Jump to content

ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு

தீபச்செல்வன் - 20 AUGUST, 2011

budha%20war%20in%20eelam-946.jpg

அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள நாக விகாரை பௌத்த சங்கம் அதிர்ச்சிகரமான ஓர் அறிவித்தலை வெளியிட்டிருந்தது. யுத்தம் காரணமாக வீடழிந்த மக்கள் தமது காணிகளில் புத்த விகாரைகளை அமைக்க இடமளித்தால் அவர்களுக்கு மிக வசதியாக ஆறு லட்சம் ரூபா செலவில் வீடு அமைத்துத் தருகிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாண நகரத்தில் உள்ள நாக விகாரையும் ராணுவத்தினரும் இதன் அனுசரணையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யுத்தம் காரணமாக நொந்து நலிந்து வீடற்று அழிவின் வெளியில் தவிக்கும் ஈழத்து மக்களை இப்படியும் ஏமாற்றலாம் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. புத்தர் சிலைகளைப் பரவலாக நட்டு பௌத்தத்தைப் பரப்பும் இந்த நடவடிக்கை எத்தகைய கொடுமையானது? இதை அறிவிக்கும் அளவிற்குத் தமிழர் நிலத்தில் சிங்கள இனவாதமும் பௌத்த மதவாதமும் தலையெடுத்திருக்கிறது.

இன்று ஈழத் தமிழர்கள் எல்லாவற்றையும் கண்டு அஞ்ச வேண்டிய காலத்தில் வாழ்கிறார்கள். யுத்தத்தால் அழிவு, ஆக்கிரமிப்பால் ராணுவ மயம், அதனால் அச்சம் மிகுந்த வாழ்க்கை முதலியவற்றோடு எதிர் காலத்தையும் இருப்பையும் பயமுறுத்தும் புத்தர் சிலைகளும் பௌத்த மத வாசனையை வீசிக்கொண்டு ஈழத் தமிழரது நிலம் நோக்கி படையெடுக்கின்றன.

பௌத்த சமயம் இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தோன்றியதாக வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. முழுக்க முழுக்க ஞான போதனைகளையும் தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு மதம். இந்தியாவில் உருவாகிய இந்த மதம் மத்திய ஆசியா, இலங்கை, ஜப்பான், திபெத், கொரியா, மங்கொலியா போன்ற நாடுகளுக்குப் பரவியிருக்கின்றன. இதில் இலங்கையில் சிங்கள மக்கள் பௌத்தத்தையும் சிங்களத்தையும் இணைத்துப் பார்த்து மதம் என்பதற்கு அப்பால் வெறியாக வளர்த்து வருகிறார்கள். ஈழத் தமிழ் மக்கள் மீதான போரின்போதும் ஈழத் தமிழ் மக்கள்மீதான அரசியல் நடவடிக்கைகளின்போதும் புத்தரின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டும் பிக்குகளின் ஆசிபெற்றும் நடத்துவதாக சிங்கள அரசியல் தலைவர்களும் ராணுவத்தினரும் குறிப்பிடுகின்றனர்.

யுத்தம் முடிவுறுத்தப்பட்ட இன்றைய காலத்தில் பௌத்த மதத்தை எப்படியாவது பரப்ப வேண்டும் என்னும் தீவிர நோக்கத்துடன் பல செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்கிறது. போர் வேலைப் பளுக்கள் இல்லாத இன்றைய நிலையில் சிங்கள பௌத்த அடையாளங்களையும் உருவாக்கும் முயற்சியில் ராணுவத்தினர் மும்முரமாக ஈடுபடுகின்றனர். போரால் கைப்பற்றப்பட்ட இடங்களில் எவ்வளவு வேகமாக அந்த இடங்களில் உள்ள ஈழத் தமிழர்களின் பண்பாட்டு வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டனவோ அதே வேகத்திலேயே புத்தர் சிலைகள் நடப்பட்டன. போர் முடியும் முன்னரும்கூடக் கைப்பற்றப்பட்ட இடங்களில் புத்த சிலைகளை நடும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்றிருக்கின்றன.

ஞானம், போதனை, அமைதி ஆகிய பிரகடனத்துடன் கண்களை மூடிக்கொண்டு உறைந்திருக்கிற புத்தர் ஏன் தமிழ் மக்களின் அமைதியைக் குலைப்பவராகவும் இருப்பிடங்களைவிட்டுத் துரத்துபவராகவும் இருக்க வேண்டும்? புத்தர் சிலை என்றால் ஈழத் தமிழர்கள் கலவரம் கொள்கிறார்கள். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் புத்தர் மீதான எல்லா ஞான, தத்துவச் சிந்தனைகளும் உடைந்து பல வருடங்களாகின்றன. இப்போது புத்தர் இலங்கைப் படைகளின் சீருடை அணிந்த ராணுவத்தைப் போல இருக்கிறார். இலங்கை ஜனாதிபதியின் கழுத்தில் உள்ள சிவப்புப் பட்டியணிந்த சிங்களத் தலைவரைப் போல இருக்கிறார். புத்தர் கண்களை மூடிக்கொண்டு எல்லா அநியாயங்களுக்கும் கட்டளையிடுபவரைப் போல இருக்கிறார். புத்தரின் பெயராலேயே எமக்கெதிரான எல்லா அநியாயங்களும் இழைக்கப்படுகின்றன என்று ஈழத் தமிழர்கள் உணர்வதும் நம்புவதும் தற்போதைய நிலைமைகளாலும் காலங்களாலும் ஏற்பட்டிருக்கின்றன.

போரின் பிறகு ஈழத் தமிழர்களின் நிலம் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. பெருமளவான பகுதிகளுக்குச் சென்றபோது புத்தர் சிலைகளைப் பார்க்கத் தவறவில்லை. அரச மரங்கள் இருந்த இடங்களிலெல்லாம் புத்தர் வந்து அமர்ந்திருக்கிறார். அவரது சிலைகள் கிராமங்கள்தோறும் தெருக்கள்தோறும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நகரங்கள் தோறும் பெரும் விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மாங்குளத்திலும் கனகராயன்குளத்திலும் வவுனியாவிலும் யுத்தத்திற்குப் பிறகு பெரும் விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அடையாளங்கள் முழுக்க முழுக்க எங்களுக்குப் புறம்பானவை. கனகராயன்குளம், முல்லைத்தீவு நகரம் போன்ற சில இடங்களில் மக்களின் எதிர்ப்பால் புத்தர் சிலை நடுகை தடைபட்டிருக்கிறது.

வன்னி இன்று பௌத்த நிலத்தைப் போல பௌத்த நகரங்கள் கொண்டிருக்கும் அடையாளங்களோடு இருக்கிறது. இந்த உணர்வும் திணிக்கப்பட்ட அடையாளங்களும் மிகுந்த பதற்றத்தையும் மனவுளைச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. இந்தப் புத்தர் சிலைகள் நடப்பட்டுச் சில வருடங்கள் கழியும்போது பெரும் வரலாற்றைக் கொண்டவையாகப் பௌத்தவாதிகளால் சொல்லப்படும். பௌத்த பூமி சிங்கள பூமி என்னும் வரலாறு கட்டப்படும். இதனால் ஈழத் தமிழ் நிலம் ஆபத்தையே எதிர்கொள்ளப் போகிறது. ஏற்கனவே சிங்கள இனவெறி பிடித்த பௌத்த பிக்குகள் வடக்கு கிழக்கு என்னும் ஈழம், பௌத்த சிங்கள நாடு என்பதற்கு அங்கே தடயங்கள் இருந்தன என்றும் அதைப் புலிகள் அழித்துவிட்டார்கள் என்றும் நாம் அவற்றைக் கிண்டிக் கண்டு பிடிப்போம் என்றும் ஊடகங்களில் பரபரப்பு அறிக்கைகளை விட்டு மக்களை நோகடித்தார்கள்.

புத்தர் ஞானத்தையும் அமைதியையும் எங்களுக்குப் போதிக்கிறார். அவரை நாம் வணங்க வேண்டும் அவரைப் பின்பற்ற வேண்டுமென்றும் சொல்கிறது ராணுவத்தரப்பு. பௌத்தத்திற்கும் இந்து மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ராணுவம் சொல்கிறது. புத்தரை வணங்கும் உங்களிடத்தில் ஞானத்தையும் அமைதியையும் நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லையே? துப்பாக்கியை வைத்துக்கொண்டு கொலைவெறி பிடித்தலைவதைத்தானே பார்த்திருக்கிறோம். உங்களால் மிகக் கொடுமையாக நிகழ்த்தப்பட்ட பேரழிவுகளைத் தாமே பார்த்திருக்கிறோம். அதனால் ஏற்பட்ட பெருந்துயரங்களைத்தாமே பார்த்திருக்கிறோம். புத்தரின் கைகளில் துவக்குகள் இருப்பதைப் போலவும் அவர் போர்த் தாங்கிகளில் நகர்வதைப் போலவுமே இருக்கிறது. இதில் ஞானமும் அமைதியும் எங்கிருக்கிறது?

புத்த விகாரை அமைக்க இடமளித்தால் ஆறுலட்சம் ரூபா பெறுமதியான வீடு என்னும் திட்டம் மக்களால் முறியடிக்கப்பட்டது. அதன் பிறகு எப்படிப் பௌத்தத்தைப் பரப்புவது என்பது தொடர்பில் சிந்திக்கப்பட்டுத் தொடர்ந்தும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ் பல்கலைக்கழகத்தில் பௌத்த சங்கத்தை அமைத்ததுடன் யாழ்ப்பாணம் பௌத்த இந்து பண்பாட்டுப் பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இவை பௌத்த ஜெயந்தி தினத்திற்கு அண்மையாக மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணத்திலும் யாழ் பல்கலைக்கழகத்திலும் எதற்குப் பௌத்த சங்கம்? பௌத்த பேரவை? தமிழர்களின் நிலத்தில் பௌத்த பேரவையும் புத்தர் சிலையும் எதற்கு என்பதுதான் ஈழத்தில் எழுந்த பிரச்னையாக இருக்கிறது.

இதே காலத்தில் பௌத்த ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 28 புத்தர் சிலைகள் ராணுவத்தினரின் அழைப்பின் பேரிலேயே யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அவை யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி படைத்தளத்தைச் சுற்றிய பகுதிகளில் வைக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டது. இந்தச் செய்தி யாழில் பதற்றத்தை உருவாக்கியிருந்தது. பின்னர் அவற்றைப் பலாலி படைத்தளத்தில் உள்ள அரச மரம் ஒன்றின் கீழாக வைத்தனர். புத்தரின் வெவ்வேறான ஞான நிலைகளைக் குறித்த அந்தப் புத்தர் சிலைகள் வைக்கப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. யாழ் நகரத்தில் வைத்திய சாலைக்குப் பின்புறமான வீதி சுமார் 20 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டபோது இதேபோலவே சின்னச்சின்ன புத்தர் சிலைகள் பல அரச மரங்களின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் ராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தது முதல் நடப்பட்டு வந்தமையால் இந்த அரச மரங்களில் பல இந்த 20 வருடங்களில் வளர்த்தெடுக்கப்பட்டவை போலவே இருக்கின்றன. பலாலி படைத்தளத்தைப் போல அனைத்துப் படைத்தளங்களிலும் இந்த அபாயச் சிலைகளை நாம் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

யாழ் பல்கலைக்கழகமும் தொல்லியல் அமைச்சும் இணைந்து கந்தரோடையில் தொல்லியல் மையங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அத்தோடு இதே அணியினர் பழமையும் வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்த யாழ் கோட்டையையும் ஆய்வுசெய்து புனரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆய்வின்போது இயல்பாகவே வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த ஆதாரங்கள் உள்ளன என வாய்க்கு வந்தபடி கூறும் சிங்கள ஆராய்ச்சியாளர்களும் பௌத்த பிக்குகளும் உண்மையான முடிவுகளை வெளியிட விடுவார்களா? பௌத்த பிக்குகள் உட்படத் தெற்கு மாணவர்களும் ஈழத்துத் தொல்லியல் மாணவர்களும் ஆய்வில் ஈடுபட்டுவந்தார்கள். ஆய்வுக் களத்தில் ஆய்வுக்கு முன்பாகவே இவை சிங்கள பௌத்தத் தடங்கள் உள்ள இடம் என்று பிக்குகள் தெரிவித்திருந்தது ஈழத்துத் தொல்லியல் மாணவர்களிடம் ஆய்வு நடவடிக்கைகளில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருந்தன.

ஆய்வுக்குப் பொறுப்பு வகித்த சிங்கள ஆராய்ச்சியாளர் கந்தரோடையில் சிங்கள பௌத்தத் தடங்கள் உள்ளன என்று சிங்களப் பத்திரிகை ஒன்றிற்குத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து ஈழத்தில் பதற்றத்தை உருவாக்கியது. அவருடன் இணைந்து ஆய்வில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் இதை மறுத்தோ இதற்கு விளக்கமளித்தோ கருத்துத் தெரிவிக்கவில்லை. கந்தரோடையில் உள்ள பழம் பெரும் பௌத்த விகாரைகள் தமிழ் பௌத்தத்திற்கு உரியவை என்ற கருத்தை ஆய்வுசெய்த வரலாற்று, தொல்லியல் ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துவந்திருந்தார்கள். இன்று ஈழத் தமிழர்களின் வரலாற்றுக்கு முற்பட்ட தொல்லியல் மையங்கள் மீதும் விடுதலைப் புலிகள் காலத்து நினைவு மையங்கள்மீதும் சிங்கள வரலாற்றுக் கதைகள் திணிக்கப்படுகின்றன. குறித்த மையங்கள் சிங்களவர்களின் சுற்றுலாத்தளங்களாவதுடன் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அவர்களைப் படையெடுக்கத் தூண்டி அவர்களிடத்தில் வடக்கு கிழக்கு நிலத்தின் மீது கவர்ச்சியை ஏற்படுத்திக் குடியமரத் தூண்டும் நடவடிக்கைகளில் அரசும் ராணுவமும் செயற்படுகின்றன. இந்த அணுகு முறையே கந்தரோடையிலும் நிகழ்ந்தது.

திருமலையில் புத்தர் சிலைவைக்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்றம் வரை அதிர்வை ஏற்படுத்தியது. அதை எதிர்த்த வ.விக்கினேஸ்வரன் திருமலை நகரில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் குறித்த புத்தர் சிலை ஆயுதம் தரித்த ராணுவத்தால் பாதுகாக்கப்பட்டது. பின்னர் திருமலையின் பல இடங்களிலும் புத்தர் சிலைகள் பெருகிப்போயின. மாங்குளம், நயினாதீவு விகாரை, யாழ் நாக விகாரை என்று முழு விகாரைகளின் முன்பாகவும் ஆயுதம் ஏந்திய படைகள் காவல்செய்கின்றன. இந்தப் பாதுகாப்பில் இன்று வடக்கு கிழக்கு என்கிற ஈழமெங்கும் புத்தர் சிலைகள் பெருகிவிட்டன. அரச மரங்கள் உள்ள இடங்களிலெல்லாம் புத்தர் சிலைகளும் அரச மரங்கள் இல்லாத இடங்களிலும் அவை புதிதாக நடப்பட்டுத் தண்­ர் ஊற்றியும் வளர்க்கப்படுகின்றன.

நிலத்திற்காகப் போராடிய இனம் இன்று பெரும் போரை எதிர்கொண்டு பேரழிவுகளைச் சந்தித்து நலிந்து எஞ்சியிருக்கிறது. இருக்கும் உயிரையும் வதைக்கும் விதமாகவும் காயப்பட்ட காலத்தை அச்சுறுத்தும் விதமாகவும் எதிர்காலத் தலைமுறைகளை எச்சரிக்கும் விதமாகவும் நகரும் இந்தப் புத்தர் சிலைகள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டேயிருக்கின்றன. தடுக்க முடியாதபடி ராணுவப் பாதுகாப்பும் அரச கட்டளையும் வளர்ந்துகொண்டிருப்பதுடன் இனவாதமும் ராணுவ வெற்றியும் புத்தரின் படை யெடுப்பை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. மிக நீளமான கால்களால் மிக அகலமாகக் கால்களை நீட்டி வைத்துக்கொண்டு புத்தர் ஈழத்து நிலமெங்கும் படையெடுப்பை நடத்தி நிலத்தைக் கைப்பற்றுகிறார்.

நன்றி: காலச்சுவடு

http://www.koodal.co...ara-to-yalpanam

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.