Jump to content

அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா?


Recommended Posts

மனித குலத்துக்கு சேவை செய்வது என்பதை யார் வேண்டுமானாலும், எங்கிருந்தும் செய்யலாம்....

இதற்கு மொழி, இனம் என்ற எல்லைகள் இல்லை.....

குறுகிய கண்ணோட்டம் இது போன்ற விஷயங்களுக்கு தேவை தானா?

Link to comment
Share on other sites

வெங்காயம் இது போல கேவலமான அடுத்தவரை கேலி செய்யும் செயல்களை நிற்த்தி கொண்டால் நன்றாக இருக்கும். தன்னால் முடிந்தால் செய்யலாம் , அடுத்தவரை குறை கூறும் குறுகிய கண்ணோட்டம் வேணாம்.

Link to comment
Share on other sites

வெங்காயத்தின் கூற்றில் உண்மை இருக்கிறது. பெற்ற தாய் அந்த பெற்றவயிறே பசியால் கொதிக்கும் போது மகனோ தாய் நாட்டின் மீது மோகங்கொண்டவர் போல் மற்றவர்களுக்கு காண்பிக்க தாயகப்பற்றாளர் போல் நாடகம் ஆடுவார். ஏன் முன் ஒருகாலத்தில் நானும் அப்படிதான் இருந்தேன். இப்பொழுது திருந்திவிட்டேன். இதே பேர்வழிகள் எங்களில் நிறையவே இருக்கின்றனர். இவர்கள் மனம் மாறவேண்டும். தாயகத்தை எப்படி நாம் நேசிக்கின்றோமோ அதே போல் பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும். தனக்கடங்கித் தான் தானம் என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது.

Link to comment
Share on other sites

அந்தத் தமிழர் தனக்கு கல்வி தந்து தன்னை ஆளாக்கிய நாட்டுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் அது தவறா?

இதற்குத் தான் சென்னையில் ஒரு பழமொழி சொல்வார்கள்.... தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.... என்று......

Link to comment
Share on other sites

வெங்காயத்தின் கூற்றில் உண்மை இருக்கிறது. பெற்ற தாய் அந்த பெற்றவயிறே பசியால் கொதிக்கும் போது மகனோ தாய் நாட்டின் மீது மோகங்கொண்டவர் போல் மற்றவர்களுக்கு காண்பிக்க தாயகப்பற்றாளர் போல் நாடகம் ஆடுவார். ஏன் முன் ஒருகாலத்தில் நானும் அப்படிதான் இருந்தேன். இப்பொழுது திருந்திவிட்டேன். இதே பேர்வழிகள் எங்களில் நிறையவே இருக்கின்றனர். இவர்கள் மனம் மாறவேண்டும். தாயகத்தை எப்படி நாம் நேசிக்கின்றோமோ அதே போல் பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும். தனக்கடங்கித் தான் தானம் என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது.

வெங்காயத்தார் அத தானேயப்பா தலைப்பிலேயே சொல்லீட்டீர்

பிறகென்ன கேள்வி ஓ சரியோ எண்டு கேக்கிறீரோ

சரியில்லைத்தான் என்னப்பா செய்யிறது நாங்கள் நாய் வால் நிமிறமாட்டம் முடிஞ்சா நிமித்துமோய்

:wink: :wink: :wink: :wink: :wink:

எல்லாம் இருக்கட்டும் ஓனியன் அவர் காசு சேத்து ஏதாவது செய்தவரே இவ்வளவு நாளும் இல்லை சேத்த காசில மதுரையில பங்களா வாங்கீட்டாரோ

ஓய் லுக்கு ஒருக்கா பாத்து சொல்லுமோய்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

அந்தத் தமிழர் தனக்கு கல்வி தந்து தன்னை ஆளாக்கிய நாட்டுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் அது தவறா?

இதற்குத் தான் சென்னையில் ஒரு பழமொழி சொல்வார்கள்.... தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.... என்று......

ஓய் யாரப்பா தப்பு எண்டு சொன்னது செய்யுங்கோ யார் வேண்டாம் எண்டது

ஓய் உமக்கு கேள்வி விளங்கினதா

சரியா??? தவறா ??

சரி எண்டா சரி எண்டு சொல்லும் தவறு எண்டா தவறு எண்டு சொல்லுமன்

சும்மா தள்ளி படுக்கமாட்டன் எண்டு அடம்பிடிக்கிறீர்

8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)

நம்மை பொறுத்தமட்டடில அவர் செய்தா செய்து விட்டு போகட்டும்

****

:wink: :wink: :wink: :wink:

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

அப்பு பேரப்பிள்ளையள் சொல்லுற கதையளுக்கு ஏனணை மறுத்தான் விடுகிறாய் சும்மா இரு அப்பு. வெங்காயத்திடல் பணம் கேட்டவரிடம் நான் சொல்ல ஆசைப்படுவது என்னவென்றால் இன்னும் யாழ்ப்பாணத்தில் / வன்னியில் / கிழக்கு மாகானத்தில் எத்தனை குடும்பங்கள் ஒரு நேர சாப்பாட்டிற்கே அல்லாடுகிறார்கள். ஒரு தடவை இலங்கை சென்று நிலமையை நேரே சென்று பாருங்கள். இவர்களின் நிலையை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. போரினால் கணவனை இழந்த விதவைகள், போரினால் பிள்ளைகளை இழந்த முதியோர்கள் எப்படி தவிக்கிறார்கள் என்பதை ஒரு தடவை நேரே சென்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

இந்தியா அங்கு அகதியாய் இருக்கும் நம் மக்களுக்கு உதவி செய்யும்போது தனியொருவராய் தானும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் நினைப்பதில் என்ன தவறு. அவரது நோக்கம் உண்மையானதெனில் பாராட்டப்பட வேண்டிய விடயமே.

Link to comment
Share on other sites

சுயமரியாதை இல்லாதவர்களில் நடவடிக்கைகளும் உப்படித்தான்.

தங்கள் பூர்வீகத்தை வெறுக்கும் மனநோயாளிகள்.

மாற்றாக சிறுவழிகளிலாவது தன்னை இந்தியனாக காட்டிக் கொள்ளவதில் ஒருவகை திருப்த்தி அடைய முனைகிறார் போலும். அதற்கு உப்படியாக ஏதாவது செய்து இந்தியர்களின் பாராட்டை பெற்று அதன்மூலம் தானும் ஒரு இந்தியனாகிவிட்டார் என்று திருப்த்திப்பட முனைகிறார் போலும்.

இந்திய சம்பந்தப்பட்ட விடையங்களில் ஒரு சாதாரண இந்தியரைவிட அதிக கவனம் செலுத்துவார், விழுந்து இந்தியர்களை நண்பர்களாக சேர்த்துக் கொள்வதில் முன்னுக்கு நிப்பார். அதற்காக இந்தியர்களிற்கு கை கட்டி சேவகம் சேய்வது முதல் ...... எதுக்கும் பின்னுக்கு நிக்கமாட்டார்.

தமிழ்படங்களில் வடிவேலுக்கு அமெரிக்க போக ஆசை ஆனால் வழியில்லை வக்கில்லை, அந்த இயலாமையின் வெளிப்பாடாக நேரம் காலம் தெரியாமல் MTV பார்த்து Michael Jackson பாட்டுக்கு நடனம் ஆடி sunglass போட்டுக் கொண்டு தெரியிற மாதிரி ஒரு வியாதிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயமரியாதை இல்லாதவர்களில் நடவடிக்கைகளும் உப்படித்தான்.

தங்கள் பூர்வீகத்தை வெறுக்கும் மனநோயாளிகள்.

மாற்றாக சிறுவழிகளிலாவது தன்னை இந்தியனாக காட்டிக் கொள்ளவதில் ஒருவகை திருப்த்தி அடைய முனைகிறார் போலும். அதற்கு உப்படியாக ஏதாவது செய்து இந்தியர்களின் பாராட்டை பெற்று அதன்மூலம் தானும் ஒரு இந்தியனாகிவிட்டார் என்று திருப்த்திப்பட முனைகிறார் போலும்.

இந்திய சம்பந்தப்பட்ட விடையங்களில் ஒரு சாதாரண இந்தியரைவிட அதிக கவனம் செலுத்துவார், விழுந்து இந்தியர்களை நண்பர்களாக சேர்த்துக் கொள்வதில் முன்னுக்கு நிப்பார். அதற்காக இந்தியர்களிற்கு கை கட்டி சேவகம் சேய்வது முதல் ...... எதுக்கும் பின்னுக்கு நிக்கமாட்டார்.

தமிழ்படங்களில் வடிவேலுக்கு அமெரிக்க போக ஆசை ஆனால் வழியில்லை வக்கில்லை, அந்த இயலாமையின் வெளிப்பாடாக நேரம் காலம் தெரியாமல் MTV பார்த்து Michael Jackson பாட்டுக்கு நடனம் ஆடி sunglass போட்டுக் கொண்டு தெரியிற மாதிரி ஒரு வியாதிதான்

.

குறுக்காலபோவான்! நானும் இதைத் தான் நினைத்தேன், எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள். அவருக்கு இங்கு வக்காலத்து வாங்கும் இந்தியர்கள் கூட, ஒரு இந்தியர் இப்படிச் சொன்னாலோ, செய்தாலோ பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இங்கு இரட்டை வேடம் போடுகிறார்கள்.

எங்களின் சொந்த மண்ணில் இவ்வளவு துன்பங்கள் மத்தியில் மக்கள் வாழும் போது, அவர்கள் தேவையில்லை (I don't want them), இந்தியாவைப் பற்றி மட்டும் தான் இங்கு கதைக்கலாம் என்று சொல்லுமளவிற்கு எந்தளவு சுய வெறுப்பிருக்க வேண்டும், அவர் இந்தியாவில் சேவை செய்யலாம் ஆனால் அதற்காக இந்தியாவிலுள்ள பிரச்சனை மட்டும் தான் கதைக்கலாம், காசைச் சேர்த்து அங்கு தான் செய்வேன் என்று அடம் பிடிப்பது, மானமுள்ள இலங்கைத் தமிழர்களனைவருக்கும் அவமானம்,

பெற்ற தாயிலும் தாய்நாடு சிறந்தது என்பார்கள், தாய் நாட்டை விடவா, படித்த நாடு முக்கியம். யாருக்கு என்ன பந்தம் பிடிக்க இந்த வேலையோ மதுரை மீனாட்சிக்குத் தான் வெளிச்சம்? :lol::lol:

என்னதான் காசு சேர்த்து அவர் ஊசி போட்டாலும், அவர் இந்திய விசாவுக்குப் போய் வரிசையில நிற்கேக்கை அங்குள்ள, அந்தக் குட்டையான, வட இந்தியன் பன்றியைக் கண்ட சோனகன் மாதிரி இவரைப் பார்த்துக் கொண்டு, இவரின் பாஸ்போட்டை வாங்கி வைத்துக் கொண்டு "Oh Srilankan origin" இன்று போய் இன்னும் 15 நாளில் வா என்று சொல்லி விடும் போது, அண்ணாச்சி வாயில் வழியப் போகும் அசடைக் காணக் கண்கோடி வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான், ஒஸ்ரெலியாவில் வாழும் ஈழத்தமிழர்களில் சிலர், மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளமாட்டினம்.கேட்டால், நாங்கள் ஒஸ்ரேலியன் என்பினம். ஏன் ஒஸ்ரேலியாவுக்கு வந்தனீர்கள்,ஊரிலை இருந்திருக்கலாமே என்று கேப்பினம். ஆனால் தங்கள் பிள்ளைகளினை இந்திய சுதந்திர தினத்தில் நடனம் ஆடவிடுவினம். அப்ப இந்தியா என்ன ஒஸ்ரேலியாவில் இருக்குதோ?.

இந்தியர்களுக்கு உதவி செய்யுங்கள். கட்டாயம் செய்யவேண்டும். ஆனால் ஈழத்தில் அவதியுரும் எம்மக்களுக்கு எம்மைவிட்டால் உதவிக்கு வேறு ஒருவரும் வராத நிலையில் ஈழமக்களுக்கு உதவி செய்யமால் இந்தியார்களுக்கு, பாகிஸ்தானியர்களுக்கு எவ்வாறு உதவி செய்யமுடியும்?.

அம்மா ஊரில் பிச்சை எடுக்காமல் சந்தோசமாக வாழ்ந்தால் மதுரை என்ன சிதம்பரத்திலேயே அன்னதானம் செய்யலாம்

Link to comment
Share on other sites

அமெரிக்காவின், சுனாமி உதவிகளையே ஏற்கமறுத்த இந்தியாவிற்கு ஓர் ஈழத்தமிழர் உதவி செய்யப்போகின்றாராம்...???சிறிய ஆலம்விதையிலிருந்து பெரிய மரம் வழர்வதைப்போல தக்கதருணத்தில், நாம் ஒருவருக்குச்செய்யும் சிறு உதவி கூட பெரிய பயனைத்தரும் [உபயம்; நாலடியார்] அவர் தனகான காலத்தின் கடமையையும்தண்டி [மறந்து] ஏதோ ஓரு ஆத்ம திருப்திக்காக [அல்லது வேறுகாரணங்களுக்காக] செய்ய எண்ணுகிறார்போலும். உண்மையிலேயே நன்மை செய்ய நினைக்கிறார் என்றால் நாம் அதை விமர்சிப்பதைத்தவிர்த்தலே நாகரீகம். எனினும் வெங்காயத்தின் ஆதங்கம் நமக்குள்ளும் எளுவதைத்தவிர்க்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு நன்றி கடன் பட்ட ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார்கள்... இன்னமும் இங்கே செய்யப்பட வேண்டிய உதவிகள் நிறைய இருக்கின்றன.....

அதை அவர்கள் செய்வதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை?

Link to comment
Share on other sites

இன்று வரைக்கும் ஈழத்தில் உலக நாடுகள் கொடுத்த உதவியைப் பாருங்கள். ஆனால் இந்தியா இவ்வளவு நாளில் போட்ட பொட்டலத்தை தவிர, வேறு என்ன செய்தது

தூயவன் உங்களை போன்ற சில பேரால் தான் இங்கு ஈழம் இந்திய தமிழ்ர்கள் மத்தியில் தேவை இல்லாத சண்டை ஏற்படுகிறது. இன்று கூட 10 பேர் ஈழதிலிருந்து ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்களூகு வாழ்வு கொடுப்பது யார்? நீரோ?? வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம்.இன்று கூட இங்கு கல்வி கற்க்கும் ஈழ தமிழ்ர்கள் பல்லாயிரம். இங்கு அமைதியாக எந்த வித பாகுபாடும் இன்றி வாழும் இந்த மக்கள் பத்தியும் கொன்சம் சிந்தியுன்க்கள்.செய்த உதவியை சொல்லி காட்டும் மோசமான குணம் தமிழ் நாட்டு தமிழ்ரக்கு இல்லை.செய நன்றி என்று எதோ சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

ஒரு தன்னலமில்லா சேவையை இவ்வாறு குறை கூறுவது அநியாயம். இவ்வாறு இந்திய மக்களுக்கே சேவை செய்பவர் தன் மக்களுக்கும் கண்டிப்பக செய்வார்.கண்டிப்பாக செய்த்து கொண்டு இருப்பார். அதை பற்றி தெரியாமல் அவரை தாழ்த்தி பேசுவது முறை அல்ல.

Link to comment
Share on other sites

இதில் ஏன் பிரித்துப்பார்க்க வேண்டும். எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் உதவலாம். எங்கோ இருக்கிற வெளிநாட்டவர் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்திய இலங்கை மக்களுக்கு உதவினார்கள். இப்போது கூட காஸ்மீரில் (பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா) இடம்பெற்ற நிலச்சரிவில் வீடுகளை இழந்து குளிரில் வாடும் மக்களுக்கு உதவுகிறார்கள்.

Link to comment
Share on other sites

நான் இந்தியாவில் தான் படித்தேன் அங்கு வேலையும் செய்தேன். அங்கே எந்தப்பாகுபாடும் இல்லை. வீண் சண்டை வேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கூட 10 பேர் ஈழதிலிருந்து ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்களூகு வாழ்வு கொடுப்பது யார்? நீரோ?? வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம்.இன்று கூட இங்கு கல்வி கற்க்கும் ஈழ தமிழ்ர்கள் பல்லாயிரம். இங்கு அமைதியாக எந்த வித பாகுபாடும் இன்றி வாழும் இந்த மக்கள் பத்தியும் கொன்சம் சிந்தியுன்க்கள்.செய்த உதவியை சொல்லி காட்டும் மோசமான குணம் தமிழ் நாட்டு தமிழ்ரக்கு இல்லை.செய நன்றி என்று எதோ சொல்வார்கள்.

இதற்கு நானும் வருந்துகின்றேன். பேசாமல் இவர்களை கியுூபாவின் வண்டனாமோ சிறைச்சாலைக்கு அனுப்பி வையுங்கள். அங்கே சந்தோசமாக இதை விட இருப்பார்கள். மெத்தப் பெரிய உபகாரமாகவும் இருக்கும்

Link to comment
Share on other sites

நன்றி ஆதிபன்,

நன்றி மலர்ந்த சிலரின் மத்தியில் உம்மை சந்திக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.....

இலங்கை தமிழர் மட்டுமல்ல.... ஆப்பிரிக்காவைச் சார்ந்தவர்களும் கூட தமிழகத்தில் எங்களுக்கு சரிக்கு சமமாக நடத்தப்படுகிறார்கள்.... அதில் எஙளுக்கு மகிழ்ச்சியே.....

ஏனென்றால் நாங்கள் இருப்பது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.....

Link to comment
Share on other sites

தம்பியவை மற்றவர்களை தாக்காமல் நியாத்தை கதையுங்கோவன்.. எங்கடை சனத்துக்கு தாய் பிச்சையெடுத்தாலும் பரவாயில்லை குசுப்புவுக்குசங்கிலிபோட என்று ஒரு கூட்டம் திரிந்தது. தெரியும்தானே? அவையள் திருந்தமாட்டினம்.

அப்புமாரே லக்கிலுக்கு ராஜாதிராஜா நீங்கள் வந்தாரை வாழவைக்கிறனீங்கள் எண்டு தெரியும்.. தம்பியவை நாங்கள் கொஞ்சம் திருந்தியிட்டமெண்டு நினைக்கிறன். நீங்களும் கொஞ்சம் உலகை புரிஞ்சுகொள்ள வேணுமெண்டு நான் ஆசைப்படுகிறன். உங்கடை சூப்பிற ஸ்டார் ஒருக்கா ஐரோப்பாவிலை இருக்கிற தமிழ்ச்சனங்களுக்கு பிலிம்காட்டி(நீங்கள் புரிஞ்சுகொள்ளுவியள்) அதிலை வாற காசை கொண்டுபோய் அநாதை குழந்தைகளுக்குகுடுக்கப்போ

Link to comment
Share on other sites

இந்தியா அங்கு அகதியாய் இருக்கும் நம் மக்களுக்கு உதவி செய்யும்போது தனியொருவராய் தானும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் நினைப்பதில் என்ன தவறு. அவரது நோக்கம் உண்மையானதெனில் பாராட்டப்பட வேண்டிய விடயமே.

"இந்தியாவில் சினிமாவினால்" சினிமா பகுதியில் லக்கிலுக் எழுதியது. (இதை தெரிந்துகொள்ளத்தான் அந்த பிரிவை ஆரம்பித்தேன்)

நல்ல கேள்வி.....

இப்போது இந்தியாவில், குறிப்பாக 1996க்கு பின் தனி நபர் வருமானம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.... எனவே வாழ்க்கைத்தரமும் அதனுடன் சேர்ந்தே உயர்ந்திருக்கிறது... பொழுது போக்குக்காக நிறைய செலவு செய்யப்படுகிறது.... என் தந்தை காலத்தில் எல்லாம் 10,000 ரூபாய் சம்பளம் என்பது எட்டாக் கனியாக இருந்தது.... கிடைத்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை ஓட்டுவதே அவர்களுக்கு எல்லாம் சவாலாக இருந்தது.... எனவே வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு படங்கள் தான் அவர் குடும்பத்துடன் பார்ப்பார்....

இப்போது அப்படி அல்ல.... எங்களுக்கெல்லாம் எடுத்தவுடனே 5 டிஜிட் சேலரி கிடைக்கிறது.... பொழுதுபோக்குகளுக்கு நிறைய செலவிட முடிகிறது.... வாரம் ஒரு சினிமா, தீம் பார்க் என்று செலவு செய்கிறோம்....

இப்போ இங்கே "பரமசிவன்" பட்டையை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது....

வசம்பரே, லக்கிலுக் சொன்னதை கேட்டீர் தானே? இந்தியாவில எப்படி மக்கள் முன்னேறிக்கொண்டு போறாங்க எண்டு? பிறகு எதுக்கு புலத்தில இருக்கிற ஈழத்தமிழரிட்ட காசு வேண்டி இந்திய நாட்டுக்கு உதவி செய்யப்போறாரம் அந்த மைசூர் மகாராஜா?

வசம்பரே உமக்கு தெரியுமோ இல்லையோ, சுனாமி ஆசியாவில அடிச்ச பொழுது இந்தியாவிலயும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழை மக்கள் இறந்தார்கள், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி செய்யட்டுமா எண்டு இந்திய அரசை கேட்டபொழுது இந்திய அரசு சொன்ன பதில் தெரிந்து இருக்கும் உமக்கு, எங்களுக்கு உதவி தேவையில்லை, நாங்கள் அதை சமாளிப்பம் எண்டு,, இவர்களுக்கு அப்புறம் எதுக்கு உதவி செய்யனும்? எப்பவோ சுதந்திரம் கிடைச்சுட்டுது இந்தியாவுக்கு, அவங்களுக்கு தெரியும் தங்கட நாட்டை எப்படி பாதுகாக்கனும் எண்டு,,

அந்த இனையத்தளத்தை நடத்துற அட்மின் ஒரு உண்மையான ஈழத்தமிழர் (மனிதன்) எண்டால் அண்மையில் இராணுவத்தின் கெடுபிடிகளினால் வன்னிக்கு இடம்பெயரும் மக்களுக்கு தமிழர் புணர்வாழ்வுகழகம் உதவி செய்யுமாறு வேண்டுகோள்விடுத்திருந்தது, எங்க அதுக்கு உதவி செய்வாரா அந்த வசூல் ராஜா??

வசம்பரே ஒன்றை மாத்திரம் புரிஞ்சுகொள்ளும், யாழில இருக்கிற ஒரு சிலருக்கு நீர் ஜால்ரா போடுறதும், பதிலுக்கு அவங்கள் உங்களுக்கு சிங்க் சக் போடுறதும் நல்லதாப்படயில்லை,, யாழ் கருத்துக்களத்தையும் சில தமிழ் கருத்து புறம்போக்கு இனையத்தளங்கள் மாதிரி ஆக்கிப்போடாதையும்,, யாழில இருக்கிற ஒரு சிலரை நீர் நம்பி அவர்களுக்கு ஜால்ரா போடுறது நல்லாதாப்படல்லை,,

அவங்கட செயல்களுக்கு ஒரு சின்ன உதாரணம் ஒரு கருத்துக்களத்தில் இவ்வளவு நாளும் குப்பை கொட்டின அந்த சில பேர், புதிசா ஒரு இனையத்தளத்தை கண்ட உடன, பழைய இனையத்தளத்திற்கு நன்றிக்கடன் செலுத்திறமாதிரி, அந்த பழைய கருத்துக்களத்தில் செய்யக்கூடாத பல வேலைகள் செய்து ஒருத்தரையும் அந்த கருத்துக்களத்தைப்பார்க்கவி

Link to comment
Share on other sites

நன்றி டண்

எனக்காக அக்கறை எடுத்து நீங்கள் எழுதிய பதிலிற்காக. ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் நான் எப்போதும் என்னிலையிலிருந்துதான் களத்தில் கருத்துக்களை எழுதி வருகின்றேன். எவரையும் நாடு இனம் மொழி என்று பார்க்காமல் மனிதனாக பார்த்துத்தான் எனது கருத்துக்களை வைக்கின்றேன். எவருக்கும் வக்காலத்தோ அல்லது ஜால்ராவோ போட வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதேபோல் களத்தில் எப்படியும் பிரைச்சினைகளை உண்டாக்குவதற்காக மற்றைய களங்களின் பிரைச்சினைகளை இங்கே கொண்டு வந்து போடுவதே சிலரின் வேலையாகவுள்ளது. என்னையும் வேறு ஒரு இணையத்தளத்துடன் சம்பந்தப் படுத்த முயற்சித்து தோல்வியடைந்ததையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அப்படியான விடயங்கள் உங்களுக்கு தவறாகப் படவில்லையா?? மேலே குறிப்பிடப்பட்டவர் யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் அவரது நோக்கம் சரியாகப்பட்டதால் அது விடயமாக எனது கருத்தையும் வைத்தேன். இந்தியாவில் லக்கிலுக் போன்ற சிலரின் பொருளாதார நிலையைப் போன்றுதான் எல்லோரும் இருக்கமுடியுமா?? அமெரிக்காவின் உதவியை இந்தியா நிராகரித்தது உதவி என்ற போர்வையில் அமெரிக்கா வந்து என்ன செய்யும் என்பதை இந்தியா உணர்ந்துதான். இந்த விடயம் டண்ணுக்கும் புரியாததல்ல. இலங்கைத் தமிழ் மக்களுக்காக பல்லாயிரக் கணக்காக நம்மக்கள் உதவும்போது ஒரு தனியொருவர் இந்திய மக்களுக்கு உதவ நினைப்பதை விமர்சிக்க முனைவதுதான் தவறான விடயம். இதனால் அப்படி என்ன பாதிப்பு?? எது செய்தாலும் விமர்சிக்க வேண்டுமென்ற உள்நோக்கமான சிலரின் சிந்தனைகள் மாறுவது தான் எதிர்காலத்தில் எம்மவர்கள் பற்றிய ஏனையவர்களின் சிந்தனையிலும் மாற்றங்களை உண்டுபண்ணும்.

Link to comment
Share on other sites

"இந்தியாவில் சினிமாவினால்" சினிமா பகுதியில் லக்கிலுக் எழுதியது. (இதை தெரிந்துகொள்ளத்தான் அந்த பிரிவை ஆரம்பித்தேன்)

வசம்பரே, லக்கிலுக் சொன்னதை கேட்டீர் தானே? இந்தியாவில எப்படி மக்கள் முன்னேறிக்கொண்டு போறாங்க எண்டு? பிறகு எதுக்கு புலத்தில இருக்கிற ஈழத்தமிழரிட்ட காசு வேண்டி இந்திய நாட்டுக்கு உதவி செய்யப்போறாரம் அந்த மைசூர் மகாராஜா?

வசம்பரே உமக்கு தெரியுமோ இல்லையோ, சுனாமி ஆசியாவில அடிச்ச பொழுது இந்தியாவிலயும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழை மக்கள் இறந்தார்கள், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி செய்யட்டுமா எண்டு இந்திய அரசை கேட்டபொழுது இந்திய அரசு சொன்ன பதில் தெரிந்து இருக்கும் உமக்கு, எங்களுக்கு உதவி தேவையில்லை, நாங்கள் அதை சமாளிப்பம் எண்டு,, இவர்களுக்கு அப்புறம் எதுக்கு உதவி செய்யனும்? எப்பவோ சுதந்திரம் கிடைச்சுட்டுது இந்தியாவுக்கு, அவங்களுக்கு தெரியும் தங்கட நாட்டை எப்படி பாதுகாக்கனும் எண்டு,,

அந்த இனையத்தளத்தை நடத்துற அட்மின் ஒரு உண்மையான ஈழத்தமிழர் (மனிதன்) எண்டால் அண்மையில் இராணுவத்தின் கெடுபிடிகளினால் வன்னிக்கு இடம்பெயரும் மக்களுக்கு தமிழர் புணர்வாழ்வுகழகம் உதவி செய்யுமாறு வேண்டுகோள்விடுத்திருந்தது, எங்க அதுக்கு உதவி செய்வாரா அந்த வசூல் ராஜா??

வசம்பரே ஒன்றை மாத்திரம் புரிஞ்சுகொள்ளும், யாழில இருக்கிற ஒரு சிலருக்கு நீர் ஜால்ரா போடுறதும், பதிலுக்கு அவங்கள் உங்களுக்கு சிங்க் சக் போடுறதும் நல்லதாப்படயில்லை,, யாழ் கருத்துக்களத்தையும் சில தமிழ் கருத்து புறம்போக்கு இனையத்தளங்கள் மாதிரி ஆக்கிப்போடாதையும்,, யாழில இருக்கிற ஒரு சிலரை நீர் நம்பி அவர்களுக்கு ஜால்ரா போடுறது நல்லாதாப்படல்லை,,

அவங்கட செயல்களுக்கு ஒரு சின்ன உதாரணம் ஒரு கருத்துக்களத்தில் இவ்வளவு நாளும் குப்பை கொட்டின அந்த சில பேர், புதிசா ஒரு இனையத்தளத்தை கண்ட உடன, பழைய இனையத்தளத்திற்கு நன்றிக்கடன் செலுத்திறமாதிரி, அந்த பழைய கருத்துக்களத்தில் செய்யக்கூடாத பல வேலைகள் செய்து ஒருத்தரையும் அந்த கருத்துக்களத்தைப்பார்க்கவி

Link to comment
Share on other sites

நன்றி டண்

எனக்காக அக்கறை எடுத்து நீங்கள் எழுதிய பதிலிற்காக. ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் நான் எப்போதும் என்னிலையிலிருந்துதான் களத்தில் கருத்துக்களை எழுதி வருகின்றேன். எவரையும் நாடு இனம் மொழி என்று பார்க்காமல் மனிதனாக பார்த்துத்தான் எனது கருத்துக்களை வைக்கின்றேன். எவருக்கும் வக்காலத்தோ அல்லது ஜால்ராவோ போட வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதேபோல் களத்தில் எப்படியும் பிரைச்சினைகளை உண்டாக்குவதற்காக மற்றைய களங்களின் பிரைச்சினைகளை இங்கே கொண்டு வந்து போடுவதே சிலரின் வேலையாகவுள்ளது. என்னையும் வேறு ஒரு இணையத்தளத்துடன் சம்பந்தப் படுத்த முயற்சித்து தோல்வியடைந்ததையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அப்படியான விடயங்கள் உங்களுக்கு தவறாகப் படவில்லையா?? மேலே குறிப்பிடப்பட்டவர் யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் அவரது நோக்கம் சரியாகப்பட்டதால் அது விடயமாக எனது கருத்தையும் வைத்தேன். இந்தியாவில் லக்கிலுக் போன்ற சிலரின் பொருளாதார நிலையைப் போன்றுதான் எல்லோரும் இருக்கமுடியுமா?? அமெரிக்காவின் உதவியை இந்தியா நிராகரித்தது உதவி என்ற போர்வையில் அமெரிக்கா வந்து என்ன செய்யும் என்பதை இந்தியா உணர்ந்துதான். இந்த விடயம் டண்ணுக்கும் புரியாததல்ல. இலங்கைத் தமிழ் மக்களுக்காக பல்லாயிரக் கணக்காக நம்மக்கள் உதவும்போது ஒரு தனியொருவர் இந்திய மக்களுக்கு உதவ நினைப்பதை விமர்சிக்க முனைவதுதான் தவறான விடயம். இதனால் அப்படி என்ன பாதிப்பு?? எது செய்தாலும் விமர்சிக்க வேண்டுமென்ற உள்நோக்கமான சிலரின் சிந்தனைகள் மாறுவது தான் எதிர்காலத்தில் எம்மவர்கள் பற்றிய ஏனையவர்களின் சிந்தனையிலும் மாற்றங்களை உண்டுபண்ணும்.

அமெரிக்காவின் உதவியை மட்டுமல்ல அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் மறுத்திருந்தது. அவரது நோக்கம் சரி என்கிறீர்களே எப்படி என்று சொன்னால் இன்னும் சிறப்பாய் இருக்கும். இன்னொரு உங்களின் கருத்துப்படி பார்த்தால் நீலன் திருச்செல்வம், கதிர்காமர் அனைவரையும் பாராட்டுவீர்கள் போல் உள்ளதே :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.