Jump to content

"மஹிந்த சிந்தனை' யிலிருந்து வெளியே வர மஹிந்தர் தயாரா?


Recommended Posts

அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய்வதற்காக நோர்வே அனுசரணைக்குழுவின் பொறுப்பாளரும், அந்த நாட்டு அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம் நாளைமறுதினம் கொழும்பு வருகின்றார்.

சொல்ஹெய்முக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் இடையில் வன்னியில் நடைபெறக்கூடிய உத்தேச சந்திப்பின்போது தலைவர் பிரபாகரனுக்கு உதவுவதற்காக புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் அதேநாள் அதா வது நாளைமறுதினம் இலங்கை வருகின்றார்.

இந்த இருவரின் வருகையையும் ஒட்டி அமைதி முயற்சிகளில் நல்ல திருப்பம் கிட்டும் என்றும்

சமாதான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை முறியடிக்கும் திடீர் நகர்வு இந்த வருகையை ஒட்டி ஏற்படும் என்றும்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட் டிருக்கின்றார். இது பற்றிய தகவலை அவரின் சார்பில் அவரது அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் நிமால் ஸ்ரீபால டி சில்வா வெளி யிட்டுள்ளார்.

இதேசமயம், தம்மை சந்திக்கும் அரசியல் பிரமுகர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு விடயத்தைத் திரும்பத்திரும்பக் கூறிவருகின்றார். அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இரண்டு தடவைகள் சந்தித்த போதும் அந்தக்கருத்தையே அவர் கூறியிருந்தார்.

""வன்னிக்குச் சென்றும் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்'' என்பதுதான் அந்தத் தக வலாகும்.

இலங்கைத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புலி களின் தலைவர் பிரபாகரனும் நேரடியாகப் பேசவேண்டும் என்று தற் போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரிஸ் புரட்சிகர இராணுவத்தின் முன்னாள் போராளி யுமான மார்டின் மெக்கினாஸும் கூடத் தெரிவித்திருக்கிறார்.

அனுசரணையாளர்கள் மற்றும் மதியுரைஞரின் வருகைகளி னாலும் அல்லது உயர் தலைவர்கள் மட்டத்தில் நடைபெறக்கூடிய நேரடியான சந்தப்புக்களினாலோ மட்டும் தீர்வுக்கு வழி பிறந்து விடும் என்று கருதுவதும், கூறுவதும் வெறும் அபத்தமாகும்.

ஏதோ உயர்மட்ட அனுசரணையாளர்கள் வராததாலும் உயர்தலைவர்கள் நேரில் சந்திக்காததாலும்தான் தீர்வு முயற்சி முன்நக ராமல் தேங்கிக் கிடக்கின்றது என்ற அர்த்தத்தையே இக்கருத்துகள் தரும்.

தீர்வு முயற்சி முன்நகர வேண்டுமானால், அதற்கு முதலில் உரிய சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும்; தீர்வு காணும் நோக்கம் உண்மையாக இதய சுத்தியாக தங்களுக்கு உள்ளது என்பதை வெளிப் படுத்தும் விதத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் செயற்பாடுகள் அமையவேண்டும்.

ஆனால், அத்தகைய நிலைமையோ, வெளிப்படுத்தல்களோ தமிழர் தாயகத்தில் தோற்றவே இல்லை என்பதுதான் மெய்மை நிலையாகும்.

ஒரு பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தின் கொடூரப் பிடிக்குள் சிக்குண்டு தமிழ் மக்கள் அல்லல்பட்டு, அந்தரித்துக்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சமயத்தில் அமைதி முயற்சிகள் முன்நகரும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசுத்தரப்பும் வெளியிடுகின்றமை, அந்த நம்பிக்கை வெறும் பகல் கனவே என்ற எண்ணத்தையே தமிழர் தரப்புக்கு தருகின்றது.

ஈழத்தமிழ் மக்கள் தமது போராட்ட இலட்சியத்தை அடையும் அணுகுமுறை குறித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிய வரலாற்றுத் திருப்பு முனையில் உள்ளனர் என்பதை தமது கடந்த மாவீரர் தின உரையில் வெளிப்படுத்திய தலைவர் பிரபாகரன், ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப் பட்ட சிந்தனைகளை ஆழமாக அலசிப்பார்க்கும்போது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையின் அடிப்படைகளையோ, அதன்மூலக் கோட்பாடுகளையோ அவர் புரிந்துகொண்டார் எனத்தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

கொள்கை ரீதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமி ழர்களின் அபிலாஷைகளுக்கும் உள்ள இடைவெளி மிகப்பெரியது. எனினும், அவர் (ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ) சமாதான வழி முறையை எவ்விதம் கையாளப்போகின்றார் என்பதையும் தமிழ் மக் களுக்கு எவ்விதம் நீதி வழங்கப்போகின்றார் என்பதையும் முதலில் அறிந்துகொள்வது அவசியம் என்று குறிப்பிட்ட தலைவர் பிரபா கரன், அதற்காக அவர் (ஜனாதிபதி மஹிந்த) மேற்கொள்ளும் நட வடிக்கைகளைச் சிறிது காலம் பொறுத்திருந்து பார்ப்பதற்குத் தாங் கள் (விடுதலைப் புலிகள்) முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை யும் தெளிவுபடுத்தியிருந்தார்.

அந்தப் பொறுத்திருந்து பார்க்கும் இடைவெளிக்குள் மேற்கொள்ளப்படும் அரசியல் நகர்வே இப்பொழுது இடம்பெறுகின்றது என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசுத்தரப் பும் புரிந்துகொள்வது நல்லது.

தென்னிலங்கை சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகளையும் மேலாண்மைப்போக்கு உணர்வுகளையும் தூண்டிவிட்டு அதன்மூலம் இனவாதத்தைக் கிளப்பி, அந்த எழுச்சியில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டு வெற்றியீட்டும் இலக்கிலேயே தமது தேர்தல் விஞ்ஞாபனமாக மஹிந்த சிந்தனையை மஹிந்தர் முன்வைத்தார்.

தலைவர் பிரபாகரன் தெட்டத்தெளிவாகச் சுட்டிக்காட்டியிருப்பதுபோல "மஹிந்த சிந்தனை' க்கும் தமிழர்களின் நியாயமான அபிலாஷை களுக்கும் இடையில் இட்டு நிரப்பமுடியாத பெரிய வெளி உண்டு.

அதை நிரப்புவதாயின் தமிழர்களின் நியாயமான அபிலாஷை களை நிறைவுசெய்யக்கூடிய ஒரு நிரந்தர, நீடித்து நிற்கக் கூடிய, நிலையான தீர்வை எட்டுவதாயின் பேரினவாத சட்டகத் துக்குள் அமைந்த "மஹிந்த சிந்தனை'யிலிருந்து ஜனாதிபதி மஹிந்த வெளிவரவேண்டும்.

அதைவிடுத்து, சொல்ஹெய்ம், மதியுரைஞர் பாலசிங்கம் போன் றோர் இலங்கை வருவதனாலேயோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைவர் பிரபாகரன் நேரில் சந்திப்பதாலேயொ தீர்வு வந்துவிடாது.

ஆகவே, பிரமுகர்களின் வருகைகள், விஜயங்களைக் காட்டி, அதன்மூலம் திருப்புமுனை ஏற்படும் என நம்பிக்கையை வெளி யிட்டு, மக்களை ஏமாற்றுவதை விடுத்து

"மஹிந்த சிந்தனை' போன்ற மேலாண்மைப்போக்குக் கொள்கைகளிலிருந்து வெளிவந்து, தமிழர்களுக்கு நீதி வழங்கும் நியாயப்போக்குக்குத் தாங்கள் தயாரா என்பதை அரசுத்தரப்பு அறிவிப்பதே பொருத்தமானது. அப்படியான உண்மை மனமாற்றம் நீதியின் பாலான எண்ணக்கரு தென்னிலங்கைச் சிங்களத்தலைமைகளின் அடிப்படைப்போக்கில் கருக்கொள்ளுமானால், அது நிச்சயம் ஒரு திருப்புமுனையாக அமையும்; நம்பிக்கை தருவதாக இருக்கும்.

""தீர்வுக்காக தேவைக்கு மேலதிகமாக மேலும் ஒரு மைல் செல் லத் தயாராக இருக்கிறேன்'' என்று ஜனாதிபதி மஹிந்தர் கூறினார். "மஹிந்த சிந்தனை' என்ற கடும் இனவாதக் கோட்பாட்டிலிருந்து முற்றாகத் தம்மை விடுவித்து, அதிலிருந்து அவர் வெளியே வரு வதுதான் இன்றைய நிலையில் அமைதி முயற்சிகளுக்காக அவர் மேலும் அதிகமாகச் செல்லவேண்டிய முக்கிய தூரமாகும். அதற்கு அவர் தயாரா?

http://www.uthayan.com/editor.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.