Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன்

எனது யூசர் நேம் User Name மற்றும் பாஸ்வேட் Password ஆகியவற்றை அனுப்பிவிடவும் எனது ஈ E mail மெயிலுக்கு என்னால் சையின் அவுட் Sign out செய்யமுடிவதில்லை தொடர்ந்து சைன் இன்னில் இருக்கவேண்டியுள்ளது வேறு இடத்துக்கு சென்றால் என்னால் லோக் இன் Login பண்ண முடியுதில்லை தயவு செய்து அனுப்பிவிடவும்.

நன்றி

உடன்பிறவ சகோதரன்

தமிழரசு

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

செய்திக்களத்தில் சென்றபோது ''you can not reply to this topic'' என்று வருகிறது.

மோகன் அண்ணா அல்லது நிழலி அண்ணா, ஏன் இப்படி வருகிறது என கூறுவீர்களா? அல்லது நான் இதற்கு என்ன செய்ய வேண்டும்?

நன்றி

Link to comment
Share on other sites

செய்திக்களத்தில் சென்றபோது ''you can not reply to this topic'' என்று வருகிறது.

மோகன் அண்ணா அல்லது நிழலி அண்ணா, ஏன் இப்படி வருகிறது என கூறுவீர்களா? அல்லது நான் இதற்கு என்ன செய்ய வேண்டும்?

நன்றி

வணக்கம் கஜன்,

யாழ் களம் உங்களை வரவேற்கிறது.

நீங்கள் புதிய உறுப்பினராக இருப்பதால் எல்லாப் பகுதியிலும் எழுத முடியாதுள்ளது. அரிச்சுவடிப் பகுதியில் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள், விரைவில் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarlshot3.jpg

ஏன் சில தலைப்புக்கள் இப்படி சீர்கெட்டு தோற்றமளிக்கின்றன. நேற்றில் இருந்து சில தலைப்புக்கள் இப்படி தோன்றுகின்றன. இவற்றை சீர்செய்தால் களம் பார்க்க அழகாக நேர்த்தியாக இருக்கும்..! :)

Link to comment
Share on other sites

ஏன் சில தலைப்புக்கள் இப்படி சீர்கெட்டு தோற்றமளிக்கின்றன. நேற்றில் இருந்து சில தலைப்புக்கள் இப்படி தோன்றுகின்றன. இவற்றை சீர்செய்தால் களம் பார்க்க அழகாக நேர்த்தியாக இருக்கும்..! :)

திருத்தப்பட்டுள்ளது.

வேறு இடங்களில் இப்படி ஏற்பட்டால் சுட்டிக் காட்டுங்கள். நன்றி. :)

Link to comment
Share on other sites

வணக்கம் கஜன்,

யாழ் களம் உங்களை வரவேற்கிறது.

நீங்கள் புதிய உறுப்பினராக இருப்பதால் எல்லாப் பகுதியிலும் எழுத முடியாதுள்ளது. அரிச்சுவடிப் பகுதியில் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள், விரைவில் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

மிக்க நன்றி அண்ணா... !

Link to comment
Share on other sites

நிர்வாகத்தினரிடம் ஓர் சந்தேகம்:

கருத்துக்களிற்கு சக கருத்தாளர்களினால் வழங்கப்படும் மதிப்புநிலை சம்மந்தமான தற்போதைய புதிய அமைப்புமுறை புரியவில்லை. அதை எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு விளங்கப்படுத்துவீர்களா? உண்மையில் எனக்கும் புரியவில்லை. இதனால் நான் இன்னமும் இதை பரீட்சித்து பார்க்கவில்லை.

முன்பு பச்சை, சிவப்பு புள்ளிமுறை கொண்டுவரப்பட்டது. இது நேர், எதிர் புள்ளிகளின் ஒட்டுமொத்த வேறுபாட்டின் அடிப்படையில் உயர்ந்த அல்லது தாழ்ந்த மதிப்புநிலையை தனித்தனி கருத்து மட்டத்திலும் பின்னர் தனியொருவரின் சுயவிபரக்கோவையிலும் மதிப்பு நிலையில் மாறுபாட்டை ஏற்படுத்தியது.

பின்னர் சிவப்பு புள்ளிகள் நிறுத்தப்பட்டு பச்சை புள்ளிகளின் பயன்பாடு மாத்திரம் காணப்பட்டது.

இப்போது மீண்டும் சிவப்பு, பச்சை அம்புக்குறிகள் காணப்படுகின்றன. அவற்றை அழுத்தினால் தனியொரு கருத்திலும், சுயவிபரக்கோவையிலும் மதிப்புமட்டத்தில் எவ்வாறான மாற்றம் கிடைக்கும் என்று புரியவில்லை.

இதற்கான விளக்கத்தை தாருங்கள்.

இந்த மதிப்புமட்டத்தை யாழ் வாசகர்கள் பார்வையிடமுடியாது. யாழ் உறவுகள் மாத்திரமே பார்வையிடமுடியும். எனவே, யாழில் பிரிவினைகள், குழுமுறைப்போட்டிகள் தவிர வேறு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று புரியவில்லை.

வெளியில் இருந்தும் வாசகர்கள் இந்த மதிப்பீட்டு அமைப்பில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின் நான் இத்திட்டத்தை வரவேற்பேன். ஏனெனில், அப்போது தனிப்பட்ட ஒவ்வொரு கருத்திற்கும் பொதுவான அபிப்பிராயம் பற்றிய கணிப்பீட்டை ஓரளவிற்கு ஊகிக்கக்கூடியதாக அமையும். அவ்வாறு இல்லாமல் யாழ் உறவுகள் மாத்திரமே ஒவ்வொரு கருத்திற்கும் மதிப்புநிலையை வழங்கமுடியும் என இருந்தால் அது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாகவே போகும்.

ஐபி முகவரி மூலம் மதிப்பீட்டு அமைப்பை கட்டுப்படுத்தலாமெனில், வாசகர்களும் வெளியிலிருந்து தமது விறுப்பு, வெறுப்புக்களை ஒவ்வொரு தனித்தனி கருத்துகளிற்கும் தெரிவிக்க சந்தர்ப்பம் ஏற்படும் என்பதோடு அது வாசகரிடையே வரவேற்பையும் பெறும். இது வாசகர்களின் எண்ணிக்கையையும் எதிர்காலத்தில் அதிகரிக்க உதவும். அப்படியல்லாமல் யாழ் உறவுகள் மட்டுமே இதில் கலந்துகொள்ளலாமெனில் மோசடிகளிற்கும், பிரிவினைகளிற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நன்றி!

Edited by கலைஞன்
  • Like 4
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளியில் இருந்தும் வாசகர்கள் இந்த மதிப்பீட்டு அமைப்பில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின் நான் இத்திட்டத்தை வரவேற்பேன். ஏனெனில், அப்போது தனிப்பட்ட ஒவ்வொரு கருத்திற்கும் பொதுவான அபிப்பிராயம் பற்றிய கணிப்பீட்டை ஓரளவிற்கு ஊகிக்கக்கூடியதாக அமையும். அவ்வாறு இல்லாமல் யாழ் உறவுகள் மாத்திரமே ஒவ்வொரு கருத்திற்கும் மதிப்புநிலையை வழங்கமுடியும் என இருந்தால் அது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாகவே போகும்.

ஐபி முகவரி மூலம் மதிப்பீட்டு அமைப்பை கட்டுப்படுத்தலாமெனில், வாசகர்களும் வெளியிலிருந்து தமது விறுப்பு, வெறுப்புக்களை ஒவ்வொரு தனித்தனி கருத்துகளிற்கும் தெரிவிக்க சந்தர்ப்பம் ஏற்படும் என்பதோடு அது வாசகரிடையே வரவேற்பையும் பெறும். இது வாசகர்களின் எண்ணிக்கையையும் எதிர்காலத்தில் அதிகரிக்க உதவும். அப்படியல்லாமல் யாழ் உறவுகள் மட்டுமே இதில் கலந்துகொள்ளலாமெனில் மோசடிகளிற்கும், பிரிவினைகளிற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நன்றி!

நன்றி கலைஞன் அண்ணா,

இதுவே எனது கருத்துமாகும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் மீண்டும் சிகப்பு புள்ளி வழங்கும் முறையை கொண்டு வந்து உள்ளீர்கள்...கருத்துக்களத்தில் ஒருவரது கருத்தை ஆதரித்தால் பச்சையும்,எதிர்த்தால் சிகப்பும் கொடுக்கலாம்[எழுத விருப்பமில்லாமல்,எழுத நேரமில்லாமல்] ஆனால் இங்கு பல பேர் சிகப்பு புள்ளியை துஸ் பிரயோகம் செய்கிறார்கள்...தனிப்பட்ட முறையில் தங்களுக்கு பிடிக்காதவர்களைப் பழி வாங்க சிகப்பை பயன் படுத்துகிறார்கள்....இந்த சிகப்பு,பச்சை புள்ளிகளால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது தான் என் கருத்து ஆகவே இந்த முறையை நீக்க வேண்டும் அல்லது சிகப்பு,பச்சை புள்ளிகளை தனித் தனியாக கணக்கில் எடுக்க வேண்டும்...நன்றி

  • Like 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

இங்கு தொடர்ந்து அர்யுன் அவர்களை பலர் சோத்துப்பாசல் என்று எழுதிக் கொண்டிருப்பதனையும் இனிமேல் நிறுத்த நிர்வாகம் விதியமைக்க வேண்டும். அர்யுனும் ஒரு முன்னாள் போராளிதான். அவரும் தாயகக்கனவோடுதான் ஆயுதம் தூக்கப்போனோர். அவரது தெரிவும் தலைமையும் தவறானது என்பதற்காக தொடர்ந்து சோத்துப்பாசல் துரோகி போன்ற அர்தத்தத்தில் சாடுவதையும் சாடுவோர் கவனித்து நிறுத்திக் கொள்வதே சக கருத்தாளனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.

  • Downvote 1
Link to comment
Share on other sites

இங்கு தொடர்ந்து அர்யுன் அவர்களை பலர் சோத்துப்பாசல் என்று எழுதிக் கொண்டிருப்பதனையும் இனிமேல் நிறுத்த நிர்வாகம் விதியமைக்க வேண்டும். அர்யுனும் ஒரு முன்னாள் போராளிதான். அவரும் தாயகக்கனவோடுதான் ஆயுதம் தூக்கப்போனோர். அவரது தெரிவும் தலைமையும் தவறானது என்பதற்காக தொடர்ந்து சோத்துப்பாசல் துரோகி போன்ற அர்தத்தத்தில் சாடுவதையும் சாடுவோர் கவனித்து நிறுத்திக் கொள்வதே சக கருத்தாளனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.

வழிமொழிகிறேன்.

அதேவேளை அர்யுன் அவர்களும் சக உறவுகளை தீண்டுவது, நக்கல் அடிப்பது அதற்கும் மேலாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதாரமில்லாமல் கீழ்த்தரமாக விமர்சிப்பானவற்றையும் நிறுத்தவேண்டும்.

  • Like 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

இதற்கான விளக்கத்தை தாருங்கள்.

இந்த மதிப்புமட்டத்தை யாழ் வாசகர்கள் பார்வையிடமுடியாது. யாழ் உறவுகள் மாத்திரமே பார்வையிடமுடியும். எனவே, யாழில் பிரிவினைகள், குழுமுறைப்போட்டிகள் தவிர வேறு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று புரியவில்லை.

வெளியில் இருந்தும் வாசகர்கள் இந்த மதிப்பீட்டு அமைப்பில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின் நான் இத்திட்டத்தை வரவேற்பேன். ஏனெனில், அப்போது தனிப்பட்ட ஒவ்வொரு கருத்திற்கும் பொதுவான அபிப்பிராயம் பற்றிய கணிப்பீட்டை ஓரளவிற்கு ஊகிக்கக்கூடியதாக அமையும். அவ்வாறு இல்லாமல் யாழ் உறவுகள் மாத்திரமே ஒவ்வொரு கருத்திற்கும் மதிப்புநிலையை வழங்கமுடியும் என இருந்தால் அது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாகவே போகும்.

நன்றி!

மேலும்

நல்ல முறையில் தொழில்படுவதானால் வாசகர் களுக்கு மட்டும் புள்ளி போடுவதை கொடுத்துவிடவேண்டும். உள்ளே உள்ள உறவுகள் ஆக்கபூர்வமான கருத்துகளை மட்டும் எழுத ஊக்க படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

மேலும்

நல்ல முறையில் தொழில்படுவதானால் வாசகர் களுக்கு மட்டும் புள்ளி போடுவதை கொடுத்துவிடவேண்டும். உள்ளே உள்ள உறவுகள் ஆக்கபூர்வமான கருத்துகளை மட்டும் எழுத ஊக்க படுத்த வேண்டும்.

அவுட் லொக் பன்னிவிட்டு வாசகராக வெளியில் இருந்து புள்ளிகள் கொடுக்க முடியாதா?

புள்ளி முரை இருக்க வேண்டும் ஆனால் யார் பச்சை புள்ளி கொடுக்கிறார்களோ யார் சிகப்பு புள்ளி கொடுக்கிறார்கள் என்று காட்டக் கூடிய தொழில்நுற்ப்பத்தை புகுத்தலாம்.

அப்ப தான் வெளிப்படையாக ஒருவர் கருத்தை ஆதரித்து விட்டு புல்ளி கொடுக்கும் போது எதிர்மறையாக கொடுக்கிறார்கள்........

Link to comment
Share on other sites

அவுட் லொக் பன்னிவிட்டு வாசகராக வெளியில் இருந்து புள்ளிகள் கொடுக்க முடியாதா?

புள்ளி முரை இருக்க வேண்டும் ஆனால் யார் பச்சை புள்ளி கொடுக்கிறார்களோ யார் சிகப்பு புள்ளி கொடுக்கிறார்கள் என்று காட்டக் கூடிய தொழில்நுற்ப்பத்தை புகுத்தலாம்.

அப்ப தான் வெளிப்படையாக ஒருவர் கருத்தை ஆதரித்து விட்டு புல்ளி கொடுக்கும் போது எதிர்மறையாக கொடுக்கிறார்கள்........

முடியும். ஆனால் பரவலாக நடை பெறாது. 3 பச்சை புள்ளிகள் மட்டும் என்பதை ஒருசிலர் இன்னொரு பெயரில் வந்து முறியடிக்கிறார்கள் இல்லையா?. 100% திருத்தமானதல்ல. யாழில் பதிந்து கொள்வோர் கூடிய திரிகளை பார்க்கவும் முடிகிறது. பதிந்து வந்தோர் சோம்பேறித்தனமாக பச்சையை குத்திவிட்டு போகாமல் பிடித்திருந்தால் அது எப்படி என்று ஒரு வரி எழுதவைக்கும்.

இல்லையேல் ஆரம்பத்தில் ஒருவருக்கு 10 பச்சைகள் கொடுக்கலாம். 1 பச்சை குத்தும் போது .2 பச்சையை(ஒரு மஞ்சள்) கழிக்கலாம். அதாவது ஒரு பச்சைப் புள்ளியை கொடுக்கும் உறுப்பினர் ஒரு மஞ்சள் புள்ளியை இழப்பர். 50 பச்சைகளின் பின் அவர் தனக்கு பச்சைகள் பெற்றிருக்காவிட்டால் அவரால் பச்சை குத்த முடியாது(புதுப்பெயரில் வரலாம்). அநாவசியமாக பச்சை குத்துபவர் தான் எடுத்த பச்சைகளை விரைவில் இழப்பார். நேரத்தையும் உழைப்பையும் போட்டு பச்சை எடுப்பவர் மற்றவர்களின் கருத்துக்களை அளக்க தகுதி உடையவராகிறார். இதோடு சேர்த்து வாகர்களுக்கு ஒருகருத்துக்கு ஒரு மஞ்சள் புள்ளி கொடுக்கலாம். 5 மஞ்சள் புள்ளிகளைப் பெற்ற உறுப்பினர் அதை ஒரு பச்சை புள்ளியாக மாற்றலாம். ஒரு உறுப்பினர் ஒருகருத்துக்கே 5 பச்சைகள் கொடுத்தாராயின் அந்த கருத்தில் ஒரு பச்சையை இழப்பர். வாசகர் ஒரு மஞ்சள் மட்டும்தான் கொடுக்க முடியும். உறுப்பினர் வேண்டியமட்டும், ஆனால் முழுமையான பச்சைகளாக கொடுக்கலாம்(தன்னிடம் இருப்பதை பொறுத்து).

Edited by மல்லையூரான்
Link to comment
Share on other sites

மல்லையூரான்,

யாழ் கருத்துக்களத்தில் கீழ்வரும் மென்பொருளை பயன்படுத்துகின்றார்கள். மென்பொருள் குறியீடுகளை மாற்றி தேவைக்குத்தகுந்தபடி பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆனால், அவ்வளவு தூரம் மினக்கடுவதற்கு மோகன் அவர்களிற்கு நேரம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் சொல்லும்வகையில் மதிப்பீட்டு திட்டத்தை செய்யலாம், ஆனால் அதற்குரிய மென்பொருள் அமைப்பை யார் உருவாக்குவார்கள்?

இங்கு செய்யக்கூடியது மென்பொருள் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அமைப்பு செயற்பாடுகளை யாழ் கருத்துக்களத்திற்கு உகந்தவகையில் எப்படி பாவிப்பது என்பதுதான்.

யாழ் கருத்துக்களத்திற்கான கீழுள்ள மென்பொருள் வழங்கும் வழங்குனரின் தளத்திற்கு சென்று இதே மென்பொருளை பயன்படுத்தும் வேறு கருத்துக்களங்கள்மூலம் நாம் கற்றவேண்டிய விடயங்களை அறிந்து அவை பயனுள்ளவையாக இருப்பின் இங்கும் பிரயோகம் செய்யப்படுவதற்கு சிபாரிசு செய்யலாம்.

http://community.invisionpower.com/

மதிப்பீட்டு திட்டம் சம்மந்தமாக இங்கு தேடல்செய்து இவற்றின்மூலமும் இந்தமென்பொருள் மதிப்பீட்டுதிட்டம் சம்மந்தமாக அறிந்து பயனுள்ள சிபாரிசுகளை யாழ் நிர்வாகத்திடம் முன்வைக்கலாம்.

Edited by கலைஞன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தொடர்ந்து அர்யுன் அவர்களை பலர் சோத்துப்பாசல் என்று எழுதிக் கொண்டிருப்பதனையும் இனிமேல் நிறுத்த நிர்வாகம் விதியமைக்க வேண்டும். அர்யுனும் ஒரு முன்னாள் போராளிதான். அவரும் தாயகக்கனவோடுதான் ஆயுதம் தூக்கப்போனோர். அவரது தெரிவும் தலைமையும் தவறானது என்பதற்காக தொடர்ந்து சோத்துப்பாசல் துரோகி போன்ற அர்தத்தத்தில் சாடுவதையும் சாடுவோர் கவனித்து நிறுத்திக் கொள்வதே சக கருத்தாளனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.

நாங்களும் அப்படித்தான் ஒரு தலைவரின் கீழ் போனோம்

எம்மை

பயங்கரவாதிகள்

மண்டை கழுவப்பட்டவர்கள்

படிக்காத முட்டாள்கள்

குண்டுச்சட்டிக்குள் வண்டில் ஓட்டுபவர்கள்

பிள்ளைபிடிகாரர்கள்

அழிக்கப்படவேண்டியவர்கள்

இன்னும் கொஞ்சநாளில் இல்லாமல் போய்விடவேண்டும்..........??? என்று எழுதும்போது நீங்கள் தடுக்காததன் விளைவுகள் தான் இது.

உங்களது ஓரு பக்க சார்பான இந்தக்கருத்தை ஆட்சேபிக்கின்றேன். :( :( :(

  • Like 1
Link to comment
Share on other sites

இந்த பச்சை சிவப்பு புள்ளிகள் தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன்.

இதை மேலும் நடைமுறைச் சிக்கல்களுக்கு உள்ளாக்கி நிர்வாகத்தினரை கஷ்டப்படுத்தாமல் இல்லாமல் ஆக்கிவிட்டால் என்ன?

கள உறவுகளன்றி யாரும் பச்சை குத்தலாமென்றால், ஒருவரே, பல்வேறு கணணிகளில் இருந்து குத்திக் கொண்டிருக்கலாம்.

மேலும், ஒரு உறுப்பினர், மிகவும் நீண்ட காலமாக (வருடக்கணக்கில்) கருத்து எதுவும் எழுதாமல் இருப்பாரென்றால், அவரது மின்னஞ்சலுக்கு அறிவித்து பின்னர் அவர்களை உறுப்பினர் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கி, ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தின் பின் நிரந்தரமாக நீக்கலாம். வேறு தளங்களில் இதைக் காணக்கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

இங்கு தொடர்ந்து அர்யுன் அவர்களை பலர் சோத்துப்பாசல் என்று எழுதிக் கொண்டிருப்பதனையும் இனிமேல் நிறுத்த நிர்வாகம் விதியமைக்க வேண்டும். அர்யுனும் ஒரு முன்னாள் போராளிதான். அவரும் தாயகக்கனவோடுதான் ஆயுதம் தூக்கப்போனோர். அவரது தெரிவும் தலைமையும் தவறானது என்பதற்காக தொடர்ந்து சோத்துப்பாசல் துரோகி போன்ற அர்தத்தத்தில் சாடுவதையும் சாடுவோர் கவனித்து நிறுத்திக் கொள்வதே சக கருத்தாளனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.

நான் அவதானித்த வகையில் அர்ஜுன் இது போன்ற விமர்சனக்களுக்கு அப்பாற்பட்டு கருத்தாடக்கூடிய ஒருவர்.

அவரது கருத்துக்கள் பல pragmatic ஆக இருக்கும், என்றாலும் நமக்கு சிலவேளைகளில் உண்மையை ஒத்துக்கொள்ள தயக்கம் இருப்பது வழமை தானே.

வழிமொழிகிறேன்.

அதேவேளை அர்யுன் அவர்களும் சக உறவுகளை தீண்டுவது, நக்கல் அடிப்பது அதற்கும் மேலாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதாரமில்லாமல் கீழ்த்தரமாக விமர்சிப்பானவற்றையும் நிறுத்தவேண்டும்.

கீழ்த்தரமாக விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டியது தான். அதே நேரம், விமர்சனங்கள் தான் ஒருவரை வலுப்படுத்தும். பேச்சுரிமையின் முக்கியத்துவம் தான் மேலைத்தேய நாடுகளில் ஒரு விசேஷ அம்சம். அதை விட்டுத்தரக் கூடாது.

Link to comment
Share on other sites

நான் அவதானித்த வகையில் அர்ஜுன் இது போன்ற விமர்சனக்களுக்கு அப்பாற்பட்டு கருத்தாடக்கூடிய ஒருவர்.

அவரது கருத்துக்கள் பல pragmatic ஆக இருக்கும், என்றாலும் நமக்கு சிலவேளைகளில் உண்மையை ஒத்துக்கொள்ள தயக்கம் இருப்பது வழமை தானே.

இவரது கருத்துக்கள் pragmatic ஆக இருப்பதில்லை.

உதாரணத்திற்கு பல நல்ல முயற்சிகளை 'மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்' என வர்ணித்து வருவார். இன்னொரு உதாரணம் நாடுகடந்த அரசின் சபாநாயகரும் கனடாவின் பிரநிதியுமான பொன். பாலராஜனை நம்பி நீங்கள் பயணிப்பது ஏமாற்றம் தரும் என எழுதினார். எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கில் வசந்தம் அங்கு போய் பாருங்கள், இங்கிருந்து எழுதாதீர்கள் என்றார்.

Edited by akootha
Link to comment
Share on other sites

கீழ்த்தரமாக விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டியது தான். அதே நேரம், விமர்சனங்கள் தான் ஒருவரை வலுப்படுத்தும். பேச்சுரிமையின் முக்கியத்துவம் தான் மேலைத்தேய நாடுகளில் ஒரு விசேஷ அம்சம். அதை விட்டுத்தரக் கூடாது.

நிச்சயம் பேச்சு சுதந்திரத்தை தடுக்ககூடாது. அதேபோன்று அதை துஸ்பிரயோகமும் செய்யக்கூடாது :D

Link to comment
Share on other sites

இவரது கருத்துக்கள் pragmatic ஆக இருப்பதில்லை.

உதாரணத்திற்கு பல நல்ல முயற்சிகளை 'மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்' என வர்ணித்து வருவார். இன்னொரு உதாரணம் நாடுகடந்த அரசின் சபாநாயகரும் கனடாவின் பிரநிதியுமான பொன். பாலராஜனை நம்பி நீங்கள் பயணிப்பது ஏமாற்றம் தரும் என எழுதினார். எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கில் வசந்தம் அங்கு போய் பாருங்கள், இங்கிருந்து எழுதாதீர்கள் என்றார்.

அவரது எல்லாக் கருத்துக்களும் சரியென்று நான் சொல்ல வரவில்லை அகூதா.

Link to comment
Share on other sites

இப்படி எழுதும்போது ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=100098 )

இதையும் பாருங்கள் => "புதிய யாழ்ப்பாணம்"

முகப்பில் இப்படி காட்டுகின்றதே?

இதையும் பாருங்கள் => "புதிய யாழ்ப்பாணம்"

திருத்தம் செய்யமுடியாதா? இந்தப்பிரச்சனை நீண்டகாலமாக கடைசியாக யாழ் முகப்பு வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட காலத்திலிருந்து உள்ளது.

' ', "" ஆகியகுறியீடுககளை தலைப்பில் இட்டால் ஏன் " > என இவ்வாறு யாழ் முகப்பில் வருகின்றது? செய்தியோடையில் ஏதாவது தவறு உள்ளதா?

இதைமுன்பும் கேட்டுள்ளேன், திருத்தம் செய்யப்படவில்லை.

நன்றி!

Edited by கலைஞன்
Link to comment
Share on other sites

எனது யாழ் கருத்து கள முகப்பு பின்வருமாறு அமைகிறது .

yarl.jpg

நெடுக்க்ஸ் இது பற்றி முன்னரும் குறிபிட்டு இருந்தார். இப்படி இரண்டு இடத்தில் வருவதை தவிர்க்க முடியுமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே பகலவன் சுட்டிக்காட்டிய பிரச்சினை எனக்கும் உள்ளது..அத்துடன் எழுதும் தீமையும் மாற்ற முடியவில்லை..? :(

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.