Jump to content

தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா?


Recommended Posts

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்கிறதா? இந்தியா தலையிடாது. தமிழர்கள் மலேஷியாவில் அடிவாங்குகிறார்களா? பரவாயில்லை, இந்தியா அதிலும் தலையிடாது. தமிழக ஆட்சியாளர்களை பிற நாட்டினர் விமர்சிக்கிறார்களா? அதைப்பற்றியும் இந்தியாவுக்குக் கவலையில்லை.

இப்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு விமர்சிப்பதையும் இந்தியா கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உண்மையிலேயே, தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா என்ற சந்தேகத்தை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தங்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி ஆவணங்களை வெளியிட்டது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

உலக நாடுகள் இலங்கை அரசைக் கண்டித்த போதும், பக்கத்து நாடான இந்தியா சேனல் 4 ஆவணங்களைக் கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில் இலங்கை அரசைக் காப்பாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டது.

ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அதில், ‘‘இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தமிழர்கள் மீள்குடியமர்த்தப்படும் வரை இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

இந்தியா தனக்கு ஆதரவு தரும்போது, இந்தியாவில் ஒரு மாநிலமான தமிழ்நாடு தனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது இலங்கை அரசுக்கு எரிச்சலைக் கிளப்பியது. அதைத்தான் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார்.

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கோத்தபய, ‘‘ஜெயலலிதா தனது அரசியல் ஆதாயத்துக்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார். அவர் ஏதாவது செய்ய நினைத்தால் கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தடுத்து நிறுத்தட்டும். அதை விடுத்து போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை என்றெல்லாம் அவர் பேச வேண்டாம்’’ என்று கோபமாகப் பேசியிருந்தார். கூடவே தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை ‘அர்த்தமற்ற தீர்மானங்கள்’ என்றும் கிண்டல் செய்திருந்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை ஒரு நாடு கேலி செய்வதோ, விமர்சிப்பதோ கண்டனத்துக்குரியது என தமிழகத் தலைவர்கள் கொந்தளித் துப் போனார்கள். ஆனால், கோத்தபய ராஜபக்ஷேவின் பேட்டி வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையிலும், மத்திய அரசு சிறு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை.

சட்டமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றமே கருத்துத் தெரிவிக்கத் தயங்கும் நிலையில், இன்னொரு நாடு அதைக் கேலி செய்வதை இந்தியா எப்படி அனுமதிக்கலாம்? என் றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கும் விடை, ராஜபக்ஷேவின் பேட்டியிலேயே இருக்கிறது. இனப்படுகொலை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு, ‘‘இந்திய அரசு எங்களுக்கு எல்லாமாக இருந்து உதவி செய்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார் கோத்தபய.

இந்திய அரசு இறையாண்மையுள்ள ஒரு நாடு. அந்நாட்டில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை கேள்வி கேட்பது இந்திய இறையாண்மையைக் கேள்வி கேட்பதுபோல் ஆகாதா? என்று கொந்தளிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.

மத்திய அரசின் அமைதியை கேள்வி கேட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, கோத்தபய ராஜபக்ஷேவுக்கு தன்னுடைய பதிலை அழுத்தமாகவே தெரிவித்துள்ளார். ‘‘எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு கோத்தபய எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கச்சத்தீவு பகுதிகளில் வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம் என்கிற இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை அவருக்கு நினைவுபடுத்துகிறேன்’’ என்று கோபமாக பதிலளித்துள்ள அவர், ‘‘சாத்தான் வேதம் ஓத வேண்டாம்’’ என்றும் எச்சரித்துள்ளார்.

‘‘சட்டமன்றத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததுதான், கோத்தபய இப்படி ஒரு துணிச்சலான பேட்டியை அளிக்கக் காரணமாகி விட்டது’’ என்ற ம த்திய அரசு மீதான தன் கோபத்தையும் காட்டமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாட்டுக் குரல் இந்திய அரசுக்கு ஒருபோதும் கேட்காது என்ற உண்மை இன்னுமா இலங்கைக்குத் தெரியாமல் போய்விடும் என்பதுதான் தமிழர்களின் ஆதங்கமாகவும் இருக்கிறது.

‘‘தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் இலங்கை அரசுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையே கோத்தபய ராஜபக்ஷேவின் பேச்சு காட்டுகிறது’’ என்று கூறுகிறார் சீமான். ‘‘தமிழக சட்டமன்றத் தீர்மானங்களால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்று கோத்தபய கூறியிருக்கிறார். இந்தத் தீர்மானத்தின் விளைவாகத்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்புச் செயலராக இருப்பதோடு, அமெரிக்க பிரஜையாகவும் இருக்கும் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனாலும் மறைக்கப் பார்க்கிறார்’’ என்று சொன்னார் சீமான்.

‘‘இலங்கைக்கு மத்திய அரசு சிறு எதிர்ப்புகூட தெரிவிக்கவில்லையே?’’ என்ற கேள்விக்கு, ‘‘கோத்தபய பேட்டியில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. பன்னாட்டு விசாரணைக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் நாடுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை இலங்கை விமர்சித்த போதும் இந்தியா அமைதியாக இருப்பதற்கு இதுதான் காரணம்’’ என்கிறார் சீமான்.

‘‘டெல்லியில் இருக்கும் இலங்கைத் தூதரை அழைத்து தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்’’ என்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் வேண்டுகோளாகவும் இருக்கிறது.

தமிழர்களுக்கும் நான்தான் பிரதமர், தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது என்பதை பிரதமர் தமிழர்களுக்குத் தெளிவுபடுத்துவாரா?

Thanks to kumudam reporter

to see the picture of this new...

http://www.thedipaar.com/news/news.php?id=32649

Link to comment
Share on other sites

  • 1 year later...

[size=5]தமிழ் நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் இல்லை என்ற வகையில் தான் ஹிந்திய காட்டுமிராண்டி அரசு நடந்து கொள்கிறது![/size]

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.