Jump to content

கால் சென்டர் கலகல!


Recommended Posts

ன்னிக்கு நிலைமையிலே வெரி ஹாட் வேலைகளில் ஒண்ணு கால் சென்டர் வேலை. நம்ம பைய ஒருத்தன், பேரு சுப்ரமணி. ஏதோ சில பல ஆங்கில வார்த்தைகள் பேசுவான். முக்கித் தக்கி ஒரு கால் சென்டர்ல வேலை கிடைச்சுடுச்சு. சில ஆயிரங்கள் சம்பளம்னு சொன்னவுடனே சுப்ரமணியின் பல்லெல்லாம் கொஞ்ச நேரம் வாயை விட்டு வெளிய வந்து சிரிச்சுட்டுப் போச்சு. அது எந்த மாதிரி கால் சென்டர் தெரியுமா...00007 -அப்படீங்கிற நம்பருக்கு யாருன்னாலும் போன் பண்ணி, "பீட்சா எங்க கிடைக்கும்?நம்பர் தாங்க!', "பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஷகிலா படம் ஓடுதா?' "என் இடது கால் சுண்டு விரல் சுளுக்கிக்கிச்சு. ஆம்புலன்ஸ் நம்பர் சொல்லுங்க' -இப்படி எதுன்னாலும் விசாரித்துத் தெரிஞ்சுக்கிற மாதிரியான சேவை பண்ணுற கால் சென்டர். ஒரு வாரம் டிரெய்னிங் எடுத்துட்டு, டியூட்டியில ஜாய்ன் பண்ணினான் சுப்ரமணி. முதல் நாள். காதுல ஹெட்போன், முன்னால் கம்ப்யூட்டர், சுத்திச் சுத்தி கேட்குற இங்கிலீஷ் வார்த்தைங்க...அப்படியே புல்லரிச்சுப் போய் உட்கார்ந்திருந்தான். அவனுக்கும் அழைப்பு வர ஆரம்பிச்சுது.

சுப்ரமணி : குட்மார்னிங். மே ஐ ஹெல்ப் யூ சார்?

எதிர்முனை: வணக்கமுங்க. நமக்கு இங்கிலிபீசெல்லாம் வராதுங்க. தமில்லயே பேசுங்க.

சுப்ரமணி : சொல்லுங்க சார். உங்களுக்கு என்ன உதவி வேணும்?

எதிர்முனை: எம் பேரு ஆண்டிங்க. ஊரு தூக்கநாக்கன் பாளையமுங்க. இங்க மெட்ராசுலதான் எம் மச்சான் மாரி இருக்கான். பாவி மவ, என் பொண்டாட்டி அவன் வெலாசம், போன் நம்பரு எழுதி வைச்சிருந்த சிட்டையைத் தொலைச்சுப்புட்டா. என் மச்சான் மாரியோட போன் நம்பரை சொல்லுங்களேன். புண்ணியமாப் போகும்.

சுப்ரமணி: சார், மிஸ்டர் மாரி எங்க வேலை பார்க்கிறாங்கன்னு சொல்ல முடியுமா?

எதிர்முனை: அவன் எங்க வேலை பாக்குறான். வெட்டிப் பய எங்கியாவது ஊர் மேய்ஞ்சுக்கினு இருப்பான். அது அவன் குடியிருக்கிற வூட்டுக்காரரோட நம்பரு.

சுப்ரமணி: வேற ஏதும் தகவல் தெரியுமா சார்?

எதிர்முனை: நம்ம தலிவரு ரசினி சிரிச்சாப்ல போஸ் கொடுக்காருல்ல. அந்த தியேட்டரு பக்கத்துல நின்னுதான் போன்ல பேசுறேன். எதிர்த்தாப்லயே அண்ணா கையைத் தூக்கிட்டு நிக்காருங்க. இந்த போன் கடை தம்பி கூட சிவப்புல கட்டம் போட்ட சொக்கா போட்டிருக்கு.

சுப்ரமணி: (கொஞ்சம் டென்சனாக) நீங்க எந்த ஏரியாவில இருக்கீங்க சார்? உங்க ரிலேட்டிவ் மிஸ்டர். மாரி எந்த ஏரியாவில தங்கி இருக்காரு?

எதிர்முனை: ஏ நீ என்ன விவரங்கெட்டவனா இருக்கியே. அதான் அண்ணா கையைத் தூக்கிட்டு நிக்காருன்னு எம்புட்டு அழகா அடையாளம் சொல்லுறேன். என் மச்சான் ஏதோ ஒரு நகர் இருக்காமே, அதோட பேரு கூட மூணெழுத்துல வரும். அங்க பிள்ளையாரு கோயில் தெருவில நாலு மாடிக் கட்டிடத்துல மொட்டை மாடியில குடியிருக்கான். அங்க போயிட்டாப் போதும். அவனோட கோடு போட்ட மஞ்ச அண்ட்ராயரு கொடியில காயும். அதை வைச்சு வீட்டைச் சுலபமா கண்டுபிடிச்சுருவேன். விலாசத்தைத் தெளிவா நிறுத்தி நிதானமா சொல்லு. எழுதிக்கிறேன். ஏ புள்ள...ஒரு துண்டு சிட்டை எடு.

சுப்ரமணி: ஸôரி சார். இன்னும் கொஞ்சம் விவரம் வேணும்.

எதிர்முனை: ஏல, பட்டணத்துல எல்லோரும் ஏமாத்துக்காரப் பயலுகளா இருக்கீக. நான் என்ன முட்டாப் பயலா...(பேசிக்கொண்டிருக்கும் போதே லைனைக் கட் செய்கிறான் சுப்ரமணி. மறுநொடியே அடுத்த அழைப்பு வருகிறது.)

சுப்ரமணி: குட்மார்னிங். மே ஐ ஹெல்ப் யூ சார்?

எதிர்முனை: குழிப்பணியாரம் எங்க கிடைக்கும்?

சுப்ரமணி: (பதட்டத்தில்) குழியில கிடைக்கும் சார்.

எதிர்முனை: என்ன மேன், நக்கலா?

சுப்ரமணி : ஸôரி சார், சொல்லுங்க சார். என்ன நம்பர் வேணும் சார்?

எதிர்முனை: எந்த ஹோட்டல்ல சுடச்சுட குழிப்பணியாரம் டோர் டெலிவரி பண்ணுவாங்களோ அந்த நம்பரைக் கொடு.

சுப்ரமணி: வெயிட் எ மூமெண்ட் சார்!(கம்ப்யூட்டரில் தேடிப்பார்த்து விட்டு) ஸôரி சார், குழிப்பணியாரம் சம்பந்தமா எங்ககிட்ட எந்த நம்பரும் இல்ல சார், பீட்சா நம்பர்தான் இருக்கு சார்.

எதிர்முனை: என்ன கஸ்டமர் சர்வீஸ் பண்ணுறீங்க? நான் இன்னிக்கு குழிப்பணியாரம் சாப்பிட்டே ஆகணும். நீ யாரு என்ன பீட்ஸô சாப்பிடச் சொல்லுறதுக்கு? ஏதாவது ஹோட்டல் நம்பர் கொடு மேன்.

சுப்ரமணி: 46456487. இது பரபர பவன் நம்பர் சார். டிரை பண்ணிப் பாருங்க சார்.

எதிர்முனை: அங்க இல்லாட்டி என்ன பண்ணுவேன். இன்னொரு நம்பரைக் கொடு மேன்.

சுப்ரமணி: 46464652. இது வருணன் இட்லி கடை நம்பர் சார். ப்ளீஸ் உங்க இ-மெயில் ஐ.டி. கொடுங்க சார்.

எதிர்முனை: எதுக்கு மேன்?

சுப்ரமணி: வாங்க வேண்டியது எங்க கடமை சார்.

எதிர்முனை: ஐ.டி. கொடுத்தா என்ன அதுல பணியாரத்தைச் சுடச் சுட அனுப்பி வைக்கப் போறீயா? போனை வை மேன்.

(லைன் கட் ஆகிறது. சுப்ரமணி பிபீ கண்டபடி எகிற அடுத்த அழைப்பு வருகிறது.)

சுப்ரமணி: குட்மார்னிங். மே ஐ ஹெல்ப் யூ சார்?

எதிர்முனை: ஆங்...வணக்கம். அது வந்து...ஆங்..

சுப்ரமணி: சொல்லுங்க சார். என்ன உதவி வேணும்?

எதிர்முனை: அது..என்னன்னா...போன் டயல் பண்ணுறப்ப ஞாபகம் இருந்துச்சு. அதுக்குள்ள மறந்துடுச்சு. தம்பி, நீ ஏதாவது கேட்டுக்கிட்டே வாயேன். எனக்கு ஞாபகம் வருதான்னு பார்க்குறேன்.

சுப்ரமணி: ஏதாவது தியேட்டர் நம்பர் வேணுமா சார்?

எரிமுனை: இல்ல தம்பி. நானே ஏதோ ஒரு தியேட்டர்லே இருந்துதான் பேசறேன்.

சுப்ரமணி: ஏதாவது கால் டாக்ஸி நம்பர் வேணுமா சார்?

எதிர்முனை: இல்லீயே. நானே கார்லதான வந்திருக்கேன்.

சுப்ரமணி: வேற என்ன நம்பர் வேணும் சார்?

எதிர்முனை: ஆங்...நியாபகம் வந்துடுச்சு. என்னோட வீட்டு நம்பரை மறந்துட்டேன். அது வந்து...

சுப்ரமணி: உங்க பெயர், அட்ரசைச் சொல்லுங்க சார். டைரக்டரியில பார்த்துச் சொல்லுறேன்.

எதிர்முனை: வேணாம். அது என்னோட செல்போன்லயே இருக்கும். பார்த்துக்கிறேன். ஏ...இரு. யார் நீ? அநாவசியமா எங்க வீட்டு நம்பரைக் கேட்குற. போனை வை. ராங் நம்பர்!

(அடுத்த அழைப்பு. சுப்ரமணி வெறுப்பின் உச்சக் கட்டத்தில் இருக்கிறான்)

சுப்ரமணி: சொல்லுங்க, என்ன வேணும்?

எதிர்முனை: இன்ஸ்டண்ட்டா, இலவசமா லவ் லெட்டர் எழுதிக் கொடுக்கறவங்க நம்பர் கிடைக்குமா?

சுப்ரமணி: நம்பர் 100-க்கு போன் பண்ணுடா வெண்ணை. அங்கதான் உங்க மாமனார் இருக்காரு. கை வலிக்க வலிக்க எழுதிக் கொடுப்பாரு. வைடா போனை!

(அடுத்த அழைப்பு)

சுப்ரமணி: ஹலோ, இன்னா வேணும்?

எதிர்முனை: ஏன்டா, அம்பி, நேத்து டீவியில் பரவை முனியம்மா வத்தக் குழம்பு வைக்கிறதுக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அடுப்புல குழம்பு கொதிக்குது. அதுல ஒரு டெüட். பரவை முனியம்மா நம்பர் கிடைக்குமா?

சுப்ரமணி: என்ன சந்தேகம்?

எதிர்முனை: குழம்புக்கு என்ன பொடி, எத்தனை ஸ்பூன் போடணும்னு கேக்கணும்?

சுப்ரமணி: ஆங்...ஏழெட்டு ஸ்பூன் சீயக்காய் பொடி போடு.

(அடுத்த அழைப்பு)

சுப்ரமணி: ஏய், என்ன வேணும்?

எதிர்முனை: நாலைஞ்சு இடத்துல வெடிகுண்டு வைக்க வேண்டியதிருக்கு. மலிவா வெடிகுண்டு தயாரிக்கிறவங்க நம்பர் வேணும்.

(சுப்ரமணி லைனைக் கட் செய்துவிட்டு, வேகமாக அங்கிருந்து எழுந்து, தன் மேனேஜர் அறைக்குச் செல்கிறான்.)

சுப்ரமணி: ஸôர். நான் என் வேலையை ரிசைன் பண்ணுறேன்.

மேனேஜர்: இன்னிக்குத்தானே ஜாய்ன் பண்ணுன. அதுக்குள்ள என்ன?

சுப்ரமணி: எனக்கு சந்தேகமா இருக்கு சார்.

மேனேஜர்: என்ன சந்தேகம்?

சுப்ரமணி: சோனியா காந்தி, அமர்சிங், வாஜ்பாயி, அத்வானி, லாலு பிரசாத் யாதவ் இவங்க எல்லாம் என் போனை ஒட்டுக் கேக்குறாங்க சார். நான் வரேன்.

கற்பனை : முகில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் நடக்கின்ற இந்திய அரசியலைத் தழுவி எழுதப்பட்ட நகைச்சுவை. நன்னா ஈக்குது நைனா :P :lol:

Link to comment
Share on other sites

சுப்ரமணி: சோனியா காந்திஇ அமர்சிங்இ வாஜ்பாயிஇ அத்வானிஇ லாலு பிரசாத் யாதவ் இவங்க எல்லாம் என் போனை ஒட்டுக் கேக்குறாங்க சார். நான் வரேன்.

********************************************

:lol::lol::lol::lol::lol:

நன்றி சுண்டல் இனைப்புக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்ரமணி: சோனியா காந்திஇ அமர்சிங்இ வாஜ்பாயிஇ அத்வானிஇ லாலு பிரசாத் யாதவ் இவங்க எல்லாம் என் போனை ஒட்டுக் கேக்குறாங்க சார். நான் வரேன்.  

********************************************

:lol:  :lol:  :lol:  :lol:  :lol:  

நன்றி சுண்டல் இனைப்புக்கு

:D:D:D:D:D:D:D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.