Jump to content

Recommended Posts

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின்

z_page-18-Sri-La-Sri.jpg

சைவ வினா விடை

முதல் புத்தகம்

1. கடவுள் இயல்

1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?

சிவபெருமான்.

2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?

என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.

3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.

4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்?

தமது சத்தியைக் கொண்டு செய்வார்.

5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது?

வல்லமை.

6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?

உமாதேவியார்.

7. சிவபெருமானுடைய திருகுமாரர்கள் யாவர்?

விநாயகக் கடவுள், வைரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.

8. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டு உமாதேவியாரோடும் எழுந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தானம் யாது?

திருகைலாச மலை

9. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு எவ்விடங்களிலே நின்று அருள் செய்வார்?

சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளிடத்திலும், சைவாசாரியர் இடத்திலும், சிவனடியார் இடத்திலும் நின்று அருள் செய்வார்.

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply

7. சிவபெருமானுடைய திருகுமாரர்கள் யாவர்?

விநாயகக் கடவுள், வைரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.

என்னாது, சிவபெருமானுக்கு நாலு குழந்தைங்களா? நேக்கு இன்னிக்குத்தான் தெரியும்! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாது, சிவபெருமானுக்கு நாலு குழந்தைங்களா? நேக்கு இன்னிக்குத்தான் தெரியும்! :unsure:

எனக்கும் தான்

Link to comment
Share on other sites

எனக்கு இந்தப்பதிவு மூலம்தான் தெரியும் சிவபெருமானுக்கு 4பிள்ளைகள் என்று... முருகனுக்கு சுப்பிரமணி பெயர் என்றும் இந்த பதிவு மூலம்தான் தெரியும்.... :lol: :lol:

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ஆறுமுக நாவலர் சிவபெருமானுடன் எப்போதும் 2பிள்ளைகள்தானே இருக்கிறார்கள்... எல்லாக்கோயிலும் முருகனும் பிள்ளையாரையும்தானே சிவபெருமானுடன் வைத்திருக்கிறார்கள் ஏன் மற்ற இரண்டும் பிள்ளைகளையும் அவர் கூட வைத்திருக்கவில்லை.....

ஒரு வேளை சிவபெருமானுக்கு கள்ள மனைவி இன்னும் ஒருதர் இருக்கிறாரா? அப்படியே கள்ள மனைவியின் பிள்ளைகள் என்றாலும் இப்படி பாகுபாடு காட்டலாமா?

கடவுளே இப்படி பண்ணுகிறபடியால்தான் மனுசர்கள் அப்படியே பின்பற்றுகிறார்கள் போல.... :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

2. புண்ணிய பாவ இயல்

1. சிவபெருமான் ஆன்மாகளுக்காக அருளிச் செய்த முதனூல்கள் எவை?

வேதம், சிவாகமம் இரண்டுமாம்.

2. வேத சிவாகமங்களில் விதிக்கப்பட்டவைகள் எவைகள்?

புண்ணியங்கள்.

3. புண்ணியங்கள் ஆவன யாவை?

கடவுளை வழிபடுதல், தாய் தகப்பன், உபாத்தியாயர், குரு முதலாகிய பெரியோர்களை வணங்குதல், உயிர்களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல், செய்ந்நன்றி அறிதல் முதலானவைகள்.

4. புண்ணியங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

மேல் உலகங்களாகிய புண்ணிய லோகங்களிலே போய், இன்பத்தை அனுபவிப்பர்.

5. வேத சிவாகமங்களிலே விலக்கப்பட்டவைகள் எவைகள்?

பாவங்கள்.

6. பாவங்கள் ஆவன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்.

7. பாவங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

நரகங்களிலே விழுந்து, துன்பத்தை அநுபவிப்பர்.

Link to comment
Share on other sites

நாவலரின் பதில்கள் சில சைவ சித்தாந்தத்திற்கு முரணாக உள்ளன.

இருப்பினும் கேள்வி பதில்கள் சிறுவர்களுக்காக எழுதப்பட்டது என்று எடுத்து ஆறுவோம்.

Link to comment
Share on other sites

6. பாவங்கள் ஆவன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்.

வியபிசாரம் ?

அப்பிடீன்னா??

சுத்தமா புரியல்லியே .. A.நாவலர்! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலர் நன்றி உங்கள் பகிர்வுக்கு, நீங்கள் ஆறுமுக நாவலர் பரம்பரையா? அப்படியாயின் உங்களுக்கு வித்துவானை தெரியுமா?

Link to comment
Share on other sites

  • 2 months later...

3. விபூதி இயல்

1. சிவபெருமானை வழிபடுஞ் சமயத்துக்குப் பெயர் யாது?

சைவசமயம்.

2. சைவசமயிகள் சரீரத்திலே ஆவசியமாகத் தரிக்க வேண்டிய அடையாளம் யாது?

விபூதி.

3. விபூதி ஆவது யாது?

பசுவின் சாணத்தை அக்கினியாலே சுடுதலால் உண்டாக்கிய திருநீறு.

4. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?

வெள்ளை நிற விபூதி.

5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?

பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்.

6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?

வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.

7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?

நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும்.

8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?

சிந்திய விபூதியை எடுத்துவிட்டு, அந்த இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

9. நடந்து கொண்டாயினும், கிடந்துகொண்டாயினும் விபூதி தரிக்கலாமா?

தரிக்கல் ஆகாது.

10. எக்காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்?

நித்திரை செய்யப் புகும் போதும், நித்திரை விட்டெழுந்த உடனும், தந்த சுத்தம் செய்த உடனும், சூரியன் உதிக்கும் போதும், அத்தமிக்கும் போதும், ஸ்நானஞ் செய்த உடனும், போசனத்துக்குப் போம் போதும், போசனஞ் செய்த பின்னும் விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்.

11. ஆசாரியர் ஆயினும், சிவனடியார் ஆயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கல் வேண்டும்?

மூன்று தரம் ஆயினும், ஐந்து தரம் ஆயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கல் வேண்டும்.

12. விபூதி வாங்கித் தரித்துக் கொண்ட பின் யாது செய்தல் வேண்டும்?

முன் போல் மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.

13. சுவாமி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?

முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?

உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.

( உத்தூளனம் = நீர் கலவாது, திரிபுண்டரம் =மூன்று குறி)

15. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.

இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிர்ண்டு தானங் கொள்வதும் உண்டு.

16. திரிபுண்டரந் தரிக்கும் இடத்து, நெற்றியில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?

இரண்டு கடைப்புருவ எல்லைவரையுந் தரித்தல் வேண்டும், அதிற் கூடினாலுங் குறைந்தாலுங் குற்றமாம்.

17. மார்பிலும் புயங்களிலும் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?

அவ்வாறங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

(அங்குலம் = 2.5 செ.மீ)

18. மற்றைத் தானங்களில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்.

ஒவ்வோர் அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

19. மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டல் ஆகாது.

Link to comment
Share on other sites

3. விபூதி இயல்

17. மார்பிலும் புயங்களிலும் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?

அவ்வாறங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

(அங்குலம் = 2.5 செ.மீ)

18. மற்றைத் தானங்களில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்.

ஒவ்வோர் அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

19. மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டல் ஆகாது.

தப்பா நீங்க நினைக்கலைன்னா, ஒண்ணு கேட்கணுமே ,, ஆறுமுகநாவலர் அவங்களே.....

முதலும் முடிவும் இல்லா,,, இந்து சமயத்துல, எப்பிடி நீங்க ,, கணித அளவைகளை வைத்து விபூதி அணியும் முறை சொல்லலாம்?

அப்போ கணிதமுறைமை தோன்றுமுன் வாழ்ந்த இந்துக்கள் ,,,எந்த கணிப்பீட்டின்படி ,,, விபூதி இட்டாங்க?

மதவழிபாடுகள் நம்பிக்கைகள், ..நிம்மதியை தரலாம்...

ஆனா... அதுவே... வாழ்க்கைன்னு ,,, டைம் வேஸ்ட் பண்ண கூடாது

எங்கிறதுக்காகதான் இத எழுதினேன்! :rolleyes:

Link to comment
Share on other sites

தப்பா நீங்க நினைக்கலைன்னா, ஒண்ணு கேட்கணுமே ,, ஆறுமுகநாவலர் அவங்களே.....

முதலும் முடிவும் இல்லா,,, இந்து சமயத்துல, எப்பிடி நீங்க ,, கணித அளவைகளை வைத்து விபூதி அணியும் முறை சொல்லலாம்?

அப்போ கணிதமுறைமை தோன்றுமுன் வாழ்ந்த இந்துக்கள் ,,,எந்த கணிப்பீட்டின்படி ,,, விபூதி இட்டாங்க?

மதவழிபாடுகள் நம்பிக்கைகள், ..நிம்மதியை தரலாம்...

ஆனா... அதுவே... வாழ்க்கைன்னு ,,, டைம் வேஸ்ட் பண்ண கூடாது

எங்கிறதுக்காகதான் இத எழுதினேன்! :rolleyes:

இந்து சமயத்தை மாத்திரம் நோக்கித்தான் இப்படியான கேள்விகள் கேட்கலாம். வேற்று மதத்தினரைக் கேட்டால் ஓட்ட நறுக்கி விடுவார்கள்.

சத்தியசாயி பாவா காட்டிய வழிகளை விட இது மோசமானதா? அவரிடமே யாரும் கேள்விகள் கேட்பதில்லை. அதைவிடவா இது மோசம்.

Link to comment
Share on other sites

இந்து சமயத்தை மாத்திரம் நோக்கித்தான் இப்படியான கேள்விகள் கேட்கலாம். வேற்று மதத்தினரைக் கேட்டால் ஓட்ட நறுக்கி விடுவார்கள்.

சரியா சொன்னீங்க தப்பிலி ,, அதாலதான் நானும் இத கேட்டேன்!

என் அம்மா அப்பாதான் இந்துக்கள்... நான் இல்ல... :) !

Link to comment
Share on other sites

சரியா சொன்னீங்க தப்பிலி ,, அதாலதான் நானும் இத கேட்டேன்!

என் அம்மா அப்பாதான் இந்துக்கள்... நான் இல்ல... :) !

இதே கேள்வியை, தமிழர்களை மழுங்கப் பண்ணிய சத்திய சாயிபாவாவிடமும் கேட்டிருக்கலாம்.

அதற்கான கேள்விகளைத் தொடுங்கள்.

Link to comment
Share on other sites

சத்யசாய்பாபா மேல எதுக்கு , கேள்வி தொடுக்கணும் தப்பிலி?

அவரு ஒண்ணும் கடவுள் இல்லியே!

அவரு என்னையபொறுத்தவரை ,, கண்கட்டு வித்தை செய்ஞ்சு ,,, தன்னை ஒரு அவதாரமாக காட்டிய சராசரி மனிதன்!

ஆனா சேர்த்த பணத்தை ,, ஏதோ ஒரு விதத்தில் ,, ஏழைகளுக்கு கொடுத்திருக்கார், அந்த வகையில் அவர் கடவுளைவிட உயர்ந்தவரேதான்!

ஏன் தெரியுமா?

எத்தனை கடவுளுக்கு , கோடிகணக்காய் தட்சணை செலுத்தினாலும், எந்த கடவுளாவது நேரடியா மனிதனுக்கு ஒரு ரூபாயாவது கொடுத்திருக்காரா?

எல்லாம் தருபவன் கடவுள் என்றால், எதுக்கு நாம் அவருக்கு காணிக்கை என்ற பெயரில் , பணமும் நகையும் செலவளிக்கிறோம்?

ஒன்றைப்பெற இன்னொன்றை செலவிடுவிட்டு வரத்தை கடவுளிடம் கேட்டால், அதுக்கு பேரு லஞ்சம் என்று ஆகாதா?

மனிதனுக்கே மனிதன் ,, லஞ்சம் கொடுத்தால் /பெற்றால்.. எந்த நாடுமே உருப்படாது எங்கிறாங்களே,, உலகை காக்கும் கடவுளுக்கே இதை செய்தால், உருப்பட ஏதும் வழிவருமா?

உலகை காப்பவர் கடவுள் என்றால், அங்கே சாமி சிலை திருட்டுபோனால், எதுக்கு உள்ளூர் போலீஸு வரவழைக்கப்படுகிறது?

இந்த கேள்விகள்மேல நீங்களூம் , கேள்விய ,,, மனசால கேளுங்க தப்பிலி! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்யசாய்பாபா மேல எதுக்கு , கேள்வி தொடுக்கணும் தப்பிலி?

அவரு ஒண்ணும் கடவுள் இல்லியே!

அவரு என்னையபொறுத்தவரை ,, கண்கட்டு வித்தை செய்ஞ்சு ,,, தன்னை ஒரு அவதாரமாக காட்டிய சராசரி மனிதன்!

ஆனா சேர்த்த பணத்தை ,, ஏதோ ஒரு விதத்தில் ,, ஏழைகளுக்கு கொடுத்திருக்கார், அந்த வகையில் அவர் கடவுளைவிட உயர்ந்தவரேதான்!

ஏன் தெரியுமா?

எத்தனை கடவுளுக்கு , கோடிகணக்காய் தட்சணை செலுத்தினாலும், எந்த கடவுளாவது நேரடியா மனிதனுக்கு ஒரு ரூபாயாவது கொடுத்திருக்காரா?

எல்லாம் தருபவன் கடவுள் என்றால், எதுக்கு நாம் அவருக்கு காணிக்கை என்ற பெயரில் , பணமும் நகையும் செலவளிக்கிறோம்?

ஒன்றைப்பெற இன்னொன்றை செலவிடுவிட்டு வரத்தை கடவுளிடம் கேட்டால், அதுக்கு பேரு லஞ்சம் என்று ஆகாதா?

மனிதனுக்கே மனிதன் ,, லஞ்சம் கொடுத்தால் /பெற்றால்.. எந்த நாடுமே உருப்படாது எங்கிறாங்களே,, உலகை காக்கும் கடவுளுக்கே இதை செய்தால், உருப்பட ஏதும் வழிவருமா?

உலகை காப்பவர் கடவுள் என்றால், அங்கே சாமி சிலை திருட்டுபோனால், எதுக்கு உள்ளூர் போலீஸு வரவழைக்கப்படுகிறது?

இந்த கேள்விகள்மேல நீங்களூம் , கேள்விய ,,, மனசால கேளுங்க தப்பிலி! :)

கடவுளால் நேரடியாக செய்ய முடியாது என்பதற்காகத் சில நல்ல மனிசரைப் படைத்தான்...கடவுள் பெயரால் கோயிலில் சேர்ந்த காசை நிர்வாகமும்,ஜயர்மாரும் அடித்தது போக மிச்சக் காசு கஸ்டப்பட்ட மக்களுக்குத் தான் போகுது...கடவுள் ஒருத்தரிட்டடையும் வந்து தனக்கு காணிக்கை தரச் சொல்லி கேட்கவில்லை எல்லாம் மக்களாகிய நாங்கள் அமைத்துக் கொண்டது அதற்கு கடவுள் பாவம் என்ன செய்வார்?...சிலை திருட்டுப் போனால் பொலிஸ் தான் கண்டு பிடிக்க வேண்டும் பிறகு எதற்கு அவர்களை படைத்தார் கடவுள்?...முந்திய காலம் என்டால் களவு போனாலும் கடவுள் தானாக திரும்பி வந்து தன்ட இடத்தில் இருப்பார் ஆனால் அக்கிரமம் கூடின இக் காலத்தில் "இந்தப் பாழாப் போன மக்கள் தாங்களாக அடிபட்டு செத்து மிஞ்சி இருப்பவர்கள் மிஞ்சட்டும் என கடவுள் நினைத்திருப்பார் :)

Link to comment
Share on other sites

சிலை திருட்டுப் போனால் பொலிஸ் தான் கண்டு பிடிக்க வேண்டும் பிறகு எதற்கு அவர்களை படைத்தார் கடவுள்?...

முந்திய காலம் என்டால் களவு போனாலும் கடவுள் தானாக திரும்பி வந்து தன்ட இடத்தில் இருப்பார் ஆனால் அக்கிரமம் கூடின இக் காலத்தில் "இந்தப் பாழாப் போன மக்கள் தாங்களாக அடிபட்டு செத்து மிஞ்சி இருப்பவர்கள் மிஞ்சட்டும் என கடவுள் நினைத்திருப்பார் :)

அப்போ மனிதனைப்படைக்க கடவுள் மட்டும் போதுமா?

அம்மா அப்பாவின் ,,, ஆரோக்கியமான உயிரணுக்கள் தேவையில்லையா?

பிள்ளைகளே இல்லாத பெற்றோர்களுக்கு ,,,

அவங்க அடுத்த சந்ததிக்கான வாரிசை,

எப்பிடி கடவுள் அனுப்பி வைக்க ரெடி ஆவார்?

சொல்லுங்க ரதி... சொல்லிகிட்டே போங்க!

& முந்திய காலத்துல களவு போன கடவுள் ,, தானா எப்டி அவரே அவரு இடத்துல வந்து உக்காந்தாரா? எங்கே...எப்போ.. எப்பிடி?

பென்னம் பெரிசா எல்லாம் வேணாமே...

ரொம்ப சின்னதா .. அந்த அதிசயம் நடந்த இடத்த .....

ஆதாரபூர்வமா சொன்னா,,, நேக்கும் ஹாப்பியா இருக்குமா இல்லியா? :)

Link to comment
Share on other sites

சத்யசாய்பாபா மேல எதுக்கு , கேள்வி தொடுக்கணும் தப்பிலி?

அவரு ஒண்ணும் கடவுள் இல்லியே!

அவரு என்னையபொறுத்தவரை ,, கண்கட்டு வித்தை செய்ஞ்சு ,,, தன்னை ஒரு அவதாரமாக காட்டிய சராசரி மனிதன்!

[ஆனா சேர்த்த பணத்தை ,, ஏதோ ஒரு விதத்தில் ,, ஏழைகளுக்கு கொடுத்திருக்கார், அந்த வகையில் அவர் கடவுளைவிட உயர்ந்தவரேதான்!

நாப்பது பேரிடம் பணத்தைக் கறந்து, நாலு பேரைக் கொன்று கிடைக்கும் பணத்தில் இருவரை வாழ வைப்பது புண்ணியமா?

இப்படியான பாபா போன்ற பக்கிரிகளிடம் நியாயம் கேட்டால், 90 களில் சில பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடந்த கதிதான் நடக்கும்.

http://www.saibaba-x...oom_murders.htm

கடவுள் நம்பிக்கை அவரவரைப் பொறுத்தது. அது மற்றவர்களைப் பாதிக்காதாயின், யார் அதில் வந்து தலையிடப்போகிறார்கள்.

Link to comment
Share on other sites

நாப்பது பேரிடம் பணத்தைக் கறந்து, நாலு பேரைக் கொன்று கிடைக்கும் பணத்தில் இருவரை வாழ வைப்பது புண்ணியமா?

இப்படியான பாபா போன்ற பக்கிரிகளிடம் நியாயம் கேட்டால், 90 களில் சில பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடந்த கதிதான் நடக்கும்.

http://www.saibaba-x...oom_murders.htm

கடவுள் நம்பிக்கை அவரவரைப் பொறுத்தது. அது மற்றவர்களைப் பாதிக்காதாயின், யார் அதில் வந்து தலையிடப்போகிறார்கள்.

கண்ணால் காணாத கடவுளுக்கு , எதுக்கு வீண்செலவு ... எங்கிற மீனிங்ல சவுண்டு விட்டேன். :rolleyes:

அப்புறம்தான் தெரிஞ்சுது, தப்பிலி எங்கிற என்னோட சகோதரன் மனச நோகடிச்சிட்டேனா ?

நம்பிக்கைதானே கடவுள்...

சரியா சொன்னீங்க...!!

நம்பிக்கையை உருவாக்குறது மனசுதானே?

அப்போ,, மனசுதானே கடவுள் எங்க எல்லாருக்குமே!

அப்போ அந்த மனசு , இருக்கும் நாங்கதான் ,, கடவுள் ... எல்லாருக்குமே!

எங்களின் வாழ்க்கைமுறைமைதானே ....

இயலாமை & நாதாரிதனம், ஒருவரை ஒருவர் ஏமாற்றும் குணம் .........கிரிட்டிக்கல் ....நிலமை வரும்போது ...கடவுளை ஹெல்ப்க்கு அழைக்குது!

அப்போ இதையெல்லாம் செய்துகிட்டே, கடவுளை துணைக்கு அழைக்கும் மனிதன்...கடவுளையும் கேவலப்படுத்துறான்தானே இல்லியா ? தப்பிலி! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு, சைவ சமைத்தவர்களை குறி வைத்து, கருத்து எழுதுபவர்களின் குடும்பமும், பிள்ளைகளும் நாறிச் சாகும்...

நான்... போட்ட, சாபம். இது வரை... 98% பலித்திருக்குது.matrix-smiley-003.gif

Link to comment
Share on other sites

அறிவிலி, நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைக்கு வரவில்லை. அது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது.

எனது ஆரம்பக் கருத்துக்கே வருகிறேன். பகுத்தறிவு, முற்போக்கு, சோசலிசம், கம்யூனிசம்....... என்று எல்லா வாதங்களும் தங்கள் கத்தியைப் பதம் பார்ப்பது சைவ சமயத்தில் மாத்திரம்தான். மற்றைய சமயங்களை விமர்சிக்கப் பயம். ஊரே எரியும். காரணம் சைவ சமயத்தினர் அநியாயத்திற்கு இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள்.

நான் சைவ சமயத்தைச் சார்ந்த்தவநல்ல. நீங்கள் 'சைவ வினா விடை' பகுதியில் எழுதியபடியால்தான் கருத்திட்டேன்.

சமயங்களைப் பற்றி விமர்சிப்பதென்றால் எல்லா மதங்களையும் விமர்சிக்க வேண்டும். எதிர்க்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் ஒருவரையே பந்தாடுவது பிழை. இது உங்களுக்குச் சொல்லவில்லை. பொதுவாகவே கூறுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி, நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைக்கு வரவில்லை. அது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது.

எனது ஆரம்பக் கருத்துக்கே வருகிறேன். பகுத்தறிவு, முற்போக்கு, சோசலிசம், கம்யூனிசம்....... என்று எல்லா வாதங்களும் தங்கள் கத்தியைப் பதம் பார்ப்பது சைவ சமயத்தில் மாத்திரம்தான். மற்றைய சமயங்களை விமர்சிக்கப் பயம். ஊரே எரியும். காரணம் சைவ சமயத்தினர் அநியாயத்திற்கு இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள்.

நான் சைவ சமயத்தைச் சார்ந்த்தவநல்ல. நீங்கள் 'சைவ வினா விடை' பகுதியில் எழுதியபடியால்தான் கருத்திட்டேன்.

சமயங்களைப் பற்றி விமர்சிப்பதென்றால் எல்லா மதங்களையும் விமர்சிக்க வேண்டும். எதிர்க்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் ஒருவரையே பந்தாடுவது பிழை. இது உங்களுக்குச் சொல்லவில்லை. பொதுவாகவே கூறுகிறேன்.

தப்பிலி, நீங்கள் பெரியவர்.

மற்ற மதங்களை, மட்டம் தட்டாமல்...

இளிச்ச வாயர்களை மட்டம் தட்டுவது, செத்த பாம்பை அடிப்பது போன்றது.

Link to comment
Share on other sites

இப்போ என்னாச்சு தமிழ் சிறிக்கு? ஓவரா சவுண்டு குடுக்குறீங்களே?

கருத்துகளம்னு வந்துட்டா.......எழுதணும்னு நெனைச்சிட்டா.......

எனக்கு பிடித்ததை நான் நேசிக்க எவ்ளோ உரிமை இருக்கோ,

அதைபோல, எனக்கு பிடிக்காததை விமர்சிக்கவும் உரிமை இருக்குதானுங்களே!

என்னோட மதம் பத்தி தானே நான் விமர்சிக்க முடியும்....

இன்னொருவன் வீட்டுக்குள்ளேபோய் ...

அவங்க லைவ் பத்தி பேச எனக்கு என்ன யோக்கியதை இருக்கு?

உங்கள கோவபடுத்திட்டேனா...?

அப்போ காலைதொட்டு மன்னிப்பு கேட்டுகிறேன்!

ஆனா,, என்னோட கருத்துக்கள் என்கூடவே ,,எப்போதும் ஊரை சுத்தும்!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ என்னாச்சு தமிழ் சிறிக்கு? ஓவரா சவுண்டு குடுக்குறீங்களே?

கருத்துகளம்னு வந்துட்டா.......எழுதணும்னு நெனைச்சிட்டா.......

எனக்கு பிடித்ததை நான் நேசிக்க எவ்ளோ உரிமை இருக்கோ,

அதைபோல, எனக்கு பிடிக்காததை விமர்சிக்கவும் உரிமை இருக்குதானுங்களே!

என்னோட மதம் பத்தி தானே நான் விமர்சிக்க முடியும்....

இன்னொருவன் வீட்டுக்குள்ளேபோய் ...

அவங்க லைவ் பத்தி பேச எனக்கு என்ன யோக்கியதை இருக்கு?

உங்கள கோவபடுத்திட்டேனா...?

அப்போ காலைதொட்டு மன்னிப்பு கேட்டுகிறேன்!

ஆனா,, என்னோட கருத்துக்கள் என்கூடவே ,,எப்போதும் ஊரை சுத்தும்!! :)

அப்பு, அறிவிலி...

எமது மதம், எமது இனம், எமது நாடு.... என்று,

ஆசைப்பட்டதால்... எத்தினை, ஒட்டுக்கு குழு புத்துக் கொண்டு.... சிங்களவனோடை சேர்ந்து வீரம் காட்டிச்சு.

இப்ப.. அதுகள் எல்லாம்... கோப்பயன் மயானம் நோக்கி... பயணம். பாடை இல்லாமல். :)

Link to comment
Share on other sites

தப்பிலி, நீங்கள் பெரியவர்.

மற்ற மதங்களை, மட்டம் தட்டாமல்...

இளிச்ச வாயர்களை மட்டம் தட்டுவது, செத்த பாம்பை அடிப்பது போன்றது.

சிறி,

'இளிச்சவாய்' என்று கூறுவதன் காரணம், மற்றவர்கள் தாக்கும் பொழுது பேசாமல் இருப்பது. அது தாக்குதல் நடத்துபவனிற்கு உற்சாகம் கொடுக்கிறது. மிகச் சிறந்த உதாரணம் 'பகுத்தறிவுப் பகலவன்'. சைவ சமயத்தைத் தாக்கிப் பேசுவார். அதே நேரம் பள்ளிவாசலில் இருந்து நோன்புக் கஞ்சி குடிப்பார். காரணம் பயம். சைவ சமயத்தைத் தூற்றுவது போல இஸ்லாமிய மதத்தை தூற்றினால் அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.