Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மட்டுக்களுக்கு வாழ்த்துக்கள். ரதியின் கேள்வியிலும் (எப்பவும் போல) நியாயம் இருக்குத்தான்.

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணா அண்ணா மட்டுறுத்தினராக பதவி உயர்வுபெற்றதுக்கு வாழ்த்துக்கள். உங்கள் சேவை பாடபட்சமின்றி மிகவும் திறமையாக செயற்பட வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் உரித்தாகட்டும். :)

[size=3](ஒரு அப்பிராணிய போட்டுட்டாங்களே..... :lol:[/size][size=3] :lol:[/size][size=3] :icon_mrgreen:[/size][size=3] :icon_idea:[/size][size=3] )[/size]

Link to comment
Share on other sites

நுணா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் அப்புறம் யாருப்பா அது கல்யாணியோ நியாநியோ? ரொம்ப நியாயமா நடந்துக்கணும் சொல்லிப்புட்டன்.......

அப்புறம் யாழுக்காக உங்கள் நேரங்களை ஓதிக்கியதர்க்கு நன்றிகள் மட்டுவாக வாரத்திக்கு எதையும் தாங்கும் இதையம் வேண்டும் விமர்சனங்களை கண்டு துவண்டுவிடாமல் கடமையை நேர்வழியில் நின்று கடமை தவறாது உறவுகளை அனைத்து செல்லுங்கள்.... அப்புறம் வேற ஏன்னா? வெட்டு வாங்க நான் ரெடி வேட்டு வைக்க நீங்க ரெடியா ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மட்டுறுதினர்களாக வந்திருக்கும் நுணா,நியானி இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

மட்டுறுத்தினராக வர இருக்கும் நுணா அண்ணாவுக்கு என் வாழ்த்துகள். :) :) யார் நியானி என்று தெரியவில்லை. அவருக்கும் என் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

நுணாவிலானிற்கு பராட்டுக்கள்(இப்பவே பந்தம் பிடிச்சு வைப்பம் :lol: ) யாரது நியானி சயந்தனின் மகளாயிருக்குமோ??? :(

Link to comment
Share on other sites

யாழ்கள நிர்வாகத்தினரால் புதிய நிர்வாக மட்டுறுத்தினராக நியமனம் பெற்ற நுணாவிலான், மற்றும் நியானிஇருவருக்கும் இனிய வாழ்த்துக்கள் ..........இதன் மூலம் நிழலி,இணையவனின் பாரம் குறைக்கப்படுவது நிச்சயம் .......

இது இந்த களத்தை மேலும் மேலும் சிறந்த முறையில் கொண்டு செல்லும் என்பதும் திண்ணம் ......................

[size=1]யாரப்பா அந்த நியாணி ...................[/size] :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமைத்தம்பி நுணாவிலானுக்கும் நியானிக்கும் வாழ்த்துக்கள்.

நியானியை யாரென்று அறிய எல்லோருக்கும்ஆவலாகத்தான் இருக்கு. ஆனால் அதை மறைத்தத்தானே செய்கிறார்கள். ஒளித்து வருபவரை முகத்தைக்காட்டு என்று கேட்பது என்ன நியாயம். காலம் பதில் தரட்டும்.

தாயகம் சார்ந்து நல்ல முடிவுகளையே நிர்வாகம் எடுத்துவருவதால் எந்த குழப்பமும் இல்லை எனக்கு.

நன்றி நிர்வாகத்தினருக்கு. அதிலும் தம்பி நுணாவிலானின் தெரிவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரது நியானி சயந்தனின் மகளாயிருக்குமோ??? :(

யோவ் .. அது கஜானியப்பா..

Link to comment
Share on other sites

புதிய மட்டுறுத்தினர்களாக பதவியேற்றிருக்கும் நுணாவிலன் அண்ணாவிற்கும் நியானி அண்ணாவிற்கும் :) வாழ்த்துக்கள்...!

Edited by தமிழினி
Link to comment
Share on other sites

யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்,

நியானி என்ற பெயரில் மட்டுறுத்துனராக புதிதாக யாழில் இணைந்துள்ளேன். ஒரு கருத்துக்களையும் பதியாமல் மட்டுறுத்துனராக இணைந்ததையிட்டு சந்தேகங்கள், சங்கடங்கள், கேள்விகள் பலரிடமும் இருக்கலாம். எனவே ஒரு சிறு அறிமுகம்.

யாழுடன் எனக்கு பல வருடங்கள் பரிச்சயம் உண்டு. தாயகச் செய்திகளை அறிவதற்கு பல்வேறு இணையத் தளங்களிற்கு போகாமல் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி யாழில் உள்ளது என்பதும் செய்திகளுக்கு வரும் கருத்துக்கள் மூலம் கள உறவுகளின் சிந்தனை ஓட்டத்தை அறிய முடிவதும் பிடித்தமான விடயங்கள். தனியே செய்தித் தளமாகவும் , பொழுதுபோக்கு தளமாகவும் இயங்காமல் தமிழில் ஆர்வமாக எழுதக் கூடியவர்களை ஊக்குவித்து பல படைப்பாளிகளை உருவாக்கியுள்ளதும் யாழுக்கே மிகவும் தனித்துவமானது. இந்த நேரத்தில் யாழ் களத்தை பல சிரமங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் சிறப்பாக இயங்கச் செய்துவரும் யாழ்களப் பொறுப்பாளர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

யாழ் முரசத்தில் வந்துள்ள அறிவித்தலின் படி யாழ்கள பொறுப்பாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் சக கருத்துக்கள உறவு நுணாவிலானுடன் மட்டுறுத்துனராக செயற்பட சம்மதித்தேன். எனினும் அதிக சர்ச்சைகள் இல்லாமல் யாழ் களம் இயங்குவதால் மட்டுறுத்தல் வேலை எனக்கு குறைவாகவே இருக்கும் என நம்புகிறேன். யாழ் கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைய மட்டுறுத்தும் பணியில் ஈடுபட்டாலும் தவறுகள் ஏற்படலாம். அப்படி ஏதாவது பிழைகள் வந்தால் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி ஒத்துழைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நியானி - நியாயம், அநியாயம், ஞானம், அஞ்ஞானம் எல்லாம் கலந்த கலவை. அநியாயமும் ஞானமும் மிகவும் சொற்பமாக இருக்கும்.

நன்றி.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=109049&hl=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]தெளிந்தேன் ...........மிக்க மகிழ்ச்சி ..எல்லோரையும் போலவே எனக்கும் ஒரு குழப்பம் இருந்தது. பழைய உறுப்பினர் மட்டுறுத்தினராக தன் கடமையை செய்வதற்காக இப்புனைபெயரில் வரும் தங்களை வரவேற்கிறேன். [/size]

Link to comment
Share on other sites

மட்டுறுத்தினர்களாக பொறுப்பேற்றிருக்கும் நுணாவிற்கும், புதிய உறவு நியானிக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மட்டுக்களாக வேட்டுக்களை தீர்க்க வரும் அன்பிற்குரிய நுணாவிலானுக்கும்

நியானிக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா மட்டுறுத்தினர் ஆனதில் அளவற்ற மகிழ்ச்சி.. :) நியானி பற்றிய அறிமுகம் தந்தால் நல்லது.. :rolleyes: ஆனால் நியானி நியாயமான முறையில் நடப்பார் என்கிற நம்பிக்கையும் உள்ளது.. :lol:

எப்படி இவர் நியாயமாய் நடப்பார் என சொல்கிறீர்கள் இ.கலைஞன்?...இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?...அவர் யாராக இருந்தாலும் நீங்களோ,நானோ,கிருபனோ,சகாறா அக்காவோ சாதரணமாக யாழில் வருகின்ற பெயரில் வராமல் புதுப் பெயரில் மட்டூவாக வருவதற்கு என்ன காரணம்?...நிழலி யாழில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாளார் அப்படியிருந்தும் கூட நிழலி என்ட பெயரில் எழுதிக் கொண்டு அதே பெயரில் மட்டூவாக இருக்கிறார் நிழலியால் முடியும் என்டால் ஏன் இவரால் முடியாது?...இல்லை உண்மையிலேயே இவர் ஒரு புது உறுப்பினர் என்டால் எடுத்தவுடனேயே இவர் கருத்துக்கள் நியானி என்ட பெயரில் எழுதி இருக்கவுமில்லை அப்படி இருந்தும் எப்படி நிர்வாகம் இவரை மட்டூவாக நியமிக்கும்?[நிர்வாகத்திற்கு தெரிந்தவரா இவர்?]... ஒருவர் கருத்துக்களத்தில் எப்படி எழுதுகிறார் என்பதை வைத்து தானே அவரின் நம்பகத் தன்மையை வைத்து அவரை மட்டூவாக தேர்வு செய்ய முடிவு செய்வார்கள் ஆனால் இது என்ன புதுப் பழக்கம்?...நிழலியையோ,நுணாவையோ நாங்கள் மட்டூவாக வர‌ நாங்கள் ஆதரித்ததிற்கு கார‌ணம் அவர்களது கருத்துக்களை வைத்து அவர்கள் நேர்மையாக நட‌ப்பார்கள் என்பதால் தான் ஆனால் இவரை என்னால் மட்டூவாக ஏற்றுக் கொள்ள முடியாது அது யாராக இருந்தாலும் சரி... சகாறா அக்காவோ,சாஸ்திரி யாராக அந்தப் பெயரில் வந்தால் ஆதர‌வு இருக்கும்...எதற்கு எடுத்தாலும் ர‌தி குதர்க்கம் கதைக்கிறால் என நினைக்க வேண்டாம் நான் எனக்கு சரியெனப்பட்டதை சொல்கிறேன்...நிர்வாகம் இதற்கு தக்க பதில் சொல்ல வேண்டும்.

  • Like 3
Link to comment
Share on other sites

Posted Today, 03:33 PM

யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்,

நியானி என்ற பெயரில் மட்டுறுத்துனராக புதிதாக யாழில் இணைந்துள்ளேன். ஒரு கருத்துக்களையும் பதியாமல் மட்டுறுத்துனராக இணைந்ததையிட்டு சந்தேகங்கள், சங்கடங்கள், கேள்விகள் பலரிடமும் இருக்கலாம். எனவே ஒரு சிறு அறிமுகம்.

புதிதாக அதுவும் வரும் போதே மட்டுவாக வந்திருக்கிறீர்கள். நான் நினைக்கிறன் யாழ்கள வராலாற்றிலையே இதுதான் முதல் தடைவை இப்படி ஒரு மட்டுறுத்தனர் வானத்தில் இருந்து குதிப்பது. எனவே கருத்தாளர்களின் கண்கள் உங்களை ஒரு மட்டுறுத்தினராக பாக்காமல் எப்பொழுதும் ஒரு சந்தேகத்தோடையே பார்க்கும் என்பது உறுதி. இப்படித்தான் யாழில் யாழினி என்றொரு மட்டு சில கருத்துக்கள் எழுதி விட்டு மட்டிறுத்துனர் ஆகியிருந்தார். அவர் கனகாலம் தனது பணியை செய்யமுடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனாலும் நல்வரவாகுக

Edited by sathiri
Link to comment
Share on other sites

நியாயமான கருத்து ரதி. நியாயமாக நடக்க எத்தனித்திருந்தால் ஏன் இந்த இரட்டை வேடம்? இதிலிருந்தே இவரின் நம்பகத்தன்மையை சந்தேகப்பட வேண்டியுள்ளது. வேண்டுமானால், கருத்துக்களை வைப்பதற்குப் புதிய பெயரில் வந்திருக்கலாம். ஆனால், மட்டுறுத்துவதற்குப் புதிய பெயரைத் தேர்ந்தெடுத்தது சரியாகப் படவில்லை. மட்டுறுத்தினராக வரும் போதே முரண்படுகிறாரே.

  • Like 2
Link to comment
Share on other sites

புதிய மொந்தையில் பழைய கள்.

Link to comment
Share on other sites

பலர் நேரம் கிடைக்காமல் ஒதுங்கும் போது யாழ் களத்தில் இவர்களை போன்றவர்கள் சேவையாற்ற வருவது வரவேற்க தக்கது ஒரு மாட்டுவாக நிறைய நிறைய விமர்சனங்களை ஏச்சுக்களை கல் எரிதல்களை எல்லாம் நீங்கள் வாங்க வேண்டி வரும் அவற்றை எல்லாம் அறிந்தும் தெரிந்தும் தான் நீங்கள் வந்திருப்பிங்க என்டு நினைக்கிறன் முதலில் இந்த பதவியை ஏற்ற உங்களுக்கு என்னுடிய நன்றிகளும் பாராட்டுகளும் தயங்காமல் உங்களுக்கு யாழ் நிர்வாகம் அளித்திருக்கும் இந்த கௌரவமான பதவியை ஏற்று புதிய ஒரு புயலாக புறப்படுங்கள் இங்கு தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் யாழ் என்ற இணையம் என்றும் நிலைத்திருக்க வேண்டும்....

துணிந்து நில்லுங்கள் நன்றி

:D

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மட்டுறுனர்த்தினராக நியமிக்கப் பட்ட, நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள்.

நுணாவிலானுக்கு மட்டுறுத்தினாராவதற்குரிய... அத்தனை தகுதியும் உண்டு என்பதில், எவ்வித ஐயமுமில்லை.

ஆனால்.... ஒரு இரவில், மட்டுறுத்தினாராக வந்த நியானி, பல சங்கடங்களை... எதிர் நோக்க வேண்டி வரலாம்.

காலம் தான்... பதில் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் நியானி.computer-fight-smiley.gif?1292867574

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நுணாவை யாழ்கள மட்டுறுத்தினராக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் முந்தியொருக்கால் "எழுவான்" எண்டொரு ஆளும் ரீச்சர்வேலை பாக்க வந்தவர்......குடுத்த குடுவையிலை...வந்த வேகத்திலையே திரும்பி ஓடினவர். :lol:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள சிலருக்குத் தங்களை விட்டு விட்டு, புதுசு புதுசாக வருகின்ற ஆட்கள் மட்டறுத்தினர்களாக வருகின்றார்களே, அவர்களை நிர்வாகம் இணைக்கின்றதே என்ற வயிற்றெரிச்சல்... தான் இப்படிப் புலம்ப வைத்துக் கொண்டிருக்கின்றது...

யாழ்களம் என்றைக்குமே, இந்தத் தகுதி கொண்டவர்களைத் தான் மட்டறுத்தினராக நியமிக்கப்படுவார்கள் என விதி எழுதி வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு எவர்களைத் தகுதியாகத் தெரிகின்றதோ, அவர்களை நியமிக்கின்றார்கள். தவிரவும், அது அவர்களது விருப்பமும் ஆகும்.

இங்கே மட்டறுத்தினரை யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேறு யாருக்காவது அதிகாரம் உள்ளதா என்ன?? இந்த முந்திரிக் கொட்டைகளைச் சுவரில் வைத்து 4 சாத்து சாத்த வேண்டும்.

சகோதரனோ, சகோதரியோ தெரியாது, நியானி தன் பணியைச் சிறப்பாகச் செய்ய வாழ்த்துக்கள்.

சாத்திரி,

யாழினியைப் பற்றிச் சொல்கின்றீர்கள்? இராவணன் என்ன நிறையக் கருத்துக்கள் எழுதினவரா? ஆனால் அவர் கண்டதுண்டமாக கருத்துக்களை வெட்டி அழிக்கும்போது மௌனமாகத் தானே இருந்தார்கள்... அவ்வாறே சின்ன விடயத்துக்கே மோகன் அண்ணாவிடம் வாய்க்கு வாய் கேள்வி கேட்டவர்கள், அதை விட மோசமாக வலைஞன் நடந்து கொண்டபோது, பேசாமத் தானே இருந்தீர்கள். ஏன் என்றால் இராவணனும் சரி, வலைஞனும் சரி, இந்த முந்திரிக் கொட்டைகளைக் கண்டு கொண்டதில்லை.

நியானி, உங்களுக்குச் சரியானதாகத் தோன்றுவற்றைச் செய்யுங்கள். நீங்கள் உங்களை அறிமுகம் செய்த விதத்தில், ஒரு நெகிழ்வுத்தன்மை தெரிவதால் எல்லோரும் மடம் காட்ட முயற்சிக்கின்றார்கள்...

Edited by தூயவன்
Link to comment
Share on other sites

சூப்பர் சூப்பர் தூயவன் அண்ணா மட்டுசை நியமிக்கும் பொறுப்பு யாழ் கல நிர்வாகத்தின் முடிவு சார்ந்தது அப்பிடி தான் முதலில் பலரும் நியமிக்கப்பட்டார்கள் இராவணன் அண்ணா கருத்து எழுதினத நான் காணவே இல்லை ஒரே வெட்டு தான் இதனால் பாதிக்கப்போவது நானாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை யாழின் செயற்ப்பாடு தான் முக்கியம் சுண்டல் என்ற தனிமனிதன் கிடையாது இப்பிடியனவர்கள் நேரம் ஒதுக்கி வரதே பெரிய விஷயம் அவர்களுக்கு குடும்பம் வேலை என்று ஒன்றும் இல்லியா?

இதனால யாழ் களத்த விட்டு யாரு விளத்தினாலும் பருவாள்ள தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்புகளுக்கு யாழ் களத்தை நடத்த முடியாது......நியாணி நீங்கள் பயபிடாமல் களம் இறங்குங்கள் ஒரு நல்ல விஷயம் செய்ய போனால் நாலு பேர் எதிர்பாங்க அதுக்காக நிறுத்த முடியுமா?

அதுவும் வலைஞன் சொல்லி வேலை இல்லை வெட்டு ஒண்டு துண்டு ரெண்டு ஒரு பய பேசமாட்டான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6000 கருத்துக்கள் வரை எழுதியிருக்கின்றீர்கள் சுண்டல்.... ஆனால் இன்று வரை தமிழ்... உகும்....

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.