Jump to content

ஓவியர் ஜீவாவுடன் நேர்காணல்


Recommended Posts

ஓவியர் ஜீவாவுடன் நேர்காணல்

படித்தது சட்டம் பிடித்தது தூரிகை

சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருதை இந்த ஆண்டு திரிசக்தி பதிப்பக வெளியீடான திரைச்சீலை என்னும் நூல் பெற்றுள்ளது.இந்நூலைக்கோவையைச் சேர்ந்த ஓவியர் ஜீவா எழுதியுள்ளார்.1982இல் அறந்தை நாராயணன் எழுதிய தமிழ்ச் சினிமாவின் கதை என்னும் நூலுக்குப் பின்பு இவ்விருது பெறும் தமிழ் நூல் இதுவே.கோவையின் போக்குவரத்து நெரிசல் மிக்க டவுன்ஹால் சாலையின் அஞ்சு முக்கு வீதியில் உள்ள அவரது வீடும் ஸ்டூடியோவுமான இடுக்கமான இடத்தில் செம்மலர் சார்பாக அவரைச் சந்தித்து வாழ்த்துச் சொன்னோம்.

நாகர்கோவில் மாவட்டம் பூதப்பாண்டி இவரது பூர்வீக பூமி.ஆம்.அதே பூதப்பாண்டிதான்.தோழர் ஜீவா பிறந்த மண்ணில் அவருடைய உறவுக்காரப் பையனாகப் பிறந்தவர்தான் இந்த ஜீவாவும்.இன்றும் நாகர்கோவில் நகரில் உள்ள ஜீவா மணி மண்டபத்தில் இவர் வரைந்த ஜீவாவின் ஓவியம்தான் வைக்கப்பட்டுள்ளது.

படித்தது உயர்தர ஆங்கில வழிப்பள்ளியில்; வாழ்ந்தது இந்தச் சந்து பொந்தில் என்று தன்னைப்பற்றிக் குறிப்பிடும் ஜீவா படிப்பால் ஒரு வழக்கறிஞர்,மனதால் மன விருப்பத்தால் ஒரு ஓவியர், வாழ்வுக்காக அல்லது பிழைப்புக்காக ஒரு ஓவிய டிசைனர்.சென்னை மாநிலக்கல்லூரியில் எம்.ஏ.பட்டமும் கோவை சட்டக்கல்லூரியில் வழக்கறிஞர் பட்டமும் பெற்றாலும் மனம் முழுக்க ஓவியத்திலேயே நாட்டம் கொண்டிருந்தது.காரணம் அவருடைய தந்தையார் திரு.வேலாயுதம்.அவர் துவக்கி நடத்திய சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சினிமா பேனர்கள் வரைந்து கொடுப்பதைப் பிரதான பணியாகக் கொண்டது.அப்பாவுடன் சேர்ந்து வரையத்துவங்கியவர் ஜீவா.அப்பா 56 வயதில் காலமாகிவிட வீட்டுக்கு மூத்த பிள்ளையான ஜீவா குடும்ப வருமானத்துக்காக அப்பாவின் தொழிலையே கைக்கொண்டார்.ஆங்கிலப்பள்ளியில் படித்த அவர் தமிழ் படிக்கவில்லை.அவர் இதற்கு முன் எழுதியதுமில்லை.இதுதான் அவரது முதல் நூல்.

“ கோவையில் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் தான் நடத்திய ரசனை இலக்கிய இதழில் சினிமா ரசனை பற்றி ஒரு தொடர் எழுதுமாறு வற்புறுத்தியதால் தமிழில் எழுத வந்தேன்.உலக சினிமாக்களைப் பார்க்க அப்ப என்னைச் சிறுவயதிலேயே அழைத்துச் செல்வார்.மொழி பெயர்த்து எனக்குக் காட்சிகளை விளக்குவார்.அந்த அனுபவமும் அப்பா எனக்கு வாசிக்கத் தந்த சோவியத் இலக்கியங்களும்தான் இந்த திரைச்சீலை நூல் வெளிவரக் காரணம் எனலாம்.நாஞ்சில்நாடன் போன்ற நான் மிகவும் நேசிக்கும் படைப்பாளிகளின் உற்சாகமூட்டலும் தொடர்ந்து எழுதி முடிக்க ஒரு காரணம்”

செம்மலர்: அப்பாவிடம் ஓவியம் கற்றுக்கொண்டீர்களா அல்லது முறையாக ஓவியப்பள்ளியில் சேர்ந்து படித்தீர்களா?

ஜீவா: அப்படி எந்தப் பயிற்சியுமில்லை.அப்பாவும் கற்றுக்கொடுக்கவில்லை.அவர் என்னை ஆங்கில வழியில் எம்.ஏ. அரசியல் விஞ்ஞானம் படிக்க வைத்து ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு போகச்சொன்னவரல்லவா? இந்தத் தொழில் விருத்தியில்லாத தொழில் என்பதால் அப்பா அப்படி நினைத்தார்.ஆனால் நானோ புனே திரைப்படக்கல்லூரிக்குப்போய் திரைப்படம் கற்க ஆசைப்பட்டேன்.இரண்டுமில்லாமல் சட்டம் படித்துவிட்டு நான் பிரஷ் பிடித்தேன்.அப்பா வரையும் பேனர்களில் இடைவெளிகளை வண்ணம் கொண்டு அடைக்கும் வேலை செய்யத் துவங்கியதிலிருந்து என் ஓவிய வாழ்க்கை பள்ளிப்பருவத்திலேயே துவங்கியது.6 பேரில் மூத்தவனான நான் வருமானத்துக்காக இப்படி ஆனாலும் என் தம்பி மணி கண்டனை சினிமாத்துறைக்கு அனுப்பி ஆறுதல் தேடிக்கொண்டேன்.தம்பி மணிகண்டன் அடையாறு திரைப்படக்கல்லூரியில் படித்து இன்று பேசப்படும் ஒளிப்பதிவாளராக வாழ்ந்துகொண்டிருக்கிறான்.ராவணன்,பெண்ணின் மனதைத் தொட்டு,செங்கோட்டை சாருக்கான் எடுத்த ஓம் சாந்தி ஓம் இந்திப்படம் என அவன் மும்பையிலும் சென்னையிலும் வலுவாகக் கால் ஊன்றி கேமராமேனாக வெற்றி பெற்றிருக்கிறான்.

செம்மலர்: பேனர்கள் வரைவது ஒரு கலை மனதுக்கு திருப்தியளிக்குமா?

ஜீவா: சினிமா பேனர் வரைவது ஒரு மறு படைப்புத்தான்.முகங்களை வரைவதுதான் அதில் பிரதான வேலை.இத்தனை ஆண்டுகளில் லட்சக்கணக்க்கான முகங்களை வரைந்து விட்டேன்.அந்த அனுபவமே எனக்குத் தடையாக உள்ளது.நவீன ஓவியர்களைப்போல அரூப ஓவியங்களை வரைய ஆசைதான்.அப்படி முயன்றாலும் அது ஒரு முகமாகவே எனக்கு வந்து விடும்.அப்படிப் படிந்து போய்விட்டது.இயற்கையைப் பார்த்து வரையவும் ஆசை இருந்தாலும் நேரமில்லை.அந்த அளவுக்கு நேரத்தை ஒதுக்க என் நெருக்கடி மிகுந்த வாழ்க்கை இதுவரை இடம் தரவில்லை.

செம்மலர்: அது ஒரு சோகம் தானே..?

ஜீவா: அப்படிச்சொல்ல முடியாது.நான் பேனர் வரைவதை எப்போதும் ஒரு கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்.அதில் அன்றாடம் வந்து நிற்கும் எனக்கான ரசிகர்களும் உண்டு.உடனுக்குடன் பாராட்டும் விமர்சனமும் கிடைக்கும்.அதைப் பெரிதாக மதிப்பேன்.நவீன ஓவியம் வரைந்து அதைக் கண்காட்சியாக வைப்பது என்பது ரொம்பவும் காஸ்ட்லியான சங்கதி.ஓவியக்கண்காட்சி என்பது எப்போதுமே கார்ப்பொரேட் கையில்தான்.மண்டபம் பிடித்து படங்களை வைக்கவே பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் செலவிட வேண்டும்.தவிர அதில் ஒரு பிராண்ட் பெயர் தேவைப்படுகிறது.எம்.எஃப்.உசேன் படம் என்றால் ஒரு கோடி 2 கோடி ரூபாய்க்குப் போகும்.ஆதிமூலம் படம் என்றால் ஒரு விலை இருக்கிறது.நம்மைப்போன்ற ஆட்கள் அந்த இடத்துக்கு வர வாய்ப்பில்லை.அதுவும் கோவையில் வாழ்ந்து கொண்டு அந்த இட்த்தி எட்ட முடியாது.மனத் திருப்திக்காக வரைய வேண்டும் என்றாலும் இன்று வண்ணங்கள்,திரைச்சீலைகள் விற்கும் விலையைப் பற்றி யோசித்தால் கலை , மனதுக்குள்ளேயே வறண்டு போகும்.ஒரு கலர் ட்யூப் விலை 150 ரூபாய்.35 கலர்களாவது வேண்டும்.அப்புறம் கேன்வாஸ் இத்யாதி செலவுகள் வேறு.

யாரைப்பார்த்தாலும் அந்த இடத்திலேயே அவரை அப்படியே ஐந்து பத்து நிமிடங்களுக்குள் ஓவியமாக வரைந்து விடும் திறன் சின்ன வயதிலிருந்தே எனக்கு வந்துவிட்டது.அது எனக்குப் பல இடங்களில் பேரும் புகழும் மரியாதையும் பெற்றுத்தந்துள்ளது.ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஸ்விஸ் நிறுவனம் காஃப்காவின் நாடக அரங்கேற்றத்துக்காக அவர்கள் சொன்ன

கருத்துக்களுக்கேற்ப பேனர்கள் வரைந்து தரச்சொன்னார்கள்.வரைந்து கொடுத்தேன் அது அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. வலைத்தளங்களில் அப்படங்களைப் போட்டார்கள்.சர்வதேச அளவில் எனக்கு நிறைய ரசிகர்களை அது உருவாக்கித் தந்துள்ளது.ஆகவே இந்த ஓவிய வாழ்வில் சோகம் என்று ஒன்றுமில்லை.நம் வாழ்நிலையிலிருந்துதானே பார்க்க வேண்டும்?

செம்மலர்: ஓவியத்துறையில் உங்கள் மனதுக்குப் பிடித்ததாக வேறு ஏதும் செய்கிறீர்களா?

ஜீவா: கோவையில் சித்ரகலா அகாடமி என்றொரு சங்கத்தை 1979இலிருந்து நடத்தி வருகிறோம்.20 ஆண்டுகள் அதன் செயலாளராகவும் இப்போது அதன் தலைவராகவும் இருந்து வருகிறேன்.குழந்தைகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்போம்.இலவசமாக அதைச் செய்து தருகிறோம்.ஆண்டுதோறும் ஏராளமான குழந்தைகள் எங்களிடம் ஓவியம் பயின்று வருகிறார்கள்.தவிர ,2000த்தில் வள்ளுவர் கோட்டத்தில் 133 ஓவியர்களை அழைத்து ஆளுக்கு ஒரு திருக்குறள் அதிகாரத்தைப் படமாக வரையச்சொன்னார்கள் அந்த 133 பேரில் ஓவியக்கல்லூரியில் பயிலாத 2 பேரில் ஒரு ஓவியனாக நான் பங்கேற்றேன்.அந்தப் படங்களெல்லாம் இப்போது குப்பையாகக் கிடப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

செம்மலர்: டிஜிட்டல் பேனர்களின் வருகையை எவ்விதம் எதிர்கொண்டீர்கள்?

ஜீவா: ஒன்றுமே செய்யமுடியாமல் போனது ஒரு நாளில்.கோவையில் ஓவியர்கள் 400 கடை வைத்து பேனர்கல் வரைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.எல்லாம் மாயமாய் மறைந்து போனது.இப்போது 3 கடை கூட இல்லை.அந்த ஓவியர்கள் இப்போது வீடுகளுக்கு வெள்ளை அடிக்கப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.அதில் நல்ல வருமானமும் கிடைக்கிறது.நாங்கள் உண்மையில் ஆடித்தான் போனோம்.வீட்டை அடமானம் வைத்து ஒரு டிஜிட்டல் பேனர் தயாரிக்கும் எந்திரத்தை நிறுவி தொழில் பண்ணிக்கொண்டிருக்கிறோம்.100 ரூபாய் வேலைக்காக மணிக்கணக்கில் ஒருவருக்கு உட்கார்ந்து அவர் விருப்பப்படி டிசைன் பண்ணிக்கொண்டிருக்கும் ஒன்றுதான் சோகம்.எப்போதும் ஒருவித எரிச்சலான மனநிலையே நீடிக்கும் நிலை இருக்கிறது.என்னடா வாழ்க்கை இது என்கிற சலிப்பும் வரத்தான் செய்கிறது.

செம்மலர்: ஓவியம் தவிர வேறு கலைகளில் ஆர்வம்?

ஜீவா: தொடர்ந்து வாசிப்பேன்.நிறைய எழுத்தாளர்களோடும் ஓவியர்களோடும் நட்புக்கொண்டிருக்கிறேன்.ஆதிமூலம் அவர்களின் ஓவியம் பற்றி கணையாழியில் விமர்சனமாக நான் எழுதி எனக்கும் அவரும் ஒரு சண்டையே நடந்து அதன் தொடர்ச்சியாக நாங்கள் மிக நெருக்கமான நன்பர்களாகிவிட்டோம்.பின்னர் அவரே என் குருநாதரும் வழிகாட்டியாகவும் ஆனார் என்பேன்.பாஸ்கரன்,தட்சிணாமூர்த்தி,மருது,ராஜராஜன்,நெடுஞ்செழியன்,மகி,அல்போன்ஸ் எனப் பல முன்னணி ஓவியர்கள் எனக்கு நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

புத்தகங்கள் மிகச்சிறந்த நண்பர்களாக எப்போதும் இருக்கிறார்கள்.நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே நீல.பத்மநாபனின் தலைமுரைகள் நாவலை முடித்து விட்டேன்.நண்பர் மாலன் “திசைகள்” வார இதழை ஆரம்பித்தபோது அதில் ஓவியங்கள் வரைந்தேன்.அச்சமயம் கல்கியில் சிந்து-ஜீவா என்கிற பெயரில் 2 ஆண்டுகள் சினிமா விமர்சனம் எழுதினேன்.

கோவையில் திரைப்படக் கழகம் யார் துவக்கினாலும் அவர்களோடு நான் கட்டாயமாக இருப்பேன்.திரைப்படச் சங்கத் திரையிடல்களுக்கு தவறாமல் செல்வேன்.கவிஞர் புவியரசுவின் தாக்கமும் என் மீது உண்டு.இதெல்லாம் சேர்ந்துதான் திரைச்சீலை புத்தகம் உருவானதாகச் சொல்ல வேண்டும்.

அவருடைய மகன் ஊடகவியல் படித்துள்ளார்.மகள் பி.எஸ்ஸி ஐ.டி படிக்கிறார்.ஓவியத்துறையில் இருவரும் இல்லை.அவருடைய மகன் ஒருநாள் எதிர்பாராமல் ஒரு மரம் வரைந்திருக்கிறார்.அந்த நாள் நான் அடைந்த துடிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை என்று சொல்லிக் குதூகலிக்கும் ஜீவா வலைப்பூவில் அவ்வப்போது எழுதி வருகிறார்.அவருடைய வலைப்பூ முகவரி: jeevartistjeevaa.blogspot.com.

சந்திப்பு- சதன்,பாலாஜி

http://satamilselvan.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.