Jump to content

நீங்களும் இரவும் நாங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பிரத்தியேக கோவையை

நேற்று இரவு சரிபார்த்தபோது

அதனுள் இருந்த சில "நிழற் பிரதி"களுல் ஒன்றாய் பின்வரும் கவிதையும் இருந்தது...

ஆழமான அர்த்தமும் உணர்வுகளும் நிரம்பிய

இக் கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்..

"நிலா"என்ற பெயரிலான பெண்போராளி எழுதியிருக்கிறார்.....

நீங்களும் இரவும் நாங்களும்

ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க

விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து

உங்களின் கரங்கள் நீளும்

நிற்போம்

"அண்ணை நானும் வரட்டா?"

என்பீர்கள்

வாயில் வார்த்தை எதுவுமே வராது போவோம்.

ஏதேனும் சிந்தனையில் மூழ்கி நாங்கள்

ஒரு கணம் நிதானம் இழ்ந்து போனால்

"டிம்" இல்லையோடா?

என்று திட்டுவீர்கள்.

சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வரும்.

பாதுகாப்பாக பீரங்கிகளை நிலைப்படுத்தி

எண்ணியெண்ணி எறிகணை செலுத்திய

காலங்கள் விலகிப்போக

எதிரிகள் ஓடும் வேகத்திற்கேற்ப

எறிகணை செலுத்திகளை நகர்த்தும்

வாகங்களை செலுத்தும் வல்லமை பெற்ற

சகோதரிகளினுடைய சகோதரர்களே,

இரவிலே வாகனங்கள் செலுத்தும் அனைவரும்

ஆண்களாகத்தான் இருப்பார்கள் என்று

எப்படி உறுதியாகத் தீர்மானிக்கிறீர்கள்?

உங்களின் எழுதாத சட்டங்களைத்

தூக்கி எறிந்துவிட்டு

தயவு செய்து கவனியுங்கள்.

நாளைக்கு உங்கள் அக்கா

ஹையேஸ் செலுத்திச் செல்லக்கூடும்

உங்களது கடைசித் தங்கை

பஷனில் பறத்தல் நேரும்

கப்பற் தொகுதிக் கட்டளைத் தளபதியாய்

மருமகள் பிறத்தல் ஆகும்.

தமிழீழத்தில் ஓர் நல்ல விமானியாய்

பெறாமகள் இருத்தல் -னிகழும்.

சட்டங்கள் பெற்றாலும் சுதந்திர தமிழீழத்தில்

வேலையில்லாச் சிக்கலிற்குள்

சிக்காது உங்கள்து

புதல்வியால் கூட வீதிப் புனரமைப்பில் ஈடுபடும்

கனரகங்களை கன கச்சிதமாய்ச் செலுத்த முடியும்

உருளச் சிரமப்படும் உலகத்தை ஒற்றைக் கையால் உருட்டப்

போகும் உங்களது

பேத்தியின் பெருமை காணும்

பேறு உங்களுக்கு இருத்தல் நல்லது.

எமதருமை உறவுகளே

இனியேனும் வாகனங்களை மறிக்கும் போது

பொதுப்பெயரில் விளித்துதவி கேளுங்கள்.

உறவுப் பெண்களாயிருந்தால் உந்துருளிகளிலும்

ஏனையவர்களானால் ஏனைய வாகனங்களிலும்

இடமிருந்த்தால் நிச்சயம் உதவுவார்கள்

நேற்றும் இன்றும் நாளையும்

ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது என்பதுடன்

இது

சூரியனின் புதல்விகள் உலவும் தேசம்

நன்றி-"எரிமலை" (பெப்ருவரி 2003)

Link to comment
Share on other sites

ஒரு தெளிவான கருத்துடன் கூடிய நகைச்சுவையுடன் படைத்திருக்கின்றார் கவிதையை நிலா. அவருக்கு எனது வாழ்த்துக்கள்

இங்கு இனைத்தமைக்கு நன்றி மேகநாதன்.

Link to comment
Share on other sites

எம் சமூகத்தில் அடக்கிவைக்கப்பட்ட பெண்கள் இன்று அத்தழைகளில் இருந்து வெளிவருவது மிகவும் மகிழ்வை தரும் ஒரு விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியத்தின் பிரதிபலிப்பாய்..அமைந்த கவிதைக்கு நன்றிகள்.....எழுதியவருக்கும் இதை இங்கே இணைத்தவருக:கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நிலா" வின் கவிதையைப் படித்து,

வரவேற்ற உறவுகளுக்கு நன்றிகள்....

இவ்வாறான தாயகப் பெண் படைப்பாளிகளின் வித்தியாசமான சிந்திக்கத் தூண்டும் கவிதைகள்/ படைப்புக்களை நீங்களும் பகிருங்களேன்....

Link to comment
Share on other sites

கொழுந்துக்கூடைகள்.

102600519yt.jpgsrilankawomen4xg.jpg

சுரண்டல் தராசுகளில்

கொழுந்துக் கூடைகளை

கொழுவி விட்டு

தேனீருக்காக ஏங்கும் இத்

தேயிலைச் செடிகள்.....

அக்கினியாய் அணிவகுத்து

அவலங்களை எரிப்பதெந்நாள்?

கப்டன் கஸ்தூரியின் ஆக்கங்களில் ஒன்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.