Jump to content

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.


Recommended Posts

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழின் அவசியம் பற்றி,

யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்கள் ஆதாரங்களுடன் கேட்கப் படலாம்.அதனை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்லலாம்.மடியில் கனம் இல்லாதவர்கள் பதில் சொல்லலாம்.இதனை விட்டு விட்டு யாழை எந்த வித சொந்த நலனும் இன்றி நடாத்தும் மோகனுக்கு அலுப்புக் கொடுப்பது எந்த நியாயும் இருப்பகாகத் தெரியவில்லை.இன்று யாழைப் போல் சுயாதினமாக கருத்துத் தடைகள் இன்றி இயங்கும் தளம் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.

மோகன் அண்ணாவுக்கு இருக்கும் பிரச்சினைகள்.

நேர விரயம் - மட்டுறுகினர்கள் மோகன் அண்ணாவின் வேலைப் பளுவைப் பகிர்ந்து கொள்ளல்.தொழில் நுட்பம் அறிந்தவர்கள் உதவி செய்தல்.

பண விரயம் - உறுப்பினர் ஆகிறவர்கள் ஒரு சிறு தொகையை சந்தாவாக வழங்குதல் - பேபால் மூலம் இதனைச் செய்யலாம்.

தலையிடி- உறுப்பினர்களிடையே இருக்கும் பிரச்சினைகளை மோகன் அண்ணா மீது திணிப்பதை நிற்பாட்டினால் இகனை இலகுவாக நிற்பாட்டலாம்.பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் எழுதினால் இதனை இலகுவாக நடைமுறைப் படுத்தலாம்.

மேலே எழுதியவை நடைமுறைப்படுத்தா விடின் இன்னும் சில மாதங்களில் யாழ் மூடப்படுவது தவிர்க்க முடியாது போகும்.எனக்கு யாழ் நிற்பாட்டப்படுவது கவலை அழிக்கிறகு.ஆனால் நாங்கள் ஒரு தனி மனிதரின் வாழ்க்கையோடு விளையாட முடியாது.எங்கள் எல்லாருக்கும் இருப்பதைப் போல் மோகன் அண்ணாவுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கிறார்கள்.அதனை அவர் நிச்சயமாகக் கருத்தில் எடுக்க வேண்டும்.

பொறுப்புணர்வுடன் இதனை அணுகி ,உங்கள் கருத்துக்களை, ஆதரவை மோகன் அண்ணாவுக்கு வழங்கும் படியும், நான் மேலே சொன்ன விடயங்களுக்கு ஆதரவு நல்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.அல்லது உங்களிடம் வேறு தீர்வுகள் இருந்தால் அவற்றையும் எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி Narathar, நானும் யாழ் களத்தை 2005 ல் இருந்து பதிவுகளை ஆர்வமாக படிப்பவன் கிட்டடியில்தான் யாழுடன் இனைத்து கொண்டேன், உங்களுடைய கருத்துகள் நூறு வீதம் உண்மை, நீங்கள் சென்ன மாதிரி நான் ரெடி சந்தா உறுப்பினராக (அதற்காக $1000 கோட்க வேண்டாம்), உங்கள் கலகம் நன்மையில் முடிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழின் அவசியம் பற்றி,

இன்று யாழைப் போல் சுயாதினமாக கருத்துத் தடைகள் இன்றி இயங்கும் தளம் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.

மோகன் அண்ணாவுக்கு இருக்கும் பிரச்சினைகள்.

பண விரயம் - உறுப்பினர் ஆகிறவர்கள் ஒரு சிறு தொகையை சந்தாவாக வழங்குதல் - பேபால் மூலம் இதனைச் செய்யலாம்.

சந்தாக்காரனாக நான் இணைய தயார்.....சந்தா விபரங்களை அறியத் தரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவோ.. வேறு யாழ் கள நிர்வாக உறவுகளோ.. இந்த செய்தியில் உள்ள உள்ளடக்கங்களை உறுதி செய்தால் மட்டும் மேற்கொண்டு சிந்திக்க முடியும். :)

(காரணம் திண்ணையில் மேகன் அண்ணா இப்படிக் குறிப்பிட்டுள்ளார்..

மோகன் : (01 August 2011 - 07:46 PM) தொடர்ச்சியாக சில புதுப்பித்தல் வேலைகள் செய்து கொண்டிருப்பதால் இடையிடையே யாழ் இணைய வழங்கியில் தடங்கல்கள் ஏற்படும். )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் "திறந்த உரையாடல்கள்" அனுமதிக்கப்பட்டிருந்தாலும், களத்தின் எதிர்காலம் கள உறவுகளின் கைகளில் முழுமையாக இல்லை! "பே பால்" கணக்கின் இணைப்பை முகப்பிலும், கருத்துக்களத்திலும் இணைத்தால் உதவக்கூடியவர்கள் கட்டாயம் உதவுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் தொடர நானும் சந்தாதாரராக இணைய சம்மதிக்கின்றேன்

சந்தாக்காரனாக நான் இணைய தயார்.....சந்தா விபரங்களை அறியத் தரவும்

நீங்கள் இரண்டு முறை சந்தா கட்ட வேண்டும் ஜில் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா விபரங்களை யாழ் களத்தின் ஒரு பகுதியில் இட்டால்,மனச்சாட்சி உள்ளவர்கள் சந்தா கட்டக் கூடியதாக இருக்கும்!

இந்த நாளையில கல்யாண வீட்டுக்குப் போகேக்குள்ள கூட, என்வலப்போட போகாட்டால் ஒரு மாதிரியாப் பார்க்கிறாங்கள்!

யாழ் களம் மட்டும் இன்னும், சன்னிதிக் கந்தன் மாதிரி!!!! :wub:

Link to comment
Share on other sites

முன்பும் கூறியதுதான். சந்தாக் கட்டணம் வசூலிப்பது மிக இலகுவான முறை. நான் இணையத் தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழின் அவசியம் பற்றி,

யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்கள் ஆதாரங்களுடன் கேட்கப் படலாம்.அதனை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்லலாம்.மடியில் கனம் இல்லாதவர்கள் பதில் சொல்லலாம்.இதனை விட்டு விட்டு யாழை எந்த வித சொந்த நலனும் இன்றி நடாத்தும் மோகனுக்கு அலுப்புக் கொடுப்பது எந்த நியாயும் இருப்பகாகத் தெரியவில்லை.இன்று யாழைப் போல் சுயாதினமாக கருத்துத் தடைகள் இன்றி இயங்கும் தளம் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.

மோகன் அண்ணாவுக்கு இருக்கும் பிரச்சினைகள்.

நேர விரயம் - மட்டுறுகினர்கள் மோகன் அண்ணாவின் வேலைப் பளுவைப் பகிர்ந்து கொள்ளல்.தொழில் நுட்பம் அறிந்தவர்கள் உதவி செய்தல்.

பண விரயம் - உறுப்பினர் ஆகிறவர்கள் ஒரு சிறு தொகையை சந்தாவாக வழங்குதல் - பேபால் மூலம் இதனைச் செய்யலாம்.

தலையிடி- உறுப்பினர்களிடையே இருக்கும் பிரச்சினைகளை மோகன் அண்ணா மீது திணிப்பதை நிற்பாட்டினால் இகனை இலகுவாக நிற்பாட்டலாம்.பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் எழுதினால் இதனை இலகுவாக நடைமுறைப் படுத்தலாம்.

மேலே எழுதியவை நடைமுறைப்படுத்தா விடின் இன்னும் சில மாதங்களில் யாழ் மூடப்படுவது தவிர்க்க முடியாது போகும்.எனக்கு யாழ் நிற்பாட்டப்படுவது கவலை அழிக்கிறகு.ஆனால் நாங்கள் ஒரு தனி மனிதரின் வாழ்க்கையோடு விளையாட முடியாது.எங்கள் எல்லாருக்கும் இருப்பதைப் போல் மோகன் அண்ணாவுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கிறார்கள்.அதனை அவர் நிச்சயமாகக் கருத்தில் எடுக்க வேண்டும்.

பொறுப்புணர்வுடன் இதனை அணுகி ,உங்கள் கருத்துக்களை, ஆதரவை மோகன் அண்ணாவுக்கு வழங்கும் படியும், நான் மேலே சொன்ன விடயங்களுக்கு ஆதரவு நல்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.அல்லது உங்களிடம் வேறு தீர்வுகள் இருந்தால் அவற்றையும் எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நாரதர் அவர்களுக்கு நன்றி.

ஒரு சிறந்த அரசியல் மற்றும் குமுகாயச் செயல்நெறிக்கான தளமாக இருக்கும் யாழ்களம் தொடர்ந்து இயங்கும் விதமான செயற்பாடுகளுக்கு நானும் என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்வேன். தமிழ்க்குமுகாயத்தின்பால் நின்று நியாயாபூர்வமாகவும் எதிர்நிலையாகவும் சிந்திப்போரிடையே புரிந்துணர்வையும் கருத்தியல் பரிமாற்றத்தையும் ஏற்படுத்திவரும் யாழ்க்களம் பாதுகாக்கப்படுவது அவசியமானது.

கள உறவுகள் கண்ணியமான கருத்தாடலை மேற்கொள்வதூடாகப் பொறுப்பாளரை நெருக்கடிக்குள்வாக்குவதை தவிர்ப்பதோடு, கருத்தெளுதும்போது தானும் இதன் பங்காளன் என்ற நிலையில் சிந்தித்துச் செயற்படும் பாங்கு ஏற்படுமாயின் திரு மோகனவர்களது பாதிவேலைப்பளு குறைந்துவிடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.

Link to comment
Share on other sites

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா பற்றி முன்பு பலமுறை பேசப்பட்டது. பரிந்துரைக்கப்பட்டது

ஆனால் மேலே ஒண்டிப்புலி கூறிய காரணங்களால் மோகன் அண்ணாவால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா பற்றி முன்பு பலமுறை பேசப்பட்டது. பரிந்துரைக்கப்பட்டது

ஆனால் மேலே ஒண்டிப்புலி கூறிய காரணங்களால் மோகன் அண்ணாவால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இன்னுமுருக்க முயற்ச்சி செய்து பார்பதுதனே , ஏன் வாக்கெட்டுப்பு நடத்த கூடாது with various options

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

ஒண்டிப்புலி சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சந்தா கட்டுவதென்பது யாழை தொடர்ந்து நடத்திச் செல்ல, ஒவ்வொருவரும் மனச்சாட்சிப் படி கட்டுவது.

அதற்காக..... அடாத்தாக கருத்து எழுத முடியாது. அப்படி எழுதினால் வழக்கம் போல்... மட்டுறுத்தினர் கத்தியை பாச்ச வேண்டும்.

ஒண்டிப்புலியின் இரண்டாவது, மூன்றாவது கருத்தை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். யாழ் களம் என்றால்... அது மோகன் அண்ணாவின் பிள்ளை. அதனை வேறு யாரும் பராமரிப்பது அழகல்ல.

பிற்குறிப்பு: நான் சந்தா கட்ட ரெடி.

Link to comment
Share on other sites

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது சரியானதாக இருக்காதது ஆனால் யாழை வியாபர நோக்கில் கொண்டு செல்வது சிறந்ததாக இருக்கும் அதில் கருத்துக் களம் ஒரு பகுதியாக இருந்துட்டு போகட்டும்.

நான் நீண்ட நாட்கள் யோசித்தேன் ஏன் மோகன் அண்ணா இன்னும் யாழை மாற்றிஅமைக்கவில்லை என்று? ஆனால் அதன் சரி பிழைகளை பற்றி எனக்கு தெரியாது.

மோகன் அண்ணாவிடம் எனது தனிப்பட்ட அட்வைஸ் நாளக் கடத்தாது யாழை மாற்றி வியாபர நோக்கமாக மாற்றுவது ஒன்று தான் யாழ் நிலைப்பதுக்கும் உங்களுக்கும் நல்லது.

நேற்று ஆர்ம்பித்த பல இணையங்கள் இன்று வருவாயில் கொடிகட்டிபறக்கிறது ஆனால் நீங்கள் இன்னும் தேசியம் தேசியம் என்ற காணல்நீரில் யாழையும் உங்கள் நேரத்தையும் வீணாக்கி கொண்டு இருக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

[ஃஉஒடெ நமெ='ஒண்டி புலி' டிமெச்டம்ப்='1312282163' பொச்ட்='678566']

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

[/ஃஉஒடெ]

சந்தா என்பது கட்டாயம் கட்ட வேண்டியது அல்ல, யாழுக்கு நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் அதனைச் செய்ய ஒரு வழிமுறை.அது கட்டாயத்தின் அடிப்படையில் அன்றி விருப்பின் அடிப்படையில் செய்யப்பட வேண்டியது. இதுவும் நடக்காவிட்டால் மோகன் அண்ணா மூன்றாவது வழிமுறையையே மேற்கொள்வார்.என்னைப் பொறுக்கவரை இது மிகவும் வேதனையான விடயம்.யாழ் பிழையானவர் கைகளில் செல்லக் கூடாது என்பதற்காகவே அதனை அவர் விற்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராம்ப யாழ்களத்தில் எழுதப்பட்ட சுயமான ஆக்கங்களுக்கும், பின்னராக வருகின்ற களத்தின் கருத்துக்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் எத்தனை ஆக்கங்கள் யாராலும் எழுதப்படுகின்றன என்று கேட்டால் அது பூச்சியமே! கடந்த ஆறுமாதம், ஏன் ஒரு வருடகாலப்பகுதியினை மீளப் பார்வையிட்டால் எத்தனை ஆக்கங்கள் வந்திருக்கின்றன. கவிதைப் பகுதியைத் தவிர, மற்றவவை எல்லாம் வேறு எங்காவது எழுதப்படுகின்ற ஆக்கங்களை இணைத்து அதற்கான விமர்சனங்களாகவே போகுகின்றன.

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

பல தடவை நிறுத்துவதற்கான வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்கின்றார். ஒவ்வொரு தடவையும் வேண்டாம் என்ற வேண்கோளை அவர் மதித்திருக்கின்றார். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதாகத் தான்நிலை போய்க் கொண்டிருக்கின்றது.

மோகன் அண்ணாவிடம் ஒரு வேண்கோள்.

யாழ்களத்தின் ஆரம்பத்தில் இருந்து 2007, அல்லது 2009ம் வரையிலான கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியுமா??(backup)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராம்ப யாழ்களத்தில் எழுதப்பட்ட சுயமான ஆக்கங்களுக்கும், பின்னராக வருகின்ற களத்தின் கருத்துக்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் எத்தனை ஆக்கங்கள் யாராலும் எழுதப்படுகின்றன என்று கேட்டால் அது பூச்சியமே! கடந்த ஆறுமாதம், ஏன் ஒரு வருடகாலப்பகுதியினை மீளப் பார்வையிட்டால் எத்தனை ஆக்கங்கள் வந்திருக்கின்றன. கவிதைப் பகுதியைத் தவிர, மற்றவவை எல்லாம் வேறு எங்காவது எழுதப்படுகின்ற ஆக்கங்களை இணைத்து அதற்கான விமர்சனங்களாகவே போகுகின்றன.

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

பல தடவை நிறுத்துவதற்கான வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்கின்றார். ஒவ்வொரு தடவையும் வேண்டாம் என்ற வேண்கோளை அவர் மதித்திருக்கின்றார். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதாகத் தான்நிலை போய்க் கொண்டிருக்கின்றது.

மோகன் அண்ணாவிடம் ஒரு வேண்கோள்.

யாழ்களத்தின் ஆரம்பத்தில் இருந்து 2007, அல்லது 2009ம் வரையிலான கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியுமா??(backup)

யாழில் வரும் ஆக்கங்கள் தொடர்பில் நீங்கள் முன் வைத்திருக்கும் சில குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. யாழ் ஆரம்பித்த காலம் தொட்டு எல்லா வயதினரும் உறுப்பினராக இருந்துள்ளனர். இரட்டை அர்த்தக் கதைகள் ஆண்.. பெண் இரு தரப்பாலும் கதைக்கப்பட்டுள்ளன. சினிமா பேசப்பட்டுள்ளது. கொசிப் கதைக்கப்பட்டுள்ளது. ஏன் தனிநபர் வசைபாடல்கள் நிகழ்ந்துள்ளன. ஏன் நீங்கள் யாழோடு தீவிரமாக இருந்த காலத்திலும் பக்கம் பக்கமாக அரட்டை அடித்திருக்கிறீனம்.. அதற்காக யாழ் அன்று போல் இன்றில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

காலப் போக்கில் இளைஞர்களாக ... இளைஞிகளாக பதிந்தவர்கள்.. வாழ்க்கையில்.... செட்டிலாகி விட்டார்கள். ஒரு சிலரைத் தவிர வேறு பலர் இங்கு இப்போது இல்லை. ஆனால் அந்த நடுத்தர வயதுக்காரர்கள் அப்போதும் போல இப்போதும் இருக்கினம். அவர்களே இந்த யாழைக் கொண்டும் நடத்தினம். ஒரு சிலரைத் தவிர..!

என்னைப் பொறுத்தவரை யாழ் கருத்தியல் ரீதியாக (கள உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்தல்ல) தொய்ந்திருப்பதாகத் தெரியவில்லை. யாழில் வெறும் காதல் கவிதைகள் குவிந்த காலம் போய் இன்று பலதரப்பட்ட விடயங்களும் பதியப்படுகின்றன. கடந்த ஆறு மாத காலத்துள்.. என்னால் மட்டும் சுயமாக பதியப்பட்ட பல ஆக்கங்களை இனங்காட்ட முடியும். என்னைப் பொறுத்த வரை யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் எழுதக் கிடைக்காத சில விடயங்களை இப்போ எழுதச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.

யாழின் ஆரம்ப காலத்தில்.. ஒருவர் எழுத்துப் பிழை விட்டாலே.. அவரை கிண்டலடித்து வெளியேற்றிய நிகழ்வுகள் உண்டு. இன்று அப்படி ஒரு நிலையில்லை.

யாழின் இடைக்காலத்தில் இள வயதினரின் அரட்டை கோலோஞ்சி இருந்தது.

இன்றைய உறவுகள் முன்னைய தவறுகள் பலவற்றை திருத்தி.. அவற்றைக் கடந்து நிற்கிறார்கள். இரட்டை அர்த்தம் பொதிந்த வசனங்கள் என்ன.. முழுத் தூசணத்தோடு எழுதப்பட்ட தனிமடல்களைக் கூட.. அதுவும் யாழ் கள பெண் பெயரில் இருந்த உறுப்பினர்கள்.. எந்த நியாயமும் இன்றி எழுதி அனுப்பி இருந்த கேவலங்கள் கூட முன்னர் நடந்துள்ளன.

ஆகவே காலத்தை ஒப்பிட முடியாது. நாங்கள் எப்படி செயற்படுறம் என்பதில தான் யாழின் பயன்படு திறன் தங்கியுள்ளது.

நீங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வினவுகிறேன்.. நீங்கள் யாழில் இணைந்ததில் இருந்து உங்களின் சுய ஆக்கமாக யாழுக்காக பதிந்த ஒரு பதிவை கள உறவுகளுக்கு இனங்காட்ட முடியுமா..??! அதற்காக நீங்கள் திறமையற்றவர் என்று கூற முடியாது. அதேபோல் தான் மற்றவர்களுக்கும் இருக்கலாம்.

யாழில் உள்ள ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கக் கூடும். அதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர் இவர் போல இல்லை.. என்ற ஒப்பீடு தவறானது. யாழ் அப்போது போல இப்போ இல்லை என்ற ஒப்பீடும் தவறானது. யாழ் எப்போதும் நல்லவற்றை காவ வேண்டும் என்ற எண்ணமே சிறப்பானது.

மற்றும்படி.. உங்களையோ.. அல்லது எவரையுமோ குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இதனை பதிவிடவில்லை. எண்ணத்தில் உதித்ததை சொல்ல முற்பட்டுள்ளேன். இதற்காக என்னோட சண்டைக்கு வாறதில்லை.

நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

-----

யாழில் வரும் ஆக்கங்கள் தொடர்பில் நீங்கள் முன் வைத்திருக்கும் சில குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. யாழ் ஆரம்பித்த காலம் தொட்டு எல்லா வயதினரும் உறுப்பினராக இருந்துள்ளனர். இரட்டை அர்த்தக் கதைகள் ஆண்.. பெண் இரு தரப்பாலும் கதைக்கப்பட்டுள்ளன. சினிமா பேசப்பட்டுள்ளது. கொசிப் கதைக்கப்பட்டுள்ளது. ஏன் தனிநபர் வசைபாடல்கள் நிகழ்ந்துள்ளன. ஏன் நீங்கள் யாழோடு தீவிரமாக இருந்த காலத்திலும் பக்கம் பக்கமாக அரட்டை அடித்திருக்கிறீனம்.. அதற்காக யாழ் அன்று போல் இன்றில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

காலப் போக்கில் இளைஞர்களாக ... இளைஞிகளாக பதிந்தவர்கள்.. வாழ்க்கையில்.... செட்டிலாகி விட்டார்கள். ஒரு சிலரைத் தவிர வேறு பலர் இங்கு இப்போது இல்லை. ஆனால் அந்த நடுத்தர வயதுக்காரர்கள் அப்போதும் போல இப்போதும் இருக்கினம். அவர்களே இந்த யாழைக் கொண்டும் நடத்தினம். ஒரு சிலரைத் தவிர..!

என்னைப் பொறுத்தவரை யாழ் தொய்ந்திருப்பதாகத் தெரியவில்லை. யாழில் வெறும் காதல் கவிதைகள் குவிந்த காலம் போய் இன்று பலதரப்பட்ட விடயங்களும் பதியப்படுகின்றன. கடந்த ஆறு மாத காலத்துள்.. என்னால் மட்டும் சுயமாக பதியப்பட்ட பல ஆக்கங்களை இனங்காட்ட முடியும். என்னைப் பொறுத்த வரை யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் எழுதக் கிடைக்காத சில விடயங்களை இப்போ எழுதச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.

யாழின் ஆரம்ப காலத்தில்.. ஒருவர் எழுத்துப் பிழை விட்டாலே.. அவரை கிண்டலடித்து வெளியேற்றிய நிகழ்வுகள் உண்டு. இன்று அப்படி ஒரு நிலையில்லை.

யாழின் இடைக்காலத்தில் இள வயதினரின் அரட்டை கோலோஞ்சி இருந்தது.

இன்றைய உறவுகள் முன்னைய தவறுகள் பலவற்றை திருத்தி.. அவற்றைக் கடந்து நிற்கிறார்கள். இரட்டை அர்த்தம் பொதிந்த வசனங்கள் என்ன.. முழுத் தூசணத்தோடு எழுதப்பட்ட தனிமடல்களைக் கூட.. அதுவும் யாழ் கள பெண் உறுப்பினர்கள்.. எந்த நியாயமும் இன்றி எழுதி அனுப்பி இருந்த கேவலங்கள் கூட முன்னர் நடந்துள்ளன.

ஆகவே காலத்தை ஒப்பிட முடியாது. நாங்கள் எப்படி செயற்படுறம் என்பதில தான் யாழின் பயன்படு திறன் தங்கியுள்ளது.

நீங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வினவுகிறேன்.. நீங்கள் யாழில் இணைந்ததில் இருந்து உங்களின் சுய ஆக்கமாக யாழுக்காக பதிந்த ஒரு பதிவை கள உறவுகளுக்கு இனங்காட்ட முடியுமா..??! அதற்காக நீங்கள் திறமையற்றவர் என்று கூற முடியாது. அதேபோல் தான் மற்றவர்களுக்கும் இருக்கலாம்.

யாழில் உள்ள ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கக் கூடும். அதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர் இவர் போல இல்லை.. என்ற ஒப்பீடு தவறானது. யாழ் அப்போது போல இப்போ இல்லை என்ற ஒப்பீடும் தவறானது. யாழ் எப்போதும் நல்லவற்றை காவ வேண்டும் என்ற எண்ணமே சிறப்பானது.

மற்றும்படி.. உங்களையோ.. அல்லது எவரையுமோ குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இதனை பதிவிடவில்லை. எண்ணத்தில் உதித்ததை சொல்ல முற்பட்டுள்ளேன். இதற்காக என்னோட சண்டைக்கு வாறதில்லை.

நன்றி. :)

தூயவனின் ஆதங்கத்துக்கு, நெடுக்ஸின் பதில் பொருத்தமாக உள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின் பலர் மனம் சோர்ந்தது உண்மை.

அதற்கு, நீங்கள் மர்றவர்களை குற்றம் சாட்டாமல்....

முள்ளிவாய்க்காலின் பின் எத்தனை உருப்படியான பதிவுகளை, பதிந்திருக்கின்றீர்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

Link to comment
Share on other sites

- நம்மில் ஒவ்வொருவரும் தாம் ஒரு மட்டுறுத்தினர் என எண்ணி ஒவ்வொரு பதிவையும் பதிந்தால் களம் சிறப்பாக இருக்கும்.

- ஆக்கங்களை பதிவு செய்பவர்களுக்கு ஏதாவது வழியில் ஊக்கம் தரப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

வேறு ஒரு தளத்தில் நான் icash பற்றி அறிந்திருக்கின்றேன்.

இது உண்ணையான பணம் இல்லை. உதாரணமாக ஒருவர் களத்தில் ஒரு நல்ல பதிவை பதிந்தால் அதனை ஊக்கப்படடுத்த விரும்புவோர் அவரிற்கு icash கொடுக்கலாம். அதை வைத்து அவா; தனக்கு பிடித்தவர்களிற்கு பொருட்கள் (சும்மா விளையாட்டிற்கு) அன்பளிப்பு செய்யலாம். அல்லது அவரும் வேறு ஒருவின் ஆக்கத்திற்கு icash அன்பளிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் ஆதங்கத்துக்கு, நெடுக்ஸின் பதில் பொருத்தமாக உள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின் பலர் மனம் சோர்ந்தது உண்மை.

அதற்கு, நீங்கள் மர்றவர்களை குற்றம் சாட்டாமல்....

முள்ளிவாய்க்காலின் பின் எத்தனை உருப்படியான பதிவுகளை, பதிந்திருக்கின்றீர்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

சிறித்தம்பி! தூயவன் பாலியல் சம்பந்தமாக எதுவும் கதைக்க மாட்டார்.ஆனால் இதர சம்பவங்கள் அனைத்திலும் மகாகெட்டிக்காரர்?

அதிலும் தனிமனிதர் தாக்குதலுக்கு இவரிடம் எல்லோரும் பாடம் எடுக்கலாம்.மட்டுறுத்தினரை கேட்டால் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வரும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு தளத்தில் நான் icash பற்றி அறிந்திருக்கின்றேன்.

இது உண்ணையான பணம் இல்லை. உதாரணமாக ஒருவர் களத்தில் ஒரு நல்ல பதிவை பதிந்தால் அதனை ஊக்கப்படடுத்த விரும்புவோர் அவரிற்கு icash கொடுக்கலாம். அதை வைத்து அவா; தனக்கு பிடித்தவர்களிற்கு பொருட்கள் (சும்மா விளையாட்டிற்கு) அன்பளிப்பு செய்யலாம். அல்லது அவரும் வேறு ஒருவின் ஆக்கத்திற்கு icash அன்பளிக்கலாம்.

அதுக்குத்தான்..... பச்சைப் புள்ளி நடைமுறையில் இருக்கே....

இதை வைச்சு, மோகன் அண்ணா என்ன செய்ய முடியும்?

அவரும் இங்கை மினக்கெட்டு... கோடு, கச்சேரி எண்டு போனால்... அங்கு, பச்சைப் புள்ளியை காட்ட முடியுமா? கந்தசாமி.

சரியான விபரம் கெட்ட... பயலாக இருக்கிறாங்கள். நம்ம பசங்கள். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! தூயவன் பாலியல் சம்பந்தமாக எதுவும் கதைக்க மாட்டார்.ஆனால் இதர சம்பவங்கள் அனைத்திலும் மகாகெட்டிக்காரர்?

அதிலும் தனிமனிதர் தாக்குதலுக்கு இவரிடம் எல்லோரும் பாடம் எடுக்கலாம்.மட்டுறுத்தினரை கேட்டால் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வரும். :lol:

இன்று... அவர் வேறொரு பதிவில், உங்கள் மீது நடத்திய தனி மனித தாக்குதலை பார்த்தேன் குமாரசாமியண்ணை.

ஒரு பானை, சோத்துக்கு.... ஒரு சோறு பதம் என்று... சும்மாவா சொன்னார்கள்.

ரேக் இற் ஈசி அண்ணை. நம்ம பையன் தான் தூயவன். என்ன குழப்பமோ... ஆரறிவர். :)

Link to comment
Share on other sites

அதுக்குத்தான்..... பச்சைப் புள்ளி நடைமுறையில் இருக்கே....

இதை வைச்சு, மோகன் அண்ணா என்ன செய்ய முடியும்?

அவரும் இங்கை மினக்கெட்டு... கோடு, கச்சேரி எண்டு போனால்... அங்கு, பச்சைப் புள்ளியை காட்ட முடியுமா? கந்தசாமி.

சரியான விபரம் கெட்ட... பயலாக இருக்கிறாங்கள். நம்ம பசங்கள். :D:lol:

சாத்தியமோ இல்லையோ ஒருவரின் புதுமையான கருத்துக்களுக்கு ஊக்கம் தரல் வேண்டும்.

இன்னொருவிதமாக பார்ப்போம், களத்தில் 'reputation' என்று ஒன்று உண்டு. இதில் 1000 எடுப்பவர்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்?

Link to comment
Share on other sites

எனது உதாரணத்தை (icash) நடைமுறைபடுத்த எவ்வளவு நேரம் செலவாகும் என்பது எனக்கு தெரியாது. இது மோகன் அண்ணவிற்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.

நீங்கள் சொன்ன பச்சைப்புள்ளி ஒருவரின் கருத்துக்கு மட்டுமே. அது அவரின் profilஇல் வராது என்று நினைக்கின்றேன்.

தற்பொழுது உள்ள நடைமுறையில் ஒருவரின் ஆக்கங்களின் எண்ணிக்கைகளை வைத்து தான் அவரை பற்றி மதிப்பிட முடிகிறது. ஆனால் அது ஒரு குத்துமதிப்பான மதிப்பீடே. காரணம் நான் "ஆம்" என்று எழுதினாலும் அது எனது கருத்துக்களின் எண்ணிக்கையை அதிக்கரிக்கின்றது.

ஆனால் icash சற்று வித்தியாசம். இங்கே பயனுள்ள ஆக்கங்களிற்கு உறுப்பினார்கள் அன்பளிப்பு செய்யலாம். ஒருவரிடம் எவ்வளவு icash உள்ளது என்பதை வைத்து அவரின் யாழ்கள மதிப்பீட்டை நாம் ஓரளவு கணித்துவிட முடியும். மற்றும் உறுப்பினார்கள் மேலும் நல்ல ஆக்கங்களை தர ஊக்குவிப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.