Jump to content

தீபச்செல்வனுக்கு இரண்டு விருதுகள்


Recommended Posts

Deeban_CI.jpg

எழுத்தாளரும் ஊடகவியளாலருமான தீபச்செல்வனுக்கு 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர் விருதுகள் இரண்டு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இந்த விருதுகளை வழங்கியுள்ளது. நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்கான 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர் என்ற வழங்கப்பட்டது. அத்தொடு 2010ஆம் ஆண்டின் சிறந்த புகைப்பட ஊடகவியளாலர் என்ற விருதையும் தீபச்செல்வன் பெற்றுள்ளார்.

நேற்றுக் கொழும்பு கல்கிசையில் உள்ள மவுன்லேனியா விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் கொழும்பில் இருந்து வரும் பத்திரிகைளிலும் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் உரிமைகள் தொடர்பில் தீபச்செல்வன் எழுதி வருபவர். வுன்னியில் ஏற்பட்ட நிலப்பிரச்சினைகள் பற்றிய கட்டுரைக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தீபச்செல்வன் 1983இல் கிளிநொச்சியில் பிறந்தவர். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பாடசாலைக் கல்வியை கற்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். ஆத்தோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயலாளராகவும் பதவி வகித்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக நிலையத்தில் வருகை விரிவுரையாளராகவும் இதழியல் பயிற்றுனராகவும் பணியாற்றியவர்.

வன்னி மக்களின் நெருக்கடி மிக்க பிரச்சினைகளை செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் புகைப்படங்களாவும் வெளிக் கொண்டு வந்தவர். உலகத் தமிழ்ச் செய்திகள், தினக்குரல், உதயன், சுடரொளி, இருக்கிறம் போன்ற ஊடகங்களிலும் குமுதம், நக்கீரன், காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, உன்னதம் போன்ற தமிழக பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறார்.

http://meenakam.com/2011/07/27/31409.html

Link to comment
Share on other sites

தீபச்செல்வனுக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சொந்தங்களின் துயரங்களையும், சஞ்சலங்களையும், எழுத்தில் வடிப்பது மட்டுமல்லாது, நாம் நினைக்கக் கூட முடியாத சூழ்நிலையிலும்,தனது ஊடகத் தொழிலை நடத்தும், தீபச்செல்வனிற்கு விருதுகள் கிடைத்ததையிட்டு, பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!!!

Link to comment
Share on other sites

தீபச்செல்வனின் துணிச்சலும் எழுதுதிறனும் அளப்பரியன..! மேன்மேலும் எழுத்துப்பணி செய்து நீடுழி வாழ வாழ்த்துகிறேன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகையாளனுக்கு கிறுக்கனின் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருளில் பணியாற்றும் தீபச்செல்வன் மேல் விழுந்த வெளிச்சம்...இன்னும் இன்னும் பல அடையாளங்கள் தீபச்செல்வனுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடியான சூழலின் மத்தியிலும் துணிச்சலுடன் பல விடயங்களை கவிதைகள், கட்டுரைகள், ஊடக செய்திகள் மூலம் வெளிச்சத்திற்கு தொடர்ந்தும் கொண்டு வரும் தீபச்செல்வனிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க நின் புகழ்

வையகம் ஓங்கிட

தூங்கும் இனமல்லத்

தொடர் செயற் கூட்டமாம்

ஈழ மக்களில்

தேடலை செய்கின்ற

தீபச்செல்வனே வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

தீபச்செல்வனிற்கு வாழ்த்துக்கள். :) நேசக்கரம் அமைப்புடன் இணைந்த தீபச்செல்வனின் வன்னி மக்களிற்கான சேவைகளும் அளப்பரியது. :wub: நானும் ஒரு விருது குடுக்கலாமென்டு தேடித்திரியிறன். ஆள் அம்பிடுதில்லை. ^_^ சாந்தி உங்களிற்கு தீபனோடை ஏதும் கொழுவலோ? ஏனெண்டால் காணவில்லை எண்டு அடிக்கிற நோட்டிசுக்கு குடுத்த படம் மாதிரி ஒண்டை போட்டிருக்கிறீங்கள் அததான் கேட்டனான். :lol: :lol:

Link to comment
Share on other sites

சாந்தி உங்களிற்கு தீபனோடை ஏதும் கொழுவலோ? ஏனெண்டால் காணவில்லை எண்டு அடிக்கிற நோட்டிசுக்கு குடுத்த படம் மாதிரி ஒண்டை போட்டிருக்கிறீங்கள் அததான் கேட்டனான். :lol: :lol:

என்ன சாத்திரி கேள்வியிது. எங்கள் வீட்டுப்பிள்ளை தீபச்செல்வன். :lol:

இந்தப்படம்தான் மீனகம் தளத்தில வந்திருந்தது. இதை அப்படியே இணைத்துவிட்டேன்.

ஊடகதர்மத்தை மீறாமல் செய்தியை வெட்டி ஒட்டியிருக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வனுக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. :)

Link to comment
Share on other sites

மண்ணையும் மக்களையும் நேசிக்கும் இந்த ஊடாகவியலாளன் மூலமாக சிவராமும் நடேசனும் தெரிகின்றார்கள்.

வாழ்க உங்கள் பணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபச்செல்வன அண்ணாக்கு வாழ்த்துகள்.

:)

Link to comment
Share on other sites

சாத்திரி தீபச்செல்வனின் புதுப்படம் மாத்தியிருக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தீபச்செல்வன்... மற்றவர் மாதிரி மனத்தை மாற்றாமல் தொடர்ந்தும் நேர்ப் பாதையில் பயணிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அந்த இளைஞனுக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.