Jump to content

ஒரு கணவருக்கு 3 பெண்கள் சொந்தம் கொண்டாடும் அதிசயம்


Recommended Posts

நான்தான் உண்மையான மனைவி என்கிறார்கள், சென்னையில் ருசிகர வழக்கு

ஒரு கணவருக்கு 3 பெண்கள் சொந்தம் கொண்டாடும் அதிசயம்

ரூ.1 கோடி சொத்துக்காக குடுமிபிடி சண்டை

சென்னை, ஜன.14-

ஒரு கணவருக்கு 3 பெண்கள் நான்தான் அவருடைய மனைவி என்று சொந்தம் கொண்டாடும் அதிசய வழக்கு சென்னை நகர போலீசில் விசாரணையில் உள்ளது. ரூ.1 கோடி சொத்துக்காக அவர்களிடையே இந்த குடுமி-பிடி சண்டை நடக்கிறது. இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதில் போலீசார் தலையை பிய்த்தபடி உள்ளனர்.

அதிசயம்

சென்னை நகரில் காலியாக கிடக்கும் நிலங்களை புரோக்கர்களும், ரியல் எஸ்டேட் அதிபர்களும் போட்டி போட்டு கொள்ளை அடித்து வருகிறார்கள். சொத்துக்களை அபகரிப்பதில் உறவினர்களே போட்டிபோடும் நிலை உள்ளது. தந்தை, பிள்ளைகளை ஏமாற்றுகிறார், பிள்ளைகள் பெற்றோரை ஏமாற்றுகிறார்கள், மனைவியே கணவரை ஏமாற்றும் அவலநிலையும் உள்ளது. இங்கே 42ஆண்டுகளாக கணவர் ஒருவர் காணாமல் போன நிலையில் சொத்துக்காக, அவருக்கு மனைவி என்று வயதான பெண்கள் 3 பேர் உரிமை கொண்டாடுகிறார்கள். கணருக்குரியவர் காணாமல் போனதால், அவர் வந்து தனது மனைவி என்று அடையாளம் காட்டமுடியாது என்ற நிலை இருப்பதால், இந்த போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ருசிகர வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

42 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூளைமேடு ஐரோட்டில் நானாஆசாரி என்ற நகை செய்யும் தொழிலாளி வசித்து வந்தார். இவரது உண்மையான மனைவி பெயர் சேதுபாய் என்பதாகும். இவர் வசித்த ஓட்டு வீடு 3 கிரவுண்டு சொந்த இடத்தில் இருந்தது. அந்த நேரத்தில் அந்த பகுதியில் நானா ஆசாரி பிரபலமாக வாழ்ந்தார். திடீரென்று அவர் காணாமல் போய் விட்டார். அவர் என்ன ஆனார், உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாகவே உள்ளது.

வாழ்ந்த பெண்

நானாபாய் காணாமல் போன பிறகு அவருடைய மனைவி சேதுபாய் என்று சொல்லிக்கோண்டு அவருடைய வீட்டில் ஒரு பெண் வாழ்ந்து வந்தார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டுவரை இந்தப் பெண்தான் நானா ஆசாரியின் உண்மையான மனைவியாக காட்சி தந்தார்.

கடந்த ஆண்டு திடீரென்று அவர் தான் வாழ்ந்த நானாபாயின் வீட்டில் காலிமனையாகக்கிடந்த நிலத்தில் முக்கால் கிரவுண்டு இடத்தை விற்றுவிட்டார். அதோடு நின்றால் பரவாயில்லை. மீதி 2 கிரவுண்டு இடத்தோடு இருந்த வீட்டை ராமலிங்கம் என்ற கட்டிட காண்டிராக்டருக்கு கொடுத்து, அதில் பல அடுக்கு மாடி கட்டிடம் கட்டி விற்று அதில் கிடைக்கும் பணத்தை, இருவரும் பங்கு போட்டுக் கொள்ள ஒப்பந்தம் போட்டிருந்தனர். இதன் பிறகுதான் பிரச்சினை வெடிக்க ஆரம்பித்தது.

ரூ.1 கோடி மதிப்பு

ஒப்பந்தம் போடப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும். இந்த நிலம் இப்போது 3 பெண்களின் குடுமிபிடி சண்டையில் சிக்கி தவிக்கிறது. காணாமல் போன நானாபாய் கூட இப்போது திரும்பி வந்தால் நொந்து போய் விடுவார். நான்தான் நானாபாயின் உண்மையான மனைவி சேதுபாய் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். நிலத்தை விற்ற சேதுபாய் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். இன்னொரு சேதுபாய் வடபழனியில் வசிக்கிறார். 3-வது சேதுபாய் வசிக்கும் இடம் தெரியவில்லை.

இவர்கள் 3 பேரும் சொத்துக்கு சொந்தம் கொண்டாடி, போலீஸ் கமிஷனர் நடராஜிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் உள்ளது. துணைகமிஷனர் மாரியப்பன், உதவிகமிஷனர் அன்புமொழி, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். முதலில் நுங்கம்பாக்கம் போலீசார்தான் இந்த வழக்கை விசாரித்தார்கள். ஆனால் அவர்களால் வழக்கை தீர்க்க முடியாமல் கைவிட்டு விட்டனர். இப்போது இந்த வழக்கை தீர்க்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

உயில் எங்கே?

காணாமல் போவதற்கு முன்பு நானாபாய் தனது நிலம் மனைவி சேதுபாய்க்குத்தான் சொந்தம் என்று உயில் எழுதி வைத்துள்ளார். அந்த உயில் யாரிடம் இருக்கிறதோ, அந்த பெண்ணிடம் சொத்தை ஒப்படைக்கலாம் என்று போலீசார் முடிவு செய்தனர். உயில் ஒரு பெண்ணிடம் உள்ளது. ஆனால் உயில் போலியானது என்று உயில் கையில் இல்லாத மற்ற இருவரும் சொல்கிறார்கள். காணாமல் போன நானாபாய்க்கு 3 மகன்கள் இருப்பதாக ஒரு புதிய கதையும் சொல்லப்படுகிறது. 3 மகன்களையும் அழைத்து உங்களின் உண்மையான தாய் யார் என்று விசாரித்து அதன் மூலம் பிரச்சினையை தீர்த்து விடலாமா என்றும் போலீசார் யோசித்து வருகிறார்கள். அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

எப்படியாவது உண்மையான சேதுபாயை கண்டுபிடித்து சொத்தை ஒப்படைக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். காணாமல் போன நானாபாயே திரும்பி வந்தால்தான் இதில் பிரச்சனை தீரும் என்று போலீஸ்காரர் ஒருவர் நகைச்சுவையோடு கூறினார். அதில் கூட போலி நானாபாய் வந்து விடுவார் என்று இன்னொரு போலீஸ்காரர் பதிலுக்கு ஜோக் அடித்தார். எப்படியோ இந்த பிரச்சினை தீர்ந்தால் போதும் என்று போலீசார் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Dailythanthi

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.