Jump to content

வவுனியாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டில் ஆசிரியர் ஒருவர்


Recommended Posts

வவுனியாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டில் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை.

கமலநாதன் 35 வயது உடையவர் அத்துடன் 3 பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.

இவர் அவருடைய நண்பன் உடன் மோட்டார் ஊர்தியில் சென்று கொண்டிருந்த போதே இனம் தெரியா 3 நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றிய மேலதிக தகவல் கள உறவுகளுக்கு யாருக்காவது தெரிந்தால் போடுங்கள்

நானும் அறிந்தால் போடுகின்றேன்

Link to comment
Share on other sites

ம்ம் இன்னும் சில நாட்களில் சிங்கள அரசபயங்கரவாதத்திற்கு சரியான பதில் கிடைக்கும்.

சந்தியா சரியான நேரத்தில் தகவலைத்தந்தீர்கள்.

Link to comment
Share on other sites

வவுனியாவில் வைரவரவர்புளியங்குளம் பகுதியில் சிறுவர் பூங்காவுக்கு அண்மையாக அமைந்திருக்கும் வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் புகழ்பெற்று விளங்கும் "வீனஸ் கல்வி நிறுவணம்" இயக்குனர் & வர்த்தக பாட ஆசிரியரான சந்திரன் சேர் எண்டு அனைவராலும் அழைக்கப்படும் கமலச்சந்திரன் ஆசிரியர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன், காரணம் 1999ம் ஆண்டு O/L வர்த்தகம் அவரிடம் படித்தேன், பாட நேரத்தில் கண்டிப்பான ஆசிரியராகவும், பாட நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தில் நண்பனாராகவும் பழகுமொரு ஆசிரியர், சரியாக 6 வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை இங்கே கூறினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்,

1999ம் ஆண்டு அங்கே கல்வி கற்றுக்கொண்டு இருக்கும்பொழுது எமக்கு வயசு 15, அந்த நேரத்தில் வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் கிரிக்கட் பைத்தியம், அந்த வேளையில் O/L பரீட்சை நேரம், அப்பொழுது சந்திரன் சேர் சொல்லுவார், கிரிக்கட் விளையாடுங்க, ஆதே நேரம் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று, ஒரு முறை எங்கள் வகுப்பில் உள்ள சில குசும்பு நண்பர்கள், வவுனியா பஸ்ராண்டிற்கு நேரே இருக்கும் கிரிக்கட் கடை ஒன்றிற்கு சென்று அங்கே துடுப்பாட்ட மட்டைகளை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள், அப்பொழுது எங்கள் நண்பர்களில் ஒருத்தன் கிரிக்கட் பற் ஒன்றை சுட எத்தனித்தபொழுது கையும் மையுமாக மாட்டிவிட்டார் (கொக்கபுறா பட் விலை 400 ரூபா) அவரை கடையில் வைத்து கடை உரிமையாளர்கள் அதட்டி கேட்டபொழுது அவன் நான் வீனஸ் கல்வி நிறுவனத்தில் படிக்கிறேன் எண்டு சொல்லிட்டான், அப்பொழுது இந்த விடயம் சந்திரன் சேரின் காதுக்கு போய்விட்டது, உடனடியாக அவர் அந்த கடைக்கு சென்று அவர்களிடம் இவர்கள் என்னுடைய மாணவர்கள்தான், விளையாட்டு வயசு என்று கூறிவிட்டு அவர்களிடம் இவர்கள் செய்த இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார், அப்படியே அந்த துடுப்பாட்ட மட்டையையும், என்னொரு விலை உயர்ந்த மட்டையையும் தான் காசு குடுத்து வாங்கிக்கொண்டு வந்து தந்தார், தரும்பொழுது ஆசிரியர் எண்ட வகையில் அந்த சம்பவத்தோடு சம்பத்தப்பட்ட மாணவர்களை தண்டிக்கவும் தவறவில்லை, (அதில் ஈடுபட்ட அனைவருக்கு பூசை விழுந்தது), தண்டிக்கு பொழுது (தடியால் அடிக்கிறது) சொன்னார், என்னட்ட கேட்டிருந்தால் வேண்டி தந்திருக்கமாட்டனோ என கேட்டார், இப்பொழுதும் அந்த நிகழ்வு என் மனதில் இருக்கின்றது,

மீண்டும் ஒரு புத்திஜீவி, பண்பான, ஒருவரை இழந்துவிட்டோம், என்னுடன் சந்திரன் சேரிடம் ஒன்றாக படித்த களத்தில் இருக்கும் என்னொரு உறுப்பினர் SHAN XP மாணவரும் இப்பொழுது புலத்திலே இருக்கிறோம். எங்கள் அன்பு ஆசிரியரின் குடும்பத்துக்கு அனுதபம் தெரிவிக்கிறோம், அத்துடன் சந்திரன் ஆசிரியரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். :cry: :cry: :cry:

அடிகடி என்னை செல்வா செல்வா என்று அவர் அழைக்கும் முறை இப்பொழுதும் எனது மனதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது,,, :cry: :cry:

Link to comment
Share on other sites

வாசிக்கும் போதே கண் கலங்கிறது செல்வன்!

சந்திரன் மாஸ்ரரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!! :lol:

Link to comment
Share on other sites

செல்வன் நன்றி உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

செல்வனுக்கும் அவருடைய ஆசிரியர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

செல்வன் அண்ணாநன்றி உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நானும் பிரார்த்திக்கிறேன்

எனக்கு அவருடைய குடும்பத்தினருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது அவர்கள் மூலம் தான் இச்செய்தியை அறிந்தேன்

Link to comment
Share on other sites

கைக்கூலிகள் அநியாயமாக ஒரு ஆசிரியரின்; உயிரை எடுத்துவிட்டார்களே. எத்தனை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படப்போகின்றார்கள். கைக்கூலிகளை விட்டுவைத்தது நாம் செய்த பெரிய தவறு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.