Jump to content

இந்தியாவின் மர்மமான நிகழ்வுகளில் தமிழீழத்தின் விடியலுக்கு எதிரான சதிகளா அல்லது சிங்களனுக்கு எதிரான தொடக்கமா.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

india%20eelam.jpgகடந்த சில நாட்களாக இங்கு இந்தியாவில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளை உற்று நோக்கும் போது,சில மர்மங்கள் நெருடலை ஏற்படுத்துகிறது.

1 )இந்தியாவில் மிக முக்கிய அரசியல் பிரச்சனை நடக்கும்போது அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளாராம் சோனியா.இத்தனைக்கும் உலகத்தரத்தில் இந்தியாவில்

மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள் .

2 ) நாடே உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை பற்றி ஒரு அறிக்கை கூட வெளிடாத மர்மம்.

3 ) இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கடந்த 16 ஆம் தேதி நடைபெறவிருந்த சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் மீதான விவாதமானது,சிறிலங்காவில் போருக்குப்பின்னால் இந்தியா செய்த உதவிகள் தொடர்பாக என்று மாற்றப்பட்டதும் ஒரு மர்மம்.

4 ) சோனியா அறுவை சிகிச்சைக்கு என்று அமேரிக்கா சென்றவுடன் இங்கிலாந்து நாடு ஐரோப்பிய நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளின் தடை நீக்கத்திற்கான வழக்கில் புலிகளுக்கு எதிராக ஆஜராகியதுஒரு மர்மம்,திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு கூட பத்துநாட்களில் வெளியே வரும் இந்த காலத்தில் ஒருமாத காலம் தொட்டு அமெரிக்காவில் சிகிச்சையாம்...நம்மை மடையர்களாக ஆக்குகிறார்களோ என்ற மர்மம் எழுகிறது,ஏனென்றால் கடந்த பதினோரு ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத பேரறிவாளன், சாந்தன்,முருகனின் கருணை மனு சோனியா அமெரிக்கா சென்ற சமயத்தில் தானா நிராகரிக்கப்பட வேண்டும்,...இங்கே மூவருக்கு கருணைமனு

நிராகரிக்கப்படுகிறது அமெரிக்காவின் விமானங்கள் சிறிலங்காவின் வான் பரப்பில் ஒத்திகைக்கு வருகிறது.மர்மத்தின் உச்சக்கட்டமாக இந்தியாவின் வெளியுறவுத்துறை ஆலோசகர் எம்கே நாராயணன் நேற்று தமிழீழ தமிழர்களின் பிரச்சனையில் சிங்களனுக்கு ஆலோசனையும் சிங்கள அரசு தமிழர்களுக்கு எதுவும் செய்யவிரும்பாது என்ற உண்மையையும் சொல்கிறான் இது மிகப்பெரிய மர்மம்...

5 ) உலகத்தின் மிக பெரிய மூன்றாவது கடற்படையும்,கடலோர கேவலப்படை என்ற ஒன்றும் வலிமையாக இருந்தும் வேதாரண்யத்தில் இருந்து வேம்பார்வரைக்குமான 200 கிலோமீட்டர் கடல் எல்லைக்கு 100 படகுகளில் வெறும் 200 ஆளணிகளை கொண்டு பாதுகாப்பு அளிக்காத மர்மம் என்ன என்றும் தெரியவில்லை.

6 ) செப்டம்பர் மாதம் கூடுகின்ற மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா என்ன மாதிரி செயல்படபோகிறது என்ற மர்மமும் இருக்கிறது,ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது இத்தனை மர்மத்திற்கும் ஒரு மெல்லிய தொடர்பு இருக்கிறது,அது இந்தியாவுக்கு இன்னும் மனசாட்சி உறுத்தவில்லை இந்தியாவின் தேசியத்தை காங்கிரசுக்காரன் அழித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை இன்னும் இங்கே யாரும் புரிந்துகொள்ளவில்லை,இந்தியாவின் தமிழர் விரோத செயல்ப்பாடுகளில் தேக்கநிலையினை பாதிக்கப்பட்ட,மற்றும் புலம்பெயர் தமிழீழமக்கள் சிறப்பாக செய்துவிட்டார்கள்.

எதிர்வரும் செப்டம்பர் அமர்வில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் அமெரிக்காவும் ஜெர்மனியும் சிறிலங்காவின் போற்குற்றங்களுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து தீர்மானம் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நேரத்தில்,ராஜபக்சே சீனா செல்கிறான்,சோனியா அமெரிக்காவில் சிகிச்சை என்ற பெயரில்

சதிவலை பின்னுகிறார்,சதிவலைக்கு வலு சேர்க்க,சாந்தன்,பேரறிவாளன்,முருகன் மீதான கருணை மனு நிராகரிப்பு,செய்தியாகிறது ,சர்வதேசம் மீண்டும் ஒருமுறை சண்டாளன்

ராஜீவை உச்சரிக்கிறது,எப்போதும் போல தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் தீர்மானம் கழிவரைக்காகிதமாகிப்போனாலும், தீர்மானம் நிறைவேற்றியவுடன் சென்னை

வந்து முதலமைச்சர் ஜெயலிதாவை பார்த்துவிட்டு கொழும்பு சென்ற சதிகாரன் சிவசங்கரமேணனும் கொழும்பு சென்றுவிட்டு வந்தது தொடர்பாக எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் சொல்லவில்லை.கொலைகாரன் ராஜபக்சேவை மூக்கறுத்து திருப்பி அனுப்ப முழு ஒத்துழைப்பு அளித்த இங்கிலாந்து நாடு,இன்று விடுதலைப் புலிகளின் தடை நீக்கத்திற்கு எதிராக களம் இறங்குகிறது.இத்தனைக்கும் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தெரியும் புலிகளையும் தமிழீழத்து மக்களையும் பிரிக்க முடியாது என்பது

நன்றாக தெரிந்திருந்தும் இங்கிலாந்து தமிழனுக்கு எதிராக களம் இறங்குகிறது.

சோனியா அமெரிக்காவில்,இப்போது அமெரிக்கா வான்படை சிறிலங்காவில் ஒத்திகை பயிற்ச்சியாம்.இப்போது எம்.கே.நாராயணனுக்கு அரசியல் விவகாரம் பற்றி பேசவேண்டிய

தேவை வருகிறதாம்....ம் உச்சந்தலையில் செருப்பால் அடித்தாலும் சரி,சிங்களனுக்கு சேவகம் செய்வதை இந்தியா நிறுத்தாது,இப்போதும் இந்தியாவின் செயல்கள் எந்த விதத்திலாவது சிங்களனுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்ற துடிப்பு மட்டும் அடங்காமல் இருக்கிறது.

இந்தியாவில் காங்கிரசு என்ற ஒரு கட்சி இருக்கும் வரைக்கும் இந்தியா திருந்தப்போவதும் இல்லை,அதன் இறையாண்மை நீடிக்கப்போவதும் இல்லை, இங்கே நாட்டை பற்றி யாரும் கவலை கொள்வதும் இல்லை,உலகத்திலேயே,ஊழலுக்கு எதிராக சட்டம் இயற்றவேண்டி உண்ணாவிரதம் இருந்து போராடும் இழி நிலையில், ஆட்சி நடத்தும் ஒரு கட்சியிடம் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியுமா...

போராடுகிற ஒரு இனம் அதன் சுதந்திரத்தை அடைந்தே தீரும் ....

தமிழீழ தேசிய தலைவர் மேதகு,வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் போராடுவோம்

கிடைக்கின்ற தளங்கள் அனைத்தில் இருந்தும் அயராது போராடுவோம்

வென்றெடுப்போம் சுதந்திர தமிழீழம்

ஈழதேசம் இணையமூடாக மூர்த்தியன்

http://www.eeladhesam.com/index.php?option

Link to comment
Share on other sites

மர்மங்கள் தொடர்ந்தும் மர்மமாக இருக்கமுடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் காங்கிரசு என்ற ஒரு கட்சி இருக்கும் வரைக்கும் இந்தியா திருந்தப்போவதும் இல்லை,அதன் இறையாண்மை நீடிக்கப்போவதும் இல்லை, இங்கே நாட்டை பற்றி யாரும் கவலை கொள்வதும் இல்லை,உலகத்திலேயே,ஊழலுக்கு எதிராக சட்டம் இயற்றவேண்டி உண்ணாவிரதம் இருந்து போராடும் இழி நிலையில், ஆட்சி நடத்தும் ஒரு கட்சியிடம் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியுமா...

போராடுகிற ஒரு இனம் அதன் சுதந்திரத்தை அடைந்தே தீரும் ....

தமிழீழ தேசிய தலைவர் மேதகு,வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் போராடுவோம்

கிடைக்கின்ற தளங்கள் அனைத்தில் இருந்தும் அயராது போராடுவோம்

வென்றெடுப்போம் சுதந்திர தமிழீழம்

congratulations.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலைசெய்துகொண்டிருக்கும்போது, ராஜீவ் என்ற கொலைகாரனது கொலையில் சோடிக்கப்பட்ட கதையூடாகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் நினைத்தபோது இந்தக் காங்கிரஸ் என்ற கட்சியானது கிந்தியாவில் இருக்கும்வரை கிந்தியாவுக்கு உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாதுஎன்ற சிந்தனையே மனதில் ஓடியது. இந்தக் கட்சியை துடைத்ததெறிவதூடாக மட்டுமே உலகில் வலிமையுள்ள, நேர்மையான, சனனாயக நாடாக மிளிரவைக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.