Jump to content

மீன் கட்லட்


Recommended Posts

Thooyaskitchen+Fish+Cutlet.jpg

தேவையான பொருட்கள்:

அவித்த மீன் அல்லது மக்கரேல் டின் மீன் 1

வேக வைத்து மசித்த உருளை கிழங்கு 400 கிராம்

சிறிதாக வெட்டிய வெங்காயம் 1 கப்

சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 2 மே.க

சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 2 மே.க

மிளகு தூள் 2 தே.க

பெரிய சீரகம் 1 தே.க

பாண்தூள் Bread Crumbs

முட்டை 2

பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

உப்பு தேவைக்கேற்ப

முன்னரே தயார்படுத்தி கொள்ள வேண்டியவை:

1. முட்டையை உடைத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக அடித்து கொள்ளுங்கள்.

2. பாண் தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

3. பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்று வையுங்கள்.

செய்முறை:

1. ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக சூடாக்கி பெரும் சீரகத்தை போடுங்கள்.

2. அத்துடன் மீன், மிளகுத்தூள்,கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் & உப்பு சேர்த்து நன்றாக கிளறி எடுங்கள். அதிக நேரம் அடுப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 3-5 நிமிடங்கள் போதுமானது.

3. சூடு சற்று ஆறியதும் உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள்.

4. முட்டையில் தோய்த்து எடுத்து பின்னர் பாண் தூளில் போட்டு பிரட்டி எடுங்கள்.

5. பொரிப்பதற்கு எண்ணெயை சூடாக்கி கட்லெட்டை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுங்கள்.

6. சூட்டோட்டு சாப்பிட்டு வாயை புண்ணாக்காமல் ஓரளவு சூடு ஆறியதும் சாப்பிடுங்கள்.

பிகு:

1.கட்லட்டை செய்து பொரிக்காமல் குளிர்சாதனப்பெட்டியில் 2 நாட்களுக்கு வைக்கலாம்.

2. டின் மீன் போடாமல் உடனே வாங்கிய மீனை அவித்து போட்டால் சுவை அதிகமாக இருக்கும்.

3. மிளகுத்தூள் உடனடியாக தூளாக்கி போட்டால் சுவை வித்தியாசமாக இருக்கும்.

4. மிளகுத்தூளுக்கு பதிலாக தேவைக்கேற்ப மிளகாய்தூளும், சிறிதளவு மஞ்சள் தூளும் சேர்க்கலாம்.

Link to comment
Share on other sites

நம்பிச் சாப்பிடலாமா?

வேற வழி ;) கிகிகிகி

Link to comment
Share on other sites

மீன்கட்லட் ,டேஸ்டாதான் இருக்கும் தூயா.........ஆனா.......பொரிக்கும்போது ..வீடு கப்பு அடிக்குமே! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன்கட்லட் ,டேஸ்டாதான் இருக்கும் தூயா.........ஆனா.......பொரிக்கும்போது ..வீடு கப்பு அடிக்குமே! :rolleyes:

மரக்கறி கட்லட் செய்து பாருங்கோ

Link to comment
Share on other sites

மீன்கட்லட் ,டேஸ்டாதான் இருக்கும் தூயா.........ஆனா.......பொரிக்கும்போது ..வீடு கப்பு அடிக்குமே! :rolleyes:

விசிறியை போட்டு விட்டு பொரிக்கலாம் தானே...

Athukku thaanai Ausla thamil aakal puthu Veedu kadinaalum Garage kulla vaichu samaikiravai

அதே அதே..

இல்லாட்டி பின்னால தோட்டத்தில வச்சு பொரிக்கலாம்..

மரக்கறி கட்லட் செய்து பாருங்கோ

கிகிகிகிகி நல்ல யோசனை தான்...

Link to comment
Share on other sites

துயா நன்றி, நாங்கள் மரக்கறிதான்

மீனை விடுத்து உருளைக்கிழங்கோடு கரட் சேர்த்தால் மரக்கறி கட்லட் ஆயத்தம்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை வீட்டு அப்பத்துக்கும் எங்கடை வீட்டு அப்பத்துக்கும் நிறைய வித்தியாசம்...ஐயர் வீட்டு அப்பம் இன்னும் வித்தியாசம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் கொரியர் சேவிஸ் வைச்சிருக்காங்க.. ரி என் ரி.. டி எச் எல் என்று. சாப்பாட்டுக்கும் ஒரு துரித கொரியர் சேர்விஸ் வைச்சா.. தூயா பாப்பி செய்து அனுப்ப நாங்க சுகமா சாப்பிடலாமில்ல. ஏன் வைக்கிறாங்கல்ல..! நாங்க உதுகளைச் செய்யப் போய்.. சேதாரம் தான் அதிகமா இருக்குது. :(:rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறைப்பு பிரியர்களுக்கு, அந்தக் கட்லட்டுக்கு இரண்டு, மூன்று பச்சை மிளகாயையும் சிறிதாக வெட்டிப் போட்டால்.....

அந்த மாதிரி இருக்கும்.smiley-eatdrink011.gif

Link to comment
Share on other sites

எல்லாத்துக்கும் கொரியர் சேவிஸ் வைச்சிருக்காங்க.. ரி என் ரி.. டி எச் எல் என்று. சாப்பாட்டுக்கும் ஒரு துரித கொரியர் சேர்விஸ் வைச்சா.. தூயா பாப்பி செய்து அனுப்ப நாங்க சுகமா சாப்பிடலாமில்ல. ஏன் வைக்கிறாங்கல்ல..! நாங்க உதுகளைச் செய்யப் போய்.. சேதாரம் தான் அதிகமா இருக்குது. :(:rolleyes::icon_idea:

கிகிகி நல்ல யோசனை தான்..இல்லாட்டி நீங்க ஆஸிக்கு வந்தாலும் சரி தான்...

Link to comment
Share on other sites

உங்கடை வீட்டு அப்பத்துக்கும் எங்கடை வீட்டு அப்பத்துக்கும் நிறைய வித்தியாசம்...ஐயர் வீட்டு அப்பம் இன்னும் வித்தியாசம் :lol:

அதுக்கு ஏன் இப்படி சிரிக்கிறியள் அப்பு??

உறைப்பு பிரியர்களுக்கு, அந்தக் கட்லட்டுக்கு இரண்டு, மூன்று பச்சை மிளகாயையும் சிறிதாக வெட்டிப் போட்டால்.....

அந்த மாதிரி இருக்கும்.smiley-eatdrink011.gif

நல்ல உறைப்பு மிளகாயாய் சேர்க்கணும்..

இங்க ஆள் உயரத்துக்கு பச்சை மிளகாய் இருக்கு..ஆனால் உறைப்பு இல்லவே இல்லை..

Link to comment
Share on other sites

இங்க ஆள் உயரத்துக்கு பச்சை மிளகாய் இருக்கு..ஆனால் உறைப்பு இல்லவே இல்லை..

என்னாது ஆளுயரத்துக்கு மிளகாயா? smile008.gif

அதை மிளகாய்னா சொல்வாங்க உங்க ஊர்ல?

நம்ம ஊர்ல அதை புடலங்காய்ன்னு சொல்வாங்க!

Link to comment
Share on other sites

என்னாது ஆளுயரத்துக்கு மிளகாயா? smile008.gif

அதை மிளகாய்னா சொல்வாங்க உங்க ஊர்ல?

நம்ம ஊர்ல அதை புடலங்காய்ன்னு சொல்வாங்க!

மிளகாயே இப்படி என்றால்..புடலங்காய் எப்பிடி இருக்கும் என்று யோசிச்சு பாருங்கோவன் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்🤔.............................
    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.