Jump to content

நேசக்கரம் அமைப்பினது கடனுதவித் திட்டம்.


Recommended Posts

நேசக்கரம் அமைப்பினது கடனுதவித் திட்டம்.

logo.png
நேசக்கரம் அமைப்பானது இதுவரை காலங்களும் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகளைப் புலம்பெயர் தேசத்து மக்களிடம் இருந்து பெற்று அதனை நேரடியாகவும் நேசக்கரம் அமைப்பின் தாயகத்துப் பணியாளர்கள் மூலமாகவும் கொண்டு சென்று சேர்த்து வருகின்றது அனைவரும் அறிந்ததே.

நேசக்கரத்தில் பணியாற்றும் யாவரும் சேவை அடிப்படையில் ஊதியமற்று எம்முடன் இணைந்து நாம் வழங்கும் உதவிகளைக் கொண்டு போய் சேர்க்கிறார்கள்.

ஆரம்ப காலங்களில் அவசரத் தேவைகளிற்கான அடிப்படை உதவிகளையும் அவர்களது வாழ்வாதாரத் தேவைகளைக் கட்டியெழுப்பவும் வழங்கி வந்த உதவிகளில் இனிவரும் காலங்களில் சில மாற்றங்களைக் கொண்டுவர நேசக்கரம் நிருவாகம் முடிவெடுத்துள்ளது.

நீண்டகால நோக்குடன் தாயகத்தில் உள்ள மக்களின் பொருதாரத்தினை மேம்படுத்தவும் பின்னர் அதனை விரிவாக்கம் செய்யவும் கடனடிப்படைத் திட்டத்துடனான உதவி என்கிற ஒரு திட்டத்தினை முன்வைக்கவுள்ளோம். இம்முயற்சியின் முதல்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளோம். இந்தத் திட்டத்தினை இரண்டு முறைகளில் நடைமுறைப்படுத்தலாம்.

1) புலம்பெயர் உறவுகள் சிறியதொகைகளாக செய்யும் நிதியினைச் சேகரித்து நேசக்கரம் அமைப்பு ஒரு நிதித் தொகையை கையிருப்பாக்கிக் கொள்வது. அந்த நிதியினை சொந்தத் தொழில் செய்ய விரும்புவர்களிற்கு சட்ட ரீதியான உறுதி மொழிப்பத்திரத்தினைப் பெற்றுக் கொண்டு ஒரு வருடத்திற்கு வட்டியில்லாக்கடனாக வழங்குவது.
பயனாளர் அந்தக் கடனை மீண்டும் நேசக்கரம் நிதியத்திடம் திரும்ப ஒப்படைத்தல். அல்லது தொழில் செய்ய விரும்பும் இன்னொருவரிற்கு நேசக்கரத்தின் அனுமதியுடன் வழங்குதல்.

2) நேசக்கரம் அமைப்பால் தெரிவு செய்யப்பட்டு கடனுதவி பெற்று தொழில் செய்ய விரும்புபவரிற்கு புலம் பெயர் தேசத்தில் உதவ விரும்புபவர் நேரடியாகவே ஒரு தொகை பணத்தினை வழங்கலாம். கடன் உதவி பெறுவதற்கான ஆவணங்களை நேசக்கரம் அமைப்பு பயனாளரிடமிருந்து பெற்றுக் கொடுக்கும். ஒரு ஆண்டின் பின்னர் பயனாளர் உதவியவரிற்குத் திரும்பக் கொடுத்தல்.

மேலே குறிப்பிட்ட இரண்டு வழிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இப்படியான திட்டத்தின் மூலம் இதுவரை காலமும் சிறிது சிறிதாக தனிப்பட்டவர்களின் தேவைகளை மட்டுமே நிறைவேற்றி வந்த நேசக்கரம் அமைப்பானது அடுத்த கட்டமான பலரிற்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் காலப் போக்கில் நிரந்தர வருமானம் பெறக்கூடியதான தொழில் நிறுவனங்களை நிறுவி பலரிற்கு உதவும்படியாக வளர்ச்சிப்பாதையில் முன்றேலாம்.

அத்தோடு தாயக்கத்தில் உதவி பெறுபவர்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்ற பணம்தானே என்று நினைத்து பொறுப்பற்ற முறையில் செலவுகள் செய்வது நிறுத்தப்படுவதோடு பொறுப்பானவர்களாக அவர்களை மாற்றமடைய வைக்கும். அதே நேரம் உதவியவர்களிற்கும் உதவி செய்தோம் என்கிற மனத்திருப்தியுடன் அவர்களது மூலதனம் தொடர்ந்தும் பல திட்டங்களிற்கு தொடர்ச்சியாக சுழற்சி முறையில் சென்றடையும்.

கிடைக்கப்பெறும் உதவிகள் வளமையான நமது மாதாந்த கணக்கறியுடன் கடனுதவித் திட்டத்தில் சேரும் நிதிவிபரத்தையும் வெளியிடுவோம். கடன் உதவியைப் பெற்றுக் கொள்வோர் பயனாளர்களின் விபரங்களையும் எமது இணையத்தில் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிப்போம்.

உறவுகளே எமது இந்தத் திட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களோடு உங்கள் ஆதரவினையும் வேண்டி நிற்கிறோம்.

contact

Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany

Telephone: +49 (0)6781 70723
Fax: +49 (0)6781 70723

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

- நேசக்கரம் நிருவாகம் -

Link to comment
Share on other sites

நேசக்கரம் அமைப்பினது கடனுதவித் திட்டம்.

logo.png

நேசக்கரம் அமைப்பானது இதுவரை காலங்களும் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகளைப் புலம்பெயர் தேசத்து மக்களிடம் இருந்து பெற்று அதனை நேரடியாகவும் நேசக்கரம் அமைப்பின் தாயகத்துப் பணியாளர்கள் மூலமாகவும் கொண்டு சென்று சேர்த்து வருகின்றது அனைவரும் அறிந்ததே.

நேசக்கரத்தில் பணியாற்றும் யாவரும் சேவை அடிப்படையில் ஊதியமற்று எம்முடன் இணைந்து நாம் வழங்கும் உதவிகளைக் கொண்டு போய் சேர்க்கிறார்கள்.

ஆரம்ப காலங்களில் அவசரத் தேவைகளிற்கான அடிப்படை உதவிகளையும் அவர்களது வாழ்வாதாரத் தேவைகளைக் கட்டியெழுப்பவும் வழங்கி வந்த உதவிகளில் இனிவரும் காலங்களில் சில மாற்றங்களைக் கொண்டுவர நேசக்கரம் நிருவாகம் முடிவெடுத்துள்ளது.

நீண்டகால நோக்குடன் தாயகத்தில் உள்ள மக்களின் பொருதாரத்தினை மேம்படுத்தவும் பின்னர் அதனை விரிவாக்கம் செய்யவும் கடனடிப்படைத் திட்டத்துடனான உதவி என்கிற ஒரு திட்டத்தினை முன்வைக்கவுள்ளோம். இம்முயற்சியின் முதல்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளோம். இந்தத் திட்டத்தினை இரண்டு முறைகளில் நடைமுறைப்படுத்தலாம்.

1) புலம்பெயர் உறவுகள் சிறியதொகைகளாக செய்யும் நிதியினைச் சேகரித்து நேசக்கரம் அமைப்பு ஒரு நிதித் தொகையை கையிருப்பாக்கிக் கொள்வது. அந்த நிதியினை சொந்தத் தொழில் செய்ய விரும்புவர்களிற்கு சட்ட ரீதியான உறுதி மொழிப்பத்திரத்தினைப் பெற்றுக் கொண்டு ஒரு வருடத்திற்கு வட்டியில்லாக்கடனாக வழங்குவது.
பயனாளர் அந்தக் கடனை மீண்டும் நேசக்கரம் நிதியத்திடம் திரும்ப ஒப்படைத்தல். அல்லது தொழில் செய்ய விரும்பும் இன்னொருவரிற்கு நேசக்கரத்தின் அனுமதியுடன் வழங்குதல்.

2) நேசக்கரம் அமைப்பால் தெரிவு செய்யப்பட்டு கடனுதவி பெற்று தொழில் செய்ய விரும்புபவரிற்கு புலம் பெயர் தேசத்தில் உதவ விரும்புபவர் நேரடியாகவே ஒரு தொகை பணத்தினை வழங்கலாம். கடன் உதவி பெறுவதற்கான ஆவணங்களை நேசக்கரம் அமைப்பு பயனாளரிடமிருந்து பெற்றுக் கொடுக்கும். ஒரு ஆண்டின் பின்னர் பயனாளர் உதவியவரிற்குத் திரும்பக் கொடுத்தல்.

மேலே குறிப்பிட்ட இரண்டு வழிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இப்படியான திட்டத்தின் மூலம் இதுவரை காலமும் சிறிது சிறிதாக தனிப்பட்டவர்களின் தேவைகளை மட்டுமே நிறைவேற்றி வந்த நேசக்கரம் அமைப்பானது அடுத்த கட்டமான பலரிற்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் காலப் போக்கில் நிரந்தர வருமானம் பெறக்கூடியதான தொழில் நிறுவனங்களை நிறுவி பலரிற்கு உதவும்படியாக வளர்ச்சிப்பாதையில் முன்றேலாம்.

அத்தோடு தாயக்கத்தில் உதவி பெறுபவர்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்ற பணம்தானே என்று நினைத்து பொறுப்பற்ற முறையில் செலவுகள் செய்வது நிறுத்தப்படுவதோடு பொறுப்பானவர்களாக அவர்களை மாற்றமடைய வைக்கும். அதே நேரம் உதவியவர்களிற்கும் உதவி செய்தோம் என்கிற மனத்திருப்தியுடன் அவர்களது மூலதனம் தொடர்ந்தும் பல திட்டங்களிற்கு தொடர்ச்சியாக சுழற்சி முறையில் சென்றடையும்.

கிடைக்கப்பெறும் உதவிகள் வளமையான நமது மாதாந்த கணக்கறியுடன் கடனுதவித் திட்டத்தில் சேரும் நிதிவிபரத்தையும் வெளியிடுவோம். கடன் உதவியைப் பெற்றுக் கொள்வோர் பயனாளர்களின் விபரங்களையும் எமது இணையத்தில் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிப்போம்.

உறவுகளே எமது இந்தத் திட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களோடு உங்கள் ஆதரவினையும் வேண்டி நிற்கிறோம்.

contact

Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany

Telephone: +49 (0)6781 70723
Fax: +49 (0)6781 70723

nesakkaram@gmail.com

www.nesakkaram.org

- நேசக்கரம் நிருவாகம் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலுள்ள எமது உறவுகளுக்காக நேசக்கரம் நிறுவனத்தால் நீங்கள் தொடங்கும்

கடனுதவி அடிப்படையிலான சிறு தொழில்வாய்ப்பு மிகவும் வரவேற்கப்படவேண்டிய விடயம்.

போரினால் அல்லது இயற்கையின் சீற்றத்தினால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உடனுதவிகள் ஒரு காலவரையறையுடன் நிறுத்தப்பட்டு அவர்கள்

தொடர்ந்து சொந்தக்காலில் நிற்கும்படியான வாழ்வாதார கட்டுமானங்களை நிறுவிக்கொடுப்பதும் உதவி இஸ்தாபனங்களின் பணிகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.

தொடர்ச்சியாக வழங்கப்படும் இலவச உதவிகள் மக்களை சூனியத்துக்குள் தள்ளி போதைக்கு அடிமையானவர்கள்போல் ஆக்கும் என்பது ஆராய்ச்சிமூலம்

கண்டறிப்பட்ட உணமை. தமிழினம் ஒரு சிறந்த உழைக்கும் இனம். கடின உழைப்புக்கு பெயர்போன இனம்.

ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் வழங்கப்படும் இலவச உதவிகள் மக்களின் கைகளை கட்டிப்போட்டு அவர்களை ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழல வைக்கும்.

தமிழரைப் பொறுத்தவரையில் அதுதான் சிங்கள அரசின் எதிர்பார்ப்பும்.

எனவே சிறுதொழில் வாய்ப்புகள் கிடைக்க எமது உறவுகளுக்கு உதவுவோம்.

எமது மக்கள் சுயமாய் வாழ வழி சமைப்போம்.

Link to comment
Share on other sites

தாயகத்திலுள்ள எமது உறவுகளுக்காக நேசக்கரம் நிறுவனத்தால் நீங்கள் தொடங்கும்

கடனுதவி அடிப்படையிலான சிறு தொழில்வாய்ப்பு மிகவும் வரவேற்கப்படவேண்டிய விடயம்.

போரினால் அல்லது இயற்கையின் சீற்றத்தினால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உடனுதவிகள் ஒரு காலவரையறையுடன் நிறுத்தப்பட்டு அவர்கள்

தொடர்ந்து சொந்தக்காலில் நிற்கும்படியான வாழ்வாதார கட்டுமானங்களை நிறுவிக்கொடுப்பதும் உதவி இஸ்தாபனங்களின் பணிகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.

தொடர்ச்சியாக வழங்கப்படும் இலவச உதவிகள் மக்களை சூனியத்துக்குள் தள்ளி போதைக்கு அடிமையானவர்கள்போல் ஆக்கும் என்பது ஆராய்ச்சிமூலம்

கண்டறிப்பட்ட உணமை. தமிழினம் ஒரு சிறந்த உழைக்கும் இனம். கடின உழைப்புக்கு பெயர்போன இனம்.

ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் வழங்கப்படும் இலவச உதவிகள் மக்களின் கைகளை கட்டிப்போட்டு அவர்களை ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழல வைக்கும்.

தமிழரைப் பொறுத்தவரையில் அதுதான் சிங்கள அரசின் எதிர்பார்ப்பும்.

எனவே சிறுதொழில் வாய்ப்புகள் கிடைக்க எமது உறவுகளுக்கு உதவுவோம்.

எமது மக்கள் சுயமாய் வாழ வழி சமைப்போம்.

கடன் உதவித்திட்டத்தில் எனது அனுபவங்களை வைத்து கூறவேண்டுமானால் எம் மக்கள் கடனை திருப்பிக்கொடுக்கும் வீதம் மிக குறைவு கடந்த 30 வருட ஆய்வு.

.

இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மட்டுமே ( இலங்கை மற்றும் வடக்கு கிழக்கில்) கடன் மீழ் அறவீடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தது.

.

அதே வேளை தற்போதைய சூழலில் எல்லோம் பெருமளவு தொகையினை உதவியாக நீண்ட நாளைக்கு கொடுக்கவும் மாட்டார்கள்.

அடுத்தது சுய முயற்சிக்கு கடன் கொடுத்தால்தான் பொறுப்புணர்வு வரும் இல்லாவிட்டால் செலவழித்து விடுவார்கள்.

.

கடனை மீழ் அறவீடு செய்வதற்கு சரியான பொறிமுறை இருக்க வேண்டும். உணர்வு ரீதியான நம்பிக்கை அறவீட்டிற்கு உதவாது.

.

சுழற்சி முறை, கூட்டு நம்பிக்கை பொறுப்பு பொறிமுறை எமது பிரதேசங்களுக்கு பொருத்தமானவையாக இருக்கும்.

.

இதனைத்தான் இறுதியாக சர்வதேச ஸ்தாபனங்கள், பொருண்மியம், புனர்வாழ்வு ஆகியன செய்து வந்தன. இதில் 60-70 விழுக்காடு மீழ் அறவீடு பதிவாகியது.

Link to comment
Share on other sites

வரவேற்கத்தக்க விடயம். Microcredit மூலம் உதவி செய்வது அரசாஅங்கத்தின் அனுசரனையுடன் இயங்கும் NGO மூலமாக மட்டுமே முடியும். அதிக செலவும் ஆகும்.

இன்னொரு வழியும் உண்டு. பேபி லோன் போன்று ஆனால் நேசக்கரத்தின் மேற்பார்வையுடன் நேரடியாக உதவுவது.

http://www.babyloan.org/en/projects/list

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமை சொல்வதிலும் உண்மையுண்டு. சிந்திக்க வேண்டிய விடயந்தான். எனினும் இதுபோன்ற சிறிய கடனுதவியின் நோக்கம்

அனைத்தையும் இழந்து தவிக்கும் சனங்களுக்கு மீளவும் உழைப்பதற்கு ஒரு வழியைக்காட்டி தட்டிக் கொடுப்பதேயன்றி அதில் ஆதாயம்

ஈட்டுவதாக இருக்கமுடியாது. கடனாகக் கொடுக்கும் உதவித்தொகையை மாற்றி அதை இலவச உதவியாக கொடுத்தாலும் கூட அது திரும்பி வராத ஒன்றுதான்.

ஆகவே நேசக்கரம் இப்புதிய முயற்சியில் இறங்குவது நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து.

தமிழினம் மீண்டெழுவதற்கு எமது கல்வியும் தொழில்துறையும் விரைந்து பழைய நிலைமையை எட்டுதல் அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திட்டம் அத்துடன் பாரிய திட்டங்களுக்கான முதல் அடி.

ஆனால் இது சாதாரண விடயமல்ல. இதை கொண்டு நடாத்துவது மற்றும் தொடர்புகளைப்பேணுவது என்பவற்றுடன் உங்கள் மீதான நம்பிக்கையும் மிகமிக முக்கியமானவை. இவற்றுக்காக உங்களை நீங்கள் தயார்படுத்தணும்.

Link to comment
Share on other sites

கருத்திட்ட வணங்காமுடி , உமை , இணையவன், விசுகு ஆகியோருக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

கடன் உதவித்திட்டத்தில் எனது அனுபவங்களை வைத்து கூறவேண்டுமானால் எம் மக்கள் கடனை திருப்பிக்கொடுக்கும் வீதம் மிக குறைவு கடந்த 30 வருட ஆய்வு.

.

இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மட்டுமே ( இலங்கை மற்றும் வடக்கு கிழக்கில்) கடன் மீழ் அறவீடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தது.

.

அதே வேளை தற்போதைய சூழலில் எல்லோம் பெருமளவு தொகையினை உதவியாக நீண்ட நாளைக்கு கொடுக்கவும் மாட்டார்கள்.

அடுத்தது சுய முயற்சிக்கு கடன் கொடுத்தால்தான் பொறுப்புணர்வு வரும் இல்லாவிட்டால் செலவழித்து விடுவார்கள்.

.

கடனை மீழ் அறவீடு செய்வதற்கு சரியான பொறிமுறை இருக்க வேண்டும். உணர்வு ரீதியான நம்பிக்கை அறவீட்டிற்கு உதவாது.

.

சுழற்சி முறை, கூட்டு நம்பிக்கை பொறுப்பு பொறிமுறை எமது பிரதேசங்களுக்கு பொருத்தமானவையாக இருக்கும்.

.

இதனைத்தான் இறுதியாக சர்வதேச ஸ்தாபனங்கள், பொருண்மியம், புனர்வாழ்வு ஆகியன செய்து வந்தன. இதில் 60-70 விழுக்காடு மீழ் அறவீடு பதிவாகியது.

உமை உங்கள் கருத்துகள் சரியானதே. கடனைத் திருப்பிப்பெறுதல் என்பது இப்போதைய நிலமையில் மிகவும் சிரமமான ஒன்றதான். ஆனால் தொடர்ந்து மக்களை எம்மில் தங்கி நிற்க வைத்தல் எதிர்கால முன்னேற்றத்துக்கு உகந்ததாக இருக்காது.

முதற்கட்டம் நம்பிக்கை அடிப்படையில் சிலருக்கு கடனடிப்படையில் வழங்கியிருக்கிறோம். இதனை உதவியோர் தமக்குத் திருப்பித் தர வேண்டாம் ஆனால் திரும்ப கிடைத்தால் இன்னொருவருக்கு பயன்படுத்துமாறு வழங்கியுள்ளனர்.

உணர்வு ரீதியான நம்பிக்கை நீங்கள் கூறுவது போல சரிவராத ஒன்று. ஆனால் நீங்கள் கூறுகிற பொறிமுறைகள் பற்றி (மாற்று வழிகள்) பலருடன் பேசி வருகிறோம். சாத்தியமான சில சமிஞ்ஞைகள் வந்துள்ளது.

முதற்கட்ட வேலைகளின் பின்னர் அதுபற்றி விரிவாக மக்கள் மத்தியில் கொண்டு வரலாம்.

பொருளாதா கல்வி முன்னேற்ற கட்டுமானத்தை மீளமைக்காமல் போரால் பாதிக்கப்பட்டவர்களை தலைநிமிர வைக்க முடியாது. பத்தோ இல்லது பதினைந்தோ வருடங்கள் இதற்காக நாங்கள் உழைக்க வேண்டிய திட்டமிது.

வித்தை விதையிடுவோம் பார்ப்போம் வெற்றியின் விளைச்சல் எப்படியென்பதை.

இன்னொரு வழியும் உண்டு. பேபி லோன் போன்று ஆனால் நேசக்கரத்தின் மேற்பார்வையுடன் நேரடியாக உதவுவது.

http://www.babyloan.org/en/projects/list

இப்போது எமது மேற்பார்வையின் கீழ் சிலருக்கு கடன் அடிப்படையில் உதவிகளை வழங்கியுள்ளோம்.

உமை சொல்வதிலும் உண்மையுண்டு. சிந்திக்க வேண்டிய விடயந்தான். எனினும் இதுபோன்ற சிறிய கடனுதவியின் நோக்கம்

அனைத்தையும் இழந்து தவிக்கும் சனங்களுக்கு மீளவும் உழைப்பதற்கு ஒரு வழியைக்காட்டி தட்டிக் கொடுப்பதேயன்றி அதில் ஆதாயம்

ஈட்டுவதாக இருக்கமுடியாது.

இத்திட்டத்தில் இணைந்துள்ள சிலர் இத்தகைய முடிவோடு தான் உதவியுள்ளார்கள். இதில் மீள அவர்களை எழ வைப்பதற்கான முயற்சியைத் தான் செய்ய நினைக்கிறோம்.

இவ்வருட ஆரம்பத்தில் ஒரு சிறு பெட்டிக்கடைக்கான உதவியை ஒருவர் இங்கிருந்து ஒருவர் மூலம் பெற்றுக் கொண்டார். இம்மாதம் தன்னைப்போன்ற பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு சிறுகடைக்கான அரைவாசி முதலீட்டை தனது இலாபத்தில் இருந்து வழங்கியுள்ளார். அடுத்தமாதம் முதல் தனது வருவாயிலிருந்து ஒரு மாணவருக்கான கல்விக்கு உதவுவதாக ஒரு மாணவரின் விபரத்தையும் பெற்றுள்ளார் அந்தப்பயனாளி.

Link to comment
Share on other sites

நேசக்கரம் கடனடிப்படையிலான உதவியில் பெயர் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் தனது பங்களிப்பாக - 1389,21€ தந்துதவியிருக்கிறார். இவரது உதவியிலிருந்து கடன் அடிப்படையில் ப.கந்தசாமி (வவுனிக்குளம்) அவர்களுக்கு கோழிப்பண்ணை போடுவதற்காக இலங்கை ரூபா ஒருலட்சம் பெற்றுக் கொண்டுள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.