Jump to content

இலங்கையும் இந்தியாவும் சர்வதேச நீதிமன்றத்தில் சந்திக்குமா?


Recommended Posts

Posted by: on Jul 24, 2011

சர்வதேச நீதிமன்றம் அல்லது உலக நீதிமன்றம் என அழைக்கப்படும் ஐ.சி.ஜே., 1946 ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சில சர்ச்சைகளை இவ் ஐ.சி.ஜே. தீர்த்து வருகிறது. இவ் ஐ.சி. ஜே. நிறுவப்படுவதற்கு முன்னர் 1899 ஆம் ஆண்டு சி.பி.ஏ. என்ற நீதி நிறுவனம் 1922 தல் சி.பி.ஐ.ஜே. என்ற சர்வதேச நீதி மன்றம் நாடுகளுக்கிடையேயான சர்ச்சைகளை பேச்சுவார்த்தை விசாரணை, மத்தியஸ்தம் ஆகிய முறைகள் மூலம் தீர்த்து வந்துள்ளன. சில ஆய்வாளர்கள் உட்பட பலர் ஐ.சி.ஜே.யையும் ஐ.சி.சி.யையும் ஒன்றாக எண்ணிவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதாவது உலக நீதிமன்றம் என்னும் சர்வதேச நீதிமன்றத்தை (International Court of Justice- I.C.J) என்பார்கள். இவ் ஐ.சி.ஜே. நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைகளை தீர்ப்பதற்கானது. ஐ.சி.சி. என்னும் (International Criminal Court - ICC) சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் என்பது 1998 ஆம் ஆண்டு ரோம் சாசனத்திற்கு அமைய உருவாக்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு முதல் உலகில் மனிதாபிமான மனித உரிமை போர்க் குற்றங்களை புரிந்த தனி நபர்களை விசாரித்து தண்டனை வழங்கப்படுவதற்காக நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு நீதிமன்றங்களும், காரியாலயங்களும் நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரிலேயே அமைந்துள்ளன. இன்று வரையில் பல நாடுகளுக்கிடையேயான ஆட்சி உரிமை, எல்லைப் பிரச்சினைகள், கடல் எல்லைகள், ஆகாய பிரதேசங்கள், அணு குண்டு, எண்ணெய் வளங்கள் போன்ற விடயங்களை இவ் ஐ.சி.ஜே. விசாரித்துள்ளது.

இந்த அடிப்படையில் இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சில தீவுகள் மீதான ஆட்சி உரிமை; புக்கினோபசோ நையர், பேனி நையர், லிபியா சாட் ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட எல்லைத் தகராறுகள்; நிக்கரகுவா கொலம்பியா, கட்டார் பஹ்ரெயின் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட சில தீவுகள் மீதான ஆட்சி உரிமை, கடற்பிராந்திய சர்ச்சைகள் சிலவாகும்.

இதேவேளை, லொக்கர்பி விமானம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அமெக்கா லிபியா, பித்தானியா, லிபியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட சர்ச்சைகள்; அமெரிக்க கடற்படையினால் 1987 88 ல் ஈரான் எண்ணெய் குதங்கள் தாக்கப்பட்டமை; பிரான்ஸிற்கும் அவுஸ்திரேலியாவிற்குமிடையில் ஏற்பட்ட பசுபிக் பிராந்தியத்தில் அணுகுண்டு சோதனை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் ஏற்பட்ட போர்க் கைதிகள், விமானத் தாக்குதல் போன்ற விடயங்கள் உலக நீதிமன்றத்தின் கவனத்திற்கு சர்ச்சைக்குரிய நாடுகளினால் கொண்டு வரப்பட்ட சில வழக்குகள் ஆகும்.

சர்ச்சைகள் தற்பொழுது இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் காணப்படும் உறவின் அடிப்படையில் இவ்விரு நாடுகளும் தமது சர்ச்சைகளை தீர்ப்பதற்கு சர்வதேச நீதிமன்றமான ஐ.சி.ஜே. யின் உதவியை நாடுமா? என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. இதற்கான காரணிகளை ஆராயுமிடத்து இலங்கை இந்தியாவை ஐ.சி.ஜே.யிடம் முறையிடுவதற்கு சந்தர்ப்பம் மிக குறைந்தே காணப்படுகிறது. ஆனால் இந்தியா இலங்கையை ஐ.சி. ஜே.யிடம் முறையிடுவதற்கான காரணிகள் பெரிதாக காணப்படுகின்றன. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியினால் 1974 ஆம் ஆண்டு கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக அவ்வேளையில் இலங்கையின் பிரதமரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க உள்நாட்டில் மிகவும் செல்வாக்ழந்து காணப்பட்ட காரணத்தினால் கச்சதீவை பெற்றுக்கொள்வதன் மூலம் சிறிமாவோ மீண்டும் செல்வாக்கு பெறமுடியுமென இந்திரா காந்தி நம்பியதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, இந்தியாவின் மத்திய அரசிற்கும் மாநில அரசான தமிழ்நாட்டிற்குமிடையில் சில அரசியல் முறுகல்கள் ஏற்பட்டதாகவும், இதற்கு பழிவாங்குகமாக மாநில அரசான தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறாமல் திருமதி இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தரெனவும் கூறப்படுகிறது.

எது எப்படியிருந்தபோதும் கச்சதீவு பிராந்தியம் 1974 ஆம் ஆண்டின் பின்னரே இலங்கையின் தேர்தல் தொகுதியான ஊர்காவற்றுறையுடன் இணைக்கப்பட்டதாகவும், அதற்கு முன்னர் கச்சதீவு ஒரு பொழுதும் இலங்கை தேர்தல் தொகுதிகளில் காணப்படவில்லையென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு.க. வின் அமோக வெற்றி, இந்தியாவின் மத்திய அரசு தமிழ் நாட்டு மாநில அரசுடன் கலந்தாலோசித்து விடயங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.

அண்ணா தி.மு.க. வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 16ஆவது விடயமாக இலங்கை வடக்கு கிழக்கு வாழ்மக்களின் இடப் பெயர்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அதேவே ளை, ன்றாவது றையாக தமிழ்நாட்டின் தலமைச்சர் பதவியை வகிக்கும் செல்வி ஜெயலலிதா இலங்கை தமிழர் விடயத்தில் மிக வும் ஆதரவாக உள்ளதை நாம் காணக் கூடியதாகவுள்ளது. செல்வி ஜெயலலிதாவின் தற்போதைய செயற்பாடுகள், பிரபல நடிகரும் அண்ணா தி.க.மு.வின் ஸ்தாபகருமான எம்.ஜி.ராமச்சந்திரனை பிரதிபலிப்பவையாகவும் உள்ளன.

எம்.ஜி.ஆர். இலங்கைத் தமிழர்களுடன் மிக நெருங்கியவர் என்பதை யாவரும் அறிவர். இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கையில் இனப்பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களான தமிழர் தாயக பிரதேசங்கள் இலங்கை ஜனாதிபதியின் விசேட ஆணையின் பிரகாரம் ஒன்றாக இணைக்கப்பட்டன.

ஆனால் 18 ஆண்டுகளின் பின்னர் அதாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றதன் பின் நீதிமன்றத்தில் வழக்கை வெல்வதற்காக முன்னெடுத்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு முறையற்றதென இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. யாவரும் எதிர்பார்த்தது போல் உச்ச நீதிமன்றம் தனது தீர்வின் பிரகாரம் ஜனாதிபதி ஆணை மூலம் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது சட்ட விரோதமானது என தீர்ப்பு வழங்கியது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் 2.3 ஆம் பந்தியின் பிரகாரம், வடக்கு கிழக்கு பற்றிய சர்வசன வாக்கெடுப்பை 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியிருக்க வேண்டும் அல்லது பிற்போட்டிருக்க வேண்டும்'' ஆனால் இவ்விரு விடயம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும்வரை ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால் சர்வதேச ஒப்பந்தத்தை இலங்கை மீறியுள்ளமை மிக தெட்ட தெளிவானது.

இவ்விடயமாக 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி வீரகேசரி வார இதழில் வெளியான கட்டுரையில் இலங்கை இந்திய உடன்படிக்கையை இலங்கை மீறியுள்ளதனால் இந்தியா எவற்றை செய்ய முயற்சிக்கலாமென அன்று ஆரூடம் கூறப்பட்டது இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கச்சதீவு வீரகேசரி வார இதழ் 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதிக் கட்டுரையில் கூறப்பட்டது போல் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவியாக அவ்வேளையில் பதவி வகித்த அண்ணா தி..க. வின் செயலாளர் செல்வி ஜெயலலிதா 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி இந்திய மேல் நீதிமன்றத்தில் 1974 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் காலத்தில் கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தவறு என்றும், இதனால் இந்திய மீனவர் பெரும் கஷ்டத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும், ஆகையால் தமிழ்நாடு மாநில அரசுடைய அல்லது மத்திய அரசினுடைய அனுமதி இல்லாது கொடுக்கப்பட்ட கச்சதீவு மீளப் பெறப்பட வேண்டுமென வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசு மௌனம் சாதித்து வந்தாலும் 2001 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அவ்வேளையில் மீன் பிடித்துறை அமைச்சராக கடமையாற்றிய இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாவது, "காலம் சென்ற பிரதமர் இந்திரா காந்தியினால் எம்மிடம் கையளிக்கப்பட்ட கச்சதீவை நாம் திரும்ப இந்தியாவிடம் கையளிக்க மாட்டோம்'' எனக் கூறியிருந்தார்.

செல்வி ஜெயலலிதாவினால் தாக்கல் செய்யப்பட்ட கச்சதீவு பற்றிய வழக்கு இன்றும் மேல் உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கிறது. 543 தமிழக மீனவர்கள் உயிழப்பு கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி வெளியான செய்திகளின் பிரகாரம் இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் 543 பேர் படு கொலை செய்யப்பட்டும் 2000 பேர் படுகாயம் அடைந்தும் 700 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை 78 இலங்கை மீனவர்களை இந்திய அரசு கைது செய்து காவலில் வைத்துள்ளதுடன் 16 மீன் பிடி படகுகளையும் தடுத்து வைத்துள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.

இவ்வேளையில் தமிழ் நாட்டு மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினைகள் தீரும் வரை ஓர் பொருளாதார தடையை இந்தியா இலங்கை மீது மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாட்டின் தலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய அரசை கேட்டுள்ளார். ஐ.சி.ஜே. வழக்குகள் இலங்கை இந்தியாவிற்கு தற்பொழுது முன்று முக்கிய விடயங்களான இலங்கை இந்திய ஒப்பந்தம், கச்சதீவு, மீனவர்கள் ஆகிய விடயங்கள் உள்ளன. இவ்விடயம் ஐ.சி.ஜே.வரை செல்வதற்கான சாத்தியக் கூறுகள் பெ தாக காணப்படுகின்றன.

இந்த அடிப்படையில் இலங்கை நேரத்தை வீண் விரயம் செய்யாது மற்றைய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற தீவுகள் மீதான ஆட்சி பிரயோகம், கடல் எல்லைகள், உடன்படிக்கை மீறல்கள் போன்ற வழக்குகளைப் படித்து இப்படியான வழக்குகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.உதாரணமாக கட்டார் பஹ்ரேன், நிக்கரகுவா கொலம்பியா, பெரு சிலி ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட தீவுகள் மீதான ஆட்சி பிரச்சினை; கம்போடியா தாய்லாந்து ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட பௌத்த விஹாரை பற்றிய சர்ச்சை; முன்னைய யூகொஸ்லேவியா அல்லது மஸிடோனியா விற்கும் கிறீஸ் நாட்டிற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை சர்ச்சைகள், இலங்கை இந்திய விடயத்தில் நல்ல உதாரணங்களாக அமைகின்றன.

இதேவேளை, தற்பொழுது இலங்கையில் உள்ள நிலங்களையும் சொத்துகளையும் மற்றைய நாடுகளுக்கு விற்பனை செய்வதால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படவுள்ள வினைகள் பற்றி அறிய விரும்பினால் ஐ.சி. ஜே. இல் ஜேர்மனிக்கும், இத்தாலிக்கும் லீஞ் சென்ஸ்ரைனுக்கும் இடையில் ஏற்பட்ட வழக்குகளை இலங்கை அரசு படிப்பது புத்திசாலித்தனமானது. அத்துடன் அமெரிக்க ராஜங்க செயலாளரான திருமதி கிலாரி கிளின்டனுடைய சென்னை விஜயம், இந்திய வெளிநாட்டுப் பேச்சாளன் யூலை 15 ஆம் திகதி இலங்கை பற்றிய அறிக்கை; பொது நலவாய நாட்டுச் செயலகத்திற்கும் சர்வதேச கிமினல் நீதிமன்றத்திற்கும் இடையே ஜூலை 13 ஆம் திகதி கைச்சாத்தான உடன்படிக்கை ஆகியவற்றின் ஆள்பரியத்தை இலங்கை விளங்கிக் கொள்ளுமென நம்புகிறேன்.

இலங்கை, தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தை வெளிநாட்டு உதவிகளுடன் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இலங்கை அரசு தற்பொழுது எதிர்கொள்வது சர்வதேச சமுதாயத்தின் நெருக்கடிகளையும் சர்வதேச நீதிமன்றங்களின் சட்ட நடவடிக்கைகளையுமே! இவை அவ்வளவு சுலபமான விடயங்கள் அல்ல!

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்

http://www.tamilkathir.com/news/5127/58//d,view.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.