Jump to content

ஈழத்து திருக்கோயில்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லேனா தமிழ்வாணன்

தமிழ்நாட்டில் இருந்து தமிழ்மொழிக்காக குரல் கொடுக்கும் மிகமுக்கியமான நண்பர்களில் இவரும் ஒருவர். இவருடைய சகோதரர் ரவி தமிழ்வாணன் ஈழத்துக்குச் சென்று, அங்கே எம் மக்களின் படைப்புக்களை நூல்களாக வெளிக்கொண்டுவருவதில் முன்நிற்பவர். இப்போது கூட ரவி தமிழ்வாணன் பல ஈழத்துப்படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதாக அறியக் கிடக்கின்றது.

லேனா தமிழ்வாணனின் தளம் ஒன்றி;ல் ஈழத்துக் கோவில்களைப் பற்றிய ஆக்கங்களைக் கண்டேன். அவை நாம் அறியாத பலவிடயங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேசுவரம்

காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால்பண்டைய ஈழம் அழிந்த போதுஇ ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும்இ சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும்இ மூன்றாவது கடல்கோளின்பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கியது ஈழம். ஈழத்தின் பழம்பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப்பெற்றது. ஈழத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. கிழக்கே திருக்கோணேஸ்வரம்இ வடமேற்கே திருக்கேதீஸ்வரம்இ வடக்கே நகுலேஸ்வரம்இ மேற்கே முனீஸ்வரம்இ தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது.

பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம்இ பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகக் காணப்படுவதோடுஇ மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகின்றது. இக்காரணத்தினால் இப்பிரதேசம் உலகுப் புகழ்பெற்ற பிரதேசமாகவும் காணப்படுகின்றது. ஏறக்குறைய ஆயிரத்து எண்பது சதுரமைல் பரப்பினைக் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளது இப்பிரதேசம் வடக்கே முல்லைத்தீவுஇ வவுனியா மாவட்டங்களையும்இ மேற்கே அநுராதபுரம்இ பொலநறுவை மாவட்டங்களையும்இ தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்தினையும்இ கிழக்கே வங்காள விரிகுடாவினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. மூன்றுபுறமும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற திருத்தலமான திருக்கோணேசுவரம். ʮக்குன்று அமைந்துள்ள பிரதேசத்தைப் பிரடெரிக்கோட்டை என்று அழைப்பர். ஈழத்திருநாட்டிலே காணப்படுகின்ற பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரத்தின் ஆரம்பத் தோற்றம்இ அமைவிடம்இ காலம் இவைபற்றிய வரலாறுஇ ஐதீகக்கதைகள்இ இலக்கியச் சான்றுகள்இ புதைபொருள் ஆய்வுகள்இமேலைநாட்டார் குறிப்புகள்இ கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் அறியக் கூடியதாயுள்ளது. கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன் கோணேசர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்தத் தவலைப் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோணேசர் கோயில் கற்தூண்களில் உள்ள கல்வெட்டுகளிலே காணலாம். குவேறொஸ் பாதிரியாரால் எழுதப்பட்ட ‘வுhந வுநஅpழசயட யனெ ளுpசைவைரயட உழஙெரநளவ ழக ஊநடலழn’ என்ற நூலிலும் இச்செய்தி காணப்படுகின்றது.

கி.பி.1624 இல் போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றிஇ கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோதுஇ போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன் டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பி வைத்துள்ளான். இவை லிஸ்பனிலுள்ள அஜூடா நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சுவடிகளில் மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும்இ இவன் கி.மு 1300 ஆம் ஆண்டு கோணேச கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ‘கைலாசபுராணம்’ என்னும் நூலில் மனுநீதிகொண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கஇ அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனஊµே கட்டப்பட்டிருந்த கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடுஇ பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். இம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக்குளத்தை ஏற்படுத்திஇ அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்சத்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான்இ தெப்பத் திருவிழாவிற்குஇ கோணேசப்பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளிஇ இங்கு தங்கிச் செல்வார். பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுஇ வெள்ளை வில்வத்துக் கோணேசர் கோயில்’ என அழைக்கப்பட்டது. குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளை விளக்கிக் கூறும் நூல் ‘கோணேசர் கல்வெட்டு’ இந்நூலில் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இ ச்செய்திகள் யாவும் குளக்கோட்டனுக்கும் ஆலயத்திற்குமுள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன.

இலங்கையை ஆண்டதாகக் கருதப்படும் இராவணன்இ திருக்கோணேசர் கோயிலோடு கொண்ட தொடர்புகள் ஏராளம். இம்மன்னனுக்கும் கோணேசர் கோயிலுக்குமிடையிலான தொடர்புகளை தேவாரம்இ புராணம்இ இதிகாசம்இ வரலாறு ஆகியவற்றின் மூலம் அறியலாம். திருக்கோணேஸ்வரத்திலுள்ள மலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள இராவணன் வெட்டு என்னும் மலைப்பிளவு ஆலயத்திற்கும்இ இராவணனுக்குமுள்ள தொடர்பை விளக்குகின்றது.

மகரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுவர் அகத்தியர். வரலாற்றாய்வாளர்களின் கணிப்புப்படி இவர் வாழ்ந்த காலம் கி.மு. 1000 ஆண்டெனக் கொள்ளப்படுகின்றது. இவர் கோணேஸ்வரப் பெருமானை வழிபட்டார் என இதிகாசஇ புராணஇ வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுவதால் இவ்வாலயம் அகத்தியர் காலத்திலேயே இருந்ததெனக் கருதலாம்.

கி.பி. 1263 ஆம் ஆண்டில் இலங்கையைக் கைப்பற்றிய வீரபாண்டிய மன்னர்இ வெற்றிச்சின்னமாக இரண்டு மீன் இலச்சினைகளை இந்த ஆலயத்தில் பொறித்துச் சென்றுள்ளார். இன்றும் இவ்விரு சின்னங்களும் கோணேசர் கோட்டை நுழைவாயிலில் காணப்படுகின்றன. பாண்டியமன்னன் ஆட்சிக்காலத்தில்இ மனுநீதிகண்ட சோழனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் கோணேசர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தானென ‘யாழ்ப்பாண வைபவமாலை’ என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் அநுராதபுரத்திலிருந்தே ஆட்சி செய்துள்ளமைஇ குளக்கோட்டு மன்னனின் புனருத்தாரண வேலைக்குச் சாதகமாயிருந்திருக்க வேண்டும்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குரவராகிய திருஞானசம்பந்தர் தமது பதிகங்களில்இ கோணேசப்பெருமானையும் கோணமாமலையின் இயற்கை அழகையும் குறிப்பிட்டுள்ளதோடு கோவிலும்இ பாவநாசத் தீர்த்தமும் இருந்த செய்திகளையும் கூறியுள்ளார். இக்கோயிலைப்பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார். இவற்றுள் ஏழாவது பாடல் கிடைக்கப் பெறவில்லை. இவர் இலங்கைக்கு வராது தென்னகத்திலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்தவாறு கோணேஸ்வரத்தின் சிறப்பைப் பாடியுள்ளார். தென் இந்தியாவிலே சிறப்புப் பெற்ற கோயில்களின் வரிசையில் இக்கோயிலும் பாடப்பட்டுள்ளமை இக்கோயில் ஈழத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் புகழ் பெற்றிருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது. இவரது எட்டாவது பாடலில் இராவணனைப் பற்றிய குறிப்புண்டு. கோணேஸ்வரத்திற்கும் இராவணனுக்கும் தொடர்புண்டென்ற மரபு பலராலும் வெளிப்படுத்தப்பட்டுஊ³்ளது. இவற்றைவிட ஏனைய தென்னகத் தலங்களுக்குப் பாடப்பட்ட பொதுப்பண்புகளை கோணேசர் பதிகத்திலும் கையாண்டுள்ளதோடுஇ கோணைநாதர் அமர்ந்துள்ள மலையின் இயற்கை அழகையும் சேர்த்துப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் அருளிய பாடலொன்றில் கோணேஸ்வரத்தின் இயற்கை அழகு சில வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்

அளப்பருங் கனமணி வரன்றி

குரைகட லோதம் நித்திலங் கொழிக்கும்

கோணமா மலையமர்ந் தாரே’’

கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் கோணேஸ்வரத்திற்குத் திருப்புகழ் பாடியுள்ளார். ‘விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை’ எனத் தொடங்கும் பாடலில்இ

‘‘நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்

திருக்கோணமலை தலத்தாருகோபுர

நிலைக்குள் வாயினில் கிளிப்பாடுபூதியில் வருவோனே!’’

எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பரும் சுந்தரரும் அருளிய சேத்திரக்கோவைத் தாண்டகம்இ ஊர்த்தொகைஇ திருநாட்டுத்தொகை போன்ற பதிகங்களில்இ திருக்கோணேஸ்வரம் வைப்புத் தலமாகப் பாடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனார் பாடிய திருநெய்த்தானப் பதிகத்தில்இ

‘‘தக்கார் அடியார்க்கு நீயே’’ என்று ஆரம்பிக்கும் பதிகத்தில்இ

‘‘…தெக்கார மாகோணத்தானே....’’ என்றும்இ

சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில்இ

‘‘அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி

யாழி புடைசூழ்ந்தொலிக்கும் மீழந்தன்னில்

மன்னு திருகோணமலைமகிழ்ந்து....’’

என்ற வரிகளும் காணப்படுகின்றன.

சுந்தரர் அருளிய ஊர்த்தொகையில்இ

‘‘நிறைக்காட்டானே நெஞ்சத்தானே....’’

என்று தொடங்கும் பாடலில்இ

‘‘…திருமாந்துறையாய் மா கோணத்தானே....’’

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.மு. 543இல் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்த விஜயன் என்பவனோடும் திருக்கோணேஸ்வரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த விஜயன் தனது ஆட்சிக்குப் பாதுகாப்பாக கிழக்குத்திசையில் உள்ள தம்பலகாமம் கோணேசகோயிலைப் புதுப்பித்துக் காட்டினானென மயில்வாகனப் புலவர் எழுதிய ‘யாழ்ப்பாண வைபவமாலை’ கூறியுள்ளது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மகாசேனன் என்ற மன்னன் இக்கோயிலை அழித்து அந்த இடத்தில் விகாரையைக் கட்டினான். மகாவம்சத்தில் திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயில் ஒன்றை மகாசேனன் இடித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதனை மகாவம்சத்தின் உரைநூலான வங்சத்தப்பகசினியும் குறிப்பிட்டுள்ளது. மகாசேனன் கட்டிய விகாரையை அழித்து மீண்டும் கோணேசர் ஆலயத்தை இங்கு கட்டியுள்ளனர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டு பழைய கோயில்கள் கருங்கற் கோயில்களாகக் கட்டப்பட்டபோதுஇ கோணேசர் கோயிலும் கருங்கற்கோவிலாக மாறியிருக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சோழராட்சி நடைபெற்றபோதுஇ கோணேசகோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. இதற்குச் சான்றாகக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழரின் பின் பொலநறுவையை ஆண்ட கஜவாகுமன்னன் கோணைநாயகருக்குப் பல மானியங்களை வழங்கினான் எனக் கோணேசர் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் வன்னிச் சிற்றரசர்களும் இக்கோயிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

போர்த்துக்கேயர் கி.பி. 1624ஆம் ஆண்டு கோணேசர் ஆலயத்தை அழிக்கு முன்இ இவ்வாலயத்தைப் பற்றிய தரவுகளை எடுத்துள்ளனர். போர்த்துக்கேய தேசாதிபதியாகிய கொன்ஸ்ரன்ரைன் டீசா நொரங்ஹா என்பவனே இவ்வாலயத்தை அழித்தவன். இக்காலத்தில் எடுக்கப்பட்ட வரைபடங்கள்இ குறிப்புகள்இ கட்டிடப்படங்கள் ஆகியன கோணேசர் ஆலயத்தைப்பற்றி அறியப் பெரிதும் உதவுகின்றன. இவனுடைய குறிப்புகளில் அழிக்கப்பட்ட ஆலயத்தின் பரப்புத் தரப்பட்டுள்ளது. கோபுரம் அமைந்திருந்த நிலத்தின் நீளம் 600 பாகம். அகலம் 80 பாகம். இந்நிலப்பரப்பு ஒடுங்கிச் சென்று 30 பாகமாகக் காணப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி அக்காலத்தில்இ தற்போது ஆலயம் இருக்கும் கோட்டைப்பகுதி முழுவதுமே ஆலயப்பிரதேசமாகக் காணப்பட்டுள்ளது என்பதைப் போர்த்துக்கேயரின் பதிவேடுகளிலிருந்து அறியக்கூடியதாயுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி தென்னிந்தியாஇ கேரளம் ஆகிய இடங்களில் நிலவிய பண்பாடே இலங்கையிலும் காணப்பட்டுள்ளது. இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடுஇ கேரளம் ஆகிய இடங்களில் பரவியிருந்த பண்பாடு பெருங்கற்பண்பாடெனப்பட்டது. தென்னிந்தியக் கோயில்கள் இப்பாண்பாட்டுப் பின்னணியிலேயே தோன்றின. தற்கால ஆய்வுகள் மூலம் மேற்கூறிய பெருங்கற்பண்பாட்டு நிலையே ஈழத்திலும் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையிலும் திருகோணமலைஇ அநுராதபுரம்இ புத்தளம் ஆகிய இடங்களிலும் கிடைத்த தொல்பொருள் ஆய்வுகள் மேற்கூறிய முடிவை உறுதி செய்துள்ளன. இப்பண்பாட்டுப் பின்னணியில் தோன்றிய ஆலயங்களுள் கோணேஸ்வரமும் முக்கியமான ஈஸ்வரன் ஆலயமாகக் கருதப்படுகின்றது.

இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர்இ இலங்கையில் எழுத்தாதாரங்கள் இடம்பெறத் தொடங்கின. அதற்கு முன்பிருந்தே சிவவழிபாடு ஈழமெங்கும் காணப்பட்டுள்ளது.

அந்நியராகிய போர்த்துக்கேயரால் கி.பி. 1624 ஆம் ஆண்டு கோணேசர் ஆலயம் இடிக்கப்படுமுன்இ அங்கு மூன்று பெரும் ஆலயங்கள் காணப்பட்டுள்ளன. அவைஇ மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில்இ ஸ்ரீ நாராயணர் கோயில்இ மலையுச்சியில் மாதுமை அம்பாள் சமேத கோணேசர் கோயில் என்பவைஇ மலையிலே காணப்பட்ட சமதரைகளில் அமைந்திருந்தன. மலையடிவாரத்திலிருந்து செல்லும்போது மலையின் வடக்கேயும்இ தெற்கேயும் தோன்றும் உயர்ந்த பாறைகள் படிப்படியாக உயர்ந்து செல்கின்றது. இப்பாறைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு பரந்த சமதரையாகக் காணப்பட்டது. இச்சமதரையின் தென்திசையிலேயே மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டிருந்தது. கர்ப்பக்கிருகத்தில் அம்பாளுடைய சிலாவிக்கிரகமும்இ ஏனைய பரிவார மூர்த்திகளின் ஆலயங்களும் அமைந்திருந்தன.

இவ்வாலயத்திற்கு வடகிழக்கே பாபநாசதீர்த்தக்கேணி அமைந்திருந்தது. இந்தத் தீர்த்தம் நீள்சதுரவடிவில் அமைந்ததாய் கருங்கற்களாலான படித்துறைகளைக் கொண்டதாகக் கட்டப்பட்டிருந்தது. கடல்மட்டத்துக்குக்கீழ் ஆழமுடையதாகக் காணப்பட்டமையினால் வற்றாத நீரூற்றாகக் காணப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் மக்கள் தீர்த்தமாட இதனைப் பயன்படுத்தியதால் விசேடகாலங்களில் சுவாமி தீர்த்தமாடஇ வேறொரு பாபநாசக்கிணறும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கேணிக்கு வடக்குப் பக்கமாகத் தீர்த்த மண்டபம் காணப்படுகின்றது. சுவாமி தீர்த்தமாடிய பின் இம்மண்டபத்தில் எழுந்தருளுவதால்இ இதனை ஆஸ்தான மண்டபம் என்றழைப்பர். போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபொழுது தீர்த்தக்கேணி எவ்வாறோ தப்பிவிட்டது. மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் தீர்த்கோற்சவ காலத்தில் தீர்த்தமாட இங்கு எழுந்தருளுவது தற் காலத்திலும் நடைபெறுகின்றது.

மாதுமை அம்பாளின் ஆலயம் பரந்து விரிந்த சமதரையிலே காணப்பட்டமையினால்இ இதனைச் சுற்றித் தேரோடும் வீதியும் காணப்பட்டது. மடங்களும்இ மாடங்களும் அமைக்கப்பட்டு உள்நாட்டுஇ வெளிநாட்டுப் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் பாபநாசத்தைச் சுற்றி ஐந்து கிணறுகளும் கட்டப்பட்டிருந்தன. கோணேசப் பெருமானுடைய இரதோற்சவம் இங்கிருந்தே ஆரம்பமாகும். மலையுச்சியிலிருந்து எழுந்தருளிவந்த கோணேசப்பெருமான்இ மாதுமை அம்பாள் ஆலயத்தைச் சுற்றிவந்துஇ இரதத்தில் எழுந்தருளி மலையடிவாரத்தைத் தாண்டிஇ தற்காலத்தில் பட்டணமாக மாறியுள்ள பிரதேசங்களை வலம்வந்துஇ வடதிசைக் கரையோரமாகவுள்ள வீதிவழியாகக் கோணேஸ்வரத்தை அடைவர். மாதுமையம்பாள் எழுந்தருளிய கோயில்இ மிக உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டதோடுஇ கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டிருந்தது. தற்காலத்தில் கச்சேரியும்இ அரசாஊ்கப் பணிமனைகளும் உள்ள இடமேஇ போர்த்துக்கேயர் அழிக்குமுன் காணப்பட்ட மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த இடமாகும்.

மாதுமையம்பாள் ஆலயத்துக்கும்இ பாவநாச தீர்த்தம் இருந்த இடத்திற்கும் மத்தியில் காணப்படும் பாதையால் ஏறிச் செல்லும் பொழுதுஇ மற்றுமொரு சமதரை காணப்பட்டது. இச்சமதரையில் குளக்கோட்டு மன்னனால் எழுப்பப்பட்ட ஸ்ரீ நாராயணர்கோயில் இருந்துள்ளது. இவ்வாலயம் கிழக்கு நோக்கியதாய் உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்திருந்த சமதரை மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த சமதரையை விடச் சிறியது. இச்சமதரையின் கிழக்குஇ செங்குத்தான மலைப்பாறைகளைக் கொண்டதாகவும்இ வடக்கேயும் தெற்கேயும் சரிவான மலைச்சாரல்களை உடையதாகவும்இமேற்கே முரட்டுப் பாறைகளைக் கொண்டதாகவும் காணப்பட்டது. கர்பக்கிருகத்தில் ஸ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

காவல்துறையினரின் குடியிருப்புஇ கிளிவ் கொட்டெஜ் என்பவற்றோடு இரண்டாவது உலகமகா யுத்தகாலத்தில் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்புப் பீரங்கி அமைந்துள்ள நிலப்பகுதியே நாராயணர் ஆலயம் இருந்த இடமாகும். இவ்வாலயம் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கமாகஇ பிரித்தானிய ஆட்சியாளர் நிலத்தை அகழ்ந்து நீர்த்தொட்டியொன்றைக் கட்டினார்கள். தற்போதும் இத்தொட்டியுள்ளது. அப்போது ஐந்து அடி உயரமான ஸ்ரீ நாராயணமூர்த்திஇ மகாலெட்சுமி ஆகிய விக்கிரகங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இத்திருவுருவங்கள் சீர்செய்யப்பட்டு கோணேசர் கோயிலில் வைக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்திருந்த சமதரையின் மேற்கே காணப்படும் முரட்டுப்பாறைத்தொடரின் அந்தத்தில். 1979ஆம் ஆண்டு இலங்கை அரசு இலங்கைத் தரைப்படை வீரர்களின் வழிபாட்டுக்கென ஒரு விகாரையை அமைத்துஇ புத்தர் சிலையை நிறுவிஇ கோகரʯணவிகாரை இங்குதான் இருந்ததெனப் பிரச்சாரம் செய்தது. ஆனால் இலங்கை அரசின் புதைபொருளாராய்ச்சித் துறையின் தலைவராயிருந்த திரு. பரணவிதான அவர்கள்இ தமது ஆராய்ச்சியின்போது வேறோரிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஏட்டில்இ கோகர்ணவிகாரை வேறோர் இடத்தில் இருந்தமை பற்றிய உண்மைக் குறிப்புகளை வெளியிட்ட போது அதனை இலங்கை அரசு மறைந்துவிட்டது.

கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மகாசேனன்இ கோணேசர் மலையிலிருந்த ஆலயத்தை அழித்துஇ அவ்விடத்தில் விகாரையொன்றை நிறுவினான். இதனை மகாவம்சம் ‘திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயிலொன்றை மகாசேனன் இடித்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளது. மகாசேனனால் அழிக்கப்பட்ட ஆலயத்தைச் சைவசமயிகள் மீண்டும் இவ்விடத்தில் நிறுவினர் என்பதை வரலாற்றுக்குறிப்புகளிற் காணலாம். வரலாறுஇ இலக்கியம்இ தொல்பொருள் ஆய்வுகள்இ மேலைநாட்டார் குறிப்புகள் யாவும் கிமுற்பட்ட காலத்திலேயே கோணேஸ்வரம் சுவாமிமலையில் இந்துக்கோயில் இருந்ததென்பதை நிரூபிக்கும்பொழுதுஇ மகாயான தீவிரவாதியான மகாசேனன்இ இந்து ஆலயத்தை அழித்துக் கட்டிய விகாரையின் எச்சங்கள் சிலவற்றைக் கொண்டுஇ இவ்விடத்தில் இந்துக்கோயில் இருக்கவில்லை என்று நினைப்பது தவறான சிந்தனையாகும்.

மூன்றாவது ஆலயமான மாதுமை அம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளிய கோயிலே பிரதானமான கோயிலாகக் கருதப்பட்டுள்ளது. ஸ்ரீ நாராயணமூர்த்தி ஆலயமிருந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக ஒரு பாதை சென்றது. இப்பாதையின் கிழக்குப் பக்கம் உயர்ந்த சரிவும்இ மேற்குப் பக்கம் தாழ்ந்த சரிவும் காணப்பட்டது. ஆரம்பகாலத்தில் உச்சியிலிருந்த கோயிலுக்குச் செல்லக் கரடுமுரடான கற்பாதையே காணப்பட்டுள்ளது. மலையின் இயற்கை அமைவிற்கேற்ப பாதைகள் உயர்ந்தும்இ தாழ்ந்தும் காணப்பட்டன. இதனால் இடைக்கிடை கருங்கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பாதை இராவணன்வெட்டை அடையும்போதுஇ குறுகிய ஆழமான பள்ளத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. குளக்கோட்டு மன்னன் இப்பள்ளத்தை நிரப்பும் திருப்பணியைச் செய்துள்ளான். இராவணன் வெட்டைக் கடந்து சென்றால் மலையுச்சியில் ஒரு சமதரை காணப்படும். இச்சமʮ¤ரையிலேயே மாதுமையம்பாள் சமேத கோணேசர் ஆலயம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினமணிகளின் பிரகாசம்இ தூரக் கடலிற் செல்லும் கடற்பயணிகளுக்கும்இ மாலுமிகளுக்கும் கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டுள்ளது. கோணேசமலையில் கட்டப்பட்டிருந்த மூன்று கோயில்களின் கோபுரங்களும் உயர்ந்து காணப்பட்டமையால்இ தூரக்கடலிற் பயணம் செய்வோரும் கோபுரங்களைத் தெளிவாகக் காணக்கூடியதாய் இருந்துள்ளது. தெட்சணகைலாசம் எனப் போற்றப்பட்ட திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் சமேத கோணேசப் பெருமானும்இ கருவறையில் சிவலிங்கத் திருமேனியும் (பாணலிங்கம்) பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்படுவற்கு முன்னிருந்த மூன்று ஆலயங்களின் தொன்மைத்தோற்றம்இ சிறப்பு என்பன இவ்வாறு காணப்பட்டுள்ளன. பின்னர் காலத்திற்குக்காலம் ஏற்பட்ட அரசியற்காரணங்களால்இ ஆலயத்தின் நிலப்பகுதியில் அரசகட்டிடங்களும்இ காவற்படைகளும் நிலைகொண்டுவிட்டன. தற்போது இராவணன் வெட்டிற்கு அண்மையில்இ உச்சியின் சமதரையிலேயே கோணேசர் ஆலயம் அமைந்துள்ளது.

இத்தலத்தின் தலபுராணமெனக் கருதப்படுவது தெட்சண கயிலாய புராணம்இ இதன் மூலம் இத்தலத்தின் தோற்றம்இ ஆதிவரலாறுஇ சிறப்பு போன்ற பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது. இவ்வாலயத்தின் தொன்மையை அறிய உதவுவது கோணேசர் கல்வெட்டு என்ற நூல். இது கோணேசர் சாசனம் எனவும் அழைக்கப்படும். கோணேசர் கோட்டம்இ கோபுரம்இ மதில்இ மணிமண்டபம்இ பாபநாசத் தீர்த்தம் ஆகியன அமைந்த வரலாற்றுச் செய்திகள் இந்நூலிலும் கூறப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டு என்ற நூலினைக் கோணேசர் ஆலயச் சட்டப் புத்தகமெனப் போற்றுவர்.

கோணேசர் ஆலயத்தின் நித்தியஇ நைமித்திய கருமங்கள் குறைவின்றி நடைபெறக் குளக்கோட்டுமன்னன் பல திட்டங்களை வகுத்துள்ளான். இவை எழுத்தப்பட்ட குறிப்புகள் யாவும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது.

இவ்வாறான சரித்திரப் பெருமையும்இ நாயன்மாரால் விதந்தோதப்பட்டதுமான இத்திருத்தலத்தை இலங்கையைக் கைப்பற்றிய அன்னயர்கள் ஒருவர்பின்னொருவராகச் சிதைத்தழித்தனர். இலங்கையை போர்த்துகேயர் கி.பி. 1905ஆம் ஆண்டு கைப்பற்றினர். திருகோணமலையின் இயற்கை அமைப்பும்இ கடல்வழிப் பாதைகளுக்கான மையமாகக் காணப்பட்டமையும் இப்பிரதேசத்தில் கவனம் கொள்ளச் செய்தது. மதவெறியும்இ கொள்கையிடும் நோக்கமும் இவர்களிடம் காணப்பட்டாலும்இ திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவம் இவர்களை ஈர்த்தது என்று கூறுவதே பொருத்தமுடையது.

கி.பி. 1624 – 1627 வரை போர்த்துக்கேய தளபதியாயிருந்த கொன்ஸ்ரன்ரைன் டீசா என்பவன் கோணேசர் மலையிலிருந்த கோயில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். இவ்வாறு இடிக்கப்பட்ட கற்களைக் கொண்டே கோட்டையைக் கட்டினான். இவன் இக்கோயில்களை இடிக்குமுன் யாவற்றையும் படமாக வரைவித்துள்ளான். இப்படங்களிலொன்று போர்த்துக்கலிலுள்ள அஜூடா நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டது. கோயில் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்பொழுது பழைய கல்வெட்டொன்றும் கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டு விட்டது. அதனைப் படமெடுத்துப் போர்த்துக்கலுக்கு அனுப்பியுள்ளான். ஏனெனில் அக்கல்வெட்டில் கோணேசர் ஆலயம் பறங்கிகளால் இடித்தழிக்கப்படும் என்ற தீர்க்கதரிசனம் காணப்படுகின்றது. இவனால் அனுப்பப்பட்ட குறிப்புகளின் மூலம் கோணேசர் ஆலயத்தின் ஆரம்பகாலத் தோற்றம்இ நில அமைவுஇ பரப்பளவு போன்ற விடஊ¯ங்களை அறியக்கூடியதாயுள்ளது.

பிரடெரிக் கோட்டை என்றழைக்கப்படும் கோட்டை வாயிலில் வைத்துக் கட்டப்பட்ட கல்லிலே காணப்படும் சாசனம் இவ்வாறு காணப்படுகின்றது.

(மு) ன னெ கு ள

கா ட ட ன மூ ட டு

(தி) ரு ப ப ணி யை

ன னெ ப ற ங் கி

(க ) க வெ ம ன னா

ன பொ ண னா

(ச ) ன யி ய ற (று )

(செ ) த வை த

(ண ) ணா

க ள

இக்கல்லெழுத்தின் வாசகம் முதன் முதலில் வின்சுலொ அகராதியில் வெளிவந்தது.

இதனைஇ

‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்

பின்னை பறங்கி பிடிப்பனே – மன்னா கேள்

பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்

மானே வடுகாய் வரும்.’’

எனக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை கிராமிய வழக்கிலும் இவ்வாறே கூறப்பட்டு வருகின்றது.

திருகோணமலையிலிருந்து போர்த்துக்கேயர் கொண்டு சென்ற சுவடிகளில் மேற்குறித்த வாசகங்களைக் கண்டதாகக் குவெரோஸ் பாதிரியர் தனது சரித்திர நூலில் குறிப்பிட்டுள்ளரென போர்த்துக்கல் நாட்டில் கேக் என்ற நகரிலிருந்தஇ அரச சாசனவியலாளர் ஈ.பி. றெய்மார்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். குவெரோஸ் பாதிரியார் குறிப்பிடும் கடைசி இருவரிகளும் சற்று மாற்றமுடையனவாகக் காணப்படுகின்றன. இவ்வரிகள் பின்கண்டவாறு காணப்பட்டன.

‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை

பின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின்

பொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து

எண்ணாரே பின்னர சர்கள்.’’

இக்கற்சாசனத்தினை முதலியார் இராசநாயகம்இ கொட்றிங்ரன் போன்றோரும்இ வேறும் பலரும் சில திருத்தங்களுடன் வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் இக்கற்சாசனத்தில்இ குளக்கோட்டன் என்ற மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம்இ பின்னர் பறங்கியரால் அழிக்கப்படும் என்ற குறிப்பு காணப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டுக் கூறிச்சொல்லும் செய்திகளைக் கண்ணகி வழக்குரைஇ யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிலும் காணக்கூடியதாயுள்ளது.

கண்ணகி வழக்குரையில்இ

‘‘….மறையோர்கள் கோணைநாதர்

திருப்பூசை வெகுகாலஞ் செய்யுமந்நாள்

மாந்தளிர்போல் மேனியுடைப் பறங்கி வந்து

மஹகோணைப் பதியழிக்க வருமந்நாளில்... ’’

என்றும்இ

யாழ்ப்பாண வைபவ மாலையில்இ

‘‘..... இவ்விராச்சியம் (ஈழம்) முதன் முதல் பறங்கிக்காரர் கையில் அகப்படும். அவர்கள் ஆலயங்களையெல்லாம் இடித்தழிப்பர்....’’ என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் நடக்கப் போவதை முன்னே கூறிவைத்த இவர்களது தீர்க்கதரிசனம் வியப்புக்குரியது.

போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் சீரழிக்கப்பட்டாலும்இ பக்தர்கள் மனந்தளராது குன்றின் அடிவாரத்தில்இ குகைவாயில்போல் காணப்படும் இடத்தைக் குறித்துத் தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்தார்கள். ஆண்டுக்கொருமுறை கடலுக்குள் நீண்டிருக்கும் பாறையில் ஒன்றுகூடிஇ வணங்கிச் சென்றுள்ளனர்.

கி.பி. 1639இல் ஒல்லாந்தர் என்ற டச்சுக்காரர்கள் திருகோணமலையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் கோணேசர் ஆலயத்திலும்இ அதன் சுற்றாடலிலும் பெரிதும் அக்கறை காட்டினார்கள். போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு எஞ்சியிருந்த தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டினார்கள். இங்குள்ள இடங்களுக்கு டச்சுப் பெயர்களையும் சூட்டினார்கள். இவர்கள் காலத்திலும் ஆலயத்திற்குச் செல்வதற்கும்இ வணங்குவதற்கும் தடைஇ விதிக்கப்பட்டிருந்தது. எனினும் பக்தர்கள் ஒளித்திருந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள்.

கி.பி. 1795 ஆம் ஆண்டு பிரித்தானியர்இ திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் ஆட்சியில் சைவமக்கள் ஆறுதல் பெற்றவர்களாகக் காணப்பட்டார்கள். எல்லோருக்கும் வணக்க உரிமை இருக்க வேண்டும் என்ற பரந்த கொள்கையுடையவர்களாக ஆங்கிலேயர் காணப்பட்டனர். அழிபாடுகளைக் கொண்ட கோயிலுக்கு மக்கள் சென்று தரிசிப்பதைஇ ஆங்கிலேயர் தடுக்காது மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துள்ளார்கள். கி.பி. 1803 ஆம் ஆண்டுஇ கோயில் இருந்ததாகக் கருதப்படும் சுவாமி மலையில் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாவது மகாயுத்தத்தின்போது திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக் கோட்டைஇ பாதுகாப்பு வளையமாகக் காணப்பட்டதால்இ வாரத்தில் இரண்டு நாட்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆங்கிலேயர்இ கோணேஸ்வரம் அமைந்துள்ள பகுதியின் இயற்கை வளங்களையும் பாதுகாத்தனர். கோட்டை வனத்துள் வாழும் மான்கள் பசியாலும்இ தாகத்தாலும் வாடாது உணவளித்தனர். தண்ணீர்த்தொட்டிகளை அமைத்து அவற்றைக் காப்பாற்றினர்.

கி.பி. 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆந் திகதிஇ யப்பானியர் குண்டுவீசித் திருகோணமலையைத் தாக்கினர். சீனன்குடாவில் காணப்பட்டஇ எண்ணெய்த் தாங்கிகள் தீப்பிடித்து எரிந்தன. ஆனால் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ளஇ கோட்டைப்பகுதியில் வீசப்பட்ட குண்டுகள் எதுவும் கோயிலைப் பாதிக்காது கடலுக்குள் விழுந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில்இ கோணேஸ்வரம் இழந்த பெருமையை மீளப் பெற வித்திடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில்இ 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆந் திகதிஇ இலங்கை சுதந்திரம் பெற்றது. போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபோது ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை நாலாபக்கமும் எடுத்துச் சென்று புதைந்திருந்தார்கள். சிதாகாசவெளியைத் தமது உள்ளத்திருத்திப் பிரார்த்தனை செய்த மக்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை. 1950 ஆம் ஆண்டு வரலாற்று நியதிப்படி இறையருளால் பிள்ளையார்இ சிவன்இ பார்வதிஇ திருவெங்கவடிவ அம்பாள்இ அஷ்சரதேவர்இ சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களோடுஇ அன்னவாகனம் ஆகியனவும் பூமியிலிருந்து கிணறு வெட்டும்பொழுது வெளிப்பட்டன. சைவப்பெருமக்கள் ஒன்றுகூடிஇ முன்னர் கோயில் இருந்த இடத்தில் கோயிலைக் கட்டி இத்திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்தனர். இதன் பின்னர் 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1963ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாந் திகதி ஆவர்த்தன மகா கும்பாபிஷேʮம் சிறப்பாக நடந்தேறியது. தெரிவு செய்யப்பட்ட ஆலய பரிபாலன சபைத் தலைவராகக் காலஞ்சென்ற டாக்டர் சு. சித்திரவேல் அவர்கள் தலைமை தாங்கினார். 1971 ஆம் ஆண்டு இவர் சிவபதம் அடைந்த பின்னர் இப்பொறுப்பை ஏற்றவர் திரு. மு. கோணாமலை செல்வராசா அவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளக்கோட்டு மன்னன் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. 1973 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இத்திருவிழா நடைபெறுகின்றது. மக்கள் ஆதரவினால் ஆலயப் புனருத்தாரணப் பணிகள் நிறைவேறிஇ 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆந் தேதி ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஆலயத்தில் பல புனருத்தாரணப் பணிகள் செய்யப்பட்டன. ஆலய பரிபாலனசபையுடன்இ இந்து கலாச்சாரப் அமைச்சுஇ வடகிழக்கு மாகாண சபை ஆகியன இணைந்து இப்பணியில் ஈடுபட்டு 1993 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆந் திகதி மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவற்றின் மூலம் திருவுருவங்கள் அதீத சக்தியைப் பெறுவதோடு நாட்டிற்கும்இ மக்களுக்கும் அருளை வழங்கும் என்பது ஆன்றோர் கருத்தாகக் காணப்படுகின்றது.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் அவர்கள் கூறியுள்ள கருத்து உற்று நோக்கத்தக்கது. ‘‘சில வேளைகளில் கோயில்களில் உள்ள சிலைகள் வெறும் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. இது ஒரு பூரணமான கருத்தல்ல. ஒவ்வொரு சிலையும் ஒரு பிரத்தியேகமான அபிஷேகத்தினால்இ தெய்வீகத்தன்மை பெறுகின்றது’’ என்பதற்கிணங்கப் பல தடவைகள் கும்பாபிஷேகம் கண்ட இத்திருக்கோயிலின் அருளுக்கு இணையேது?

2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆந் திகதிஇ திருக்கோணேஸ்வர வரலாற்றில் புதிய திருப்பம்மிக்க நாளாகக் காணப்படுகின்றது. கி.பி. 1624 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் ஆலயத்தின் தேர்கள் அழிக்கப்பட்டபின் இன்றுவரை பழம்பெருமைமிக்க தேரையும்இ தேர்த் திருவிழாவையும் மக்கள் கண்டுகளிக்க முடியவில்லை. ஏறக்குறைய 379 ஆண்டுகளின் பின் மீண்டும் அழகுமிக்க புதிய தேரிலே மாதுமையம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளி மக்களை ஆட்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தற்காலத்தில் இங்கு செல்வதற்கான செப்பனிடப்பட்ட தார்வீதி காணப்படுகின்றது. மலையுச்சியிலுள்ள சமதரைக்கு ஏறுவதற்கு வசதியாகப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக்கோட்டைஇ அதியுயர் பாதுகாப்புவளையமாகக் காணப்படுவதால்இ ஆலயத்திற்கு அண்மையிலும் பாதுகாப்புப்படைகள் காவல் செய்கின்றனர். கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாகஇ இப்பகுதிக்குள் செல்வதற்கு விசேட அனுமதிபெற்றே செல்ல வேண்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி இங்கு நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்புற நடைபெறவும்இ மக்கள் கோணேசப் பெருமானைத் தடையின்றிச் சென்று தரிசிக்கவும் வகை செய்துள்ளது.

திருக்கோணேஸ்வரம் பாடல்பெற்ற தலமாகக் காணப்பட்டுஇ ஈழம்இ இந்தியாஇ மேலை நாட்டார் எனப் பலதிறப்பட்டோராலும் புகழப்பட்டுள்ளது. கீழைத்தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோமாபுரி என்று குவைரோஸ் அவர்களால் பாராட்டப்பெற்றது. பிரம்மாண்டத்தின் இடைநாடியென சாந்தோக்கிய உபநிடதம் உரைக்கின்றது. அனுக்கிரகத்தலம் எனத் திருவாதவூரடிகளும்இ பல்வளமும் நிறைபதியெனக் கந்தபுராணமும் போற்றியுள்ளன. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று வாழ்ந்த இணையிலாப் பதியென இராமாயணம் இயம்பும். இவ்வாறான புகழ்பெற்ற திருத்தலம் திருக்கோணேஸ்வரம்.

இதன் தொன்மையை அறிய எண்ணிஇ 1956 ஆம் ஆண்டு திருக்கோணேஸ்வரக் கடலினடியில் ஆராய்ச்சி செய்த ஆர்தர் சி. கிளார்க்இ மைக் வில்சன்இ ரொட்னி ஜோங்கல்ஸ் என்பவர்களின் ஆராய்ச்சிக்குறிப்புகளையும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilvanan.com/v5802/v5802_2.htm

இது லேனா தமிழ்வாணனின் தளம் இங்கு சென்று ஈழத்துக் கோவில்களைப் பற்றிப் படியுங்கள். முந்திய பதிப்புகளுக்குச் சென்று பாருங்கள்.(ஜூலை 27ற்குப் பிறகு வந்தவற்றில் இது பற்றிக் கிடக்கின்றது)

இங்கே போடும்போது அதிகபக்கங்கள் எடுப்பது மட்டுமல்ல, எழுத்துருவில் மாற்றத்தையும் கொடுக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்,

பயனுடைய தகவல்களுக்கு நன்றிகள்...

படிக்கப் பார்க்கிறேன்...

Link to comment
Share on other sites

தகவல்களுக்கு நன்றி தூயவன். தெரியாத சில விடயங்களை அறிய முடிந்தது.

Link to comment
Share on other sites

தகவலிற்கு நன்றி தூயவன். ரவி தமிழ்வாணன் அவர்கள் புலம்பெயர் நம்மவரின் படைப்புக்கள் பலவற்றைக் கூட வெளியிட்டு இருக்கின்றார். அத்துடன் லேனா தமிழ்வாணன் தனது தந்தையாரின் பத்திரிகையான கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் குமுதம் பத்திரிகையின் உதவியாசிரியராகவும் இருக்கின்றார்.

Link to comment
Share on other sites

ஐந்து பக்கங்களாவது எழுதுங்கள்.. அதன்பின் வந்து சந்திக்கின்றேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவி தமிழ்வாணன் எனக்கும் நன்கு தெரிந்தவர். இலண்டன், கனடா, ஐரோப்பா, அவஸ்திரேலியா, மத்தியகிழக்கு என்று பல இடங்களுக்கும் சென்றிருக்கின்றார். எனது மூன்று படைப்புக்கள் உட்பட புலம் பெயர்ந்த, புலம்பெயராத எழுத்தாளர்களின் படைப்புக்கள் என்று பல படைப்புக்களை எம்மவர்களின் உதவியுடன் வெளியிட்டார். இன்னமும் வெளியிடுவார் என்றே எண்ணுகிறேன்.

லேனா தமிழ்வாணனையும் சென்ற சித்திரை மாதம் இந்தியா சென்றிருந்தபோது மணிமேகலைப் பிரசுரத்தில் சந்தித்து உரையாடினேன்.

அடுத்து,

முன்னே குளக்கோட்டன்... என்று தொடங்கும் பாடலில் கடைசி வரியை நான்:

"தானே வடுகாய் விடும்" என்றுதான் இளமையில் படித்ததாக ஞாபகம். அதாவது தானாகவே சுதந்திரம் அடைந்துவிடும் என்று பொருள் என்றுதான் படித்தேன். அது தவறாகவும் இருக்கலாம்.

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

குப்பிளான் சொக்கர்வளவு சோதி வினாயகர் வரலாறு

http://www.kuppilan.com/htmdocuments/History.htm

கற்கரைப்பிள்ளையார் கோவிலின் படங்கள்

http://www.kuppilan.com/htmdocuments/katka...layar-photo.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவி தமிழ்வாணன் எனக்கும் நன்கு தெரிந்தவர். இலண்டன், கனடா, ஐரோப்பா, அவஸ்திரேலியா, மத்தியகிழக்கு என்று பல இடங்களுக்கும் சென்றிருக்கின்றார். எனது மூன்று படைப்புக்கள் உட்பட புலம் பெயர்ந்த, புலம்பெயராத எழுத்தாளர்களின் படைப்புக்கள் என்று பல படைப்புக்களை எம்மவர்களின் உதவியுடன் வெளியிட்டார். இன்னமும் வெளியிடுவார் என்றே எண்ணுகிறேன்.

லேனா தமிழ்வாணனையும் சென்ற சித்திரை மாதம் இந்தியா சென்றிருந்தபோது மணிமேகலைப் பிரசுரத்தில் சந்தித்து உரையாடினேன்.

அடுத்து,

ஆமாம். ஆசிரியரே,

ரவி தமிழ்வாணன் ஈழத்து ஆக்கங்களை வெளியிடும்போது சிலர் எதிர்ப்புக் குரல் வெளியிட்டும், அவரை அவமானப்படுத்தும் விதத்திலும் நடந்து கொண்டனர். இதனால் வீரகேசரிப்பத்திரிகையில் அவர் அதற்கு பதில் மடல் எழுதியதைப் படித்ததாக நினைவு.

எங்கள் மக்களில் சிலருக்கு அந்த வருத்தம் இருக்கின்றது. தாங்களும் ஒய்டும் செய்யமாட்டார்கள். செய்பவர்களையும் மதிக்கமாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது சைவ சமயத்தினை வழிபட்டு வந்த ஈழத்தமிழர்களின் ஆலயங்களில் சைவ சமயத்தினைச்சேராத ஆஞ்சனேயர், ஜய்யானாருக்கு கோவில் கட்டி வழிபாடு நடைபெறுகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் சில சமையப்பேச்சாளர்கள் என்று சொல்பவர்களும் இதனை ஆதாரித்துக் கருத்தினை வைப்பதுதான். அண்மையில் ஈழத்துக்கு சென்ற போது ஒரு பிரபல பேச்சாளர் ஒருவரினைச் சந்தித்தேன். அவர் புலம் பெயர்ந்த நாடுகளுக்கு சமயப்பேச்சாளாராகச் செல்வதுண்டு. மருதனார்மடம் ஆஞ்சனேயர் பற்றிச் சொன்னார். ஆஞ்சனேயர் கோவில் கட்டியதால் தான் யாழ் கண்டி வீதி திறந்து விடப்பட்டு மக்கள் இலகுவாகப் பயணம் செய்யக்கூடியதாக உள்ளது என்றார். நான் அவரிடம் ஆஞ்சனேயர் சைவக்கடவுள் அல்லவென்றும் வாதாடிப்பார்த்தேன். அவர் கேட்கவில்லை. சுனாமியும் ஆஞ்ச்னேயர் கோவில் கட்டியபின்பு தானே வந்தது என்றேன். அதற்கு மக்களின் பாவங்களினால் தான் சுனாமி வந்தது என்றார்.

வருகிற 27- 29ல் சிட்னியில் சைவமகானாடு நடைபெறவுள்ளது.

இதில் பல அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் கம்பனையும் ஆஞ்ச்னேயரினையும் சைவக்கடவுளாகவும் சொல்பவர் ஒருவரும் கொழும்பில் இருந்து வந்து கலந்து கொள்கிறார்.

தூயவன் தொடர்ந்து எல்லா ஈழக்கோவிலின் வரலாற்றையும் பதியுங்கள். நல்லவிடயம்.வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா.......

எனக்கு திருத்தலங்கள் என்றவுடன் பக்தி பெருக்கெடுத்து ஓடும்! அவ்வளவு பக்தி உண்டியலில்!

உது கிடக்க உங்கு "லேனா/ரவி தமிழ்வாணன்கள்" பற்றி யாரோ கதைத்த மாதிரி கிடக்கு!!!...... உவையளைப்பற்றி எங்கோ கேள்விப்பட்டதை ......

...... புலத்திலுள்ளோரின் படைப்புகளை வெளியிடுகிறோமென, படைப்பாளிகளிடமே அதற்கான பணத்தைப் பெற்று சில படைப்புக்களை வெளியிட்டார்கள்தானாம்!! அப்படி வெளிவந்த ஒரு படைப்பின் படைப்பாளி, இதே வாணன்களால் தமிழ்நாட்டில் புத்தகக்கண்காட்சி நடைபெறுவதாக கேள்விப்பட்டு, தானிருக்கும் மேற்குலக நாட்டிலிருந்து கண்காட்சியைப் பார்க்க தமிழ்நாட்டுக்கு சென்றிருக்கிறார். அக்கண்காட்சி நிறைவான பார்வையாளர்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். நம்மவரும் தனது படைப்பும் அங்கிருக்குமென சல்லடை போட்டுத்தேடினாராம்!!! ம்ம்ம்ம்ம்... காணவேயில்லையாம்!!! சரி தனது படைப்புத்தான் கிடக்கட்டும், தனது சக புல படைப்பாளிகளின் படைப்புக்களாவது கிடக்குமோவென்று தேடோ தேடொன்று தேடினாராம்!!! ம்ம்..... அதுவும் ஏமாற்றம்.... அங்கு கண்காட்சியில் பொறுப்பாகவிருந்த சிலரிடம் புலத்தின் படைப்புகளைப் பற்றி வினாவினாராம்!!! வந்த பதிலோ "அப்படியாக ஒன்றுள்ளதாக நாமறியவில்லை"!!!!!! ... இறுதியில் வாணர்களை எங்கு என்று விசாரித்தாராம்!! "அவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக" பதில் வந்ததாம்!!!!!! ...... இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு நேரத்தை/பணத்தை செலவழித்து சென்ற படைப்பாளியோ விரக்தியின் உச்சத்தில் ......

...... எல்லோரும் எம் தலையில் ஏறி ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயதேவன் அண்ணா

நானும் கேள்விப்பட்டதைத் தான் சொன்னான். மற்றும்படி ரவி தமிழ்வாணனை நானும் பாரத்ததில்லை. இப்படி புத்தகம் அடித்து விடுகின்றோம் என்று வெளிக்கிட்டதில் எங்கள் ஆட்களும் சளைத்தவர்கள் இல்லைத்தானே

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிமேகலை பிரசுரம் ஈழத்தமிழ்ர்களிடம் நனறாக பணம் பறிக்க கற்றுக் கொண்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழரிடம் இப்போது புஸ்தகம் வெளிவிடுவது என்பது ஒரு கயளாழைn. கதைஇ கட்டுரைஇ கவிதைஇ ஊர் சரித்திரம் இப்படி ஏதாவது ஒவ்வரு கிழமையும் வெளியிட்டு கொண்டிருப்பார்கள்.

மணிமேகலை இங்குதான் தனது வியாபாரத்தை தொடங்குகின்றது.

இதோ இவர்களின் விலப்பட்டியல்:

இவர்கள் கூ350 இலிருந்து கூ500 வரை ஒரு புஸ்தகம் வெளியிட எழுத்தாளரிடம் வாங்கின்றார்கள்.

எழுத்தாளரைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப் படும். முதன் முறையாயின் கூ500இ இரண்டாம் முறையாயின் கூ450. இப்படி போக போக கூ350 வரை னளைஉழரவெ விலை கிடைக்கும். புஸ்தகம் 165 பக்கங்களுக்குல் இருத்தல் வேண்டும். 10 பக்கமாயினும் இதுதான் விலைஇ 165 பக்கமாயினும் இதுதான் விலை.

இவர்கள் 1000 புஸ்தகம் அச்சடிப்பார்கள். எழுததாளருக்கு 350 புஸ்தகம் கொடுப்பார்கள். இதனை விற்று எழுத்தாளர் தனது முதலீட்டை எடுத்துக் கொள்ளவேண்டும். மிகுதி 650ம் மணிமேகலை பிரசுரத்திற்க்கே. தமிழக அரசு மணிமேகலையிடம்தான் நூலகங்களுக்கு நூல்கள் வாங்குகின்றது என்று சொல்கிறார்கள் - உண்மையா தெரியாது - மிகுதி 650ஐயும் நூலகங்களுக்கு விற்பதாக சொல்கின்றார்கள்

எழுத்தாளருக்கு பணம் கொடுத்து பதிப்புரிமை வாங்கிய காலம் போய்இ இப்போது எழுத்தாளரிடமே பணம் வாங்கிக் கொண்டு பிரசுரிக்கிறார்கள்.

மணிமேகலைக்கு இதில் கிடைக்கும் லாபத்தை எண்ணிப்பாருங்கள்

எழுத்தாளரிடம் வாங்கிய (கூ500 ழூ 40) சுளு 20இ 000

650 புஸ்தகங்கள் (650 ழூ (யஎநசயபந) 25) சுள. 16இ 200

மொத்தமாக 36இ000 ரூபாய் கிடைக்கினறது.

இதில் வேலையயாவது ஒழுங்காக செய்கிறார்களா?

வேலை சுத்த மோசம்இ ஒவ்வரு பக்கத்திலும் 10 எழுத்து பிழையாவது இருக்கும். புருவ் ரீடிங் செய்யமாட்டார்கள் (ஒப்பந்தத்தின் படி)இ எழுத்தாளர் வேண்டுமாயின் தனது செலவில் புருவ் ரீடிங் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இங்கு நடந்த ஒரு கதி(தை): எழுத்தாளர் ஒருவர் தனது முன்னுரை எழுதும் போது (யார் அணிந்துரை எழுதுவது என்று முடிபு செய்யவில்லை எனவே) அணிந்துரை எழுதிய ------------------க்கு நன்றி என்று எழுதியிருந்தார். பின்னர் எழுத்தாளர் அனுராதா ரமணன் அணிந்துரை எழுதினார்இ ஆனால் நம்பமாட்டீர்கள் மணிமேகலை பிரசுரித்த புஸ்தகத்தில் முன்னுரையில் அணிந்துரை எழுதிய ------------------க்கு நன்றி என்றே பதிப்பித்துள்ளனர்.

இது மட்டுமல்லஇ இங்கு எழுத்தாளர்கள் விழா வைத்து புஸ்தகம் வெளியிடுவார்கள் (இவர்களுக்கு கிடைக்கும் 350 பிரதிகள்)இ அனேகமாக 200 தொடக்கம் 500 பேரை அழைப்பார்கள். வந்தவர்களும் புஸ்தகத்தை காசு கொடுத்து வாங்கி செல்வார்கள். அவ்வளவுதான் பின்னர் கடைகளிலெல்லாம் விற்க்க மாட்டார்கள். (யார் வாங்குவார்கள்)

இதிலும் மணிமேகலை தனது விளையாட்டை காட்டிவிடும். பெரிதாக விழா நடைபெறுகின்றது என்று அறிந்தால்இ விழா நடைபெறும் நாள் தனது பிரதிநிதியை புஸ்தக மூட்டையுடன் இங்கு அனுப்பிவிடும். அவர் விழா நடைபெறும் போது தனது கடையை விரிப்பார்இ பரிதாபம் என்னவெனில் எழுத்தாளர் என்ன புஸ்தகம் வெளியிடுகின்றாரோ அதையும் இவர்கள் விற்பனை செய்வார்கள் (இவர்களது 650 பிரதி). எழுத்தாளர் செலவு செய்து விழா வைக்க இவர்கள் இடையில் வந்து சுருட்டிக் கொண்டு போய்விடுவார்கள். எழுத்தாளர் பாவம் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்பார்.

அவருக்கு அன்று நடப்பது தான் விற்பனை அதன் மூலமேஇ மணிமேகலைக்கு கொடுத்த பணம் மற்றும் விழா செலவு போன்றவற்றை திரும்ப பெறவேண்டும். இந்த பயத்தில் இப்போது ஒருவரும் மணிமேகலைக்கு எப்போது வெளியீடு என்று சொல்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்வாணனின் குடும்பம் தங்களுக்கென்றே மணிமேகலைப் பிரசுரத்தினை வைத்திருந்து தமிழ் வளர்க்கின்றார்கள், அதில் லேனாவோ, ரவியோ சளைத்தவரல்ல, ஈழத்தவர்களின் படைப்புகளுக்கு களம் கொடுக்க வேண்டுமென அவாக் கொண்டு மணிமேகலைப் பிரசுரமாக பல பதிப்புகளை மேற்கொண்டுள்ளார்கள், இலங்கைக்குப் பல தடவைகள் வந்து எம்மவர்களின் பல நூல் வெளியீட்டு விழாக்களைச் செம்மைப்படுத்தியிருக்கிறார

Link to comment
Share on other sites

தூயவன் இந்த இணைப்பை பாருங்கோ http://www.nexcorpsl.com/sinhala/P_Koneswa...களவன் கோணேச்வரம் கோகண்ண விகாரையாம் அதை ஈழ்த்தவர் மற்றிவிடனராம்

Link to comment
Share on other sites

http://www.nexcorpsl.com/sinhala/P_NorthAn...st_PGallery.htm

இதில் எழுதி உள்ள இந்த பந்தியை வசியுங்கள்

Archaeologists have recorded over 200,000 ruined Buddhist Monasteries and Temples in Sri Lanka. Of them, over 70.000 were in the North and the East. By 1981, we had identified 276 of those 70,000 sites, which survived the destruction only because of the Sinhalese villagers who lived around them. Today, in 2002, we are struggling to find and restore any of them. Ethnic racists who refuse to recognize the Buddhist heritage or the history, allow only a half a dozen sites to be restored. They say that would jeopardize the Tamil ( A South Indian community ) identity in the north and the east.

Today, Sinhalese cannot live around these historic Buddhist places in safety. All those Sinhalese have been chased away in an ethnic cleansing. These ruins stand, towering in silent splendour, a solitary landmark and witness to the untold stories that get written into landscapes, buried, unearthed and erased yet once again. That is the sad tale of the Sinhalese civilization, which unfortunately do not deserve that fate.

போய் பாருங்கள் இதை பார்த்தால் சிரிப்பதா அழுவத எண்டு தெரியெல்லை

அன்புடன்

ஈழவன்

Link to comment
Share on other sites

  • 7 months later...

கோணேஸ்வரர் கோயிலுக்கு போட்டியாகவே, கோட்டையினுள் ஆமிக்காம்பிற்கு அருகாக புத்த விகாரை ஒன்று 80 களின் ஆரம்பத்தில் அல்லது 70 களின் முடிவில் கட்டப்பட்டது.

அதில் கட்டப்பட்ட எழுந்து நிற்கும் உயரமான புத்தர் சிலை அந்தக் காலத்திலேயே கட்டி சிறிது காலத்தில் வெடிக்கத் தொடங்கி விட்டது. பின் இப்போது அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது.

யாருக்காவது கோணேஸ்வரர் கோயில், கோட்டையினுள் தற்போது நடைபெறும் லேட்டஸ்ட் ஆன செய்திகள் தெரிந்தால் நாமும் அறிந்து கொள்வதற்கு அவற்றை இங்கு பதிவில் இடவும்! நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.