Jump to content

ஈழப் போர் தந்த சாபங்கள்- உண்மைச் சம்பவம்!


Recommended Posts

இருபத்தியிரண்டு ஆண்டுகளாக உலக அரங்கில் விடுதலை கோரிய நாடு ஒன்று, இன்றைய கால கட்டத்தில் தென் சூடான் எனும் நாமத்தோடு சுதந்திரக் குழந்தையாகப் பிறந்திருக்கிறது. முப்பது வருடத்திற்கும் மேலான ஆயுதப் போராட்டத்தில்- உலகின் பல விடுதலை அமைப்புக்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டியவர்கள் எனச் சொல்ல்லப்படும் ஈழத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று அமைப்பு- வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதுமின்றி வேரோடு வெட்டிச் சரிக்கப்பட்டிருக்கிறது.

தென் சூடானில் ஈழத்தினைப் போலப் பல்வேறு சிறு சிறு பிரிவினைவாதக் குழுக்கள்- துணைக் குழுக்கள் இல்லாமையும், சுய நலம் கலந்த மக்கள் இல்லாது பொது நலத்தோடு போர் செய்து விடுதலை எனும் நாமத்தைத் உயிரணுவில் ஏற்றி வாழ்ந்தோரும் வாழ்ந்ததால் தான் இவை சாத்தியப்பட்டது எனலாம். இத்தோடு உலக வல்லாதிக்கத்தின் அரவணைப்பும் அவர்களின் சுதந்திரப் பிறப்பிற்கு படிக்கற்களாக அமைந்திருக்கிறது.

ஈழப் போர் எம் இடத்தில் பல வெளித் தெரியாத- வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற முடியாத- கொடூரமான விடயங்களையும் மறைவாக விட்டுச் சென்றிருக்கிறது. ஈழத்தில் வாழ்வோரும் சரி, ஈழத்துக்காக வாழ்கிறோம் என்ற கோட்பாட்டுடன் ஈழத்திற்கு அப்பால் வாழ்வோரும் சரி அடிக்கடி போராட்டம் என்கின்ற விடயத்தில் ஆளாளுக்கு வேறுபடும் மனோ நிலைகளைக் கொண்டிருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதன் ஒரு வடிவம் தான் நான் கீழே உங்களோடு பகிரவிருக்கும் ஒரு சம்பவம்.

வெளி நாட்டில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர் ஒருவருக்கு - ஈழத்தின் வடபகுதியில் வசிக்கும் படித்த அழகிய மணமகள் தேவை எனும் நிலை உருவாக, எங்கள் வீட்டிற்கு அண்மையில் உள்ள ஆறுமுகம் எனும் கல்யாணப் புரோக்கரைத் தொடர்பு கொண்டார்.

மாப்பிளைக்குப் பொருத்தமாக அவரது ஊரான வட்டக்கச்சியினைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படத்தைஅனுப்பியதும், அவரும் ஓக்கே சொல்ல- புரோக்கரும் ஜாதகத்தினைப் பார்த்து- டபுள் ஓக்கே- இனிமேல் சம்பந்தம் பேசி முடிக்க வேண்டும் எனும் நிலையில் மாப்பிளை- பெண் வீட்டார் பகுதியினை ஒன்றாகச் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.

எங்கிருந்தோ புற்றீசல் போல மாப்பிளையின் உளத்தில் ஞானோதயம் கிட்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். திடீரென வெளி நாட்டவர் ஆறுமுகம் புரோக்கருக்கு போனைப் போட்டார்.

வெளி நாட்டவர்: ஆறுமுகம் அண்ணை; பொம்பிளை இறுதி யுத்தம் வரைக்கும் வன்னியில் தானே இருந்திச்சு.

புரோக்கர்: ஓம் தம்பி.

வெளிநாட்டவர்: அப்படியென்றால் ஐயா. யுத்தத்திற்குப் பின்னர் அவள் அகதிகள் தடுப்பு முகாமில் தானே இருந்திருக்க வேண்டும்.

புரோக்கர்: ஓம் தம்பி. எல்லாச் சனமும் அகதிக் காம்பிலை இருந்ததுகள் தானே.

வெளிநாட்டவர்: அப்படியென்றால், அவள் ஆமிக்காரங்க கூடப் படுக்காமல் இன்றும் கற்போடு இருக்கிறாள் என்று நிரூபிக்க முடியுமோ?

புரோக்கர்: என்ன தம்பி நீங்க இப்படிச் சொல்லுறீங்கள்? அவள் நல்லாப் படிச்ச- ஒரு டீச்சர்.

நல்ல தங்கமான பிள்ளை அவள். நான் கூட அவளை வவுனியா நலன்புரி முகாமில் பார்த்திருக்கிறேன். பொட்டை(பெண்) தாயாக்கள் கூடத் தான் இருந்திச்சு.

வெளிநாட்டவர்: எனக்கு அந்தக் கதையெல்லாம் தேவையில்லை. இங்கே வெளிநாட்டிலே வன்னியில் போர்க் காலத்தில் இருந்த பொம்பிளையளைக் கலியாணம் கட்டினால் மதிக்கமாட்டாங்கள் ஐயா.

அதாலை எனக்கு இந்தக் கலியாணம் வேண்டாம். அத்தோடு வன்னி இறுதி யுத்தத்தின் பின்னர் முகாமில் இருந்த பெண்களைப் பற்றி இங்கே ஒரு மாதிரியாகத் தான் பேசுறாங்க. எனக்கு இந்தக் கலியாணத்திலை விருப்பமில்லை.

புரோக்கர்: நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்கள் தம்பி...வையடா போனை....................................மவனே...........அவள் எனக்குத் நன்றாகத் தெரிந்த பிள்ளை. அவளைப் போய் நீ தப்பாகப் பேசுறியே ராஸ்கல்.... கட்...கட்.......கட்...

மேற்படி சம்பவம் யாழ்ப்பாணத்திற்கும்- வன்னிக்கும் என மாறி மாறி ஓடித் திருமணப் பொருத்தங்களை மேற்கொள்ளும் ஆறுமுகம் புரோக்கரால் அண்மையில் எனக்குச் சொல்லப்பட்ட விடயங்கள்.

இந்தச் சம்பவத்தில் வரும் வெளிநாட்டு நபர், மூச்சிலும் பேச்சிலும் ஈழ விடுதலையினை நேசிக்கும் ஒரு நபர். அத்தோடு ஈழம் பற்றிய செய்திகள் முதற் கொண்டு போராட்ட விடயங்கள் வரை பகிரும் முன்னணித் தமிழ் இணையத் தளம் ஒன்றின் சொந்தக்கார். இவர்களின் நடவடிக்கைகள் ஈழம் என்பது இவ்வளவு அவலங்களின் பின்னரும் ஒரு வியாபாரப் பொருளாகத் தான் இவர்கள் பார்வையில் இருக்கிறது என்பதனை உணர்த்தி நிற்கிறது எனலாம்.

ஈழப் போர் இப்படி எத்தனை வெளித் தெரியாத சாபங்களை எங்கள் சகோதரிகளிற்கு கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது.

தீயில் எம் தேசம் கருகையில்

திரை மறைவில்

தீக்கதிர்கள் வாங்கி

பாயில் சுருட்டி மறைதனுப்பினீர்கள்

மூச்சில் முழு மனதாய்

நாமம் ஈழம் எனச் சொல்லி

மகிழ்ந்திருந்தீர்!

இன்றோ காட்சிகள் யாவும்

கலைந்த பின்னர்;

திரை விலகிக் கொள்ள

சண்டைப் படங்கள் பற்றிய

சத்தங்கள் ஓய்ந்து விட;

சல்லாபம் பற்றிப் பேசுகீறிர்- எம்

சோதரிகள் கற்பிற்கு

நிறுத்தற் படி கேட்கின்றீர்!

விடுதலையின் பெயரால்

விபச்சாரம் செய்தோரே

விடுதலைக்கு எம்மை வீழ

வைத்த பெருச்சாளி கூட்டமே

போதும்! போதும்! இனிமேல்

பேச எம்மிடம் ஏதும் இல்லை!

எஞ்சியுள்ளோராவது

ஏகாந்த பெரு வெளியில்

வாழ்ந்து தொலையட்டும்

விட்டு விடுங்கள்!!

http://www.thamilnattu.com/2011/07/blog-post_10.html

Link to comment
Share on other sites

படத்தை தாங்கோ நான் கட்டுகின்றேன்,இல்லை எனது மகனுக்கு கட்டிவைக்கின்றேன் என பச்சை புள்ளிக்கு இஞ்சை கொஞ்சப்பேர் அடிபடபோகினம்.

Link to comment
Share on other sites

இந்த கதை மூலம் தாயக மக்களை நேசிப்பவர்கள் அதை உண்மையாக செய்யவேண்டும் என்பதே பொருளாக தெரிகின்றது. இந்த சம்பவம் ( உண்மைக்கதை) ஒரு துயர் நிறைந்த சமூகத்தின் தொடரும் துன்பியலின் ஒரு அங்கம்.

ஏமாற்றுபவர்கள் எல்லா இடமும் தான் உள்ளனர்.

ஆனால், தாயக மக்களின் விடுதலையை நேசித்த ஒருவர், அந்த துன்பத்தில் தானும் திருமணம் மூலம் பங்கெடுக்க நினைத்திருக்கின்றார். அது பாராட்டப்பட வேண்டிய விடயம். ஆனால், அவரோ ஏதோ ஒரு காரணத்திற்காக பின்னர் குழப்பம் அடைந்துள்ளார். அதனால் அவர் தவறு இழைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கான ஒரு ஈழவிடுதலைவிரும்பி இக்காரியத்தை செய்திருக்கவே மாட்டான்.இது நிச்சயம்,நிஜமானது.

நாய்க்கு எங்கு அடிவிழுந்தாலும் காலைத்தூக்கி நொண்டிநொண்டி நடப்பது போல்.........அன்று தொடக்கம் இன்று வரைக்கும் புலியையே குற்றம் சாட்டி வயிற்ரைகழுவும் அரைகுறைகளுக்கு பிறந்த செல்வனாய்த்தானிருக்கும் :lol: .இதுவும் நிச்சயம்,நிஜமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவர்: எனக்கு அந்தக் கதையெல்லாம் தேவையில்லை. இங்கே வெளிநாட்டிலே வன்னியில் போர்க் காலத்தில் இருந்த பொம்பிளையளைக் கலியாணம் கட்டினால் மதிக்கமாட்டாங்கள் ஐயா.

அதாலை எனக்கு இந்தக் கலியாணம் வேண்டாம். அத்தோடு வன்னி இறுதி யுத்தத்தின் பின்னர் முகாமில் இருந்த பெண்களைப் பற்றி இங்கே ஒரு மாதிரியாகத் தான் பேசுறாங்க. எனக்கு இந்தக் கலியாணத்திலை விருப்பமில்லை.

அந்த வெளிநாட்டவரின் வாழ்வை அலசிப்பார்த்தால்............... தான் தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருக்குலைந்த எமது தேசத்தில்,

கருக்கட்டும் சாபங்கள் இவர்கள்!

செருக்குற்றுத் திரியும், இவர்களை,

நெருப்பாக மாறி எரிக்கட்டும் பெண்மை!

செருப்பெடுத்து அடிக்கட்டும், இவர்களை!

ஆரம்பமே இப்படியெனில், எவ்வளவு,

கோரமாய் அமைந்திருக்கும், அவள் வாழ்வு?

சோரம் போகாமல் தப்பினாள்!

ஆறுமுகம் கொடுத்த நெத்தியடி,

சேறாகப் பதியட்டும், அவன் முகத்தில்!!!

இணைப்புக்கு நன்றிகள் வீணா!

Link to comment
Share on other sites

நன்றிகள்

Link to comment
Share on other sites

இந்த மாப்பிள்ளை பருவாய் இல்லை. அங்கை போய் திருமணம் என்று போலி நாடகம் ஆடிவிட்டு வர வில்லை. எத்தனியோ பேர் இந்தியாவில் உட்பட மணம் செய்துவிட்டு பிடிக்க வில்லை எண்டு விட்டுவிட்டு வந்து இருக்கிறார்கள். முதல் திருமணமான பெண்ணையே முழுதாக டிவோர்ஸ் செய்யாமல் புதிது புதிதாய் கல்யாணம் செய்து இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை நன்மையாகத்தான் பார்க்கின்றேன்

ஒரு அப்பாவிப்பெண் தப்பி விட்டாள் என்பதற்காய்................

Link to comment
Share on other sites

நான் இதை நன்மையாகத்தான் பார்க்கின்றேன்

ஒரு அப்பாவிப்பெண் தப்பி விட்டாள் என்பதற்காய்................

மெத்தச்சரி.

உண்மையாக தாயகத்தை நேசிக்கும் ஒருவன் இப்படி செய்ய மாட்டான்.

வெளிநாட்டில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்று கிளறினால் வண்டவாளம் வெளியில் வரலாம்.

ஆதிப்பன் சொன்னது போல் இப்போது ஊரில்/இந்தியாவில் போய் கல்யாணம் செய்த கையோடு, நகை, நட்டுகள், காசுடன் கம்பி நீட்டியாதாகவும் கதைகள் இருக்கின்றன. வெளிநாடு என்ற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு சிலதுகள் செய்யும் அட்டகாசம் தாங்கமுடிவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.