Jump to content

Recommended Posts

அன்புள்ள நண்பர்களே!

சைவ சமயம் அனைத்து சாதி மக்களையும் மதிக்கும் சமயமாகும். இம்மதம் தான் அறுபத்து மூன்று நாயன்மார்கள் (எல்லா சாதியைச் சேர்ந்த அடியார்களையும்) வணங்கும் பழக்கம் உள்ளது. ஆறுமுக நாவலர் ஐயா சொன்ன பல நூறு கேள்வி பதில்களில் ஒரு கேள்வி பதில் மட்டும் சிலருக்கு கண்ணில் படுகிறது.

நாவலர் ஐயா அப்போதே எச்சாதியில் பிறந்த மனிதனும் ஆன்மீகத்தினால் தன்னன உயர்த்த வேண்டும் நல்ல செய்திகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

இதோ சில கேள்வி பதில்கள்.

344. வருணத்தாலாவது ஆச்சிரமத்தாலாவது வருணம் ஆச்சிரமம் என்னும் இரண்டினாலுமாவது தம்மிற்றாழ்ந்தவர் தீக்ஷை முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை யாது செய்தல் வேண்டும்?

அவமதித்தலுஞ் செய்யாது, புறத்து வணங்குதலுஞ் செய்யாது, மனத்தால் வணங்கல் வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்தவர் தப்பாது நரகத்தில் வீழ்வர். சிவஞானிகளேயாயின், அவரை, வருணம், ஆச்சிரமம் முதலியவை சற்றுங் குறியாது, எல்லாரும் வணங்கல் வேண்டும். எல்லை கடந்து முறுகி வளரும் மெய்யன்பினால் விழுங்கப்பட்ட மனத்தையுடையவர், திருவேட மாத்திரமுடையவரைக் காணினும், வருணம் ஆச்சிரமம் முதலியன குறித்துக் கூசித் தடைப்படாது, உடனே அத்திருவேடத்தால் வசீகரிக்கப்பட்டு, அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்குவர்; அவ்வுண்மை திருத்தொண்டர் பெரியபுராணத்தினாலே தெளியப்படும.

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply

375. மாகேசுர பூசா காலத்திலே மாகேசுர ரல்லாதவரின், யாது செய்தல் வேண்டும்?

குருடர், முடவர், குழந்தைகள், வயோதிகர், வியாதியாளர், வறியவர் என்பவர்கள் வரின், அவர்களை விலக்காது, இன்சொற்களினாலே மிக மகிழ்வித்து, அவர்களுக்கும் அன்னங் கொடுத்தல் வேண்டும். வறியவருக்குக் கொடுத்தலே கொடை; செல்வருக்குக் கொடுத்தல் திரும்ப வாங்குதற் பொருட்டுக் கடன் கொடுத்தல் போலும்.

இலங்கை முழுவதும் ஆங்கில ஆட்சிகாலத்தில் மக்களை கட்டாய மத மாற்றம் செய்யும் போது அதைத் தடுத்து சைவ சமயத்தை காத்தவர் ஆறுமுக நாவலர். அவரை பிடிக்காது போன சிலர் தான் இன்று அவரைப் பற்றி விசமத்தனமான பிரச்சாரம் செய்கிறார்கள்.

எந்த சாதியினராய் இருந்தாலும் அவர் சிவனடியார்களனால் அவர்கள் பிராமணர்களை விட மேலானவர்கள் என்று அன்றே புரட்சி செய்து ஆதாரத்துடன் நிருபித்தவர். தீக்ஷை எடுத்த சிவனடியார்கள் எந்த சாதியாய் இருப்பினும் அவர்கள் மேலானவர்களே!!

367. மாகேசுர பூசையால் விளையும் பலம் ஏற்பவருடைய உயர்வு தாழ்வுகளினால் வேறுபடுமா?

ஆம். வைதிகப்பிராமணர் ஆயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமுஞ், சமய தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் பதினாயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், விசேஷ தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் லக்ஷம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், நிருவாண தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், சைவாசாரியர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலருக்குப் பக்கத்துக்கு வீட்டுக்காரியைப் பிடிக்காது!

அவளை, அவர் பல தடவைகள், ஏசியிருக்கின்றார்!

ஆனால், ஆறுமுக நாவலர் இறந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக, செத்த வீட்டுக்கு வந்தாள்!

வந்தது மட்டுமல்ல, தலையிலடித்து அழுதாளாம்!

அவள் அழுதபோது,கூறிய வசனம் இது தான்!

வைதாலும், நல் தமிழால் வைகுவையே நாவலா!

எனவே நல்லதை அள்ளுவோம்!

தீயதைத் தள்ளுவோம்!

திருத்தம்! எழுத்துப் பிழை!

Link to comment
Share on other sites

அன்பர்களே!

பொறுமையாக படித்தால் சைவ சமயத்தில் சமூகத்திற்கான பல நல்ல விசயங்கள் உண்டு. அவைகளை எடுத்து தருகிறேன் தொடர்ந்து படியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>நான் இருக்கும் மண்ணிலும் சமயம்,தமிழ் மற்றும் பிள்ளைகளுக்கு தேவையான பாடங்களைப் படிப்பிறவர்கள். பரீட்ச்சை என்றாலோ அல்லது பிற விடயங்களுக்கோ எப்படிப் பட்ட கேள்வி பதில்கள் அங்கே தயாரிக்கிறவர்கள் என்பதும் கொஞ்சம் தெரிந்து வச்சு இருக்கிறம்...தற்போதைய கால கட்டத்தில் கோயிலுக்கு போவதையே ஏன் செய்கிறோம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது...அப்படி இருக்கையில் சைவம்,சாதி,மதம் பற்றிய பிரிவினை வாத போக்கினைக் கடைப்பிடிக்கும் விதமாக எழுதும் எழுதுக்களையும் வெறுக்கிறோம்..மனிதன் சாப்பிட நேரமில்லாமல் திரிகிற இந்தக் கால கட்டத்தில் சாதி,மதம் போன்றவற்றை வேணும் என்றே புகுத்திக் பிரிவினைகளை தான் ஏற்படுத்திக் கொள்ளப் பார்க்கிறீங்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது...என்னைப் பொறுத்த மட்டில் 'தனி ஒருவருக்கு உணவு இல்லையே ஜெயகத்தினையே அளிப்போம்"இப்படித் தான் பாரதியார் கூட சொல்லி வைச்சுட்டு போய் இருக்கிறாரு... இப்படியானவற்றைத் தான் நான் விரும்பிறன்..உலகத்திலயே இருக்கிறவர்கள் எல்லாரும் மனித ஜாதி.அந்தப் புரிந்துணர்வோடு தான் வாழ்ந்து கொண்டு வாறம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது சிறு குறிப்பு தேவை இல்லாமல் இருக்கலாம் என கருதி எடுத்து விட்டேன்.

Link to comment
Share on other sites

" விடுதலைப் போராட்டத்துடன் சாதி வேறுபாடுகள் இல்லாத ஒரு சமுகம் உருவான நிலையில், மேலை நாடுகளில் அது குறித்த எதுவித பிரச்சனைகளே இல்லாத நிலையில், 200 வருடத்திற்கு முந்தைய சொல் பிரயோகம் குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தான் வேண்டுமா? "

அண்ணை நாதமுனி !! " விடிய விடிய ராமாயணம் விடஞ்சால் சீதை ரமனுக்கு என்ன முறை எண்டானாம் " என்ற கணக்காக இதைத் தானே நாங்கள் கருத்துப் பதிவுகள் மூலம் அவரவர் பாணியில் சொன்னோம் . கருத்துகளை வாசித்து விட்டுத்தான் எழுதுகின்றீர்களா ?

" மேலும் ArumukaNavalar இங்கே ஒரு சிறந்த சேவையினை அது தேவைப் படுவோருக்கு சிறப்பாக செய்கின்றார். எய்தவர் இருக்க அம்பை நோவதோ என்பது போல, 200 வருடத்திற்கு முன்னர் வாழ்ந்த ஒருவரின் எழுத்து குறித்து இவரினை நோக முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. "

இவ்வாறு எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வாறு மனம் வந்தது நாதமுனி ? அன்னம் பாலில் உள்ள தண்ணீரைப் பிரித்து எடுப்பது போல ஆறுமுகநாவலர் என்ற புனைபெயரை உடையவருக்கு சைவசமயத்தில் உள்ள தேவயற்ற பகுதிகளை விட்டு நல்ல விடையங்களை சொல்லத் தெரியாதா என்ன ? உண்மையிலேயே இறை ஒழுக்கமும் , மனச்சாட்சிக்கு பயந்தவராகவும் இருந்தால் ,கள உறவுகளிடம் தவறாக எழுதியதிற்கு மன்னிப்பு அல்லவா கேட்டருக்க வேண்டும் ? அப்படி ஏதாவது நடந்துள்ளதா நாதமுனி ? ஒருவர் தவறுகள் விட்டிருந்தால் மற்றவர்கள் சுட்டிக் காட்டும் பொழுது மன்னிப்புக் கேட்பது தான் மனிதப்பண்பு . கள உறவுகள் அவ்வாறுதான் நடக்கிறார்கள் , உங்கள் சார்ந்தவர்கள் எப்பிடி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் ஐயா,

மிகவும் தயங்கித் தான் எனது கருத்தினைச் சொன்னேன். ஏனெனில் சில உறவுகளின் நியாயமான ஆதங்கம் என்னைக் கவலை கொள்ள வைத்தது.

எனது கருத்துகள் தப்பு ஆயின் தயவுடன் மன்னித்து கொள்ளுங்கள்.

விடை பெறுகின்றேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது சிறு குறிப்பு தேவை இல்லாமல் இருக்கலாம் என கருதி எடுத்து விட்டேன்.

ஆறுமுகநாவலருக்கு வகுப்பு எடுக்கும் இடத்தில் நாமெல்லாம்........??? :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகநாவலருக்கு வகுப்பு எடுக்கும் இடத்தில் நாமெல்லாம்........??? :( :( :(

ஏன் அண்ணா ஆறுமுகநாவலருக்கு நாங்கள் வகுப்பெடுக்க கூடாதா?...எங்கட தேசிய தலைவரே பலபேருடைய ஆலோசனைகளைக் கேட்டுத் தான் முடிவெடுக்கிறவர்

Link to comment
Share on other sites

எனது சிறு குறிப்பு தேவை இல்லாமல் இருக்கலாம் என கருதி எடுத்து விட்டேன்.

வணக்கம் நாதமுனி . உங்கள் கருத்துக்களை குவாட் செய்து ஒருவர் கருத்து எழுதியபின் உங்கள் கருத்துக்களை முற்றுமுழுதாக நீக்குவது களவிதிகளுக்கு முற்றிலும் முரணானது . நீங்கள் களவிதிகளைப் படிக்கவில்லையா ?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணா ஆறுமுகநாவலருக்கு நாங்கள் வகுப்பெடுக்க கூடாதா?...எங்கட தேசிய தலைவரே பலபேருடைய ஆலோசனைகளைக் கேட்டுத் தான் முடிவெடுக்கிறவர்

இல்லை

இல்லை

இல்லை என்பது தான் எனது நிலை ரதி

காரணம் அவர் வாழ்ந்த சூழல் மிகவும் பயங்கரமானது.

அந்நிய மனிதர்கள்

ஆக்கிரமி◌ப்பாளர்கள்

அந்நிய மொழித்திணிப்பு

அந்நநிய மதத்திணிப்பு

இவற்றிற்கு நடுவே தனியாக நின்று அவர் தமிழுக்கும் சமயத்துக்கும் செய்த சேவைகள் அளப்பெரியன.

அவற்றுள் அவர் சைவ சமய நெறி சார்ந்து எடுத்த சில நடவடிக்கைகள் அந்த நேரத்தில் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய உலகில் அவை மாற்றமடைந்துள்ளன.

அவற்றை வைத்துக்கொண்டு எம் போன்றோர் ஆறுமுகநாவலுக்கு வகுப்பெடுப்பது பரிதாபத்துக்குரியது.

தலைவரைப்பற்றி எழுதியிருந்தீர்கள்

எனக்கு இந்த இருவர் பற்றியும் வகுப்பெடுக்க எவருக்கும் தகுதியில்லை என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

இல்லை

இல்லை என்பது தான் எனது நிலை ரதி

காரணம் அவர் வாழ்ந்த சூழல் மிகவும் பயங்கரமானது.

அந்நிய மனிதர்கள்

ஆக்கிரமி◌ப்பாளர்கள்

அந்நிய மொழித்திணிப்பு

அந்நநிய மதத்திணிப்பு

இவற்றிற்கு நடுவே தனியாக நின்று அவர் தமிழுக்கும் சமயத்துக்கும் செய்த சேவைகள் அளப்பெரியன.

அவற்றுள் அவர் சைவ சமய நெறி சார்ந்து எடுத்த சில நடவடிக்கைகள் அந்த நேரத்தில் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய உலகில் அவை மாற்றமடைந்துள்ளன.

அவற்றை வைத்துக்கொண்டு எம் போன்றோர் ஆறுமுகநாவலுக்கு வகுப்பெடுப்பது பரிதாபத்துக்குரியது.

தலைவரைப்பற்றி எழுதியிருந்தீர்கள்

எனக்கு இந்த இருவர் பற்றியும் வகுப்பெடுக்க எவருக்கும் தகுதியில்லை என்பதே உண்மை.

அண்ணா நீங்கள் மேற் சொன்ன கடுமையான கால கட்டத்தில் வாழ்ந்த நாவலர் என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா?

மனிதர்கள் மதம் மாறமல் இருப்பதற்காகவது சாதி வேற்றுமையை ஒழித்திருக்க வேண்டும்...சம உரிமை கொடுத்திருக்க வேண்டும்.அதற்காக போராடி இருக்க வேண்டும் அப்படி அந்தக் காலத்திலேயே அவர் போராடியிருந்தால் பெரும்பான்மையான மக்கள் மதம் மாறி இருக்க மாட்டார்கள்...மக்கள் மதம் மாறக் கார‌ணமே இவரும்,அவரை விமர்சிக்க தவறி அவரோடு சேர்ந்து அந்தக் காலத்தில் ஆதர‌வு கொடுத்த மக்களும் தான்.

மதங்கள் உருவாக்கப்பட்டதே நல்வழி போதிக்கத் தான் இப்ப,இங்கு இதைக் கொண்டு போடுபவராவது அந்தக் காலத்தில் ஆறுமுக நாவலர் சொன்ன தேவையில்லாத கருத்தை விட்டு,விட்டு மக்களை நல் வழிப் படுத்தும் கருத்துக்களை போட‌லாமே!...அவர் தான் போட்டது பிழை எனச் சொல்லவும் இல்லை அதற்காக மன்னிப்பு கேட்கவும் இல்லை...புலிகள் மக்களை ஒரு வழிப்படுத்த சாதி வேற்றுமைகளை நீக்கினார்கள் அந்த புலிகளையும்,தேசியத்தையும் உயிர் மூச்சாக நினைக்கும் உங்களால் எப்படி சாதி வெறியர்களையும் ஆதரிக்க முடியுது?

நாவலரையும்,தலைவரையும் ஒப்பிடாதீங்கோ...தலைவரின்ட‌ கால் தூசிக்கும் அவர் வர‌ மாட்டார்...நாவலரையும் பார்க்க தமிழை வளர்த்த கண பேர் இருக்கினம்...உண்மையை சொல்லப் போனால் இவர் எமக்கு நன்மையை விட தீமை தான் அதிகம் செய்திருக்கிறார் இவரால் தான் எங்கட‌ பெரும்பான்மை மக்கள் மதம் மாறினவை.

உண்மையான விமர்சனங்களை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம்...விமர்சனங்கள் தான் ஒரு மனிதனை பக்குவப்பட‌ வைக்கும் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதிய பலர் ஆறுமுக நாவலர் தமிழை வளர்த்தவர்

என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.

அதேவேளை அவர் சாதியையும் வளர்த்தார் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றனர்.

சமயம் என்பது நம்பிக்கை

சாதி என்பது அடக்குமுறை

இரண்டையும் கலந்து குழப்புதல் ஆகாது.

இந்து சமயம் சாதிவெறியைத் தூண்டுகின்றது என்பதை எவரும்

எற்றுக்க்கொள்ள மாட்டார்கள்.

இந்து சமயத்தையும் அதில் இருக்கும் சில ஓட்டைகளையும் பயன்படுத்தி

ஒருசில அடிப்படைவாதிகளினாலேயே இப்படியான சாதிவெறி பிடித்த

கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

இவர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளச்

சமயத்தைப் பாவிக்கின்றனர்.

அப்படியானவர்களை இனம் கண்டு கொண்டால்

சாதி இரண்டு ஒளிய வேறில்லை என்பது புலப்படும்.

ஆறுமுக நாவலரைத் திட்டுவதால் சாதி ஒளியும்

என்றால் நானும் சேர்ந்து திட்டத் தயார்.

மூலம் எங்கோ இருக்கின்றது.

வாலைப் பிடித்து என்ன பயன்.

Link to comment
Share on other sites

வாத்தியாரின் கருத்தை வரவேற்கிறேன். சில குறைகளை களைய வேண்டும், அதற்காக அந்த மதத்தையே பிழையென்று கருதுதல் ஆகாது. சாதியையும் சமயத்தையும் எப்போது கலந்தார்களோ தெரியாது?

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் எனப் பட்டாங்கியில் உள்ளபடி' அப்படீன்னு யாரோ சொன்னதாக ஞாபகம். அப்படிப் பார்த்தால் மொத்தத் தமிழனுமே தலை குனிய வேண்டும்.

சாதியத்தால்தான் இந்தக் கேவலமான நிலை. அந்தக் காலத்தில் வாழ்ந்த ஆறுமுகநாவலரின் சாதிய கொள்கை தொடர்பாக, இங்கு பதியும் ஆறுமுக அண்ணன் கொஞ்சம் கவனம் எடுப்பது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த சைவ - வினா விடை என்றால் பயம். சின்னனில ஒரு 100.. 150 கேள்விகளை தந்து படிடா என்று விடுவாங்க. கடவுளே.. நான் அதுகளோட பட்டபாடு. இன்று அவை ஒரு பவுணுக்கு கூட எனக்கு வருவாய் தருதில்ல..! வெறும் காத்து தாங்க வருது.. உதுகளைப் படிச்சு..????!

திருநீறு பூசியே.. 10... 15 வருசமாகுது..! அதைப் பற்றிய கேள்வி மட்டும் 3 பக்கத்துக்கு படிச்சன்.. என்ன பயன்.....???!

அதுவும் இல்லாம.. விவேகானந்தா சபை என்று ஒரு சைவ சோதினை வைப்பாங்க. அதில ஏ எடுத்தா.. ஸ்கூலில ஒரு கீரோ. வெளில.. அது.. ஜீரோ..! தேவையா நமக்கு இதுகள் எல்லாம்..???! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா நீங்கள் மேற் சொன்ன கடுமையான கால கட்டத்தில் வாழ்ந்த நாவலர் என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா?

மனிதர்கள் மதம் மாறமல் இருப்பதற்காகவது சாதி வேற்றுமையை ஒழித்திருக்க வேண்டும்...சம உரிமை கொடுத்திருக்க வேண்டும்.அதற்காக போராடி இருக்க வேண்டும் அப்படி அந்தக் காலத்திலேயே அவர் போராடியிருந்தால் பெரும்பான்மையான மக்கள் மதம் மாறி இருக்க மாட்டார்கள்...மக்கள் மதம் மாறக் கார‌ணமே இவரும்,அவரை விமர்சிக்க தவறி அவரோடு சேர்ந்து அந்தக் காலத்தில் ஆதர‌வு கொடுத்த மக்களும் தான்.

மதங்கள் உருவாக்கப்பட்டதே நல்வழி போதிக்கத் தான் இப்ப,இங்கு இதைக் கொண்டு போடுபவராவது அந்தக் காலத்தில் ஆறுமுக நாவலர் சொன்ன தேவையில்லாத கருத்தை விட்டு,விட்டு மக்களை நல் வழிப் படுத்தும் கருத்துக்களை போட‌லாமே!...அவர் தான் போட்டது பிழை எனச் சொல்லவும் இல்லை அதற்காக மன்னிப்பு கேட்கவும் இல்லை...புலிகள் மக்களை ஒரு வழிப்படுத்த சாதி வேற்றுமைகளை நீக்கினார்கள் அந்த புலிகளையும்,தேசியத்தையும் உயிர் மூச்சாக நினைக்கும் உங்களால் எப்படி சாதி வெறியர்களையும் ஆதரிக்க முடியுது?

நாவலரையும்,தலைவரையும் ஒப்பிடாதீங்கோ...தலைவரின்ட‌ கால் தூசிக்கும் அவர் வர‌ மாட்டார்...நாவலரையும் பார்க்க தமிழை வளர்த்த கண பேர் இருக்கினம்...உண்மையை சொல்லப் போனால் இவர் எமக்கு நன்மையை விட தீமை தான் அதிகம் செய்திருக்கிறார் இவரால் தான் எங்கட‌ பெரும்பான்மை மக்கள் மதம் மாறினவை.

உண்மையான விமர்சனங்களை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம்...விமர்சனங்கள் தான் ஒரு மனிதனை பக்குவப்பட‌ வைக்கும் என்பது எனது கருத்து.

எம்மை காத்தவர்களை விமர்சிகக்க முன்

அவரைப்பற்றியும் அவராற்றிய பணிகள் பற்றியும் அவர்மீதான மக்களின் மதிப்பு குறித்தும் அறிந்து கொள்ளுங்கள் ரதி.

மற்றும்படி உங்கள் கருத்துக்களுக்கு எதிரானதல்ல எனது கருத்தும்.

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.

இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும், சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார். அவர் நிறுவிய முதலாவது பாடசாலை வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையாகும். அது 1848ம் ஆண்டில் நிறுவப் பெற்றது. தமிழ் நாடு சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவி அங்கு போதிப்பதற்கு சைவசமய நூல்களைப் பிரசுரித்தார். இதற்காக சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சுக்கூடங்களை நிறுவினார்.

சைவ வினாவிடை, பாலபாடம், பெரிய புராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான பல நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

ஏடுகளில் எழுதப்பட்டிருந்த பல பழந்தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சில் பதிப்பித்தவரும், அத்துறையில் ஏனையோருக்கு வழி காட்டியாக விளங்கியவரும் நாவலர் பெருமானே ஆவார். சைவத் தமிழ்ப் பணிகளை இடையூறின்றி செய்வதற்காக தமக்குக் கிடைத்த உத்தியோகத்தையும் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான். தமது வாழ்நாள் முழுவதும் பிரம்சாரியாகவே வாழ்ந்தவர். சிவாலயங்களிலும், மடாலயங்களிலும் சைவ சமய உண்மைகளை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்தல், புராணப் படலம் செய்தல் என்பவற்றினால் சைவப் பிரசாரம் செய்தவர் நாவலர் அத்துடன் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு சைவத்தின் உண்மையை விளக்கி சைவ மக்களிடையே புகுந்துள்ள மாசு நீக்கிப் புறச் சமயத்தவரின் தீவிர பிரசாரத்தை தடுக்க முற்பட்டவர்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார். இதன் காரணமாக ஆலயங்கள் மீண்டும் அமையப் பெற்றன. இறைவனின் இயல்புகளும், இறை நெறியின் அறப்பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன. எமது கலைத்திட்டத்திலே சமயக் கல்விக்கு இன்று முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணர்ந்து எங்கள் நாவலர் பெருமான் நடைமுறைப்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச நூல்கள், தாய்மொழிக் கல்வி என்று நாடு பெருமைப்படும் கல்விச் சாதனைகளை அன்றே அவர் நிலைநாட்டினார்.

கல்வியழகும், தெய்வ நெறியும், பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத்துடித்தார். அதற்காக கடுமையாக அவர் உழைத்தார். அவரது வாழ்வின் இலட்சியமே இதுவாக இருந்தது. வசதியான உத்தியோகத்தைப் பெறும் வாய்ப்பிலிருந்தும் அவர் அதனை ஏற்கவில்லை. இல்வாழ்வில் புகவில்லை. இவையனைத்துக்கும் காரணம் சைவ சமயத்தையும் அதற்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்ற பேராசை தம்மிடம் குடிகொண்டிருந்தமை யாகும் என ஒரு சந்தர்ப்பத்திலே தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் நாவலர்.

நெற்றியிலே நீறுபூசவும், வாழையிலையிலே அமுதுண்ணவும் கூட நம்மவர்கள் அஞ்சியஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த அவலங்கள் மாறவும், அன்று அந்நியரின் இன்னல் தாங்காது நாட்டை விட்டே வெளியேறிய ஞானப்பிரகாசர் போன்றோரின் பிரார்த்தனைகள் பலிக்கவும் நாவலர் எழுந்தார். எங்கள் கலாசாரம் பிழைத்துக் கொண்டது. சிவநெறி தழைத்து முன்பிருந்த எங்கள் சமயாச்சாரியார்கள் தாம் தரிசனம் செய்யப் போன தலங்களிலெல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார்கள். இவரோ தாம் போன் இடங்களிலெல்லாம் லோகோபகாரமாகச் சைவப் பிரசங்கங்களைச் செய்து வந்தார். சமயப் பிரசங்கங்களுடன் சமயா சாரியார்களின் தேவார திருமுறைகளையும் விளங்கச் செய்தவர் நாவலர். அந்த நன்நெறிப் பயணத்திலே தான் எத்துணை இடர்கள், ஆதரவில்லாத அந்நியர்கள் இழைத்த இன்னல்கள்.

ஒரு புறம் அடியவர் போன்று வேஷமிட்டு ஏமாற்றும் நம்மவர் செய்கை, மறு புறம் அனைத்தை யும் தம் உறுதியான தெளிந்த உள்ளத்தினால் வென்றார். நாவலர் “நிலையில்லாத என் சரீரம் உள்ளபோதே என்கருத்து நிறைவேறுமோ நிறைவேறாதோ எனும் கவலை என்னை இரவு பகலாக வருத்துகின்றது என்று கூறிய நாவலர் பெருமானின் கருத்தின்படி தமிழ்க் கல்வியும், சைவ சமயமும், அபிவிருத்தியா வதற்கு கருவிகள் மற்றும் முக்கிய ஸ்தலங்கள் தோறும் வித்தியா சாலை தாபித்தலும் சைவப் பிரசாரம் செய்வித்தலு மாகும். இவற்றின் பொருட்டு சிரமமாகக் கற்று வல்ல உபாத்தியாயர்களும், சைவப் பிரசாரகர்களுமே தேவைப்படுவார்கள் என்ற நாவலரின் ஏக்கம் தீர இனைய நாவலர்கள் பலர் எழுந்தார்கள், பெருமானின் பணிகளிலே இவர்களும் கலந்தார்கள்.

1894ம் ஆண்டிலே நல்லூர் கந்தசாமி கோயிலிலே நிகழ்ந்த ஒரு அற்புதக் காட்சியை நாவலர் சரித்திரத்திலே பின்வருமாறு வர்ணிக்கின்றார் கனகரத்தினம் பிள்ளை, கந்தசாமி கோயிற் திருவிழா சமீபித்தபடியால் தேவாரத் திருக் கூட்டச் சிறப்பையும், தேவாரம் முதலியவை திருவிழா காலத்திலே சுவாமிக்குப் பின்னாக ஓதுவதற் சனங்களுக்குண்டாகும் கடவுட் பக்தியையும் மக்களுக்கு எடுத்துக்காட்ட நினைத்து திருவாவடுதுறையினின்று ஓதவார் சிலரை அழைப்பித்து திருவிழா காலத்திலே அவர்களுக்கும் இங்குள்ள மற்றைய சைவர்களுக்கும் நெற்கு வீதி மடத்திலே புண்ணியவான்கள் சிலரைக் கொண்டு மகேஷ்வர பூஜை செய்வித்து, சுவாமி வீதியிலே உற்சவங் கொண்டருளும் போது சுவாமிக்குப் பின்னாக அவர்களைக் கொண்டு தேவாரம் ஓதுவித்துக் கொண்டு வந்தார். இவர்கள் தமிழ் வேதமாகிய தேவாரத்தை ஓத அதனைக் கண்ட பிராமணர் தாங்களும் வந்து சுவாமிக்குப் பின்னாக வேதம் ஓதுவாராயினார்கள்.

நாவலரும் விபூதி உந்தூறனஞ் செய்து திரிபுண்டரந் தரித்து தலையிலேய சிரமாலையும் கழுத்திலே கண்டிகையுங் கையிலே பெளத்திர முந் தரித்து யாவர்க்கும் பக்தியை விளைவிக்கத்தக்க சிவ வேடப் பொலிவோடு திருக்கூட்டத் தலைவராய் நின்றார். அத்திருக்கூட்டத்தின் சிறப்பை என்னென்று சொல்வோம்! எதற்கொப்பிடுவோம், சுப்பிரமணிய பெருமானின் அவதாரமாய் விளங்கிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பதினாராயிரம் திருக்கூடத்தோடு தோற்றிய சிறப்புக் கொப்பிடலாம்.

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார்.

தமிழுக்கும், சைவத்துக்கும் அரும் தொண்டாற்றிய நாவலர் பெருமானை அவரது குரு பூசை தினத்தில் நினைத்து வழிபட்டு அவர் பெருமை பேசுவோமாக.

www.swisstamilsangam.blogspot.com

www.aarumuganaavalar.blogspot.com

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102113&hl=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதிய பலர் ஆறுமுக நாவலர் தமிழை வளர்த்தவர்

என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.

அதேவேளை அவர் சாதியையும் வளர்த்தார் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றனர்.

சமயம் என்பது நம்பிக்கை

சாதி என்பது அடக்குமுறை

இரண்டையும் கலந்து குழப்புதல் ஆகாது.

இந்து சமயம் சாதிவெறியைத் தூண்டுகின்றது என்பதை எவரும்

எற்றுக்க்கொள்ள மாட்டார்கள்.

இந்து சமயத்தையும் அதில் இருக்கும் சில ஓட்டைகளையும் பயன்படுத்தி

ஒருசில அடிப்படைவாதிகளினாலேயே இப்படியான சாதிவெறி பிடித்த

கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

இவர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளச்

சமயத்தைப் பாவிக்கின்றனர்.

அப்படியானவர்களை இனம் கண்டு கொண்டால்

சாதி இரண்டு ஒளிய வேறில்லை என்பது புலப்படும்.

ஆறுமுக நாவலரைத் திட்டுவதால் சாதி ஒளியும்

என்றால் நானும் சேர்ந்து திட்டத் தயார்.

மூலம் எங்கோ இருக்கின்றது.

வாலைப் பிடித்து என்ன பயன்.

வாத்தியார் இங்கு யார் மதத்தைப் பற்றி தப்பாகப் பேசினது :unsure:

எம்மை காத்தவர்களை விமர்சிகக்க முன்

அவரைப்பற்றியும் அவராற்றிய பணிகள் பற்றியும் அவர்மீதான மக்களின் மதிப்பு குறித்தும் அறிந்து கொள்ளுங்கள் ரதி.

மற்றும்படி உங்கள் கருத்துக்களுக்கு எதிரானதல்ல எனது கருத்தும்.

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.

இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும், சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார். அவர் நிறுவிய முதலாவது பாடசாலை வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையாகும். அது 1848ம் ஆண்டில் நிறுவப் பெற்றது. தமிழ் நாடு சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவி அங்கு போதிப்பதற்கு சைவசமய நூல்களைப் பிரசுரித்தார். இதற்காக சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சுக்கூடங்களை நிறுவினார்.

சைவ வினாவிடை, பாலபாடம், பெரிய புராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான பல நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

ஏடுகளில் எழுதப்பட்டிருந்த பல பழந்தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சில் பதிப்பித்தவரும், அத்துறையில் ஏனையோருக்கு வழி காட்டியாக விளங்கியவரும் நாவலர் பெருமானே ஆவார். சைவத் தமிழ்ப் பணிகளை இடையூறின்றி செய்வதற்காக தமக்குக் கிடைத்த உத்தியோகத்தையும் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான். தமது வாழ்நாள் முழுவதும் பிரம்சாரியாகவே வாழ்ந்தவர். சிவாலயங்களிலும், மடாலயங்களிலும் சைவ சமய உண்மைகளை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்தல், புராணப் படலம் செய்தல் என்பவற்றினால் சைவப் பிரசாரம் செய்தவர் நாவலர் அத்துடன் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு சைவத்தின் உண்மையை விளக்கி சைவ மக்களிடையே புகுந்துள்ள மாசு நீக்கிப் புறச் சமயத்தவரின் தீவிர பிரசாரத்தை தடுக்க முற்பட்டவர்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார். இதன் காரணமாக ஆலயங்கள் மீண்டும் அமையப் பெற்றன. இறைவனின் இயல்புகளும், இறை நெறியின் அறப்பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன. எமது கலைத்திட்டத்திலே சமயக் கல்விக்கு இன்று முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணர்ந்து எங்கள் நாவலர் பெருமான் நடைமுறைப்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச நூல்கள், தாய்மொழிக் கல்வி என்று நாடு பெருமைப்படும் கல்விச் சாதனைகளை அன்றே அவர் நிலைநாட்டினார்.

கல்வியழகும், தெய்வ நெறியும், பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத்துடித்தார். அதற்காக கடுமையாக அவர் உழைத்தார். அவரது வாழ்வின் இலட்சியமே இதுவாக இருந்தது. வசதியான உத்தியோகத்தைப் பெறும் வாய்ப்பிலிருந்தும் அவர் அதனை ஏற்கவில்லை. இல்வாழ்வில் புகவில்லை. இவையனைத்துக்கும் காரணம் சைவ சமயத்தையும் அதற்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்ற பேராசை தம்மிடம் குடிகொண்டிருந்தமை யாகும் என ஒரு சந்தர்ப்பத்திலே தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் நாவலர்.

நெற்றியிலே நீறுபூசவும், வாழையிலையிலே அமுதுண்ணவும் கூட நம்மவர்கள் அஞ்சியஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த அவலங்கள் மாறவும், அன்று அந்நியரின் இன்னல் தாங்காது நாட்டை விட்டே வெளியேறிய ஞானப்பிரகாசர் போன்றோரின் பிரார்த்தனைகள் பலிக்கவும் நாவலர் எழுந்தார். எங்கள் கலாசாரம் பிழைத்துக் கொண்டது. சிவநெறி தழைத்து முன்பிருந்த எங்கள் சமயாச்சாரியார்கள் தாம் தரிசனம் செய்யப் போன தலங்களிலெல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார்கள். இவரோ தாம் போன் இடங்களிலெல்லாம் லோகோபகாரமாகச் சைவப் பிரசங்கங்களைச் செய்து வந்தார். சமயப் பிரசங்கங்களுடன் சமயா சாரியார்களின் தேவார திருமுறைகளையும் விளங்கச் செய்தவர் நாவலர். அந்த நன்நெறிப் பயணத்திலே தான் எத்துணை இடர்கள், ஆதரவில்லாத அந்நியர்கள் இழைத்த இன்னல்கள்.

ஒரு புறம் அடியவர் போன்று வேஷமிட்டு ஏமாற்றும் நம்மவர் செய்கை, மறு புறம் அனைத்தை யும் தம் உறுதியான தெளிந்த உள்ளத்தினால் வென்றார். நாவலர் “நிலையில்லாத என் சரீரம் உள்ளபோதே என்கருத்து நிறைவேறுமோ நிறைவேறாதோ எனும் கவலை என்னை இரவு பகலாக வருத்துகின்றது என்று கூறிய நாவலர் பெருமானின் கருத்தின்படி தமிழ்க் கல்வியும், சைவ சமயமும், அபிவிருத்தியா வதற்கு கருவிகள் மற்றும் முக்கிய ஸ்தலங்கள் தோறும் வித்தியா சாலை தாபித்தலும் சைவப் பிரசாரம் செய்வித்தலு மாகும். இவற்றின் பொருட்டு சிரமமாகக் கற்று வல்ல உபாத்தியாயர்களும், சைவப் பிரசாரகர்களுமே தேவைப்படுவார்கள் என்ற நாவலரின் ஏக்கம் தீர இனைய நாவலர்கள் பலர் எழுந்தார்கள், பெருமானின் பணிகளிலே இவர்களும் கலந்தார்கள்.

1894ம் ஆண்டிலே நல்லூர் கந்தசாமி கோயிலிலே நிகழ்ந்த ஒரு அற்புதக் காட்சியை நாவலர் சரித்திரத்திலே பின்வருமாறு வர்ணிக்கின்றார் கனகரத்தினம் பிள்ளை, கந்தசாமி கோயிற் திருவிழா சமீபித்தபடியால் தேவாரத் திருக் கூட்டச் சிறப்பையும், தேவாரம் முதலியவை திருவிழா காலத்திலே சுவாமிக்குப் பின்னாக ஓதுவதற் சனங்களுக்குண்டாகும் கடவுட் பக்தியையும் மக்களுக்கு எடுத்துக்காட்ட நினைத்து திருவாவடுதுறையினின்று ஓதவார் சிலரை அழைப்பித்து திருவிழா காலத்திலே அவர்களுக்கும் இங்குள்ள மற்றைய சைவர்களுக்கும் நெற்கு வீதி மடத்திலே புண்ணியவான்கள் சிலரைக் கொண்டு மகேஷ்வர பூஜை செய்வித்து, சுவாமி வீதியிலே உற்சவங் கொண்டருளும் போது சுவாமிக்குப் பின்னாக அவர்களைக் கொண்டு தேவாரம் ஓதுவித்துக் கொண்டு வந்தார். இவர்கள் தமிழ் வேதமாகிய தேவாரத்தை ஓத அதனைக் கண்ட பிராமணர் தாங்களும் வந்து சுவாமிக்குப் பின்னாக வேதம் ஓதுவாராயினார்கள்.

நாவலரும் விபூதி உந்தூறனஞ் செய்து திரிபுண்டரந் தரித்து தலையிலேய சிரமாலையும் கழுத்திலே கண்டிகையுங் கையிலே பெளத்திர முந் தரித்து யாவர்க்கும் பக்தியை விளைவிக்கத்தக்க சிவ வேடப் பொலிவோடு திருக்கூட்டத் தலைவராய் நின்றார். அத்திருக்கூட்டத்தின் சிறப்பை என்னென்று சொல்வோம்! எதற்கொப்பிடுவோம், சுப்பிரமணிய பெருமானின் அவதாரமாய் விளங்கிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பதினாராயிரம் திருக்கூடத்தோடு தோற்றிய சிறப்புக் கொப்பிடலாம்.

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார்.

தமிழுக்கும், சைவத்துக்கும் அரும் தொண்டாற்றிய நாவலர் பெருமானை அவரது குரு பூசை தினத்தில் நினைத்து வழிபட்டு அவர் பெருமை பேசுவோமாக.

www.swisstamilsangam.blogspot.com

www.aarumuganaavalar.blogspot.com

http://www.yarl.com/...topic=102113=

ஆறுமுகநாவலர் பற்றி சின்னனிலேயே சைவப் பாடத்தில் படிச்சிட்டேன் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒருமுறை

இந்த அண்ணனுக்காக... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலருக்கு வகுப்பெடுப்பதில் வந்து நிற்குது.

இனி .............???

ஆறுமுகநாவலருக்கே... பாடம் கற்பிக்கும் அளவில், பலர் இங்கு உள்ளார்கள்.

ஆறுமுகநாவலர் இருந்திராவிட்டால்... எப்பவோ தமிழன் தனது அடையாளத்தை தொலைத்திருப்பான் என்பது, இவர்களுக்கு விளங்காதது, ஆச்சரியம் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.