Jump to content

ஈழ நூலகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கள உறவுகளுக்கு

வணக்கம்

சிறிது காலம் முன்னே களத்தில் ஈழத்து நூல்களை இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் மின்வெளி நூலகம் ஒன்றை அமைக்கும் முயற்சி பற்றிக் குறிப்பிட்டு உதவி கேட்டிருந்தேன்.அந்த முயற்சி இப்போது கைகூடி வந்திருக்கிறது

www.noolaham.net

என்னும் முகவரியில் நீங்கள் அதனைப் பார்வையிடலாம்

எரித்தழிக்கப்பட்ட ஈழத்தமிழனின் சொத்து யாழ் நூலகத்தை நினைவுகூரும் வகையிலும் எங்களில் அரிய இலக்கியங்கள் தற்காலிகமாகவேனும் ஈழத்துக்கு வெளியே பாதுகாக்கப்படவேண்டியதன் தேவையை வலியுறுத்தியும் யாழ் நூலகத்தின் படம் நூலகத்தின் முகப்பிலே இடம்பெற்றிருக்கிறது

நூலகம் மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது

1) ஈழத்து எழுத்தாஅர்களின் நூல்கள்(ஈழத்திலும் புலத்திலும் எழுதப்பட்டவை)

2) சஞ்சிகைகள்-இதுவரையும் வெளிவந்த வந்துகொண்டிருக்கும் சஞ்சிகைகள்

3) உதிரி ஆக்கங்கள்-கவிதை கட்டுரை விமர்சனம் என்று பல்வேறு பத்திரிகைகளிலும் வெளிவந்த உதிரி ஆக்கங்கள்

இதுதவிர விக்கிபீடியாவில் ஈழத்து இலக்கியக் கலைக்களஞ்சியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது பல்வேறு தலைப்புகளின் கீழ் தகவல்கள் பகுத்துத் தொகுக்கப்படுகின்றன

http://noolaham.net/wiki/doku.php?id=%E0%A...%AE%AF%E0%AE%BE

இன்னொரு முயற்சியாக நண்பர் ஒருவர் தமிழ் நூல்களுக்கான தரவுத்தளம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.உலகின் அனைத்துப் பாகங்களிலும் வெளியான தமிழ் நூல்கள் பற்றிய விபரங்களை நீங்கள் அங்கே பெற்றுக்கொள்ளலாம்.முடிந்தவர

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி நண்ப.

முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.

இடையில் நிறுத்திவிடாது தொடர்ந்தும் நூல்கள் பற்றிய

தரவுகளை வலையேற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

விருபா தளத்தின் வடிவமைப்பில் குழப்பம் உள்ளது.

அவற்றை சரிசெய்து கொள்ளுங்கள்.

மீண்டும், இந்த முயுற்சிகளை மேற்கொள்ளும் நண்பர்களுக்கு

எனது மனப்பூர்வமான நன்றிகள்.

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றிகள் ஈழவன். உங்கள் முயற்சி வெற்றி பெற்று அதன் இலக்கை அடைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி...... உங்கள் முயற்ச்சி நிறைவேற வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல செய்தி கொண்டு நந்த உங்களுக்கு சிறப்பு நன்றிகள் ஈழவன்...

நல்ல முயற்சி..தொடருங்கள்....

தெரிந்த அண்ணை ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் இதன் முகவரி குறிப்பிட்டு...

உங்கள் தகவல் மூலம் தான் முழுத் தகவலையும் அறிய முடிந்தது.....

காலமறிந்த காலத்திற்கான கால முயற்சி...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....

Link to comment
Share on other sites

இதோ இந்த மதுரைத் திட்டத்திலும் பல நூல்கள் மின்னூல் வடிவில் சேமிக்கப்பட்டுள்ளன..!

http://tamil.net/projectmadurai/

மதுரைத் திட்டம் இணையம் (இதில் எழுத்துருப் பிரச்சனை வரக்கூடும்)

உதாரணத்துக்கு அங்குள்ள ஒரு நூல்

http://www.tamil.net/projectmadurai/pub/pm...0065/pm0065.pdf

ஈழவன் உங்கள் முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

ஈழநாதன் அண்ணா நீங்களும் அநதக்குழாமில ஒருவரா?நான் நூலகத்தைப்பற்றி மயூரன் அண்ணா போட்ட பதிவை யாழில் இணையத்தள அறிமுகப்பகுதியில் போட்டிருந்தேன்.

Link to comment
Share on other sites

முதலில் முயற்சிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஈழத்து நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேவேளை ஏனைய தமிழ் நூல்களுக்கும் இடம் கொடுப்பதும் நல்லது. இங்கு சென்னையிலுள்ள ஒரு தனியாரின் விலாசத்தையம் இணைக்கின்றேன். அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களின் நூல்களையும் இணைக்கலாம் என்று நினைக்கின்றேன். மேலும் நீங்கள் இப்போது ஒரு குழுவாகவா இயங்குகின்றீர்கள். உங்களைப்பற்றிய மேலதிக தகவல்களையும் அறிய விரும்புகின்றேன்.

:arrow: http://www.chennainetwork.com/index.html

Link to comment
Share on other sites

ஆமாங்க ஈழமகன் போட்டுத் தள்ளீட்டால் போச்சு. :wink: மின் நூல்களைத்தானே கேட்டீர்கள்?? :roll: அதனைப் போட்டால்த்தானே மற்றவர்களால் பார்க்க முடியும் :)

Link to comment
Share on other sites

மேலே நான் இணைத்துள்ள http://www.chennainetwork.com/index.html தில் மின்னு}ல்களை பெற விரும்புவோர்களுக்கு உதவியாக அவர்கள் எனக்கு அனுப்பிய விபரங்களை இங்கு இணைக்கின்றேன்.

Thanks for your mail. We have published following CD's

====================================================

Works of Amarar Kalki - Rs.199

====================================================

(10 Novels and 75 short Stories in ONE CD)

Ponniyin Selvan, Sivakamiyin Sabatham,

Parthiban Kanavu, Alai Osai, Thiaga Boomi etc.

====================================================

Puthumai Piththan Short Stories - Rs.99

====================================================

(stories, novels, dramas, articles,

songs & letters all in ONE CD)

====================================================

Tamil Minnool Thoguppu-1 - Rs.199

====================================================

(100 tamil books including Thirukural, Tholkappium,

Ettuthogai, Pathupattau, Pathinen Keel Kanaukka,

Silapathikaram, Manimekalai, and Books of

Bharathiyar Bharathidasan &Avvaiyar,)

(only Songs - No Meaning - No Voice)

====================================================

Kambaramayanam - Rs.199

====================================================

(only Songs - No Meaning - No Voice)

To Order the CD send DD/Money Order/cheque in favour of

'CHENNAINETWORK.COM' payable at 'CHENNAI'

*** Outstation cheques will not be accepted. ***

======================================

If you have ICICI account You can also

transfer money through Internet to our Account.

A/c Name:g.chandrasekaran

a/c type: SB

branch: Anna Nagar, Chennai

A/c No: 602701519976

=======================================

Postage: Chennai Rs.10, India Rs.30, Other countries Rs.100 (for 2 CD's)

People Residing Outside India Can also send the Money in

Rupees/US Dollars/other Currencies of their country by CHEQUE

(Cheque Processing Fee Rs.150 extra)

Mail to

g.chandrasekaran, 4, thiruvalluvar street, Avvai Nagar,

Near Golden flats, Anna Nagar West Extn, Chennai - 600 050.

Phone: +91 9444086888, 044-26357564, 26253801

email: chandran@chennainetwork.com

http://www.chennainetwork.com

CD's will be despatched immediately on receipt of Payment.

Discounts: If you order more than 3 CD's you will get a 15% discount and more than 10 CD's 20%

With Best Regards

g.chandrasekaran

www.chennainetwork.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பின் வசம்பு

உங்கள் ஆர்வத்திற்கும் ஆதரவுக்கும் நன்றி

இந்தியாவில் வெளிவந்த வெளிவரும் நூல்களை மின்னூல்களாக்கி நூலகத்தில் இணைப்பது எங்களுடைய முதன்முதல் திட்டமாக இருந்தது அதனைச் செயற்படுத்துவதற்காக பல்வேறு தனிநபர்களுடனும் பதிப்பகங்களுடனும் தொடர்புகொண்டபோது ஏமாற்றம்தான் எஞ்சியது பலரும் இரண்டாவது மூன்றாவது பதிப்புகள் வெளியிடும் விருப்பத்தில் இருந்ததால் இணையத்தில் இலவசமாக வலையேற்றுவதை விரும்பவில்லை.

இன்னொரு காரணம் இந்திய நூல்கள் பல்லாயிரக்கணக்கானவை பலநூற்றுக்கணக்கானவர்களுடைய உழைப்பு அவற்றை மின்னூலாக்கத் தேவைப்படும் மதுரைத் திட்டம் போன்ற திட்டங்களின் இடைநிறுத்தம் கூட போதிய தன்னார்வலர்கள் கிடைக்காமையினால் நிறுத்தப்பட்டதைக் கருத்தில் கொண்டே சுருக்கமாக ஈழம் மற்றும் ஈழத்து எழுத்தாளர்களுடைய நூல்கள் என்று எமது பரப்பைச் சுருக்கிக் கொண்டோம்.

ஒப்பீட்டளவில் ஈழத்தில் நிலவும் பாதுகாப்பில்லாத நிலவரத்தைக் கருத்திற் கொண்டால் மின்னூலாக்கவேண்டிய தேவை ஈழத்து நூல்களுக்கே உள்ளன.

பார்வையிட்டுக் கருத்துத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி நூலகத்தை பயன்ப்டுத்துவதே நீங்கள் எங்களுக்குச் செய்யக்கூடிய பேருதவியாகும்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://noolaham.net/index.htm

ஈழ தமிழ் புத்தகங்கள் இங்கு வாசிக்கலாம்.

நல்ல திட்டத்திற்கு நீங்களும் உதவலாம்.

நன்றி

parisian

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.