Jump to content

இசையின் மடியில்-எனது தெரிவுகள் சில ...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவனே போயினும்
அழியாது தொடரும் நம் காதல்
ஜென்ம ஜென்மங்களைத்தாண்டியும்
தொடரும் இந்தத் தெய்வீகப்பந்தம்

https://www.youtube.com/watch?v=0HnWSubwtCk

Link to comment
Share on other sites

  • Replies 166
  • Created
  • Last Reply

நன்றாக இருக்கிறது சுபேஷ். ஒவ்வொன்றிற்கும் சிறு குறிப்பு எழுதினால் நன்றாக இருக்கும். :)

முதலில் தலைப்பைப் பார்த்ததும் இசைக்கலைஞனைப் பற்றிய வேறு ஏதும் சமாச்சாரமோ என்று பயந்துவிட்டேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் ஒவ்வொரு நொடிகளிலும்

உனக்காகவே சுவாசிக்கின்றன

என் உடலின் ஒவ்வொரு அணுக்களும்...

நீயின்றி வீணே இவ்வாழ்வு

எங்கே சென்றாய் என் தேவியே...

உனைத்தேடி அலைகிறதென் ஆவியே...

Link to comment
Share on other sites

முதலில் தலைப்பைப் பார்த்ததும் இசைக்கலைஞனைப் பற்றிய வேறு ஏதும் சமாச்சாரமோ என்று பயந்துவிட்டேன். :rolleyes:

நானும் ஒருநிமிசம் பயந்துபோனன்..! :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகளை பாரமாக்கினாய்

நிமிடங்களை யுகங்களாக்கினாய்

தூக்கம்களை தூரமாக்கினாய்

துயரங்களை தூசியாக்கினாய்

உன் ஒரு உதட்டோரப் புன்னகையில்

என்னைப் பைத்தியமாக்கினாய்

மறந்து விட்டேன் என்று மட்டும் சொல்லி

எனக்கு மரணத்தைத் தந்து விடாதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பாடல் சூப்பர் பாடல்...

நன்றி சுஜி......

நன்றாக இருக்கிறது சுபேஷ். ஒவ்வொன்றிற்கும் சிறு குறிப்பு எழுதினால் நன்றாக இருக்கும். :)

முதலில் தலைப்பைப் பார்த்ததும் இசைக்கலைஞனைப் பற்றிய வேறு ஏதும் சமாச்சாரமோ என்று பயந்துவிட்டேன். :rolleyes:

நன்றி தப்பிலி...இசை பயப்படாதீர்கள்..உங்கள் மடி உங்களவவுக்கு மட்டுமே... :lol:

Link to comment
Share on other sites

"ஒரு சின்னப் பறவை "என்ற பாடலுக்குக் KARAOKE MP3 இருப்பின் அதனை இணைத்துவிடவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் கிராமத்து வீதியெல்லாம்

தினம் தினமும் தேடிவருவேன்

என் தேவதையே உன் பாதத்தடத்தை...

வாழ்க்கையை வனைந்துசெல்லும்

என் ஊரின் அழகெல்லாம் சேர்த்து

உருவான தேவதையே உன்னை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்முட்ட உன் நினைவுகளைச் சுமந்தபடி

விழிபூக்கக் காத்திருக்கிறேன்

காலங்கள் என்னைத் தின்றுகொண்டிருக்கின்றன

மன்னவனே

உன் மௌனங்களைக் கலைத்துவிட்டு வந்துவிடு

காய்ந்துபோன என் மன நிலத்துக்

காயங்களை ஆற்றிவிட...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் பணம் பணம் இவற்றுக்கு பின்னால் தொலைந்து போன உறவுகள் ஆயிரம்...

மண்ணை நம்பி வாழும் எங்க உலகத்தில் விளைந்துபோய்க் கிடக்கிறது நிம்மதி..

எங்க வானத்தில் உறவுகள்தான் கடவுள் அள்ளித்தந்திருக்கும் பொக்கிசம்..

அன்பை விதைச்சு நிம்மதியை அறுவடைசெய்கிறோம்..

வாழ்க்கையை நாங்கள்மட்டும்தான் வாழ்கிறோம் நிறைவாக இப்பூமியில்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பாட்டுக்களும் நல்லா இருக்கு, தொடர்ந்து இணையுங்கள், நன்றி சுபேஸ் பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பாட்டுக்களும் நல்லா இருக்கு, தொடர்ந்து இணையுங்கள், நன்றி சுபேஸ் பகிர்வுக்கு

நிச்சயமாக...நன்றி உடையார்...

பாடல்கள் அழகு.

சோகங்களிலும் சுகம் இருக்கிறது.

ஆம் கறுப்பி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்வின் வசந்தமானவளே

தொலைவாய் நீயிருக்கும் காலம்வரை

என் வாழ்க்கை இலையுதிர்காலங்களால்

நிறைந்துபோய்க் கிடக்குமடி..

விரைந்து வந்துவிடு வசந்தமே

என் கனவுகள் மெய்ப்பட...

Link to comment
Share on other sites

என் வாழ்வின் வசந்தமானவளே

தொலைவாய் நீயிருக்கும் காலம்வரை

என் வாழ்க்கை இலையுதிர்காலங்களால்

நிறைந்துபோய்க் கிடக்குமடி..

விரைந்து வந்துவிடு வசந்தமே

என் கனவுகள் மெய்ப்பட...

நல்ல பாடல் சுபேஸ்... எனக்கு பிடிக்கும் இந்தப்பாடல்...இணைப்பிற்க்கு நன்றி சொல்லமாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கனவுகள் முழுவதும்
நிறைந்திருப்பவனே....
உன் தோள்களில் சாய்ந்திடும்
நாள் நோக்கிக் காத்திருக்கும்
இதயம் முழுதும் உன்
நினைவுகளைச் சுமந்தபடி இந்த ஈரநிலா...

http://www.youtube.com/watch?v=ffpaeW9LTao
 

நல்ல பாடல் சுபேஸ்... எனக்கு பிடிக்கும் இந்தப்பாடல்...இணைப்பிற்க்கு நன்றி சொல்லமாட்டேன்


பரவாயில்லை.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ தந்த நினைவுகளை மட்டுமே சுமந்துகொண்டு
காலமெல்லாம் வாழ்ந்துவிடுமடா
சோகங்களை மட்டுமே
சொந்தமாக்கிக்கொண்டு
கல்லிலும் முள்ளிலும் வாழும்
இந்தக் கள்ளிச்செடி....


http://www.youtube.com/watch?v=eA-5GHQMxOM

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் முட்டி வழியும்

உன் நினைவுகளை நுகர்ந்தபடி

நன்றியுடன் வாழ்த்துகிறேன்

தினமும் என் வாசலிலே

தேவதை உன் வாசனைகளை

சுமந்துவரும் தென்றல்

வாழ்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருந்து காத்திருந்து

பாடுதடி மாமன் நெஞ்சு

வாட்டியது போதுமடி

வாழை இலை காயுதடி

சோறு தண்ணி சாப்பிடலை

காத்திருக்கேன் ராப்பகலா

எப்பொழுது நீ வருவா

கைப்புடிச்சு ஊட்டிவிட...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் தந்த

காயங்களைச் சுமந்தபடி

உறங்காத என் விழிகள்

ஓயாமல் தேடுகின்றன

உன் தடங்களை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குயில் சித்திராவின் குரல் வரைந்த ஓவியத்தில் ஏன் என்று சொல்லமுடியாதவாறு என்னைக்கவர்ந்த பாடல் இது....



காதலி
உனக்காக நான் எழுதும்
ஒவ்வொரு கடிதங்களும்
காவி வரும்
என் உயிரின் பாடல்களை...
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தேடல்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதம்...அழகைத்தேடிக் காதலிக்கும் பருவங்களைக் கடந்து வந்து....ஈர்ப்புக்களால் உருவாகும் பொய்யான காதலிப்புக்களைத் பார்த்துத் தெளிந்து... அழகான மனதை,ஒன்றாகும் சிந்தனைகளை,அன்பான இதயத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நிமிடம்கள் இப்படித்தான் இருக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றைக்கண்ணாலே வீசும் உன் ஒருபார்வைக்காக பட்டாம்பூச்சிகள் மாலை நேரத்தில் தவம்கிடக்கின்றனவாம்....அழகான கவிவரிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழி தெரியாப் பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே

வழித்துணையாய் நீ வந்தால் போகும் தூரம் குறைகிறதே....அழகான வரிகளும் இசையும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.