Jump to content

தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா?


Recommended Posts

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்கிறதா? இந்தியா தலையிடாது. தமிழர்கள் மலேஷியாவில் அடிவாங்குகிறார்களா? பரவாயில்லை, இந்தியா அதிலும் தலையிடாது. தமிழக ஆட்சியாளர்களை பிற நாட்டினர் விமர்சிக்கிறார்களா? அதைப்பற்றியும் இந்தியாவுக்குக் கவலையில்லை.

இப்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு விமர்சிப்பதையும் இந்தியா கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உண்மையிலேயே, தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா என்ற சந்தேகத்தை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தங்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி ஆவணங்களை வெளியிட்டது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

உலக நாடுகள் இலங்கை அரசைக் கண்டித்த போதும், பக்கத்து நாடான இந்தியா சேனல் 4 ஆவணங்களைக் கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில் இலங்கை அரசைக் காப்பாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டது.

ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அதில், ‘‘இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தமிழர்கள் மீள்குடியமர்த்தப்படும் வரை இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

இந்தியா தனக்கு ஆதரவு தரும்போது, இந்தியாவில் ஒரு மாநிலமான தமிழ்நாடு தனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது இலங்கை அரசுக்கு எரிச்சலைக் கிளப்பியது. அதைத்தான் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார்.

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கோத்தபய, ‘‘ஜெயலலிதா தனது அரசியல் ஆதாயத்துக்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார். அவர் ஏதாவது செய்ய நினைத்தால் கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தடுத்து நிறுத்தட்டும். அதை விடுத்து போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை என்றெல்லாம் அவர் பேச வேண்டாம்’’ என்று கோபமாகப் பேசியிருந்தார். கூடவே தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை ‘அர்த்தமற்ற தீர்மானங்கள்’ என்றும் கிண்டல் செய்திருந்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை ஒரு நாடு கேலி செய்வதோ, விமர்சிப்பதோ கண்டனத்துக்குரியது என தமிழகத் தலைவர்கள் கொந்தளித் துப் போனார்கள். ஆனால், கோத்தபய ராஜபக்ஷேவின் பேட்டி வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையிலும், மத்திய அரசு சிறு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை.

சட்டமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றமே கருத்துத் தெரிவிக்கத் தயங்கும் நிலையில், இன்னொரு நாடு அதைக் கேலி செய்வதை இந்தியா எப்படி அனுமதிக்கலாம்? என் றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கும் விடை, ராஜபக்ஷேவின் பேட்டியிலேயே இருக்கிறது. இனப்படுகொலை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு, ‘‘இந்திய அரசு எங்களுக்கு எல்லாமாக இருந்து உதவி செய்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார் கோத்தபய.

இந்திய அரசு இறையாண்மையுள்ள ஒரு நாடு. அந்நாட்டில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை கேள்வி கேட்பது இந்திய இறையாண்மையைக் கேள்வி கேட்பதுபோல் ஆகாதா? என்று கொந்தளிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.

மத்திய அரசின் அமைதியை கேள்வி கேட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, கோத்தபய ராஜபக்ஷேவுக்கு தன்னுடைய பதிலை அழுத்தமாகவே தெரிவித்துள்ளார். ‘‘எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு கோத்தபய எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கச்சத்தீவு பகுதிகளில் வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம் என்கிற இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை அவருக்கு நினைவுபடுத்துகிறேன்’’ என்று கோபமாக பதிலளித்துள்ள அவர், ‘‘சாத்தான் வேதம் ஓத வேண்டாம்’’ என்றும் எச்சரித்துள்ளார்.

‘‘சட்டமன்றத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததுதான், கோத்தபய இப்படி ஒரு துணிச்சலான பேட்டியை அளிக்கக் காரணமாகி விட்டது’’ என்ற ம த்திய அரசு மீதான தன் கோபத்தையும் காட்டமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாட்டுக் குரல் இந்திய அரசுக்கு ஒருபோதும் கேட்காது என்ற உண்மை இன்னுமா இலங்கைக்குத் தெரியாமல் போய்விடும் என்பதுதான் தமிழர்களின் ஆதங்கமாகவும் இருக்கிறது.

‘‘தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் இலங்கை அரசுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையே கோத்தபய ராஜபக்ஷேவின் பேச்சு காட்டுகிறது’’ என்று கூறுகிறார் சீமான். ‘‘தமிழக சட்டமன்றத் தீர்மானங்களால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்று கோத்தபய கூறியிருக்கிறார். இந்தத் தீர்மானத்தின் விளைவாகத்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்புச் செயலராக இருப்பதோடு, அமெரிக்க பிரஜையாகவும் இருக்கும் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனாலும் மறைக்கப் பார்க்கிறார்’’ என்று சொன்னார் சீமான்.

‘‘இலங்கைக்கு மத்திய அரசு சிறு எதிர்ப்புகூட தெரிவிக்கவில்லையே?’’ என்ற கேள்விக்கு, ‘‘கோத்தபய பேட்டியில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. பன்னாட்டு விசாரணைக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் நாடுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை இலங்கை விமர்சித்த போதும் இந்தியா அமைதியாக இருப்பதற்கு இதுதான் காரணம்’’ என்கிறார் சீமான்.

‘‘டெல்லியில் இருக்கும் இலங்கைத் தூதரை அழைத்து தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்’’ என்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் வேண்டுகோளாகவும் இருக்கிறது.

தமிழர்களுக்கும் நான்தான் பிரதமர், தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது என்பதை பிரதமர் தமிழர்களுக்குத் தெளிவுபடுத்துவாரா?

Thanks to kumudam reporter

to see the picture of this new...

http://www.thedipaar.com/news/news.php?id=32649

Link to comment
Share on other sites

  • 1 year later...

[size=5]தமிழ் நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் இல்லை என்ற வகையில் தான் ஹிந்திய காட்டுமிராண்டி அரசு நடந்து கொள்கிறது![/size]

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.