Jump to content

கிழக்கில் உபத்திரபம் - வடக்கில் வஞ்சகம் - மேற்கில் செல்வம் - தெற்கில் அதிகாரம்


Recommended Posts

மகிந்த ராஜபக்ச வேலணை மக்களின் உறவினன், கருணா சிங்கள மக்களின் உறவினன், டக்ளஸ் சமூக வேறுபாடுகளின் தலைவன். இவர்கள் தான் கிழக்கின் உதயத்தையும், வடக்கில் வசந்தத்தையும் கொடுக்கிறார்கள். அவ்வளவிற்கு ஈழத்தமிழர் இழிவானவர்களோ அல்லது மடையர்ககளோ அல்ல.

கருணாவிற்கு மது, மங்கை - டக்ளசிற்கு சாதிவெறி, பணவெறி, சமயவெறி, ஈழத்தமிழ் மக்களுக்கு விடுதலைத் தாகம். மகிந்த, கருணா, டக்ளஸ் இவர்களின் வெறிகள் ஒரு போதும் விடுதலை தாகத்தை தணிக்க முடியாது. ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தோல்வி கண்டிருக்கலாம். ஆனால் மக்களின் உணர்வுகள் ஆயுதப் போராட்ட காலத்திலிருந்ததைவிட தற்பொழுது பன் மடங்கு அதிகரித்துள்ளது மட்டுமல்லது, இவ் மும்மூர்த்திகளின் ஆட்டம் நிரந்தரமற்றது என்பதையும், ஈழத்தமிழ் மக்கள் மனதில் தெளிவாகக் கொண்டுள்ளனர்.

இன்னும் சில வருடங்களில் மகிந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும், கருணா என்கிற முரளிதரன் இலங்கை, பிரித்தானிய நீதிமன்றங்களிலும், டக்ளஸ்இலங்கை, இந்திய நீதிமன்றங்களிலும் குற்றவாளிக் கூண்டுகளில் நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை மும்மூர்த்திகளும் தெரிந்திருக்க மாட்டார்கள்.

கருணாவும், டக்ளசும் தமது தனிப்பட்ட சுகபோகங்களுக்காக - ஈழத் தமிழினத்தின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றை சர்வதிகாரி ராஜபக்ச குடும்பத்தினருக்கு தாரை வார்த்து கொடுத்து இச் சர்வதிகாரிகளை வடக்கு கிழக்குக்கு மூலை முடுக்கெல்லாம் கூட்டிச் சென்று இவர்களை வரவேற்பதும், மாலை போடுவதும் கோவில்களில் பூசைகளும் பால் அபிசேகம் செய்வதால் தமிழினத்திற்கு கிடைக்கும் நன்மை என்ன?

கருணா டக்களசின் அடிமைத்தனம்

சிங்கள படையினர் மிருகத்தனமாக பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தவும், சித்திரவதை செய்யவும், கொலை செய்யவும், சிங்களக் குடியேற்றம், பௌத்த மயம், சிங்கள மயம் ஆகியவை எந்த நீதி விசாரணையுமின்றி தமிழர் தாயகத்தில் நடைபெறுகின்றன. இவற்றில் கருணா டக்ளசின் பங்கு என்ன? கலை, கலாச்சாரம் மிகவும் கவனமாக பேணப்பட்டுவந்த தமிழர் தாயகத்தில், இன்று இடம்பெறும் கலாச்சார சீர்கேட்டிற்கும், சிங்களப் படைகளின் காமவெறியாட்டத்திற்கும் என்றோ ஒரு நாள் கருணாவும், டக்ளசும் ஈழத்தமிழ் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

மகிந்தவையும், அவரது குடும்ப அரசையும் தினமும் புகழ்ந்து துதிபாடும் இவர்கள், ஐ. நா. வினால் வெளியிடப்பட்ட அறிக்கையில,; 40 ஆயிரம் பொது மக்கள் சிறீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் எனக் குற்றஞ் சாட்டபட்டதையே நிராகரித்துள்ளார்கள். இதில் வேடிக்கையான விடயங்கள் இவர்கள் இருவரதும் ஐ. நா பற்றிய கூற்றுக்கள். வெட்கம்! கருணாவை நம்பும் மகிந்தவிற்கு, இராணுவத்திற்கோ, சிறீலங்கா அரசிற்கோ கருணாவின் சரித்திரத்தை ஒழுங்காக ஆராய்ந்து எதிர்காலத்தில் இவர் என்ன செய்வார் என்பதை அளவிட முடியாதகவர்களவுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 1983ம் ஆண்டு இணைந்த கருணா முக்கிய பதவிகள் வகித்து தமிழீழத் தேசியத் தலைவரின் நம்பிக்கையைப் பெற்றவர், பெண் ஆசை, பொன் ஆசை காரணமாக குத்துக்கரணம் அடித்து இயக்கத்தில் தனக்கு தெரிந்த இரகசியங்களையே காட்டிக்கொடுத்த இவர் உலகில் யாருக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க முடியாது.

"ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை’’

சாத்திர ரீதியாக கூறுவதானால் பிள்ளையானுக்கு இப்பொழுது ‘‘வெள்ளி திசையாக’’ இருக்க வேண்டும்! எங்கையோ ஒரு மூலையில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தவர், இன்று கிழக்கின் உதயத்தின் முதலமைச்சர், அதவாது கிழக்கின் முதலமைச்சர். இதை தான் கூறுவார்கள் ‘‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்கரை’’ என்று. இப்படியாக சிலர் புலம் பெயர் வாழ்விலும் இப்பொழுது திடீரென உதயமாகியுள்ளார்கள். என்ன செய்வது, தமிழீழ மக்களின், விசேடமாக புலம் பெயர் வாழ் மக்களின் துர்பாக்கிய நிலை இது தான். டக்களசைப் பொறுத்தவரையில், ராஜபக்சவே சொல்லி உள்ளார் ‘‘டக்ளசுக்கு சல்லி எண்டால் போதும’’ அவர் எதுவும் செய்வார்.

இப்பொழுது தனது தனிப்பட்ட செல்வாக்கை வளர்ப்பதற்காக சாதி, சமயம் பிரச்சினைகளை யாழ் குடாவில் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்.

இவர்கள் யாவரும் இன்றுவரை தமிழினத்திற்கு என்னத்தை உருப்படியாகச் செய்துள்ளார்கள்? மனம் மரியதை கெட்ட இப்படியான வாழ்க்கை இவர்கள் வாழ வேண்டுமா?

கிழக்கின் உதயமாம்? அங்கு என்ன உதித்துள்ளது. அங்கு ராஜபக்சவின் சிற்றரசர்களான கருணா, பிள்ளையான் போன்ற கூலி படைகளினால் உபத்திரம் தான் உதயமாகி உள்ளது.

வடக்கில் வசந்தமாம்? இந்த அடிமை வாழ்க்கை வாழும் டக்ளசினால் வடக்கு வாழ் மக்களுக்கு எதை கொண்டுவர முடியும்? வடக்கிலும், கிழக்கிலும் நடைபெறும் உபத்திரமும் வஞ்சகமும் இவர்களுக்கு உதயமும் வசந்தமாகவும் தெரிகிறது!

சிறீலங்காவினால் பொருளாதாரம்

மிக நீண்ட காலமாக சிறீலங்காவினால் பொருளாதார ரீதியாக ஏதோ இலாபம் அடைய முடியுமானால் அது மலையக தமிழ் மக்களின் வியர்வை, கடும் உழைப்பு, விடாமுயற்சியால் கொண்டுவரப்பட்ட செல்வமான – தேயிலை, இறப்பர், கொக்கோ ஆகியவற்றினலே தவிர, ராஜபக்ச பரம்பரையால் உருவாக்கப்பட்டவை எதுவம் அல்ல.

வடக்கு கிழக்கு மேற்கை அடக்கி ஆளுவதற்கான ஆட்சிதான் தெற்கில் உள்ளதே தவிர எந்தவித கடும் உழைப்போ, விடாமுயற்சியோ, வியர்வைசிந்தி உழைக்கும் பக்குவ மனேநிலையோ அங்கு கிடையாது.

ஜெயலலிதாவை வரவேற்கும் அமெரிக்காவிற்கு ராஜபக்சா வேண்டா விருந்தாளி

இந்த ராஜபக்சாக்களை, டக்ளசையும், கருணா, பிள்ளையான் ஆகியோரை யார் உலகில் தேடுகிறார்கள், அன்புடன் அழைக்கிறார்கள் என நாம் பார்ப்போமானால் அது நிட்சயமாக சில நாடுகளுடைய நீதிமன்றங்களும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களுமே!

பல தடவை அமெரிக்காவிற்கு சென்ற ராஜபக்சவை எத்தனை தடவை அமெரிக்க அரசாங்கம் உத்தியோக பூர்வமாகவோ நட்பாகவோ அழைத்துள்ளது? அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஒரு அழையா விருந்தாளியாகவே ராஜபக்ச சென்று வந்தாh,; அதற்கும் இன்று முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

இன்று மூன்றாவது தடவையாக தமிழ்நாட்டின் முதலமைச்சரான செல்வி ஜெயலலிதாவை அமெரிக்காவிற்கு விஜயம் செய்யுமாறு, சென்னைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளார் திருமதி கிலாரி கிளிங்டன் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு மாநில முதலமைச்சருக்கு உலகில் உள்ள மரியாதை கூட ஒரு நாட்டின் ஜனாதிபதியான ராஜபக்சவிற்கு இல்லை என்பதை இவருக்கு சாமரம் வீசும் சிங்கள அடிமைகளான டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோர் விளங்கிக் கொள்வார்களா?

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

http://www.tamilkathir.com/news/5178/58//d,full_article.aspx

Link to comment
Share on other sites

'ராஜபக்சவிற்கு சாமரம் வீசும் சிங்கள அடிமைகளான டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோர் விளங்கிக் கொள்வார்களா?"

- இவர்கள் 'எப்படியும் வாழலாம்' என வாழும் வாழ்க்கையை விட கேவலமான வாழ்க்கை வாழ்பவர்கள்

- மகிந்தர் இவர்களை இறுதியில் காட்டிக்கொடுக்க, இவர்கள் அவனை காட்டி கொடுப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'ராஜபக்சவிற்கு சாமரம் வீசும் சிங்கள அடிமைகளான டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோர் விளங்கிக் கொள்வார்களா?"

- இவர்கள் 'எப்படியும் வாழலாம்' என வாழும் வாழ்க்கையை விட கேவலமான வாழ்க்கை வாழ்பவர்கள்

- மகிந்தர் இவர்களை இறுதியில் காட்டிக்கொடுக்க, இவர்கள் அவனை காட்டி கொடுப்பார்கள்

பதிவிற்கு நன்றி Komakan, நிஐத்தை எழுதியுள்ளார்,

Akootha, ஈனப் பிறவிகள் என்பது இவர்களைதானா???

இது எல்லாம் அவர்களுக்கு எருமை மாட்டில் பெய்யத மழை மாதிரிதான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.