Jump to content

ஒரே நிமிடத்தில் அணியும் "வன் மினிட் சேலை' .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லோரும் கம்பரின் ராமாயணம் படித்திருப்பீர்கள், அதில் சீதையை அவர் வர்ணித்தவிதத்தை திரும்ப படியுங்கள், அவர் உறுப்புக்களை வர்ணித்தால் இலக்கிய பாட புத்தகம், :lol::lol::lol:

அது தான் கம்பர்.. புரியாத மொழியில் கவி பாடி இருக்காரே.. ! அது புரிய ஒரு மொழிபெயர்பாளர் வேணும்.. அந்த மொழி பெயர்ப்பாளர்.. தன் கற்பனைகளையும் சேர்த்து விடுவார்.. கேட்கிற நமக்கு.. ஆனால் இங்க எல்லாருக்கும் புரிய எல்லோ எழுதிறாங்க. அதுதான் பிரச்சனையே. :lol::D

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதிலை என்ன... பழசு, புதுசு கிடக்குது மண்ணாங்கட்டி.

இது கருத்துக் களம். யாரும், யாருக்கும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை.

சும்மா பழைய ஆள் என்றால்... பஞ்சாங்கத்தை விரித்துப் பாக்காமல்... இங்கை ஏன் வாறார்.

கால மாற்றத்தில்... எம்மைப் போன்ற இளைஞர்களையும் யாழ் களம் ஏற்கத்தான் வேண்டும்.

:D:D:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துடன் நான் ஒன்றுபட்டாலும்.....முதலில் நீங்கள் வெளியே வாருங்கள்.உங்கள் அறிமுக படத்தை மாற்றுங்கள்.சகலருடனும் சகஜமாக உறவாடுங்கள்.ஒருகுடும்பமாக இங்கேயே பழகப்பாருங்கள்.பழைய நண்பர்களை நினைத்துபுதியவர்களுடன் கணக்கு போடாதீர்கள்.

வணக்கம் ஐயா!

நீங்கள் என்னமும் உங்களின் பழைய அறிவுரை வழங்கும் போக்கினை மாற்றவில்லை போலுள்ளது. பழைய நண்பர்கள், புதிய நண்பர்கள் என்று நான் ஏதாவது சொன்னேனா? யாழ்களத்தை ஏன் பாலியல் தளமாக மாற்றுகின்றீர்கள் என்று கேட்டதுக்கு என்னவென்னோ எல்லாம் உளறுகின்றீர்கள்? உங்களின் குணாதியங்களையும், செயற்பாடுகளையும் நீண்டகாலமாக நான் அறிவேன் என்பதால், உங்களின் மேதாவித்தனத்தை வேறு யாரோடும் பகிர்ந்து கொள்ளும்படி அன்போடு வேண்டுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஐயா!

நீங்கள் என்னமும் உங்களின் பழைய அறிவுரை வழங்கும் போக்கினை மாற்றவில்லை போலுள்ளது. பழைய நண்பர்கள், புதிய நண்பர்கள் என்று நான் ஏதாவது சொன்னேனா? யாழ்களத்தை ஏன் பாலியல் தளமாக மாற்றுகின்றீர்கள் என்று கேட்டதுக்கு என்னவென்னோ எல்லாம் உளறுகின்றீர்கள்? உங்களின் குணாதியங்களையும், செயற்பாடுகளையும் நீண்டகாலமாக நான் அறிவேன் என்பதால், உங்களின் மேதாவித்தனத்தை வேறு யாரோடும் பகிர்ந்து கொள்ளும்படி அன்போடு வேண்டுகின்றேன்!

ஆராம்ப யாழ்களத்தில் எழுதப்பட்ட சுயமான ஆக்கங்களுக்கும், பின்னராக வருகின்ற களத்தின் கருத்துக்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் எத்தனை ஆக்கங்கள் யாராலும் எழுதப்படுகின்றன என்று கேட்டால் அது பூச்சியமே! கடந்த ஆறுமாதம், ஏன் ஒரு வருடகாலப்பகுதியினை மீளப் பார்வையிட்டால் எத்தனை ஆக்கங்கள் வந்திருக்கின்றன. கவிதைப் பகுதியைத் தவிர, மற்றவவை எல்லாம் வேறு எங்காவது எழுதப்படுகின்ற ஆக்கங்களை இணைத்து அதற்கான விமர்சனங்களாகவே போகுகின்றன.

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

பல தடவை நிறுத்துவதற்கான வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்கின்றார். ஒவ்வொரு தடவையும் வேண்டாம் என்ற வேண்கோளை அவர் மதித்திருக்கின்றார். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதாகத் தான்நிலை போய்க் கொண்டிருக்கின்றது.

மோகன் அண்ணாவிடம் ஒரு வேண்கோள்.

யாழ்களத்தின் ஆரம்பத்தில் இருந்து 2007, அல்லது 2009ம் வரையிலான கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியுமா??(backup)

உங்களுடைய கேள்விக்கு நீங்களாகவே எழுதிய பதில்.......

Link to comment
Share on other sites

இந்த இணையத்துல அரட்டை வேணாம் ,அதை தூக்கி போடுங்க என்று சொல்லவேண்டியது , அதனோட எடிட்டர்!

இங்கே வந்து கருத்து எழுதுறவங்க இல்ல!

மாவீரர்நாள் உரையாற்றலில் ..மிஸ்டர் .ஆண்டன் பாலசிங்கம்....செய்யாத ஜோக்குகளா?

அவர் ஒண்ணும் உலகமறியாத ஆளில்லே மக்கா...!

அந்த இடத்தில்கூட அவர்பண்ணுற அரட்டைக்கு காரணம்.......எப்பவுமே சீரியஸா போய்கிட்டு இருந்தா.. சப்புன்னு போயிடும் எந்த மேட்டரும்!

ரொம்ப சீரியஸா எப்பவுமே இருந்தாதான், தேச பக்தி என்னு ஆயிடுமா? ?

தேசியத்தை வளர்ப்பதும் ,காப்பதும், எந்த ஒரு இணையத்தளத்தாலும் முடியாது! அதன் வாசகர்களே அதனை செய்யவேண்டியவர்கள்!

அவர்களான நாங்கள்...

ஒருவருக்கொருவர் , சகஜமா பழகாம வெறுமனே சண்டைபுடிச்சுட்டு வெட்டி பந்தா காட்டிகிட்டு இருந்தா, ஈழம் மட்டுமில்ல, ஒரு கிலோ சோளம் கூட தரமாட்டான் எவனும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

By நிழலி இந்த அழகான பாடல் வரிகள் ஆபாசம் என்றால், அதை கேட்பவர்கள் வெட்கம் கெட்டவர்கள் என்றால் எம் சங்க இலக்கியங்களில் 90% ஆனவை ஆபாசம் தான். கம்பரும், கபிலரும் சிலாகித்து எழுதிய எத்தனையோ வரிகள் இதே பாடலைப் போழ நேரிடையாக சொல்லாமல் சிலேடையாக சொல்லி இருக்கு. அதேபோல் அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதியில் அம்மனை பெண்ணாக உருவகித்து ஒவ்வொரு அங்கமாக வருணித்துப் பாடிய பாடல்கள் இன்றும் இந்துக் கோயில்களில் பாடப்படுகின்றது.

உலகில் காமத்தை பாடாத இலக்கியங்களோ அல்லது கலையோ இல்லவே இல்லை. அற்புதமான உணர்வு தரும் காமம் என்றுமே அழகியலின் ஒரு அம்சம்தான்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=62151&st=0

உங்களுக்கு ஒரு பத்து பச்சைகள் எழும்பி எழும்பி குத்தலாம் போல இருக்கு :D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.