Jump to content

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும் தமிழினத்தை அழிவிக்கு அழைத்துச் செல்லும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும் தமிழினத்தை அழிவிக்கு அழைத்துச் செல்லும்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011 06:04

வெண்ணை திரண்டு வருகையில் தாலி உடைந்தால் ஆபத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும் தமிழினத்தை அழிவிக்கு அழைத்துச் செல்வதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்தையும் ஏக்க நிலைக்கு தள்ளி விடும்.

ஈழத் தமிழினத்தால் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை ஒட்டி மாறுபட்ட கருத்தில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பேரழிவைத் தடுக்க முடியுமா என்பது பெரும் கேள்வி எனினும் இன்றைய சூழ்நிலையில் எமக்கு வேறு மாற்று இயக்கமில்லை. விலை போவதற்கென்றே பிறந்த டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி. டி. பி. இயக்கம் சரி, கிழக்கில் கருநாகமாக விளங்குகின்ற கருணாவின் இயக்கம் சரி, அவரின் அடிவருடியாக தொடங்கி தான் ஒரு தனி இயக்கம் என்று காட்ட முயலும் பிள்ளையான் சரி, அரசியலில் அழுகு தொழு நோயாளியாக விளங்கும் ஆனந்தசங்கரி சரி, சிந்தை கலங்கிய சித்தார்த்தனின் புளொட் இயக்கம் சரி, நாம் ஒரு பொருளாகக் கொள்ள முடியாத விலை போன இயக்கங்கள். அவர்களை நாம் ஒரு பொருளாகக் கொண்டு நாம் திறனாய்வு செய்வது எம் நேரத்தை வீணாக்குவதாகும்.

கஜேந்திரகுமாரையும், கஜேந்திரனையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடைபெற்ற தேர்தலில் அரசியல் தெளிவோடும் கொள்கைக் கோட்பாடோடும் தேர்தலில் குதித்த போதும் அன்று நிலவிய அரசியல் நெருக்கடி காரணமாக தோல்வியைத் தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டது. இவர்கள் இருவரையும் உள்வாங்கிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பின் இன்று நிலவும் தடுமாறும் தன்மையையும் தடம் புரளும் தன்மையையும் தவிர்த்திருக்க முடியும். தமிழினத்தின் சாபக்கேடு இவ்விரு கட்சிகளின் மோதலுக்கு வழி வகுத்தது. நடந்தது நடந்தவையாக இருக்க இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில் கேள்விக் குறியுடன் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழினத்தை காட்டிக் கொடுக்கும் என்று நாம் கூறவில்லை. முன்னே கூறிய காட்டிக் கொடுப்பவர்களோடு இவர்களை இணைக்க நாம் விரும்பவில்லை.

கை விடும் கணவனும் பலவீனமான கணவனும் பயனற்றவர்களே

ஒரு குடும்ப வாழ்வில் தன் மனைவியைக் கைவிடுகின்ற கணவன் சரி, தன் மனைவியின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத கணவன் சரி, முடிவில் தன் மனைவியைக் கைவிட்டதாகவே கொள்ளப்படும். A betraying husband is dangerous but a weak husband is equally bad. எம்மைப் பொறுத்த வரையில் தன் மனைவியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றமுடியாத பலவீனமான கணவனாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்சி அளிக்கிறது. கைவிட்ட கணவன் சரி, தன் மனைவியின் தேவையை நிறைவு செய்யமுடியாத கணவன் சரி, பயனற்றவர்களாகத் தான் கொள்ளப்படுவர். நெருக்கடிக்கு ஈடு கொடுக்கின்ற ஒரு தலைவன் அல்லது இயக்கம் தான் இன்று எமக்குத் தேவை . நெருக்கடிக்கு ஈடு கொடுக்கின்ற கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எம்மால் கணிக்க முடியாது. கட்சியின் தலைவர் ஆற்றல் வாய்ந்த வழக்கறிஞர்; வழக்கை வெல்லும் ஆற்றலும் அவருக்கு உண்டு; ஆனால் கொள்கை உறுதியோடு செயற்படும் திறன் அவருக்கு உண்டென்பதை நாம் ஏற்க முடியாது. HE IS AN ABLE ARTICULATED LAWYER WHO CAN WIN A CASE BUT we are DOUBTFUL WHETHER HE CAN WIN A CASUE . வாதத் திறமையோடு வழக்கை வெல்லும் ஆற்றல் அவருக்கு உண்டு. ஆனால் உள்ள உறுதியோடு கொள்கையில் தொலைநோக்கு சிந்தனையுடன் வெற்றி பெரும் ஆற்றல் அவருக்கு உண்டோ என்பது ஐயத்துக்குரியது. அவர் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரி, ஆவது அறிதல் நிலையில்- தொலைநோக்கு சிந்தனையுடன் செயற்படுவதாக தெரியவில்லை. இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு கட்டுப்பட்டு தொடர்ச்சியாக இயங்குகின்றனர். மகிந்த ராஜபக்ச சரி, ஆளும் சிங்கள கட்சி சரி, அல்லது எந்த சிங்கள கட்சி சரி எமது வெளிப்படையான எதிரிகள் என்பதை காலம் உணர்த்தி நிற்கிறது.

1948 ல் இருந்தே நாம் ஏமாற்றப்படுகிறோம்

1948 ல் இலங்கைக்கு விடுதலை கிடைத்ததாக சொல்லப்படினும் அது வெள்ளையர் ஆட்சிக்குப் பதில் சிங்கள ஆட்சிக்கு வழி வகுத்தது. 1920 களிலேயே சேர். பொன். இராமநாதன் , சேர். பொன். அருணாசலம் போன்ற பெரும் தலைவர்கள் சிங்கள தலைமைப் பீடத்தால் ஏமாற்றப்பட்டு, ஏக்கத்தோடு தம் வாழ்வை முடித்துக் கொண்டனர். அவற்றின் விரிவு இப்பொழுது வேண்டாம். ஆனால் 1948 தொடங்கி 2011 வரையான 63 ஆண்டுகள் சிங்கள தலைவர்களால் தமிழ்த் தலைவர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டதையே நாம் கண்டுள்ளோம். திரு. ஜி.ஜி. பொன்னம்பலம், திரு. சுந்தரலிங்கம் போன்றோர் சிங்களவர்களால் ஏமாற்றப்பட்டதோடு ஏமாறுவதற்கும் ஆயத்தமாக இருந்தனர். பதவி மயக்கத்தில் அவர்கள் செய்த காட்டிக்கொடுப்புகள் தமிழினத்திற்கு மீள முடியாத அழிவைத் தந்தது. மலையக தமிழ் மக்களை காட்டிக்கொடுத்த பொன்னம்பலத்தின் வஞ்சனையை வரலாறு மறக்காது. அரச ஆதரவோடு நடைபெற்ற சிங்கள குடியேற்றத்தைக்கூட அவர் எதிர்த்ததற்கு சான்றில்லை. மெத்தப் படித்த மேதை சுந்தரலிங்கம் 1936 தன் கணித மூளையை வைத்துக்கொண்டு தனியே சிங்களவரைக் கொண்ட அமைச்சரவை உருவாகுவதற்கு வழிவகுத்தார். இதனை pan sinhala cabinet என்று ஆங்கிலத்தில் குறிப்பர். ஆனால் இதே சுந்தரலிங்கம் தன் தவறுக்காக வருந்தி கண்ணீர் விட்டதோடு தமிழீழம் தான் தமிழனுக்கு தீர்வு என்று காலம் கடந்த நிலையில் ஞானம் பெற்றார்.

தந்தை செல்வா செய்த ஒப்பந்தங்கள்

தந்தை செல்வா தொலைநோக்கு சிந்தனையுடன் அரசியலை நடத்திய போதும் அவர் சிங்கள தலைவர்களோடு செய்த பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், சிறிமாவோ -செல்வா புரிந்துணர்வு அனைத்தும் அவர் காலத்திலேயே கிழித்து எறியப்பட்டன. இந் நிலையில் தான் தொடர்ச்சியாக சிங்கள தலைமைப்பீடத்தால் ஏமாற்றப்பட்ட நிலையில் இணைப்பாட்சியிலும் இனிய வாழ்வு காணமுடியாது என்ற முடிவுக்கு வந்த நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழீழத் தீர்மானம் தந்தை செல்வாவின் தலைமையில் 1976 ல் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்டது. அவர் இறப்பதற்கு முன்பு இறுதி உயிலாக 1976 நவம்பர் 19 ல் இலங்கைப் பாராளுமன்றத்தில் சிங்களவன் பிடியில் இருந்து நாம் விடுபடாவிட்டால் எமக்கு வாழ்வே இல்லை, எனவே எமது இறுதித் தீர்வு தமிழீழம் தான் என்பதனை ஓங்கி ஒலித்தவர் தந்தை செல்வா. தந்தை செல்வா அடிக்கடி கூறும் சொற்றொடர் "தமிழீழத்தை எந்த சிங்களவனும் வெள்ளித் தட்டத்தில் வைத்து தரமாட்டான். தமிழீழத்தை அடைவது என்பது வில்லங்கமான காரியம் தான் . ஆனால் தமிழினம் தப்பிப் பிழைக்க வேண்டுமெனில் இதை விட எமக்கு வேறு வழியில்லை" என்று கூறிய தந்தை செல்வா 1977 ம் ஆண்டு ஏப்ரல் 26 ல் தனது 79 வது அகவையில் எம்மை மீளாத் துயரில் ஆழ்த்தி உயிர் நீத்தார்.

ஜே. ஆர் - அமிர் ஒப்பந்தம்

1977 ல் ஜே. ஆர். ஆட்சிக்கு வர முற்றிலும் எதிர்பாராத நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக திரு. அமிர்தலிங்கம் பதவி ஏற்க ஜே. ஆருக்கும் அமிர்தலிங்கத்திற்குமிடையில் மாவட்ட சபை அடிப்படையில் ஒப்பந்தம் நிறைவேறியது. இவ் ஒப்பந்தம் உப்புச்சப்பற்ற மாவட்டமாக உருவெடுத்தது. இவ் ஒப்பந்தமும் உருப்படி பெறாத நிலையில் செத்தது.

இலங்கை- இந்திய ஒப்பந்தம்

பின்பு 1987 ஜுலை 29 இலங்கை-இந்திய ஒப்பந்தம் இலங்கை சார்பில் ஜே. ஆரும் இந்தியா சார்பில் ராஜீவும் கையொப்பமிட்டனர். இவ் ஒப்பந்தத்தை முதலில் எதிர்த்த நாம் சென்னை இந்து செய்தி இதழுக்கு விடுத்த அறிக்கையில் " it is a joint conspiracy by both governments ( இரு நாடுகளின் கூட்டுச் சதி) என்று குறிப்பிட்டிருந்தேன். இவ் அறிக்கையைக் கண்ட இந்திய உளவுப் பிரிவு (RAW ) சென்னையில் என் இல்லத்தில் சந்தித்த வேளையில் சீற்றத்தோடு இவ் அறிக்கையை எவ்விதம் நீங்கள் விடமுடியும் என்று கேட்டனர். அதற்கு விடையாக எமக்கு சார்பாக இதில் ஒன்றும் இல்லை என்று கூறிய நான் ஒப்பந்தத்தின் முன்னுரையில் மட்டும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணம் தமிழரின் வரலாற்றுத் தாயகம் என்ற கூற்றினை மட்டும் வரவேற்பதாக குறிப்பிட்டேன். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவீர்களா என்று கேட்டதற்கு ஆம் என்று பதில் கூறினார்கள். ஆனால் இப்பொழுது 24 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் வட கிழக்கு மாகாணம் திட்டமிட்டு சிங்கள அரசினால் சிங்கள நீதிபதியின் தீர்ப்பின் அடிப்படையில் துண்டாடப்பட்டபோதும் திட்டமிட்ட அமைதியை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மாநிலங்களுக்கான ஒன்றியம்

பின்பு சந்திரிக்கா ஆட்சியில் UNION OF REGIONS ( மாநிலங்களுக்கான ஒன்றியம்) மசோதா கொண்டுவரப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் மாநிலங்களுக்கான ஒன்றியம் உருவாகுவதற்குப் பதிலாக சந்திரிக்காவின் மாமா ரத்வத்த யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி சிங்கக் கொடி ஏற்றி தமிழ் மக்களை வெளியேற்றினார்.

பிரபா- ரணில் ஒப்பந்தம்

இதை அடுத்து 2001 ம் ஆண்டு பெப்ரவரி 11 ம் திகதி எங்கள் தலைவர் பிரபாகரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தமும் காலப் போக்கில் கிழித்தெறியப்பட்டது. இவ் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட நீங்கள் இதனை உங்களால் நிறைவேற்றமுடியவில்லையே என ரணில் விக்கிரமசிங்காவை நான் பாராளுமன்றத்தில் கேட்டபோது புன்முறுவல் பூத்த நிலையில் கையை விரித்தார்.

தொடரும் இனப்படுகொலைகள்

1956 தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாட்டில் கலவரம் ஏற்பட்டது. 1958 ல் இனப் படுகொலை நடைபெற்றது. 1961 ல் சிங்களச் சட்டத்தை தமிழர்கள் பகுதியில் நடைமுறைப்படுத்த சிறிமாவோ அரசு முயன்ற போது அறப்போர் நடாத்திய தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். 1968 தமிழுக்கு சலுகை வழங்க முயன்ற போது சிறிய அளவில் கலவரம் வெடித்தது. 1977 ல் மீண்டும் இனக்கலவரம் ஏற்பட்டு தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள் . 1981 ல் தென்னாசியாவின் தலை சிறந்த நூலகமான யாழ்ப்பாண நூலகம் சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. 1983 ல் தமிழர்கள் நாட்டை விட்டு- தமிழ் மண்ணில் இருந்தும் வெளியேறும் அளவுக்கு உலகத்தின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலை

இவை அனைத்தையும் விஞ்சுகின்ற அளவுக்கு 2009 மே மாதத்தில் வன்னியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களும் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட விடுதலைப் போராளிகளும் சாகடிக்கப்பட்டனர். ஸ்ரீலங்காவின் இவ் இனப்படுகொலைக்கு இந்தியா தலைமையில் 20 நாடுகள் துணை நின்றன. இனப் படுகொலை ஒட்டிய விபரத்தை நாம் விரிக்கத் தேவையில்லை. சனல்-4 ன் ஆவணக்காட்சியான இலங்கையின் கொலைக்களம் ( Sri Lanka 's Killing Fields ) பார்த்து விபரங்களை அறிந்து கொள்ளவும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவு

இக் கொடூர பின்னணியில் 2010 ல் நடைபெற்ற தேர்தலில் தென்பகுதியில் சிங்களவர் தலைவராக மகிந்தா தெரிவு செய்யப்பட்டார். தமிழர்கள் வேறு வழியற்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்தனர். அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் உத்தியோகபூர்வமாக 8 பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. உத்தியோகப்பற்றற்ற நிலையில் எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்ததோ நாம் அறியோம். இப் பேச்சுவார்த்தைகளில் அதிகாரப் பரவல் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. வட-கிழக்கு இணைப்பு மறக்கப்பட்டுள்ளது. 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துக என்று ஸ்ரீலங்கா அரசை இந்திய அரசு கேட்டுள்ளது. இதை மறுத்த சிங்கள அரசு காணியையும் காவற்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாதென வெளிப்படையாக கூறுகிறது. எட்டுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் பலருக்கே என்ன பேசப்பட்டது என்பது தெரியாது. இதன் மர்மம் யாதோ? எனினும் தாம் பேசியதை ஒட்டி மகிந்த அரசு ஒரு அறிக்கை தரவேண்டும் என்று சம்பந்தர் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்கிறது. மகிந்த அரசோ பேச்சு வார்த்தையின் குறிப்பை எழுத்தில் தருவதாக கூறிய நிலையிலும் தட்டிக்கழிக்கிறது. மகிந்த அரசு தாம் ஒரு தெரிவுக் குழுவை அமைத்து தீர்வு காணப் போவதாகக் கூறுகிறது. ஏமாற்றியது போதும் இனியும் ஏமாற்றாதே, தெரிவுக் குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. தமக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை அற்ற நிலையிலும் வல்லரசுகளின் நிர்ப்பந்தம் காரணமாகவும் இந்தியாவின் நெருக்குதல் காரணமாகவும் தாம் விரும்பாத நிலையிலும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து கலந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.

எம்மைப் பொறுத்தவரையில் தமிழினத்தை உங்களால் காப்பாற்றமுடியாவிடினும் மேலும் தமிழினத்தை படுகுழியில் தள்ளாது பேசியது போதும் என்ற நிலையில் வெளியே வாருங்கள். டக்லஸ், கருணா போன்ற கயவர் கூட்டம் பாராளுமறத்தில் தலைதூக்காதிருக்க நீங்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் இருந்து எமக்காக குரல் எழுப்புங்கள். பாராளுமன்றத்துக்கு உள்ளே நாம் முன்பு செய்தது போல் உலகின் கவனத்தை ஈர்க்கின்ற முறையில் ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றை செய்யுங்கள். மாவை

சேனாதிராஜா கூறியதற்கமைய மக்கள் ஆட்சி அடிப்படையில் அறப்போரை நடத்துங்கள். பாராளுமன்றத்தில் வெட்டி விழுத்தி வேலியோடு சாய்ப்பதற்கு உங்களுக்கு ஒன்றும் இல்லை எனிலும் யார் பாராளுமன்றத்தில் இருக்கிறார் என்பதற்கு மேலாக யார் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் இப்போதைக்கு பாராளுமன்றத்தில் உங்கள் பணி தொடரட்டும் . சூழ்நிலை மாறும் போது புதிய சிந்தனைகள் உருவாகக் கூடும். தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தின் பங்களிப்பு பெரிது. ஈழத் தமிழர் இன்னல் நீங்க இணையத்தோடு இணையுங்கள். நாடு கடந்த தமிழீழ அரசு உங்களுக்கு பக்க துணையாக அமைய உலகெங்கும் உங்கள் பரப்புரையை தொடருங்கள். உடனடியாக தமிழக முதல்வரையும் தமிழக அரசையும் திரண்டு வரும் தமிழக மக்களின் சக்தியையும் உங்கள் சார்பில் குரல் எழுப்ப வையுங்கள். தமிழகம் ஈழத்து மக்கள் சார்பில் தொடர்ந்து ஓங்கிக் குரல் எழுப்பின் டெல்லி நீண்ட நாட்களுக்குத் தட்டிக் கழிக்க முடியாது. கட்சி கடந்த நிலையில் தமிழகத் தலைவர் அனைவரும் உங்களுக்குத் துணை நிற்க ஆயத்தம் என்று அறியத் தந்துள்ளார்கள். உலகம் எம் சார்பில் கருத்துத் தெரிவிக்கின்ற சூழல் உருவாகிக்கொண்டிருகிறது. இந்த சூழலை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டியது உங்களது கடமையாகும். வேறு வழியற்ற நிலையில் நீங்கள் தான் ஏதாவது செய்வீர்கள் என்று தமிழினம் எதிர்பார்க்கின்றது. நம்பிய தமிழினத்தை நடுக் கடலில் தத்தளிக்க விடாதீர்கள்.

மா. க. ஈழவேந்தன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (இலங்கை)

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடாப் பேராளர்

mkeelaventhan@gmail.com தொலைபேசி : 416.519.7165

http://www.sankamam.com/beta/index.php/eela-thokupukal/tamilan-voice/tamilan-voice-outside/6996-2011-07-11-06-07-58.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசீயக் கூட்டணி, நிமிர்ந்து நடந்து, நீண்ட காலங்களாகி விட்டது!

இன்றைய கால கட்டத்தில், அது மீண்டும் தவழ்கின்றது!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.