Jump to content

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து கந்தசாமியும். அகூதாவும் என்ன சொல்ல வாறீங்கள் என்ரை மர மண்டைக்குள்ளை ஏறேல்லை.

icash எவ்வளவு நம்பிக்கைத் தன்மை வாய்ந்தது? தனக்குப் பிடித்தவருக்கு icash கொடுக்க சந்தர்ப்பம் தான் அதிகம் என நினைக்கின்றேன். :o

அல்லது உங்களது icash தவறாக விளங்கி விட்டேனோ தெரியாது. அப்படி இருந்தாலும்.... இந்த தளத்தை அல்லும், பகலும் பயங்கர மன உளைச்சலில் கொண்டு நடத்தும் மோகன் அண்ணாவிற்கு, சல்லிக் காசு கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

கருத்துக்கள உறவுகளுக்குப் பொறுப்புஉணர்வு வரவேண்டுமானால் சந்தா அவசியமே. யாவரும் பங்களிகளானல் மட்டுமே யாழைக் காப்பற்றமுடியும் நான் காசு கட்ட விரும்புகின்றேன்.ஆகக் குறைந்தது 10 யூரோக்கள் கட்டவேண்டய விதியை நிர்வாகம் கொண்டு வரவேண்டும் விரும்பியர்கள் அதறகு கூடிய தொகையை வருடத்தில் 4-5 தடவையாக பிரித்துக்கட்டலாம் மோகனது சுமையையும் நாங்கள் சுமப்பது அவசியம். தாயகத்து உறவுகளுக்கு சந்தா விடையத்தில் சிறிது சலுகை காட்டலாம். இது எனது கருத்து. :):):)

Link to comment
Share on other sites

... நாராயணா ... செய்ய வேண்டியதை, உடனடியாக, காலம் தாழ்த்தாது செய்ய வேண்டும்! .. நான் இருப்பேனோ, இல்லையோ? என் பங்கை நிச்சயம் செய்வேன் ... இதை அன்றிலிருந்து இன்றுவரை மோகனுக்கும் சொல்லி வருகிறேன்!

... ஒருவனின் பணத்தில் ... எம் பொழுது போக்குகள், விளம்பரங்கள். சண்டை சச்சரவுகள் செய்தது போதும்! ... இனி பகிர்ந்து விட்டு செய்யலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா கட்ட வேண்டும் என்டால் 2,3 ஜடி வைத்திருப்பவர் பாடு திண்டாட்டம் தான் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா கட்ட வேண்டும் என்டால் 2,3 ஜடி வைத்திருப்பவர் பாடு திண்டாட்டம் தான் :lol: :lol: :lol:

நீங்கதான் சரியான ஆள், சந்தா நீங்க கட்ட போறீங்க என்று செல்லிறதைவிட, மற்றவங்க எப்படி கஷ்டப்பட போகிற என்று கவலைபடுறீங்க, நல்ல கவலைங்க இந்த நேரத்தில

Link to comment
Share on other sites

எனக்கு படுறது என்னானா...............

மிஸ்டர் மோகன் வெளிப்படையாய் ,...

இன்றைய திகதியில் இந்த கருத்துக்களம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் என்ன?

இந்தநெருக்கடியை, சமாளிக்க இந்த களத்தோட உறுப்பினர்களிடம் இருந்து அவர் எதிர்பார்க்கும் ஒத்தாசை என்ன என்பதை அறிவிப்பதுதான்!

! அந்த ஒன்றே ஒரு கள நிர்வாகி எதிர் கொள்ளும் சிரமங்களை , கவலையோடும், அக்கறையோடும் பிறர் நோக்கவைக்கும்!!

அதை விடுத்து, ஏதோ யாழ்களத்தின் உத்தியோக பற்றற்ற பேச்சாளர்கள் மாதிரி , சக கள உறுப்பினர்களே ,ஆவேசப்படுவதும் ,ஆதங்கப்படுவதும் செயற்படுவதும்...........

என்னமோ மோகனுக்கு தாம்தான் நெருக்கமானவர்கள் ,அவர் கஸ்டம் தமக்கு மட்டுமே புரியும், எங்கிற பாணியில் காட்டிக்கொள்ள முற்படுவதும்...

பிற கருத்தாளர்களை சினமூட்டும் அதை வேளையில் , நாமென்ன அந்நியமா என்றும் எண்ணவைக்கும்!

இதன் பலாபலன்..?

உறுப்பினர்கள் தமக்குள்தாமே மோதி ...விலகிபோய் ,இந்த களம் பலவீனப்படவே வழி செய்யுமன்றி ,பலப்படுவதற்கான எத்தனங்கள்.................மிக அருகலாகவே தென்படும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் பலாபலன்..?

உறுப்பினர்கள் தமக்குள்தாமே மோதி ...விலகிபோய் ,இந்த களம் பலவீனப்படவே வழி செய்யுமன்றி ,பலப்படுவதற்கான எத்தனங்கள்.................மிக அருகலாகவே தென்படும்!!

ஆமாம். இப்படித்தான் கடந்த 13 வருடங்களாக நடந்து களம் பலவீனமாகத் தற்போது இருக்கின்றது <_<

உறுப்பினர்கள் தமக்குள் மோதுப்படுவதும், விலகிப் போவதும் சாதாரணம். இதெல்லாம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில்லை.

மாற்றங்களை உள்வாங்கி காலத்திற்கேற்பதாய் புதுப்பித்துக்கொள்வதுதான் நீண்டுநிலைக்க உதவும்.

Link to comment
Share on other sites

.யாழ் பிழையானவர் கைகளில் செல்லக் கூடாது என்பதற்காகவே அதனை அவர் விற்கவில்லை.

சிட்னியில் ஒரு வானொலியை கூட பிழையானவர்கள் வாங்கி போட்டினமாம் என்று கதை அடிபடுகுது....அங்கேயும் உதே காசுப்பிரச்சனையாம் உடனே பிழையானவர்கள் உதவிக்கரம் நீட்டினவயளாம்...ஒரு கொண்டிசன் .பிழையானவர்களை இடக்கிட பேட்டி எடுத்து ஒலிபரப்ப வேண்டும் என...

Link to comment
Share on other sites

ஆமாம். இப்படித்தான் கடந்த 13 வருடங்களாக நடந்து களம் பலவீனமாகத் தற்போது இருக்கின்றது <_<

உறுப்பினர்கள் தமக்குள் மோதுப்படுவதும், விலகிப் போவதும் சாதாரணம். இதெல்லாம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில்லை.

மாற்றங்களை உள்வாங்கி காலத்திற்கேற்பதாய் புதுப்பித்துக்கொள்வதுதான் நீண்டுநிலைக்க உதவும்.

ஆக.... நானு கீழே எழுதிமுடித்த இரண்டுவரிகள்தான் தெரியுதா? மேலே என்ன எழுதி இருக்கேன்னு பார்க்கவே இல்லியா? முழுமையா கதைய படிக்காம... கிளைமாக்ஸ்ல குறை பிடிகாதீங்க ...நக்கீரரே!

Link to comment
Share on other sites

நீங்கள் இரண்டு முறை சந்தா கட்ட வேண்டும் ஜில் :)

அப்ப மற்ற இரண்டும் யாராம் கட்டுறது :D:D

Link to comment
Share on other sites

ஆமாம். இப்படித்தான் கடந்த 13 வருடங்களாக நடந்து களம் பலவீனமாகத் தற்போது இருக்கின்றது <_<

உறுப்பினர்கள் தமக்குள் மோதுப்படுவதும், விலகிப் போவதும் சாதாரணம். இதெல்லாம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில்லை.

மாற்றங்களை உள்வாங்கி காலத்திற்கேற்பதாய் புதுப்பித்துக்கொள்வதுதான் நீண்டுநிலைக்க உதவும்.

அது தானே கொஞ காலத்துக்கு முன் சுதந்திரபறவையாக பறந்தே யாழை ஒன்றும் பன்ன முடியவில்லை :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக.... நானு கீழே எழுதிமுடித்த இரண்டுவரிகள்தான் தெரியுதா? மேலே என்ன எழுதி இருக்கேன்னு பார்க்கவே இல்லியா? முழுமையா கதைய படிக்காம... கிளைமாக்ஸ்ல குறை பிடிகாதீங்க ...நக்கீரரே!

இரண்டு வரிக்கு மாத்திரம்தான் பதில் எழுதினால் மற்றையவற்றில் குறைபிடிக்கவில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம் ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர்களே.... நீங்கள் குத்துமல்லுப்பட்டு ஏதாவது முடிவெடுங்க... நின்று எழுத நேரமில்லாமல் இருக்கிறது. நல்ல விடயங்களுக்கு நம்முடைய ஆதரவு உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ஆதரவும் நிசிசையம் உண்டு.

Link to comment
Share on other sites

அவ்வவப்போது மூடப்பட்ட திரிகளை நாங்கள் அடிக்கடி பார்த்துக்கொண்டு அதில் விட்டதவறுகளை தவிர்த்தாலே களம் நன்றாக அமையும்.

Link to comment
Share on other sites

தங்களை தாமே ஏமாற்றும் பலர் வந்து தமிழனின் விடிவுபற்றி கொட்டுவதால் ஆக்கபூர்வமான விடயங்களும் அடிபட்டுப்போகின்றது.2,3 அடையாளத்தில் வருபவர்களை முதலில் துலைக்கவேண்டும்.

நிர்வாகம் என்ன நினைக்கின்றதொ அதற்கு நானும் சப்போட்.தினசரி மேயும் தளங்களில் யாழும் ஒன்று அதை மிஸ் பண்ணமுடியாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை தாமே ஏமாற்றும் பலர் வந்து தமிழனின் விடிவுபற்றி கொட்டுவதால் ஆக்கபூர்வமான விடயங்களும் அடிபட்டுப்போகின்றது.2,3 அடையாளத்தில் வருபவர்களை முதலில் துலைக்கவேண்டும்.

நிர்வாகம் என்ன நினைக்கின்றதொ அதற்கு நானும் சப்போட்.தினசரி மேயும் தளங்களில் யாழும் ஒன்று அதை மிஸ் பண்ணமுடியாது?

உண்மைதான் இந்த ஐயாவின் ஆக்கபூர்வமான ஆக்கங்களை யாரும் பாராட்டுவதில்லை.................. இது கவனத்தில் எடுக்கபட வேண்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பர்களே.... நீங்கள் குத்துமல்லுப்பட்டு ஏதாவது முடிவெடுங்க... நின்று எழுத நேரமில்லாமல் இருக்கிறது. நல்ல விடயங்களுக்கு நம்முடைய ஆதரவு உண்டு.

யாழைப்பூட்டுறதை சொல்லுறீங்கள் போல? :D

என்னமோ ஒவரு நாளும் சயிட் அடிக்கிற பெட்டையை மிஸ் பன்னுறது போல சொல்லுறார் அர்ஜீன் அண்ணை. :D

Link to comment
Share on other sites

சில தலைப்புகளின் கீழ் விவாதியுங்கள்.

1. யாழை தொடர்ந்து நிலைக்க செய்தல்.

2..யாழின் நோக்கை பாதுகாத்தல்.

3. யாழில் தரத்தை ஏற்படுத்தல்.

4. மோகன் அண்ணாவுக்கு பணம் கிடைக்க உதவுதல்.

5.மோகன் அண்ணாவுக்கு நி்ர்வாக உதவி அளித்தல்.

Link to comment
Share on other sites

சில தலைப்புகளின் கீழ் விவாதியுங்கள்.

1. யாழை தொடர்ந்து நிலைக்க செய்தல்.

2..யாழின் நோக்கை பாதுகாத்தல்.

3. யாழில் தரத்தை ஏற்படுத்தல்.

4. மோகன் அண்ணாவுக்கு பணம் கிடைக்க உதவுதல்.

5.மோகன் அண்ணாவுக்கு நி்ர்வாக உதவி அளித்தல்.

?????????????????????????????????????????????????????????????????????????.............................................................................................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாக உதவி அதெல்லாம் நான் செய்வன்.. போக இந்த உட்குழுக்கள் .. இனியபாரதி அண்டார்டிக்கா பாரதி .. எவனவென் என்ன என்ன வேலை செய்கிறான்..அதை பற்றிய டிடெல்ஸ் தேவை.. இங்க நானெல்லாம் செரைக்கிறதுக்கா 8 வது முதல் 2011 வரை இந்த துறையில் வேலை செய்கிறம்..

டிஸ்கி:

வருமானம் வரவேணுமென்றால் முகப்பை மாற்றவேணும் .. தமிழ்நாட்டில் களத்தினை பாதி கொண்டு சென்றாலே பாதி வருமானம் தேறிடும்... அண்ணா நகரில் 50 பிளாட்டு அண்டார்ட்டிகாவில் 700 பிளாட்டு என மாற்றவேணும்.. ஜெனிலியிய்ம் ஆபீஸ் நடத்தும் (தட்சு தமிழு பெங்களூர்) எப்படி முன்னேறிட்டார்.. ரைட்சைடு விளம்ப்ரம்.. லெப்ட் சைடு விளம்பரம்.. ஒரு லிங்க ஓப்பன் பண்ணும் பொதே எத்தனை பாப்பு அப்பு.. :lol: :lol: :lol:

டிஸ்கிக்கு டிஸ்கி:

இது இந்த எளியவனின் எளிய ஆலோசனை.. ctrl+c ctrl+v செய்வதை விடுத்து தங்கள் நாடுகளில் நடை பெறும் நடப்புகளை தெரியபடுத்துவதற்காக தனியாக ஒரு நிருபர் திட்டம் ஆரம்பிக்கலாம்.. எவன் எவனோ மாணவர் நிருபர் திட்டம் .. புளா சுலாக்கி திட்டம் என ஆரம்பிக்கிறான்.. போக செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பாக ஒரு நடுநிலை இதழ் ஆரம்பிக்கலாம்.. இதழ் ஆரம்பித்து நெட்டில் அப்டேட் செய்வது ஓல்டு பேசன்.. யாழ் பத்திரிக்கை என ஆரம்பிக்கலாம் (இதில் வீணை படத்தினை போட்டால் தான் தமிழ்நாட்டில் வாங்குவான்)..

இங்க கலைஞ்சருக்கு அல்லது சசிகலாவுக்கு ஒண்ணுக்கு வரலண்ணாலும் செய்தியா போடுறான்.. போராட்டம் உலகளாவிய ரீதியில் எடுத்து செல்ல பட்ட பிறகு இங்க மட்டுமே கூடி கும்மியடிப்பதில் பயனில்லை.. தென்னாப்பிரிக்கா தாய்லாந்து மற்றும் மலேசியா அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்லவேணும்..

நம்மட தமிழ் ஆசிரிய இளங்கோவன் இணையம் கற்போம் புக்கு எழுதிக்கார்.. இணையம் கற்போம் வாருங்கள் இது அவரின்ட புக்கு..

அவரிடம் கேட்டேன் ஊரில் இருக்கின்ற எல்லா தமிழ் வெப்சைட்டு அட்ரசையும் குறித்திருக்கார் அந்த புக்கில் ..

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/20-inayam-karpom-books-s-2nd-edition-released.html

ஏனயா யாழ் களத்தினை விட்டு போட்டீர்கள் என ? அவரிடம் சண்டை போட்டது பெரிய கூத்து.. லட்சணம் இந்த அளவில் இருக்கு :wub:

http://muelangovan.blogspot.com/2011/07/blog-post_31.html

இவன் ஜீவி .. நக்கீரன் .. எல்லாம் ஒரே நாளில் பூத்த அல்லகைகள் அல்ல .. தெ னோ த ஸ்டாட்க்ஸ்.. :rolleyes:

Link to comment
Share on other sites

சாத்தியமோ இல்லையோ ஒருவரின் புதுமையான கருத்துக்களுக்கு ஊக்கம் தரல் வேண்டும். இன்னொருவிதமாக பார்ப்போம், களத்தில் 'reputation' என்று ஒன்று உண்டு. இதில் 1000 எடுப்பவர்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்?

அவர்களை யாழ் கருத்துக்கள நிருவாகத்தில் இணைத்துகொள்வதை மோகன் பரிசீலனை செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வரும் ஆக்கங்கள் தொடர்பில் நீங்கள் முன் வைத்திருக்கும் சில குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. யாழ் ஆரம்பித்த காலம் தொட்டு எல்லா வயதினரும் உறுப்பினராக இருந்துள்ளனர். இரட்டை அர்த்தக் கதைகள் ஆண்.. பெண் இரு தரப்பாலும் கதைக்கப்பட்டுள்ளன. சினிமா பேசப்பட்டுள்ளது. கொசிப் கதைக்கப்பட்டுள்ளது. ஏன் தனிநபர் வசைபாடல்கள் நிகழ்ந்துள்ளன. ஏன் நீங்கள் யாழோடு தீவிரமாக இருந்த காலத்திலும் பக்கம் பக்கமாக அரட்டை அடித்திருக்கிறீனம்.. அதற்காக யாழ் அன்று போல் இன்றில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

காலப் போக்கில் இளைஞர்களாக ... இளைஞிகளாக பதிந்தவர்கள்.. வாழ்க்கையில்.... செட்டிலாகி விட்டார்கள். ஒரு சிலரைத் தவிர வேறு பலர் இங்கு இப்போது இல்லை. ஆனால் அந்த நடுத்தர வயதுக்காரர்கள் அப்போதும் போல இப்போதும் இருக்கினம். அவர்களே இந்த யாழைக் கொண்டும் நடத்தினம். ஒரு சிலரைத் தவிர..!

என்னைப் பொறுத்தவரை யாழ் கருத்தியல் ரீதியாக (கள உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்தல்ல) தொய்ந்திருப்பதாகத் தெரியவில்லை. யாழில் வெறும் காதல் கவிதைகள் குவிந்த காலம் போய் இன்று பலதரப்பட்ட விடயங்களும் பதியப்படுகின்றன. கடந்த ஆறு மாத காலத்துள்.. என்னால் மட்டும் சுயமாக பதியப்பட்ட பல ஆக்கங்களை இனங்காட்ட முடியும். என்னைப் பொறுத்த வரை யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் எழுதக் கிடைக்காத சில விடயங்களை இப்போ எழுதச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.

யாழின் ஆரம்ப காலத்தில்.. ஒருவர் எழுத்துப் பிழை விட்டாலே.. அவரை கிண்டலடித்து வெளியேற்றிய நிகழ்வுகள் உண்டு. இன்று அப்படி ஒரு நிலையில்லை.

யாழின் இடைக்காலத்தில் இள வயதினரின் அரட்டை கோலோஞ்சி இருந்தது.

இன்றைய உறவுகள் முன்னைய தவறுகள் பலவற்றை திருத்தி.. அவற்றைக் கடந்து நிற்கிறார்கள். இரட்டை அர்த்தம் பொதிந்த வசனங்கள் என்ன.. முழுத் தூசணத்தோடு எழுதப்பட்ட தனிமடல்களைக் கூட.. அதுவும் யாழ் கள பெண் பெயரில் இருந்த உறுப்பினர்கள்.. எந்த நியாயமும் இன்றி எழுதி அனுப்பி இருந்த கேவலங்கள் கூட முன்னர் நடந்துள்ளன.

ஆகவே காலத்தை ஒப்பிட முடியாது. நாங்கள் எப்படி செயற்படுறம் என்பதில தான் யாழின் பயன்படு திறன் தங்கியுள்ளது.

நீங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வினவுகிறேன்.. நீங்கள் யாழில் இணைந்ததில் இருந்து உங்களின் சுய ஆக்கமாக யாழுக்காக பதிந்த ஒரு பதிவை கள உறவுகளுக்கு இனங்காட்ட முடியுமா..??! அதற்காக நீங்கள் திறமையற்றவர் என்று கூற முடியாது. அதேபோல் தான் மற்றவர்களுக்கும் இருக்கலாம்.

யாழில் உள்ள ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கக் கூடும். அதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர் இவர் போல இல்லை.. என்ற ஒப்பீடு தவறானது. யாழ் அப்போது போல இப்போ இல்லை என்ற ஒப்பீடும் தவறானது. யாழ் எப்போதும் நல்லவற்றை காவ வேண்டும் என்ற எண்ணமே சிறப்பானது.

மற்றும்படி.. உங்களையோ.. அல்லது எவரையுமோ குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இதனை பதிவிடவில்லை. எண்ணத்தில் உதித்ததை சொல்ல முற்பட்டுள்ளேன். இதற்காக என்னோட சண்டைக்கு வாறதில்லை.

நன்றி. smile.gif

இத்தலைப்பை மீள எடுத்தமைக்கு வருந்துவதோடு, இதைத் தொடர வேண்டும் என்பது என் விருப்பமும் அல்ல. ஆனாலும் நான் சொன்ன கருத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.

பொதுவான கருத்துக்களத்தில் எழுதப்படுகின்ற ஆக்கங்களின் விதம் பற்றிக் கதைக்கின்றபோது ஆக்களின் அளவு மிகவும் குறைவடைந்து வெறுமனே அரட்டைகளும், கொடுந்தமிழால்(பேச்சுத் தமிழ்) நிரப்பப்படுகின்ற கருத்துக்களும் தமிழின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது தான் என் கருத்து. யாரையும் தனிப்பட்டரீதியில் மனதில் வைத்து நான் சொல்லவில்லை.

மேலும் நான் ஆரம்பகால உறுப்பினரும் அல்ல. நானும் இடைநிலையில் இணைந்தவனே. தவிர நான் சிறந்த கருத்தாளனோ, ஆக்கங்கள் தருவனோ கிடையாது. அதைச் சொல்வதில் எந்தவித தயக்கமும் கிடையாது. அன்றும் இருந்தேன். இன்றும் இருக்கின்றேன். நானும் ஆக்கங்கள் தர முடியாதிருப்பதால் தான் சொன்னேன். மோகன் அண்ணா முடிவு எடுத்திருப்பின் அது சரியானது என்று.

ஒரு காலத்தில் பேசாப்பொருள் என்ற அங்கம் வந்தபோது, அதற்கு நிறையவே வாதம் செய்திருந்தோம். பெண்களின் உடலை வர்ணிக்க, விவாதிக்க அத்தலைப்பில் இடம் கொடுக்கக் கூடாது என்று. எனவே அப்படியான விடயங்கள் அன்றும் இன்றும் இருந்தாலும், இன்று சிலர் எத்தலைப்பு எடுத்தாலும் அதில் பெ;ணைப் பற்றி ஏதாவது அசிங்கமான சிந்தனையோடு தான் எழுதுவது போலத் தோன்றுகின்றது.

யாழ்களம் என்பது கருத்தாளர்களால் மட்டும் நிரப்பப்படாமல் பல பார்வையாளர்களாலும் நிரப்பப்படுகின்றது. ஒவ்வொரு கருத்தாளனும் தங்களின் கருத்துக்கள் பிறரால் படிக்கப்படுகின்றதை உணர்ந்து சமூகப்பொறுப்போது எழுத வேண்டும் என ஆவல் கொள்வதில் என்ன தவறு.

மற்றும்படி இங்கே எவரையும் தனிப்பட்டவிதத்தில் கருத்தில் கொண்டு எழுதப்படவில்லை. :-)

சிறித்தம்பி! தூயவன் பாலியல் சம்பந்தமாக எதுவும் கதைக்க மாட்டார்.ஆனால் இதர சம்பவங்கள் அனைத்திலும் மகாகெட்டிக்காரர்?

அதிலும் தனிமனிதர் தாக்குதலுக்கு இவரிடம் எல்லோரும் பாடம் எடுக்கலாம்.மட்டுறுத்தினரை கேட்டால் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வரும். laugh.gif

நல்லது குமாராமி.

மேலும் எனது கெட்டித்தனத்தை கண்டு பிடித்தமைக்கும் மிக்க நன்றிகள்.

என்னுடைய வண்டவாளம், தண்டவாளத்தை மட்டுனரிடம் பரிந்துரைந்து வெளியிட ஆவன செய்யுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். எனக்கும் அறிய ஆவலாக உள்ளது.

இதில் தனிமனித தாக்குதல் இல்லை என்கின்றீரா தமிழ்சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று... அவர் வேறொரு பதிவில், உங்கள் மீது நடத்திய தனி மனித தாக்குதலை பார்த்தேன் குமாரசாமியண்ணை.

ஒரு பானை, சோத்துக்கு.... ஒரு சோறு பதம் என்று... சும்மாவா சொன்னார்கள்.

ரேக் இற் ஈசி அண்ணை. நம்ம பையன் தான் தூயவன். என்ன குழப்பமோ... ஆரறிவர். smile.gif

உண்மை தான். ஆரம்பகாலங்களில் இருந்தே திரு.குமாரசாமி அவர்களோடு ஒருமித்த கருத்தை நான் கொண்டிருந்தில்லை. அவரிடம் எவ்வித தலைப்பு சம்பந்தப்பட்ட வாதங்களையும் செய்யாதபோதும், அவருடைய சீண்டல்கள் , மற்றும் பாலியல் சிந்தனை கொண்டவர் போன்ற தோற்றப்பாடு பல தடவை எரிச்சலைத் தந்திருந்தன. இது என்னுடைய பிழையான எடுகோளாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இவற்றை அவதானித்தால் புரியலாம் என நினைக்கின்றேன்.

மற்றும்படி அவரை நான் நேரில் பார்த்ததுமில்லை. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைள், நடவடிக்கைள் பற்றி அறிந்தவனுமல்ல. பாதிக்கப்பட்டவனுமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி தூயவன் தொடர்ந்து எழுதுங்கள்.

சரிபிழைகளை புரிந்து உணர்ந்தது திருத்திக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.