Jump to content

இன்று விநாயகர் சதுர்த்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே கடவுள் ....- " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

1

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

நீங்கள் விநாயகரை வனங்கினால் போதும். தனியாக மாமலராளை (லெட்சுமி தேவியை) வணங்க வேண்டாம். விநாயகப் பெருமானே லெட்சுமியின் அருளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவாள். அதை வலியுறுத்துவதுதான்

‘மாமலாராள் நோக்குண்டாம்’ என்னும் சொற்பதங்கள்

2

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை

இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!

விநாயகப் பெருமானை எப்போதும் நமது புத்தியில் வைத்து வணங்க வேண்டும். நல்ல புத்தியைக் கொடுப்பார். நம்மை வழிதவறிப் போக விடமாட்டார். நீங்கள் மாணவர் என்றால் படித்தவை அப்படியே

உங்களுடைய புத்தியில் தங்கச் செய்வார். மறந்துபோகும்படி விட்டு விடமாட்டார்

3. விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாத சிலம்பு பலஇசை பாடப்

பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும்

வண்ண மருங்கில் வளர்ந்தழ தெறிப்பப்

பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடி கொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாவிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழ் ஒளிமார்பும்

சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழம் நுகரு மூஷிக வாகன

இப்பொழு தென்னை ஆட்கொள்ள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதல்ஐந் தெழுத்துந் தெளிவாய்

பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமது பொருளென

வாடர் வகைதான் மகிழ்ந் தெனக் கருளிக்

கோடாயுதத்தாற் கொடு வினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்

தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருனை யினிதெனக் கருளி

கருவிக ளொடுக்குங் கருத்தினை அறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்குந் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்க மருந்தே

ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

ஆறாதாரத் தங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழ பாம்பின் நாவிலுணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலா லெழுப்புங் கருத்தறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையுங் கூறி

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக நூலமுஞ் சதுர்முக சூட்சமும்

எண்முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரிஎட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்

கருத்தினிற் கபால வாயில் காட்டி

இருத்திமுத்தி இனிதெனக் கருளி

என்னை அறிவித்தெனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கு மனமும் இல்லா மனோலயந்

தேக்கியே என்றன் சிந்தை தெரிவித்து

இருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன

அருள் தரும் ஆனந்தத் தழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் னுள்ளே சதாசிவங் காட்டி

சித்தத்தின் னுள்ளே சிவலிங்கங்காட்டி

அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமு நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சுக் கரத்தி னரும் பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தென்னை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே!

அனைத்துப் பாடல்களுமே ஒளவையார் அருளிச் செய்தவையாகும்!

நன்றி - http://pandiyan74.wordpress.com

மற்ற பாடல்களை கேட்காவிட்டிலும் இந்த பாட்டை மட்டுமாவது, கண்ணை மூடி கேளுங்கள்

http://www.youtube.com/watch?v=-VZjkiRHAkc

Link to comment
Share on other sites

நல்ல புத்தியைக் கொடுப்பார்”

நல்லபுத்தி அவருக்கே இல்ல....

கல்யாணம்பண்ணாமலே இரண்டு காதலிகள்!

ஞானப்பழத்தை தம்பிக்கு கொடுக்காம...குறுக்கு வழில அமுக்கிட்டாரு!

“நீங்கள் மாணவர் என்றால் படித்தவை அப்படியே

உங்களுடைய புத்தியில் தங்கச் செய்வார். மறந்துபோகும்படி விட்டு விடமாட்டார்”

பாடத்தை சரிவர விளங்கிக்கொள்ளாமல் தப்பு தப்பா படித்தால்...அதையும் மறந்துபோக செய்யமாட்டாரா?

படித்தவை அப்படியே மனசில தங்க செய்வது விநாயகரல்ல!

விளங்கி(விருப்போடு) படித்தல் & ஞாபகத்திறன்!

என்ன இதெல்லாம் உடையாரண்ணா?

உலகம் எங்கியோ போயிருச்சி.............

இன்னும் சாமி ...பூதம் என்னுகிட்டு! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல புத்தியைக் கொடுப்பார்”

நல்லபுத்தி அவருக்கே இல்ல....

கல்யாணம்பண்ணாமலே இரண்டு காதலிகள்!

ஞானப்பழத்தை தம்பிக்கு கொடுக்காம...குறுக்கு வழில அமுக்கிட்டாரு!

“நீங்கள் மாணவர் என்றால் படித்தவை அப்படியே

உங்களுடைய புத்தியில் தங்கச் செய்வார். மறந்துபோகும்படி விட்டு விடமாட்டார்”

பாடத்தை சரிவர விளங்கிக்கொள்ளாமல் தப்பு தப்பா படித்தால்...அதையும் மறந்துபோக செய்யமாட்டாரா?

படித்தவை அப்படியே மனசில தங்க செய்வது விநாயகரல்ல!

விளங்கி(விருப்போடு) படித்தல் & ஞாபகத்திறன்!

என்ன இதெல்லாம் உடையாரண்ணா?

உலகம் எங்கியோ போயிருச்சி.............

இன்னும் சாமி ...பூதம் என்னுகிட்டு! :rolleyes:

நன்றி அறிவிலி, நீங்கள் அறிவு பூர்வமாக தீவிரமாக யோசிச்சு பதில் எழுதுகின்றீர்கள், உங்கள் பதிலை கீழே உள்ள திரிக்கும் தருங்கள் என் பதிலும் அதில் உள்ளது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=91045

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

,itfs; gbf;Fk; tprak; my;y.

mt;itahupd; tho;tpy; ,J eilngw;wJ.

cq;fsJ tho;tpNy ,J elf;ftpy;iy vd;why; vd;d ed;ik?

உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்

தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருனை ,,னிதெனக் கருளி

கருவிக ளொடுக்குங் கருத்தினை அறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்குந் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்க மருந்தே

ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

ஆறாதாரத் தங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதி நீங்கள் எழுதிய எழுத்து விளங்கவில்லை, இதில் முயற்ச்சி செய்து பாருங்கள் www.w3tamil_wk\index.html

http://wk.w3tamil.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

,jid ghkpdp vOj;J nfhz;Ljhd; vOjpNdd;.

vdf;F jkpopy; ilg; nra;tJ rpwpJ fbdk;.

Mdhy; Mq;fpyk; ngupa jpwnkd;Wk; ,y;iy.

% it Njb mbf;f 3 epkplk; vLf;fpwJ.

Link to comment
Share on other sites

நானும் மோதகம் தாருவாங்கள் என்று கோயிலுக்கு போனேன்... படுபாவிகள் ஒரு பாதி மோதகம் கூட எனக்கு தரவில்லை... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மோதகம் தாருவாங்கள் என்று கோயிலுக்கு போனேன்... படுபாவிகள் ஒரு பாதி மோதகம் கூட எனக்கு தரவில்லை... :lol:

அடப்பாவமே. கோயிலில் மோதகம் அவித்திருக்க மாட்டாங்கள்போலும். டேக் இட் இசி யா.

Link to comment
Share on other sites

அடப்பாவமே. கோயிலில் மோதகம் அவித்திருக்க மாட்டாங்கள்போலும். டேக் இட் இசி யா.

பிள்ளையாருக்கு பக்கத்தில் இருந்தது நான் பார்த்தேன் ஜய்யர் அமிக்கிவிட்டார் மோதகத்தை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மோதகம் தாருவாங்கள் என்று கோயிலுக்கு போனேன்... படுபாவிகள் ஒரு பாதி மோதகம் கூட எனக்கு தரவில்லை... :lol:

சுஜி என்னிடம் சொல்லி இருந்தால் நான் மோதகம் பார்சலில் அனுப்பி வைச்சு இருப்பனே...:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி உடையார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
    • நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள். இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம். இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம். @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.
    • 300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது. வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.