Jump to content

Recommended Posts

எனக்கு கண்ணைக் கட்டுது..... சாதிக்கு ஒரு முகம் ; தேசியத்துக்கு ஒரு முகம் , சமூகத்துக்கு ஒருமுகம் , சமயத்துக்கு ஒருமுகம் , ஆனால் உடம்பு ஒண்டு . இவையளை போல ஆக்களை நம்பி இவையளப் பெரிய வித்துவான்கள் எண்டு நம்பிற அப்பாவியளும் இருக்கத்தான் செய்யினம் . முந்தி ஒருகாலத்தில இதே கோதாரிவிழுந்த கதையளாலதான் சனம் கிறீஸ்தவத்துக்கு மாறிச்சுது . அப்ப தங்கடை ஊத்தையளை சவுக்காரம் போட்டு கழுவ வக்கில்லாத யாழ்ப்பாணியம் தான் மதம் மாறின ஆக்களைப் பாத்து ஒரு இறாத்தல் பாணுக்கும் மாவுக்கும் மாறின ஆக்கள் எண்டு கேவலப்படுத்தீச்சுது . இப்ப அதே ஜீனுகள் 2012லையும் மதத்தின்ரை பேரால சாதியையையும் , வர்க்க முரண்பாடுகளையும் சத்தி எடுக்க ஆராவது கேட்டால் உடனை துரோகி பட்டம் . எங்கை போய் நான் முட்ட .

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply

கொஞ்ச நாளாக பார்க்கின்றேன்

சைவ மதத்தின் பெரால் பல திரிகள் தொடர்ந்து திறக்கப்பட்டு அதற்குள் சிலர் துப்பவதில் ஈடுபடுகின்றனர். :( :(

சிறி சொன்னது போல்

வேண்டாம் இந்தத்துப்புதல்கள்.

முடிந்தால் உதவி செய்யயாவிட்டாலும்

ஒதுங்கியிருங்கள்.

நன்றி.

தமிழ் சிறி சொன்ன துப்பல் என்ன ? ஆறுமுகநாவலர் சொன்ன துப்பல் என்ன ? நீங்கள் சொன்ன துப்பல் என்ன ? சத்தியமாய் எனக்கு ஒண்டுமாய் விளங்கேலை விசுகர் .

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் சாதியம் சார்ந்த சமூகத்தை தலை குனிய வைக்கும் சில கேள்வி விடைகளை நீக்கலாம் அல்லது மாத்தி அமைக்கலாம் என்று. மற்றும்படி ஆறுமுகநாவலர் தமிழையும் சைவைத்தையும் காப்பாற்றி வளர்த்த ஒரு ஜானி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கண்ணைக் கட்டுது..... சாதிக்கு ஒரு முகம் ; தேசியத்துக்கு ஒரு முகம் , சமூகத்துக்கு ஒருமுகம் , சமயத்துக்கு ஒருமுகம் , ஆனால் உடம்பு ஒண்டு . இவையளை போல ஆக்களை நம்பி இவையளப் பெரிய வித்துவான்கள் எண்டு நம்பிற அப்பாவியளும் இருக்கத்தான் செய்யினம் . முந்தி ஒருகாலத்தில இதே கோதாரிவிழுந்த கதையளாலதான் சனம் கிறீஸ்தவத்துக்கு மாறிச்சுது . அப்ப தங்கடை ஊத்தையளை சவுக்காரம் போட்டு கழுவ வக்கில்லாத யாழ்ப்பாணியம் தான் மதம் மாறின ஆக்களைப் பாத்து ஒரு இறாத்தல் பாணுக்கும் மாவுக்கும் மாறின ஆக்கள் எண்டு கேவலப்படுத்தீச்சுது . இப்ப அதே ஜீனுகள் 2012லையும் மதத்தின்ரை பேரால சாதியையையும் , வர்க்க முரண்பாடுகளையும் சத்தி எடுக்க ஆராவது கேட்டால் உடனை துரோகி பட்டம் . எங்கை போய் நான் முட்ட .

பிரச்சினை என்னவென்றால்

உடம்பு ஒன்று தான்

அப்பாவுக்கு மகனாக

அம்மாவுக்கு பிள்ளையாக

அணணனுக்கு தம்பியாக

தம்பிக்கு அண்ணனாக

மனைவிக்கு புருசனாக

மகனுக்கு அப்பாவாக.................???

ஆனால் ரோசம் கொஞ்சம் அதிகம்

இதில் எவரையும் எவரும் தூற்ற அனுமதிப்பதில்லை.

எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க முடியாது.

அப்படியானவர்களுக்கு வேறு பெயர்.......???

முதலில்

தமிழின் முதலாவது எண்ணான ஒன்று என்பதை சரியாக எழுதினால் எல்லாம் புரியும் கோ.

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் சாதியம் சார்ந்த சமூகத்தை தலை குனிய வைக்கும் சில கேள்வி விடைகளை நீக்கலாம் அல்லது மாத்தி அமைக்கலாம் என்று. மற்றும்படி ஆறுமுகநாவலர் தமிழையும் சைவைத்தையும் காப்பாற்றி வளர்த்த ஒரு ஜானி.

கடுகுக் களவும் களவுதான் , கற்புரக் களவும் களவு தான்.

எப்படி ஆறுமுக நவாலர் சைவத்தையும் வளர்த்தார் ? இப்படி சாதியத்தையும் வர்கவேறுபாடுகளையும் அப்பாவிகளுக்கு ஊட்டியா ? அப்பிடி ஒரு வளர்ச்சி இன்றைய இளையவர்களுக்கு வேண்டாம் . ஒருவிடையத்தில் சரியாக இருந்திருக்கிறார் , பல கல்விச்சாலைகளை உருவாக்கினார் . ஏன் இந்த ஆறுமுக நாவலரால் தாழத்தப்பட்டவர்களுக்கும் சமயதீட்ச்சை கொடுத்து எல்லோரையும் சமனாக " சைவன் " ஆக்க முடியாமல் போனது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலர்

சாதி வெறியர் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்று.

இன்றையநிலையில் இது எதற்கு?

என்பதே எமது கேள்வி?

Link to comment
Share on other sites

6. பாவங்கள் ஆவன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்.

வியபிசாரம் ?

அப்பிடீன்னா??

சுத்தமா புரியல்லியே .. A.நாவலர்! :unsure:

விசமப்பிரசாரம் :-கதைகட்டுதல் தூற்றுதல் போன்றவை என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

ஆறுமுக நாவலர்

சாதி வெறியர் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்று.

இன்றையநிலையில் இது எதற்கு?

என்பதே எமது கேள்வி?

என்னை பொறுத்த வரையில் சாதி என்பது குலத்தொழிலை குறிப்பது என்றுதான் யாழ்பாண கலாச்சாரம் என்ற நூல் மூலம் தெரிகிறது.அது பின்னர் அருகி அல்லது மருவி வேறு விதமாகத்தலை எடுத்தது.தற்போதைய நிலையில் நேக்கு தேவையில்லாத ஒன்றாகத்தான் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரையில் சாதி என்பது குலத்தொழிலை குறிப்பது என்றுதான் யாழ்பாண கலாச்சாரம் என்ற நூல் மூலம் தெரிகிறது.அது பின்னர் அருகி அல்லது மருவி வேறு விதமாகத்தலை எடுத்தது.தற்போதைய நிலையில் நேக்கு தேவையில்லாத ஒன்றாகத்தான் தெரிகிறது.

:o:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலருக்கு வகுப்பெடுப்பதில் வந்து நிற்குது.

இனி .............???

Link to comment
Share on other sites

ஆறுமுகநாவலரையும், சாதியத்தையும் ஆதரித்துக் கொண்டு எக்காலத்திலும் தமிழ் தேசியத்துக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அப்படி கொடுப்பது ஒன்றில் அறியாமை அல்லது தெரிந்து கொண்டும் சாதியத்தை கைவிட மறுக்கும் நேர்மையற்றதன்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகநாவலரையும், சாதியத்தையும் ஆதரித்துக் கொண்டு எக்காலத்திலும் தமிழ் தேசியத்துக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அப்படி கொடுப்பது ஒன்றில் அறியாமை அல்லது தெரிந்து கொண்டும் சாதியத்தை கைவிட மறுக்கும் நேர்மையற்றதன்மை.

சில விடயங்கள்

இன்றோ நாளையே என புதைத்துவிடக்கூடியன அல்ல.

அவற்றை படிப்படியாகத்தான் புதைக்கணும். கையாளணும். தலைவரும் இது விடயங்களில் அப்படித்தான் நடக்கவேண்டியிருந்தது. இருக்கிறது.

இல்லாது விட்டால் இருப்பதும் உடைந்து போகும்.

தேசியம் என்பதும் தேசியத்துக்கான ஆதரவு என்பதும் மதம் சாதி வட்டாரம் தாண்டிய ஒற்றுமையில் வருவது. அந்த ஒற்றுமையை அடைந்த பின்புதான் பயணத்தை தொடர முடியுமென்றால் எதிரி அதற்குள் எல்லோரையும் அழித்துவிடுவான்.

அதே நேரம் அதற்குள் போய் நின்று மல்லுக்கட்டத்தொடங்கினால் இலட்சியம் அடிபட்டுவிடும். அல்லது காலதாமதம் ஆகிவிடும். எதிரியும் அதைப்பாவித்து எம்மை பிரித்து மேலும் எம்மை அழித்துவிடுவான்.

சிங்களவன் எல்லோரையும் தமிழராகவே பார்க்கின்றான். எல்லோரையும் அழிப்பதே அவனது நோக்கம். அந்தவகையில் தமிழர் ஒற்றுமைப்படவேண்டிய தேவையுள்ளது. புலிகள் பலமாக இருந்தநிலையில் எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. தற்போது அவை மெல்ல மெல்ல முகம் காட்டத்தொடங்குகின்றன. அவற்றை நாம் மேலும் வளர்த்துவிடக்கூடாது என்பதே எனது கருத்து. அதையே இங்கு சுட்டிக்காட்டினேன்.

இந்து மதம் பற்றி எழுதத்தொடங்கினால் சாதி பற்றியும் எழுதுகின்றார். அத்துடன் தேசியத்தையும் அதற்காக உழைப்போரையும் தொடர்பு படுத்துகிறார்கள். இது தான் எனக்கு புரியாதது. இந்து மதமும் தேசியமும் ஒருவரின் இரண்டு கண்கள் போன்றன. இவற்றை ஏதற்காக விவாதப்பொருள் ஆக்குவான் என்பதே எனது கருத்து.

அத்துடன் ஆறுமுகநாவலரை விமர்சிக்க முன்னர்

அவர் தமிழுக்கு செய்தவைகளில் ஒரு வீதத்தையாவது எவராவது செய்துள்ளனரா???

Link to comment
Share on other sites

சில விடயங்கள்

இன்றோ நாளையே என புதைத்துவிடக்கூடியன அல்ல.

அவற்றை படிப்படியாகத்தான் புதைக்கணும். கையாளணும். தலைவரும் இது விடயங்களில் அப்படித்தான் நடக்கவேண்டியிருந்தது. இருக்கிறது.

இல்லாது விட்டால் இருப்பதும் உடைந்து போகும்.

தேசியம் என்பதும் தேசியத்துக்கான ஆதரவு என்பதும் மதம் சாதி வட்டாரம் தாண்டிய ஒற்றுமையில் வருவது. அந்த ஒற்றுமையை அடைந்த பின்புதான் பயணத்தை தொடர முடியுமென்றால் எதிரி அதற்குள் எல்லோரையும் அழித்துவிடுவான்.

அதே நேரம் அதற்குள் போய் நின்று மல்லுக்கட்டத்தொடங்கினால் இலட்சியம் அடிபட்டுவிடும். அல்லது காலதாமதம் ஆகிவிடும். எதிரியும் அதைப்பாவித்து எம்மை பிரித்து மேலும் எம்மை அழித்துவிடுவான்.

சிங்களவன் எல்லோரையும் தமிழராகவே பார்க்கின்றான். எல்லோரையும் அழிப்பதே அவனது நோக்கம். அந்தவகையில் தமிழர் ஒற்றுமைப்படவேண்டிய தேவையுள்ளது. புலிகள் பலமாக இருந்தநிலையில் எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. தற்போது அவை மெல்ல மெல்ல முகம் காட்டத்தொடங்குகின்றன. அவற்றை நாம் மேலும் வளர்த்துவிடக்கூடாது என்பதே எனது கருத்து. அதையே இங்கு சுட்டிக்காட்டினேன்.

ஒரு அடிமையும் எசமானும் சேர்ந்து போராடி விடுதலையை அடைய முடியாது. விடுதலை என்பது அடிமைத் தளைகளில் இருந்து வெளிவருவது. விடுதலையை ஒன்றுபட்ட ஒற்றுமையின்றி பெறமுடியாது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமாக சாதி விடுதலையையும் சேர்க்காத காரணத்தினால் தான் பல்லாயிரக்கணக்கான தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள் இன்னும் விடுதலையை அடையாமல் ஆளும் வர்க்கத்தாலும் உயர் சாதிகளாலும் மோசமாக ஒடுக்கப்படுகின்றனர்.

புலிகள் இராணுவ அமைப்பின் மீது பிரதான கவனம் செலுத்தும் போதும் தம் கட்டமைப்பில் சாதியத்தாக்கம் இல்லாது பார்த்துக் கொண்டமையும் இதனால்தான். சிகை அலங்காரம் செய்பவர்களை வீடுகள் சென்று வேலை செய்வதை தடை செய்தது போன்று பல விடயங்களைச் செய்து இருந்தார்கள். அத்துடன் அவர்களின் தமிழீழ சட்டவாக்கத்திலும் பல நல்ல விடயங்களை உட்புகுத்தி இருந்தார்கள்.

இந்து மதம் பற்றி எழுதத்தொடங்கினால் சாதி பற்றியும் எழுதுகின்றார். அத்துடன் தேசியத்தையும் அதற்காக உழைப்போரையும் தொடர்பு படுத்துகிறார்கள். இது தான் எனக்கு புரியாதது. இந்து மதமும் தேசியமும் ஒருவரின் இரண்டு கண்கள் போன்றன. இவற்றை ஏதற்காக விவாதப்பொருள் ஆக்குவான் என்பதே எனது கருத்து.

ஏனெனில் இந்து மதத்தின் சடங்குகள், வழக்கங்கள் என்ற போர்வையில் மீண்டும் மீண்டும் சாதி சம்பந்தமான விடயங்களை உட்புகுத்த முனைவதால்தான் சாதிய முறையை எதிர்ப்பவர்கள் அதைப் பற்றி எழுதவேண்டி வருகின்றது. கடவுள், கருணை, அன்பு, பகிர்தல் போன்ற அருமையான விடயங்களை மதத்தின் மூலம் பரப்புவதற்கு பதிலாக சாதியத்தை பரப்பும் போது அதை எதிர்ப்பது முக்கியமானதாகின்றது.

ஒருவர் இந்து மதத்தின் பெயரால் சாதியத்தை புகுத்த முனையும் போது, அதை தேசியத்தை ஆதரிக்கும் ஒருவர் ஆதரித்தால் நிச்சயம் அந்த இடத்தில் அவரது நேர்மை மீது சந்தேகம் வருகின்றது. நீங்கள் சொன்ன மாதிரி இந்து மதமும் தேசியமும் இரண்டு கண்களாகக் கொண்டவர் சிவனையோ அல்லது எந்த இந்து மதக் கடவுளையோ கும்பிடுவது பற்றி யாரும் கேள்விகேட்கப் போவதில்லை. அதே அதே நேரத்தில் அவர் இந்து மதத்தின் பெயரால் கோயிலில் மேல்குடி மட்டும்தான் நுழையலாம் என வாதிட்டால் நிச்சயம் கேள்வி கேட்கப்படும்

அத்துடன் ஆறுமுகநாவலரை விமர்சிக்க முன்னர்

அவர் தமிழுக்கு செய்தவைகளில் ஒரு வீதத்தையாவது எவராவது செய்துள்ளனரா???

இவரை விட தமிழுக்கு பெரும் நன்மைகள் பல செய்த அறிஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கினம். சாதியத்தை வெறுத்து பாடிய பாரதியாரும், எல்லாரையும் சமமாக நடத்து என்று போதித்த திருவள்ளுவரும் கூட எம் மொழியில் பிறந்தவர்கள் தான்

---------------------

Link to comment
Share on other sites

கனக்க வேண்டாம் எங்கடை சுவாமி விபுலானந்தர் எங்கை போனவர் ? அவரும் இப்பிடியா துப்பிக் கொண்டு தமிழையும் சைவத்தையும் வளர்த்தார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தோடு எந்த முரண்பாடுமில்லை.

ஆனால் அடிபட்டு வெட்டுப்பட்டு தோற்ற வயது சொல்லுது

இதுகளை தொடாதீர்கள் என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை மெல்லமெல்ல ஒரு சாதிவெறி பிடித்த தளமாகக் காட்டவே ஆறுமுக நாவலரின் சில மூடக் கருத்துக்களும் இங்கே பதிவேற்றப் படுகின்றன.... சாதியத்தை அழுத்தமாக வளர்த்துவிட்டவர்களில் ஆறுமுக நாவலரும் ஒருவர்...அவர் சைவத்துக்கும் தமிழிற்க்கும் செய்த நன்மைக்கு சற்றும் குறைவில்லாதது அவர் எம் சமூகத்திற்க்கு பரப்பிய சாதிய விசக் கிருமியி என்னும் தீமையும்...நாங்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து கொண்டு எவ்வளவு பிற்போக்குத்தனமான விடயங்களை பேசிக்கொண்டிருக்கிறோம்....ஆறுமுக நாவலரின் போதனைகள் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் சமூகத்தை மெதுமெதுவாகக் கெடுக்கும் விசக்கிருமிகளையும் மெல்ல மெல்ல நல்ல போதனைகளினூடு பரப்புகிறது...இப்ப சில தமிழினத் துரோகிகள் எமது உணர்வுகளை சிதைக்க செயற்படுவதுபோல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போதனைகள் யாழில் இருந்து நீக்கப்படவேண்டும் அல்லது மட்டுறுத்துனர்களால் குறிப்பிட்ட விடயங்கள் வெட்டி அகற்றப் படவேண்டும்..இவை மிகக்கேவலமான விடயங்கள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளான...இவை யாழின் களவிதிகளுக்கு முரணானவை...எம்போன்ற இளையவர்களை தவறாக வழிநடத்தும் சில விடயங்களும் ஆறுமுக நாவலரின் போதனைகளினூடு இங்கு பரப்பப்படுகின்றன...ஆறுமுக நாவலரின் பல பிற்போக்குத்தனங்களுடன் தயவு செய்து யாரும் இங்கு எம் தலைவனின் முற்போக்கான தமிழீழப் போராட்டத்தை முடிச்சுப் போடாதீர்கள்..அது எம்போராட்டத்தை நாங்களே கேவலப் படுத்துவது போலாகும்...இதுக்குள் ஏன் தமிழ்தேசியம் வந்தது..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நானும் குறிப்பிட்டேன்

ஆறுமுகநாவலர் சாதி வெறியர் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

தற்போதைய சூழலில் ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு உள்ள

அதை தூக்கி இங்கே கொண்டு வருவதையே குறிப்பிட்டேன்.

அத்துடன் மதங்கள் சம்பந்தமான விடயங்களைத்தவிர்ப்பது நல்லது என்பது எனது கருத்து.

அந்த வகையில் தமிழ்சிறியின் கருத்தோடு ஒத்துப்போகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்ற ஒரு அடையாளமே,ஒற்ரை மந்திரமே உலகமெங்கும் பரந்திருக்கும் எங்களை ஒன்றினைக்கிறது...திராவிடமோ,சாதியமோ,வட்டாரமோ,பிரதேசவாதமோ,இந்து சமயமோ,கிறீஸ்தவமோ அல்ல...எங்கள் ஒற்றுமைக்கு ஆப்பு வைக்கும்,எங்களுக்குள் பிரிவினைகளை வளர்க்கும் கருத்துக்களைப் பரப்புகின்றன ஆறுமுக நாவலரின் சில போதனைகள்...ஏற்கனவே ஆயிரத்தெட்ட்டுப் பிரிவினைகள் எங்களுக்குள்..அதனால் நாங்கள் இழந்தவைகள் போதும்..இன்னும் இன்னும் தமிழினத்தைப் பிரிக்கும் கருத்துக்களை தயவு செய்து பரப்பாதீர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுபேஸ்

பச்சை முடிவடைந்து விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கீழ்த்தர‌ சாதி வெறி பிடித்த செய்திகளை இணைப்பதற்காக ஆறுமுகநாவலர் போன்றோரை யாழில் தடை செய்ய வேண்டும்...இனி மேலாவது நாங்கள் சாதி,மத,இன வேற்றுமைகளைந்து ஒன்றாக இணைய வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சந்தோசமாக வந்து போகும் தளம் இது ஒன்று தான் இதற்குள்ளும் சைவம் வளர்க்கிறம்,அசைவம் வளர்க்கிறம் என்று கொண்டு தேவை அற்ற தலைப்புக்களை எழுதி மக்களை குளப்பாதீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ வினாவிடை என்ற பெயரில் குறித்த ஒரு சாதியினருக்காக எழுதப்பட்டுள்ள வினா விடை இது. இதில் பெரும்பாலான விடைகள் இன்றைய காலத்திற்குத் தகுந்ததாக இல்லாதிருப்பதுடன் சுகாதாரத்திற்குப் புறம்பானவையாகவும் உள்ளன. சைவ சமயத்தின் பெயரில் இவ்வாறான பிற்போக்குத் தனமான கருத்துக்களைச் சுமப்பதை விட குப்பையில் போடலாம்.

மனித முன்னேற்றத்திற்கேற்றவாறு மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ளாத எந்தவொரு மதமோ மொழியோ கலாச்சாரமோ நிலைத்திருக்க முடியாது.

இலங்கையில் இருக்கும் ஏனைய மதத்தினரிடம் சாதி வேற்றுமைகள் இல்லை என்கிறீர்களா? இங்கே ஆறுமுகநாவலரின் எழுத்துக்களை பார்த்து கொந்தழிக்கின்றீர்கள்.அங்கே சகல மதத்தினரிடமும் ..ஏதோ ஒருவகையில் ஏற்றத்தாழ்வுகள் நட்டமரமாக மேலோங்கி எழுந்து நிற்கின்றது.

சாதி வேற்றுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் இதுதான் எனது வேண்டுதல்.

Link to comment
Share on other sites

13. மாணிக்கவாசக சுவாமிகளிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) சிவபெருமானே நரியைக் குதிரை ஆக்கிக்கொண்டு வரும்படிக்கும், மண் சுமந்து அடி படும்படிக்கும் பெற்றுக் கொண்டது.

(2) புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகள் ஆக்கிப் பின் ஊமை தீர்த்துச் சைவர்கள் ஆக்கியது.

(3) பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.

(4) தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்றுக்கொண்டது.

(5) எல்லாருங் காணக் கனகசபையின் உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

vacakar.jpg

Link to comment
Share on other sites

14. இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகின்றது?

சைவசமயமே மெய்ச்சமயம் என்பது நன்றாக விளங்குகின்றது.

15. தமிழ் வேதம் ஓதுதற்கு யோக்கியர் யாவர்?

மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய் ஆசாரம் உடையவராய், சிவதீ?க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

16. தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்டும்?

சுத்தி செய்யப்பட்ட இடத்தில் பீடத்தின் மேலே தமிழ் வேத புத்தகத்தை வைத்து, அருச்சித்து, நமஸ்காரஞ் செய்து, இருந்துகொண்டு, அன்புடனே ஓதுதல் வேண்டும், புத்தகத்தை நிலத்திலேனும், ஆசனத்திலேனும், படுக்கையிலேனும், மடியிலேனும், வைக்கல் ஆகாது.

17. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஓதினவர் யாது பெறுவர்?

சிவபெருமானுடைய திருவடிக் கீழ்ப் பேரின்பத்தைத் அநுபவிப்பர்.

சைவவினாவிடை முதற்புத்தகம் முற்றுப்பெற்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.