Jump to content

அடர் அவை உறவுகளய்யா ஆதியை அம்போ என்றுவிட்டுவிட்டு காணாமல்போய்விட்டார்கள்


Recommended Posts

யாழ்க்களத்திற்குள்ளும் அடர்அவை உறவுகளய்யா இவர்கள்

ஆதியை அம்போ என்று விட்டுவிட்டு காணாமல் போய்விட்டார்கள் ஆற்றாமையில் ஆதி அடர் அவையின் செயற்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு காணாமல்ப் போனோர் அறிவிப்பை வரையவேண்டி இருக்கிறது.

திருவாளர் சின்னப்பு

மூன்றடி உயரமும், இரண்டு கொம்புகளிலும் தங்கக் குமிழுடனும்

எப்போதும் புண்ணாக்கை உண்ணும் இவர் தென்னை,பனை மரங்களைக் கண்டால் அங்கேயே செக்கிழுக்க ஆரம்பித்துவிடுவார்.

இவரைப்பற்றிய மேலதிக விபரங்களாவன.....

மூக்கை எப்போதுமே முசுறிக்கொண்டும், கண்டவர்,நின்றவர், கதைகேடபவர் என்று பாகுபாடின்றி முறாய்க்கும் சக்கரவர்த்தி

நித்திலா....

நித்திலத்தில் குற்றங்கள் மலிந்து கிடப்பதால் சட்டத்தரணிகளின் வாய்சவடால்கள் உச்சமடைந்திருக்கிறது அந்த வகையில் இவருடைய வாதாட்டம் யாழ்க்களத்தில் பிரபலம்.. ஆனால் இங்கு எவருக்காக வாதாடினாலும் கால் காசுகூடக் கொடுக்கிறார்கள் இல்லையே என்று ஆதிவாசியிடம் ஒருபாட்டம் அழுதவர்தான் அதன் பின்பு காணவில்லை. இத்துடன் இணைத்த படத்தில் அவரின் அடையாளங்கள் உள்ளன. யாரேனும் அவரைக்கண்டால் அறியத்தரவேண்டிய முகவரி

அடர் அவை

யாழ்க்களம்.

0390.jpg

மணிவாசகன்.....

ஆதியின் வாலை அறுக்கப் படாதபாடுபட்டும் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்ததனால் எல்லை மீறிய கோபத்தில் தன்னுடைய மனையாள் பேரளம்பெண் நாச்சியாருடன் வாய்த்தர்க்கத்தில் குதித்து குமுறி வெடித்து வீட்டைவிட்டு காணாமல் போனதாகக் கேள்வி எங்கே உள்ளார் என்பது மர்மக் கதைபோல் பலமுடிச்சுகளைப் போட்டு இருக்கிறது.... இவர் தன் பேரிளம்மனையாளுடன் ஆத்திரத்தில் குதிக்கும் போது அவரின் பதினாறாவது புத்திரன் செம்புலி எடுத்த புகைப்படம் இது இவையே அவர் காணாமல் போகுமுன் அணிந்திருந்த ஆடைகள். இப்படத்தில் உள்ள அடையாளங்களுடன் முக்கியமாக கையில் மணியையும் எப்போதும் வைத்திருப்பார். ஏன் என்று கேட்டால் இது மணி நான் வாசகன் என்பார். இது அவருடைய பிரத்தியேகத் தன்மை.

இவரைக்காண்பவர்கள் தகவல் கொடுக்கவேண்டிய முகவரி

பேரிளம் பெண் நாச்சியார்

பித்தர்குளம்

எல்லாளன்......

சரியான யொள்ளுப் பார்ட்டி...

பாட்டு எழுதுவேன் என்று அடம்பிடித்து யாழ்க்களகிழவிகளிடம் மாட்டி துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடியவர் பின்நாளில் ஏதோ தகரப் பெட்டியுடன் தெருத்தெருவாக பாடியாடித்திரிகிறார் என்றும் உறுதிப்படுத்த நிழல்படத்தையும் யாரோ ஒரு அநாமதேயம் ஆதியின் அடர்அவைக்கு அனுப்பியுள்ளார். பார்க்கும் போது மிவும் பரிதாபமாகத் தென்படுவார். முடி உதிர்வதைத் தடுக்க எத்தனையோ உபாயங்களைக் கையாண்டும் முடியாத நிலையில் முடிகள் கொட்டி நிலவேறி நடக்கும் நிலைகொண்டவர். கூரையைப்பார்த்து முட்டாளென்று நினைக்காதீர்கள். அருகில் போய் கதைத்தாலே அரியாசனம் கேட்பார். இவரைப்பற்றிய விபரம் அறிந்தவர்கள் கீழக்கண்ட முகவரிக்கு சேதியை அனுப்பி வைக்கவும்

பட்டத்து அரிசி

எல்லாளன் சபை

oracleart_musicmaker.jpg

வெண்ணிலா....

நிலவில் தூங்கும் நிகழ்கால லேடி அப்பப்போ எல்லோரையும் நொட்டிச் செல்லும் சின்னவெண்ணிலா.

லொலிபொப் கேட்டு அடம் பிடிக்கும் இவர் அண்மையில் அடர்அவைக் கவி மேகத்தால் வாழ்க்கையில் லொலிப்பொப் கேட்கவே மாட்டேன் என்ற சபதத்துடன் காணாமல் போயுள்ளார்.

இந்த நிலாப் பெண்ணைப் பற்றி தகவல் கிடைத்தால் அறிவிக்க வேண்டிய இடம்

வம்பர் ஆரியா

வால்த் தோட்டம்

இவர் இரசிகை பார்த்தால் சாது

இயற்கையை இரசிப்பார.; இவர் இருக்குமிடத்தில் காகங்கள் சூழ்ந்து ஒப்பாரி வைக்கும் வேறொன்றுமில்லை இயற்கையை இரசிப்பது அளவு கடந்து இறக்கைகளைப் பிய்ப்பதுவரைபோயிருக்கிறது. இதில் வரும் நிழற்படத்தில் புறாக்களோடு நிற்கிறாரே புன்னகை அரசி என்று ஏமாந்து விடாதீர்கள். யாழ்க்களத்துப் புலிகேசி காகங்களைப் புறாக்களாகக் கிராபிக்ஸ் செய்து கொடுத்திருக்கிறார்

காகங்கள் அழும் இடத்தில் கட்டாயம் இந்தப் பேர்வழி இருப்பார்.

யாரேனும் அறிந்தால் அறியத்தரவும்.

ரௌத்திuசபை

பிரளயபுரம்.

1140060134_CMyDocumentsDoveLady.jpg

பித்தன் ஓ.....ஸாரி புத்தன் எல்ஸின் பிய்ந்த தொப்பிதான்

வேண்டுமென்று களவாடி ஓடியவர்தான் எங்கிருக்கிறார் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. அண்மையில் சிட்னியில் உலவுகிறார் என்று கந்தப்பர் தகவல் தந்துள்ளார் சிட்னி வாசிகள் யாராவது இவரைக்கண்டால் உடனடியாக கட்டி வைத்துவிட்டு ஆதிக்குத் தகவல் அனுப்புமாறு வேண்டப்படுகின்றனர்.

அடர்அவை மன்னன் ஆதிவாசி

காட்டுக்குட்டை

இவர் மாறா இளமையுடன் உலா வந்த முருகன்.

என்றைக்குத் தினைப்புனத்து வள்ளிமயிலைக் கண்டாரோ இப்படி ஆகிவிட்டார். பழுத்த தள்ளாமையால் பசுங்கிளியை வளைக்கத் திட்டமிட்டு ஆதியின் ஆசியுடன் கானகக்குயிலைத் தேடிச்சென்றவர்தான் எத்தகவலும் கொடுக்கவில்லை. யானை அடித்துவிட்டதா? புூனை அடித்துவிட்டதா? எதுவுமே தெரியவில்லை

பொல்லாத முதுமை உச்சமேறி எங்Nகுனும் பிதற்றித்திரிகிறாரா? என்பதும் தெரியவில்லை. கானகம் செல்லும் களத்து உறவுகள் யாரேனும் இம்முதியோனைக் கண்டால் எப்பாடுபட்டேனும் இவ்விடம் சேர்ப்பீராக.

அண்ணன் மோதகவயிரோன்

கைலாசமலை

old-guy.gif

புண்ணியம் செய்த ஆத்மா அல்லிகா ஆதியின் கோலத்தை அலங்கோலம் செய்வதற்கே பிறவி எடுத்தவர்...... காணமல் போனவரை தொலைந்து போகட்டும் என்று விட்டுவிட முடியவில்லை பிறகு அவையில் ஆதிவாசி அல்லிகாவைக் கொன்றுவிட்டதாகக் கதைகட்டத் தயங்க மாட்டார்கள். அதற்காகவேணும் கட்டாயம் கண்டுபிடித்தே ஆகவேண்டும். இப்போது புரிகிறதா புண்ணியம் செய்த ஆத்மா என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்று....

இவரின் mழகு கொழிக்கும் உருவம் இதுதான் கோமாளி மாதிரித் தெரிவார். கவனம் கூர்மையானதால் தாக்குவார்????? அதாங்க புத்தியையைச் சொல்கிறேன் எதிராளிகளை இலாவகமான வசைக்கத்தெரிந்தவர் மட்டுமல்ல வறுக்கவும் தெரிந்தவர் ஆதிவாசி அடிக்கடி வறுபட்ட அநுபவத்தால் கூறுகிறேன். சொல்ல மறந்து விட்டேன் இவரைப்பற்றிய தகவலைக் கொடுக்க வேண்டிய இடம்.

தசமத் தலையன்

இவர்தான் வெட்டுக்கொத்துக்குச் சரியான பேர்வழி

யாழ்க்களம்

இவர் சயீவன் ஆளைக் கவனமாப் பாருங்கோ...

ஆதியின் வாலில் எப்போதுமே கண் வைத்துள்ளவர்.... ஒண்டுமில்லை ஆதியின் வாலை நறுக்கி ஆராய்ச்சி ஏதும் செய்து அதிசய சக்தி கிடைக்காதா? என்ற நப்பாசை இவருக்கு....

இப்பவெல்லாம் இவர் காணக்கிடைக்கிறதில்லை வேறை ஆருடைய வாலும் கிடைத்து விட்டதோ என்னவோ? காணவில்லைப் பட்டியலில் இவரைச் சேர்க்கிறதா விடுவதா? என்று யோசனையாக்கிடக்கு! திரும்ப வந்தாலும் இந்த வாலைத்தானே குறிவைப்பார்.... பார்வைக்கு பைத்தியம் மாதிரி விசர்குணத்தில் ஏதேனும் செய்தபடியே இருப்பார். எல்லாம் முடிஞ்ச பிறகு கேட்பார் என்ன நடக்குது என்று அறிய வெளிக்கிட்டு மாடிவீட்டுக்காரனுக்குத் தீனி போடுவார் இந்த மாதிரி குண இயல்போடும் அடையாளங்களோடும் யாரேனும் அகப்பட்டால் வாயைத் திறக்காமல் யாழ்க்களத்திற்கும் அங்கொடைக்கும் தகவல் கொடுக்கவும்

uhshawnmadscientist.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி நல்லா இருக்கு

தேடுங்கள் கிடைப்பார்கள் விடமுயற்ச்சியுடன், மே 2009 ற்கு பிறகு எத்தனை உறவுகளை காணவில்லை, எத்தனை இலைமறைகாய்கள் இப்ப வெளியில,............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் எல்லாரும் விருப்ப ஓய்வில், வேளைக்கே... பென்சன் எடுத்துக் கொண்டு, பேரப் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பவர்களை யாழுக்கு இழுத்து வந்து.. ரென்சன் ஆக்குவதில், ஆதிக்கு சந்தோசம் போலை.smiley-gen146.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் எல்லாரும் விருப்ப ஓய்வில், வேளைக்கே... பென்சன் எடுத்துக் கொண்டு, பேரப் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பவர்களை யாழுக்கு இழுத்து வந்து.. ரென்சன் ஆக்குவதில், ஆதிக்கு சந்தோசம் போலை.smiley-gen146.gif

எப்படி இப்படி உங்களால் மட்டும் கன இணைக்க முடிகிறது, நான் பல images இணைக்க முயன்று (கடைக்குட்டி கேட்டவன் எல்லா images ஒருக்கா akootha க்கு போட செல்லி) முடியல, ஆனா நல்லா இருக்கு திரிக்கு ஏற்ற மாதிரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இப்படி உங்களால் மட்டும் கன இணைக்க முடிகிறது, நான் பல images இணைக்க முயன்று (கடைக்குட்டி கேட்டவன் எல்லா images ஒருக்கா akootha க்கு போட செல்லி) முடியல, ஆனா நல்லா இருக்கு திரிக்கு ஏற்ற மாதிரி.

கூகிளில் Free Smiley என்று தேடினீர்கள் என்றால், பல இணையங்களில் தேவையான சிமைலிகளை தாராளமாக எடுக்கலாம். மேலும் குறிப்பிட சிமைலிதான் வேணுமென்றால்... அதன் பெயரை கூகிளில் தேட... அது சம்பந்தப் பட்ட சிமைலி கிடைக்கும் உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடர் அவை உறவுகளய்யா ஆதியை அம்போ என்றுவிட்டுவிட்டு காணாமல்போய்விட்டார்கள்

தேடுங்க தேடுங்க தேடிக்கிட்டே இருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லோரையும் மீண்டும் சந்திக்கத்தான் ஆசை, ஜம்முவையும் கூட ... ம் ... பொறுத்திருந்து பார்க்கலாம்! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனும்,சஜீவனும் அடிக்கடி யாழுக்கு வாறவை...மணிவாசகன் கூட இடைக்கிடை வந்து போவார்...தான் யாழுக்கு வராமல் இருந்து கொண்டு யாழுக்கு வந்து போறவையை தேடுற ஆதிவாசியை என்ன செய்ய :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனும்,சஜீவனும் அடிக்கடி யாழுக்கு வாறவை...மணிவாசகன் கூட இடைக்கிடை வந்து போவார்...தான் யாழுக்கு வராமல் இருந்து கொண்டு யாழுக்கு வந்து போறவையை தேடுற ஆதிவாசியை என்ன செய்ய :lol:

காட்டுவாசம் பிடிக்கலையாக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிளில் Free Smiley என்று தேடினீர்கள் என்றால், பல இணையங்களில் தேவையான சிமைலிகளை தாராளமாக எடுக்கலாம். மேலும் குறிப்பிட சிமைலிதான் வேணுமென்றால்... அதன் பெயரை கூகிளில் தேட... அது சம்பந்தப் பட்ட சிமைலி கிடைக்கும் உடையார்.

நன்றி சிறி

Link to comment
Share on other sites

மேல நான் காணமல் போனோர் பட்டியலில் பதிஞ்ச ஆரும் வேற மூஞ்சியோ வந்து கதைக்கேல்லைதானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஆதிவாசி எங்களை கண்ணுக்கு தெரியலையா, எவ்வளவு ஆசையா எங்கட மூததையர் வந்திருக்கிறார் என்று வரவேற்றால், இப்படி சொல்லிப்போட்டிங்களே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.