Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் வாறது நல்லதுதான். ஆனால் அந்த மாற்றம் ஒரே முறையில் நடப்பதை விடவும் கட்டம் கட்டமாக நடப்பதுதான் நல்லது. மாற்றங்களை உள்வாங்கவும் இலகுவாக இருக்கும். அதை விடுத்து ஒரேயடியாக மாற்றினால் தலை சுற்றுகிறது. மாற்றங்கள் கொண்டுவரப்படும் முன்னர் சம்மந்தப்பட்ட எல்லோருடனும் கலந்து பேசப்பட்டிருக்க வேண்டும். இது மாற்றத்திற்கான அவசியத்தை எல்லோரிடமும் உணரவைப்பதோடு மாற்றத்தினையும் இலகுவாக்கும்.

ஆனால் இவை எதுவுமே இங்கு நடைபெறவில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

காணொலி என்ற பதம் பிடித்திருக்கிறது.

காண் -- (காட்சி -- யும்) -- ஒலியும் இணைந்து வருவதால் காணொலி.

புதுச் சொல். நல்லது தானே. தமிழ் வள‌ரும்.

  • Like 2
Link to comment
Share on other sites

snapback.pngarivili, on 15 August 2011 - 01:37 AM, said:

அப்புறம் டியர் டார்லிங் மோகன் அண்ணா..

ஜம்முன்னு மேல போறதுக்கு , இருந்த அழுத்தியை காணோமே ..

அது என்னமோ ..சொல்லுவாளே ..ஆங்க் ..Back to top..... !

எப்போ திரும்ப போடுவீங்க?

இது மிகவும் அடியில் உள்ளது

”அதை அழுத்தும்போது ........தலைப்புகளின் தொகுப்புக்குத்தான் போகுது...........

நாங்க வாசிச்சுகொண்டு இருக்கும் அதே பக்கத்தின் ........மேற்பகுதிக்கு போகவேயில்ல! :unsure:

  • Quote
  • MultiQuote

Link to comment
Share on other sites

இவ்வளவு பிரச்சனைகள் இருக்க நீங்கள் அவசரப்பட்டு மாற்றவேண்டியதன் அவசியம் என்ன?? இப்படிச் செய்யாப்போகிறோம் என்று யாருக்காவது சொன்னீர்களா?? ஒருகட்டத்தில் இனி யாழுக்கே வருவதில்லை என்றிருந்தேன். தான்தோன்றித்தனமாகச் செயல்ப்படுவது என்பது இதுதானோ என்னவோ?!

ஏன் யாழில் எழுதமுடியாமல் வேறிடத்தில் எழுதிக்கொண்டு வந்து ஒட்ட வேண்டியிருக்கிறது ? இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா??

மோகன், நீங்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு வேலை செய்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் இவ்வளவு கஷ்ட்டங்களும் நன்றாக இயங்கிவன்த தளத்தினை மேம்ப்டுத்தியிருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.

ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன், அவ்வளவுதான்.

இதில் பிரச்சனைகள் மோசமாக இருப்பதாகத் தெரியவில்லை. யாழ் இருக்கும் வரை புதிய பதிப்புகள் வரும்போது தொடர்ச்சியாக மாறிக் கொண்டே இருக்கின்றது. மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

தனிப்பட்ட ரீதியில் இங்கு எதுவும் கஷ்டமானதாகத் தெரியவில்லை. புதிய களம் வேகமாகவும், பல்வேறு வகையான தெரிவுகள் உள்ளதால் இலகுவாகவும், விரைவாகவும் இயங்குகின்றது என்றே கருதுகின்றேன். சிலருக்கு, புதியதில் நிறைய மாற்றங்கள் உள்ளதால் சிலவேளை சில நாட்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். அது போக பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

எழுத்து மாற்றி எனும் போது பழைய முறையில் நாம் நீண்ட காலம் பழகியதால் பிரச்சனையோ தெரியவில்லை. மேலே நான் இணைத்துள்ள காணொலி மூலம் எவ்வளவு இலகுவாக தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற்றி மாற்றி எழுத முடிகின்றது. அலுவலகங்களில் install செய்ய முடியாதவர்கள் Firefox பாவித்தால் தமிழுக்கு என ஒரு add-ons உள்ளது. Firefox menuல் add-ons என்பதில் Tamil என எழுதினால் அந்தத் தெரிவுகள் காண்பிக்கும். அதனை இணைப்பதன் மூலமும் தமிழில் எழுதிக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா, புதிய களம் நன்றாக உள்ளது. உங்கள் சிரமத்துக்கும் முயற்சிக்கும் மிகப்பெரிய பாராட்டுகளும் வாழ்த்துகளும். மிக்க நன்றி! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் வாறது நல்லதுதான். ஆனால் அந்த மாற்றம் ஒரே முறையில் நடப்பதை விடவும் கட்டம் கட்டமாக நடப்பதுதான் நல்லது. மாற்றங்களை உள்வாங்கவும் இலகுவாக இருக்கும். அதை விடுத்து ஒரேயடியாக மாற்றினால் தலை சுற்றுகிறது. மாற்றங்கள் கொண்டுவரப்படும் முன்னர் சம்மந்தப்பட்ட எல்லோருடனும் கலந்து பேசப்பட்டிருக்க வேண்டும். இது மாற்றத்திற்கான அவசியத்தை எல்லோரிடமும் உணரவைப்பதோடு மாற்றத்தினையும் இலகுவாக்கும்.

ஆனால் இவை எதுவுமே இங்கு நடைபெறவில்லை.

ஆரம்பத்திலை இஞ்சையிருந்து(சத்தியமாய் நானில்லை)புடுங்குப்பட்டு புடுங்குப்பட்டு .......ஒவ்வொருமாற்றத்துக்கும் கிறுதிவந்து தடக்குப்பட்டுக் கீழைவிழுந்து எழும்பி இப்பவும் தினாவெட்டாய்த்தான் திரியினம்.இதுக்கே நிர்வாகம் சொல்லிப்போட்டுத்தான் செய்யோணுமெண்டால்??????? :o ...........................................................................................................................................................................................................................................................................................................................................................தற்சமயம் .............................உதவி..........................................................................பங்களிப்பு.................................................................எண்டு..........................................இதுக்குள்ளை இருக்குமெண்டால்....ஐயோ திருப்பியும் கிறுதி வருது :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகவுள்ளது ஆனாலும் பலர் சிரமப்படுவது போல் உள்ளது கருத்துகளத்தில் பலர் எழுவது இல்லை காரணம் புரியவில்லை மோகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறுதி வந்தால் இதில் மெல்ல ஏறி கொஸ்பிரலுக்கு ஓடுங்கோ தாத்தா.emoticon-object-004.gif :) :)

ஆரம்பத்திலை இஞ்சையிருந்து(சத்தியமாய் நானில்லை)புடுங்குப்பட்டு புடுங்குப்பட்டு .......ஒவ்வொருமாற்றத்துக்கும் கிறுதிவந்து தடக்குப்பட்டுக் கீழைவிழுந்து எழும்பி இப்பவும் தினாவெட்டாய்த்தான் திரியினம்.இதுக்கே நிர்வாகம் சொல்லிப்போட்டுத்தான் செய்யோணுமெண்டால்??????? :o ...........................................................................................................................................................................................................................................................................................................................................................தற்சமயம் .............................உதவி..........................................................................பங்களிப்பு.................................................................எண்டு..........................................இதுக்குள்ளை இருக்குமெண்டால்....ஐயோ திருப்பியும் கிறுதி வருது :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள் நுழைந்த பின் புதிய பதிவுகளைக் காண முடிவதில்லை ..வெளியேறிய பின் காண முடிகிறது ..

.வடிவமைப்பு இப்டியே தான் அமைக்க பட்டதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23vhov5.jpg

எனக்கு காணோளியை ஏற்ற முடியவில்லை.. இதை போல வருகிறது..

டிஸ்கி:

மொத்த கோடிங்குங்கும் வெளியாள தெரிவதால் பிரியா இருக்கும் டைமில் நான் பிகெச்பி படித்து விடலாம் என இருக்கேன்.. :lol: :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

வணக்கம், கருத்துக்களத்தில் நேரடியாகத் தமிழில் எழுத முடியாது உள்ளது என சிலர் தொடர்ச்சியாக அறியத் தந்திருந்தார்கள். அவர்களின் வசதிக்காக நேரடியாக எழுதுவதற்குரிய சில பரீட்சார்த்த முயற்சிகள் எடுத்துள்ளேன். அந்த வகையில் பரீட்சார்த்தப் பதிப்பு ஒன்று இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில் தவறுகள் இருக்கலாம். தவிர இது இன்னமும் முழுமை பெறவில்லை எனினும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில் பல விடயங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளது. உதாரணமாக வடிவமைப்புகள் போன்ற பல்வேறு விடயங்கள் நேரடியாகச் செய்ய முடியாது. உங்களுக்கு bbcode தெரிந்திருந்தால் நேரடியாக அதனைக் குறிப்பிடுவதன் மூலம் அவைகளை இணைக்க முடியும். நீங்கள் நேரடியாக எழுத முன்னரே குறிப்பிட்டது போன்று ஏதாவது ஒரு program இனை இணைப்பதன் மூலம் நேரடியாக எழுதிக் கொள்வது இலகு. அது சம்பந்தமான விளக்கத்திற்கு http://www.yarl.com/...ndpost&p=681968

இந்தப் பரீட்சார்த்தப் பதிப்பினைத் (பாமினி யுனிகோட், அல்லது ஆங்கிலம் யுனிகோட்) இப்பக்கத்தின் இறுதிப் பகுதியில் தெரிவு செய்யலாம்.

template.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய யாழ்களம் இப்போது உறுப்பினர்களுக்கான சகலவசதிகளுடனும் மிளிர்கின்றது.நன்றி மோகன் ஐயா :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா மோகன் இதை முன்னமே செய்திருக்கலாம்.

நன்றி நன்றி நன்றி

கோடி புண்ணியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான், கவனித்தேன்.

அப்பாடா... பெரிய பிரச்சினை ஒன்று தீர்ந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் இருக்கும் நாட்டில், கடந்த ஒரு வார காலமாக யாழ் களம் தெரியவில்லையாம் என்று கவலைப்பட்டார்.

அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் படி கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி .. அண்ணா மோகன் என்னால் எந்த வித யூரிப் பதிவுகளையும் இணைக்க முடியவில்லை ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி .. அண்ணா மோகன் என்னால் எந்த வித யூரிப் பதிவுகளையும் இணைக்க முடியவில்லை ஏன்?

நேரடியாக கொண்டு வந்து இணையுங்கோ அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் படங்கள் இணைக்க முடியவில்லை என்ன செய்ய வேண்டும், எனக்கு அளிக்கப்பட்ட 1000K முடித்துவிட்டது <_<

Link to comment
Share on other sites

என்னால் படங்கள் இணைக்க முடியவில்லை என்ன செய்ய வேண்டும், எனக்கு அளிக்கப்பட்ட 1000K முடித்துவிட்டது <_<

Imageshack இணையத்தில் உங்கள் படத்தை தரவேற்றி பின் அதனுடைய direct link ஐ, யாழ் இணையத்தில் எழுதும் பகுதியில் உள்ள image ஐ கிளிக் பண்ணி அதில் ஒட்டிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Imageshack இணையத்தில் உங்கள் படத்தை தரவேற்றி பின் அதனுடைய direct link ஐ, யாழ் இணையத்தில் எழுதும் பகுதியில் உள்ள image ஐ கிளிக் பண்ணி அதில் ஒட்டிவிடுங்கள்.

நன்றி தப்பிலி அறிய தந்ததிற்கு, இப்ப செய்து பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத்துக்கள் ஏன் இவ்வளவு சின்னதாய் இருக்கு ஒவ்வொரு தடவையும் பெரிதாக்கி பாக்க வேண்டி இருக்கிறது. அனைத்து இணையங்களின் எழுத்துகளையும் விட சின்னதாக் இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயது கூடக் கூட.... எழுத்து, சின்னன் மாதிரித்தான் தெரியும்.excited.gifrofl.gifbiggrin.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என் அன்பு கறுப்பியுடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை?

The following errors were found

The member கறுப்பி cannot receive any new messages

This personal message has not been sent

Link to comment
Share on other sites

ஓய் என்ன நான் இந்தப்பக்கம் வாறேல்லை எண்டால் உடனே ஆளையே புதைச்சிடுவீங்களே.... மருவாதையா என்ற வாழைப்பழம் சாப்பிடுற படத்தை தடாவில போட்டு மிதிக்கவேண்டாம்...

Link to comment
Share on other sites

ஆதி விளையாடின காகமே பற பற அனிமேசனையும் நிற்பாட்டி... இப்ப நானு துண்ணுறதையும் நிற்பாட்டி..... அப்படி மனசில என்னதான் நினைச்சிட்டிருக்கீக? முன்னெல்லாம் காங்காருக்குட்டிகளோட ஆதி அட்டகாசம் பண்ணும்போதெல்லாம் சப்போர்ட்டா இருந்தீங்க.... இப்ப இப்பிடி மாறீட்டீங்களே...!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.