Jump to content

யாழ் தளத்தினை மூடி விடுதல்??????????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையின் மேற்கோளுக்கு, நெல்லையின் பதில் என்ன?

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

..... யான் பெறா இன்பம், வையகமும் பெறாமால் ..... என்று தயவு செய்து திட்டித் தொலைக்காதீர்கள்!

இரண்டு வருடங்களுக்கு முன் யாழில் மோகன் இட்ட இத்திரியை பார்க்க நேர்ந்தது. ... உண்மைதான் ஒருவனின் பணத்தில் எல்லாவித கூத்துக்களும்(நான் உட்பட) ... தேவைதானா????

அதற்கு மேல் தமிழில், தமிழில், தமிழில் எழுதி ... என்னத்தை சாதித்தோம்?

மேலும், நாம் இங்கு கொட்டும் சில தகவல்கள் ... எம் இனத்தின் களைகளுக்கும், சிங்களத்துக்கும் தீனி தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறது?

.....

ஆகவே, என் கருத்து ... யாழை நிரந்தரமாக மூடுவதினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதே. இக்களம் மூலம் நல்ல நண்பர்களையும் தேடினோம், நிரந்தர எதிரிகளையும் தேடினோம். கிடைத்த நண்பர்களை தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை பேணலாம்.

உங்கள் கருத்துக்கள் .....

Link to comment
Share on other sites

இரண்டுவருடங்களுக்கு முன்பு யாழில் மோகன் அண்ணா.

எதிர்பார்த்த நோக்கங்கள், இலக்குகள் முழுமையாக அடைய முடியாமையாலும், சரியான முறையில் யாழ் இணையம் பயன்படுத்தப்படாது வெறும் விதண்டாவாதங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும், அலட்டல்களும் இன்னும் வேண்டத்தகாத பல விடயங்களினாலும் மற்றும் எது வேண்டுமானாலும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற மனப்போக்கும், விபரீதமான கருத்துக்களை நீக்கும்போது புரிந்துணர்வற்ற தன்மையில் கள உறுப்பினர்கள் இருப்பதாலும் களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன். அதனால் யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா என்ற ஒரு நிலையினை எடுக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது.

......

.........

.............

முதற் கட்டமாக

- களத்தின் பல கருத்துப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளது.

- புதிய அங்கத்துவ பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

மோகன்

*****************************************************************************************************************************************************************************************************

இப்பொழுது யாழில் மோகன் அண்ணா

வணக்கம், உங்களை யாழ் கருத்துக்களம் அன்புடன் வரவேற்கின்றது!

நீங்கள் இன்னமும் கருத்துக்களத்தில் இணைந்து கொள்ளவில்லையா? உங்களை நீங்கள் இங்கு இணைத்துக் கொள்வதன் மூலம் கருத்துக்களத்தில் மற்றவர்களுடன் உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களைப் பதிந்து கொள்ளலாம். அத்துடன் ஏனைய கருத்தாடல்களில் பங்குபற்றி உங்கள் கருத்துக்களை வைக்கலாம்.

உங்களை நீங்கள் மிக இலகுவாக இங்கே பதிந்து கொள்ள முடியும். இது முற்றிலும் இலவசம்.

பதிந்து கொள்ள மேலே New user? Register என்பதில் அழுத்திப் பதிந்து கொள்ளுங்கள்.

பதிவதில் சிரமங்கள் இருப்பின் அறியத் தாருங்கள்.

http://www.yarl.com/contact

…………………………………………………………………………………………………….................................................................................................................................................

இரண்டு நாட்களுக்கு முன் நெல்லை

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்பொழுது நெல்லை

... இங்கு நான் சில கேள்விகளை முன் வைத்தேன். ஏன் யாழை தொடர வேண்டும்? ... இந்தக் கேள்விகள் கேட்டதற்கு ... நெல்லைக்கு நேற்று .. இவன் என்ன எல்லோரையும் கேள்வி கேட்பது, இவன் கண்டிப்பாக சீன/யஷ்யா உளவாளியாகத்தான் இருக்க வேண்டும்! என்ற இன்னொரு திரிக்கு மேல் ... நெல்லை ஓர் துரோகி!!!!!!!!!!!??????????

ஒருவன் பதினொரு வருடமாக இந்த யாழை தன் செலவில் ... நானும் ஏறக்குறைய அத்தனை வருடம் பார்க்க தொடங்கி ... பத்து வருடங்களாக குப்பையும் கொட்டுகிறேன்!!! ... இன்றுவரை நாம் பொழுது போக்க ...!!!! ... யாராவது ஒருவர், இதற்கு எவ்வளவு செலவு போகிறது? இச்செலவை எவ்வாறு பகிரலாம்? சரி, அவன்பாவி தனிநபர்களிடன் வாங்குகிறான் இல்லை, அதற்கு மாற்றீடாக ஏதாவது விளம்பரங்களை எடுத்துக் கொடுத்து, அதனை சரி செய்வோம்(நான் உட்பட)???? ... ஏதாவது???????

அப்படிப் போடுங்கோ. நான் அடிக்கடி பாக்கும் தளம் எண்டால் அது யாழ் தான். வேலையில் கூட எப்பவும் ஒரு விண்டோவில் யாழ் குந்திக்கொண்டிருக்கும். எத்தினையோ நான் வேலையில் யாழை வாசிச்சு மனம் விட்டு சிரிக்க பக்கத்தில இருக்கிற வெள்ளை "what is so funny" எண்டு கேள்வி கேட்டிருக்கு. ஒருவகையில நான் யாழுக்கு அடிமையாகின மாதிரி தான். புலம் பெயர்ந்த இயந்திர சூழலில் கொஞ்சமாவது தமிழில் கதைக்க எழுத கிடைக்கும் சந்தர்ப்பம் எண்டால் அது யாழ் தான். கருத்துக் களத்தில் என்னதான் மோதினாலும் யாழில் இருக்கும் பலரையும் மிகவும் பிடிக்கும் அத்துடன் பல திறமையான, அறிவு பூர்வமா சிந்திக்கிற ஆக்களும் வந்து போற இடமா யாழ் இருக்கிறதால பலதும் பத்தும் எண்டு புது விசயங்களையும் அறியக் கூடியதாய் இருக்கு. வளர்ந்த ஆக்களும் சின்னப் பிள்ளைதனமா நடந்து கொள்ளுவது தான் மிகவும் வேதனைக்குரியது. நாங்கள் வாழப் போவதே கொஞ்சக் காலம், இருக்கும் பொது சந்தோசமாக வாழ்ந்து அனுபவித்துப் போட்டுப் போறத விட்டிட்டு இப்பிடி ஆளுக்கு ஆள் அடிபடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

மனிசனாப் பிறந்தவனுக்கு கொஞ்சம் எண்டாலும் ரோசம் இருக்கோணும், நான் எண்டால் போறன் எண்டு சொன்னால் மூடிக் கட்டிக்கொண்டு போடுவன், அத விட்டுப் போட்டு சும்மா ஆக்களுக்கு கடுப்பேத்திக்கொண்டிருக்க மாட்டன். உங்களுக்கு களவிதிகளை மத்தித்து கருத்தாட முடியவில்லையா, மற்றவர்களோடு மரியாதையாக கதைத்துப் பேச தெரியவில்லையா, இதுகளால இரவு நித்திரை வருகுது இல்லையா பேசாமல் யாழை விட்டுப் போய் விடுங்கள். இப்பிடியான திரிகளை ஆரம்பிப்பது இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதைக்கும் ஆப்பு வைக்கும் என்பதே எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலங்களாகப் புலத்தில் வாழும் எனது தமிழ் இன்னும் உயிரோடு இருப்பதற்கு, யாழ் களம் போன்ற சில களங்களே முக்கிய காரணமாகும்!

களம் என்பதன் பொருளே, போராடும் இடம் என்பதே!

கருத்துக் களம், என்பதன் அர்த்தம் ; கருத்துக்கள் மோதுமிடம்!

வகுக்கப் பட்ட விதிகளுக்கமைய கருத்து மோதல்கள் இடம் பெறும்போது, ஆரோக்கியமான விளைவுகள் ஏற்படும் என்பது எனது கருத்து!

விதிகள் மீறப் படும்போது, அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு எதிரொலிக்கும், தீர்வுகள் வரும் வரை, அதன் விளைவுகள் இருந்து கொண்டே இருக்கும்!

மனிதன் ஒரு சமூக மிருகம்!

சமூகத்தை, இழந்தவர்கள், அல்லது சமூகம் ஒன்றில் இருந்து பலவந்தமாகப் பிடுங்கி எறியப் பட்டவர்கள். ஏதோ ஒரு விதத்தில் அதைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்!

அந்தத் தேவையை யாழ் நிறைவு செய்கின்றது!

இதற்காகவாவது, யாழ் களம், வாழ வேண்டும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரு யாழ்க்கருத்துக்களப்பல்லி சொல்லியதா?... அந்தப்பல்லி எனக்குச் சொல்லேல்லையே :D

நீங்கள் சும்மா கவிதை என்று கற்பனையில மிதந்தா எல்லாம் பல்லி சொல்லாது..............

அக்கா நீங்கள்........... யாழுக்கு ஆப்பு வைப்பமா? யாரையாவது போட்டுகொடுப்போமா? என்று எதாவது நல்லதை சித்திச்சாதான் பல்லி வந்து சொல்லும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு மேல் ... தனிநபர்களின் விளம்பரங்களும், தனிநபர் தாக்குதல்களும் (நான் உட்பட), மிரட்டல்களும், சட்டங்களுக்கு முரனான செயற்பாடுகளுமே இங்கு மலிந்து போய் கிடக்கின்றன.

...

:o:o:o:D:D:D

Link to comment
Share on other sites

மல்லையின் மேற்கோளுக்கு, நெல்லையின் பதில் என்ன?

... சிறி, .. பல்லி சொன்னதாக எழுதுதினேன், புரியவில்லை? ... அதற்கு மேல் ... சொல்வதானால் ... இத்திரியை தொடங்கிய அன்றே, ஓர் மட்டு தூக்கியது, அத்துடன் வேறு சிலதுகளையும்!!!! ஆனால் நேற்று மீண்டும் ... இங்கு!!!! ... புரிந்தால் ..???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் இனியும், எங்களுக்குள் புடுங்குப்படுவது அழகல்ல.

ஒவ்வொருவரும், ஒருத்தருக்கு உறுதுனையாக இருப்பதே நன்று.

நாங்கள், அடுத்த, தலை முறையை தயார் படுத்தும் வேளையில்....

சாந்தியோ..., சாத்திரியோ..., நெல்லையனோ.... மற்றவர்களை கவலைப் படுத்தும் விதத்தில் கதைப்பது வேதனையாக உள்ளது.

நீங்கள் மூவரும் சந்தோசமாக இருந்தால் தான்....உங்களுடன் உரையாடுவேன்.

இல்லாவிட்டால்.. என்னை மறந்து விடுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

நீண்ட காலங்களாகப் புலத்தில் வாழும் எனது தமிழ் இன்னும் உயிரோடு இருப்பதற்கு, யாழ் களம் போன்ற சில களங்களே முக்கிய காரணமாகும்!

களம் என்பதன் பொருளே, போராடும் இடம் என்பதே!

கருத்துக் களம், என்பதன் அர்த்தம் ; கருத்துக்கள் மோதுமிடம்!

வகுக்கப் பட்ட விதிகளுக்கமைய கருத்து மோதல்கள் இடம் பெறும்போது, ஆரோக்கியமான விளைவுகள் ஏற்படும் என்பது எனது கருத்து!

விதிகள் மீறப் படும்போது, அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு எதிரொலிக்கும், தீர்வுகள் வரும் வரை, அதன் விளைவுகள் இருந்து கொண்டே இருக்கும்!

மனிதன் ஒரு சமூக மிருகம்!

சமூகத்தை, இழந்தவர்கள், அல்லது சமூகம் ஒன்றில் இருந்து பலவந்தமாகப் பிடுங்கி எறியப் பட்டவர்கள். ஏதோ ஒரு விதத்தில் அதைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்!

அந்தத் தேவையை யாழ் நிறைவு செய்கின்றது!

இதற்காகவாவது, யாழ் களம், வாழ வேண்டும்!!!

நன்றிகள் புங்கையூரான்! ... நிறைகுடம் தளம்பாது என்பார்கள் ... நீர் மட்டுமல்ல இங்கு நெடுக்கர், யூட், ரதி, நிழலி, தப்பிலி, நிலாமதி, சகாரா, ஹரி முக்கியமாக அகோதா இப்படி இன்னும் சிலர் எதன் கீழ் கருத்தெழுதினாலும் இப்படித்தான் கருத்துக்கள் வரும்! போட்டோம்/உடைத்தோம் என எழுதும் என் போன்றோர் போல் வராது!!!!

இத்திரியில் ... ஓர் கேள்வியே தலைப்பாக இருந்தது, மாறாக மூடுங்கள் என்ற கோரிக்கையா விடப்பட்டது???? ... ஏதோ சொல்ல வேண்டும் என்று பட்டதை மறைமுகமாக எழுதுதினேன் ... யாழை எவ்வாறு தொடர செய்யப்போகிறீர்கள் என்று?? ... மோகனின் சுமைகளையும் பகிர்ந்து கொண்டு செல்லப்போகிறீர்கள் என்று??? .... அது கூட விளங்கிக் கொள்ளப்படாமல் ... சீனா/இந்திய/ரஷ்ய உளவுத்துறையுடன் சேர்ந்தியங்கும் நெல்லை, யாழை மூட சதி ... என்றொரு திரியே வந்தது!!!!!!

... இத்திரிக்கு முன், சில வருடங்களுக்கு முன் மோகன் மூடப்போவதாக முன்னறிவிப்பு விட்டு ஓர் திரி இங்கிணைக்கப்பட்டிருந்தது. அது இப்பவும் இருக்கிறது, அதில் நெல்லை எழுதியவற்றை பார்த்தால் .... புரியும்!!!!

Link to comment
Share on other sites

நெல்லையன், உங்கள் ஆக்ரோசமான கருத்துக்களை வரவேற்பவன். விமர்சனங்கள் தேவையும் கூட. ஆரோக்கியமான விமர்சனங்கள் திட்டுவதற்கு அல்லாமல் திருத்துவதற்கே என நம்புவபன்.

அதைவிட நீங்கள் நல்ல கலை ஆர்வலரும் கூட.

உங்கள் ஆதங்கத்திற்கான உரையாடலை நான் பார்க்கவில்லை.

அதற்காக யாழை மூடுவதோ அல்லது நீங்கள் யாழை விட்டு விலகுவதோ இதற்கு பரிகாரமில்லை. மன அழுத்தத்தைத்தான் தரும். சில கெட்ட நிகழ்வுகளை மறந்து விடுதல் நல்லது.

இந்த சம்பவங்கள் யாழ் கள உறவுகளையும் மிகவும் பாதித்து இருக்குமென நினைக்கிறேன். சகலத்தையும் மறந்து ஒற்றுமைப்படுங்கள்.

இதில் சம்பந்தப்பட்ட உறவுகள் சாந்தி, சாத்திரிக்கும் இதே வேண்டுகோள்தான். உங்கள் உதவிகளை எதிர்பார்த்துப் பலர். இந்தக் கஷ்டமான சூழ்நிலையில் அவர்களுக்குச் நீங்கள் செய்யும் பணியை வரவேற்கிறேன்.

எல்லோரும் கருத்தில் வேறுபட்டாலும் ஒற்றுமையாக இருங்கள்.

இவை எனது தனிப்பட்ட வேண்டுகோள் மாத்திரமே.

Link to comment
Share on other sites

உங்கு தலைப்பு இட்டதற்கு பின்னம் மடல்கள் வந்து குவிகின்றன ... கண் கொடுத்து பார்க்க முடியவில்லை ... சிலதுகளை ...

36_1_19.gif

Link to comment
Share on other sites

நெல்லையான்,

முன்பு உம்முடைய எழுத்தெல்லாம் பிடித்திருந்தது, ஆனால் நீங்கள் இப்ப போட்ட யாழை மூடுகிறது தொடர்பானதோடு உங்களை கண்ணில் காட்ட இயலாமல் இருக்குது. நீங்கள் தொடருவீர்களாயின், நாங்கள் பின் லாடன், பூலாந்தேவியுடன் கூட்டு சேர்ந்து இலட்சத்தை மில்லியன் கணக்கில் கேட்க சாட்சியும் சொல்லுவம். இப்ப பின் லாடன், பூலாந்தேவியிக்கு எதிரான உம் செயற்பாடுகளால் ஆத்திரமடந்த முல்லா உமர், தலபானுகளை கிளர்ந்தெள சொல்கிறார். தலபானுகளோடு தொடர்பில்லாத நானும், உம்முடைடையது தொடர்ந்தால், சேர்ந்து உமக்கு எதிராக செயற்பட வேண்டி வரும். ஆகவே உந்தத்தலைப்பில் எழுதுவதையெல்லாம் நிறுத்தும்.

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கு தலைப்பு இட்டதற்கு பின்னம் மடல்கள் வந்து குவிகின்றன ... கண் கொடுத்து பார்க்க முடியவில்லை ... சிலதுகளை ...

தனிமடல்

4. தனிமடற் சேவை

1. கருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிமடற் சேவையினை பயன்படுத்தலாம்.

2. தனிமடற் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது.

3. (அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்)

4. தனிமடற் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.

இது தனிமடல் தொடர்பாக யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையில் உள்ளது. அனைவரும் வாசித்திருப்பீர்கள். இதுவரை வாசித்தறியாதவர்கள் கருத்துக்கள விதிமுறைகளை மறுபடியும் வாசிக்கவும்.

கருத்துக்களத்தில் அண்மைக் காலமாக தனிமடல் பிரச்சனை தொடர்பாக சில முறைப்பாடுகள் வந்துள்ளன. இவை தொடர்பாக கருத்துக்கள நிர்வாகம் சில விசாரிப்புக்களை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் நாம் சில விடயங்களை அனைவருக்கும் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

1. தனிமடல் சேவையானது கருத்துக்கள உறுப்பினர்கள் தமக்குள் நட்புப் பாராட்டுவதற்கும், கருத்துக்களம் தொடர்பான விடயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், கருத்துக்கள நிர்வாகத்தினரோடு தொடர்புகொள்வதற்குமான ஒரு சேவையாகவே அமையவேண்டும். இவை தவிர்த்து நிறுவனங்களை விளம்பரப்படுத்துவதற்கோ, வேறு இணையத்தளங்களை விளம்பரப்படுத்துவதற்கோ, எரிதங்களை (SPAM MAILS) அனுப்புவதற்கோ பயன்படுத்துதல் ஆகாது. உங்கள் இணையத்தளம் பற்றி அறியத் தர விரும்பின் - அதனை யாழ் வழிகாட்டி பகுதியில் இணைக்கலாம். யாழ் கருத்துக்களம் சாராத எந்த விளம்பரங்களுக்கும் அனுமதியில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம்.

2. உங்களின் (கருத்துக்களம் சாராத) தனிப்பட்ட பிரச்சனைகளை தனிமடலில் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். யாழ் கருத்துக்களம் என்பது கள உறுப்பினர்களிடையே பகையுணர்வை வளர்ப்பதற்கான களமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும் - எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தால் யாழ் கருத்துக்களம் என்பது அவசியமில்லை. எனவே, கருத்துக்களத்தில் ஏற்படும் கருத்தாடல் முரண்பாடு என்பது வெளியில் பகையுணர்வாக வளரக்கூடாது என்பதே எமது அவா. அப்படி வளருமானால் அதற்கு கருத்துக்கள நிர்வாகம் எவ்விதப் பொறுப்புமேற்காது. அந்தவகையில், உங்கள் "சண்டைகளுக்கு" - "பகையுணர்வுக்கு" கருத்துக்கள தனிமடற் சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம்.

3. ஒரு கருத்துக்கள உறுப்பினர்க்கு இன்னொரு கருத்துக்கள உறுப்பினர் (நிர்வாகத்தினர் தவிர) தன்னோடு தொடர்புகொள்வது விருப்பமில்லையெனின் தனிமடல் சேவையில் அவரை தடைசெய்யும் அனைத்து உரிமையும் உள்ளது.

4. கருத்துக்களம் சாராத வேறு விடயங்களை - குறிப்பாக கருத்துக்களம் சாராத உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை வேறு சேவைகளின் ஊடாக பேசிக்கொள்ளலாம். அவைபற்றி நீங்கள் அறிந்திராவிடின், சில உதாரணங்கள் இதோ: தொலைபேசி, மின்னஞ்சல் சேவை, msn messenger, yahoo messenger போன்றவைகள்.

5. யாழ் கருத்துக்களத்தில் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட விபரங்களை - உதாரணம்: மின்னஞ்சல் முகவரி - தவறான முறையில் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட விபரங்களை வெளியில் வேறு நபர்களுக்கு, நிறுவனங்களுக்கு வழங்குவது தவிர்க்கப்படவேண்டும்.

6. தனிமடல்களை பொதுக் களத்தில் இடுவதுவும் - அதுபற்றி பொதுக்களத்தில் விவாதிப்பதுவும் - தடைசெய்யப்பட்டுள்ளது. கருத்துக்கள உறுப்பினர் ஒருவர் உங்களுக்கு அனுப்பும் தனிமடலை அவரது அனுமதியின்றி இன்னொருவருக்கு (நிர்வாகத்தினர் தவிர) அனுப்புவது தவிர்க்கப்படவேண்டும்.

7. ஒரு கருத்துக்கள உறுப்பினர் பற்றி ஏனைய கருத்துக்கள உறுப்பினர்களுக்கு அவதூறான செய்திகளை, வதந்திகளை மற்றும் கோள்மூட்டல்களை பரப்புவதுவும் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.

8. தவறான முறையில் தனிமடல் சேவை பயன்படுத்தப்படுவது பற்றி அறிந்தால் கருத்துக்கள நிர்வாகத்துக்கு அறியத்தாருங்கள்.

9. தனிமடல் சேவை ஊடாக பிற கருத்துக்கள உறுப்பினர்களால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படின் அதனை நிர்வாகத்துக்கு தெரியப்படுத்துங்கள்.

10. ஆதாரமான தனிமடல்களினை உடனே அழிக்காமல் - சேமித்து வைத்து நிர்வாகத்தினருக்கு அனுப்புங்கள்.

மேற்கண்ட விடயங்களை கவனத்தில் எடுத்து அனைத்து கருத்துக்கள உறுப்பினர்களும் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22936&st=0&p=327766&#entry327766

Link to comment
Share on other sites

தனிமடல்

அண்ணா ... கிருபண்ணா! ... நான் மடல்கள் என்றேன்!! நீங்கள் தனி மடல்கள் என்கிறீர்கள்!!! ... வித்தியாசம் ...???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா ... கிருபண்ணா! ... நான் மடல்கள் என்றேன்!! நீங்கள் தனி மடல்கள் என்கிறீர்கள்!!! ... வித்தியாசம் ...???????

உங்களுக்கு அண்ணனாகும் தகுதி எனக்கு இல்லை :lol:

தனிமடல்கள் யாழில் உள்ளது. உங்களுக்கு வரும் பிரத்தியேக மடல்கள் (யாஹூ அல்லது வேறேதாவது) பிரத்தியேகமாக வைத்திருக்கவேண்டும். அவற்றையும் பொதுக்களத்தில் இட்டு தேவையில்லாத விவாதங்களை ஊதிப் பெருப்பித்து ஒரு பிரயோசனமுமில்லை.

உண்மையில் இந்தத் திரி ஏன் தொடங்கினீர்கள் என்று புரியவில்லை. யாழை மூடாவிட்டால் உங்களால் யாழைவிட்டுப் போகமுடியாது என்று உங்களுக்குப் புரிந்ததனால் என்றுதான் நான் நினைக்கின்றேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்தத் திரி ஏன் தொடங்கினீர்கள் என்று புரியவில்லை.

யாழை மூடாவிட்டால் உங்களால் யாழைவிட்டுப் போகமுடியாது என்று உங்களுக்குப் புரிந்ததனால் என்றுதான் நான் நினைக்கின்றேன். :lol:

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='கிருபன்' timestamp='1311440

உண்மையில் இந்தத் திரி ஏன் தொடங்கினீர்கள் என்று புரியவில்லை. யாழை மூடாவிட்டால் உங்களால் யாழைவிட்டுப் போகமுடியாது என்று உங்களுக்குப் புரிந்ததனால் என்றுதான் நான் நினைக்கின்றேன். :lol:

Link to comment
Share on other sites

கிருபன் அவர்களுக்கு 3 வது பாச்சை எனது...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் புங்கையூரான்! ... நிறைகுடம் தளம்பாது என்பார்கள் ... நீர் மட்டுமல்ல இங்கு நெடுக்கர், யூட், ரதி, நிழலி, தப்பிலி, நிலாமதி, சகாரா, ஹரி முக்கியமாக அகோதா இப்படி இன்னும் சிலர் எதன் கீழ் கருத்தெழுதினாலும் இப்படித்தான் கருத்துக்கள் வரும்! போட்டோம்/உடைத்தோம் என எழுதும் என் போன்றோர் போல் வராது!!!!

இத்திரியில் ... ஓர் கேள்வியே தலைப்பாக இருந்தது, மாறாக மூடுங்கள் என்ற கோரிக்கையா விடப்பட்டது???? ... ஏதோ சொல்ல வேண்டும் என்று பட்டதை மறைமுகமாக எழுதுதினேன் ... யாழை எவ்வாறு தொடர செய்யப்போகிறீர்கள் என்று?? ... மோகனின் சுமைகளையும் பகிர்ந்து கொண்டு செல்லப்போகிறீர்கள் என்று??? .... அது கூட விளங்கிக் கொள்ளப்படாமல் ... சீனா/இந்திய/ரஷ்ய உளவுத்துறையுடன் சேர்ந்தியங்கும் நெல்லை, யாழை மூட சதி ... என்றொரு திரியே வந்தது!!!!!!

... இத்திரிக்கு முன், சில வருடங்களுக்கு முன் மோகன் மூடப்போவதாக முன்னறிவிப்பு விட்டு ஓர் திரி இங்கிணைக்கப்பட்டிருந்தது. அது இப்பவும் இருக்கிறது, அதில் நெல்லை எழுதியவற்றை பார்த்தால் .... புரியும்!!!!

நன்றிகள் நெல்லைக்கு!

உங்களை நான் புரிந்து கொள்கின்றேன் நெல்லை!

பொதுவாக, உலக நியதி ஒன்று உண்டு! சில சமயங்களின், நாங்கள் அதனுடன் இணங்கியே போக வேண்டும்!

நாணல் போல வாழ்வது தான் வாழ்க்கையாகுமா? இது தத்துவம்!

ஒரு வேளை, நாணலாக வாழ்ந்திருந்தால், முள்ளி வாய்க்காலைத் தவிர்த்திருக்கலாமோ என நான் எண்ணுவதுண்டு!

இந்த உலகில், ஒரு பெண் கற்போடு, இருப்பதை விட, அவள் கற்புள்ளவள் என்று உலகை நம்ப வைப்பதில் தான் அவளது கவுரவம் தங்கியிருக்கின்றது!

உங்களைப் போன்ற, போட்டுடைக்கும் கருத்தாளர்கள் தான், யாழை வளப்படுத்துகின்றார்கள்!

சுருக்கமாகச் சொன்னால், உங்கள் போன்ற கருத்தாளரை யாழ் இழக்கக் கூடாது!

இயற்கையின் படைப்பில் சிலர் மீன்கள், சிலர் மான்கள், சிலர் பறைவைகள்!

எல்லோரும் வாழ உலகில் இடமுண்டு!!!

Link to comment
Share on other sites

... நெல்லையின் மடல் அனுப்பிகளை இடைமறித்ததில் ... இரண்டு இங்கு ...

முல்லா ஒமருக்கு ... சலாம் அழைக்கும்!

... நைனா, ஒங்க அட்டாக்குகள் பல இடங்களில் இப்போ செய்கிறீங்க. அதற்கு மேல் தலபானுகளை ஏவியும் உடுறீங்க, நிப்பாட்டுங்க நைனா! உவ கூடாது நைனா. நீங்க வயசில் மூத்தவ, மரியாதய வேன்டுரவ ... என்னை உட்டு ஒதுங்கி இருப்பது நல்லது நைனா!

ஒங்களுக்கு நாங்க ... ரண்டு நாலு சாறீஸும், இரண்டு சிஞ் சக்குகளும் அனுப்பி ஒடறேன். .. நன்றி நைனா!

அண்ணை நெல்லை,

யாழில் பலருக்கு, நீ போகப்போறது எண்டு சொன்னது பாலை வார்த்திருக்குது. நீயே போறதற்கு முன் திறத்தவும் விருப்ப்பம். போ, ஆனால் போறதற்கு முன்னுக்கு ஏதோ செய்ய வேண்டியவைகள் என்று சொன்னியே, அதை செய்து முடித்து விட்டுப் போ.

இங்கு றூல்ஸ் அன்ற் றெகுலேஷன் எல்லாம் கதைக்கினம் சிலர், முன்பு இங்கு எத்தனை மடல்கள் எத்தனை பேருக்கு அனுப்பப்பட்டது என்றதுகளும், இங்கு போடப்பட்டதுகளும் தெரியாதோ? இல்லை ஏன் அப்போ உதுகளை போடவில்லை? ... உப்படியானதுகளை கவனத்தில் எடுக்க வேண்டாம்.

களம் என்றால் சூடாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தாளமும் போட்டு, பக்கப்பாட்டும் பாடுவது களமல்ல.

நன்றியண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... நெல்லையின் மடல் அனுப்பிகளை இடைமறித்ததில் ... இரண்டு இங்கு ...

கொழுவி விட்டுவிட்டுக் கூத்துப் பார்ப்போர் மடல்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருப்பார்கள்.

உங்களால் முடிந்தளவு ஆதாரங்களுடன் எவரையும் அம்பலப்படுத்துங்கள். ஆதாரமில்லாமல் சொல்லும் கருத்துக்கள் வெறும் கிசுகிசுக்காளாகத்தான் இருக்கும், ஆனால் கிசுகிசு படிக்கவும் ஒரு கூட்டம் இருக்கின்றதுதானே. அவர்களையும் குஷிப்படுத்த ஏதாவது எழுதத்தானே வேண்டும். இல்லாவிட்டால் களம் சுறுசுறுப்பாக இருக்காது! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் விளங்காத்தனமான தலைப்பு அல்ல. நெல்லையனின் உள்நோக்கங்களைச் சொல்லும் தலைப்பாகக் கூட எடுக்கலாம்.

யாழ் களத்தை மூட வேண்டும் என்ற கருத்தை நெல்லையன் மட்டுமல்ல.. தமிழ் தேசிய உணர்வை... தமிழீழ விடுதலையை.. எரிச்சலாக நோக்கும் பலர் கொண்டிருக்கின்ற ஒன்று தான்.

நெல்லையனின் அரசியல் கருத்துக்கள்.. பல தடவைகள் ஒரு தளம்பல் நிலையில்.. சலனத்தன்மையை வெளிக்காட்டி இருக்கின்றன.

அது நாடு கடந்த தமிழீழ அரசாகட்டும்.. விடுதலைப்புலிகள் அமைப்பாகட்டும்.. தமிழ் தேசியம் ஆகட்டும்... புலம்பெயர் மக்களின் செயற்பாடகட்டும்.. அடிக்கடி குழம்பித் தெளியும் நிலையில் இருக்கிறார் அவர்.

இந்த நிலையில் இப்படியான அநாவசிய தலைப்புக்களை அவர் இடுவது ஒன்றும் புதிரான விடயம் அல்ல. ஆனால் அவர் சில தெளிவுகளைப் பெற இந்தத் தலைப்பை கள உறவுகள் பாவித்தால் நன்றாக இருக்கும்.

நெல்லையனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அமைய உலகமோ.. தமிழ் மக்களோ செயற்பட முடியாது. ஒரு நியாயமான பொதுமைப்பாட்டோடு அவர் தெளிந்து இணங்கி வர முற்பட வேண்டும். அதன் மூலம் இவ்வாறான தலைப்பிடுவதில் இருந்தும் அவர் தன்னை விலக்கி வைக்கலாம். :)

மற்றும்படி.. எத்தனையோ இடர்களைக் கண்டு வளர்ந்து இன்று ரீன் ஆக இருக்கும் யாழ் களப் பையனை.. யாரும் எதுவும் பண்ண முடியாது. அவன் இப்ப ரீன்..! கருத்துக்கு கருத்தைத் தூக்குவான்.. கத்திக்கு கத்தியை தூக்குவான். :lol::D

Link to comment
Share on other sites

யாழை தேசிய இணையமென்று முத்திரை குத்தி குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவதை விட ஒரு திறந்த ஜனநாயக தளமாக வைத்திருப்பதே நல்லது.

பச்சைபுள்ளிக்கு எழுதுபவர்களுக்கு அது தொடர்ந்தும் கிடைக்கும் பயப்பிடவேண்டாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.