Jump to content

யூரோ தாக்குப்பிடிக்குமா?


Recommended Posts

யூரோ தாக்குப்பிடிக்குமா?

ஐரோப்பாவில் பெரிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் ஆகியன தொடரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நாடுகளும் கிரீஸ், அயர்லாந்து போல பண உதவியை கேட்கும் நிலை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த நிலை வந்தால், அவ்வளவுக்கு பணம் இல்லை என்ற நிலை ஏற்படலாம். அதுவே யூரோவின் முடிவாகலாம்.

EURO GOVT-Edgy investors keep Italy and Spain close to the edge

The euro zone's escalating debt crisis threatened to enter a dangerous new phase on Wednesday as volatile trading saw no let-up in pressures driving Italy, the region's largest government bond market, towards a tipping point.

http://www.reuters.com/article/2011/08/03/markets-bonds-euro-idUSL6E7J326G20110803

'யூரோ'வை கைவிடுகிறது ஜெர்மனி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=87897

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யூரோ தாக்குப்பிடிக்குமா?

ஐரோப்பாவில் பெரிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் ஆகியன தொடரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நாடுகளும் கிரீஸ், அயர்லாந்து போல பண உதவியை கேட்கும் நிலை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த நிலை வந்தால், அவ்வளவுக்கு பணம் இல்லை என்ற நிலை ஏற்படலாம். அதுவே யூரோவின் முடிவாகலாம்.

EURO GOVT-Edgy investors keep Italy and Spain close to the edge

The euro zone's escalating debt crisis threatened to enter a dangerous new phase on Wednesday as volatile trading saw no let-up in pressures driving Italy, the region's largest government bond market, towards a tipping point.

http://www.reuters.com/article/2011/08/03/markets-bonds-euro-idUSL6E7J326G20110803

'யூரோ'வை கைவிடுகிறது ஜெர்மனி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=87897

நல்ல முயற்ச்சி எடுத்தார்கள், சில நாடுகளினால் கைவிடப்படும் நிலைமை

Link to comment
Share on other sites

இன்று வட அமெரிக்க சந்தைகள் பெரிய இழப்புக்களை, 3%, சந்தித்து வருகின்றன. இதற்கு ஐரோப்பிய / அமெரிக்க நிலைமைகளே முக்கிய காரணமாக உள்ளது.

தங்கம் மீண்டு விலை ஏறியுள்ளது.

இன்னொரு பொருளாதார தேக்கம் உலகத்தை தாக்கும் போல உள்ளது.

Recession Almost A Certainty, Says Advisor — Stocks Could Crash Soon

In the past few months, investors have gone from being generally bullish about the economy and stock market to increasingly concerned that we may be headed for another recession. For now, however, the consensus is still that we'll trudge along with slow growth but avoid an actual downturn.

One advisor who thinks that a recession is almost a certainty, however, is Lance Roberts, the Chief Economist at Streettalk Advisors, a $400 million advisory firm.

http://finance.yahoo.com/blogs/daily-ticker/recession-almost-certainty-says-advisor-stocks-could-crash-142911415.html

Link to comment
Share on other sites

இது தான் இன்று மேற்குலக செய்தி

Wall Street Plunges on Economic Fears;

Dow Sinks More Than 500 Points;

S&P, Nasdaq Down 4%;

VIX Soars 30%

- ஜப்பானிய நாணயமும் சுவிஸ் நாணயமும் தமது பெறுமதிகளை குறைத்தன. இதனால் அமெரிக்க டாலர் பெறுமதி கூடியது. இதுவும் ஒரு காரணம்.

- வேலைவாய்ப்புக்கள் பலவீனமாக உள்ளன.

- தங்கம் உட்பட்ட சகல மூலப்பொருட்களும் சரிந்தன

( http://finance.yahoo.com/ )

Link to comment
Share on other sites

கிரீஸ் ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் மூன்று வீதமே. ஆனால், மூன்றாவது நாலாவது பெரிய பொருளாதாரங்களான இத்தாலி, ஸ்பெயின் கிட்டத்தட்ட முப்பது வீத பொருளாதாரத்தினை கொண்டது.

எனவே இரு நாட்டையும் அவர்கள் பண உதவி கேட்கும் பொழுது அதற்கு உதவுவது என்றால் முதலாம் இரண்டாம் இடத்தில் உள்ள ஜெர்மனி , பிரான்ஸ் நாடுகளாக இருக்கவேண்டும். அவர்களும் பல நாடுகளை ஏற்கனேவே கை தூக்கி விட்டு நொடிந்துபோயுள்ளனர். தொடர்ந்தும் உதவினால் அவர்களும் நாளை உதவி கேட்கவேண்டி வரலாம். ஆனால், யாரிடம் கேட்பது?

ஸ்பெயின் தனது அரச பத்திரங்களை விற்று தேவையான பணத்தை பெற்றுள்ளது, ஆனால் முதலீட்டாளர்கள் கூடிய வட்டி வீதத்தை எதிர்பார்க்கிறனர்.

Link to comment
Share on other sites

யுரோ நாணயம் திட்டமிட்ட படி அமையவில்லை என்பதை பலரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

2 வருடங்களிற்க்கு முன் யேர்மன் நாடு தனது பழைய நாணயங்களை மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வரப்போவதாக வதந்திகள் உலாவின.

3 மாதங்களிற்க்கு முன் யேர்மன் நாட்டில் அவர்களுடைய பழைய நாணயம் அச்சிடப்படுவதாக ஒரு வதந்தி ஊடகங்களில் உலாவியது.

தற்பொழுது நடப்பவைகளை பார்த்தால் யுரோவை செயற்கையாக இல்லாமல் செய்வது ஒரு திட்டமாக இருக்கலாமோ என்று தோன்றுகின்றது.

இந்த யுரோவால் பாதிக்கப்பட்ட பெரிய (அல்லது வல்லரசுகள்) தான் அதிகம். யுரோவால் பயனடைந்த நாடுகள் என்று பார்க்கப்போனால் சிறிய நாடுகள் தான். அவர்களின் கடன் சுமையை சுமப்பதற்க்கு பெரிய நாடுகள் தற்பொழுது தயாரா இல்லை என்பதே உண்மை. எத்தனை நாளைக்கு இப்படி செயற்கையாக யுரோ நாணயத்தை உயிருடன் வைத்திருக்க முடியும்.

நேற்று சுவிசன் தேசிய வங்கி இந்த நாட்டு நாணயத்தின் பெறுமதியை குறைப்பதற்க்கு பண நோட்க்களை அச்சிட்டு வெளியிட்டார்கள். இந்த நாட்டின் பண பெறுமதி அதிகரித்ததால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. பல நிறுவனங்கள் தொழிலாளர்களை தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்தார்கள். பங்கு சந்தையும் ஓரளவு நிதானத்திறக்கு வந்தது.

ஆனால் இன்று மறுடியும் பழைய நிலைக்கே போய்விட்டது (அதையும் விட இன்னும் கிழே போய்க்கொண்டுள்ளது).

அடுத்து காணி; நிலங்கள், வீடுகள் போன்ற அசையும் சொத்துக்களின் நிலை மோசமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலை வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் :-)

இந்த வீடு வாங்pய எங்கட சனத்தின்ர தொல்லை தாங்க முடியல சாமி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரீஸ் ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் மூன்று வீதமே. ஆனால், மூன்றாவது நாலாவது பெரிய பொருளாதாரங்களான இத்தாலி, ஸ்பெயின் கிட்டத்தட்ட முப்பது வீத பொருளாதாரத்தினை கொண்டது.

எனவே இரு நாட்டையும் அவர்கள் பண உதவி கேட்கும் பொழுது அதற்கு உதவுவது என்றால் முதலாம் இரண்டாம் இடத்தில் உள்ள ஜெர்மனி , பிரான்ஸ் நாடுகளாக இருக்கவேண்டும். அவர்களும் பல நாடுகளை ஏற்கனேவே கை தூக்கி விட்டு நொடிந்துபோயுள்ளனர். தொடர்ந்தும் உதவினால் அவர்களும் நாளை உதவி கேட்கவேண்டி வரலாம். ஆனால், யாரிடம் கேட்பது?

ஸ்பெயின் தனது அரச பத்திரங்களை விற்று தேவையான பணத்தை பெற்றுள்ளது, ஆனால் முதலீட்டாளர்கள் கூடிய வட்டி வீதத்தை எதிர்பார்க்கிறனர்.

பிரிட்டனின் நிலையோ கவலைக்கிடம். எதிர்பார்த்த அளவு காலாண்டு பொருண்மிய வளர்ச்சி இல்லை. அமெரிக்காவோ எதிர்பார்த்ததை விட அதிக கடனாளியாக உள்ளது. அதுமட்டுமன்றி இன்று அதன் தொழில்வாய்ப்புப் பற்றிய அறிவிப்பு வரவுள்ளது. அந்த அறிவிப்பில் மேலதிக தொழில்வாய்ப்புக்கள் குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அது வரவில்லையேல்.. முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும் இழக்கப்படும் போது பங்கு வர்த்தகம் உட்பட உலகப் பொருண்மியம் பெரும் நெருக்கடியை சந்திக்கும். இது இரட்டைத் தாழ்வு (double dip recession) பொருண்மியப் பின்னடை நோக்கி உலகை இட்டுச் செல்லலாம். குறிப்பாக.. பிரித்தானிய வங்கிகளின் பங்குகள் 10 தொடக்கம் 20% வரை வீழ்ச்சி கண்டுள்ளன. உலகளாவிய அளவில் 30,000 தொழில்களை எச் எஸ் பி சி வங்கி குறைக்க உள்ளது.

கடந்த 36 மணித்தியாலத்தில் மட்டும் பல ரில்லியன் பெறுமதியான பங்கு வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய அரசுகள் பெறும் ரிவனியுவை குறைத்துள்ளது. இது ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தை பாதிக்கச் செய்யும். அவை பாதிப்படைந்தால்.. ஆசிய சந்தைகள் தானே வீழ்ச்சி காணும். எல்லா ஆசிய சந்தைகளும் பெரு வீழ்ச்சியை காட்டியுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து காணி; நிலங்கள், வீடுகள் போன்ற அசையும் சொத்துக்களின் நிலை மோசமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலை வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் :-)

இந்த வீடு வாங்pய எங்கட சனத்தின்ர தொல்லை தாங்க முடியல சாமி!

என்ணண்ணை? வந்து இவ்வளவு காலமாயும் இன்னும் வீடு வாங்கேல்லையோ எண்டு கேள்வி வேறை?அவையின்ரை எடுப்பென்ன? நெளிப்பென்ன? அடிக்கிற கூத்தென்ன?வெறுப்பெத்துறாங்கள் :(:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருட மத்தியில் தான்.... மூன்று வருடத்திற்கு முன்பு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால்... ஜேர்மனி சிரமப்பட்டு வெளியே வந்தது.

அப்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால்... பலர் வேலை இழந்தார்கள். ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது. ஜேர்மனி மற்றைய நாடுகள் போல் சுற்றுலா மூலம் பணம் சம்பாதிக்கும் நாடல்ல. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்தால்.... மீண்டும் ஒரு பெரிய நெருக்கடி எல்லோர் மீதும் ஏற்படும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுரோ நாணயம் திட்டமிட்ட படி அமையவில்லை என்பதை பலரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

அடுத்து காணி; நிலங்கள், வீடுகள் போன்ற அசையும் சொத்துக்களின் நிலை மோசமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலை வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் :-)

இந்த வீடு வாங்pய எங்கட சனத்தின்ர தொல்லை தாங்க முடியல சாமி!

எம்மவர்களில் அநேகரிடம் சரியான பொருண்மியத் திட்டமிடல் இல்லை. ஊரில் பந்தாவிற்கு பொருள் சேர்த்தது போல வெளிநாடுகளிலும் சேர்க்கினம். அது மிகவும் தவறானது. ஊரில் ஒரு வீட்டை சொந்தப் பணத்தில் வாங்குவினம் அல்லது சொத்துக்கள் உறவுகளிடம் இருந்து பரிமாறப்படும். ஆனால்.. மேற்குநாடுகளில் அப்படி வாங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

வங்கிக் கடனடிப்படையில் வீடு வாங்குபவர்களே அதிகம். வங்கிகளில் நிதி நிலை.. மோசமாகும் போது.. அசையா சொத்துக்கள் மீதான வங்கிக் கடன்கள் உட்பட சொத்துக்களின் பொறுமதியும் மாறும். இப்போ அசையா சொத்துக்களில் வீடுகளின் விலை பெரு வீழ்ச்சியை கண்டுள்ளன. குறிப்பாக இங்கிலாந்தில் வீடுகளின் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. 2008 இல் இருந்து இந்த நிலை இருந்தாலும் இடையில் சற்று உயர்ச்சி இருந்தது. சரியான பொருண்மியத் திட்டமிடல் உள்ளவர்கள் இப்படி வீடுகளை வாங்கி சீரழியமாட்டார்கள். நான் அறிய சில வீட்டுக் கிரேசிகள்.. தற்போது நிதிநிலை நெருக்கடிக்கு போயுள்ளனர். அதேபோல் மூலைக்கடை வியாபாரிகள் பாடும் பரிதாபமாக உள்ளது. நம்மவர்கள் ஊரில் வீட்டு வாசலுக்கு ஒரு கடை வைச்சிருந்தது போல கடை போட வெளிக்கிட்டு சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களில் அநேகர் நடுத்தர வருமானமுள்ள.. வெற்றுப் பந்தாப் பேர்வழிகள் என்பது கவலைக்கிடமான நிலை.

Link to comment
Share on other sites

எம்மவர்களில் அநேகரிடம் சரியான பொருண்மியத் திட்டமிடல் இல்லை. ஊரில் பந்தாவிற்கு பொருள் சேர்த்தது போல வெளிநாடுகளிலும் சேர்க்கினம். அது மிகவும் தவறானது. ஊரில் ஒரு வீட்டை சொந்தப் பணத்தில் வாங்குவினம் அல்லது சொத்துக்கள் உறவுகளிடம் இருந்து பரிமாறப்படும். ஆனால்.. மேற்குநாடுகளில் அப்படி வாங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

வங்கிக் கடனடிப்படையில் வீடு வாங்குபவர்களே அதிகம். வங்கிகளில் நிதி நிலை.. மோசமாகும் போது.. அசையா சொத்துக்கள் மீதான வங்கிக் கடன்கள் உட்பட சொத்துக்களின் பொறுமதியும் மாறும். இப்போ அசையா சொத்துக்களில் வீடுகளின் விலை பெரு வீழ்ச்சியை கண்டுள்ளன. குறிப்பாக இங்கிலாந்தில் வீடுகளின் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. 2008 இல் இருந்து இந்த நிலை இருந்தாலும் இடையில் சற்று உயர்ச்சி இருந்தது. சரியான பொருண்மியத் திட்டமிடல் உள்ளவர்கள் இப்படி வீடுகளை வாங்கி சீரழியமாட்டார்கள். நான் அறிய சில வீட்டுக் கிரேசிகள்.. தற்போது நிதிநிலை நெருக்கடிக்கு போயுள்ளனர். அதேபோல் மூலைக்கடை வியாபாரிகள் பாடும் பரிதாபமாக உள்ளது. நம்மவர்கள் ஊரில் வீட்டு வாசலுக்கு ஒரு கடை வைச்சிருந்தது போல கடை போட வெளிக்கிட்டு சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களில் அநேகர் நடுத்தர வருமானமுள்ள.. வெற்றுப் பந்தாப் பேர்வழிகள் என்பது கவலைக்கிடமான நிலை.

உண்மை உண்மை!

எம்மவர்கள் பெரும் பந்தா பரமசிவங்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இங்கு வருடத்திற்க்கு ஒரு கடை திறந்து பின்னர் மூடப்படுகிறது. சில தமிழர்கள் அவன் கடை நடத்திறான் நானும் நடத்த வேணும் என்டு அடம் பிடித்து நட்டத்தில் நடத்துகிறவர்களும் உண்டு.

இதில் பரிதாபத்திற்குரிய விடயம் என்னவெனில் இங்கு யாரும் வீடு வாங்கும் போது மொத்தப்பணத்தையும் கொடுத்து வாங்குவதில்லை. பென்சன் காசு, சேமிப்பு என்டு எல்லாத்தையும் அதில போட்டு அதுக்கு மேல வங்கியிடமும் கடன் வாங்கித்தான் வீடு வாங்கிற.

ஆனால் ஒரு விடயத்தை இவர்கள் மறந்து கிடுகிறார்கள். வங்கியின் வட்டி வீதத்தை. நிறையப்பேர் வட்டி எப்படிப்பட்டது என்று பார்ப்பதில்லை. அதாவது சில வங்கிகள் காலத்திற்கேற்றாற்போல் வட்டி விகிதத்தை ஏற்றும். சிலது அப்படியே இருக்கும் (fix). இதை எம்மவர்கள் கவனிக்க தவறுகிறார்கள்.

மற்றது வீடு வாங்கும் போது அதற்கான இதர செலவை பற்றி யோசிப்பதில்லை.. தண்ணி, மின்சாரம், திருத்த வேலைகள், காப்புறுதிகள் என்று இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.

வீடு வாங்கிட்டு மாதம் வாடகை வீட்டுக்கு கொடுக்கிறதை விட இதுக்கு குறைய தானே கொடுக்கப்போறம் என்டு சொல்லுங்கள். ஆனா கடசியில நான் மேல சொன்னதெல்லாம் சேர்த்து வாடகை வீட்டை விட அதிகமாக தான் வரும்.

இதை எடுத்துச் சொல்லப்போனால் எங்களை பொறாமையில சொல்லுது என்டு நிக்கினம் :blink:

இந்த வீடு வாங்கிறதெல்லாம் வீட்டில மனிசி மாரின்ர தொல்லை தாங்கேலாமல் என்டு எனக்கு ரெம்ப நாளா ஒரு சந்தேகம் இருக்கு. ஆண்கள் பந்தா காட்டினமோ இல்லையோ, பெண்ணகளின்ர பந்தா இருக்கோ....

Link to comment
Share on other sites

என்ணண்ணை? வந்து இவ்வளவு காலமாயும் இன்னும் வீடு வாங்கேல்லையோ எண்டு கேள்வி வேறை?அவையின்ரை எடுப்பென்ன? நெளிப்பென்ன? அடிக்கிற கூத்தென்ன?வெறுப்பெத்துறாங்கள் :(:o

இதில இந்த பணியாரங்களின்ர (அது தானய்யா பணியாளர்கள் என்டு சொஞ்சம் திரியுதே அதுவளை சென்னன்) தொல்லை பெரும் தொல்லையப்பா..

"அண்ணை நீங்கள் இப்ப வீடு வாங்கின பாக்கிற சனம் நாளைக்கு நீங்களும் தப்பான பணத்தில தான் வீடு வாங்கின என்டு சொல்லுங்கள்" இதை சொன்னா கேட்கிறாங்ளே. கடசீல எல்லா பழியும் விடுதலைப்புலிகளில தான் போய் சேருது.

கவண்டமணி மாதிரி சொல்லனும் என்டா: மக்கள் எப்படி போன நமக்கென்னங்க மற்ற மந்திரி எப்படி பேறான் என்டு பாருங்கய்யா...

Link to comment
Share on other sites

Merkel, Sarkozy to speak as crisis rages

Europe's debt crisis and fears over the U.S economy battered markets once again Friday challenging vacationing European leaders to come up with a way to keep the turmoil from pushing Spain and Italy to financial collapse.

Stocks fell across Europe, following an earlier slide in Asia, and Italian and Spanish bonds traded at levels that threaten their ability to raise money in the bond markets to pay off debts. Those debt fears are compounded by concerns the United States, the world's biggest economy, will slide into another recession.

http://money.msn.com/business-news/article.aspx?feed=AP&date=20110805&id=14049702

Link to comment
Share on other sites

எதிர்பார்த்ததை விட கூடுதலான மக்கள் வேலை எடுத்துள்ளனர் என்ற செய்தியால அமெரிக்க சந்தை இன்று உயரும். ஆனால் அடுத்த வாரம் என்ன நடக்கும்???

--------------------------------------------------------------------------------

அமெரிக்க பொருளாதார பின்னடைவு மற்றும் கடன் நெருக்கடி காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு 470 புள்ளிகளை இன்று இழந்து தடுமாறுகிறது.

காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சென்செக்ஸில் 473 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.

கட்டுமானத் துறை, ரியல் எஸ்டேட், வங்கித் துறை மற்றும் உலோகத் துறைப் பங்குகள் மிக மோசமாக சரிவடைந்தன.

ஸ்டெர்லைட் மற்றும் ஹிண்டால்கோ பங்குகள் அதிகபட்ச சரிவை சந்தித்தன.

பிற்பகல் நிலவரப்படி சென்செக்ஸ் 545 புள்ளிகளை இழந்து 17,147.59 ஆக உள்ளது. இது 3.09 சதவீத வீழ்ச்சியாகும்.

http://thatstamil.oneindia.in/news/2011/08/05/sensex-down-more-than-500-points-on-global-cues-aid0136.html

Link to comment
Share on other sites

ஐரோப்பாவில் கடும் பொருளாதார நெருக்கடி

ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்தத்தில் இருந்து விடுபட முடியாமல் கடுமையாக தத்தளித்து வருவதாக ஓகூஸ் பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளர் ரோபன் எம். ஆனர்சன் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து செல்கிறது, பொருளாதார சுழர்ச்சி வேகம் தளர்நடை போடுகிறது. கடந்த ஐந்தாண்டு காலமாக பெரும் முயற்சி எடுத்தும் நிமிர முடியாத நிலையே பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதராம் காணப்படுகிறது. வடக்கைவிட ஐரோப்பாவின் தெற்குப்புற நாடுகளிலேயே மோசமான பொருளாதார நிலை காணப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை மீட்க 440 மில்லியாட் யூரோ கொண்ட பாதுகாப்பு பொதி வழங்கப்பட்டாலும் நிலமையை சீர்திருத்த முடியவில்லை. அமெரிக்கா மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு சீனாவின் உதவியை நாடியுள்ளது. ஐரோப்பாவிற்கு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

http://www.alaikal.com/news/?p=78259

Link to comment
Share on other sites

பிரெஞ்சு வங்கிகள் ஆபத்திலா??

இன்று பிரெஞ்சு நாட்டு வங்கிகள் ஆபத்தில் என்ற செய்தி பரவியது. இதனால் வங்கிகளின் பங்குகள் சரிந்தன.

இது உண்மையா இல்லை வதந்தியா?

உண்மை - பல பிரச்சனைகளில் அகப்பட்டுள்ள நாடுகளில் (கிரீஸ், அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி ..) உள்ள வங்கிகள் பலவற்றுக்கு பிரெஞ்சு வங்கிகள் உதவின. அவை பலவும் இன்று வங்குரோத்து நிலையில் உள்ளன. அதனால் கொடுத்த கடன் அறவிடமுடியாக்கடனாக உள்ளது.

வதந்தி - இப்படி வதந்திகளை பரப்பி அதன் மூலம் வங்கி பங்குச்சரிவை எதிர்வுகூறி பணம் சம்பாதிக்கின்றனர்.

எதுவானாலும், தனியார் வங்கிகளில் பணம் இல்லாமல் போனால், அரச வணகியின் பணம் (வரிப்பணம்) உதவிக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் ஒரு பெரிய பொருளாதார தேக்கம் எல்லோரையும் தாக்கும்.

Link to comment
Share on other sites

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பொருளாதார உறவு வேண்டாம் – கொலன்ட்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் யூரோ நாணயம் மூலமான உறவு வைத்துக் கொள்வது அர்த்தமற்றது என்று 54 வீதமான கொலன்ட் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பொருளாதார வங்குரோத்தடைந்த கிரேக்கத்தை பணம் கொடுத்து சுமக்கும் தேவையற்ற வேலையையும், ஐரோப்பிய ஒன்றியம் என்ற போர்வையில் சுமப்பது அர்த்தமற்றது என்று கருதுகிறார்கள்.

அதேவேளை இப்படியொரு கருத்துக் கணிப்பு வெளியானது ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பாக பல புதிய முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக அமையும் என்று கொலன்ட் அரசியல் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் ஆதாயம் தரும் அமைப்பென ஓடிப்போய் பொறிக்குள் மாட்டுப்பட்டு இப்போது பொறிக்குள் சிக்கிய எலிகளாக இந்த நாடுகள் தடுமாறி வருவது கவனிக்கத்தக்கது. ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் செயற்பாட்டு வேகம் கொண்டவர்கள் அல்ல என்ற உண்மையும் சில காலங்களில் உணரப்பட வாய்ப்புள்ளது.

http://www.alaikal.com/news/?p=79230

Link to comment
Share on other sites

ஐரோப்பிய கடன் பிரச்சனை: சர்கோசி - ஏங்கலா மார்கெல் முக்கிய பேச்சுவார்த்தை

கிறீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் கடன் பிரச்சனையில் தள்ளாடுகின்றன. இந்த நாடுகளின் கடனை சரி செய்வதற்கு ஐரோப்பா தரப்பில் கடன் பத்திரம் வெளியிடலாமா என்பது குறித்து கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். சர்ச்சைக்குரிய ஐரோப்பிய கடன் பத்திரம் வெளியிடுவது குறித்து இருதலைவர்களும் நிச்சயம் விவாதிக்கப்போவது இல்லை என இரு அரசுகளின் செய்தித்தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பின் காரணமாக ஸ்பெயின் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தது. ஜேர்மனி பங்கு சந்தை அதிகரித்தது. பிரிட்டன் மற்றம் பிரான்ஸ் சந்தைகள் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறின.

ஐரோப்பிய கடன் பத்திரங்கள் மூலம் சொந்த நாடுகளின் கடன் சுமையும் அதிகரித்து விடும். கடனில் தவிக்கும் நாடுகளில் சீரமைப்பும் மேற்கொள்ள முடியாது என இருதலைவர்களும் முடிவுக்கு வந்துள்ளனர்.

சர்கோசியும் ஏங்கலாவும் இன்று விவாதிக்கும் முக்கிய ஆலோசனை விவரங்களை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஹெர்மான் வான் ரோம்பியிடம் தெரிவிக்கிறார்கள்

http://www.newsonews.com/view.php?224Q08qc203pnBZd4e2SoOldacb0eCAAeddeAIMCe0bcadlO43e4dZBnB3303cq80Q42

Link to comment
Share on other sites

ஜேர்மனியின் பொருளாதா வளர்ச்சி பலவீனமாக உள்ளதைப் புதிய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில், ஜேர்மனியின் பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளதைப் புதிய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

ஜேர்மனி, பிறான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்து, ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி குறித்து ஆராயவுள்ள நிலையில் ஐரோப்பிய பொருளாதார மீட்சி பலம்பெறவில்லையென்பதை உறுதி செய்யும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடையில், ஜேர்மனியின் பொருளாதாரம் 0.1 சதவீதம் மட்டும் வளர்ந்தது.

ஐரோப்பாவின் மிகப் பெரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சி, ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இவ்வாண்டின் முதற் காலாண்டில், ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சி, 1.3 சதவீதமாக இருந்ததென அதிகாரிகள் மீளாய்வின் பின்னர் அறிவித்தார்கள். 1.5 சதவீத வளர்ச்சி இருந்ததென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புள்ளிவிபரங்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, ஜேர்மனியின் பங்குச் சந்தையில் பங்குகளின் பெறுமதி குறைவடைந்தது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8968

Link to comment
Share on other sites

புதிய ஐரோப்பிய பொருளாதார அரசு? காப்பாற்றுமா யூரோவை?

Merkel, Sarkozy propose eurozone government

The leaders of France and Germany called Tuesday for greater economic discipline and unity among European nations but declined to take immediate financial measures seen by many investors as the only way to halt the continent's spiraling debt crisis.

The Dow Jones industrial average fell, the euro slid against the dollar and key European markets edged down in off-hour trading after Chancellor Angela Merkel of Germany and French President Nicolas Sarkozy announced the results of their emergency talks in Paris.

http://finance.yahoo.com/news/Merkel-Sarkozy-propose-apf-3860572769.html?x=0&sec=topStories&pos=1&asset=&ccode

Link to comment
Share on other sites

யூரோ லான்ட் ஜேர்மனி – பிரான்ஸ் புதிய யோசனை..

தற்போது மேலை நாடுகளின் கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை பெறுவதற்காக ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கின்றது.

அமெரிக்க டாலர் வரலாறு காணாத வீழ்ச்சிக்குள் போய்க் கொண்டிருக்கிறது. இதுபோல ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோவும் குப்புற விழவேண்டிய அபாயம் தெளிவாகத் தெரிகிறது.

இந்த அவலத்தில் இருந்து தப்புவதற்காக பிரான்சும், ஜேர்மனியும் புதியோர் கருத்தை முன் வைத்துள்ளன. யூரோலான்ட் என்ற புதிய கட்டமைவை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதற்கு கார்மன் வான் றம்புய் தலைவராக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 2012 நடுப்பகுதிக்குள் யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார இடைவெளியை சமப்படுத்திவிட வேண்டும் என்றும் கூறியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளிலும் தற்போது வெறும் 17 நாடுகள் மட்டுமே யூரோ நாணயத்தை பயன்படுத்துகின்றன. இந்த நாடுகள் தாங்க முடியாத பொருளாதார சிக்கலுக்குள் மாட்டுப்பட யூரோ நாணயமும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது. ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்தில் வல்லரசுகளாக விளங்கும் ஜேர்மனியும், பிரான்சும் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளை மட்டும் முன்னுரிமை கொடுத்து காப்பாற்ற முன் வந்துள்ளன.

பிரான்சிய அதிபர் ஸார்க்கோஸியின் யூரோலான்ட் கருத்தை டென்மார்க்கில் உள்ள டேனிஸ் மக்கள்கட்சி வன்மையாக எதிர்த்துள்ளது. அதேபோல யூரோ நாணயத்தை தூக்கி வீசிவிட வேண்டுமென கொலன்ட் போன்ற நாடுகள் விரும்புகின்றன.

யூரோ நாணயத்தை ஏற்ற கிரேக்கம் குப்புற விழுந்து கிடக்கிறது. அந்த நாட்டின் அரசின் பெறுமதி மிக்க ஆவணங்கள் இப்போது பல தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் வறுமை,

போன்றன முன்னைய காலத்தைவிட மோசமாக தலைவிரித்தாடப்போகிறது.

இத்தாலி உடனடியாக 320 மில்லியாட் குறோணர்கள் பற்றாக்குறைக்கு விடைகாண வேண்டும். இத்தாலியால் இந்த இடைவெளியை ஒருபோதும் நிரவமுடியாது. அதேபோல ஸ்பெயினின் பொருளாதாரம் கட்டை தட்டிவிட்டது. மறுபுறம் போத்துக்கல்லின் பொருளாதாரமும் அதே அவலத்தைச் சந்தித்துவிட்டது. கிரேக்கத்தையே காக்க முடியாத ஐரோப்பிய ஒன்றியம் இப்போது மேலும் மூன்று நாடுகளை காப்பாற்ற வேண்டிய பேரவலத்திற்குள் சிக்குண்டுள்ளது.

யூரோ நாணயம் பாவனையில் இல்லாவிட்டாலும் டென்மார்க்கின் பொருளாதாரமும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. இன்று வெளியான அறிக்கை ஒன்று காற்றாடி தொழிற்சாலை வெஸ்ராசின் பங்குகள் மோசமான பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னர் 340 குறோணராக இருந்த பங்குகளின் விலை இன்று வெறும் 90 குறோணரை அடைந்துள்ளது. ஒவ்வொரு பங்காளரும் இதனால் அடையும் நஷ்டம் சொல்லும்தரமன்று. அதேவேளை மாஸ்க் நிறுவனமும், எஸ்.ஏ.எஸ்சும் கூடுதல் இலாபமடைந்துள்ளதே தற்போதைக்கு டென்மார்க்கிற்கு சிறிய ஆறுதலாக உள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் மேலும் ஒரு தடவை பாதாளத்தில் விழப்போவதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அவலத்தில் இருந்து மீண்டுவர ஐந்து வருடங்களோ அல்லது பத்து வருடங்களோ ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இப்படியொரு பாராதூரமான விடயம் ஐரோப்பிய ஊடகங்களில் போனாலும் தமிழ் கூறு நல்லுலகில் இதுபற்றிய பிரக்ஞை கடுகளவும் இல்லாமல் தேவையற்ற கிறீஸ் மனிதன் கதைகளில் காலம் கழிப்பது வருந்தத்தக்க உண்மை என்று சமுதாய ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

சரி .. யூரோ லான்ட் பொருளாதார சிக்கல்களை தீர்க்குமா..?

பிரான்சும், ஜேர்மனியும் அந்தளவு தூரம் வல்லமை கொண்ட நாடுகளாக கடந்த பத்து ஆண்டுகளில் தம்மை அடையாளம் காணவில்லை. ஸார்கோஸியோ, அஞ்சலா மேர்க்கலோ உலகப் பொருளாதார நெருக்கடியை தீர்க்குமளவு ஆளுமை உள்ள தலைவர்கள் அல்ல என்பதும் உண்மையே.

http://www.alaikal.com/news/?p=79415

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சும், ஜேர்மனியும் அந்தளவு தூரம் வல்லமை கொண்ட நாடுகளாக கடந்த பத்து ஆண்டுகளில் தம்மை அடையாளம் காணவில்லை. ஸார்கோஸியோ, அஞ்சலா மேர்க்கலோ உலகப் பொருளாதார நெருக்கடியை தீர்க்குமளவு ஆளுமை உள்ள தலைவர்கள் அல்ல என்பதும் உண்மையே.
நம்ம ஆளைப்பத்தி(DDR) சொல்லி வேலையில்லை.தன்ரை கட்சிக்கையே இருந்த அரசியலனுபவம்உள்ளஆக்களை தூக்கியெறிஞ்சு போட்டு நாட்டையே தலைகீழாக்கிக்கொண்டு போறா.இவவைஇந்தநாட்டுக்குதலைவியாக்கினததுக்கு இப்பகனபேர் நல்லாய் யோசிக்கினம்.

images-2.jpg

Link to comment
Share on other sites

யூரோ லாண்ட் சிறக்குமா? இறக்குமா?

ஜேர்மனி மீண்டும் ஒரு தப்புக்கணுக்கு போட்டதா? ஜேர்மனி ஒரு பொருளாதார வல்லரசாக ஐரோப்பிய யூனியனை மாற்றி தன்னை அதன் தலைவராக பார்க்க முனைகின்றது. ஆனால் பல நாடுகள் யூரோவை ஏற்கவில்லை. சிலர் யூரோவை இலவச பணமாக எண்ணி தாமும் மற்றயவர்களையும் வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இப்போது ஜேர்மனி பல நாடுகளின் பொருளாதார கொள்கைகளை நிர்ணயிக்கும் உரிமையை தானே நிர்ணயிக்க விரும்புகிறது.

இதன் மூலம் தமது இறைமையை அந்த நாடுகள் இழக்கலாம்? இதற்கு அந்த நாடுகள் உடன்படுமா? உடன்படா விட்டால் என்னவாகும்?

எதுவானாலும் உலகில் ஒரு பலவீனமான பொருளாதாரமே பல ஆண்டுகளுக்கு நிலவும். இதில் உலகத்தமிழினம் சாதுரியமாக தம்மை பொருளாதார ரீதியில் பாதுகாக்கவேண்டும், வளரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஐரோப்பிய வங்கிகள் பெரும் பண இழப்பு

இன்று வெளியான சர்வதேச நாணய நிதியத்தின் புதிய கணக்குகளின்படி முன் எதிர்பார்த்ததைவிட ஐரோப்பிய ஒன்றிய வங்கிகள் மிகப்பெரிய இழப்புக்களை சந்தித்துள்ளதாக ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.

புதிய கணக்குகளின்படி மொத்தம் 200 பில்லியன் யூரோ இழப்பை இவை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாத கால உலக பொருளாதார சமநிலை குறித்த ஐ.எம்.ஆய்வறிக்கையே மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலத்த சீற்றமடைந்துள்ளன. மக்களுக்கு வெளிப்படையாக இந்தச் செய்தியைக் கசிய விட்டது தவறு என்று ஸ்பானிய நிதியமைச்சர் கண்டித்தார்.

புதிதாக பதவி அமர்ந்துள்ள சர்வதேச நாணய நிதியத் தலைவரான முன்னாள் பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டீனா லாகிரட்டா இந்த இக்கட்டான கணக்கறிக்கை குறித்த முக்கிய உரையாடல்களை உலக வங்கித் தலைவருடன் இவ்வாரம் நடாத்தவுள்ளார். ஐரோப்பிய வங்கிகளின் இந்த பின்னடைவுக்கு முழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் காரணமல்ல ஜேர்மனியே முக்கிய காரணம் என்கிறது ஸ்பெயின்.

http://www.alaikal.com/news/?p=81029

Link to comment
Share on other sites

கிரேக்கம் யூரோ நாணயத்தை உதறத் தயாராகிறது

யூரோ நாணயம் வந்த பின்னர் அதை ஏற்றுக் கொண்ட நாடுகள் பொருளாதார அசைவை யூரோவில் நடாத்தின. அடத்தி கூடிய இரத்தத்தினால் இயங்கு நிலை பல இடங்களில் தடைப்பட்டு நின்றது. இந்த வகையில் பொருளாதாரத்தில் படு தோல்வியடைந்து வங்குரோத்து நிலை அடைந்த நாடுகளில் முக்கியமானது கிரேக்கம். இந்த நாட்டை மீட்டெடுக்க பாரிய நிதி உதவியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்க முன் வந்துள்ளது. அதற்காக ஏராளம் நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அவற்றை ஏற்று கிரேக்கத்தில் அரசியல் செய்ய முடியாத நிலை இருப்பதால் பெரும் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இது கிரேக்கம் குறித்த சுருக்க மான முன்னோட்டமாகும்.

இப்போது கிரேக்கம் யூரோ நாணயத்தை உதறிவிட்டு தனது சொந்த நாணயத்திற்கே போக விரும்பினால் அதை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்காது என்று யேர்மனிய சி.எஸ்.யூ கட்சித் தலைவர் கொஸ்ற் ஸீகூபர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்திற்கு உதவும், ஆனால் கிரேக்கம் யூரோ நாணய வலயத்தை விட்டு விலகிப்போனால் அதுவும் சரியானதே என்றார். அதேவேளை கிரேக்கத்தை யூரோ நாணயத்தை விட்டு விலகிவிடும்படி கட்டாயப்படுத்தப்படுகிறது என்பதை அவர் மறுத்தார். கிரேக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்க இருந்த 110 பில்லியன் யூரோ உதவி இதனால் இல்லாமல் போகுமா என்ற கேள்விக்கான பதில் தரப்படவில்லை. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்காவிட்டால் யூரோ வலயத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர கிரேக்கத்திற்கு வேறு வழி இருப்பதாகக் கூற முடியாது. காகம் அன்ன நடை நடக்க புறப்பட்டு தன் நடையும் கெட்ட கதையாகி வருகிறது, சொந்த நாணயத்தைவிட்டு யூரோ நாணயத்தை பெற்ற நாடுகளின் நிலை.

http://www.alaikal.com/news/?p=81544

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.