Jump to content

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.


Recommended Posts

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழின் அவசியம் பற்றி,

யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்கள் ஆதாரங்களுடன் கேட்கப் படலாம்.அதனை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்லலாம்.மடியில் கனம் இல்லாதவர்கள் பதில் சொல்லலாம்.இதனை விட்டு விட்டு யாழை எந்த வித சொந்த நலனும் இன்றி நடாத்தும் மோகனுக்கு அலுப்புக் கொடுப்பது எந்த நியாயும் இருப்பகாகத் தெரியவில்லை.இன்று யாழைப் போல் சுயாதினமாக கருத்துத் தடைகள் இன்றி இயங்கும் தளம் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.

மோகன் அண்ணாவுக்கு இருக்கும் பிரச்சினைகள்.

நேர விரயம் - மட்டுறுகினர்கள் மோகன் அண்ணாவின் வேலைப் பளுவைப் பகிர்ந்து கொள்ளல்.தொழில் நுட்பம் அறிந்தவர்கள் உதவி செய்தல்.

பண விரயம் - உறுப்பினர் ஆகிறவர்கள் ஒரு சிறு தொகையை சந்தாவாக வழங்குதல் - பேபால் மூலம் இதனைச் செய்யலாம்.

தலையிடி- உறுப்பினர்களிடையே இருக்கும் பிரச்சினைகளை மோகன் அண்ணா மீது திணிப்பதை நிற்பாட்டினால் இகனை இலகுவாக நிற்பாட்டலாம்.பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் எழுதினால் இதனை இலகுவாக நடைமுறைப் படுத்தலாம்.

மேலே எழுதியவை நடைமுறைப்படுத்தா விடின் இன்னும் சில மாதங்களில் யாழ் மூடப்படுவது தவிர்க்க முடியாது போகும்.எனக்கு யாழ் நிற்பாட்டப்படுவது கவலை அழிக்கிறகு.ஆனால் நாங்கள் ஒரு தனி மனிதரின் வாழ்க்கையோடு விளையாட முடியாது.எங்கள் எல்லாருக்கும் இருப்பதைப் போல் மோகன் அண்ணாவுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கிறார்கள்.அதனை அவர் நிச்சயமாகக் கருத்தில் எடுக்க வேண்டும்.

பொறுப்புணர்வுடன் இதனை அணுகி ,உங்கள் கருத்துக்களை, ஆதரவை மோகன் அண்ணாவுக்கு வழங்கும் படியும், நான் மேலே சொன்ன விடயங்களுக்கு ஆதரவு நல்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.அல்லது உங்களிடம் வேறு தீர்வுகள் இருந்தால் அவற்றையும் எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி Narathar, நானும் யாழ் களத்தை 2005 ல் இருந்து பதிவுகளை ஆர்வமாக படிப்பவன் கிட்டடியில்தான் யாழுடன் இனைத்து கொண்டேன், உங்களுடைய கருத்துகள் நூறு வீதம் உண்மை, நீங்கள் சென்ன மாதிரி நான் ரெடி சந்தா உறுப்பினராக (அதற்காக $1000 கோட்க வேண்டாம்), உங்கள் கலகம் நன்மையில் முடிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழின் அவசியம் பற்றி,

இன்று யாழைப் போல் சுயாதினமாக கருத்துத் தடைகள் இன்றி இயங்கும் தளம் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.

மோகன் அண்ணாவுக்கு இருக்கும் பிரச்சினைகள்.

பண விரயம் - உறுப்பினர் ஆகிறவர்கள் ஒரு சிறு தொகையை சந்தாவாக வழங்குதல் - பேபால் மூலம் இதனைச் செய்யலாம்.

சந்தாக்காரனாக நான் இணைய தயார்.....சந்தா விபரங்களை அறியத் தரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவோ.. வேறு யாழ் கள நிர்வாக உறவுகளோ.. இந்த செய்தியில் உள்ள உள்ளடக்கங்களை உறுதி செய்தால் மட்டும் மேற்கொண்டு சிந்திக்க முடியும். :)

(காரணம் திண்ணையில் மேகன் அண்ணா இப்படிக் குறிப்பிட்டுள்ளார்..

மோகன் : (01 August 2011 - 07:46 PM) தொடர்ச்சியாக சில புதுப்பித்தல் வேலைகள் செய்து கொண்டிருப்பதால் இடையிடையே யாழ் இணைய வழங்கியில் தடங்கல்கள் ஏற்படும். )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் "திறந்த உரையாடல்கள்" அனுமதிக்கப்பட்டிருந்தாலும், களத்தின் எதிர்காலம் கள உறவுகளின் கைகளில் முழுமையாக இல்லை! "பே பால்" கணக்கின் இணைப்பை முகப்பிலும், கருத்துக்களத்திலும் இணைத்தால் உதவக்கூடியவர்கள் கட்டாயம் உதவுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் தொடர நானும் சந்தாதாரராக இணைய சம்மதிக்கின்றேன்

சந்தாக்காரனாக நான் இணைய தயார்.....சந்தா விபரங்களை அறியத் தரவும்

நீங்கள் இரண்டு முறை சந்தா கட்ட வேண்டும் ஜில் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா விபரங்களை யாழ் களத்தின் ஒரு பகுதியில் இட்டால்,மனச்சாட்சி உள்ளவர்கள் சந்தா கட்டக் கூடியதாக இருக்கும்!

இந்த நாளையில கல்யாண வீட்டுக்குப் போகேக்குள்ள கூட, என்வலப்போட போகாட்டால் ஒரு மாதிரியாப் பார்க்கிறாங்கள்!

யாழ் களம் மட்டும் இன்னும், சன்னிதிக் கந்தன் மாதிரி!!!! :wub:

Link to comment
Share on other sites

முன்பும் கூறியதுதான். சந்தாக் கட்டணம் வசூலிப்பது மிக இலகுவான முறை. நான் இணையத் தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழின் அவசியம் பற்றி,

யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்கள் ஆதாரங்களுடன் கேட்கப் படலாம்.அதனை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்லலாம்.மடியில் கனம் இல்லாதவர்கள் பதில் சொல்லலாம்.இதனை விட்டு விட்டு யாழை எந்த வித சொந்த நலனும் இன்றி நடாத்தும் மோகனுக்கு அலுப்புக் கொடுப்பது எந்த நியாயும் இருப்பகாகத் தெரியவில்லை.இன்று யாழைப் போல் சுயாதினமாக கருத்துத் தடைகள் இன்றி இயங்கும் தளம் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.

மோகன் அண்ணாவுக்கு இருக்கும் பிரச்சினைகள்.

நேர விரயம் - மட்டுறுகினர்கள் மோகன் அண்ணாவின் வேலைப் பளுவைப் பகிர்ந்து கொள்ளல்.தொழில் நுட்பம் அறிந்தவர்கள் உதவி செய்தல்.

பண விரயம் - உறுப்பினர் ஆகிறவர்கள் ஒரு சிறு தொகையை சந்தாவாக வழங்குதல் - பேபால் மூலம் இதனைச் செய்யலாம்.

தலையிடி- உறுப்பினர்களிடையே இருக்கும் பிரச்சினைகளை மோகன் அண்ணா மீது திணிப்பதை நிற்பாட்டினால் இகனை இலகுவாக நிற்பாட்டலாம்.பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் எழுதினால் இதனை இலகுவாக நடைமுறைப் படுத்தலாம்.

மேலே எழுதியவை நடைமுறைப்படுத்தா விடின் இன்னும் சில மாதங்களில் யாழ் மூடப்படுவது தவிர்க்க முடியாது போகும்.எனக்கு யாழ் நிற்பாட்டப்படுவது கவலை அழிக்கிறகு.ஆனால் நாங்கள் ஒரு தனி மனிதரின் வாழ்க்கையோடு விளையாட முடியாது.எங்கள் எல்லாருக்கும் இருப்பதைப் போல் மோகன் அண்ணாவுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கிறார்கள்.அதனை அவர் நிச்சயமாகக் கருத்தில் எடுக்க வேண்டும்.

பொறுப்புணர்வுடன் இதனை அணுகி ,உங்கள் கருத்துக்களை, ஆதரவை மோகன் அண்ணாவுக்கு வழங்கும் படியும், நான் மேலே சொன்ன விடயங்களுக்கு ஆதரவு நல்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.அல்லது உங்களிடம் வேறு தீர்வுகள் இருந்தால் அவற்றையும் எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நாரதர் அவர்களுக்கு நன்றி.

ஒரு சிறந்த அரசியல் மற்றும் குமுகாயச் செயல்நெறிக்கான தளமாக இருக்கும் யாழ்களம் தொடர்ந்து இயங்கும் விதமான செயற்பாடுகளுக்கு நானும் என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்வேன். தமிழ்க்குமுகாயத்தின்பால் நின்று நியாயாபூர்வமாகவும் எதிர்நிலையாகவும் சிந்திப்போரிடையே புரிந்துணர்வையும் கருத்தியல் பரிமாற்றத்தையும் ஏற்படுத்திவரும் யாழ்க்களம் பாதுகாக்கப்படுவது அவசியமானது.

கள உறவுகள் கண்ணியமான கருத்தாடலை மேற்கொள்வதூடாகப் பொறுப்பாளரை நெருக்கடிக்குள்வாக்குவதை தவிர்ப்பதோடு, கருத்தெளுதும்போது தானும் இதன் பங்காளன் என்ற நிலையில் சிந்தித்துச் செயற்படும் பாங்கு ஏற்படுமாயின் திரு மோகனவர்களது பாதிவேலைப்பளு குறைந்துவிடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.

Link to comment
Share on other sites

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா பற்றி முன்பு பலமுறை பேசப்பட்டது. பரிந்துரைக்கப்பட்டது

ஆனால் மேலே ஒண்டிப்புலி கூறிய காரணங்களால் மோகன் அண்ணாவால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா பற்றி முன்பு பலமுறை பேசப்பட்டது. பரிந்துரைக்கப்பட்டது

ஆனால் மேலே ஒண்டிப்புலி கூறிய காரணங்களால் மோகன் அண்ணாவால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இன்னுமுருக்க முயற்ச்சி செய்து பார்பதுதனே , ஏன் வாக்கெட்டுப்பு நடத்த கூடாது with various options

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

ஒண்டிப்புலி சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சந்தா கட்டுவதென்பது யாழை தொடர்ந்து நடத்திச் செல்ல, ஒவ்வொருவரும் மனச்சாட்சிப் படி கட்டுவது.

அதற்காக..... அடாத்தாக கருத்து எழுத முடியாது. அப்படி எழுதினால் வழக்கம் போல்... மட்டுறுத்தினர் கத்தியை பாச்ச வேண்டும்.

ஒண்டிப்புலியின் இரண்டாவது, மூன்றாவது கருத்தை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். யாழ் களம் என்றால்... அது மோகன் அண்ணாவின் பிள்ளை. அதனை வேறு யாரும் பராமரிப்பது அழகல்ல.

பிற்குறிப்பு: நான் சந்தா கட்ட ரெடி.

Link to comment
Share on other sites

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது சரியானதாக இருக்காதது ஆனால் யாழை வியாபர நோக்கில் கொண்டு செல்வது சிறந்ததாக இருக்கும் அதில் கருத்துக் களம் ஒரு பகுதியாக இருந்துட்டு போகட்டும்.

நான் நீண்ட நாட்கள் யோசித்தேன் ஏன் மோகன் அண்ணா இன்னும் யாழை மாற்றிஅமைக்கவில்லை என்று? ஆனால் அதன் சரி பிழைகளை பற்றி எனக்கு தெரியாது.

மோகன் அண்ணாவிடம் எனது தனிப்பட்ட அட்வைஸ் நாளக் கடத்தாது யாழை மாற்றி வியாபர நோக்கமாக மாற்றுவது ஒன்று தான் யாழ் நிலைப்பதுக்கும் உங்களுக்கும் நல்லது.

நேற்று ஆர்ம்பித்த பல இணையங்கள் இன்று வருவாயில் கொடிகட்டிபறக்கிறது ஆனால் நீங்கள் இன்னும் தேசியம் தேசியம் என்ற காணல்நீரில் யாழையும் உங்கள் நேரத்தையும் வீணாக்கி கொண்டு இருக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

[ஃஉஒடெ நமெ='ஒண்டி புலி' டிமெச்டம்ப்='1312282163' பொச்ட்='678566']

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

[/ஃஉஒடெ]

சந்தா என்பது கட்டாயம் கட்ட வேண்டியது அல்ல, யாழுக்கு நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் அதனைச் செய்ய ஒரு வழிமுறை.அது கட்டாயத்தின் அடிப்படையில் அன்றி விருப்பின் அடிப்படையில் செய்யப்பட வேண்டியது. இதுவும் நடக்காவிட்டால் மோகன் அண்ணா மூன்றாவது வழிமுறையையே மேற்கொள்வார்.என்னைப் பொறுக்கவரை இது மிகவும் வேதனையான விடயம்.யாழ் பிழையானவர் கைகளில் செல்லக் கூடாது என்பதற்காகவே அதனை அவர் விற்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராம்ப யாழ்களத்தில் எழுதப்பட்ட சுயமான ஆக்கங்களுக்கும், பின்னராக வருகின்ற களத்தின் கருத்துக்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் எத்தனை ஆக்கங்கள் யாராலும் எழுதப்படுகின்றன என்று கேட்டால் அது பூச்சியமே! கடந்த ஆறுமாதம், ஏன் ஒரு வருடகாலப்பகுதியினை மீளப் பார்வையிட்டால் எத்தனை ஆக்கங்கள் வந்திருக்கின்றன. கவிதைப் பகுதியைத் தவிர, மற்றவவை எல்லாம் வேறு எங்காவது எழுதப்படுகின்ற ஆக்கங்களை இணைத்து அதற்கான விமர்சனங்களாகவே போகுகின்றன.

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

பல தடவை நிறுத்துவதற்கான வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்கின்றார். ஒவ்வொரு தடவையும் வேண்டாம் என்ற வேண்கோளை அவர் மதித்திருக்கின்றார். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதாகத் தான்நிலை போய்க் கொண்டிருக்கின்றது.

மோகன் அண்ணாவிடம் ஒரு வேண்கோள்.

யாழ்களத்தின் ஆரம்பத்தில் இருந்து 2007, அல்லது 2009ம் வரையிலான கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியுமா??(backup)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராம்ப யாழ்களத்தில் எழுதப்பட்ட சுயமான ஆக்கங்களுக்கும், பின்னராக வருகின்ற களத்தின் கருத்துக்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் எத்தனை ஆக்கங்கள் யாராலும் எழுதப்படுகின்றன என்று கேட்டால் அது பூச்சியமே! கடந்த ஆறுமாதம், ஏன் ஒரு வருடகாலப்பகுதியினை மீளப் பார்வையிட்டால் எத்தனை ஆக்கங்கள் வந்திருக்கின்றன. கவிதைப் பகுதியைத் தவிர, மற்றவவை எல்லாம் வேறு எங்காவது எழுதப்படுகின்ற ஆக்கங்களை இணைத்து அதற்கான விமர்சனங்களாகவே போகுகின்றன.

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

பல தடவை நிறுத்துவதற்கான வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்கின்றார். ஒவ்வொரு தடவையும் வேண்டாம் என்ற வேண்கோளை அவர் மதித்திருக்கின்றார். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதாகத் தான்நிலை போய்க் கொண்டிருக்கின்றது.

மோகன் அண்ணாவிடம் ஒரு வேண்கோள்.

யாழ்களத்தின் ஆரம்பத்தில் இருந்து 2007, அல்லது 2009ம் வரையிலான கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியுமா??(backup)

யாழில் வரும் ஆக்கங்கள் தொடர்பில் நீங்கள் முன் வைத்திருக்கும் சில குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. யாழ் ஆரம்பித்த காலம் தொட்டு எல்லா வயதினரும் உறுப்பினராக இருந்துள்ளனர். இரட்டை அர்த்தக் கதைகள் ஆண்.. பெண் இரு தரப்பாலும் கதைக்கப்பட்டுள்ளன. சினிமா பேசப்பட்டுள்ளது. கொசிப் கதைக்கப்பட்டுள்ளது. ஏன் தனிநபர் வசைபாடல்கள் நிகழ்ந்துள்ளன. ஏன் நீங்கள் யாழோடு தீவிரமாக இருந்த காலத்திலும் பக்கம் பக்கமாக அரட்டை அடித்திருக்கிறீனம்.. அதற்காக யாழ் அன்று போல் இன்றில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

காலப் போக்கில் இளைஞர்களாக ... இளைஞிகளாக பதிந்தவர்கள்.. வாழ்க்கையில்.... செட்டிலாகி விட்டார்கள். ஒரு சிலரைத் தவிர வேறு பலர் இங்கு இப்போது இல்லை. ஆனால் அந்த நடுத்தர வயதுக்காரர்கள் அப்போதும் போல இப்போதும் இருக்கினம். அவர்களே இந்த யாழைக் கொண்டும் நடத்தினம். ஒரு சிலரைத் தவிர..!

என்னைப் பொறுத்தவரை யாழ் கருத்தியல் ரீதியாக (கள உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்தல்ல) தொய்ந்திருப்பதாகத் தெரியவில்லை. யாழில் வெறும் காதல் கவிதைகள் குவிந்த காலம் போய் இன்று பலதரப்பட்ட விடயங்களும் பதியப்படுகின்றன. கடந்த ஆறு மாத காலத்துள்.. என்னால் மட்டும் சுயமாக பதியப்பட்ட பல ஆக்கங்களை இனங்காட்ட முடியும். என்னைப் பொறுத்த வரை யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் எழுதக் கிடைக்காத சில விடயங்களை இப்போ எழுதச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.

யாழின் ஆரம்ப காலத்தில்.. ஒருவர் எழுத்துப் பிழை விட்டாலே.. அவரை கிண்டலடித்து வெளியேற்றிய நிகழ்வுகள் உண்டு. இன்று அப்படி ஒரு நிலையில்லை.

யாழின் இடைக்காலத்தில் இள வயதினரின் அரட்டை கோலோஞ்சி இருந்தது.

இன்றைய உறவுகள் முன்னைய தவறுகள் பலவற்றை திருத்தி.. அவற்றைக் கடந்து நிற்கிறார்கள். இரட்டை அர்த்தம் பொதிந்த வசனங்கள் என்ன.. முழுத் தூசணத்தோடு எழுதப்பட்ட தனிமடல்களைக் கூட.. அதுவும் யாழ் கள பெண் பெயரில் இருந்த உறுப்பினர்கள்.. எந்த நியாயமும் இன்றி எழுதி அனுப்பி இருந்த கேவலங்கள் கூட முன்னர் நடந்துள்ளன.

ஆகவே காலத்தை ஒப்பிட முடியாது. நாங்கள் எப்படி செயற்படுறம் என்பதில தான் யாழின் பயன்படு திறன் தங்கியுள்ளது.

நீங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வினவுகிறேன்.. நீங்கள் யாழில் இணைந்ததில் இருந்து உங்களின் சுய ஆக்கமாக யாழுக்காக பதிந்த ஒரு பதிவை கள உறவுகளுக்கு இனங்காட்ட முடியுமா..??! அதற்காக நீங்கள் திறமையற்றவர் என்று கூற முடியாது. அதேபோல் தான் மற்றவர்களுக்கும் இருக்கலாம்.

யாழில் உள்ள ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கக் கூடும். அதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர் இவர் போல இல்லை.. என்ற ஒப்பீடு தவறானது. யாழ் அப்போது போல இப்போ இல்லை என்ற ஒப்பீடும் தவறானது. யாழ் எப்போதும் நல்லவற்றை காவ வேண்டும் என்ற எண்ணமே சிறப்பானது.

மற்றும்படி.. உங்களையோ.. அல்லது எவரையுமோ குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இதனை பதிவிடவில்லை. எண்ணத்தில் உதித்ததை சொல்ல முற்பட்டுள்ளேன். இதற்காக என்னோட சண்டைக்கு வாறதில்லை.

நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

-----

யாழில் வரும் ஆக்கங்கள் தொடர்பில் நீங்கள் முன் வைத்திருக்கும் சில குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. யாழ் ஆரம்பித்த காலம் தொட்டு எல்லா வயதினரும் உறுப்பினராக இருந்துள்ளனர். இரட்டை அர்த்தக் கதைகள் ஆண்.. பெண் இரு தரப்பாலும் கதைக்கப்பட்டுள்ளன. சினிமா பேசப்பட்டுள்ளது. கொசிப் கதைக்கப்பட்டுள்ளது. ஏன் தனிநபர் வசைபாடல்கள் நிகழ்ந்துள்ளன. ஏன் நீங்கள் யாழோடு தீவிரமாக இருந்த காலத்திலும் பக்கம் பக்கமாக அரட்டை அடித்திருக்கிறீனம்.. அதற்காக யாழ் அன்று போல் இன்றில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

காலப் போக்கில் இளைஞர்களாக ... இளைஞிகளாக பதிந்தவர்கள்.. வாழ்க்கையில்.... செட்டிலாகி விட்டார்கள். ஒரு சிலரைத் தவிர வேறு பலர் இங்கு இப்போது இல்லை. ஆனால் அந்த நடுத்தர வயதுக்காரர்கள் அப்போதும் போல இப்போதும் இருக்கினம். அவர்களே இந்த யாழைக் கொண்டும் நடத்தினம். ஒரு சிலரைத் தவிர..!

என்னைப் பொறுத்தவரை யாழ் தொய்ந்திருப்பதாகத் தெரியவில்லை. யாழில் வெறும் காதல் கவிதைகள் குவிந்த காலம் போய் இன்று பலதரப்பட்ட விடயங்களும் பதியப்படுகின்றன. கடந்த ஆறு மாத காலத்துள்.. என்னால் மட்டும் சுயமாக பதியப்பட்ட பல ஆக்கங்களை இனங்காட்ட முடியும். என்னைப் பொறுத்த வரை யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் எழுதக் கிடைக்காத சில விடயங்களை இப்போ எழுதச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.

யாழின் ஆரம்ப காலத்தில்.. ஒருவர் எழுத்துப் பிழை விட்டாலே.. அவரை கிண்டலடித்து வெளியேற்றிய நிகழ்வுகள் உண்டு. இன்று அப்படி ஒரு நிலையில்லை.

யாழின் இடைக்காலத்தில் இள வயதினரின் அரட்டை கோலோஞ்சி இருந்தது.

இன்றைய உறவுகள் முன்னைய தவறுகள் பலவற்றை திருத்தி.. அவற்றைக் கடந்து நிற்கிறார்கள். இரட்டை அர்த்தம் பொதிந்த வசனங்கள் என்ன.. முழுத் தூசணத்தோடு எழுதப்பட்ட தனிமடல்களைக் கூட.. அதுவும் யாழ் கள பெண் உறுப்பினர்கள்.. எந்த நியாயமும் இன்றி எழுதி அனுப்பி இருந்த கேவலங்கள் கூட முன்னர் நடந்துள்ளன.

ஆகவே காலத்தை ஒப்பிட முடியாது. நாங்கள் எப்படி செயற்படுறம் என்பதில தான் யாழின் பயன்படு திறன் தங்கியுள்ளது.

நீங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வினவுகிறேன்.. நீங்கள் யாழில் இணைந்ததில் இருந்து உங்களின் சுய ஆக்கமாக யாழுக்காக பதிந்த ஒரு பதிவை கள உறவுகளுக்கு இனங்காட்ட முடியுமா..??! அதற்காக நீங்கள் திறமையற்றவர் என்று கூற முடியாது. அதேபோல் தான் மற்றவர்களுக்கும் இருக்கலாம்.

யாழில் உள்ள ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கக் கூடும். அதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர் இவர் போல இல்லை.. என்ற ஒப்பீடு தவறானது. யாழ் அப்போது போல இப்போ இல்லை என்ற ஒப்பீடும் தவறானது. யாழ் எப்போதும் நல்லவற்றை காவ வேண்டும் என்ற எண்ணமே சிறப்பானது.

மற்றும்படி.. உங்களையோ.. அல்லது எவரையுமோ குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இதனை பதிவிடவில்லை. எண்ணத்தில் உதித்ததை சொல்ல முற்பட்டுள்ளேன். இதற்காக என்னோட சண்டைக்கு வாறதில்லை.

நன்றி. :)

தூயவனின் ஆதங்கத்துக்கு, நெடுக்ஸின் பதில் பொருத்தமாக உள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின் பலர் மனம் சோர்ந்தது உண்மை.

அதற்கு, நீங்கள் மர்றவர்களை குற்றம் சாட்டாமல்....

முள்ளிவாய்க்காலின் பின் எத்தனை உருப்படியான பதிவுகளை, பதிந்திருக்கின்றீர்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

Link to comment
Share on other sites

- நம்மில் ஒவ்வொருவரும் தாம் ஒரு மட்டுறுத்தினர் என எண்ணி ஒவ்வொரு பதிவையும் பதிந்தால் களம் சிறப்பாக இருக்கும்.

- ஆக்கங்களை பதிவு செய்பவர்களுக்கு ஏதாவது வழியில் ஊக்கம் தரப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

வேறு ஒரு தளத்தில் நான் icash பற்றி அறிந்திருக்கின்றேன்.

இது உண்ணையான பணம் இல்லை. உதாரணமாக ஒருவர் களத்தில் ஒரு நல்ல பதிவை பதிந்தால் அதனை ஊக்கப்படடுத்த விரும்புவோர் அவரிற்கு icash கொடுக்கலாம். அதை வைத்து அவா; தனக்கு பிடித்தவர்களிற்கு பொருட்கள் (சும்மா விளையாட்டிற்கு) அன்பளிப்பு செய்யலாம். அல்லது அவரும் வேறு ஒருவின் ஆக்கத்திற்கு icash அன்பளிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் ஆதங்கத்துக்கு, நெடுக்ஸின் பதில் பொருத்தமாக உள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின் பலர் மனம் சோர்ந்தது உண்மை.

அதற்கு, நீங்கள் மர்றவர்களை குற்றம் சாட்டாமல்....

முள்ளிவாய்க்காலின் பின் எத்தனை உருப்படியான பதிவுகளை, பதிந்திருக்கின்றீர்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

சிறித்தம்பி! தூயவன் பாலியல் சம்பந்தமாக எதுவும் கதைக்க மாட்டார்.ஆனால் இதர சம்பவங்கள் அனைத்திலும் மகாகெட்டிக்காரர்?

அதிலும் தனிமனிதர் தாக்குதலுக்கு இவரிடம் எல்லோரும் பாடம் எடுக்கலாம்.மட்டுறுத்தினரை கேட்டால் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வரும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு தளத்தில் நான் icash பற்றி அறிந்திருக்கின்றேன்.

இது உண்ணையான பணம் இல்லை. உதாரணமாக ஒருவர் களத்தில் ஒரு நல்ல பதிவை பதிந்தால் அதனை ஊக்கப்படடுத்த விரும்புவோர் அவரிற்கு icash கொடுக்கலாம். அதை வைத்து அவா; தனக்கு பிடித்தவர்களிற்கு பொருட்கள் (சும்மா விளையாட்டிற்கு) அன்பளிப்பு செய்யலாம். அல்லது அவரும் வேறு ஒருவின் ஆக்கத்திற்கு icash அன்பளிக்கலாம்.

அதுக்குத்தான்..... பச்சைப் புள்ளி நடைமுறையில் இருக்கே....

இதை வைச்சு, மோகன் அண்ணா என்ன செய்ய முடியும்?

அவரும் இங்கை மினக்கெட்டு... கோடு, கச்சேரி எண்டு போனால்... அங்கு, பச்சைப் புள்ளியை காட்ட முடியுமா? கந்தசாமி.

சரியான விபரம் கெட்ட... பயலாக இருக்கிறாங்கள். நம்ம பசங்கள். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! தூயவன் பாலியல் சம்பந்தமாக எதுவும் கதைக்க மாட்டார்.ஆனால் இதர சம்பவங்கள் அனைத்திலும் மகாகெட்டிக்காரர்?

அதிலும் தனிமனிதர் தாக்குதலுக்கு இவரிடம் எல்லோரும் பாடம் எடுக்கலாம்.மட்டுறுத்தினரை கேட்டால் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வரும். :lol:

இன்று... அவர் வேறொரு பதிவில், உங்கள் மீது நடத்திய தனி மனித தாக்குதலை பார்த்தேன் குமாரசாமியண்ணை.

ஒரு பானை, சோத்துக்கு.... ஒரு சோறு பதம் என்று... சும்மாவா சொன்னார்கள்.

ரேக் இற் ஈசி அண்ணை. நம்ம பையன் தான் தூயவன். என்ன குழப்பமோ... ஆரறிவர். :)

Link to comment
Share on other sites

அதுக்குத்தான்..... பச்சைப் புள்ளி நடைமுறையில் இருக்கே....

இதை வைச்சு, மோகன் அண்ணா என்ன செய்ய முடியும்?

அவரும் இங்கை மினக்கெட்டு... கோடு, கச்சேரி எண்டு போனால்... அங்கு, பச்சைப் புள்ளியை காட்ட முடியுமா? கந்தசாமி.

சரியான விபரம் கெட்ட... பயலாக இருக்கிறாங்கள். நம்ம பசங்கள். :D:lol:

சாத்தியமோ இல்லையோ ஒருவரின் புதுமையான கருத்துக்களுக்கு ஊக்கம் தரல் வேண்டும்.

இன்னொருவிதமாக பார்ப்போம், களத்தில் 'reputation' என்று ஒன்று உண்டு. இதில் 1000 எடுப்பவர்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்?

Link to comment
Share on other sites

எனது உதாரணத்தை (icash) நடைமுறைபடுத்த எவ்வளவு நேரம் செலவாகும் என்பது எனக்கு தெரியாது. இது மோகன் அண்ணவிற்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.

நீங்கள் சொன்ன பச்சைப்புள்ளி ஒருவரின் கருத்துக்கு மட்டுமே. அது அவரின் profilஇல் வராது என்று நினைக்கின்றேன்.

தற்பொழுது உள்ள நடைமுறையில் ஒருவரின் ஆக்கங்களின் எண்ணிக்கைகளை வைத்து தான் அவரை பற்றி மதிப்பிட முடிகிறது. ஆனால் அது ஒரு குத்துமதிப்பான மதிப்பீடே. காரணம் நான் "ஆம்" என்று எழுதினாலும் அது எனது கருத்துக்களின் எண்ணிக்கையை அதிக்கரிக்கின்றது.

ஆனால் icash சற்று வித்தியாசம். இங்கே பயனுள்ள ஆக்கங்களிற்கு உறுப்பினார்கள் அன்பளிப்பு செய்யலாம். ஒருவரிடம் எவ்வளவு icash உள்ளது என்பதை வைத்து அவரின் யாழ்கள மதிப்பீட்டை நாம் ஓரளவு கணித்துவிட முடியும். மற்றும் உறுப்பினார்கள் மேலும் நல்ல ஆக்கங்களை தர ஊக்குவிப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.