Jump to content

கடாபியின் கடைசி நாட்கள்?


akootha

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொன்று மட்டும் விளங்குகின்றது மத்திய கிழக்கில் உள்ள எரிபொருள் எல்லாம் மேற்க்கத்தைய நாட்டுக்காரனுகள் பங்கு போடப்போகின்றானுகள் ......... :(

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

கடாபியிடம் உள்ள கொடிய தடை செய்யப்பட்ட ஆயுதங்களை அவர் மகிந்த போல பாவிக்கவில்லை. ஆனால் அவற்றை 'இஸ்லாமிய தீவிரவாதிகளிடம்' செல்லாமல் இருக்க வேண்டும் என மேற்குலகம் விரும்புகிறது.

கடைசிச் சண்டை : ரயூரா வைத்தியசாலையில் கடாபி

திங்கள் இரவு திரிப்போலியில் அனல் பறக்கும் சண்டை சில இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. கடாபியின் தலைமை குவாட்டர்சில் 95 வீதம் தமது பூரண கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக சற்று முன்னார் போராளிகள் தெரிவித்தனர். இது மிகவும் பிரமாண்டமான கட்டிடத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கடாபி இருக்கும் இடம் தமது கவனத்திற்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். ரயூரா நகரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கடாபி இருப்பதாக போராளிகள் தெரிவிக்கிறார்கள்.

திங்கள் அதிகாலை அமெரிக்காவின் பென்ரகன் தகவல் தரும்போது கடாபி இன்னமும் திரிப்போலியிலேயே இருப்பதாக தெரிவித்தது. அவர் ரூனீசியாவிற்குள் நுழைய முற்படலாம் என்றும் கூறியிருந்தது. ஆனால் ஏ.எப்.பீ செய்தித்தாபன தகவல்களின்படி கடாபி இன்னமும் தனது பிரதான கட்டிடத் தொகுதியான பப் அல் அஸியாவிலேயே இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கடாபி தற்கொலை செய்யமாட்டார் என்று மேலை நாடுகளில் இருந்து வரும் ஆய்வுகளும், அங்கு இருக்கிறார் இல்லை இங்கு இருக்கிறார் என்று வரும் தகவர்களும் அவர் அகப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=80017

Link to comment
Share on other sites

நா.க.த.அ, நமது எதிரியின் நண்பனை வீழ்த்தி, தமது விடுதலையை தேடிக்கொண்டிருக்கும் லிபிய விடுதலை கூட்டுக்கு எமது வாழ்த்துகளை அதிகார பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அவர்களுடன் ராஜதந்திர உறவுகளை முன்னேடுக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எண்ணை செய்யிற வேலை. <_<

Link to comment
Share on other sites

அடுத்தது சிரியா. அவர்கள் தான் கணக்காக முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.ஈரான்,வடகொரியாவுடன் இராஜதந்திரப்போர் செய்யத்தான் மேற்குலகம் விரும்பும்.

நல்ல அனுமானம். நடந்தால் இன்னுமொரு கொடுங்கோலன் போய்விடுவான். வட கொறியாவை வழிக்கு கொண்டுவருவது இனிமேல் இலகுவாக இருக்கும். ரூசியா பலம் குறைந்துவிட்டதால், தனக்கு கிட்ட மட்டும் தான் கவனத்தை செலுத்துகிறது போலிருக்கிறது. சீனாவின் பொருளாதாரத்திற்கு மேற்கு நாடுகள் இப்போது மிகவும் அவசியம். மேற்கு நாடுகளுக்கு வளைந்து கொடுக்கும்.

Link to comment
Share on other sites

எல்லாம் எண்ணை செய்யிற வேலை. <_<

எண்ணெயால் தான் இவர்களுக்கு விடுதலையும் கிடைத்தது.

எண்ணெயால் தான் இவர்களின் நாட்டில் மேற்குலகம் நிரந்தரமாக குந்தவும் போகின்றது.

Link to comment
Share on other sites

கைது செய்யப்பட்டார் என கூறப்பட்ட சாய்ப் இஸ்லாம் சுதந்திரமாக தோன்றி 'திரிப்பொலியில் எல்லாம் நன்றாக உள்ளது' என கூறியுள்ளார். அப்பா, கடாபியும் நலமாக உள்ளதாக கூறினார்.

Gadhafi son reappears in Tripoli

http://news.blogs.cnn.com/2011/08/22/live-blog-battle-for-libya-gadhafi-stronghold-under-assault/?iref=BN1&hpt=hp_t1

Link to comment
Share on other sites

சர்வாதிகாரம் அகற்றப்பட்டு மக்கள் அதிகாரத்திற்கு வரும் போது தான் அரபுலகத்தின் உண்மையான முகத்தை மேற்குலகம் பார்க்கும்.

Link to comment
Share on other sites

எதிரும்புதிருமாக நிற்கும் ,முஸ்லிம்களும் அமெரிக்கனுக்கும் ,

ஒரே ஒரு கொள்கை விடயத்தில்மட்டும் ,இனியில்லையென்ற ஒற்றுமை!!

அதுதான் சந்தர்ப்பவாதம்!!

அரபுலக சர்வாதிகாரிகளின் ஆட்சி அமெரிக்காமூலமாக ,முடிவுக்கு வருவது உலகசர்வாதிகாரியான யூ.எஸ்ஸ......தட்டிக்கேட்க ஆளில்லை என்கிற நிலமைக்கே கொண்டுபோகும்!

இன்று உள்நாட்டு பொருளாதார மந்த நிலையினால் அடக்கி வாசிக்கும் அமெரிக்கா..உண்மைல

ஒடுக்கப்படும் இனங்களின் தலைமாட்டில் சுருண்டு படுத்திருக்கும் ராஜநாகம்!!

என்னையகேட்டால்.. முட்டாளகள்போல மத நம்பிக்கைலயும் ,செயலிலும் ஈடுபடும் முஸ்லிம்களை கட்டுப்படுத்த அமெரிக்கா தேவை..!

அதேநேரம் போறவன் வாறவன் எல்லார் பிடரியிலும் தட்டி , ரவுடிதனம் பண்ணும் அமெரிககாவை கட்டுப்படுத்த முஸ்லிம்களும் தேவை!

Link to comment
Share on other sites

கடாபியின் தலைமைக் காரியாலயத்திற்குள் போராளிகள்

கடாபியின் தற்காப்புப் படைகளுடன் நடைபெற்ற கடும் மோதலின் பின்னர் போராளிகள் கடாபியின் மாளிகைக்குள் நுழைந்துள்ளதாக சற்று முன்னர் றோய்டர் செய்தித் தாபனம் தகவல் வெளியிட்டது.

பப் அல் அஸியா கட்டிடத்திற்குள் இருந்து மகிழ்ச்சி வெடிகளை அவர்கள் சுட்டவண்ணமுள்ளனர். கடாபி எங்கேயென்று கூறப்படவில்லை ஆனால் பல வதந்திகள் பரவியவண்ணமுள்ளன. ஆனால் கடாபி திரிப்போலியிலேயே இருப்பதாக இன்று அதிகாலை செய்திகள் கூறியிருந்தன. கடாபியை கைது செய்வது தமது நோக்கமல்ல என்று சற்று முன் போராளிகள் கூறினார்கள்.

http://www.alaikal.com/news/?p=80113

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் தமிழரை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் போது... மகிந்த லிபியாவில், தனது நண்பன் கடாபியுடன் இருந்தவர். தமிழனின் கடைசி நிலம் பறிபோன நிலையில்.... லிபியாவிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மகிந்த வந்து இறங்கிய போது.... எடுத்த ஒளிப்பதிவு. கடாபி இப்போது.... உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மகிந்தவிடமிருந்து ஆறுதல் வார்த்தைகள் இன்னும் வரவில்லை. ஏன் அடக்கி வாசிக்கிறார் என்பதும் புரியவில்லை.

Link to comment
Share on other sites

கடாபியின் தலைக்கு 16 கோடி ரூபா விலை

லிபிய தலைவர் கேணல் கடாபியினை உயிருடனோ அல்லது பிணமாகவே கொண்டு வருபவர்களுக்கு ரூபா 16 கோடி சன்மானம் வழங்கப்படுமென எதிர்ப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

கேணல் கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள எதிர்ப்பாளர்கள் தற்சமயம் திரிபோலியிலுள்ள கடாபியின் மாளிகை வளாகத்துக்குள் பிரவேசித்துள்ளனர். தொடர்ந்தும் இரு தரப்பினருக்குமிடையில் பாரிய தாக்குதல்கள் இடம்பெற்றவண்ணமிருக்கின்றன. கேணல் கடாபியின் மாளிகையின் சிலபகுதிகளுக்கு பிரவேசித்துள்ள எதிர்ப்பாளர்கள் கடாபியின் நினைவுச் சின்னங்கள் பலவற்றையும் அழித்துள்ளனர்.

இந்நிலையிலேயே கடாபியினை உயிரோடோ அல்லது பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு 2 மில்லியன் லிபிய டினார்கள் (சுமார் 16 கோடி ரூபாய்) பரிசாக வழங்கப்படுமென எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ளதோடு கடாபியை கொன்றவர்களுக்கு தண்டனைகளின்றி மன்னிப்பும் வழங்கப்படுமென அறிவித்துள்ளனர்.

இதுவரை வான்வழியாக மட்டும் தாக்குதலை மேற்கொண்டுவந்த நேட்டோ படையினர் தற்சமயம் தரை மார்க்கமாகவும் முன்னேறி வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேட்டோ படையினருக்கு எதிராக லிபிய மக்கள் கிளர்ந்தெழ வேண்டுமெனவும் தன் தந்தையின் பின்னால் மக்கள் அணிதிரள வேண்டுமெனவும் கேணல் கடாபியின் மகள் நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

லிபியாவின் திரிபோலியில் எங்கோ ஒரு மூலையில் கேணல் கடாபி ஒழிந்திருக்கிறார் என்று அமெரிக்காவின் பென்டகன் பேச்சாளர் அறிவித்துள்ளபோதிலும் கடாபி எங்கோ தப்பியோடி தலைமறைவாக இருக்கின்றார் என்று சில எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர். தொடர்ந்தும் திரிபோலியில் கடாபி படையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்குமிடையில் பாரிய மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/26863--16-.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

சர்வாதிகாரிகள் அனைவருமே ஒரே அச்சாக இருக்கின்றார்கள்.கடைசி நிமிடம் உலகமே அதிரும் என்ற அறிக்கைகள் வேறு.

Link to comment
Share on other sites

லிபிய மக்கள் கடாபிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்களா? . ஒரு பிரிவினருக்கு ஆயுதப்பயிற்சியை கொடுத்து அவர்கள் போராளிகளாம்!!. ஒரு நாட்டின் இறையாண்மைக்கு என்ன நடக்கிறது? .லிபியாவின் எண்ணை வளத்தை சுறண்ட மட்டுமே மேற்கு நாடுகள் லிபிய மக்களை மீட்கப்போவதாக ஒரு பம்மாத்து நாடகத்தை ஆடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிபிய மக்கள் கடாபிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்களா? . ஒரு பிரிவினருக்கு ஆயுதப்பயிற்சியை கொடுத்து அவர்கள் போராளிகளாம்!!. ஒரு நாட்டின் இறையாண்மைக்கு என்ன  நடக்கிறது? .லிபியாவின் எண்ணை வளத்தை சுறண்ட மட்டுமே மேற்கு நாடுகள் லிபிய மக்களை மீட்கப்போவதாக ஒரு பம்மாத்து நாடகத்தை ஆடுகிறது.

என்ன இருந்தாலும்...

மகிந்தவுக்கு ஒரு நண்பன் அவுட். என்ற வகையில் எனக்கு சந்தோசம்.dance-smiley07.gif

எண்ணையை ஆர் கொண்டு போனாலும் காரியமில்லை.dance-smiley04.gif

Link to comment
Share on other sites

லிபியாவில் 30 கி.மீ சுரங்க வழி

லிபிய மண்ணில் பல வாரங்களுக்கு முன்னரே பிரிட்டனின் அதிரடிப்படையினர் இறங்கிவிட்டதாக இன்று வெளியான த ரெலிகிராப் பத்திரிகை எழுதியுள்ளது. சுமார் 22 வரையான பிரிட்டன் விசேட அதிரடிப்படையினர் போராளிகள் போல வேடமிட்டு அரபிய தோற்றத்துடன் களமிறங்கி சண்டையிட்டுள்ளனர். இவர்கள் போராளிகளுடன் போராளிகளாக கலந்து நின்று நேட்டோவின் வான் தாக்குதல் உட்பட தரைவழி தாக்குதல்களை நெறிப்படுத்தியுள்ளார்கள். போராளிகளின் திரிப்போலி நுழைவு அங்குள்ள சாதாரண பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக ஐ.நாவின் அனுமதியுடன் இறங்கியதாக பிரிட்டன் படைத்துறை அமைச்சர் லியாம் பொக்ஸ் கூறியுள்ளார்.

அதேவேளை கடாபியும் முன்னாள் ஈராக் சர்வாதிகாரி சதாம் உசேன்போல மறைவிடத்தில் இருந்து பிடிக்கப்படுவார் என்று அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்னன. சதாம் அவருடைய சொந்த நகரத்தில் இருந்து சில கி.மீ தொலைவிலேதான் பிடிக்கப்பட்டார். அதுபோலவே கடாபியும் மிக அண்மையில்தான் பதுங்கியிருப்பார் என்றும், அதற்கான விசேட தேடுதல்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை இன்று திரிப்போலியில் அதிகமான இடத்தில் அமைதி காணப்பட்டது. கடந்த சில நாட்களாக நடந்த சண்டையில் 400 பேர் வரை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல இடங்களில் கடாபி ஆதரவாளர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடி உள்ளார்கள். திரிப்போலியின் 85 வீதமே போராளிகள் வசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தான் திரிப்போலியை விட்டு வெளியேறியுள்ளதாக கடாபியின் ஓர் அறிவித்தலும் வெளியாகியுள்ளது. திரிப்போலியில் உள்ள கடாபியின் மாளிகையில் சுமார் 30 கி.மீ தொலைவுக்கு சுரங்க வழி காணப்படுகிறது. அதற்குள்ளாலேயே அவர் தப்பியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடாபியின் தங்க முலாம் பூசிய சிலையை உடைத்து அதன் தலையை மிதித்தபடி போராளிகள் நிற்கிறார்கள். பல இடங்களில் கடாபியின் உருவப்படங்கள் எரிக்கப்படுகின்றன. 42 வருடகார கொடுங்கோல் ஆட்சி மீதான வெறுப்பு மெல்ல மெல்ல வெளிப்பட ஆரம்பித்துள்ளது. மறுபுறம் கடாபி ஆட்களால் நான்கு இத்தாலிய பத்திரிகையாளர் கடத்தப்பட்டுள்ளார்கள். இவர்களை ஏற்றிச் சென்ற சாரதி கொல்லப்பட்டுள்ளார்.

http://www.alaikal.com/news/?p=80256

Link to comment
Share on other sites

கடாபி தனது மகன்மாருடன் ஒரு அடுக்குமாடிகளை கொண்ட கட்டட தொகுதியில் ஒளிந்திருப்பதாக கிளர்ச்சியாளர்கள்

தெரிவித்துள்ளர்கள். ஆனால் இதை வேறுயாரும் உறுதிப்படுத்தவில்லை.

இதையடுத்து இந்த இடத்திற்கு மேலும் பல கிளர்ச்சியாளர்கள் படையணிகள் அனுப்பப்பட்டுள்ளன.

அதேவேளை திரிப்போலியில் இருந்து பதினேழு கிலோ மீட்டர் உள்ள விமானநிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கிளர்ச்சியாளர்கள் சில நாட்களாக போராடியவண்ணம் உள்ளனர். விமான நிலையம் மூலமாக கடாபி வேறு நாடொன்றுக்கு தப்பி செல்ல முனையலாம் இல்லை அதனூடாக தனது பூர்வீக கிராமத்திற்கு தப்பி செல்ல முனையலாம் என எண்ணப்படுகின்றது.

Link to comment
Share on other sites

எத்தனுக்கு எத்தன் தான் வாழ்க்கை. கடாபி போர்க்கொடி உயர்த்துங்கோ என்று ஒரு போர்க்கோடியும் வாங்கி கையிலை கொடுத்து அனுப்ப கூடிய ஆள் இல்லை.

காட்டர் நசிகிறதை பார்த்துவிட்டு சொறிய போய்தான் றீகனிடை அடிவாங்கியவர் கடாபி.

லொக்கபீ குற்றதை மறந்து ஆளையும் வெளியிலை விடுகிறமாதிரி நடிச்சு போட்டு தான் பிருத்தானியாகாறன் ஆளோடை ஆளாய் சேர்ந்துநிண்டு அடிக்கிறான். அவ்வளவதிற்கும், பிரித்தானியா காறன் கடாபியிடம் ஓயில் வாங்குகிறதிற்கு தான் ஆளை வெளியில் விட்டவர்கள் என்று அமெரிக்காவில் கமரூனின் வருகையை எதிர்த்து ஆர்பாட்டங்கள் நிகழ்த்தியவர்கள்.

பாம்பின் காலை பாம்பறியும்.

Link to comment
Share on other sites

மேற்குலகம் எப்படியாவாது விரைவில் கடாபியை பிடிக்கவேண்டும் என விரும்புகின்றது. நேரடியாக களத்தில் இறங்கி அவர்களின் 'பாம்புக்காதுகள்' மூலம் இருக்கும் இடத்தை அறிய ஒட்டிக்கேட்டவண்ணம் உள்ளனர்.

கடாபியிடம் தாங்களே அவருக்கு விற்ற பல ஆயிரம் உயிர்களை கொள்ளக்கூடிய நச்சு வாயுக்கள் உள்ளன. அவற்றை கண்டுபிடிக்க கடாபியின் ஆட்களை பிடிக்கவேண்டும். அது அல்கைடாவின் கைகளில் போய்விடக்கூடாது என்ற பெரிய பயம். அதை விட பெரு ஆயுதங்கள் கூட வேறு எவரின் கைகளில் போய்விடுமோ என்ற பயம்.

Link to comment
Share on other sites

கடாபி எங்கே கடவுளுக்கே வெளிச்சம்

லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியையும், அவருடைய மகன்களையும் கையும் மெய்யுமாகப் பிடித்து மேலை நாட்டு ஊடகங்களுடைய வயிற்றில் பாலை வார்க்க முடியாது என்று போராளிகள் தெரிவித்துள்ளனர். கடாபி எங்கே உள்ளார் என்ற தேடல் முடிவே இல்லாத கயிறாக நீண்டு போவதாக போராளிகளுக்காக குரல்தரவல்ல முஸ்தாபா அப்டீல் ஜலீல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் எங்கே இருக்கக் கூடும் என்பதை தோராயமாகக்கூட தம்மால் கூற முடியாது என்றும் தெரிவித்தார். கடாபியை பிடித்தால் கிடைக்கக்கூடிய பத்து இலட்சம் டாலர் இப்போது பிசுபிசுத்துப் போயுள்ளது. மேலும் கடாபியை பிடிப்பது நமது நோக்கமல்ல என்று நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் கூறியதையும் முஸ்தாபா அப்டீல் ஜலீல் கருத்தையும் சேர்த்து முடிந்தால் எங்கோ ஓரிடத்தில் இடிப்பதையும் மறுக்க முடியவில்லை. கடாபியின் இறப்பர் பொம்மையை போட்டாவது கதையை முடிப்பார்கள் என்றால் அதுவும் நடந்தபாடில்லை.

இந்தக் கூத்தாட்டம் ஒருபுறம் போக ஏற்கெனவே கடாபியின் பேரில் இருந்த சொத்துக்களை எல்லாம் உலக நாடுகள் தத்தமது நாட்டு கஜானாக்களில் கொட்டி மூடிவிட்டன. இப்போது லிபியாவில் பாரிய ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. ஆகவே பறிமுதல் செய்த பணத்தை திரும்பவும் தரவேண்டும் என்று அரபு லீக் கேட்டுள்ளது. கடாபி மீது வீசிய குண்டுகளின் விலையை கழித்துப் பார்த்தால் கையும் கணக்கும் சரியாகும் என்பது தெரியாமல் அல்லாடுகிறது அரபு லீக். சோழியன் குடுமி சும்மாவா ஆடும்.

http://www.alaikal.com/news/?p=80550

Link to comment
Share on other sites

கடாபியின் ஒரு மனைவி, ஒரு மகள், 2 மகன்மார்கள் அண்டிய நாடான அல்ஜீரியாவுக்குள் புகுந்தனர்.

Gaddafi family members flee to Algeria

Algerian foreign ministry says toppled Libyan leader's wife, his daughter and two of his sons have reached Algiers.

http://english.aljazeera.net/news/africa/2011/08/2011829171617807937.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காடபி வீழ்ச்சி சீனாவிற்கு நல்ல அடியாக இருக்கும், அவன் வெளியேற்றியது பலருக்கு நல்லது, இனி அங்கும் வேலைக்கு போகலாம்

Link to comment
Share on other sites

மரணத்தின் விளிம்பில் லொக்கபி குண்டு வைப்பாளர்

கடந்த 1988 ம் ஆண்டு லொக்கொபி விமான குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்டு 170 பேரின் மரணத்துக்குக் காரணமான கடாபியின் உறவினர் அப்டீல் பாசிற் அல்மகாரி இறக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டார்.

தற்போது முழுமையாக கோமா நிலையை அடைந்துவிட்ட இவர் மரணத்தின் வாசலை தொட்டபடி நிற்பதாக சி.என்.என் கூறுகிறது. கடாபியின் வீழ்ச்சியை தொடர்ந்து உணவு உண்பதை நிராகரித்த இவர் தற்போது மரணத்தை நெருங்கியுள்ளார். ஏற்கெனவே புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு மேலை நாடுகளை சமாதானப்படுத்தும் விதமாக ஒருவித ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் தற்போது வசதியான ஒரு வீட்டில் வைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

அதேவேளை சிறீலங்கா இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பல தமிழர் காணாமல் போயுள்ளது போல கடாபி இராணுவத்தால் கைது செய்யப்பட்ட 75.000 மக்களில் 11.000 பேரே எஞ்சியுள்ளனர் மற்றவர்களை காணவில்லை என்று போராளிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

http://www.alaikal.com/news/?p=80634

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.