குமாயின் தமிழ்ச் சான்றோனாகிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் சிந்தனைகள் அரசியல் பரப்பிலும், இனப்பிரச்சினைக்கான தீர்விலும் காத்திரமான வகிபங்கை கொண்டிருக்கும் என்பது சர்வநிச்சயம்.

என்ன செய்வது அறிவியலுக்கும் அறிஞர்களுக்கும் இம்மியும் இடம்கொடுக்காத இலங்காபுரியில் சிவத்தம்பி போன்ற மாபெரும் அறிஞர்கள் மெளனமாக இருப்பதையே புத்திசாலித் தனமாகக் கருதியமை தவிர்க்க முடியாததே.

எதுவாயினும், எங்கள் ஈழத்து மோசிகீரனார் பேராசிரியர் சிவத்தம்பிக்கு ஈழத்தில் தமிழ் ஆட்சி புரிந்திருந்தால், நிச்சயம் மன்னன் கவரி வீசியிருப்பான்.

ஓ! நாங்களோ நாடற்றவர்கள்-வீடற்றவர்கள். என்செய்வோம். பேராசிரியப் பெருமகனே! தமிழ் மன்னன் வருங்கால் கவரி வீசி உம் தமிழ்ப் பணிக்கு அஞ்சலி செய்வான். அதுவரை இதயம் வெதும்பி உதிரம் கொதித்து கண்ணீர் சொரிந்து விடை தந்தோம். சென்று வருக.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20641

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவத்தம்பி அய்யா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள், அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.. :(:(

sympathy12.gif

Link to comment
Share on other sites

பேரறிஞன் சிவத்தம்பி ஜயா அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலி!!!

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் பேரறிஞர் பேராசிரியர் அவர்கட்கு…..

உங்களுக்கு எங்கள் அஞ்சலி !!!

அந்த மாபெரும் கல்வி தந்தை தந்த தரமான கல்வி எங்கள் வாழ்வில் அவரை நினைவு கூறும்.

நீங்கள் மறைந்தாலும் எம் தமிழ் வாழும்வரை எம்மோடு வாழ்வீர்!!!

அஞ்சலியுடன் …ஈழ இணையம்eelamwebsite.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.