Jump to content

கடவுள் என்பது அன்பே சிவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் வயசுக்கு வந்ததில் இருந்து எல்லா கடவுளையும் கும்பிடுவேன் ஆனா அர்ச்சனை, உண்டியலில் போடுவது, ஐயரை காசு கொடுத்து வலைப்பது (விபூதி தரமல் போய் கூப்பிட்டு வங்க வேண்டிய நிலை),...etc, etc.. செய்வதில்லை & விருப்பமும் இல்லை, ஆனா மனைவி எனக்கு நேர்மாறு, அவாவின் இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை பிறகு எனக்குதான் பிரச்சனை ஏன்ட தலையிட்டம் என்று.....

கோயிலுக்கு போட்டுவரும்போது வாசலில் இருக்கும் ஏழைகளுக்கு போட்டுவிடுவேன். அத்துடன் கன ஏழைகளுக்கு என்னால் இயன்ற உதவி செய்தனான் & செய்து கொண்டிருக்கிறேன். "ஏழைகளின் சிரிப்பில் கடவுளை காண்கிறேன்". வலியை அனுபவிச்சாதான் வலியை பற்றி நல்லா புரியும்.

இப்ப கேள்வி நேரம்

கேள்வி:

எல்லாம் அவன் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது, தலையெழுத்தை யாராலும் திருத்தி எழுத முடியாது, வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று சொல்லிக்(நம்பி)கொண்டே ராசிக்கல், வாஸ்து, ஜாதகம், பரிகாரம், இவைகள் மூலம் தலையெழுத்தை திருத்தி விடலாம் என்று நம்புபவர்கள் உண்மையாகவே கடவுள் நம்பிக்கையாளர்களா? உண்மையாகவே கடவுளை நம்புகிற ஒருவருக்கு இம்மாதிரியான நம்பிக்கைகள் அவசியம்தானா?

சில பதில்கள்

பதில்1:

கடவுள் உண்டு என உண்மையாக நம்புகிறவர்கள் நீங்கள் கூறிய ராசிக்கல், வாஸ்து, ஜாதகம், பரிகாரம், இவைகள் எதையுமே நம்பமாட்டார்கள், ஆனால் இதை எல்லாம் நம்புகிறவர்கள் அவர்களை நாத்திக வாதி (கடவுள் நம்பிக்கை அற்றவர்) என கூறுவார்கள். கடவுளை உண்மையாக உணர்ந்தால் அது என்ன என்பது புரிந்துவிடும், பிறகு இம்மாதிரியான போலி நம்பிக்கைகளுக்கு அவசியம் இருக்காது.

பதில்2:

கடவுளை நம்புகிறேன் என சொல்பவர்தான்(99.99%) இவைகள் அத்தனையையும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கடவுளை நம்பாத நாத்திகன் இவைகளை நம்பினால் அது பிரச்சினையே இல்லை. எனக்கும் இந்த கேள்வியை கேட்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

பதில்3:

”கடவுள் என்பது அன்பே சிவம்” என்பதில் எனக்கு சிறு குழப்பம் உள்ளது. ஏனெனில் என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் நான் அன்பே சிவத்தை இச்சமூகத்தில் மூன்று விதமாகப் பார்க்கிறேன்.

1)கடவுள் பக்தன் என்கிற போர்வையில் மறைந்து கொண்டு கண்முன்னே சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒருவன் இருப்பதை பார்த்த பின்னரும் அவனை கண்டுகொள்ளாமல் உண்டியலில் பணத்தை கொட்டுபவன்.( இவ்வர்க்கத்தில் இருப்பவன்தான் அதிகமாக அன்பேசிவம் என்கிற வார்த்தையை பயன் படுத்துகிறான்).

2)கடவுள் இல்லை என்று வெளிப்படையாக சொல்லிக் கொண்டு தன்னால் இயன்ற உதவியை ஏழை எளியவர்க்கும் அனாதைகளுக்கும் செய்பவன்.(இந்த வகை அன்பேசிவம் மிகமிக குறைவு)

3) கடவுளை முழுமையாக நம்பிக் கொண்டு ஏழை எளியர்க்கு செய்யும் தொண்டு இறைவனுக்கே செய்யும் தொண்டு என தொண்டு செய்து வாழ்பவர்கள்( இந்த வகையினரை கண்டுபிடிப்பதே அரிதாகி விட்டது).

நண்பா நீங்கள் எந்தவகை அன்பேசிவத்தை குறிப்பிட்டீர்கள்?

சுவாமி விவேகானந்தர் சொல்கிறார் “சாமி சிலைகளில் கடவுளைத் தேடுபவன் இன்னும் கிணற்றுத் தவளையாகவே இருக்கிறான். வறியவர்க்கு உதவி செய்து அவர்தம் சிரிப்பில் கடவுளைக் காண்பவன் கடவுளைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறான்”.

உண்டியலில் பணத்தைப் போட்டால் நாம் செய்த பாவம் போகலாம்! ஏழைகளுக்கு உதவுவதால் புண்ணியம் சேரும்.

பதில்4:

”ரொம்ப யோசிக்கிற வேற வேல வெட்டி இல்ல போல” இதுதான் உங்க பதிலா நண்பரே? வேலை இருந்தாலும் வெட்டியாய் இருந்தாலும் யோசிக்கிற உயிரினத்துக்கு பெயர்தான் மனிதன். என்னை நீங்கள் மனிதன் என்று ஒத்துக் கொண்டீர்கள். அப்படியானால் நீங்க? எத்தனையோ பேர் படித்தார்கள் எதுவும் எழுதாமல் போய்விட்டார்கள்.

அதுபோல் நீங்களும் சென்றிருக்கலாமே? உங்க கருத்தை நாகரீகமான முறையில் எழுத முயலுங்கள்.தயவு செய்து இப்படி தனி நபரை கொச்சைப் படுத்துகிற மாதிரி எழுத வேண்டாம்.

நான் சொன்ன 3 அன்பே சிவத்தில் நீங்க முதல் வகையை சார்ந்தவர் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.கடவுள் என்பது அன்பே சிவம் என்றாயே என்றாவது ஒருநாள் யாரிடமாவது கேட்டிருப்பாயா? கடவுளை தரிசிக்க கட்டணம் ஏன் எதெற்கென்று? இன்றுவரை தலித்துகள் தமிழகத்தில் கோவிலுக்குள் நுழைய முடியாமல் தவிக்கிறார்களே அது ஏன்?

கேட்டாயா? ஆண்டாண்டு காலமாக கல்வித்துறைக்கென்று ஒரு தனி அமைச்சர் (சரஸ்வதி-கடவுள்) இருந்தும் கூட காமராஜர் என்கிற மனிதக் கடவுளின் முயற்சியால்தான் தமிழகத்தில் உள்ளவன் படிக்கவே ஆரம்பித்தான் இது தெரியுமா? இந்தியன் ஏதாவது கண்டு பிடித்திருக்கிறானா? ஆமாம், 33 கோடி கடவுள்கள் அந்த கடவுள்களுக்கு உரிய வாகனங்கள் (முருகர்-மயில், பிள்ளையார்-எலி)இப்படியாக இவன் கும்பிடும் பட்டியலில் சாணியைக் கூட விட்டுவைக்க வில்லை. இதுதான் சாதனை.

இப்போதிருந்தாவது நிறைய யோசி. உண்மை புரியும்

பதில்5:

கடவுள் என்பது மனிதனின் “கண்டுபிடிப்பு”. ஹிந்துக்களால் பெர்ஷியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. மற்றபடி, சக்தியும் இல்லை, சிவனும் இல்லை.

“உயர் சக்தி” என்பதை மனிதன் கண்டுபிடித்துவிட்டால், நம் வாழ்க்கை பயணம் அந்த நொடியே நின்று விடும். மனித வாழ்வில் “காலம்” என்ற ஒன்று இருக்காது.

http://askintamil.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

xU flTs; my;yJ rf;jp ek;ik gilj;jJ.

kw;waJ ehk; gilj;j flTs;.

ehk; gilj;j flTis ntspNa fhzyhk;.

ek;ik gilj;j flTis ek; cs;Ns czuyhk;.

vd;W cz;ikahd flTis cs;sj;jpNy czu;fpNwhNkh md;W

ekJ re;Njfq;fs; mfd;WtpLk;.

xU fzk; fz;fis %b cz;ikapNy flTis czu;e;Njdh ,y;iyah vd cq;fisNa NfOq;fs;.

Mk; vd;why; ey;yJ.. ,y;iynad;why; NjLq;fs;.

' Njb Njb Njnlzhj; Njtid Njbf; fz;L nfhz;Nld;.

vd;Ds;Ns Njbf; fz;L nfhz;Nld;. "

khzpf;fthrfu

Link to comment
Share on other sites

நம்மோட கொள்கை ......... கடவுள் எங்கிறது ........ கம்முனாட்டி மனுசன் படைச்சதுதான் உடையார் அண்ணா!

நேத்து கேட்டீங்க பதில் சொல்ல சொல்லி............! டைம் கிடைக்கல்லே....ஓடிட்டேன்!

ஆனா இன்னிக்கு சொல்லிட்டேன்!

நாளைக்கு மீதி சொல்றேன்! smile001.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மோட கொள்கை ......... கடவுள் எங்கிறது ........ கம்முனாட்டி மனுசன் படைச்சதுதான் உடையார் அண்ணா!

நேத்து கேட்டீங்க பதில் சொல்ல சொல்லி............! டைம் கிடைக்கல்லே....ஓடிட்டேன்!

ஆனா இன்னிக்கு சொல்லிட்டேன்!

நாளைக்கு மீதி சொல்றேன்! smile001.gif

நன்றி அறிவிலி பதிலுக்கு, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்றில் நம்பிக்கை, கருத்து வேறுபாடுகள், அதனால்தானே யாழில் கும்மியடிக்கிறம், எங்கள் கவிஞர் கண்ணதாசன் ஏன் மாறினர், இறக்கும் தறுவாயில் பலருக்கு கடவுள் ஞானம் வருதே ஏன் பயமா, ரத்தம் சுண்டி விட்டது என்ற,

கருநாய் கடவுளே இல்லை என்று போட்டு பின் கதவால் ஏன் பிள்ளைகள், பெஞ்சாதிகளை சாய்யிடம் அனுப்பினவர், ஏன்,

ஏன், ஏன், தேடுகிறேன் கிடைக்கவில்லை,

அறிவில்+இருக்கும் நீங்கள் கட்டாயம் என்னை போன்றோருக்கு விளக்கம் தரனும்

Link to comment
Share on other sites

என்னாது அறிவில் ப்ளஸ் ஆ? நக்கல்ஸ்?? ம்ம்ம்

நடக்கட்டும் நடக்கட்டும்.....

அறிவில பிறர்முன் ..தன்னைய மைனஸா காட்டிக்கிறவங்கதான்..

உண்மையான அறிவாளிங்கிறது நேக்கு தெரியும்...

ஏன்னா....... அவுங்கதான் இன்னும் நிறைய அறிந்துகொள்ள ஆசைபடுவாங்க!

ஸோ...நீங்கதான் அறிவில்+ உடையாரண்ணா!

கடவுள் எங்கிறது வெறும் நம்பிக்கை!

சட்டபூர்வமானதல்ல!

1) கஷ்டத்தில இருக்குறவங்களும் ............

2) உசரத்துல இருக்கிறவங்களும்தான் கடவுளை ஓயாமல்.....நெனைப்பாய்ங்க..!

முதலாவது...... இயலாமை.....கொஞ்சம் வசதி வேண்டி ..கடவுளோட ஹெல்ப் கேக்குறாய்ங்க!

இரண்டாவது ......மத்தவரை ஏய்ச்சு பொழைச்சதால பாவம் வந்து சேரபோகுதே எங்கிற பயத்துல கடவுளோட ஹெல்ப் கேக்குறாய்ங்க!

எங்களை விட கடவுள் உயர்ந்தவர்ன்னு சொல்லிட்டு............ அவருக்கே அல்வா கொடுக்குறானுகளே........

மொததுல கடவுளுக்கே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா!!

இதாலதான் கடவுளையும்.. அவர் கப்சா தொண்டர்களையும்... நானு நம்புறதில்ல

உடையாரண்ணா....... தப்பா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.