Jump to content

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.


Recommended Posts

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழின் அவசியம் பற்றி,

யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்கள் ஆதாரங்களுடன் கேட்கப் படலாம்.அதனை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்லலாம்.மடியில் கனம் இல்லாதவர்கள் பதில் சொல்லலாம்.இதனை விட்டு விட்டு யாழை எந்த வித சொந்த நலனும் இன்றி நடாத்தும் மோகனுக்கு அலுப்புக் கொடுப்பது எந்த நியாயும் இருப்பகாகத் தெரியவில்லை.இன்று யாழைப் போல் சுயாதினமாக கருத்துத் தடைகள் இன்றி இயங்கும் தளம் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.

மோகன் அண்ணாவுக்கு இருக்கும் பிரச்சினைகள்.

நேர விரயம் - மட்டுறுகினர்கள் மோகன் அண்ணாவின் வேலைப் பளுவைப் பகிர்ந்து கொள்ளல்.தொழில் நுட்பம் அறிந்தவர்கள் உதவி செய்தல்.

பண விரயம் - உறுப்பினர் ஆகிறவர்கள் ஒரு சிறு தொகையை சந்தாவாக வழங்குதல் - பேபால் மூலம் இதனைச் செய்யலாம்.

தலையிடி- உறுப்பினர்களிடையே இருக்கும் பிரச்சினைகளை மோகன் அண்ணா மீது திணிப்பதை நிற்பாட்டினால் இகனை இலகுவாக நிற்பாட்டலாம்.பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் எழுதினால் இதனை இலகுவாக நடைமுறைப் படுத்தலாம்.

மேலே எழுதியவை நடைமுறைப்படுத்தா விடின் இன்னும் சில மாதங்களில் யாழ் மூடப்படுவது தவிர்க்க முடியாது போகும்.எனக்கு யாழ் நிற்பாட்டப்படுவது கவலை அழிக்கிறகு.ஆனால் நாங்கள் ஒரு தனி மனிதரின் வாழ்க்கையோடு விளையாட முடியாது.எங்கள் எல்லாருக்கும் இருப்பதைப் போல் மோகன் அண்ணாவுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கிறார்கள்.அதனை அவர் நிச்சயமாகக் கருத்தில் எடுக்க வேண்டும்.

பொறுப்புணர்வுடன் இதனை அணுகி ,உங்கள் கருத்துக்களை, ஆதரவை மோகன் அண்ணாவுக்கு வழங்கும் படியும், நான் மேலே சொன்ன விடயங்களுக்கு ஆதரவு நல்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.அல்லது உங்களிடம் வேறு தீர்வுகள் இருந்தால் அவற்றையும் எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி Narathar, நானும் யாழ் களத்தை 2005 ல் இருந்து பதிவுகளை ஆர்வமாக படிப்பவன் கிட்டடியில்தான் யாழுடன் இனைத்து கொண்டேன், உங்களுடைய கருத்துகள் நூறு வீதம் உண்மை, நீங்கள் சென்ன மாதிரி நான் ரெடி சந்தா உறுப்பினராக (அதற்காக $1000 கோட்க வேண்டாம்), உங்கள் கலகம் நன்மையில் முடிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழின் அவசியம் பற்றி,

இன்று யாழைப் போல் சுயாதினமாக கருத்துத் தடைகள் இன்றி இயங்கும் தளம் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.

மோகன் அண்ணாவுக்கு இருக்கும் பிரச்சினைகள்.

பண விரயம் - உறுப்பினர் ஆகிறவர்கள் ஒரு சிறு தொகையை சந்தாவாக வழங்குதல் - பேபால் மூலம் இதனைச் செய்யலாம்.

சந்தாக்காரனாக நான் இணைய தயார்.....சந்தா விபரங்களை அறியத் தரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவோ.. வேறு யாழ் கள நிர்வாக உறவுகளோ.. இந்த செய்தியில் உள்ள உள்ளடக்கங்களை உறுதி செய்தால் மட்டும் மேற்கொண்டு சிந்திக்க முடியும். :)

(காரணம் திண்ணையில் மேகன் அண்ணா இப்படிக் குறிப்பிட்டுள்ளார்..

மோகன் : (01 August 2011 - 07:46 PM) தொடர்ச்சியாக சில புதுப்பித்தல் வேலைகள் செய்து கொண்டிருப்பதால் இடையிடையே யாழ் இணைய வழங்கியில் தடங்கல்கள் ஏற்படும். )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் "திறந்த உரையாடல்கள்" அனுமதிக்கப்பட்டிருந்தாலும், களத்தின் எதிர்காலம் கள உறவுகளின் கைகளில் முழுமையாக இல்லை! "பே பால்" கணக்கின் இணைப்பை முகப்பிலும், கருத்துக்களத்திலும் இணைத்தால் உதவக்கூடியவர்கள் கட்டாயம் உதவுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் தொடர நானும் சந்தாதாரராக இணைய சம்மதிக்கின்றேன்

சந்தாக்காரனாக நான் இணைய தயார்.....சந்தா விபரங்களை அறியத் தரவும்

நீங்கள் இரண்டு முறை சந்தா கட்ட வேண்டும் ஜில் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா விபரங்களை யாழ் களத்தின் ஒரு பகுதியில் இட்டால்,மனச்சாட்சி உள்ளவர்கள் சந்தா கட்டக் கூடியதாக இருக்கும்!

இந்த நாளையில கல்யாண வீட்டுக்குப் போகேக்குள்ள கூட, என்வலப்போட போகாட்டால் ஒரு மாதிரியாப் பார்க்கிறாங்கள்!

யாழ் களம் மட்டும் இன்னும், சன்னிதிக் கந்தன் மாதிரி!!!! :wub:

Link to comment
Share on other sites

முன்பும் கூறியதுதான். சந்தாக் கட்டணம் வசூலிப்பது மிக இலகுவான முறை. நான் இணையத் தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழின் அவசியம் பற்றி,

யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்கள் ஆதாரங்களுடன் கேட்கப் படலாம்.அதனை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்லலாம்.மடியில் கனம் இல்லாதவர்கள் பதில் சொல்லலாம்.இதனை விட்டு விட்டு யாழை எந்த வித சொந்த நலனும் இன்றி நடாத்தும் மோகனுக்கு அலுப்புக் கொடுப்பது எந்த நியாயும் இருப்பகாகத் தெரியவில்லை.இன்று யாழைப் போல் சுயாதினமாக கருத்துத் தடைகள் இன்றி இயங்கும் தளம் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.

மோகன் அண்ணாவுக்கு இருக்கும் பிரச்சினைகள்.

நேர விரயம் - மட்டுறுகினர்கள் மோகன் அண்ணாவின் வேலைப் பளுவைப் பகிர்ந்து கொள்ளல்.தொழில் நுட்பம் அறிந்தவர்கள் உதவி செய்தல்.

பண விரயம் - உறுப்பினர் ஆகிறவர்கள் ஒரு சிறு தொகையை சந்தாவாக வழங்குதல் - பேபால் மூலம் இதனைச் செய்யலாம்.

தலையிடி- உறுப்பினர்களிடையே இருக்கும் பிரச்சினைகளை மோகன் அண்ணா மீது திணிப்பதை நிற்பாட்டினால் இகனை இலகுவாக நிற்பாட்டலாம்.பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் எழுதினால் இதனை இலகுவாக நடைமுறைப் படுத்தலாம்.

மேலே எழுதியவை நடைமுறைப்படுத்தா விடின் இன்னும் சில மாதங்களில் யாழ் மூடப்படுவது தவிர்க்க முடியாது போகும்.எனக்கு யாழ் நிற்பாட்டப்படுவது கவலை அழிக்கிறகு.ஆனால் நாங்கள் ஒரு தனி மனிதரின் வாழ்க்கையோடு விளையாட முடியாது.எங்கள் எல்லாருக்கும் இருப்பதைப் போல் மோகன் அண்ணாவுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கிறார்கள்.அதனை அவர் நிச்சயமாகக் கருத்தில் எடுக்க வேண்டும்.

பொறுப்புணர்வுடன் இதனை அணுகி ,உங்கள் கருத்துக்களை, ஆதரவை மோகன் அண்ணாவுக்கு வழங்கும் படியும், நான் மேலே சொன்ன விடயங்களுக்கு ஆதரவு நல்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.அல்லது உங்களிடம் வேறு தீர்வுகள் இருந்தால் அவற்றையும் எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நாரதர் அவர்களுக்கு நன்றி.

ஒரு சிறந்த அரசியல் மற்றும் குமுகாயச் செயல்நெறிக்கான தளமாக இருக்கும் யாழ்களம் தொடர்ந்து இயங்கும் விதமான செயற்பாடுகளுக்கு நானும் என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்வேன். தமிழ்க்குமுகாயத்தின்பால் நின்று நியாயாபூர்வமாகவும் எதிர்நிலையாகவும் சிந்திப்போரிடையே புரிந்துணர்வையும் கருத்தியல் பரிமாற்றத்தையும் ஏற்படுத்திவரும் யாழ்க்களம் பாதுகாக்கப்படுவது அவசியமானது.

கள உறவுகள் கண்ணியமான கருத்தாடலை மேற்கொள்வதூடாகப் பொறுப்பாளரை நெருக்கடிக்குள்வாக்குவதை தவிர்ப்பதோடு, கருத்தெளுதும்போது தானும் இதன் பங்காளன் என்ற நிலையில் சிந்தித்துச் செயற்படும் பாங்கு ஏற்படுமாயின் திரு மோகனவர்களது பாதிவேலைப்பளு குறைந்துவிடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.

Link to comment
Share on other sites

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா பற்றி முன்பு பலமுறை பேசப்பட்டது. பரிந்துரைக்கப்பட்டது

ஆனால் மேலே ஒண்டிப்புலி கூறிய காரணங்களால் மோகன் அண்ணாவால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா பற்றி முன்பு பலமுறை பேசப்பட்டது. பரிந்துரைக்கப்பட்டது

ஆனால் மேலே ஒண்டிப்புலி கூறிய காரணங்களால் மோகன் அண்ணாவால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இன்னுமுருக்க முயற்ச்சி செய்து பார்பதுதனே , ஏன் வாக்கெட்டுப்பு நடத்த கூடாது with various options

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

ஒண்டிப்புலி சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சந்தா கட்டுவதென்பது யாழை தொடர்ந்து நடத்திச் செல்ல, ஒவ்வொருவரும் மனச்சாட்சிப் படி கட்டுவது.

அதற்காக..... அடாத்தாக கருத்து எழுத முடியாது. அப்படி எழுதினால் வழக்கம் போல்... மட்டுறுத்தினர் கத்தியை பாச்ச வேண்டும்.

ஒண்டிப்புலியின் இரண்டாவது, மூன்றாவது கருத்தை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். யாழ் களம் என்றால்... அது மோகன் அண்ணாவின் பிள்ளை. அதனை வேறு யாரும் பராமரிப்பது அழகல்ல.

பிற்குறிப்பு: நான் சந்தா கட்ட ரெடி.

Link to comment
Share on other sites

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது சரியானதாக இருக்காதது ஆனால் யாழை வியாபர நோக்கில் கொண்டு செல்வது சிறந்ததாக இருக்கும் அதில் கருத்துக் களம் ஒரு பகுதியாக இருந்துட்டு போகட்டும்.

நான் நீண்ட நாட்கள் யோசித்தேன் ஏன் மோகன் அண்ணா இன்னும் யாழை மாற்றிஅமைக்கவில்லை என்று? ஆனால் அதன் சரி பிழைகளை பற்றி எனக்கு தெரியாது.

மோகன் அண்ணாவிடம் எனது தனிப்பட்ட அட்வைஸ் நாளக் கடத்தாது யாழை மாற்றி வியாபர நோக்கமாக மாற்றுவது ஒன்று தான் யாழ் நிலைப்பதுக்கும் உங்களுக்கும் நல்லது.

நேற்று ஆர்ம்பித்த பல இணையங்கள் இன்று வருவாயில் கொடிகட்டிபறக்கிறது ஆனால் நீங்கள் இன்னும் தேசியம் தேசியம் என்ற காணல்நீரில் யாழையும் உங்கள் நேரத்தையும் வீணாக்கி கொண்டு இருக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

[ஃஉஒடெ நமெ='ஒண்டி புலி' டிமெச்டம்ப்='1312282163' பொச்ட்='678566']

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

[/ஃஉஒடெ]

சந்தா என்பது கட்டாயம் கட்ட வேண்டியது அல்ல, யாழுக்கு நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் அதனைச் செய்ய ஒரு வழிமுறை.அது கட்டாயத்தின் அடிப்படையில் அன்றி விருப்பின் அடிப்படையில் செய்யப்பட வேண்டியது. இதுவும் நடக்காவிட்டால் மோகன் அண்ணா மூன்றாவது வழிமுறையையே மேற்கொள்வார்.என்னைப் பொறுக்கவரை இது மிகவும் வேதனையான விடயம்.யாழ் பிழையானவர் கைகளில் செல்லக் கூடாது என்பதற்காகவே அதனை அவர் விற்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராம்ப யாழ்களத்தில் எழுதப்பட்ட சுயமான ஆக்கங்களுக்கும், பின்னராக வருகின்ற களத்தின் கருத்துக்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் எத்தனை ஆக்கங்கள் யாராலும் எழுதப்படுகின்றன என்று கேட்டால் அது பூச்சியமே! கடந்த ஆறுமாதம், ஏன் ஒரு வருடகாலப்பகுதியினை மீளப் பார்வையிட்டால் எத்தனை ஆக்கங்கள் வந்திருக்கின்றன. கவிதைப் பகுதியைத் தவிர, மற்றவவை எல்லாம் வேறு எங்காவது எழுதப்படுகின்ற ஆக்கங்களை இணைத்து அதற்கான விமர்சனங்களாகவே போகுகின்றன.

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

பல தடவை நிறுத்துவதற்கான வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்கின்றார். ஒவ்வொரு தடவையும் வேண்டாம் என்ற வேண்கோளை அவர் மதித்திருக்கின்றார். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதாகத் தான்நிலை போய்க் கொண்டிருக்கின்றது.

மோகன் அண்ணாவிடம் ஒரு வேண்கோள்.

யாழ்களத்தின் ஆரம்பத்தில் இருந்து 2007, அல்லது 2009ம் வரையிலான கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியுமா??(backup)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராம்ப யாழ்களத்தில் எழுதப்பட்ட சுயமான ஆக்கங்களுக்கும், பின்னராக வருகின்ற களத்தின் கருத்துக்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் எத்தனை ஆக்கங்கள் யாராலும் எழுதப்படுகின்றன என்று கேட்டால் அது பூச்சியமே! கடந்த ஆறுமாதம், ஏன் ஒரு வருடகாலப்பகுதியினை மீளப் பார்வையிட்டால் எத்தனை ஆக்கங்கள் வந்திருக்கின்றன. கவிதைப் பகுதியைத் தவிர, மற்றவவை எல்லாம் வேறு எங்காவது எழுதப்படுகின்ற ஆக்கங்களை இணைத்து அதற்கான விமர்சனங்களாகவே போகுகின்றன.

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

பல தடவை நிறுத்துவதற்கான வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்கின்றார். ஒவ்வொரு தடவையும் வேண்டாம் என்ற வேண்கோளை அவர் மதித்திருக்கின்றார். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதாகத் தான்நிலை போய்க் கொண்டிருக்கின்றது.

மோகன் அண்ணாவிடம் ஒரு வேண்கோள்.

யாழ்களத்தின் ஆரம்பத்தில் இருந்து 2007, அல்லது 2009ம் வரையிலான கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியுமா??(backup)

யாழில் வரும் ஆக்கங்கள் தொடர்பில் நீங்கள் முன் வைத்திருக்கும் சில குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. யாழ் ஆரம்பித்த காலம் தொட்டு எல்லா வயதினரும் உறுப்பினராக இருந்துள்ளனர். இரட்டை அர்த்தக் கதைகள் ஆண்.. பெண் இரு தரப்பாலும் கதைக்கப்பட்டுள்ளன. சினிமா பேசப்பட்டுள்ளது. கொசிப் கதைக்கப்பட்டுள்ளது. ஏன் தனிநபர் வசைபாடல்கள் நிகழ்ந்துள்ளன. ஏன் நீங்கள் யாழோடு தீவிரமாக இருந்த காலத்திலும் பக்கம் பக்கமாக அரட்டை அடித்திருக்கிறீனம்.. அதற்காக யாழ் அன்று போல் இன்றில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

காலப் போக்கில் இளைஞர்களாக ... இளைஞிகளாக பதிந்தவர்கள்.. வாழ்க்கையில்.... செட்டிலாகி விட்டார்கள். ஒரு சிலரைத் தவிர வேறு பலர் இங்கு இப்போது இல்லை. ஆனால் அந்த நடுத்தர வயதுக்காரர்கள் அப்போதும் போல இப்போதும் இருக்கினம். அவர்களே இந்த யாழைக் கொண்டும் நடத்தினம். ஒரு சிலரைத் தவிர..!

என்னைப் பொறுத்தவரை யாழ் கருத்தியல் ரீதியாக (கள உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்தல்ல) தொய்ந்திருப்பதாகத் தெரியவில்லை. யாழில் வெறும் காதல் கவிதைகள் குவிந்த காலம் போய் இன்று பலதரப்பட்ட விடயங்களும் பதியப்படுகின்றன. கடந்த ஆறு மாத காலத்துள்.. என்னால் மட்டும் சுயமாக பதியப்பட்ட பல ஆக்கங்களை இனங்காட்ட முடியும். என்னைப் பொறுத்த வரை யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் எழுதக் கிடைக்காத சில விடயங்களை இப்போ எழுதச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.

யாழின் ஆரம்ப காலத்தில்.. ஒருவர் எழுத்துப் பிழை விட்டாலே.. அவரை கிண்டலடித்து வெளியேற்றிய நிகழ்வுகள் உண்டு. இன்று அப்படி ஒரு நிலையில்லை.

யாழின் இடைக்காலத்தில் இள வயதினரின் அரட்டை கோலோஞ்சி இருந்தது.

இன்றைய உறவுகள் முன்னைய தவறுகள் பலவற்றை திருத்தி.. அவற்றைக் கடந்து நிற்கிறார்கள். இரட்டை அர்த்தம் பொதிந்த வசனங்கள் என்ன.. முழுத் தூசணத்தோடு எழுதப்பட்ட தனிமடல்களைக் கூட.. அதுவும் யாழ் கள பெண் பெயரில் இருந்த உறுப்பினர்கள்.. எந்த நியாயமும் இன்றி எழுதி அனுப்பி இருந்த கேவலங்கள் கூட முன்னர் நடந்துள்ளன.

ஆகவே காலத்தை ஒப்பிட முடியாது. நாங்கள் எப்படி செயற்படுறம் என்பதில தான் யாழின் பயன்படு திறன் தங்கியுள்ளது.

நீங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வினவுகிறேன்.. நீங்கள் யாழில் இணைந்ததில் இருந்து உங்களின் சுய ஆக்கமாக யாழுக்காக பதிந்த ஒரு பதிவை கள உறவுகளுக்கு இனங்காட்ட முடியுமா..??! அதற்காக நீங்கள் திறமையற்றவர் என்று கூற முடியாது. அதேபோல் தான் மற்றவர்களுக்கும் இருக்கலாம்.

யாழில் உள்ள ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கக் கூடும். அதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர் இவர் போல இல்லை.. என்ற ஒப்பீடு தவறானது. யாழ் அப்போது போல இப்போ இல்லை என்ற ஒப்பீடும் தவறானது. யாழ் எப்போதும் நல்லவற்றை காவ வேண்டும் என்ற எண்ணமே சிறப்பானது.

மற்றும்படி.. உங்களையோ.. அல்லது எவரையுமோ குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இதனை பதிவிடவில்லை. எண்ணத்தில் உதித்ததை சொல்ல முற்பட்டுள்ளேன். இதற்காக என்னோட சண்டைக்கு வாறதில்லை.

நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

-----

யாழில் வரும் ஆக்கங்கள் தொடர்பில் நீங்கள் முன் வைத்திருக்கும் சில குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. யாழ் ஆரம்பித்த காலம் தொட்டு எல்லா வயதினரும் உறுப்பினராக இருந்துள்ளனர். இரட்டை அர்த்தக் கதைகள் ஆண்.. பெண் இரு தரப்பாலும் கதைக்கப்பட்டுள்ளன. சினிமா பேசப்பட்டுள்ளது. கொசிப் கதைக்கப்பட்டுள்ளது. ஏன் தனிநபர் வசைபாடல்கள் நிகழ்ந்துள்ளன. ஏன் நீங்கள் யாழோடு தீவிரமாக இருந்த காலத்திலும் பக்கம் பக்கமாக அரட்டை அடித்திருக்கிறீனம்.. அதற்காக யாழ் அன்று போல் இன்றில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

காலப் போக்கில் இளைஞர்களாக ... இளைஞிகளாக பதிந்தவர்கள்.. வாழ்க்கையில்.... செட்டிலாகி விட்டார்கள். ஒரு சிலரைத் தவிர வேறு பலர் இங்கு இப்போது இல்லை. ஆனால் அந்த நடுத்தர வயதுக்காரர்கள் அப்போதும் போல இப்போதும் இருக்கினம். அவர்களே இந்த யாழைக் கொண்டும் நடத்தினம். ஒரு சிலரைத் தவிர..!

என்னைப் பொறுத்தவரை யாழ் தொய்ந்திருப்பதாகத் தெரியவில்லை. யாழில் வெறும் காதல் கவிதைகள் குவிந்த காலம் போய் இன்று பலதரப்பட்ட விடயங்களும் பதியப்படுகின்றன. கடந்த ஆறு மாத காலத்துள்.. என்னால் மட்டும் சுயமாக பதியப்பட்ட பல ஆக்கங்களை இனங்காட்ட முடியும். என்னைப் பொறுத்த வரை யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் எழுதக் கிடைக்காத சில விடயங்களை இப்போ எழுதச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.

யாழின் ஆரம்ப காலத்தில்.. ஒருவர் எழுத்துப் பிழை விட்டாலே.. அவரை கிண்டலடித்து வெளியேற்றிய நிகழ்வுகள் உண்டு. இன்று அப்படி ஒரு நிலையில்லை.

யாழின் இடைக்காலத்தில் இள வயதினரின் அரட்டை கோலோஞ்சி இருந்தது.

இன்றைய உறவுகள் முன்னைய தவறுகள் பலவற்றை திருத்தி.. அவற்றைக் கடந்து நிற்கிறார்கள். இரட்டை அர்த்தம் பொதிந்த வசனங்கள் என்ன.. முழுத் தூசணத்தோடு எழுதப்பட்ட தனிமடல்களைக் கூட.. அதுவும் யாழ் கள பெண் உறுப்பினர்கள்.. எந்த நியாயமும் இன்றி எழுதி அனுப்பி இருந்த கேவலங்கள் கூட முன்னர் நடந்துள்ளன.

ஆகவே காலத்தை ஒப்பிட முடியாது. நாங்கள் எப்படி செயற்படுறம் என்பதில தான் யாழின் பயன்படு திறன் தங்கியுள்ளது.

நீங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வினவுகிறேன்.. நீங்கள் யாழில் இணைந்ததில் இருந்து உங்களின் சுய ஆக்கமாக யாழுக்காக பதிந்த ஒரு பதிவை கள உறவுகளுக்கு இனங்காட்ட முடியுமா..??! அதற்காக நீங்கள் திறமையற்றவர் என்று கூற முடியாது. அதேபோல் தான் மற்றவர்களுக்கும் இருக்கலாம்.

யாழில் உள்ள ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கக் கூடும். அதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர் இவர் போல இல்லை.. என்ற ஒப்பீடு தவறானது. யாழ் அப்போது போல இப்போ இல்லை என்ற ஒப்பீடும் தவறானது. யாழ் எப்போதும் நல்லவற்றை காவ வேண்டும் என்ற எண்ணமே சிறப்பானது.

மற்றும்படி.. உங்களையோ.. அல்லது எவரையுமோ குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இதனை பதிவிடவில்லை. எண்ணத்தில் உதித்ததை சொல்ல முற்பட்டுள்ளேன். இதற்காக என்னோட சண்டைக்கு வாறதில்லை.

நன்றி. :)

தூயவனின் ஆதங்கத்துக்கு, நெடுக்ஸின் பதில் பொருத்தமாக உள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின் பலர் மனம் சோர்ந்தது உண்மை.

அதற்கு, நீங்கள் மர்றவர்களை குற்றம் சாட்டாமல்....

முள்ளிவாய்க்காலின் பின் எத்தனை உருப்படியான பதிவுகளை, பதிந்திருக்கின்றீர்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

Link to comment
Share on other sites

- நம்மில் ஒவ்வொருவரும் தாம் ஒரு மட்டுறுத்தினர் என எண்ணி ஒவ்வொரு பதிவையும் பதிந்தால் களம் சிறப்பாக இருக்கும்.

- ஆக்கங்களை பதிவு செய்பவர்களுக்கு ஏதாவது வழியில் ஊக்கம் தரப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

வேறு ஒரு தளத்தில் நான் icash பற்றி அறிந்திருக்கின்றேன்.

இது உண்ணையான பணம் இல்லை. உதாரணமாக ஒருவர் களத்தில் ஒரு நல்ல பதிவை பதிந்தால் அதனை ஊக்கப்படடுத்த விரும்புவோர் அவரிற்கு icash கொடுக்கலாம். அதை வைத்து அவா; தனக்கு பிடித்தவர்களிற்கு பொருட்கள் (சும்மா விளையாட்டிற்கு) அன்பளிப்பு செய்யலாம். அல்லது அவரும் வேறு ஒருவின் ஆக்கத்திற்கு icash அன்பளிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் ஆதங்கத்துக்கு, நெடுக்ஸின் பதில் பொருத்தமாக உள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின் பலர் மனம் சோர்ந்தது உண்மை.

அதற்கு, நீங்கள் மர்றவர்களை குற்றம் சாட்டாமல்....

முள்ளிவாய்க்காலின் பின் எத்தனை உருப்படியான பதிவுகளை, பதிந்திருக்கின்றீர்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

சிறித்தம்பி! தூயவன் பாலியல் சம்பந்தமாக எதுவும் கதைக்க மாட்டார்.ஆனால் இதர சம்பவங்கள் அனைத்திலும் மகாகெட்டிக்காரர்?

அதிலும் தனிமனிதர் தாக்குதலுக்கு இவரிடம் எல்லோரும் பாடம் எடுக்கலாம்.மட்டுறுத்தினரை கேட்டால் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வரும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு தளத்தில் நான் icash பற்றி அறிந்திருக்கின்றேன்.

இது உண்ணையான பணம் இல்லை. உதாரணமாக ஒருவர் களத்தில் ஒரு நல்ல பதிவை பதிந்தால் அதனை ஊக்கப்படடுத்த விரும்புவோர் அவரிற்கு icash கொடுக்கலாம். அதை வைத்து அவா; தனக்கு பிடித்தவர்களிற்கு பொருட்கள் (சும்மா விளையாட்டிற்கு) அன்பளிப்பு செய்யலாம். அல்லது அவரும் வேறு ஒருவின் ஆக்கத்திற்கு icash அன்பளிக்கலாம்.

அதுக்குத்தான்..... பச்சைப் புள்ளி நடைமுறையில் இருக்கே....

இதை வைச்சு, மோகன் அண்ணா என்ன செய்ய முடியும்?

அவரும் இங்கை மினக்கெட்டு... கோடு, கச்சேரி எண்டு போனால்... அங்கு, பச்சைப் புள்ளியை காட்ட முடியுமா? கந்தசாமி.

சரியான விபரம் கெட்ட... பயலாக இருக்கிறாங்கள். நம்ம பசங்கள். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! தூயவன் பாலியல் சம்பந்தமாக எதுவும் கதைக்க மாட்டார்.ஆனால் இதர சம்பவங்கள் அனைத்திலும் மகாகெட்டிக்காரர்?

அதிலும் தனிமனிதர் தாக்குதலுக்கு இவரிடம் எல்லோரும் பாடம் எடுக்கலாம்.மட்டுறுத்தினரை கேட்டால் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வரும். :lol:

இன்று... அவர் வேறொரு பதிவில், உங்கள் மீது நடத்திய தனி மனித தாக்குதலை பார்த்தேன் குமாரசாமியண்ணை.

ஒரு பானை, சோத்துக்கு.... ஒரு சோறு பதம் என்று... சும்மாவா சொன்னார்கள்.

ரேக் இற் ஈசி அண்ணை. நம்ம பையன் தான் தூயவன். என்ன குழப்பமோ... ஆரறிவர். :)

Link to comment
Share on other sites

அதுக்குத்தான்..... பச்சைப் புள்ளி நடைமுறையில் இருக்கே....

இதை வைச்சு, மோகன் அண்ணா என்ன செய்ய முடியும்?

அவரும் இங்கை மினக்கெட்டு... கோடு, கச்சேரி எண்டு போனால்... அங்கு, பச்சைப் புள்ளியை காட்ட முடியுமா? கந்தசாமி.

சரியான விபரம் கெட்ட... பயலாக இருக்கிறாங்கள். நம்ம பசங்கள். :D:lol:

சாத்தியமோ இல்லையோ ஒருவரின் புதுமையான கருத்துக்களுக்கு ஊக்கம் தரல் வேண்டும்.

இன்னொருவிதமாக பார்ப்போம், களத்தில் 'reputation' என்று ஒன்று உண்டு. இதில் 1000 எடுப்பவர்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்?

Link to comment
Share on other sites

எனது உதாரணத்தை (icash) நடைமுறைபடுத்த எவ்வளவு நேரம் செலவாகும் என்பது எனக்கு தெரியாது. இது மோகன் அண்ணவிற்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.

நீங்கள் சொன்ன பச்சைப்புள்ளி ஒருவரின் கருத்துக்கு மட்டுமே. அது அவரின் profilஇல் வராது என்று நினைக்கின்றேன்.

தற்பொழுது உள்ள நடைமுறையில் ஒருவரின் ஆக்கங்களின் எண்ணிக்கைகளை வைத்து தான் அவரை பற்றி மதிப்பிட முடிகிறது. ஆனால் அது ஒரு குத்துமதிப்பான மதிப்பீடே. காரணம் நான் "ஆம்" என்று எழுதினாலும் அது எனது கருத்துக்களின் எண்ணிக்கையை அதிக்கரிக்கின்றது.

ஆனால் icash சற்று வித்தியாசம். இங்கே பயனுள்ள ஆக்கங்களிற்கு உறுப்பினார்கள் அன்பளிப்பு செய்யலாம். ஒருவரிடம் எவ்வளவு icash உள்ளது என்பதை வைத்து அவரின் யாழ்கள மதிப்பீட்டை நாம் ஓரளவு கணித்துவிட முடியும். மற்றும் உறுப்பினார்கள் மேலும் நல்ல ஆக்கங்களை தர ஊக்குவிப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.