Jump to content

'விடுதலைக்கு விலங்கு’ - அவர்கள் காட்டியது தனு அல்ல.. அனுஜா!


Recommended Posts

'விடுதலைக்கு விலங்கு’ - அவர்கள் காட்டியது தனு அல்ல.. அனுஜா!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், 'விடுதலைக்கு விலங்கு’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதிர​வைக்கும் தகவல்கள் இருக்கும் அந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் மட்டும் இங்கே!

நான் ராபர்ட் பயஸ்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தி கொலை வழக்கில் பிணைக்கப்பட்டு... இன்ற​ளவும் 'ஏன், எதற்கு, எப்படி?’ என்று பல விதமான கேள்விகளோடு நாட்களை நகர்த்திவரும் ஆயுள் தண்டனைக் கைதி!

இலங்கை வந்த இந்திய அமைதிப்​ படையால் எனது வீடு தாக்கப்பட்டது. அதில் எனது குழந்தையை பறிகொடுத்தேன். இந்த நிலையில் 20. 09.1990 அன்று நானும் ஓர் அகதியாக, எம் உதிரத்தோடு உறவுடைய ஆறு கோடித் தமிழர்கள் வாழும் தமிழகத்தின் இராமேசுவரம் கடற்கரையில் காலடி வைத்தேன். இராசீவ் கொலை வழக்கில் நான் பிணைக்கப்பட்டதற்குக் காரணமாக அவர்கள் சொன்னது, உள்நோக்க சம்பவமாக அடையாளம் காட்டியது, இந்திய அமைதிப் படையால் கொலை செய்யப்பட்ட என் குழந்தையின் மரணத்தைத்தான்.

10. 06. 1991. இந்த நாளை என்னால் உயிர் உள்ளவரை மறக்க இயலாது. நான் கடைத்தெருவுக்குச் சென்றுவிட்டு, சென்னைப் போரூரில் வாடகைக்கு எடுத்துக் குடியிருந்த வீட்டிற்குத் திரும்பிக்கொண்டு இருந்தேன். அருகில் இருந்த மளிகைக் கடைக்காரர் பாண்டியன் என்பவர், என்வீட்டிற்கு காவல் துறையினர் வந்திருக்கிறார்கள் எனக் கூறினார்.

நான் உண்மையான குற்றவாளியாக இருந்திருந்தால், அக்கணமே தப்பித்து ஓடி இருக்க முடியும். ஆனால், எதையுமே எதிர்பார்க்காமல், எதிர்வரும் கேடுகளை அறியாமல், என் வீட்டிற்குச் சென்றேன். அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு என்னையும், என் மனைவியையும், எனக்கு இரண்டாவதாகப் பிறந்த 3 மாத குழந்தையையும், என் உடன் பிறந்த சகோதரியையும், விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவதாக 'மல்லிகை’ அலுவலகத்துக்கு சி.பி.ஐ. ஆய்வாளர்கள் அழைத்துச் சென்றார்கள். தாங்கள் சொல்வதை, சில சமயங்களில் அவர்கள் நினைப்பதைக்கூட உண்மை என நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். எழுதிக் கொண்டார்கள்.

புலனாய்வுத் துறையினர் தங்களது வலுவான சாட்சியாக, பொட்டு அம்மானுக்கு சிவராசன் அனுப்பியதாகக் கூறப்படும் ஒயர்லெசு செய்தியைச் சொல்கிறார்கள். அதில், 'இராசீவ் காந்தி கொலை குறித்த திட்டம் மூவருக்கு (அதாவது சிவராசன், சுபா, தனு) மட்டுமே தெரியும்’ என திட்டவட்டமாகக் கூறியுள்ளதாக இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது. எனவே, இந்த ஒயர்லெசு செய்தியைவைத்து நாம் பார்க்கும்போது, சதி திட்டம் குறித்து சிவராசன், சுபா, தனு இம்மூன்று நபர்களைத் தவிர எவருக்கும் தெரியாது என மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு இருப்பதால், அக்கால கட்டத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட எங்களது எந்த ஒரு செயலையும் இராசீவ் காந்தி கொலைக்குக் காரணமான சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்த்திருக்கக் கூடாது.

எனக்கு எதிரான இவ்வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி 195 ஆக விசாரிக்கப்பட்ட பெர்னாண்டசு மிக முக்கியமானவர். இவர் ஒரு பல் மருத்துவர். அவரது மருத்துவமனைக்கு நான் முருகனை அழைத்துச் சென்று, முருகனுக்கு பல் பிடுங்கியதாகவும், என் மகனே அவரது மருத்துவமனையில்தான் பிறந்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார். பல் மருத்துவர் பிரசவம் பார்த்த கதையைப் புலனாய்வுத் துறை ஜோடித்தது. என் மகன் மேற்கண்ட மருத்துவமனையில் பிறக்கவில்லை. சேத்துப்பட்டில் உள்ள மேத்தா நர்ஸிங் ஹோமில்தான் பிறந்தான் என்பதற்கான பிறப்புச் சான்றை நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்.

தடா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும்போது இந்த பல் மருத்துவரைக் குறுக்கு விசாரணை செய்தபோது, முருகனுக்கு ஏதாவது பல் பிடுங்கப்பட்டு இருக்கிறதா? என்ற கேள்விக்கு இவர் இல்லை எனப் பதில் அளித்தார்.

இந்த மருத்துவர்தான் இராசீவ் காந்தி கொலையான மறுநாளில் நான் இனிப்பு வழங்கி, வெடி வெடித்துக் கொண்டாடியதாக சாட்சியம் அளித்துள்ளார்.

ஓர் இரகசிய அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்து, அந்த அமைப்பின் இரகசியக் கட்டளை ஒன்றினை நிறைவேற்றும் எவரும் இப்படிப்பட்ட வெளிப்படையான வேடிக்கையான காரியங்களில் ஈடுபடுவார்களா? இதுபோன்ற வலுவற்ற பொய் சாட்சியங்களை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது என்பது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்த நிகழ்வாகும்.

இந்த வழக்கில் இராசீவ் காந்தியைக் கொன்றதாகக் கூறப்படும் தனுவினை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என்று காட்ட புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் மிகக் கவனமாக ஆராயத்தக்கவையாகும். அரசுத் தரப்பில், தனுவின் முந்தைய புகைப்படமாக காட்டப்பட்ட படத்தில் உள்ள ஒரு பெண் புலிக் கொடி ஏந்தி வருவதுபோன்ற தோற்றத்தில் காட்சி அளிப்பது தனுதான் என அரசுத் தரப்பு தெரிவித்தது. அரசுத் தரப்பு தாக்கல் செய்த புகைப்படத்தில் இருக்கும் பெண் தனு அல்ல அனுஜா என்ற போராளி எனப் பல தகவல்கள் வெளியாயின.

நான் ஓட்டுநர் உரிமம் வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்பட்ட மகேசுவரன் என்ற கீர்த்தி பெங்களூரில் சிவராசனைப் பிடிக்கக் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தபோது சிவராசனோடு தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது ஆனால், மேற்கண்ட மகேசுவரன் இச்சம்பவத்துக்குப் பிறகும் ஈழத்தில் உயிரோடு இருந்ததாகத் தகவல்கள் வெளியாயின. இதுபோன்ற பல காரணிகளைப் புலனாய்வுத் துறையினர் அக்கறை எடுத்து விசாரிக்கவில்லை.''

- இவ்வாறு ராபர்ட் பயஸ் தனது புத்தகத்தில் எழுதி உள்ளார்!

மூலம்: ஜூனியர் விகடன் - ஆவணி 17, 2011

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.