Jump to content

மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997


Recommended Posts

சிட்டுபாடிய " அலைபாயும் இசையோசை கேட்கலையா கரையில் இளம் வீரர்" என்ற பாடல் யாரிடமாவது இருக்கிறதா ? இருந்தால் தந்துதவுங்கள்.

Edited by shanthy
Link to comment
Share on other sites

வீரவணக்கம் மேஜர் சிட்டு.

Link to comment
Share on other sites

  • 5 months later...

மூசுமலை பேசவில்லையோ துறைமுகத்தில் அனலெழுந்து வீசவில்லையோ.....!!!!!!!!!!!!

Edited by shanthy
Link to comment
Share on other sites

  • 1 month later...

அலைபாடும் இசையோசை கேட்கலியா....

பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

***நீமறைந்து போனாலும் உனது ஞாபகங்களை என்றும் சுமக்கும்உ னது தோழமைகள் உனது குரலுக்கு வசமான உலக இசைவிரும்பிகளும் உனது குரலையும் உனது நினைவுகளையும் காலமுள்ள வரையும் காத்துச் செல்வோம்***

Link to comment
Share on other sites

மறக்கமுடியாத மனிதர்கள்.

அழிக்கமுடியாத நினைவுச் சுமைகள்.

ஆறுமா இந்த வடுக்கள்????? நெருப்பாய் எரிக்கிறது உடலையும் உள்ளத்தையும்.

Link to comment
Share on other sites

விழிகள் கரைய உருகியுருகி தினமும் அழுகின்றோம்.

பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அமுதமழையில் நனையும் பொழுதில்....

பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

Edited by shanthy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இந்தப் பாடலை கொஞ்சம் முன்னம்தான் கேட்டுக் கொண்டிருந்தேன்...ஏதேதோ நினைவுகள்,உலகங்கள்,புலிவாசம் வீசிய அந்தக் காலங்களுக்குள் நுழைந்து சிறுவனாக போராளிகள் காவல் காத்த என்னூரின் வீதிகளில் மனம் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது....தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் விரும்பத்தக்க இணைப்பு.நன்றிகள்

சிட்டுவின் நினைவில் நனைந்து

அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்

போய்வா நண்பனே

லியோ

Link to comment
Share on other sites

  • 2 months later...

சிட்டு 15ம் வருட நினைவுகளோடு

‘சிட்டு’

சிரிப்பு நிறைந்த மகிழ்ச்சியின் உறைவிடம் நீ.

நீயழைந்த காற்றும் நீ நடந்த நிலமும்

நினது நினைவுகள் நிறைந்து

மௌனித்துக் கிடக்கிறது.

கனவுகளோடும் கலையாத நினைவுகளோடும்

நீ நிறைந்த இசையும் பாடல்களும்

உயிர்ப்பின் இருப்பாய் ஈரமாய்……

இசை நிறையும் திசையெல்லாம்

உன்னை ஏந்தியிருக்கிறது ஒலிக்கதிர்கள்…..

தீயின் சுவடுகள் மீதேறிய உனது கால்களும் மூச்சும்

01.08.1997அன்று ஓய்வெடுத்து உறங்கிய நாள் கடந்து

இன்றுன் நினைவுகள் 15ம் ஆண்டைத் தொட்டு நிற்கிறது.

ஆற்ற முடியாச் சோகத்தை இந்த நூற்றாண்டு தந்துவிட்டுச்

சலனமின்றி நகர்கிற இந்நாட்கள் பற்றிச் சொல்வதானால்…….????

நீயுறங்கிய நிலம் மீது பேயுலவித் திரிகிறது…..

அமைதியைக் கொன்று போட்டவர்கள்

உனதும் உனது தோழர்களும் தாங்கிய கனவுகள் மீதும்

காலூன்றி உங்கள் கனவுகள் சிதைகிற பொழுதுகளிவை…..

ஊழித்தீமூட்டி உனதும் உன்போன்றோரின் கனவுகளும்

நிலமிழந்து நின்மதியிழந்து அலைகிறது.

நீங்கள் தா(தூ)ங்கிய இடங்களும் தோற்றுப் போய்

நீங்கள் எதிர்த்துக் களமாடியவர்கள் கைகளிலே….

எனினும் நம்பிக்கைகள் த(து)ளிர்க்கிறது.

நாங்கள் நேசித்த உங்கள் கனவுகள் மெய்த்திடக்

காலமெங்கள் கண்ணீரைத் துடைக்குமென்று நம்புகிறோம்…..

அதுவரை காத்திருங்கள் உங்கள் அனைவருக்கும்

அன்று தீயெடுத்துத் தீப்பந்தமேந்தித் துயர் கரைப்போம்.

(01.08.2012.மேஜர் சிட்டு இவ்வுலகைவிட்டுப் பறந்து 15 ஆண்டுகள் நிறைகிறது. ஒரு போராளியாக பாடகானாக நடிகனாக தமிழர் தேசத்தின் விடுதலைக்காக ஓயாது உழைத்த ஒரு போராளி. 75இற்கு மேற்பட்ட தேசப்பாடல்களைப் பாடியவர். கலைஞனாய் இயங்கியவன் 01.08.1997அன்று களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்)

Edited by shanthy
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.