Jump to content

கிறீஸ் மனிதனைத் தேடி துப்பறியும் ஜாக்கிச்சான்..


Recommended Posts

கிறீஸ் மனிதனுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு.. ஒரே குழப்பம்… மேலும் கண்களைச் சுழற்றினார்

jaki2-flash.jpg

துப்பறியும் ஜாக்கிச்சானின் கண்ணாடி மேசையில் இருந்த ஐபோன் கண் சிமிட்டியது..

கிறீஸ் மனிதன் என்ற பெயர் அதில் மின்னி மறைந்தது.. ஜாக்கிச்சான் சிந்தித்தார்..

தனது சுங்கானை எடுத்து சிகரட் துகள்களை பொத்தி அடைந்துவிட்டு தீ மூட்டி புகையை இழுத்தார்… மனம் புகைக்குள் மறைய அங்கே ஒரு புலி தெரிந்தது..

கண்களை கூர்மையாக்கிப் பார்த்தார்… புலியேதான்..

கிறீஸ் மனிதனுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு.. ஒரே குழப்பம்… மேலும் கண்களைச் சுழற்றினார்…

அது புலிதான் ஆனால் பழைய தமிழ்நாடு வண்டலூர் செக்ஸ் புலி… பாவம் பரிதாபமாகப் படுத்திருந்தது..

அவசரமாக நூல் நிலையம் வந்து, தமிழ்நாடு வண்டலூரில் ஒரு புலி தப்பிவிட்டதாகவும் அது ஒரு செக்ஸ் புலியென்றும் பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் புரட்டிப் புரட்டி வாசித்தார்….

வண்டலூர் புலியை கிளப்பிவிட்டவர்கள் யாரென்று தெரிந்தது.. ஏனென்றும் தெரிந்தது.. வெளியே சொல்லாமல் சிரித்துக் கொண்டார்.. அரசியல்வாதி செக்ஸ்..ஐ வைத்துத்தான் பிழைப்பு நடாத்துவான் என்று வண்டலூர் புலி அழுதது.

அப்போது உர்ரென்று ஒரு சத்தம் கேட்டது..

ஒரு மனிதக்குரங்கு மார்பில் அடித்துக் கொண்டது.. கூர்ந்து பார்த்தார்.. அது டெல்லியில் சில காலம் உலாவி மக்களை அடித்தாகக் கூறப்பட்ட மனிதக்குரங்கு.. பா.ஜ.க ஆட்சியில் உலாவந்த அதே குரங்கு..

அவ்வளவுதானா…

மேலும் மேலும் பக்கங்களைப் புரட்டினார்… இங்கிலாந்தில் கரடி மனிதன், அமெரிக்காவின் ஓநாய் மனிதன்… பின் ஏலியன்ஸ் மனிதன் என்று பல பாத்திரங்கள் வந்து கண்ணீர் வடித்தன..

மனிதர்கள் மூடர்களாக இருக்கும்வரை இப்படியான வண்டலூர்புலிகள் வருவது தடுக்க முடியாது என்று சிலர் அடிக்குறிப்புக்கள் எழுதியிருந்ததையும் ஆங்காங்கு அவரால் வாசிக்க முடிந்தது..

இதற்குள் டென்மார்க் முகமது கேலிச்சித்திரம் வந்து ஒரு டிங்குக் கூத்தாடியது..

ஈராக்கிற்குள் அணு குண்டு தேடிப்போய் எதையும் எடுக்காதுபோன கூத்தாட்டத்தை மறைக்க வரையப்பட்ட ஓவியங்களா அது என்று மனிதக்குரங்கு கேட்டது.. முஸ்லீம்கள் எல்லாத்தையும் மறந்து எப்படிக் கூத்தாடினார்கள்…பார்த்தீர்களா என்று விரக்தியுடன் சிரித்தது..

வரேவா.. வண்டலூர் புலி கண்ணடித்தது.. ஆம்.. அது.. நம்ம தமிழ்நாட்டுச் செல்வங்களின் செக்ஸ் புலியல்லவா..

போதும்.. போதும்…

துப்பறியும் ஜாக்கிச்சான் புத்தக அலமாரியை மூடி வைத்தார்…

ஒரு பெக் விஸ்க்கியை ஊற்றிக் கொண்டார்… மூளையை அப்படியே உருட்டி விட்டார்…

இலங்கை முழுவதும் கிறீஸ் மனிதனின் அவலங்கள் அவருடைய காதுகளைச் செவிடாக்கின..

தொலைக்காட்சியைப் போட்டார்.. டான்.. அதுவும் ஒரு ரீவி.

மக்கள் வாளெடுத்து கிறீஸ் மனிதர்களை வெட்டத் தொடங்க சிறீலங்கா பாதுகாப்பு செயலர் கோட்டபாய மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று எச்சரிப்பது போகிறது..

தொலைக்காட்சியை அணைத்தார்..

ஊர்காவல் படையென்று ஊர்ஊராக பொது மக்களுக்கு துப்பாக்கி கொடுத்து, ஊர்காவற் படை அமைத்த பாதுகாப்பு செயலர் இப்போது ஏன் மக்களை ஊர் காவல் செய்யக்கூடாது என்கிறார்… கேள்விகள் காதைக் குடைந்தன..

மக்கள் ஆளும் வர்க்கத்தின் மீது கோபமடையத் தொடங்கினால் அதை மறைக்க குரங்கு மனிதன், வண்டலூர்புலி, முகமது கேலிச்சித்திரம் போன்ற கூத்தாட்டங்கள் அவசியம் என்று செத்துப்போன பேராசிரியர் ஒருவர் எழுதிவைத்த கிரந்தம் நினைவுக்கு வந்தது..

சரி இப்போது இலங்கையில் கிறீஸ் மனிதனை யாரோ கிளப்பிவிட என்ன தேவை வந்தது..

டடங் டிங்.. டட்டடிங்..

சனல் – 4 கண் முன் வந்தது.. அதன் பின் அமெரிக்காவின் எச்சரிக்கை வந்தது.. ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வந்தது.. சிறீலங்கா மேல் அமெரிக்க விமானங்கள் பறந்தன..

மக்கள் சனல் 4 பற்றி பேச ஆரம்பித்தார்கள்… பழைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரே சிங்களவராக பிறந்ததற்காக வெட்கப்படுவதாக தெரிவித்த செய்தி வருகிறது..

மக்கள் குழம்புவது தெரிகிறது..

வந்து குதித்தான் கிறீஸ் மனிதன்..

இப்போது மக்கள் எல்லாவற்றையும் மறந்து கிறீஸ் மனிதன் என்று பேச ஆரம்பிக்கிறார்கள்… ஏன்.. ? ஜாக்கிச்சானின் மூளை வேலை செய்தது.. மெல்லச் சிரித்துக் கொண்டார்.

அப்போது கொழும்பு சிலிங்கோ கவுஸில் இருந்து ஒருவர் தொலைபேசியில் இந்தியாவுக்கு பேசுவது கேட்டது..

நாங்கள் ஒரே நொடியில் கவனத்தை திசை திருப்பிவிட்டோம்… சீன மூளை நமக்கு உதவிவிட்டது… நம்ம கேஸ்தான் நீங்களும்.. என்ன செய்யப்போகிறீர்கள்.. என்று கேலி செய்தது..

புலிகள் இருந்திருந்தால் அவர்களின் தலையில் போட்டிருக்கலாம் என்று தமிழக அமைச்சர் ஒருவர் அழுதார்..

அத்தருணம்..

அருகில் இருந்த 24 மணி நேர தமிழ் றேடியோ முழங்கியது.. பேரறிவாளன் உட்பட மூவருடைய கருணை மனுக்களை நிராகரித்தார் இந்திய ஜனாதிபதி என்று முழங்கியது..

பழ. நெடுமாறன், வை.கோபாலசாமி, சீமான், டாக்டர் ராமதாஸ், தொல். திருமாவளவன் என்னும் தமிழ் தெய்வங்கள் சனல் 4 ஐ மறந்து போராட்டத்தில் குதிக்க ஆயுத்தமவதாக முழங்கியது..

இதுவரை குற்றவாளிக் கூண்டில் இருந்த இரு அரசுகளும் அப்பம் நிறுக்கும் குரங்குகளின் இடத்திற்கு வந்துவிட்டமை தெரிந்தது. அவர்களை குற்றம் சுமத்திய அனைவரும் இப்போது அவர்களிடமே நீதி கேட்க ஓடுவதும் தெரிந்தது..

இனி பழைய குரங்குகள் இரண்டும் அப்பம் நிறுக்கப் போகின்றன..

ஜாக்கிச்சான் சுங்கானை அணைத்தார்…

2009 மே 17ம் திகதி இரவு 11.00 மணிக்கு நடந்தது என்ன.. சனல் 4க்கு போன் செய்து கேட்கிறார்..

அடுத்த ஒளிபரப்புக்கு காத்திருப்பதாக தெரிவித்தார்… அதுவரை..

பொழுது போகவில்லை…

அருகில் நின்ற பூனைக்குட்டியை பிடித்து அதனுடைய முடியைச் சிரைக்க ஆரம்பித்தார்…

யாவும் கற்பனை

உங்கள் துப்பறியும் ஜாக்கிச்சான்.. 14.08.2011

-அலைகளிலிருந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறீஸ் மனிதனுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு.. ஒரே குழப்பம்… மேலும் கண்களைச் சுழற்றினார்

-----

அப்போது கொழும்பு சிலிங்கோ கவுஸில் இருந்து ஒருவர் தொலைபேசியில் இந்தியாவுக்கு பேசுவது கேட்டது..

நாங்கள் ஒரே நொடியில் கவனத்தை திசை திருப்பிவிட்டோம்… சீன மூளை நமக்கு உதவிவிட்டது… நம்ம கேஸ்தான் நீங்களும்.. என்ன செய்யப்போகிறீர்கள்.. என்று கேலி செய்தது..

புலிகள் இருந்திருந்தால் அவர்களின் தலையில் போட்டிருக்கலாம் என்று தமிழக அமைச்சர் ஒருவர் அழுதார்..

-----

உண்மை தான், புலிகள் இருந்திருந்தால் எத்தனையோ... பிரச்சினைகளை அவர்களின் தலையில் போட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

உண்மை தான், புலிகள் இருந்திருந்தால் எத்தனையோ... பிரச்சினைகளை அவர்களின் தலையில் போட்டிருக்கலாம்.

ஒரு புலி(ளி)யாவது திரும்ப வராதா என்று சிங்களவன் தான் ரொம்ப ஏங்கிப் போய் இருக்கிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லை ஆனால் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்க‌ளின் செயலாம் இது என்று இராணுவத்தினர் சொல்லுகிறார்கள்,,,

Link to comment
Share on other sites

அருகில் நின்ற பூனைக்குட்டியை பிடித்து அதனுடைய முடியைச் சிரைக்க ஆரம்பித்தார்…

புலியில்லாததால இப்ப இதுதான் நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த துப்பறியும் ஜாக்கிஜான் நான் தான் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

புலிகள் இல்லாமல் இப்ப அரசியல்வாதிகள் பலரும் அரசியல் காமடிபண்ணமுடியாமல் தவிச்சிட்டிருக்காங்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.